Archive

Archive for July, 2009

A Muttulingam

July 29, 2009 Visitor Blogs 1 comment

அ.முத்துலிங்கம் கதைகள் http://noolaham.net/project/01/46/46.pdf

அக்கா http://www.noolaham.net/project/13/1210/1210.pdf

அங்க இப்ப என்ன நேரம் http://noolaham.net/project/01/47/47.pdf

திகட சக்கரம் http://noolaham.net/project/01/85/85.pdf

மகாராஜாவின் ரயில்வண்டி http://noolaham.net/project/02/132/132.pdf

வடக்குவீதி http://noolaham.net/project/01/87/87.htm

வம்சவிருத்தி http://noolaham.net/project/01/86/86.pdf


சமர்ப்பணம் என்றால் வழக்கத்தில் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒருவருக்கு நன்றிகூறும் முகமாக இருக்கும். இது பிராயச்சித்தம். ஆப்பிரிக்கக் காட்டில் எனக்கும் என் நண்பன் ஒருவனுக்கும் மட்டுமே தெரிந்த சங்கதி. நீண்ட ‘பாம்’ மரத்தின் உச்சியிலே ஒரு காகம், அவ்வளவு தூரத்திலும் மொழுமொழுவென்று கொழுத்து காணப்பட்டது. எங்கள் உயரத்திலும் பார்க்க நிழல்களின் நீளம் குறைந்து காணப்பட்ட ஒரு மினு மினுப்பான வெய்யில் நேரம். நண்பன் என்னைப் பார்க்க நான் மெள்ள தலையசைத்தேன். அவன் துப்பாக்கியை செங்குத்தாக தூக்கி சுட்டான். அந்தப் பறவையின் பெரியபாதி பொத்தென்று காலடியில் விழுந்தது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் நண்பனின் குறிபார்க்கும் வல்லமையில் எனக்கு அமோகமான நம்பிக்கை இருந்தது. அந்தக் காகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டிலே உள்ள அத்தனை காடுகளிலும், அந்தக் காட்டிலே உள்ள அத்தனை மரங் களிலும், அந்த மரத்திலே உள்ள அத்தனை ஓலைகளிலும், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன்பாட்டுக்கு உட்கார்ந்திருந்ததுதான். இந்தப் புத்தகம் ஒரு பாவமும் அறியாத அந்தப் பறவைக்கு; பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு.


சமர்ப்பணம்

இடருற்று அவதிப்படுவது மனிதர்கள் மாத்திரமல்ல; இந்தப் பூலோகத்தில் அழிவின் எல்லையில் பல விலங்கினங்கள், பறவைகள், ஏன் தாவரங்கள் கூட உண்டு.

மற்ற உயிரினங்களுக்கு தீங்கிழைப்பது வேறு யாருமில்ல; ஆறறிவு படைத்த மனிதன்தான். இந்த மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக மன்னிப்பு கேட்டு இந்நூலை இடருற்ற உயிரினங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.


என்னுரை

சமீபத்தில் நான் எதியோப்பியா நாட்டுக்கு சென்றிருந்தேன். இது பைபிளில் கூறப்படும் ஒரு பழம்பெருமை வாய்ந்த நாடு. யேசு பிறப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இங்கே நாகரீகம் கொடிகட்டிப் பறந்தது. ஸ“பா என்ற அதிரூபசுந்தரி ராணியாக ஆட்சி புரிந்தது இங்கேதான். இந்த ராணி பல ஆயிரம் மைல்கள் பிரயாணம் செய்து பூதர்களின் அரசன் சொலமனை தரிசிக்க ஜெரூஸலம் சென்றதும் அவர்களுக்கிடையில் நட்புண்டாகி மெனலிக் எனற ஆண்மகவு பிறந்ததும் சரித்திரம். மெனலிக்கில் தொடங்கிய அந்த அரச பரம்பரை 3000 வருடங்கள் சங்கிலித் தொடர் போல நீண்டு சமீபத்தில் (1974) அரசன் ஹெயிலி செலாஸ’யின் முடியாட்சி பறிக்கப்பட்டதுடன் ஒரு முடிவுக்கு வந்தது.

இந்த பாரம்பரியத்தில் எதியோப்பிய பெண்கள் பேரழகு படைத்தவர்கள். இங்கே ஓர் இளம் பெண்ணின் நடனம் பார்த்தேன். நடனம் முழுக்க அந்தப் பெண் தலையை ஒரு பக்கம் சாய்த்து கண்களால் நிலத்தை நோக்கியபடியே ஆடினாள். அவள் கைகளுக்கும் கால்களுக்கும் வேலை குறைவு. மார்புகளும், கழுத்தும், தலையும் மாத்திரம் நளினமாக குலுங்கிக் குலுங்கி அசைந்தன. பெண்ணின் முகத்தை மட்டும் கடைசிவரை பார்க்கவே முடியவில்லை. இது என்ன நடனம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். பரத நாட்டியம், கதக, கதகளி, ஒடிசி, மணிப்புரி போன்ற நடனங்களை பார்த்த கண்களுக்கு அப்படித்தான் தோன்றியது.

ஆனால் பிறகு சிந்தித்துப் பார்த்ததில் அந்த நடனத்திலும் ஓர் அழகு இருந்ததாக எனக்குப் பட்டது. அந்த நடனமே திருப்பி திருப்பி மனதிலே வந்தது. அதில் ஒரு நளினமும் மனதைக் கவரும் சக்தியும் இருந்தது புலப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் அழகுணர்ச்சியையோ, கலை வெளிப்பாட்டையோ சரியாக எடை போடுவதற்கு எனக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என்ற எண்ணம் வலுத்தது.

மேற்கு ஆப்பிரிக்காவில் நான் இருந்த சமயம். ஒரு நாள் தமிழ் சினிமாப்படம் ஒன்றை வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆப்பிரிக்கர் ஒருத்தர் உள்ளே வந்தார். நன்றாகப் படித்து உயர் பதவியில் இருப்பவர். வீடியோவில் கல்யாணžன் ஒன்று நடந்துகொண்டிருந்தது. மணப்பெண் வழக்கம்போல ஒரு காலை மடித்து வைத்து மற்றக் காலை குத்துக்காலிட்டு நிலம் பார்த்து உட்கார்ந்திருந்தாள். இந்த மனுசன் கண் வெட்டாமல் இந்தக் காட்சியை பார்த்துவிட்டு சொல்கிறான், ‘இந்தப் பெண் இருக்கும் முறை எவ்வளவு செக்ஸ’யாக இருக்கிறது’ என்று. எனக்கு அதிர்ச்சி, அகராதிப்படி அந்தப் பெண் மிகவும் நாணமாக, ஒடுக்கமாக, பவ்யமாக அல்லவா இருந்தாள்!

இன்னும் எத்தனையோ, நாங்கள் மதித்துப் போற்றும் சில விஷயங்கள் பிற நாட்டவருக்கு விநோதமாகப் படுகின்றன. அவர்கள் செய்யும் காரியங்களோ எங்களை ஆச்சரியப்பட வைக்கின்றன. கன்னிமை என்பது எவ்வளவு பெரிய விஷயம். கன்னியம் காப்பது என்பது எங்கள் கிராமத்துப் பெண்களுக்கு ஒரு தவம் மாதிரி.

அமெரிக்கப் பள்ளிக்கூடங்களில் பதினாறு வயதுக்கு மேல் கன்னித் தன்மையோடு ஒரு பெண் இருந்துவிட்டால் அவளுக்கு எவ்வளவு அவமானம். அவள் பொய்யுக்காவது கன்னி கழிந்துவிட்டது என்று சொல்லவேண்டிய நிர்பந்தம்.

இது மாத்திரமா? அமெரிக்கக்காரனுக்கு எழுந்து மரியாதை செய்து ‘சேர்’ என்று அழைத்தால் பிடிப்பதில்லை. ஆங்கிலேயனுக்கு கால்களை ஒடுக்கிவைத்து மரியாதை முன்னே தலைகுனிந்து நிற்பது அசிங்கமாகப் படுகிறது. ஜெர்மன்காரனுக்கு கைகட்டி பவ்யமாக நின்றால் போதும், வேறு விளையே வேண்டாம். ஆனால் எங்கள் ஊர்களில் இன்றுகூட ஒரு பெரியவரைக் கண்டதும் தோளில் போட்ட சால்வையை எடுத்து கக்கத்தில் வைப்பது நடந்துகொண்டு தான் வருகிறது.

இப்படித்தான் அப்கானிஸ்தானில் ஒரு நாள் நாங்கள் பத்து பதினைந்து பேர் ஆட்டு மயிரில் செய்த கம்பளத்தில் நிரையாக உட்கார்ந்து உணவருந்திக் கொண்டிருந்தோம். பத்து அடி நீளமான ரொட்டி ஒன்று எங்கள் மடிகளில் மலைப்பாம்பு போல தவழ்ந்து கொண்டிருந்தது. நான் என் மடியில் கிடந்த ரொட்டிப் பகுதியை இழுத்து, பிய்த்து கடித்துக் கொண்டிருந்தேன்.

அங்கேயெல்லாம் மரக்கறி வசதி,அரிது. கோழி, ஆடு, ஒட்டகம் என்று எல்லாம் இறைச்சி மயம்தான். தேநீரில் தோய்த்து ரொட்டியை சாப்பிட்டபடியே நான் அவர்களுக்கு எங்கள் ஊர் நடப்பு ஒன்றை சொன்னேன். அங்கே எப்படி உடும்பு பிடிப்பார்கள் என்றும், அதை உயிருடன் கட்டி தொங்கவிட்டு, தோலை உரித்து என்னமாதிரி சமைப்பார்கள் என்பதையும் விவரித்தேன். அவர்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். பத்து ‘அவ்கானி’ காசு கடனுக்காக துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல தயங்காதவர்கள், கல்நெஞ்சக்காரர்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்திராத ஒரு உடும்புக்காக இரக்கப்பட்டார்கள். என்னால் நம்ப முடியவில்லை. இந்தச் சிந்தனையில் பிறந்ததுதான் ‘உடும்பு’ கதை.

அந்தக் காலத்து அரசர்கள் குற்றம் செய்தவர்களை குழுத்தளவு மணலில் புதைத்து வைத்து யானையின் காலால் இடறச் செய்வார்களாம். யானை முதல் முறை ஓடி வரும்போது அநேகமாக மிஸ் பண்ணிவிடும், பாகன் இரண்டாவது தடவையாக திருப்பிக் கொண்டு வருவான். யானை தன்பாட்டுக்கு போய்க்கொண்டிருக்ககும். பிறகும் தவறிவிடும். இப்படியாக நாலைந்து தடவை தவறவிட்டு கடைசியில் யானையின் கால்பட்டு தலை பனங்காய்போல உருண்டோடும். இவ்வளவுக்கும் புதையுண்டவன் மனம் என்ன பாடுபடும். எவ்வளவு கொடுமையான சாவு.

சிலுவையில் அறைவதும், கழுவில் ஏற்றுவதும் கூட இப்படித்தான். பயங்கரமான சாவு. உயிர் உடனே போகாது குற்றவாளி நோவு தாங்காமல் இரவிரவாக அலறிக்கொண்டே இருப்பானாம். இரண்டு மூன்று நாள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிரியும். இப்படி கொடூரமான தண்டனைகள் இப்பவும் சில நாடுகளில் தொடருகிறது. பிரம்படி கொடுப்பதும், தலையை துண்டிப்பதும், கல்லால் அடிப்பதும் இன்றும் சில நாடுகளில் கடைப்பிடிக்கும் தண்டனைகள்தான்.

மேல்நாடுகளில் இறைச்சிக்காக மாடுகளைக் கொல்லும்போது கூட அவைக்கு நோகாத மாதிரி பார்த்துக் கொள்ளுகிறார்கள். நான் சிறுவனாய் இருந்தபோது ஒரு பாவமும் அறியாத என்னுடைய செல்ல வளர்ப்பு நாயை, ஊரார் விசர் என்று தவறாகக் கணித்து உலக்கையால் அடித்து கொன்றதை கண்ணால் பார்த்தேன். அந்த நினைவில் பிறந்தது தான் ‘எலுமிச்சை’ கதை.

ஒரு கம்யூட்டர் ஒரு குடும்பத்துக்குள் புகுந்து விடுகிறது. அந்தக்குடும்பத்தினரின் அந்நியோன்யம் சடுதியில் கூடிவிடுகிறது. பேப்பர் விரயம் கம்யூட்டரின் வரவால் எப்படி தடுக்கப்படுகிறது; எவ்வளவு மரங்கள் காப்பாற்றப்படுகின்றன. கம்யூட்டருடன் பிணக்கமும், நட்பும் மாறி மாறி ஏற்படுகிறது. இதுதான் ‘கம்யூட்டர்’ கதை.

விசா வாங்குவதற்கும் அலைந்து அலைந்து, கால் தேய்ந்து வருடக்கணக்காக வருத்தப்பட்டு, அந்த சோகத்தில் பிறந்தது ‘விசா’ கதை.

அகதிகளாக புலம் பெயர்ந்தவர்கள் படும் அவதிபற்றி அநேக கதைகள் வெளிவந்துவிட்டன. அந்த அகதிகளின் சிலர் எதிர் நீச்சல் போட்டு உயர்நிலைக்கு வந்தாலும், அவர்கள் தங்கள் கலாசாரத்தில் எவ்வளவுதான் ஊளி ஊளி வளர்ந்தாலும், அந்நிய கலாசாரம் எப்படியும் அவர்கள் வாழ்க்கையில் மெதுவாக புகுந்து விடுகிறது என்பதைக் கூறுவது ‘பூமாதேவி’ கதை.

இப்படியாக ஒவ்வொரு கதைக்கும் ஒரு தனிக்கதை உண்டு. எல்லாவற்றையும் நான் கூறுப்போவதில்லை. அநேகமாக கதைகளில் அடிநாதமாக மனிதநேயம், உயிர்நேயம் அல்லது பிரபஞ்சநேயம் இருக்கும். படிக்கும்போது வாசகர்களாகிய நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

வாழ்க்கையின் வடக்குவீதியில் நிற்கும் நான் இந்தத் தொகுதிக்குள் ‘வடக்குவீதி’ என்று தலைப்பிட்டது பொருத்தமே. இத்தொகுதியில் வெளிவந்திருக்கும் கதைகள் அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியா டுடே, கிழக்கும் மேற்கும் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்தவை; இன்னும் சில இந்தத் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. இக்கதைகள் பற்றி வாசகர்களின் கருத்தை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

இந்நூலுக்கு ஓர் அழகான முன்னுரை வழங்கிய பெருமதிப்புக்குரிய நண்பர் அசோகர் மித்திரனுக்கும், எப்போதும் எனக்கு தூண்டுதலாகவும், உதவியாகவும் இருக்கும் அன்பு நண்பர் வி.சுந்தரலிங்கம் (பிபிசி) அவர்களுக்கும், இந்த தொகுதியை உரிய நேரத்தில் வெளிக் கொணர்ந்த மணிமேகலைப் பிரசுரத்தாருக்கும், அடங்கா ஆர்வமும் அன்பும் காட்டிய நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்களுக்கும் தக்க அட்டைப்படமும், உள்படங்களும் வரைந்துதவிய ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கும் என் அன்பு உரித்தாகுக.

அ.முத்துலிங்கம்
26, நவம்பர் 1997


ஒரு சுருக்கமான முன்னுரை

சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ‘வம்சவிருத்தி’ நூலை முன்னிட்டுச் சென்னையில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்திற்குச் செல்ல நேர்ந்தது. ஏராளமானோர் வந்திருந்தனர். அங்கு இலங்கைத் தமிழரின் ஒரு மிக முக்கிய படைப்பாளியான எஸ்.பொன்னுத்துரை இருந்தார். கோவி மணிசேகரனும் இருந்தார். கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் இருந்தார். லேனா தமிழ்வாணனும் இருந்தார். பல ருசிகளையுடைய படைப்பாளிகள் அங்கு முத்துலிங்கம் அவர்களைப் பாராட்டக் குழுமியிருந்தனர். அன்று நான் அவர் படைப்புகள் குறித்து அதிகம் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் ‘வம்சவிருத்தி’ நூலிலுள்ள பதினொரு கதைகளையும் இந்தத் தொகுப்பில் அடங்கப்போகும் இன்னொரு பனிரெண்டு கதைகளையும் படித்த பிறகு முத்துலிங்கம் அவர்கள் ஏராளமான படைப்பாளிகளையும் வாசகர்களையும் கவர்ந்திருப்பதில் காரணம் தெரிந்தது. அவருடைய புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேற ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமானவகையில் தூண்டிவிடக்கூடியது. தேர்ந்தெடுத்த சொற்களில், சிறப்பான வடிவத்தில் முத்துலிங்கத்தின் புனைகதையுலகம் பரந்துபட்டது. காலத்திலும் தளத்திலும் மிகுந்த வீச்சுடையது. அதே நேரத்தில் படிப்போரின் அந்தரங்க உணர்வை அடையாளம் சொல்லக்கூடிய குடும்ப மற்றும் சமூகப் பாத்திரம் மூலம் விசையூட்டக் கூடியது. அவருடைய மனிதர்கள் பலதரப்பட்டவர்கள்; ஆனால் தனித்துவம் உடையவர்கள். அனைவரும் நிஜத்தன்மையோடு உருவாகியிருப்பவர்கள். இதனால் அவர்களுக்கு நேரும் சில அசாதாரண நிகழ்ச்சிகள் கூடப் படிப்போருக்கு இயல்பானதாகவே தோன்றுகின்றன.

முத்துலிங்கத்துடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது. அது மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் இடமளிக்கிறது. இன்று சுற்றுக் சூழ்நிலைபற்றி யார் அக்களை காட்டுவது, சில தருணங்களில், நகைப்புக்கிடமாகக்கூட உள்ளது. முத்துலிங்கத்தின் கவனத்தில் மரம் செடிகளும் மிருகங்களும் அவற்றுக்குரிய முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு மரம் வீழ்த்தப்படும்போதோ ஒரு வீட்டுப் பிராணி கொல்லப்படும்போதோ முத்துலிங்கத்துக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் இந்நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்-தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து அந்த நிகழ்ச்சிகளின் தவிர்க்க வியலாமையையும் குறிப்பிட்டு விடுகிறார்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், முத்துலிங்கத்தின் நகைச்சுவையுணர்வு. எல்லா மனிதர்களையும் மிகுந்த பரிவோடு பார்க்கும் ஆசிரியர் அவர்களுடைய நடவடிக்கைகளில் உள்ள சில உம்சங்களையும் கவனித்துப் பதிவு செய்கிறார். ஒரு தகவல், நகைச்சுவை நிறைய உள்ள அவருடைய படைப்புகளில்தான் ஆழ்ந்த சோகமும் உள்ளது.

புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக்கூடியதாகவும் அமைந்திருக்கின்றன’. ஒரு நல்ல புனைகதாசிரியர் மனித நேயமும் ஜனநாயக உணர்வும் பெற்றிருப்பது அவருடைய வெளிப்பாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பது. முத்துலிங்கம் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்.

அசோகமித்திரன்
17, டிசம்பர் ‘97
சென்னை


அங்கே இப்ப என்ன நேரம்

கடந்த ஆண்டுகளில் நான் சில ஆங்கிலப் புத்தகங்களை தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. அதிலே ஒன்று Bill Bryson எழுதிய புத்தகம். அவருடைய புத்தகங்களைப் படிக்கப் படிக்க எனக்கு வியப்பு அதிகமாகும். இவர் தன் மனதுக்குத் தோன்றிய எந்த வி„யமாயிருந்தாலும் அதைப்பற்றி எழுதுவார். சாதாரண வாசகருக்கு ஒரு சாதாரண எழுத்தாளர் எழுதும் எழுத்து. இதில் பெரிய ஆழமான ஆரய்ச்சிகள் ஒன்றும் இல்லை. வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், ஒரு புதுக் கதவை திறந்துவிட வேண்டும். அவ்வளவுதான். ஆனால் வாசிப்பதற்கு சுவாரŠயமாக இருக்கும். முன்னுரையில் தொடங்கி புத்தகத்தின் கடைசி வரி வரும்வரைக்கும் கீழே வைக்க முடியாது.

இவர் தவிர இன்னும் சிலரையும் படித்தேன். இவர்களும் இதே போல எழுதினார்கள். வாசிப்புத்தன்மை நிறைந்த எழுத்துக்கள். அடம் †Šலெட் என்று ஒருத்தர், மற்றவர் Šடீபன் லீகொக். ஒருவர் புதியவர், மற்றவர் பழையவர். இவர்கள் தங்கள் பாண்டித்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகரை அசத்தவோ எழுதுவ தில்லை. பகிர்ந்துகொள்வதுதான் அவர்களுடைய முக்கியமான நோக்கம். ஆனால் எழுத்து இலக்கியத்தரமாக இருக்கும்.

இன்னொரு அசத்தல்காரர் டேவிட் செடாரிŠ. எந்த ஒரு சிறு அனுபவத்தையும் எடுத்து அதை சுவையான கட்டுரையாக்கிவிடுவார். அது சிறுகதைக்கும் கட்டுரைக்கும் நடுவான ஒரு வடிவத்தில் நின்று படிப்பதை ஒரு இன்ப அனுபவமாக உங்களுக்கு மாற்றிவிடும். இவர் ஒருபால் விருப்பக்காரர் ஆனபடியால் இவருடைய எழுத்துக்கள் இன்னும் வினோதத்தன்மையுடன் இருக்கும். இவரைப் படிக்கும் போதெல்லாம் ‘அட, இது எனக்கு முன்பே தோன்றாமல் போனதே!’ என்று அடிக்கடி வருத்தப்படுவேன். அந்த மாதிரி எழுத்து.

நாலு வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி அவர்களை சந்தா குரூ…¢ல் சந்தித்தேன். ‘நீங்கள் கட்டுரை எழுதலாம். நீங்கள் படித்து ரசித்த ஆங்கில நூல்களை அறிமுகம் செய்யலாம். உங்கள் அனுபவங்களை, நேர் காணல்களைப் பதிவு செய்யலாம்’ என்று சொன்னார். நான் அதை அப்போது பெரிதாக எடுக்கவில்லை. மேற்சொன்ன புத்தகங்களைப் படித்த பிறகு நாமும் அப்படி தமிழிலே எழுதினால் என்னவென்று தோன்றியது. இப்படி வேறு யாரும் தமிழில் செய்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படி செய்திருந்தாலும் நான் படித்ததில்லை.
சு.ராவுக்கு முதலில் என் நன்றி. அவரே என் மூளையில் இந்த விதையை ஊன்றியவர். நண்பர் ¦ƒயமோகன் கட்டுரைகளைப் படித்து அவ்வப்போது தன் கருத்துகளைச் சொல்லி உற்சாகப்படுத்தினார். அவரையும் நினைத்துக் கொள்கிறேன். மற்றும் நண்பர்கள், வாசகர்கள் மின்னஞ்சல் மூலமும், தொலைபேசி வாயிலாகவும் எனக்கு தந்த ஊக்குவிப்பு மறக்கமுடியாதது. அவர்களுக்கும் நன்றி.

இந்த எழுத்துக்கள் காலச்சுவடு, தீராநதி, காலம், உயிர்மை, ஆனந்த விகடன் போன்ற இதழ்களிலும் திண்ணை, உலகத்தமிழ், மரத்தடி, திசைகள் போன்ற இணைய தளங்களிலும் வெளியானவை. இந்த ஆசிரியர்களுக்கு நான் கடமைப் பட்டவன். மற்றும் இந்த தொகுப்பை சிறப்பாக வெளியிடும் நண்பர் வசந்தகுமாருக்கும், அழகாக அட்டைப் படம் அமைத்த கனடா அன்பர் (நந்தா கந்தசாமி) ƒ£வனுக்கும் என் நன்றி.

அ.முத்துலிங்கம்
கனடா,
26 செப்டம்பர் 2004


மகாராஜாவின் ரயில் வண்டி

ஒரு வாசகருக்கு எழுத்தாளர் கீத் மில்லர் சொன்னது.

ஒரு முறை அவர் தன்னுடைய சிவப்பு வோக்ஸ்வாகன் காரை எடுத்துக்கொண்டு மிருகக்காட்சி சாலைக்குப் போனார். அங்கே வழக்கம் போல பலமணி நேரƒகœ யானைகளின் விளையா†டை ரசிŠபதி™ செலவழிˆதா˜. திரு‹பு‹போது பா˜ˆதா™ ஒரு யானை அவருடைய காரி™ தவறுதலாக உ†கா˜‰துவி†டது. காரின் முன்ப‚க‹ நெளி‰து போŒ‚ கிட‰தது. மானேஜ˜ ஓடிவ‰து மன்னிŠபு‚ கே†டா˜. ‘இ‰த யானை இŠபடிˆதான். சிவŠபு‚ காரை‚ க‡டா™ மேலே கு‰திவிடு‹. நாƒகœ இன்சூரன்ஸ் செŒதிரு‚கிறோ‹. செலவு எšவளவு என்று அறிவியுƒகœ, செ‚ அனுŠபிவைŠபோ‹.’

ந™ல காலமாக என்ஜின் காரின் பின்னா™ இரு‰தது. அவரு‹ சரி யென்று திரு‹பு‹போது நெடு…சாலையி™ ஒரு பெரு‹ விபˆதை‚ க‡டா˜. அதைˆ தா‡டிய சிறிது நேரˆதி™ பொலீஸ் கா˜ ஒன்று அவரைˆ துரˆதிŠ பிடிˆதது. என்னவென்று விசாரிˆதா™ பொலீஸ்கார˜ ‘இன்னொரு காரை இடிˆததும™லாம™ தŠபிˆது வேறு ஓடுகிறீரா?’ என்றா˜. ‘நான் எƒகே விபˆதி™ மா†டினேன்?’ ‘மா†டவி™லையா? அŠப இது என்ன?’ என்று நெளி‰துபோன காரை„ சு†டி‚கா†டினா˜.

‘அதுவா? அதுவா? அது யானை உ†கா˜‰து நெளி‰துவி†டது.’ ‘அŠபடியா?’ என்று சிரிˆதுவி†டு பொலீஸ்கார˜, ‘ வாரு‹ பொலீஸ் ஸ்டேசனு‚கு’ என்றாரா‹.

கீˆ மி™ல˜ சொ™கிறா˜, ‘உ‡மையான கதைகளை எழுதவே‡ டா‹, யாரு‹ ந‹ப மா†டா˜கœ. உ‡மைˆ தன்மையான கதைகளை எழுதுƒகœ.’

அŠபடிˆதான் இ‰த‚ கதைகளு‹. எ™லாமே உ‡மையான ச‹பவƒ களை அடிŠபடையாக‚ கொ‡டவை. ஆனா™ கணிசமான அளவு கŸபனை வாச‹ கல‚கŠப†டவைதான். கீˆ மி™ல˜ சொன்னதுபோல உ‡மை„ ச‹பவƒகளை எழுதினா™ யா˜ ந‹பŠபோகிறா˜கœ? நாலு வருடƒகளாக எழுதி„ சே˜ˆதவை இவை. கணையாழி, கால„சுவடு, இ‰தியா டுடே, ஆன‰த விகடன், சதƒகை, கால‹, உயி˜ நிழ™, அ‹மா, சொ™ புதிது போன்ற இத›களி™ வெளியானவை. ஆŠபிரி‚கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரி‚கா, பாகிஸ்தான், இலƒகை என்ற உலக நாடுகளின் பின்னணியி™ எழுதŠப†டவை. வா˜ˆதைகளே என் கதைகளு‚கு ஆர‹ப‹. ஒரு நடுநிசியி™ அபூ˜வ மான ஒரு வா˜ˆதை வ‰து என்னை‚ குழŠபிவிடு‹. அது என்னை வசீகரி‚கு‹; சி‰தி‚க வை‚கு‹; பிறகு ஆ†கொœளு‹. அŠபடிˆதான் தொட‚க‹.

ஜீன் ஜெனே என்ற பிரபல பிரெ…சு எழுˆதாள˜ சொ™கிறா˜: ‘வார்த்தை என்று ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோக மானது. உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்.’

சில˜ வேறு மாதிரி. என‚குˆ தெரி‰த ஒருவ˜ விˆதியாசமானவ˜. மைபடாத ஆறு தாœகளை எடுˆது‚கொ‡டுபோŒ மேசையி™ கு‰து வா˜. அŠபடியே நிறுˆதாம™ எழுதி‚கொ‡டு போவா˜. பேŠப˜ முடியு‹ போது கதையு‹ முடி‰துவிடு‹. ‘இது எŠபடி?’ என்று கே†டா™, ‘கதையை அது தொடƒகு‹போது ஆர‹பிˆது, அது முடியு‹போது முடிˆதுவிட வே‡டு‹’ என்பா˜. நானு‹ புரி‰ததுபோல தலையை ஆ†டுவேன். சிறுகதை படைŠபது அšவளவு இலகுவான காரியமா?

என்னுடைய ந‡ப˜ ஒருவ˜ பிறமொழி எழுˆதாள˜கœ கட‰த ஐ‹பது ஆ‡டுகளி™ படைˆத மிக„ சிற‰த கதைகளைˆ தமிழி™ மொழி பெய˜Šபதி™ ஈடுப†டிரு‰தா˜. அ‰த முயŸசி‚கு உதவுவதŸகாக நான் ஒரு 200 வெளிநா†டு‚ கதைகளைŠ படி‚கவே‡டி வ‰தது. இ‰த‚ கதைகœ உலகˆது„ சிற‰த எழுˆதாள˜களா™ படை‚கŠப†டு வாசக˜ களாலு‹, விம˜சக˜களாலு‹ உன்னதமானவை என்று ஏŸறு‚கொœளŠ ப†டவை. அ‰த அŸபுதமான குவியலி™ இரு‰து இருபது கதைகளை மாˆதிர‹ தெரிவு செŒயவே‡டிய க†டாய‹ என‚கு.

அ‰தˆ தொகுŠபி™ கதாசிரிய˜களைŠ பŸறிய குறிŠபுகளையு‹, கதைகளின் பின்னணி பŸறிய ஆசிரியரின் உரைகளையு‹ பின்னிணைŠ பாக‚ கொடுˆதிரு‰தா˜கœ.

அவŸறிலிரு‰து என‚கு இர‡டு உ‡மைகœ புலŠப†டன. ஒன்று, அ‰த‚ கதைகளை எழுதிய ஆசிரிய˜களி™ பெரு‹பான்மையானவ˜கœ சிருஷ்டி இல‚கியˆதைŠ பாடமாக எடுˆதவ˜கœ, அதை‚ கŸபிˆதவ˜கœ, ப†டறைகளி™ பƒகேŸறவ˜கœ. இர‡டு, எ™லோருமே அ‰த‚ கதைகளைŠ பல மாதƒகœ செலவழிˆது உருவா‚கியிரு‚கிறா˜கœ. ஒருவராவது ஒரே அம˜வி™ எழுதி முடி‚கவி™லை. ஜு‹பா லாகிரி என்ற இள‹ எழுˆதாள˜, புலி†ஸ˜ பரிசு பெŸறவ˜, தான் அ‰த‚ கதையைˆ தி†டமிடுவதŸகாகŠ பல மணி நேரƒகளை நூலகˆதி™ செலவழிˆததாக„ சொ™கிறா˜. அதை முடி‚க அவரு‚கு ஆறு மாத கால‹ பிடிˆததா‹. இன்னொரு எழுˆதாள˜ ஹாஜின், 1999‹ ஆண்டின் National Book Award பெŸறவ˜, தன‚கு‚ குறிŠபி†ட கதையை எழுதுவதŸகு ஒரு வருடகால‹ எடுˆததாக‚ கூறுகிறா˜.

இவற்றைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஆசுவாசம் ஏŸப†டது. இ‰தˆ தொகுŠபி™ இரு‚கு‹ ஒரு கதையாவது ஒரு மாதˆதிŸகு‹ குறைவான நேரˆதி™ எழுதŠபடவி™லை. நாலு வருடˆது உழைŠபு இšவளவு சொŸபமாக இருŠபதன் காரண‹ ஆமை வேகˆதி™ செய™ப†ட என் படைŠபு முயŸசிகœதான். வேகˆதி™ என்ன சாதனை? தர‹ தான் மு‚கிய‹. அதை வாசக˜கœதான் தீ˜மானி‚க வே‡டு‹.


வம்ச விருத்தி


‘ஒஸ்கார் வொயில்டு’ என்ற சிறந்த ஆங்கில அறிஞர் ஒரு நாள் முழுக்க எழுத்து வேலைகளில் மும்முரமாக இருந்தார். அவர் மதிய உணவு அருந்துவதற்காக வந்தபோது அவருடைய நண்பர் ஒருவர் ‘நீங்கள் நிறைய எழுதி முடித்து விட்டீர்கள் போலிருக்கிறதே?’ என்றார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு ‘ஆமாம், ஒரு காமா போட்டேன்’ என்று கூறினாராம். அன்று இரவு மறுபடியும் அதே நண்பர் அவரிடம் ‘இரவு வந்தது கூடத் தெரியாமல் விழுந்து விழுந்து எழுதிக் கொண்டிருந்தீரே! என்ன? இன்னொரு காமா போட்டீரா?’ என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு ஓஸ்கார் வொயில்டு, மூச்சுவிடும்நேரம் கூட எடுக்காமல், ‘இல்லை, ஏற்கனவே போட்ட காமாவை மீண்டும் அடித்துவிட்டேன்’ என்று கூறினாராம்.

இந்த நிலைதான் அநேகமான எழுத்தாளர்களுக்கு. ஆனால் என்னுடைய நிலைமையோ இன்னும் மோசமானது. நான் தமிழ் பண்டிதன் அல்லன். என் அநுபவங்களையும், கருத்துக்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற அடக்க முடியாத அவாவிலே புறப்பட்ட சாதாரணன். ஒவ்வொரு வார்த்தையாக பொறுக்கி எடுத்து அவற்றை நேர்த்தியாகக் கோத்து, நகாசு வேலை செய்து சிறுகதை வடிவங்களாக தருவதற்க பல மாதங்களாகிவிட்டன. இந்தக் கருக்கள் வடிவமின்றி என் மனதிலே தூங்கிக் கொண்டிருந்த காலமோ மிகப் பெரியது. ஆனால் அவற்றை எழுத்து வடிவத்திலே கொண்டு வருவதற்குத்தான் இவ்வளவு ஆக்கினைப் படவேண்டி வந்துவிட்டது.

முப்பது வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு திரும்பவும் இலக்கியம் படைக்க வந்தது ஏன்? இதுதான் பலருடைய கேள்வி? தமிழ்கூறும் நல்லுலகம் நட்டப்பட்டு போகாமல் மிகவும் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறது. அப்படியிருக்க, திடீரென்று எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது எப்போது? சம்பந்தரைப்போல ஞானப்பால் குடித்து பிறக்கவில்லை என்பது நிச்சயம்; காளமேகப் கவியைப்போல எச்சில் தம்பலத்தை சுவைத்தபின் எழுந்த உற்சாகத்தில் எழுத்தாணியை எடுக்கவில்லையென்பதும் நிகம். பிரம்மாவே வந்து வால்மீகிக்கு சந்தம் எடுத்துக் கொடுத்தது போன்ற பாக்கியமும் எனக்கு கிட்டவில்லை; எனக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நண்பருடைய முழங்கை இடிதான்.

தமிழ்நாட்டில் ஓர் இசைவிழாக் கச்சேரியை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தபோது பக்கத்திலிருந்த நண்பர் சள்ளையிலே ஒரு இடி இடித்து இதற்கு கால்கோள் விழா நாட்டினார். அவர் உசுப்பிவிட்டதைத் தொடர்ந்து மற்ற நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உசாரும்தான் இதற்குக் காரணம்.

நான் சிறுவனாக இருந்தபோது அம்ம எனக்கு அடிக்கடி கதைகள் சொல்லுவார். அந்தக் கதைகளை ‘கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது’ என்று சொல்லி முடிப்பார்கள். கதைக்கும், கத்தரிக்காய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக நான் பல நாட்களாக கற்பனை செய்து வைத்திருந்தேன். கத்தரிக்காய் காய்த்தால் காய்த்துவிட்டு போகட்டும். ஆனால் என் கதைகள் ‘முடிவது’ எனக்கு சம்மதமில்லை. அவைகள் ‘நிறைவு பெறுவதையே’ நான் விரும்புகிறேன். தமிழ் வாசகர்களின் கற்பனை விலாசத்திலும், மதியூகத்திலும் எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. எனவே என் கதைகளின் கடைசி வரிகளைப் படித்த வாசகர்களின் கற்பனை ஓட்டத்திலே அந்தக் கதைகள் பூர்த்தியடைவதையே நான் இச்சிக்கிறேன். அவைதான் சிறப்பான கதைகளென்றும் எண்ணுகிறேன்.

நான் அளப்பரிய மரியாதை வைத்திருக்கும் ஓர் எழுத்தாளர், அண்மையில் ஒரு பத்திரிகையில் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதை படிக்க மிகவும் ரசமாக இருந்தது. நகைச்சுவை இழையோடி சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்கக்கூடத் தோன்றியது. ஆனால் கடைசி வாக்கியம் முடிந்தபோது கதையும் ‘முடிந்துவிட்டது’. ஒரு நீண்ட விகடத்துணுக்கை படித்தது போலத்தான் எனக்கு இருந்தது. வெங்காயத்தை உரித்து, உரித்து கடைசியிலே ஒன்றுமே இல்லாமல் ஆகியதுபோல எனக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. இவ்வளவுக்கும், அந்த கதையானது சிறுகதை இலக்கணத்துக்குள் மிகவும் கச்சிதமாகப் பொருந்தித்தான் இருந்தது.

இப்பவெல்லாம் அடிக்கடி அழகுப் போட்டிகள் நடப்பதைப் பார்க்கிறோம். உலக அழகுப் போட்டிகளெல்லாம் Beauty with a Purpose என்ற முறையில் நடைபெறுகின்றன. ‘அழகுக்கு ஒரு குறிக்கோள்’ என்று சொல்லிக் கொண்டு இந்த அழகிகள் பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து மனிதவளத்தை மேம்படுத்தும் நற்பணிகளில் ஈடுபடுகிறார்கள். முன்புபோல் உடல் அழகையோ, முக லட்சணத்தையோ ஆராதித்த சகாப்தம் போய் திருவாதபூரரடிகள் போற்றிய ‘சித்தம் அழகியவரை’ உலக அழகியராக தேர்ந்தெடுக்கும் காலம் வந்துவிட்டது.

‘இதுபோல நாங்கள் எழுதும் கதைகளிலும் ஏன் ஒரு ‘குறிக்கோள்’ இருக்கக்கூடாது? அது என்ன அப்படி ஒர்அபவித்திரமான வார்த்தையா? இப்படித்தான் ஒர் எண்ணம் எனக்கு அடிக்கடி வரலாயிற்று.

இதன் காரணமாகத்தான் இந்தத் தொகுதியில் நீங்கள் படிக்கும் கதைகள் சிறிது மாறுபட்டவையாக இருப்பதைக் காண்பீர்கள், இந்தியா, இலங்கை, அமெரிக்க, கனடா ஆகிய நாடுகள் எல்லாம் கதைக் களங்களாக அமைக்கப்பட்டு இருக்கின்றன. கதை மாந்தர்களும் அப்படியே. கதையின் கருப்பொருளும் சிறிது வித்தியாசமானதாகவே இருக்கும். நகைச் சுவைக்காகவோ, வாசகர்களை கிச்சுகிச்சுமூட்டவோ எழுதப்பட்டவையல்ல இந்தக் கதைகள். பொழுதுபோக்கிற்காக எத்தனையோ கதைகள் வெளிவருகின்றனவே! அந்தக் கணக்கில் இவை தவறியும் சேர்ந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையில் படைக்கப்பட்டவை.

அமெரிக்காவில் ஒரு தலைசிறந்த நாவிதரிடம் ஒருவர் தலை அலங்காரம் செய்து கொள்ளப் போனாராம். அந்த நாவிதர் ஐந்து நிமிடங்களிலேயே காரியத்தை முடித்து விட்டு நூறு டொலர் கேட்டாராம். திடுக்கிட்டுப் போன அந்த வாடிக்கையாளர் ‘என்ன இது? நாலு முடியை வெட்டியதற்கு நூறு டொலரா?’ என்று கேட்டார். அதற்கு அந்த நாவிதர் ‘ஐயா, இந்த சன்மானம் வெட்டிய தலைமுடியின் அளவை வைத்து தீர்மானிக்கப்படவில்லை; வெட்டாமல் தலையிலே விட்டுவைத்த சிகையை வைத்தல்லவோ நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது’ என்று கூறினாராம்.

நான் இந்தக் கதைகளை அந்தக் கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறேன். சொல்ல வந்த விஷயத்தை தெம்பாகப் பிடித்துக்கொண்டு மீதியைத் தயவு தாட்சண்யம் இன்றி நீக்கிவிட்டிருக்கிறேன். இதன் காரணமாக, என் மனதிற்கு வெகு பிரியமாயும், இதயத்திற்கு கிட்டவுமுள்ள ‘உயிர் நேயம், பிரபஞ்சநேயம்’ ஆகியவை இந்தக் கதைகளில் கொஞ்சம் தூக்கலாக இருந்தால் அதற்கு என் பேராசை தான் காரணம். வாசகர்களுடைய மன்னிப்பை அச்சாரமாக இப்பவே கேட்டுக் கொள்கிறேன்.

சமீபத்தில் ஒரு தமிழ்நாட்டு நண்பருடன் கதைத்த போது அவர் ‘உங்கள் கதைகளை படித்தேன்; மிகவும் நன்றாக இருந்தன. யாழ்ப்பாணத் தமிழ் தொல்லை கொடுக்கவில்லை’ என்று கூறினார். எனக்கு சிரிப்பாக வந்தது. யாழ்ப்பாணத் தமிழ் இப்படி தமிழ்நாட்டு வாசகர்களை ‘ஆட்டி வைக்கும்’ விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது. இந்தத் தொகுப்பில் வரும் கதைக்களங்கள் அநேகமாக அந்நிய நாடுகளில் ஊன்றியிருந்தாலும், ‘கதை சொல்லி’ மாத்திரம் ஒரு யாழ்ப்பாணத்தவன் என்றபடியால் இடைக்கிடை ஓர் உண்மைத் தன்மையை நிலைநாட்ட ‘அந்தத் தமிழ்’ தலைகாட்டும். கதையில் உண்மைக்கும், அழகுக்கும் சத்தியத்துக்கும் அவை உதவும் என்றே நம்புகிறேன்.

சிறுகதையின் உருவம் மாறிக்கொண்டே வருகிறது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ‘இதுதான் சிறுகதையின் வடிவம்’ என்று யாரால்தான் திட்டவட்டமாகக் கூற முடியும்? ஒரு ‘கதைசொல்லி’ தான் சொல்லவந்த கதையை வாசகனுக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டிய முறையில் சொல்ல வேண்டும். சொல்ல வந்த விஷயத்தைப் பொறுத்து வடிவம் சில வேளைகளில் சிறிது மாறுபடலாம். கதைப்பொருள்தான் முக்கியம். உருவத்துக்காக வில்லுக்கத்தியை மடக்குவதுபோல கதையை மடித்துப் போட்டுவிட்டால் கதையின் யோக்கியத் தன்மை கெட்டு விடும்.

இது பற்றி நான் மிகவும் மதித்து போற்றும் இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவரான திரு. கி.ராஜநாராயணன் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். “ஒரு சம்பவத்தை (நடப்பை) அப்படியே சொகமாக வர்ணித்து முடிக்கிறீர்கள். விமர்சகர்கள் இதைச் சிறுகதை வடிவம் இல்லை என்று சொல்வார்கள். ‘இப்படியும் எழுதலாம்’ என்பதே என் கருத்து. சிறுகதை வடிவம் உடைந்து மறுவடிவம் எடுப்பது என்பது இப்படித்தான்; புதுக்கவிதைபோல. மரத்திலிருந்து வித்தியாசமான ஒரு கிளையை வெட்டி எடுத்து முன்னும் பின்னும் தறித்துவிட்டு அதை வரவேற்பு அறையில் நிறுத்தி வைக்கிறோம். அதில் செதுக்கல் இல்லை; சிறப்மில்லை; என்றாலும் அதில் ஒரு அபூர்வ வடிவம் தெரியும்; அதுபோல.”

பூக்களைத் தொடுத்துக் கொண்டு நிற்கும் நார்போல ஓர் ஒருமைத் தன்மையுடன் கதையிருக்க வேண்டும். நானூறு வருடங்கள் நடந்த ஒரு கதையை நாலு வரியில் சொல்லலாம்; நாலு நிமிடங்களில் நேர்ந்த ஒரு சம்பவத்தை நாற்பது பக்க கதையாகவும் விரிக்கலாம். ஆனால் கதையினுடைய ‘தொணி’ மாத்திரம் மாறாமல் கதையை ஊடுருவி நிற்கவேண்டும். இப்படித்தான் நான் அர்த்தம் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

காகித விரயத்தில் எனக்கு உவப்பில்லை. ஒரு காகிதத்தை கசக்கி எறியும்போது ஒரு மரத்தின் இலை கண்­ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான். இந்தத் தாள்களில் அச்சாகி வரும் கதைகளால் ஒரு வித பயனுமில்லை என்றால் இந்தக் காகிதங்களைத் தருவதற்காக அழிக்கப்பட்ட மரங்களுக்காக நான் கண்­ர் வடிக்கிறேன். ஓ மரங்களே! என்னை மன்னிப்பீர்களாக!

இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வருவதற்க உறுதுணையாக இருந்த அன்புள்ளங்களை நான் மறக்க முடியாது. தலைக்குமேல் இருந்த வேலைத் தொல்லைகளுக்கிடையிலும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் ஒவ்வொன்றையும் படித்து அருமையான முறையில் முன்னுரை வழங்கிய பெருமதிப்பிற்குரிய திரு.மாலன் அவர்களக்கும், நண்பனாய், வழிகாட்டியாய் என்னை உற்சாகப்படுத்தி, ஆலோசனைகள் தந்து இந்தப் புத்தகத்தை சிறப்பாக வெளியிடுவதற்க தூண்டுகோளாக இருந்த என் நெடுநாளைய நண்பர் எஸ் பொன்னுத்துரைக்கும், தக்க படங்கள் வரைந்துதவிய ஓவியர் மருதுவுக்கம், என் பளுவைத் தன் பளுபோல் சுமந்த நண்பர் வி.சுந்தரலிங்கத்துக்கும், தன்னலம் கருதாது ஓயாது உழைத்துதவிய கவிஞர் எஸ்.வைதீஸ்வரனுக்கும், அச்சிடும் வேலைகளை அககறையுடன் கவனித்த இளம்பிறை எம்.ஏ.ரஹ்மானுக்கும், புத்தகத்தை செம்மையாக பதிப்பித்த மித்ர நிறுவனத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

அ.முத்துலிங்கம்
19ம் நாள், தை மாதம், 1996.

House no.32
street 4
F 8/3. Islamabad
PAKISTAN.


முன்னுரை

இன்றைக்கு வந்த தபால்களை உடைத்து மேசையில் கொண்டு வந்து வைத்தார்கள்.

“இன்டர் நெட் போன்ற வசதிகள் வந்துவிட்டனவே அவை நமது கற்பனைக்குச் சமாதி கட்டிவிடுமோ, புதினம் என்பதே அழிந்து போகுமோ?” என்றொரு வாசகர் கேள்வி எழுப்பியிருந்தார்.

யோசிக்க வைத்த கேள்வி.

தமிழன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், தொழில் நுட்ப அதிசயங்கள், புலம்பெயரும் நிர்ப்பந்தங்கள், அவனது கலையாத கல்விக்கும் குலையாத திறமைக்கும் பரிசுகளாகக் கிடைத்த அயல் கலாசார சிநேகங்கள், இவையெல்லாம் தமிழனது பழைய வாழ்க்கையை மெல்ல மெல்லத் தூர்த்து வருகின்றன. அவனது வாழ்க்கை இனி யாழ்ப்பாணத்துப் பனங்காட்டிலும், கொழும்பு திணைக்களத்துக் கதிரைகளிலும், சென்னைப் புழுதியிலும், கரிசல் காட்டு வெக்கையிலும் மட்டும் விரிந்து கிடக்கவில்லை. அது நார்வேப் பனியில் உறைந்து கிடக்கிறது; நீயு ஜெர்சி ஷாப்பிங் மால் ட்ராலிகளில் நகர்ந்து வருகிறது; ஆப்ரிக்க நுளம்புகளின் ரீங்காரத்தில் எதிரொலிக்கிறது. இனி நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை.

களங்களும், தளங்களும், மனங்களும்கூட மாறிவிட்ட இந்தப் புதுத் தமிழனைப் பதிவு செய்ய யார் இருக்கிறார்கள்?

இந்தக் கதைகளைப் படித்தபோது அலுத்துக் கொள்ள அவசியமில்லை என்றுதான் தோன்றியது.

இந்தத் தொகுதியில் உள்ள கதைகள் தமிழுக்குப் புதிது. தமிழனுக்குப் புதிய அனுபவம் தருபவை.

தாழ்வுற்ற வறுமை மிஞ்சிய சியாரா லியோனை வாழ்விக்க வந்த இத்தாலியனைப் பற்றி, மீந்த பழங்களை நடுச்சாமத்தில் நீரில் அலம்பித் தின்னும் ரக்கூன் என்ற மிருகத்தைப் பற்றி, இடருற்ற உயிரினம் என்ற அறிவிக்கப்பட்டு விட்ட மலை ஆட்டைப் பிடிக்க பாகிஸ்தானின் வடக்கு மலைப் பிராந்தியத்தில் அலைகிறவனின் வம்ச விருத்தியைப் பற்றித் தமிழில் எத்தனை கதை வந்திருக்கும்?

பொருள் புதிது. தமிழ்நாட்டுப் பத்திரிகை வாசகனுக்கு சொல்லும் புதிதாகத்தான் இருக்கம் (“இந்த நேரத்தில்தான் அவள் ஆத்தாமல் போய் கீழிறங்கி வந்து சங்கை கெட்ட ஹவுஸ் மெய்ட் வேலைக்க மனுப் போட்டாள்.”)

எனக்கு நடை மிகவும் பிடித்திருந்தது. கடலோர வீட்டில் காற்று உலவுவது போலச் சுகமான, லகுவான நடை. ஒரு சாம்பிள் பாருங்களேன். “புதுக்கப் புதுக்க அவளைப் பார்ப்பது போலிருந்தது அவருக்கு – இவர் அவளுடைய கண்களையே பார்த்தார். அவள் துணுக்குறவும் இல்லை. கீழே பார்க்கவும் இல்லை. திருப்பி அவர் கண்களை நிதானமாகப் பார்த்தாள். நல்லூர் சப்பரம் போல மெள்ள மெள்ள நகர்ந்து இவர் இருக்கைக்குக் கிட்டே வந்தாள்.”

புதுமைப் பித்தன் தன்னுடைய நடையைத் தவளைப் பாய்ச்சல் நடை என்று சொல்லிக் கொள்வதுண்டு. முத்துலிங்கத்தின் நடையும் அப்படித்தான், மேலே உள்ள விபரணைக்கு அடுத்த பத்தி எப்படி ஆரம்பிக்கிறது தெரியுமா? “அவர்களுடைய திருமணம் ஆடம்பரமின்றி ஓரு கிராமத்துச் சர்ச்சில் நடைபெற்றது.”

கிண்டலும்கூட புதுமைப்பித்தன் ஜாடையில் இருக்கிறது. குழந்தையோடு, கணவனால் கைவிடப்பட்ட பெண் மதுக் கடையில் நடனமாடும் வேலையில் சேர்கிறாள். “அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டாவது பிள்ளை பிறந்தது. இது எப்படி என்று சமத்காரமான கேள்விகள் கேட்கக்கூடாது. கற்பு பற்றித் திருக்குறளையும் சிலப்பதிகாரத்தையும் மேற்கோள்கள் காட்டி வியாக்கியானங்கள் இல்லாத ஆப்ரிக்காவில் அப்படித்தான்.”

இதழியலில் show. don’t tell என்று ஒரு உத்தி உண்டு. இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வார்த்தைகளைக் கொட்டி அளந்து கொண்டிராமல், நடந்ததைக் காட்சியாகத் தீட்டிக் காண்பிப்பது வலுவான தாக்கம் ஏற்படுத்தும் என்பது அதன் பின்னுள்ள நம்பிக்கை. வார்த்தைகளை அளந்தெடுத்துக் கச்சிதமாகப் பயன்படுத்தினாலும் முத்துலிங்கம் வார்த்தைகளை மட்டுமே நம்புவதில்லை. சின்னச்சின்ன காட்சிகளைக் கூர்மையாகத் தீட்டிக் கதை நடுவில் செருகிவிடுகிறார். விழுக்காட்டில், இலையான் புழு எடுக்கும் காட்சி, துரியில் காருக்குள் துரியோதனன் தவிக்கும் காட்சி, வம்சவிருத்தியில், மிர்ஸாவை இப்ராஹ’ம் சுட்டுக் கொல்லும் காட்சி எல்லாவற்றிலும் தனியொரு சிறுகதை மட்டுமல்ல, கொஞ்சம் டிராமாவும் இருக்கிறது.

இலங்கை எழுத்துக்களின் வாசனையை நான் கொஞ்சம் லேசாக அறிவேன் என்ற போதிலும், இந்த நூலாசிரியரின் பிற நூல்களைப் புதினங்களை இதற்கு முன்பு நான் படித்ததில்லை, அவரைச் சந்தித்ததோ, அவரது பொழிவு எதனையும் கேட்டதோகூட இல்லை. அவரது பெயரைத் தவிர வேறெதுவும் அறியேன். ஆனால், நூலாசிரியரின் படிப்பிற்கும், இலக்கிய ரசனைக்கும் மனித நேசத்திற்கும் கூட இந்தப் புத்தகம் சாட்சியளிக்கிறது. ஒரு பிரமிப்போடு இந்தப் புத்தகத்தைப் படித்தேன். நீங்களும் அப்படித்தான் படிக்கப் போகிறீர்கள்.

மாலன்
சென்னை -41
18 மார்ச் 96


முன்னீடு

வம்ச விருத்தி, நண்பா அ.முத்துலிங்கத்தின் மூன்றாவது கதைத் தொகுதி. முதலாவது தொகுதியான ‘அக்கா முப்பது ஆண்டுகளக்க முன்னர் வெளிவந்தது. யாழ்ப்பாண வாழ்க்கையின் அழகிலும் சலனங்களிலும் தோய்ந்தவாறு அவர் எபதிய பதினொரு கதைகள் அதில் அமைந்தன. உலகளாவிய வாழ்க்கை அநுபவங்களிலே மூன்று தசாப்தங்கள் முதிர்ந்தவராக, அவர் எழுதிய பதினொரு கதைகளைக் கொண்ட தொகுதி இது. இடையில், ‘திகடசக்கரம்’ என்கிற கதைத் தொகுதியையும், இரண்டு நூல்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார். ஆங்கில நூல்கள் தொழில் சார்ந்த நுட்பத்திலே அவர் பெற்ற ஞானப்பகிர்வின் ஆசை பற்றிய ஆக்கங்கள். இந்த ‘முன்னீடு’வை எழுதும் பணியில் அமர்கையில், அவருடைய ஆங்கில நூலிலே (Getting to know visual basic proceduresan introduction to macro language) வரும் பகுதி ஒன்று மனசிலே மின்னல் சொடுக்கின்றது.

The king is seated on the golden throne. Shakuntala raises her eyes and sees her beloved. For a moment she forgets everything. The earth stands still. And then in a clear voice she says: `My son, make your obeisance to the king, your father’.
They are direct simple and precise, without waste. A good macro should be like that.

விரயமற்ற, நேரான-எளிமையான-திட்டமான சொல்திறன்! கம்புயூட்டர் பயன்பாட்டிற்கு உதவும் MACRO மொழி பற்றிய தேடலிலேகூட, சகுந்தலாவின் ஆளுமை வீச்சுக்கு முத்துலிங்கம் மசிகிறார். படைப்பாளியின் உள்ளத்திலே வாழும் சுவைத்திறன் உறங்குவதே இல்லை. அவனுடைய தேடல்களுக்கு அந்தமும் இல்லை….

தேடல் அற்புதமான அநுபவமே! தொலைந்து போன இனத்துவ கௌரவம், சுயம்புவான சுயமரபு ஆகியன தேடல்களில் ஈடுபட்டிருக்கும் பரதேசி நான். தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடலும் காவியமயமானது. அல்லையேன், ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே தனது சிருஷ்டி அற்புதத்தினால் உலக மஹாகவியாக உயர்ந்த காளிதாஸனின் ‘அபிஞாத சகுந்தலா’ உலக இலக்கியச் சுவைப்புக்கு வாய்த்திருக்குமா? அப்சரஸ் மகளான சகுந்தலா அழகுக் கொழுந்தாய்; இயற்கையின் செப்பம்; விண்ணையும் மண்ணையும் ஒருமைப்படுத்தும் தத்துவ விளக்கம்; மன அமைதி; வாழ்க்கையின் தலையாய இலட்சியம்; – எனப் பல சுருதிகளாய் இந்நாடகக் காவியம் நம் சுவைத் தாகங்களை அசத்தும். மனிதம் பற்றிய தேடலின் ஒரு சாயலாக, மனிதன் அடையக்கூடிய இன்பங்களுக்கு ஆதாரமாய் அமைவது இயற்கையுடன் கூடிய வாழ்க்கை என்று இயற்கையின் உறவை முழுமையான உவமைப் பொருத்தங்களுடன் நிறுவும் காளிதாஸனின் சிருஷ்டி நுட்பம் ஓர் ஆதர்ஷம். சேக்ஸ்பியரின் படைப்பு ஓர்மத்துக்குத் துதி பாடுதல் வஞ்சகமற்ற இலக்கிய நயப்பு என்று ஞானப் பகிர்வினை அகலித்துக் கொண், காளிதாஸனின் கலாமேதையை ஆரிய மாயை என்று நிந்தித்தல் ஞான அறத்துக்கு ஏற்றதா? அதனை இந்திய சிருஷ்டிப் பண்பாட்டின் அடையாளமாக இனங்கண்டு, அந்தத் தனித்துவமே அதற்கு சமஸ்தத்தினையும் அமரத்துவத்தினையும் அருளின எனப் பூரித்து என் வசப்படுத்துதல் என் அறத்துக்கும் என் தேடலுக்கம் உகந்தது; இலக்கியத்தின் பரமார்த்த பக்தனான பரதேசி என்கிற என் தளத்திற்கும் ஏற்றது. விஞ்ஞானம் பற்றிய புதுப் புனைவுகள் பற்றிய தேடல்கள் நமது ஞானத்தை அகலிப்பதுடன், வாழ்க்கையின் சௌகரியங்களைப் பெருக்கித் தரத்தை உயர்த்துவன உண்மை. இருப்பினும், நியூட்டன் இல்லாவிட்டால், இன்னொருவன். அவன் தத்துவத்தைத் திருத்திச் செப்பம் உரைப்பதற்கு ஐன்ஸ்டீன் இல்லாவிட்டால், இன்னொருவன். வான் பறப்பிலே ரைட் சகோதரர்கள் முந்திக் கொண்டார்கள். அவ்வளவுதான். ஆனால் காளிதாஸனின்றி, இலக்கியத்தினைச் சதா வளப்படுத்தும் அபிஞாத சகுந்தலா தோன்றியிருத்தல் சாத்தியமே அல்ல. இலக்கிய ஞானியின் படைப்பாற்றல், பல்வேறுபட்ட சமூகக் காரணிகளுக்கும் அநுபவங்களுக்கும் உட்பட்ட போதிலும், சில வேளைகளில் அவற்றின் வனைவிலேயே ஸ்தூல வடிவம் பெற்றாலுங்கூட, படைப்பாளியின் தனித்துவ ஆளுமை என்கிற ஓர்மை அவனுக்கே உரியது. அந்த ஓர்மத்தை வாலாயப்படுத்துதலும், அதன் உபாசகனாய உழைத்தலும் இந்தப் பரதேசிக்கும் உவப்பான மதமாய் அமையும். மதத்துக்கு அநுஷ்டானங்கள் மட்டுமல்ல, வெறியும் உண்டு.

‘வம்ச விருத்தி’ என்னும் இக்கதைத் தொகைக்கு முன்னீடு எழுதும் யோகத்திலே ஈடுபடும்பொழுது, என் மனசு இப்படியெல்லாம் குதியன் குத்துகிறது. அடுத்த நூற்றாண்டின் கதை முயற்சிகளுக்குக் கட்டியமாக அமையும் படைப்புகள் சிலவற்றை இதில் படிக்க நேர்ந்ததினாலும், இந்த அவதி. இக்கதைகளைத் தமிழ்ச் சுவைஞர்கள், உரிய முறையிலே தரிசித்தலைத் தடுக்கும் நந்திகள், புத்திஜ“விகள் போர்வையில், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், தமிழ்நாட்டிலும் உண்டு. ஈசுரார்ப்பண ஈடுபாடும், பரமார்த்த பக்தியும் ஜெயிக்கணும். நந்தன் கடைத்தேறவேண்டும்! அதைத் தடுக்கும் கொடுமையிலே நந்திகள் வெற்றி சுகித்தல் கூடாது. இந்த விநோதப் புத்திஜ“விகள் நாளையைச் சென்றடைய வேண்டி இலக்கியத் தரத்தினை நிர்ணயிக்க வல்ல ஏகபோகம் தங்கள் வசத்தே என்று சாமி ஆடுதல் மகா கொடுமை. ‘….பாரதியார் கருத்து முதல்வாதி; இருப்பினும் இயங்கியல் பார்வை இருந்தது; பாரதி மார்க்ஸை படித்திருப்பதாகக் கருதச் சான்றுகளில்லை….’ என்று பாரதியாரின் கவிதா வீரியத்தினையே உரைத்துப் பார்க்கும் இவர்கள், பாவம் காளிதாஸனை எப்படி எல்லாம் மிதித்துத் தள்ளுவார்கள்? மார்க்ஸ’ய வேதம் பேட்டை ரௌடிகளின் நாட்டு வெடிகுண்டாக்கப்பட்ட அவலம் ஒருபுறம். ரொமன்டிஸம், நச்சுரலிஸம், ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம், சோஷலிஸ்ட் ரியலிஸம் (இடது) ஸர்ரியலிஸம், மஜிக் ரியலிஸம், எக்ஸ’ஸ்டென்ஷ’யலிஸம், ஸ்ட்ரக்சுரலிஸம், போஸ்ட் மார்டனிஸம் என்று மேலைத் திசையிலே உருண்டோடிய பதங்களை வைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய விமர்சனத் துறையிலே சொக்கட்டான் ஆடும் கிலிசகேடு மறுபுறம். அந்த வார்த்தைகள் சுமக்கும் கருத்துவங்கள் பற்றிய ஞானம் வியர்த்தம் என்பதல்ல என் கட்சி. அறிவு சார்ந்த சேகரம் என்பதற்கு அப்பால், அவை தமிழ் மரபுகளுடனும் நிகழ் காலத் தமிழர்தம் அநுபவங்களுடனும் செமிபாடடைந்து படைப்பு வீரியமாக முகிழவில்லை என்பதுதான் என் வியாகூலம். அவை பிறந்த மண்ணிலேயே வலுவிழந்து நீர்த்துப்போன நிலையிலேயேஇ தமிழுக்குப் பெயர்க்கப்படுகின்றன. இலக்கியத்தின் சங்கதி-உள்ளீடு-உயிர்ப்பு இடையறாத தேடலின் விளைவு. அஃது நனுபவத்தினாலும், பக்குவத்தினாலும் வனையப்படுவது. நேர்த்தியான கலைப் படைப்பாகப் பட்டை தீட்டி எடுப்பதற்கு உபகாரமாய் அமையும் பாங்கத்திற்க-கோலத்திற்கு-உருவத்திற்கு அவை எவ்வாறு உதவலாம் என்கிற உசாவலும் முயற்சியுங்கூட இவர்களுக்குப் பூஜ்யம். menopause எய்திய கருப்பையிலே புதியனவற்றின் படைப்பு என்று வற்புறுத்துதல் வித்துவ வக்கிரஞ் சார்ந்தது என்கிற பிரக்ஞைகூட இந்தக் கோஷதாரிகளுக்குக் கிடையாது. இந்தப் புத்தி ஜ“விதத் தண்டால்களை ஒதுக்கி வைத்துவிட்டு. பெருவணிகச் சஞ்சிகைகளம் பத்திரிகைகளும் படைப்பிலக்கியத்தை அற்ப நுகர் பொருளாக்கி, எழுத்தாளர்களை ‘லேபிள்’ ஒட்டும் சிற்றூழியர்களாக மாற்றும் வணிகப் பணியில் ஈடுபட்டுள்ளன. அரசியலிலே லஞ்ச ஊழல்கள் கூட நியாயப்டுத்தப்படுவது போலவேஇ நலிந்து போன கோஷங்கள் இலக்கியத்திற்கான தொனிப் பொருள்களாக வற்புறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு ‘அரோகரா’ போடும் புழுக்களும் பெருகியுள்ளன. சினிமா வாய்ப்புகள் என்கிற அங்கலாய்ப்புகளும் அவர்களை அலைக்கழிக்கின்றன. உலகளாவியதாக முளைவிடும் தமிழ் இலக்கிய ஓர்மத்துக்குத் தலைமை தாங்கும் தத்துவத்தினைத் தமிழ்நாடு இவ்வாறு நிராகரிக்கும் பாதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மகா விசனத்துக்குரியது. இப்போக்குகளினால் பொதுவாகவே தமிழ் இலக்கியம் முட்டுப்படும் என்பதும் மெய்தான்!

‘இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் சர்வதேச மயப்படும். அதற்குப் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுடைய படைப்பாற்றல் தலைமை தாங்கும்’ என்கிற சுவிசேஷத்தை இரண்டு ஆண்டுகளக்கு முன்னர் நான் மேற்கொண்ட இலக்கிய யாத்ராவின்போது பிரசித்தஞ் செய்தேன். இது மண்பற்றிலும் அதீத இனமான உள்ளுணர்வு என்று பொய் செப்ப ஒப்பேன். தமிழ் நாட்டு இலக்கியக் களத்திலே உருவாகியுள்ள அவலங்கள் என்கிற பின்னணியில், ‘புதிய வானம், புதிய பூமி’ என்று தினமும் புதிய அநுபவங்களின் தாக்கங்களுக்கு உட்பட்டு, ஆனாலும் புதிய சூழல்களின் அசுர வசதிகளுக்கு முற்றிலும் அடிபணியாது, தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களைத் தங்களுடனும், தங்கள் வம்ச வேர்களுடனும் தக்க வைத்துக் கொள்ளுதல் வேண்டும் என்கிற விடுதலை வெறியிலும், பக்திச் செறிவிலும் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் ஈடுபட்டுள்ள இடையறாத தேடல்கள், இதனைச் சாத்தியப்படுத்தும் என்பதை மட்டிடுவதற்குப் புத்தி ஜ“வித மிடுக்குத் தேவையில்லை.

அந்த இலக்கிய யாத்ராவின்போது, இருபத்தியோராம் நூற்றாண்டின் புதிய கதைக் கலையின் சாங்கங்களைச் சுட்டும் வகையில், முப்பத்தொன்பது கதைகளைத் தொகுக்கும் பணியிலே ஈடுபட்டமை தற்செயலே. அந்தப் பணியிலே நண்பர் இந்திராபார்த்தசாரதியின் ஒத்துழைப்பும் துணை நின்றது. அத்தொகுதியில் இடம்பெற்ற ஆக்கங்கள் பலவற்றை வரவேற்று, மதிப்பீடு செய்து, அவற்றைப் பிரசித்தப்படுத்துவதிலே நண்பர் சுஜாதா முதன்மையான அக்கறை காட்டினார். ‘பனியும் பனையும்’ என்கிற அத்தொகுதியில் கதை படைத்த ஒரு சிலரேனும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியத்துக்கு வளமூட்டக்கூடியவர்களாகத் தேறுவார்கள் என்கிற நம்பிக்கை ஊட்டுபவர்கள். ஆனாலும், அத்தகையவர்களுடைய வகை சிறந்த ஆக்கங்கள் அதிலே இடம்பெற்றன என உரிமை பாராட்டுவதற்கில்லை. ஒரு காலக்கூறின் இடைவெளியிட்டு இப்பொழுது அதனை வாசிக்கும்பொழுது, பெரும்பாலான கதைகளிலே புகுந்துள்ள பலவீனங்கள் தெரிகின்றன. புதிய நாடுகளுக்குப் புலமபெயர்ந்து செல்லும் எத்தனங்களிலே குறுக்கிடும் இடர்கள்; புதிய நாடுகளிலே வதிவிட உரிமை கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பின் சஞ்சலங்கள்; சொந்த மண்ணிலே விட்டு வந்த கடன்கள்-கடமைகள்-உறவுகள் ஆகியன தொற்றிய சுமைகள்; புதிய தட்பவெட்பச் சூழல்களையும் தொழில் உறவுகளையும் எதிர்கொள்வதிலுள்ள சவால்கள்; இனப்படுகொலை மேலாதிக்கத்திலிருந்து எந்தத் தனித்துவத்தைப் பேணி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க முடியுமா என்கிற சந்தேகங்கள்; – இவை அனைத்துமே அவர்களுடைய நிகழ்கால எழுத்துக்களைப் பாதிக்கின்றன. அவலங்கள்-ஏக்கங்கள்-ஆசைகள்-இச்சாபங்கள்-இயலாமைகள் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட இயலாத ஆக்கினை! இதனால், துயர்-சோகம்-ஏலாமை ஆகிய சுருதிகளின் ஓங்காரம் மிகும். அகதி முகாம்களிலே வாழும் குறுக்கத்தின் புழுக்கம் வெளிப்படும். self-pity என்கிற பலவீனம், pessimistic பார்வையை மேலோங்கச் செய்து, நம்பிக்கை வரட்சியைத் தூலமாகத் தொனிக்கும். இந்தக் கோலங்கள் தவிர்க்க இயலாத passing phase மனித நேயத் தேடலிலே, வாழ்கையை நம்பிக்கையுடன் அணுகும் தரிசனமே ஆகுமானது. அந்த நம்பிக்கைதான் நாளையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக்கும். வாழ்க்கை என்பது கொதிக்கும் கொப்பரையிலிருந்து, எரி நெருப்புக்குள் வீழ்ந்து கருகுவதல்ல. புதிய நிர்ப்பந்தங்களின் அடிமையாவதல்ல. புதிய சூழலை வசப்படுத்துதல்! புதிய சூழலிலும் நாம் இழக்கத் தயாராக இல்லாத தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொண்டே, புதிய சூழலிலே குதிரும் வாகான புதிய சுருதிகளை இனங்கண்டு, அவற்றைத் தமிழின் அனைத்து உயர்வுகளுக்கும் இசைவாக்கிப் புதிய நம்பிக்கைகளை வென்றெடுத்தல்! அவலங்களை-அக்கிரமங்களை-அட்டூழியங்களை-அவ நம்பிக்கைகளை நாணவைக்கும் தேடல்கள் நமது படைப்புகளிலே கதைப்பொருள்களாகக் கனிதல் வேண்டும். எனவே, ‘பனியும் பனையும்’ தொகையிலே இடம் பெற்ற கதைகள் பலவற்றை pilot-project ஆகத் தரிசித்தலே பொருந்தும். நடுங்க வைக்கும் குளிர் பணியைத் தொடர்ந்து, கோடைவெயில் எரிக்கவே செய்யும்!

புலம் பெயர்ந்த ஈழத் தமிழருடைய இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைக் கோலங்களுக்கு வெள்ளோட்டமாக அமையும் கதைத் தொகுதியைத் தேடுகிறீர்களா? கவலையைவிடுங்கள். இதோ, அ.முத்துலிங்கத்தின் வம்ச விருத்தி இருக்கிறது. நான் கருவியாய் அமைந்து பரம்பிய சுவிசேஷத்தின் சத்தியத்தை எண்பிக்கும் வகையில் பல கதைகளை இத்தொகுதியிலே படைத்துத் தந்து, வெள்ளோட்டத்தினை அவர் வெற்றியாக நடத்தியிருத்தல் மிகுந்த மன மகிழ்ச்சியைத் தருகின்றது. மகிழ்ச்சியைப் பகிர்தலும் மனிதம்!

நான் தசாப்தங்களுக்கு முன்னர், ‘ஊர்வலம்’ என்ற சிறுகதை மூலம் ‘தினகரம்’ பண்ணையிலே முத்துலிங்கம் கதைஞராய் அறிமுகமானார். 1960இல் ‘பக்குவம்’ கதைக்கு முதல் பரிசு பெற்றார். தமிழ் விழா மலருக்கு அவருடைய ‘அக்கா’ மணமூட்டியது, இவ்வாறு, ஈழத்துக் கதைஞர் வரிசையிலே கௌரவம் பெற்ற அவருடைய பதினொரு கதைகள் அடங்கிய ‘அக்கா’ தொகுதி அறுபதுகளின் நடுப்பகுதியில் வெளிவந்தது. ‘நான் கண்ட, கேட்ட, அநுபவித்த சம்பவங்களையும் உணர்ச்சிகளையும் என் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்’ எனத் தம்மைச் சாமானியனாக அறிமுகப்படுத்திக் கொண்டாலும், ‘அக்கா’ மூலம் தமிழ்ச் சுவைஞர்களுடைய அபிமானத்தை மட்டுமன்றி, கைலாசபதி போன்ற விமர்சகர்களுடைய பாராட்டையும் சம்பாதித்தார். பிறகு, அவர் எழுத்தூழியத்திலே ஒதுக்கம் காட்டிய காலத்தில். அவருடைய முகவரியைத் தொலைத்து விட்டேன். விசாரித்ததில், ஆபிரிக்க நாடொன்றில், உயர் உத்தியோகம் பெற்றுச் சென்று விட்டதாகத் தகவல் கிடைத்தது. ஆபிரிக்கா எங்கே? மட்டக்களப்பு எங்கே? ஊழ் என்னையும் துரத்தியது. ஆபிரிக்க இலக்கியம் கற்பிக்கும் ஆசானாய் நான் ஆபிரிக்க நாடொன்றுக்குச் செல்ல நேர்ந்தது. பக்கத்து வீட்டுக்குக் குடியேறிய மனோ நிலையில் மீண்டும் முகவரியைத் தேடினேன். அவர் உலகவங்கி உத்தியோகத்திலே சென்றுவிட்டதாகத் தகவல் கிடைத்ததும் என் தேடுதல் ஓய்ந்தது.

கடைசியாக ‘பனியும் பனையும்’ தொகுதி மூலம் எங்களுடைய இலக்கிய உறவு மீளுயிர்ப்புப் பெற்றது! தேடி ஓய்ந்தது, தேடாத வேளையிலே கிட்டும் அஃது ஒரு வகையில் பொசிப்பு!

தொலைபேசி, Fax போன்ற நவீன தொடர்புச் சாதனங்கள் மூலம், பாகிஸ்தானுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடைப்பட்ட தூரம் குறுகியது. இடைக்காலத்தில் அவர் வெளியிட்ட ‘திகட சக்கரம்’ என்ற கதைத் தொகுதியை என் சுவைப்பிற்கு அனுப்பி வைத்தார். கைவசமிருந்த என் நூல்களை அவருக்கு அனுப்பினேன். ‘பனியும் பனையும்’ தொகுதியிலுள்ள குறை நிறைகளைப் பற்றிப் பேசினோம். மூன்று தசாப்த இடைவெளியில் நடந்த இலக்கிய சமாசாரங்களிலே சல்லாபித்தோம். புதிய படைப்புகள் பற்றிய கனவுகளிலே ஈடுபட்டோம். அடுத்த நூற்றாண்டின் கதைக் கலையின் கோலங்கள் பற்றி உரத்துச் சிந்தித்தோம். யாழ்ப்பாண வாழ்க்கையிலும், ஆபிரிக்க அநுபவங்களிலும் நனவுகளிலும் தோய்ந்தோம். ஆபிரிக்க வாழ்க்கை அநுபவங்களைத் தமிழ் இலக்கிய மாக்குவதிலுள்ள பயன் குறித்துப் பேசினோம். தொலைந்தன கிட்டுதல் காளிதாஸனின் சகுந்தலாவுக்கு மட்டுமல்ல, மனிதனுக்குமே இனிமை தரும்.

முதலில் ஆபிரிக்கப் பின்னணியில் எழுதப்பட்ட கதைகளை என் சுவைப்புக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து ஏனையன, என் ‘முன்னீடு’வுடன் இணைத்து, இவ்வாறு வெளியிடுதல், நாளைய இலக்கியப் பணிகளிலே இருவரும் இணைந்து பணியாற்றும்வோம் என்கிற சங்கையின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம்.

இனி, வம்ச விருத்தியில் இடம்பெறும் கதைகளுக்குள் நுழைவோம்.

முத்துலிங்கம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த பல நாடுகளிலே வாழ்ந்து தமது அநுபவங்களைப் பெருக்கிக் கொண்டவர். இந்நாடுகள் பலவற்றைக் கதைக் களங்களாகக் கொண்டு, இருபத்தியோராம் நூற்றாண்டிலும் வாழக் கூடிய தமிழ்க் கதை மாந்தர் சிலரை அறிமுகப்படுத்தி அவர்களுடைய கதைகளை இங்கு சொல்லியுள்ளார். serious writing என்பது விளக்கெண்ணெய் சாப்பிடும் முகத்தையும் உணர்வையும் எழுத்திலே ஏற்படுத்துவதல்ல. வாழ்க்கையின் எந்த நிலையிலும் வாழ்க்கையை Positive ஆக நோக்கும் Optimism முத்துலிங்கத்தின் கதைப் பாணியிலே மிளிர்கின்றது. இடுக்கண் கண்டு நகும் ஓர் உறுதி; மனித நேய நட்புணர்வுகளை அணைக்கும் அட்டகாசமில்லாத நகைச்சுவை; கதைக் களங்களின் யதார்த்தம்; கதை நிகழ்வுகளுடன் ஒட்டிப் பயணிக்கும் அக்கறை ஆகியன அவருடைய கதை சித்தரிக்கும் உபாயத்திற்குக் கை தருகின்றன.

‘துரி’, ‘ஒரு சாதம்’ ஆகிய இரண்டும் அமேரிக்காவையும் கனடாவையும் பின்னணியாகக் கொண்டு, அந்நாடுகளின் வாழ்க்கை அநுபவங்களை இணைத்துக் கொள்ளுகின்றன. ‘விழுக்காடு’, ‘முழுவிலக்கு’, ‘ஞானம்’ ஆகிய மூன்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் வாழ்க்கைக் கோலங்களுள் நம்மை அழைத்துச் செல்கின்றன. ‘கிரகணம்’, ‘வம்ச விருத்தி’ ஆகிய இரண்டு கதைகளும் பாகிஸ்தான் நாட்டின் முஸ்லிம் பின்னணியைக் கொண்டன. ‘பருத்திப் பூ’ வட ஆபிரிக்க சுடான் நாட்டின், பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் அயலுக்கு அழைத்துச் செல்கின்றது. ‘பீஃனிக்ஸ் பறவை’ சுவீடன் நாட்டினைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட போதிலும், சுற்றுச் சூழலை இயற்கை நிலையில் வைத்திருக்கும் பக்குவத்தினை வசப்படுத்தும் இருபத்தோராம் நூற்றாண்டின் மிக முன்னேறிய மனித சமூகத்திலே ஏற்படக்கூடிய புதிய பிரச்சினைகளே கதைக் களமோ என்கிற நிறப்பிரிகை ஜாலமும் காட்டுகிறது.

மனிதம் பற்றிய இறையறாத தேடலாகவும் இலக்கியத்தினைச் சம்பாவனை செய்தல் என் சுபாவம். மனிதனின் விடுதலை அல்லது விமுக்தி ஆநந்த. அதுவே வீடு! அறம்-பொருள்-இன்பம் ஆகியன அந்த வீட்டினை அடைவதற்கான செம்மைகள் என்கிற நம்பிக்கை நமது மரபின் முதுசொம். பழையன கழிந்து புதியன புனைதலும் மரபு. மாறாத žர்மையும் மரபு. சுழலும் சக்கரத்தின் அசையாப் புள்ளி! பிறிது பிறிதாகி விடாது, வாழ்க்கைத் தொடர்ச்சியையும் முன்னோர் அளித்த அருஞ்செல்வங்களுக்கு நம்மையும் உரிமைக்காரராய் நியமிப்பதற்கான தகுதியையும் மரபு நமக்கு அளிக்கின்றது. இதனை ஒதுக்கும் புதுமைகள் வெறும் Fads! பித்தங்கொண்டு சந்நதமாடும் வேகத்திலே மறைந்துவிடும் போலிகள். இந்த அவதானம் இருபத்தியோராம் நூற்றாண்டின் இலக்கியப் படைப்பாளிக்கு அவசியம். இந்த அவதானம் இத்தொகுதியின் கதைகள் பலவற்றிலும் பற்றிப்படர்கின்றது. இந்தப் படர்வே ஒரு நிறைவும்.

அதே சமயம், இத்தொகுதியிலுள்ள சில கதைகளேனும் மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன. தொகுதியின் முகப்புக் கதை ‘துரி’ அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள் ஆராவாரமின்றி இக்கதையில் பிரஸ்தாபம் பெறுகின்றன. நாயை நண்பனாய்-தோழனாய்ப் பாராட்டுதல் எத்தகைய மானிட நேசிப்பு! ‘ஞானம்’கதையிலே, Ph.D. பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிகளை நடத்துவதற்கான அமேரிக்கப் பல்கலைக் கழக மாணாக்கர் இருவர் ஆபிரிக்க நாடொன்றுக்கு வருகிறார்கள். அங்கு வாழும் கொலபஸ் குரங்குகளைப் பிடித்து ஆராய்ச்சி நடத்த வந்தவர்கள், ஆபிரிக்க மக்களுடைய மூட நம்பிக்கையினால் சாகப் போகும் ஆந்தையையும் குஞ்சுகளையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்த ஆந்தைகள் ஆபிரிக்க உணவு உற்பத்திப் பெருக்கத்துக்கு உதவுகின்றன. அவை வாழவேண்டும். அவற்றை வாழவைப்பதற்காக ஏற்படும் பின்னடைவுகள் ஒரு பொருட்டல்ல. ‘உயிர் நேயம்’ என்கிற சங்கதி இக்கதையிலே எத்தகைய விஸ்வரூபம் பெறுகின்றது. மானிட நேசிப்பு உயிர் நேசிப்பாகவும் பிரபஞ்ச நேசிப்பாகவும் விரிவடைதல் வேண்டும் என்ற அக்கறைகளைப் பிரசாரத் தொனியின்றிச் சில கதைகள் ஏற்படுத்துகின்றன. ‘வம்ச விருத்தி’யிலே பாகிஸ்தானின் வடமலைப் பிரதேசத்தில் பயணிக்கிறோம். இக்கதையில் இஸ்லாமிய மக்களுடைய ஆசாராங்களும் அநுட்டானங்களும் விரவிக்கிடக்கின்றன. இவை அனைத்துமே கதையின் பின்னணியாகப் பின் தள்ளப்பட்டு, இடருற்ற உயிரினத்தின் Endangered species) பாதுகாப்பு கதையின் இறுதியிலே ஓங்காரம் பெறுகின்றது. பிரபஞ்ச நேசிப்பின் இன்னொரு வடிவமாக இந்த அக்கறையை நாம் தரிசித்தல் தகும். மனிதனைப் பலிவாங்கும் லீ என்ஃபீல்டு துப்பாக்கி, ‘ரத்தப் பணம்’ என்கிற கொலை நாகரிகத்தின் உடாக அழைத்துச் சென்று, மலை ஆட்டின் மரணம் மகா அநியாயமானது என்கிற உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துதல் žர்மை நிறைந்த கலைத்திறன். ‘இலங்கையில் தமிழன் ஓர் (Endangeed Species) என்கிற ஓர் எண்ணம் என்பிடரியைக் கடித்தது. சுவைஞனின் கற்பனை விகசிப்பு இன்னொரு பரிமாணம். ஆக்கியோனின் தயாளம் இத்தகைய சிலிர்ப்பினை அனுமதிக்கும். பாகிஸ்தானைக் களமாகக் கொண்ட இன்னொரு கதை ‘கிரகணம்’ இந்தக் கதையிலே வரும் பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு கதை முழுவதையும் அப்புகிறது. அவள் எழுப்பும் மதிநுட்பக் கேள்விகள் மலைக்க வைக்கின்றன. சாதாரண sentiments மண்டிய கதையோ என்று ஏறபடக்கூடிய ஓர் உணர்வை பஸ்மினாவின் பாத்திர வார்ப்பு விழுங்கி ஏப்பமிட்டு விடுகின்றது! இதன் வாகு இது.

‘விழுக்காடு’ சியரா லியோனைப் பின்னணியாகக் கொண்ட கதை. சுபீட்ச நிலையில் அடிமட்ட நாடான அங்கே, ஐக்கிய நாடுகள் நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைகள் வியர்த்தமாகும் பின்னணியிலே, அந்நாட்டின் வாழ்க்கை அவலங்களைப் பிரசாரத் தொனியின்றிச் சித்தரித்து, அந்த அவலங்களின் மத்தியிலே, ஆண்-பெண் உறவாகக் கனியுங் காதல்கூட மனித நேசிப்பின் இன்னொரு ஸ்திதியாக இக்கதை கோலங் காட்டுகிறது. மேற்கு ஆபிரிக்க அநுபவங்களின் மிகுதியால், உருவாகியுள்ள இன்னொரு கதை ‘முழுவிலக்கு’. ‘பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு’ இது பழமொழி ஆபிரிக்க நாடொன்றை புலம் பெயரும் நாடாக வரித்துக் கொண்டால், உணவுப் பழக்கம் எவ்வாறு அமையும் என்பது நயமான நகைச்சுவை. தொகுக்கப்படும் மலர்கள் நளினமான சிரிப்பை எழுப்புபவை. அவற்றைத் தொடுக்கும் நாரிலே சோகச் சுருதி மண்டிக் கிடக்கிறது. இஃது அசாதாரண உபாயம். Menopause ஏற்படுத்தும் உள-உடல் பாதிப்புகளை இது விசாரணை செய்கிறது. சங்கீதாவைச் சுற்றி எழும் சோக அலைகள்கூட ஒரு positive note சிலேயே முற்றுப்பெறுகின்றது. மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக சிறப்பிப்பது இந்த அழுங்குப்பிடியான நம்பிக்கைதானே? குடியேறிய நாட்டின் நன்மைக்கும் தேவைக்கும் ஏற்ப இசைவாக்கம்’ பெறுவதை நுட்பமாகச் சித்தரிக்கின்றது ‘ஒரு சாதம்’ food clothing and shelter ஆகிய மூன்றிலும் ஏற்படும் இசைவாக்கம்! இந்த இசைவாக்கம் வாழ்க்கையை வசதிப்படுத்தும்; அதுவே வாழ்க்கையின் வெற்றியல்ல. அறிவாற்றலைப் பிரயோகித்து, முன்னேறும் முயற்சியில் சதா நடத்தும் தேடலே வெற்றியைச் சம்பாதித்துத் தரும் என்கிற நம்பிக்கையை இக்கதை பிரசித்தஞ் செய்கின்றது. Oru Satham என்பது ஒரு சாதமா அல்லது ஒரு சத்மா? நல்ல பசுடி!

‘பருத்திப் பூ’வின் நாயக பாத்திரம் குணசிங்கம் யாழ்ப்பாணத்து உரும்பிராய் மண்ணிலே விளைந்த அசல் ‘கிழங்கு’! ஆயிரம் கன்று வாழைத் தோட்டத்துக்கு பாத்தி கோலிய காலத்திலேயே, தண்­ரின் செட்டான உபயோகத்திற்கும் உயிர் வாழ்தலுக்குமுள்ள ஆத்மார்த்த தொடர்பிலே ஞானம் பெற்ற சம்பந்தரும் இன்று என்ஜினியர், நீர்வள நிபுணர், கண்டிப்பு-கடின உழைப்பு, நேர்மை-சிக்கனம் ஆகியன அவருடைய வாழ்க்கையை ஒழுங்கு செய்பவை. ஆனால், தெற்கிலிருந்து அகதியாக வடக்கே புலம் பெயர்ந்து வந்த அந்தக் குடியானவக் கிழவியை ‘எஃத்திராம்’ என வாஞ்சை பாராட்டி அழைக்க வைத்தது எது? அக்கிழவியின் வாழ்க்கை உயர்வுக்காக, தமது வேலையையும் கௌரவத்தையும் இழக்கத் தயாராக இருக்கும் அவருடைய செயல், மானிட நேசிப்பின் உந்நதம் அல்லவா? கதையை வாசித்து முடித்த பிறகும், குணசிங்கம் நமது நெஞ்சத்திலே உறைந்து கொள்ளுகிறார். அவரைப் பற்றிய உலகமொன்று நமது பிரக்ஞையை வžகரித்துக் கொள்ளுகிறது. ‘ஓடும் ரயிலில் இருந்து குதிக்கும் ஒருவன் இறங்கிய பின்னும் ரயிலுடன் சிறிது நேரம் ஓடுகிறான் அல்லவா! அதுபோல, ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓட வேண்டும்….இது என்னுடைய சித்தாந்தம்’ என்று ‘திகடசக்கரம்’ என்ற தமது சிறுகதைத் தொகுதியின் முன்னுரையில் முத்துலிங்கம் குறிப்பிடுகின்றார். இந்தக்கதையில் அவருடைய சித்தாந்தம் முழு வெற்றி பெறுகின்றது. நல்லதொரு கதையை வாசித்த திருப்தி பல நாள்களாக என் மனசை மகிழ்வித்தது.

‘பீஃனிக்ஸ் பறவை’ நாளைய இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் கழிந்த ஒரு நாளைய உலகத்திற்குள் நம்மை லாகவமாக அழைத்துச் செல்கின்றது. சுற்றாடலை மாசுபடுத்தாச் செம்மையிலே வெற்றி காணும் அந்த உலகத்திலேகூட, நிறைவேறாத மனித ஆசைகள் புதிய பரிமாணங்களையும் தேடல்களையும் கொண்டிருக்கும் என்கிற தொனிப் பொருளை இந்தக் கதை சாமர்த்தியமாகச் சித்திரிக்கின்றது. நாளைய உலகின் சித்திரிப்பிலே விஞ்ஞான ஞானம் விஸ்வரூபத்திற்குள் இந்த விஞ்ஞானம் ஞான ஒடுக்கமும் பெறுகிறது.

இவற்றிலிருந்து வேறுபட்ட களங்களை மற்றைய இரண்டு கதைகளும் கொண்டுள்ளன. கிரேக்க புராணங்களிலே பிரஸ்தாபிக்கப்படும் கோர்டியன் முடிச்சிலே துவங்கி, இடையில் ‘நொடிகள்’ போல, கந்தையா வாத்தியார், ஹென்றி மொஸ்லே, நமது ‘தொந்தி’ விநாயகர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பல முடிச்சுகளின் அறிமுகத்துடனேயே ‘முடிச்சு’ ஆரம்பிக்கின்றது. இந்த ஆரவாரங்களுக்குப் பிறகுதான் கதை. முடிச்சுகள் என்கிற குகையின் ஊடாக, ஒளியை நாடிய தேடல் திருவண்ணாமலை வரை நீளுகின்றது. அங்கே விசித்திரமான யோகியார். அவரிடமிருந்து அறிவுரையோ, ஆசியோ கிட்டாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாததுபோல பேசி, அறிவைத் தூண்டி விடுதல் யோகியாரின் speciality! இந்துதர்ம சிந்தனைகள் தீர்வுகள் அல்ல. மன ஒடுக்கத்துக்கம் ஞான விடிவுக்கும் தொடர்பு இருக்கலாம். தேடும்பொழுது ஞானம் எத்தகைய அற்பங்களிலிருந்து வெளிப்படுகின்றது! முடிச்சுகளை அவிழ்க்க நடத்தும் தேடல் ஞானமுமாம். ‘சிலம்பு செல்லப்பா’ ‘இலங்கை மண்ணின் வாழ்க்கைக் கோலங்களுக்குள் ஆசிரியர் மீள்பிரவேசம் செய்யும் எத்தனம். பழைய சம்பவங்களை அசைபோடும் கோலமும் புகுந்து கொள்ளுகிறது. சமாந்திரமாகவே சிலப்பதிகாரம் பற்றிய உசாவல்களும். ஆனால், சுழல் பாவிப்புப் பற்றிய awarenessஐ, தயிர்ச் சட்டியுடன் தொடர்புபடுத்தி சுழல் பாவிப்புக்கு மாதவி எழுதிய ஓலையின் சுழல் பாவிப்புக்கும் அபூர்வ முடிச்சுப் போட்டு, நம்மை குலுக்கி எடுக்கிறார். சிரிப்பிலா? சிந்தனையிலா? என் பிடிமானத்துக்குள் சிக்கவில்லை. உங்களுக்கு?

அனைத்துக் கதைகளிலும், கதை நிகழ் களங்களின் வாழ்க்கை அழகுகளிலே, பிராசாரத் தொனி இல்லாமல் படைப்பாளியின் சுய விருப்பு-வெறுப்புகளைத் திணிக்காமல், நம்மையும் பயணிக்கச் செய்து, புதிய அனுபவங்களிலே தோய்த்து எடுப்பதில் ஆசிரியர் வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம், தமது மனசுக்கு உவப்பான வாழ்க்கையையும் விழுமியங்களையும் அழுத்திச் சொல்வதற்கும் அவர் தயங்கவில்லை. அதிலே நழுவல் கிடையாது. சுற்றுப்புறச் சூழலின் பாதுகாப்பு, சுழல் பாவிப்பு, மானிட நேயம், பிரபஞ்ச நேயம் ஆகியன பற்றிய ஆசிரியரின் அக்கறை சத்தியமானது என்கிற உணர்வை அவர் பதிக்கின்றார். இதனை, ‘ஒரு காகிதத்தைக் கசக்கி எறியும்போது எங்கோ ஒரு மரத்தின் இலை கண்­ர் வடிக்கிறது என்று நிச்சயமாக நம்புகிறவன் நான்’ என்று தமது ‘என்னுரை’யிலே மீள வலியுறுத்தவும் அவர் வெட்கப்பவில்லை.

இந்தக் கதைகள் அனைத்தும் சிறுகதை இலக்கண விதிகளுக்குள் அமையுமா என்பது குறித்து விவாதிக்கும் அரிப்பு சிலருக்கு ஏற்படலாம். அரை நூற்றாண்டுக்கு முன்னரே, 1940-ஆம் ஆண்டில், புதுமைப்பித்தனின் சிறுகதைகள் அடங்கிய தொகுதி வெளிவந்தது. அதற்கு ரா.ஸ்ரீ.தேசிகன் அவர்கள் காத்திரமான முன்னுரை ஒன்று எழுதியிருந்தார். ‘இலக்கியம் ஓர் அகண்ட நந்தவனம்’ எனத் துவங்கி, ‘ஜனங்கள் சிறுகதை மலர்களின் மனத்தை அதிகமாய் விரும்பவே, இலக்கிய நந்தவனத்திலே அந்தப் பூக்கள் அதிகமாகப் பயிரிடப்பட்டன’ எனக்கூறி, சிறுகதை இலக்கிய வடிவத்தின் உலகளாவிய தோற்றம் என்னும் படுதாவிலே, ‘முகம்’ அறியாத புதுமைப்பித்தனின் தமிழ்ச் சாதனையை அவர் சிலாகித்தார். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிக் கட்டத்திலே அதற்கு ஒரு தனிக் கௌரவம் சம்பாதிப்பதிலும், மேலை நாட்டிலே பயின்ற உருவ அமைதிக்குத் தமிழ் முழுமம் வடிப்பதிலும் புதுமைப்பித்தன் அடைந்த வெற்றி, அரிய இலக்கியச் சாதனையே. சந்தேகமில்லை. ஆனால்இ அன்று சிறுகதை உருவத்துக்கு உலக அங்கீகாரம் பெற உழைத்தவர்கள் (மாபஸான் உட்பட) வாழ்ந்த நாடுகளிலேயே சிறுகதை இலக்கிய வடிவம் தனது மவுசினை இழந்துவிட்டது. ‘அவசர யுகத்திலே சிறுகதை இலக்கியமே நின்று வாழும்’ என முன் வைக்கப்பட்ட கருதுகோள்கூடப் பொய்த்துவிட்டது. அவசரத்திலும் அவசரயுகம் இது. இருப்பினும், நீள் கதைகளுக்கும் நாவல்களுக்குத்தான் வரவேற்பு. விஷயம் இதுதான். காளிதாஸனுக்கும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கதை சொல்லலும் கேட்டலும் மனித ரஸனைக்கு ஏற்றதாகவே இருந்து வந்தது. கதை சொல்லும் முனைப்பும் கதை கேட்கும் (அல்லது வாசிக்கும் அல்லது பார்க்கும்) ஆர்வமும் தொடரும். வித்துவ-தத்துவக் கடைசல்களுக்கு ‘டோக்கா’ கொடுக்கும் என்றுமுளதான மனித ரஸனை இது.

நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். புதுமைப்பித்தனின் தோள்களிலே நின்று கதைக் கோலங்களைப் பார்க்கும் வசதி நமக்கிருக்கிறது. புதிய கதைக் கோலங்களை உருவாக்கும் நிர்ப்பந்தமும் தேவையும் இருபத்தியோராம் நூற்றாண்டின் கதைஞனுக்கும் நிச்சயம் ஏற்படும். புதிய தேவைகள் இலக்கிய சமாசார சல்லாபம் மட்டுமல்ல. வாழ்க்கையின் புதிய அநுபவ ஞானப் பகிர்வினைப் பகிர்ந்து கொள்ளும் அவதியும். கதைக் கலையிலே புதிய வடிவங்கள் உருவாக வேண்டும். உருவாகும். அவற்றை ஏற்கும் சுவை விசாலம் தமிழ்ச்சுவைஞர்களுக்குத் தேவை. ‘புதுமைப் பித்தனை விட்டால் ஆளில்லை’ என்று பழசிலே தொங்கிக் கொண்டு பொச்சடித்தல்கூட, தமிழ் நாட்டின் புத்திஜ“வித வித்துவ வக்கிரமாகக் கொச்சைப்படுத்தலும் சாலும். இத்தகைய வைதீக வயிற்று வலிக்கு, புதிய ஆக்கங்கள் பலியாகிவிடக்கூடாது. இந்தத் தொகுதியிலே புதிய வடிவங்கள் அறிமுகமாகவில்லை. உண்மை ஆனால், மரபு ரீதியான சிறுகதை இலக்கணம் பல இடங்களிலே நெகிழ்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நெகிழ்த்தலே, புதிய வடிவங்களுக்கு வழி சமைக்கும் என்கிற சேதநை முத்துலிங்கத்திற்கு இருக்கலாம். உருவம்-உள்ளீடு-பாணி-பாங்கம்-சித்திரிப்பு-கலைத்துவம் ஆகியன எழுத்தாளனின் சுதர்மத்திற்கும் சுயாதீனத்துக்கும் உரியன என்பது என் கட்சி. என் அறத்தைப் பறிப்பதற்கு எந்த இலக்கியக் கொம்பனும், விமர்சன வித்துவானக்கும் உரிமை இல்லை என்பதும் என் இலக்கிய மதம். இத்தகைய மதமூர்க்கம், என்னிலும் பார்க்க, அடுத்த நூற்றாண்டின் படைப்பாளிகளுக்கு அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்போமாக!

புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்ப் படைப்பாளிகளுடைய இலக்கிய ஊழியத்தை உரிய முறையிலே தரிசிப்பதற்கு உதவும் இன்னொன்றையும் இங்கு பிரஸ்தாபித்தல் அவசியம்.

தொலைந்துபோன நினைவுப் பொருளின் தேடல், சகுந்தலா, படைப்புக்கு முன்னரே இருந்து வந்துள்ள ஒன்றுதான். ஆனால், இந்த நூற்றாண்டின் இறுதி கந்தாயத்திலே, தொலைத்தலும் தேடலும் ஈழத் தமிழர்களுடைய வாழ்க்கையில் புதிய அர்த்தமும் சுருதியும் கொண்டுள்ளன. இலங்கையின் புத்த ஹாமுத்ருக்கள் புத்த பகவான் போதித்த அகிம்ஸை-தயை-காருண்யம் தர்மம்-žலம் அனைத்தையும் தொலைத்துவிட்டார்கள். ஆட்சியாளர்கள் இறைமாட்சி அறத்தையும் ஜனநாயக நாகரிகத்தையும் தொலைத்துவிட்டார்கள். சமதர்மம் பேசிய இடதுசாரிகள் மார்க்ஸ’ய வேகத்தைத் தொலைத்துவிட்டார்கள். இந்த அனைவரும் மேலாதிக்க உன்மத்தத்தில், மானிடத்தின் அடிப்படை உரிமைகள் பற்றிய நினைவையே தொலைத்துவிட்டார்கள். இவற்றால், ஈழத் தமிழர்கள் தர்ம நியாயம்-மனநிம்மதி-தாயக மண்-தமிழ்மொழி-சுய கௌரவம்-மனித வாழ்க்கை…. என நிரல்படுத்தக்கூடிய அனைத்தையும் தொலைக்க நேர்ந்தது. தொலைக்கவில்லை. கொள்ளையடிக்கப்பட்டன! சொந்த மண்ணிலும் அகதிகள்; புகுந்த நாடுகளிலும் அகதிகள். தனித்துவ அடையாளங்களை மட்டுமல்ல, முகத்தையும் இழந்த மனிதர்கள். தொலைத்தவற்றைத் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். தேடலோ நெடியது; கொடியது. இத்தேடல் தொற்றிய சோகங்கள்-இழப்புகள்-சமர்கள்-அநுபவங்கள்-யாகங்கள்-தவங்கள் அனைத்துமே இன்றைய தமிழுக்குப் புதிது. இந்தப் புதிதும் இணைந்ததுதான் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம்.

ஒரு விஷயத்தில், செந்தமிழ் நாட்டினர் பாக்கியவான்களும்! ‘நீலத் திரைக்கடல் ஓரத்தில் நின்று தவஞ் செய்குமரி; வடமாலவன் குன்றம்’ என்று தமது தாயக மண்ணின் எல்லைகளைக் கவித்துவமாக நினைத்துக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த மண்ணிலே, நிலவினில்றமுதூட்டித் தழுவிய மண்ணிலே, ரா.ஸ்ரீ.தேசிகன் ஆற்றுப்படுத்தியவாறு, அகண்ட நந்தவனங்கள் அமைப்பதற்கும், அதன் பாங்கரிலே சிறுகதைத் தோட்டங்கள் அமைத்துப் பராமரிப்பதற்கும் தோதும் வசதியும் அவர்களுக்கு வந்து பொருந்தலாம். பெண்ணியத்திற்கு ஒரு புதிய பாய்ச்சல்; தலித் இலக்கியத்துக்கு ஒரு புதிய பரிமாணம் என்று ‘கதை அளப்பத’ற்கும் ஓய்வு உண்டு. சினிமா நாயக-நாயகியரை இரட்சகர்களாயும் கடவுளர்களாயும் உயர்த்துவதற்கு ‘விசில்’ அடித்துக்கொண்டே, ‘ஜூனியர் விகடன்’ ‘நக்கீரன்’ ஆகியன தரும் investigative கதைகளை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டே, மாதவியா-கண்ணகியா-கோப்பெருந்தேவியா கற்பிற் சிறந்தவள் என்ற மிகு ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே, serious இலக்கியம் பற்றி ஒரு changeற்காகப் பேசுவதற்கும் அவர்களுக்கு வசதிகளும் உள. இத்தகைய சுகபோகங்கள் அவர்களுக்குக் கொள்ளையாகக் கிடைப்பதுபற்றி அழுக்காறு கொள்ளத் தானும் ஈழத் தமிழருக்கு நேரமில்லை. பாவம், அவர்கள் சபிக்கப்பட்டவர்களும்! இருப்பினும், தாங்கள் மேற்கொண்டுள்ள இரட்சண்ய யாத்திரையையும், தங்களுடைய தேடல்களையும் மனித நேயத்துடன் புரிந்துகொள்ளும் பக்குவம் or at leat அநுதாப மனோநிலை, பேசும் மொழியால் உடன்பிறப்புகளான செந்தமிழ் நாட்டினருக்கு ஏற்படுதல் வேண்டுமென்று பிரார்த்திக்கும் உரிமையாவது ஈழத் தமிழருக்குக் கிடையாதா?

‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று மக்கள் voteற்குத் தூண்டில்போடும் மேடைகளிலே ஒலிப்பதுடன் தமிழ்ப்பற்று ஓய்ந்துவிடலாகாது, ஓய்தல் செய்யும் சௌகரியம் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. ‘விலங்குகளாய் அடிமைகளாய், உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப் பான்மை கேட்டு வாழமாட்டோம்’ என்று சினந்தெழுந்தவர்கள், ஈழத்தமிழர்கள்! போரே தர்மமாக அவர்கள்மீது திணிக்கப்பட்ட பொழுது, அதனை ஏற்றார்கள். தர்ம ஆவேசத்துடன் ஏற்றார்கள். விடுதலை அவர்கள் வெறியாகியது. தமிழின் சேவிப்பே அவர்களது மதமும் பக்தியுமாகியது. இந்த நூற்றாண்டிலே, மொழியின் நிமித்தம் இத்தகைய ஆக்கினைகளை எந்த மனித இனம் எதிர் கொண்டது? இந்த ஆக்கினைகளுக்கு அவர்கள் பணியவில்லை. பகர்களாகவில்லை. ரட்சிப்புக்காக முள்முடிதரித்து, சிலுவை சுமந்து திரிகிறார்கள். முள்முடியும் சிலுவையும் குறியீடுகளே. குறியீடுகளின் அர்த்தங்கள் பக்குவத்து ககும் ஞானத்துக்கம் ஏற்ப விரியும். ஆக்கினைகளின் சங்காரத்திலே விடுதலை வெறியானவனவன் எதற்கும் அஞ்சான். மானிடத்தின் விமுக்தி அவன் வாழ்க்கை ஊரியமாய்க் கனியும். இந்நிலையில் அவனுடைய படைப்பின் சரஸ் பிரவகிக்கும். இலக்குப் புதிது’ பார்வை புதிது. இந்நிலையை ல், ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல்வேண்டும்’ என்பது கோஷமல்ல; வாழ்க்கையின்-எழுத்தின்-தமிழின் பிரிக்க ஒண்ணா அம்ஸம்!

இத்தகைய எண்ணங்கள் என்னைப் பரவசப்படுத்தும் நிலையிலே, ‘வம்ச விருத்தி’ கதைத் தொகுதியை இன்னொரு தடவை புரட்டுகின்றேன். ‘லொட்டோ’ எண்ணைப் போன்று வந்த பக்கத்தில், முத்துலிங்கம் என்ன எழுதுகின்றார்? அதனை உங்களுடன் சேர்ந்து வாசிக்க ஆசை:

‘அடுத்த நாள் அதிகாலையிலே சத்தம் கேட்டு விழித்துக் கொண்டோம். ஆரவாரம் காதைப் பிளக்க வெளியே வந்து பார்த்தோம். தலைக்குடி மகனை கயிற்றுப் பல்லக்கில் தூக்கியபடி பல்லக்குக் காவிகள் ஓட்டமும் நடையுமாகச் சென்று கொண்டிருந்தார்கள். மலையைப் போன்ற உடம்பை நிமிர்த்தி வைத்து இடமும் வலமும் பார்த்தபடி போனார் தலைக்குடி மகன்.

‘சூரன்போர் திருவிழாவில் சூரன், சிங்கமுகன், பானுகோபன் என்று மாறி மாறி வரும். உடம்பு ஒன்று; தலை மாத்திரம் மாறும். சகடையில் வைத்துத் தள்ளி வரும் போது புன்னாலைக் கட்டுவன் தச்சனார் பின்னாலிருந்து சூரனுடைய காதுகளை இறுக்கிப் பிடித்து இடமும் வலமும் ஆட்டியபடியே இருப்பார். அதற்கேற்றபடி கைவாளும் மேலும் கீழும் ஆடும். நாங்கள் சூப்புத்தடியை நக்கியவாறு பயத்துடன் இந்த வைபவத்தைப் பார்த்துக்கொண்டு இருப்போம். அப்ப ‘பானுகோபன், பானுகோபன்’ என்று சத்தம் கேட்கும். என்று சத்தம் கேட்கும். சூரனுடைய மகன், பதுமகோமளைக்குப் பிறந்தவன், சிறுபிள்ளையாக இருந்தபோது கோபத்தில் சூரியனையே பிடித்து தொட்டில் காலுடன் கட்டியவன், தலையை இரண்டு பக்கமும் ஆட்டியபடி வருவான். நாங்கள் பயத்துடன் பெரியவர்களுடைய கையைப் பிடித்துக் கொள்ளுவோம்.

‘அது போலத்தான் தலைக்குடிமகன் வந்து கொண்டிருந்தார்….’

புலம் பெயர்ந்து, அமேரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டே, ஆபிரிக்கக் காட்டிலே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஈழத் தமிழன் ‘ஞானம்’ என்ற கதையிலே தன் அநுபவத்தை மேற்கண்டவாறு சொல்லுகிறான். இன்றைய அநுபவத்தைச் சித்தரிக்கும் பொழுது, பிறந்த மண்ணின் நினைவுகள் இயல்பாகவே, குறுக்கிழையில் ஓட, கோலச் சித்திரம் நெசவாகின்றது. அந்த இடத்தில் கொக்குவிலானான முத்துலிங்கம் மறுஜனனம் எடுத்து விட்டான்! சூப்புத்தடி நக்கும், பொய்மை அறியாப் பாலகன். சூரன்போர், சகடை, தச்சனார் என்று காவிய மயமான ஓவிய சுகம் அவன் நெஞ்சை நிறைக்கின்றது! அந்த நேரத்தில், அவன் எழுத்து சத்தியக் கனலிலே புனிதம் கண்டு, அழகியல் காயகல்பத்தில் இளமை பூண்டு…அஃது எழுத்தின் அமரநிலை. இந்த அமர நிலை, பிறந்த மண்ணின் நினைவுகள். தாயின் மடியிலும், மண்ணின் புழுதியிலும் பயின்ற தமிழிலேதான் சாத்தியப்படும். மண்ணும், அதன் நினைவும், அந்த நினைவுகள் கூத்தாடும் மொழியும் புலம் பெயர்ந்தவனின் நித்திய தியானத்தில் மண்டிக் கிடப்பவை. அவை இன்றி அவன் வெறுமை; வெறும் பூஜ்யம். எனவே, இவ்வாறு சித்திரிப்பதே இயல்பு; அழகு; உண்மை. ‘எந்த இடத்தில் அழகும் உண்மையும் தாண்டவமாடுகின்றவோ, அவ்விடத்தைக் கை கூப்பித்தொழு வேண்டும்; அதுதான் கோயில்’ என்று ரா.ஸ்ரீ.தேசிகன் அரை நூற்றாண்டுக்கு முன்னரே மகிழ்ந்தார். எத்தகைய ரஸனைப் பக்குவம்! இதனை விடுத்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் எழுத்தாளர்களிடம் தங்கள் வட்டார வழக்கைத் தொடர்ந்து பயன்படுத்தும் பிடிவாதம் இருக்கிறது என்றும்; இதனால், சில சமயங்களில் கதைகள் மற்ற நாட்டுத் தமிழர்களுக்குப் புரிவதில் சிரமமிருந்து அவைகளின் சர்வதேசத் தன்மையை இழந்து விடுகின்றன என்றும் முறையீடு செய்வது வடிவில்லை.

`கோவைத் தமிழ் கரும்பு. கல்லுப் போலிருந்தாலும் அத்தனையும் இனிப்பு. திட்டும்போது கூடத் தித்திப்பை விட்டுவிடாதவர்கள் அவர்கள். நடுராத்திரியில் அவித்துக் கொடுக்கும் இட்லியைப்போல மதுரைத் தமிழ் மென்மையானது. ஆனால், அவர்களது விமர்சனமோ மிளகாய்ப்பொடி. என்ன இருந்தாலும் நக்கீரன் நடமாடிய தலம் அல்லவா? நெல்லைத் தமிழ் கவிதைத் தமிழ். ஒலிநயமும் உவமையும் ஊடும் பாவுமாய் ஓடும் தமிழ். திட்டவே தெரியாது திருநெல்வேலிக்காரர்களக்கு’ என்று வட்டார வழக்குச் சிலவற்றுக்குச் ‘குமுத’மான பாராட்டு உண்டு. சென்னைத் தமிழ், அக்ரகாரத் தமிழ், கரிசல் காட்டுத் தமிழ், நாஞ்சில் தமிழ், தலித் தமிழ்….இவை அனைத்தும் தனித்தும், இணைந்தும் செந்தமிழ் நாட்டின் இன்றைய படைப்பிலக்கியத்தின் கருவிகளாய் உயர்ந்துள்ளன. இந்த வட்டார வழக்கினால் தேசியம் சங்கை கெட்டது என்று சொல்வாரும் உளரோ? ஈழத் தமிழை உரிய முறையிலே அங்கீகரிப்பதிலே, கலைமகள் கி.வா.ஜ.காலத்திலிருந்தே ஒருவித பஞ்சி தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பலருக்கு இருக்கிறது. இதற்கான ஏது என் பிடிமானத்திற்குள் சிக்குப்படுவதாகவும் இல்லை. தாம்பூலந் தரித்து நாநோகாத் தமிழ் சல்லாபம் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சுகிக்க முடியாத ஒன்று. எதுகை மோனை செய்து, பட்டிமன்றங்களிலே வித்தும் ஊன்றும் ‘பேறு’ அவர்களுக்கு இல்லை. இலக்கியமும் அதன் படைப்பும் அவர்களுக்க சௌந்தர்ய உபாசனையல்ல. கலை ஆராதனையுமல்ல. எழுத்துக் கலை அவர்களுக்குக் கிளர்ச்சியின் வெளிப்பாடு. ஞானத்தின் பகிர்வு. சத்தியத்தின் பதிவு. சுயமானத்தை இழந்து விடாத அக்கறை. மானிட மேன்மையின் தேடல். விடுதலையின் உள்ளொளி. இவையே அவர்களுடைய எழுத்து ஊழியத்திற்கான உந்து விசைகள். பணமும் புகழும் விடுதலைக்கு ஈடு அல்ல. படைப்பு முனைப்புக்கூட விடுதலையின் இன்னொரு ஸ்திதி என்கிற சம்பாவனையே! தொழிலிலும் புறவாழ்விலும் அந்நிய மொழிகளின் ஆதிக்கத்தை ஏற்றவர்கள். வீட்டு மொழியாக மட்டுமே தமிழை வசப்படுத்தும் நிர்பந்தம். ஆனால், தமிழை மறப்பதினால் தமது ஆன்மாவையே இழந்து விடலாம் என்கிற அச்சத்துடன் வாழ்கிறார்கள். தாயிடம் பாலமுது அருந்திய காலத்திலே பயின்ற தமிழ், குஞ்சுப் பருவத்திலே பார்த்த காட்சிகளிலும், அநுபவித்த கோலங்களிலும் உறைந்து நின்ற மொழிதான் அவர்கள் வாலாயப்படுத்தும் தமிழ். அது வித்துவத்தினால் பழுதுபடாது. வேறு தமிழில் எழுத முனைந்தால் உண்மையின் அழகையும், சத்தியத்தின் ஒர்மையையும், ஆன்மாவின் உள்ளொளியையும் அவர்களுடைய படைப்பு இழந்துவிடும் அபாயம் உண்டு. ‘பெரியவர்கள்’ இதனைப் புரிந்து கொள்ள ஏன் பஞ்சிப்பட வேண்டும்?

இலக்கியத்துக்கு சுத்த சுயம்புவான சர்வதேசத்தன்மை எதுவும் கிடையாது. சர்வதேச இலக்கிய அளவுகோல்கள் வைத்துக் கொண்டா காளிதாஸன் ‘அபிஞந சகுந்தலா’வைப் படைத்தான்? தாகூரின் கீதாஞ்சலி, வங்காள மொழியின் ஆள் பயிற்சிக்காகவா உலக இலக்கிய அங்கீகாரத்தைச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்கச் சம்பாதித்தது? மொழியின் செம்மையான பயன்பாட்டினால் மட்டும் சர்வதேசத் தன்மையை இலக்கியத்துக்குச் சம்பாதிக்கலாம் என்பது பிரமை. உலகத்தின் மிகக் குறுகலான ஒரு மூலையிலே ஒளிந்து கிடக்கும் மானிடத்தை ஒளிரச் செய்யும் இலக்கியப் படைப்பு, அது மிகச் சிறிய மக்கள் கூட்டத்திலே பயிலப்படும் மொழியிலேதான் படைக்கப்பட்டது என்றாலும், அஃது உலக இலக்கியமாக உயரும். மொழியின் வல்லபமல்ல; படைப்பின் வல்லபம், மானிடத்தின் வல்லபம்! ஒரு காலத்தில், மாட்சிமை பொருந்திய பெரிய பிரித்தானிய மன்னர் முன்னிலைப்படுத்திய ஆங்கிலமே சர்வதேச இலக்கியம் தோன்றுவதற்கான மொழி என்று நினைத்திருந்தார்கள். அந்தக் காலத்தில், அமெரிக்கக் குடியேற்றவாசிகளும் அவ்வாறே நினைத்தார்கள். பெரிய பிரித்தானியாவின் மாட்சிமை பெற்ற ஆங்கிலத்தின் இலக்கிய ஆதிக்கம் நீண்ட காலத்துக்கு நின்று பிடிக்கவில்லை. ‘புதிய வானம் புதிய பூமி’ என முகிழ்ந்த தமது புதிய அநுபவங்களை, அங்கு வழக்கில் முகிழ்ந்த மொழியில், தேசிய இலக்கியமாகப் படைத்தார்கள். ஒரு விதத்தில், அந்த மொழி வட்டார வழக்கே! வட்டார வழக்கில் அவர்கள் ஊன்றிய பிடிவாதத்தினாலும் அமேரிக்கத் தேசிய இலக்கியம் உருவாயிற்று. அடிப்படையில் தேசியத் தன்மைகளை நிறைவாக உறிஞ்சிக் கொள்ளும் இலக்கியமே, கால ஓட்டத்தில் சர்வதேச இலக்கியமாக அங்கீகாரம் பெறுகின்றது! எனவே, இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பரப்பு உலகளாவியதாக அகலிக்கும் பொழுது, ஈழத் தமிழையும் இணைத்துத்தான் அதன் மொழிவளம் வீறுகொள்ளும். இதுவே நியதி. இது சமத்காரமான நியாயப்படுத்துதல் அல்ல; சத்தியம்!

மேலும், இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ் கதைகளின் களங்கள் பனை வளராப் பனி பெய்யும் நாடுகளிலும், முத்துலிங்கம் போன்றவர்களுக்கு sub-sahara நாடுகளிலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித நேயமும் ஒளிரும். மொழி-கலாசாரம்-பண்பாடு-மதம்-நிறம் ஆகிய அனைத்து வேறுபாடுகளும் இற்று, எல்லோரும் கேளிர் – KIN – சுற்றத்தார் என முகிழ்ந்திடும் மானிடம்! யாரவன்? புலவனா? சான்றோனா? யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்றல்லவா பாடினான்? ஒமோம். கணியன் பூங்குன்றன்! அந்த அற்புத DYLLஇன் கிளர்ச்சியை, உலகத் தமிழ் ஆராய்வுகளுக்கான ஒரு கோஷமாக எல்லோர் வாயிலும் மனசிலும் ஒலிக்கச் செய்தவர் தனிநாயகம் அடிகளார். புத்திஜ“வித வக்கிரங்களினால் தேசப் பிரஷ்டம் செய்யப்பட்ட ஈழத்தமிழர் அவர். அவர் தேடலிலே, பூங்குன்றன், புதிய உயிர்ப்பும் வீரியமும் சுகித்தான். கேளிரைக் கேளீராக்கி, ஆராய்வுகளை அரசியற் சிறு தெய்வங்களில் பாதசேவைக் கேளிக்கைகளாக்கும் பேதையருக்கு அந்தப் பாடலின் ஆன்மா சிக்கமாட்டாது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்தம் இருபத்தியோராம் நூற்றாண்டின் தமிழ்ப் படைப்பு ஊழியம், அந்தப் பாடலின் இறுதி வரிகளையும் ஆதார சுருதிகளாக இணைத்துக் கொள்ளும்.

‘…………………
காட்சியில் தெளிந்தனம்; ஆகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!’

இது எத்தகைய vision-தரிசனம்’ ‘….அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே, உன் žரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே’ என்று ஒப்பாசாரத்துக்காக, எழுந்து நின்று, தமிழணங்கை வாழ்த்துவதோடு தமிழ் பற்றிய அக்கரை சம்பூர்ணம் பெற்றதா? தமிழணங்கின் žரிளமைத் திறனை வளர்ப்பதிலும் வளப்படுத்துவதிலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இணைந்துள்ளார்கள் என்பதை மதித்து, செந்தமிழ் நாட்டினரும் அவர்களைக் கேளிராக அணைத்தல் எத்தகைய ஆனந்த நிலை!

அடுத்த நூற்றாண்டின் கதைக் களங்களும், பொருள்களும் இவற்றை இசைக்கும் பாணிகளிலும் உபாயங்களும் உத்திகளும் மாறும். மாற்றமே வளர்ச்சியுமாம். இவை பற்றிய தேடல்களின் கோலங்களை ‘வம்ச விருத்தி’யிலே தரிசிக்கின்றேன். நாளைய நூற்றாண்டின், நாளைய கதைகளின் சாங்கங்களைப் பதிவுசெய்வதினாலும், ‘வம்சவிருத்தி’யை வெள்ளோட்டம்-lanch எனக் குறித்தேன். நண்பர் முத்துலிங்கம் ஒரு சாமான்யனாகவே வசப்படுத்தியுள்ள சாமான்யத் தமிழிலே, கடந்த சில தசாப்தங்களா மேற்கொண்ட ஒரு வகை நாடோடி வாழ்கையிலே திரட்டிக் கொண்ட அநுபவங்களிலே காலூன்றி, இந்தத் தொகுதிக்கான கதைகளைப் படைத்துள்ளார் என்கிற சங்கதி சட்டென்று வாசகனின் பிடிமானத்திற்குள் சிக்கிக் கொள்ளும். இவற்றின் மத்தியிலே தாம் ஒரு யுகசந்தியிலே வாழ்ந்து கொண்டிருக்கும் பிரக்ஞையை அவர் துறக்கவில்லை. ‘இருபது வயசிலே அறிந்த உண்மைகளின் பேர்பாதி நாற்பது வயசிலே உண்€த் தன்மையை இழந்து விடுகின்றான்; நாற்பது வயசிலே அறிந்து கொள்ளும் உண்மைகள் இருபது வயசிலே அறியப்படாதவையாக இருந்தன’ என்கிற ஞான உதைப்பு கதைகள் பலவற்றிலே பூடகமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால் ‘சாமான்யன்’ என்பதிலே அவர் பூண்டிருக்கும் தோரணை, அன்று கொக்குவில் அயலிலே சேகரஞ் செய்த அந்த இனிமைகளை இழக்காத ஓர் இயல்பையும் இணைக்கின்றது. இது யுகசந்திப் பிரக்ஞையே! இந்தப் பிரக்ஞையுடைய ஓர் எழுத்தாளனாலேதான், அடுத்த நூற்றாண்டின் கதைக்கலை உலகினை வரவேற்கும் நுழைவாயிலிலே தோரணங்கள் கட்டுதல் ஏலும். ஏலும் மட்டுமல்ல, தகுதியும் முத்துலிங்கத்திற்கு நிறைவாகவே இருக்கின்றது. எனவே, அவருடைய தமிழ் ஊழியத்தை நெஞ்சம் மண்ககப் பாராட்டுவதில் மகிழ்கின்றேன்.

நாடு-நிறம்-இனம்-மதம் ஆகிய குறுக்கங்களை எகிறிய ஒரு தேடலாய் அமைந்துள்ள ‘வம்ச விருத்தி’ நாம் ஊன்றவேண்டிய அக்கறைகள் சிலவற்றைச் சுட்டுகின்றது. புதிய அநுபவங்களையும் கற்பிதங்களையும் இணைக்கின்றது. புலம் பெயர்ந்த நாடுகளின் நாளைய தமிழ் எழுத்தாளர்களடைய சிரத்தைகளை நெறிப்படுத்துகின்றது. இவற்றை நாம் உரிய முறையில் தரிசித்தல் வேண்டும் என்ற ஆசியினாலும், மூன்று தலைமுறைக்கு மேலாகவும் எழுத்து ஊழியத்தைச் சேவிக்கும் தமிழ்த்தவனம் மறக்காத பரதேசி என்ற ஹேதாவிதலும், இந்த முன்னீடு இவ்வாறு சமைந்தது. தலைக்கேறிவிட்ட என் தமிழ்ப் பித்து எனக் கொண்டு, இதன் நீளத்தைப் பொறுத்தருள்க.

‘ஓ மரங்களே, என்னை மன்னிப்பீர்களாக!’ என்று முத்துலிங்கம் பாவமன்னிப்புக் கோரவேண்டிய அவசியமே இல்லை. அவருடைய தமிழ் ஊழியம், நாளைய நமது எழுத்தாளர்களுக்கும் பயன்படும். அவருடைய தமிழ் ஊழியம் தொடரவும், நின்று நிலவவும் என் ஆசிகள்.

எஸ்.பொ

அவுஸ்ரேலியா
16.4.1996


Ranganna troupe’s drama :: N. Swaminathan

ரங்கண்ணா குரூப் ‘இதொ அதோ’ன்னு கீரி பாம்பு சண்டைவிடறவன் மாதிரி ஏதோ
சொல்லிட்டு லீவுல போயிட்டாங்க. இந்தக் கவலையோட நான் தூங்கறச்சே
என் கனவுல வந்து ஒரு நாடகம் போட்டாங்க. அதான் இது….

காட்சி – 1

நியு ஜெர்சியில் பல குடும்பங்கள் வாழும் ஒரு அபார்ட்மென்ட்.

ரங்கண்ணாவின் குடும்பத்தில்:

ரங்கண்ணா: ஹா, ஹ,ஹ், ஹா, ஹா…

மங்களம் : அப்படி பேப்பரிலே சிரிப்பா என்ன போட்டுருக்கான்?

ரங்: இந்த கோர்/புஷ் தேர்தல் சர்தார்ஜி ஜோக்கு மாதிரி ஆயிட்டுது.
முதல்ல ஓட்டு வித்தியாசம் 2000ன்னான், அப்புறம், 900ன்னான்,
அப்புறம் 370ன்னான், இப்ப 228தாங்கறான்…

மங்: இதுக்கும் சர்தார்ஜிக்கும் என்ன சம்பந்தம்?

ரங்: ஒரு சர்தார்ஜி பிள்ளைய பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாசில சேத்தான்.
அங்க ஒரு மாசத்துல பையன் மக்குன்னு தெரிஞ்சு ஆறாங்கிளாசுக்கு தள்ளினா.
ஒரு மாசம் கழிச்சு இதுக்கு அவன் லாயக்கில்லனு அஞ்சாம் கிளாசுக்கு
தள்ளிட்டா. அங்க போனா ஒரு மாசத்துல நாலாங்கிளாசுக்கு போன்னு
அனுப்பிட்டா. சர்தார்ஜிக்கு கவலை வந்துடுத்து. சர்தாரிணிட்ட,
உம் புள்ள பெயிலாகி பின்னால பின்னால வர வேகத்த பாத்தா ரொம்ப
கவலயாயிருக்கு. எதுக்கும் நீ உன் பைஜாமாவை இறுக்கி முடிஞ்சிக்கோன்னான்…

மங்: சீ. சீ. உங்களுக்கு ஜோக் சொல்றதுக்கு ஒரு வெவஸ்தயே கெடையாது
நடுக்கூடத்துல சொல்ற ஜோக்கா இது…

சாந்தி/தங்கராஜன் குடும்பம்

சாந்தி: என்னங்க பிரியாணி எப்படி இருக்கு ?

தங்கராஜன்: ரொம்ப நல்லாருக்கு வன்கேழி பிரியாணி.

சாந்தி: என்னங்க, அதுக்குள்ளயும் ரெண்டு காலைத்தின்னாச்சா..
வன்கேழிங்கிறீங்க. எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க.
பண்ணினவளுக்கு பானையும் கரண்டியும்தானா?

அண்ணாமலை வீட்டில்

அண்ணாமலை: எப்படி தத்துவராயர் சுமேரு தமிழைவிடப் பழங்கால மொழின்னாரு?
சுமேரு அருணகிரியார் காலத்ததுன்னு தெரியும். முருகந்தானே
அருணகிரிட்ட “சும்மேரு, சொல்லற”ன்னு சொன்னரு. அவருக்கு நெனவா
எழுதிக்கேக்கணும்.

(மணி சுவாமிநாதன் தலைவிரிகோலமாக ஓடி வருகிறார்)

அண் : என்ன மணி, சட்டையெல்லாம் கிழிஞ்சிருத்து? சண்டை போட்டியா?

மணி: இல்லீங்க. தெருவில ஒத்தரு மணி, மணின்னு கத்துனாரு. என்ன வேணும்
நாந்தான் மணின்னேனா. அவ்வளவுதான். எனக்கு மணியாட்ட உரிமை இல்லியாடான்னு
கத்தி என்னை உலுக்கி சட்டைய கிழிச்சிட்டார். மணி ஆட்டரதே வாழ்வின் குறிக்கோளா
அலையுறாரேன்னு வருத்தமா இருக்கு. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு மணிய
வாங்கி குடுத்து ஆட்டிக்கிட்டு கெடய்யான்னு சொல்லிடலாமா? ரங்கண்ணா
குடுப்பாரா?

அண்: ரங்கண்ணாவா. அவருதான் முன்னமே சொல்லிட்டாரே,
வேற வேல இல்லியாடா ஒங்களுக்குனு.

(ஒரு கார் வந்து நிற்கும் ஓசை. அதிலிருந்து இறங்குகிறார் சர்தார்ஜி.
கையில் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டு நம்பரை பார்க்கிறார்.)

மணி: சார், சர்தார்ஜி வரான், அன்னிக்கு சொன்னேனே, ஒரு சர்தார்ஜி ஜோக்…
ஒரு சர்தார்ஜி டிஜிட்டல் வாட்சு வாங்கினான். அதை உத்து பார்த்தான். என்னடா
பன்னண்டு நம்பரில்ல, நாலுதான் இருக்கு. மணி, நிமிஷம் காட்டற முள்ளை வேற
காணும்னு கத்தினான் …
இத அவருகிட்ட சொல்லிடாதீங்க..ப்ளீஸ்..

மங்களம் எட்டி பார்க்கிறாள்:

மங்: நீங்களும் ஒங்க ஜோக்கும். அப்பவெ சொன்னேன் இந்த பாழாப்போற
சர்தார்ஜி ஜோக் வாணாம்னு, கேட்டேளா ? இப்ப சர்தார்ஜி வந்துட்டான், போட்டு
மொத்தப்போறான், கையில பெரம்பு வெச்சிருக்கான்.

சாந்தி பார்க்கிறாள்:

சா: பாருங்க, சர்தார்ஜி வரான். ரங்கண்ணா வீட்ல இல்ல நுழையறான்? ஏன் ?

தங்க: ரங்கண்ணா அவன் கிளப்புள குடிச்ச பீருக்கு காசு வசூலிக்க வரானா?

சா: என்னங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணும் பின்னால ஆடிக்கிட்டு வருது?

தங்க: டான்ஸ் ஆடற பொண்ணா இருக்கும்.. நீ போயி பாக்கி பிரியாணிய
தின்னுமுடி. பார்வையை மறைக்காத. வெள்ளக்காரி வெள்ளக்காரிதான்..

சா: ஜொள்ளு விடாதீங்க. அவளப்பாத்தா கர்ப்பிணி பொண் மாதிரி இருக்கு.

தங்க: சர்த்தான். சர்தார்ஜி கிளப்புல ஒரு உண்டி இருக்கு. Place your
contributions in the slot னு அது மேல எழுதி வெச்சிருப்பான். ரங்கண்ணா அதை
தப்பா புரிஞ்சிண்டு டான்சர்கிட்ட ஏதோ சில்மிசம் பண்ணி இது மாதிரி ஆயிருக்கும்.
அம்மணி ய டே, கீப்ஸ் த டாக்டர் அவேன்னு தெனாவெட்டா சொல்றச்சயே
நெனச்சேன். நெள, ஹி ஹாஸ் டு ரீப் வாட் ஹி ஸோடு. வா போயி வேடிக்க
பாக்கலாம். அண்ணாமலை சாரயும் மணியயும் அழச்சிட்டு வரேன்.

மணி: அண்ணாமலை சார். சர்தார்ஜி, ஒரு வெள்ளக்காரி, சர்தார்ஜியோட
புள்ள மூணுபேரும் வராங்க.

அண்ணா: இது ஒரு புது சர்தார்ஜி ஜோக்கா? கேட்டதில்லயே.

மணி: இல்ல சார் நெசம்மாவே இங்க வராங்க. பாருங்க.
ரங்கண்ணா வீட்டுக்கு போறாங்க.

அண்ணா: சர்தார்ஜி புள்ளயா?

மணி: ஆமா சார் அவனுக்கும் தாடி இருக்கு. ஒரு சர்தார்ஜி பொண்டாட்டிய
அடிச்சானாம், பொறந்த கொழந்தைக்கு தாடி இல்லைனு.
இது என் கொழந்த இல்லடின்னு. என் குழந்தன்னா தாடி எங்க
போச்சுன்னு கத்தினானாம்.

அண்ணா: நீ அவன்கிட்ட அடிபட்டு சாகப்போறே. இந்த ஜோக்கெலாம்
வாணாம். வா போயிப் பாக்கலாம்.

மணி: சர்தாருக்கு தமிழ் தெரியாது.

அண்ணா: அதான் தப்பு. அவன் கிளப்புல ஓசில பீர் குடிக்கலாம்னு நான்
போயி ரங்கண்ணா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு
“விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்றூ”ன்னு
சொன்னேன். அதக்கேட்டுட்டு சர்தார்ஜி ஒரு ஸ்பூன் பீரை என் வாயில் ஊத்திட்டு:
“தினைத்துணையாக் கொடுப்பினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்”னுட்டு
போயிட்டான். யமகாதகன். வா போகலாம்.

அனைவரும் ரங்கண்ணா வீட்டுக்கு விரைகிறார்கள்.


காட்சி 2

ரங்கண்ணா: வா, சர்தார், வா… மங்களம் காபி குடு.

சர்தார்: நமஸ்தே ரங்கா…

தங்கராஜன், சாந்தி, அண்ணாமலை, மணி உள்ளே வருகிறார்கள்

தங்க: ரங்கண்ணா, நான் சும்மாத்தான் வந்தேன்..
அண்ணாமலையும், மணியும் இருக்காங்க, ஒரு கை கொறையுது,
சீட்டு ஆட்டம் போடலாம்னு..

ரங்கா: ஒக்காருங்க. சர்தார்ஜி என்னை பார்க்க வந்திருக்கார்.

சர்தார்: என்ன அன்னாமலே, கையில் என்ன பொஸ்தகம்? ஞான சைத்தான்யம்?

அண்ணா: இந்த மாதிரி வம்பு வரும்னுதான் அவர் தமிழ்லயும் போட்டிருக்கார். அது ஞான
சைதன்யம்.

தங்க: ரங்கண்ணா உங்களுக்கு இப்படி ஆகும்னு நெனக்கில. அப்பவே சொன்னேன்
பாத்து கைய விடுங்க, எந்த புத்துலே எந்த பாம்பு.. LeTex பத்தி சொன்னேன். நீங்க
கண்டுக்கல. எத்தினி மாசம் இப்ப? மாமிக்கு விசயம் தெரியுமா?

ரங்கா: தங்கராஜு நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. மொதல்ல சர்தார்ஜி என்ன
விசயமா வந்தாருன்னு கேட்டுட்டு அப்புறம் ஒங்கிட்ட பேசரேன். என்ன விசயம் சர்தார்?

சர்தார்: எல்லாம் இந்த சைத்தான் கி பச்சாவால வந்துது. இதொ இருக்கானே, எம்புள்ள .
நியுயார்க்குல படிக்க அனுப்பி இருந்தேன். திடீர்னு வந்து நிக்கறான் இந்த வெள்ளைக்கார
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு. வேண்ட்டம்னு சொன்னா கேக்கல.

ரங்கா: இது ஒம்புள்ளயா ! வளந்துட்டானே. சின்னப்பையன இருக்கறச்சே பாத்தது.
நாளக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட், அங்கிள், அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு கேப்பான்.

சர்தார்ஜி பையன்: அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு இன்னம் எனக்கு தெரியல அங்கிள்.

ரங்கா: ஒனக்கு மத்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. சர்தார், வளைகாப்பு, சீமந்தம்,
பேரனுக்கு காதுகுத்தல் கல்யாணம் பண்ற ஸ்டெஜில வந்து கல்யாணம்னு சொல்றீங்க…
பொண்ணு கர்ப்பமா இல்ல இருக்கு?

சர்தார்: ஆமாம், ரங்கண்ணா, 6 மாசமாம் ? ஆனா அவ வயத்துல இருக்கறது என் பையனோட
கொழந்த இல்ல.

அண்ணா: சர்தார், என்ன இது அசிங்கமாஅநியாயமா இருக்கு. நீங்க தப்பு பண்ணிட்டு ஒங்க பையனுக்கு
கட்டி வெக்கறது மொறையா?

சர்தார்: நான் தப்பு பண்ல. என் பையனும் தப்பு பண்ல.

சாந்தி: எனக்கு தலை வெடிச்சிடும்போல இருக்கு. அந்த பொண்ணு யாரால கர்ப்பமானா?

சர்தார்: ரங்க…

தங்க: (ரங்கண்ணாவை கண்னால் பார்த்துகொண்டே) சாந்தி, நான் நெனச்சது சரிதான்
மங்களம் மாமிய புடிச்சுக்க, மயக்கம் போட்டு விழுந்திரப் போறாங்க.. இந்த சேதியெல்லாம்
அவங்க தாங்க மாட்டாங்க..

ரங்க: என்ன அபாண்டமா இருக்கே?

சர்தார்: ரங்கண்ணா அதைத்தான் சொல்ல வரேன். அவளோட பாய் பிரண்டு பால்.
முழு பேரு Paul Gold King. அவன் பிள்ளைதான் இந்தப்பெண் வயத்துல இருக்கு.

சாந்தி: பால் கோல்ட் கிங் – அப்ப பால் தங்கராஜனா? என்னங்க இது உங்களுக்கு
நல்லாயிருக்கா ? லேட்டஸ்ட் லேட்டக்ஸ்னு ஏதோ சொல்லிட்டு, எனக்கு குழந்தையே
இல்ல. இந்தபொண்ணுக்கிட்ட போயி வெக்கமில்லாம…

சர்தார்: நீங்க அழாதீங்க. அந்தப் பால் இவரு இல்ல. அது வெள்ளைக்கார பால்.

மங்களம்: கல்யாணத்துக்கு முன்னால..சே..சே.. கேக்கவே நாராசமா இருக்கு.
இது தப்பு இல்லையா? அவளொட பாய் பிரண்டுக்கு கட்டி வெக்கரதுதான் மொறை.

சர்தார்: அவன் எங்கயே ஓடிப்போயிட்டானாமே? என் புள்ள இவளுக்கு வாழ்வு கொடுக்கப் போறானாம்.
புத்தி சொல்றதுக்கு ஒன்னைவிட்டா வேறு யாரு இருக்கா? ரங்கண்ணா நீதான் என் புள்ளக்கி
நல்ல புத்தி சொல்லி திருத்தணும். அதுக்குதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.

ரங்க: நான் என்ன செய்யறது ? தங்கராஜன் என்ன பண்லாம்னு சொல்லுங்க.

தங்க: வேணுன்னா சாந்தி பண்ண பிரியாணிய வெள்ளக்காரிட்ட கொடுக்கலாம். அதைத்தின்னுட்டு
ஒரைப்பு தாங்காம ஓடிடுவா.

சாந்தி: தின்னுமுடிச்சிட்டு கேலியா.. அண்ணாமலை சாரை கேக்கலாம்.

அண்ணா: சரி நான் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன்.

மணி: சார், ஒங்களுக்கு எத்தனியோ பேரு பொண்ணு தர சம்மதமா இருக்காங்க.ஒரு விரக்தில
இந்த பொண்ணை நீங்க கட்டிக்க வேண்டாம்.

அண்ணா: சே, நான் கட்டிக்கரேன்னு சொல்லல. அந்தப் பையன்கிட்ட தனியா பேசப்போறேன்.
புத்தி சொல்லித் திருத்தப் போறேன்.

ரங்கா: நான் அந்தப் பொண்ணோட கொஞ்சம் பேசட்டுமா?
மங்களம் நீ என்ன பண்ற, உள்ள போயி இந்தப்பொண்ணுக்கு ஏதாவது
ஸ்வீட் பண்ணி எடுத்துண்டு வா. பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு.
இங்க வாம்மா.
உம்பேரு என்ன ? இப்படி பக்கத்துல வந்து ஒக்காரு. கைய கால
வலிக்கரதோ? லேசா அமுக்கி விடவா? இதென்ன மார்ல ?
சே, அதை கேக்கல. அது கீழ கருப்பா புள்ளி?
மச்சமா? எனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்.

சாந்தி: அப்படியா? உங்களுக்கு தெரியுமா ? இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே.
எனக்கும் பாத்து பலன் சொல்லுங்க.

தங்க: (கோபத்துடன்) சாந்தி. நீ மொதல்ல வீட்டுக்கு போ. அப்புறம் வந்து பேசறேன்.
மெதுவா மெதுவா தொடலாமான்னு வருவான். அப்புறம் நீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு
குதிப்பே. நான் சட்டி சுட்டதடா, கை வெந்ததடான்னு பாடிக்கிட்டு போகணும். தேவையா இது?


காட்சி – 3

(அண்ணாமலையும் சர்தார் பையனும் இன்னம் வெளியே வரவில்லை)

ரங்கண்ணா: ஏன் சிரிக்கறே மணி?

மணி: இல்லே, உங்களுக்கு ஒரு பழய ஜோக் நெனைவிருக்கா? அண்ணாமலைசார்
மொதல்ல வெளில வருவாரா, இல்ல அந்தப்பையன் வருவானான்னு யோசிச்சேன்.
சிரிப்பு வந்துது.

சர்தார்: அது என்ன ஜோக்?

தங்க: மணிக்கு ஜோக் சொல்ல நேரம் காலம் இல்ல. அந்த பையன் புடிவாதம்மா
இருக்கான் போல. அண்ணாமலை என்ன செய்ய முடியும் ?
எனக்கு நம்பிக்கை இல்ல.

(அண்ணாமலையும் பையனும் முக மலர்ச்சியுடன் வெளியே வருகிறார்கள்)

அண்ணா: சர்தார்ஜி கவலய விடுங்க. உங்க பையன் அவளை இன்னிக்கே மறந்திடுவான்.
ஆனா, ஒரு நிபந்தனை.

சர்தார்: என்ன செய்யணும் ?

அண்ணா: நீங்க அவனுக்கு உங்க பென்ஸ் காரை கொடுக்கணும்மாம். கொடுப்பீங்களா?

சர்தார்: பூ, இவ்வளவுதானெ. இங்கயே கொடுத்திடறேன். இந்தா சாவி.

பையன்: தாங்ஸ். நான் இந்தப் பொண்ணை அவ வீட்டுல விட்டுடறேன்.

சர்தார்: அச்சா, பேட்டா. ரொம்பா நன்றி அன்னாமலே. ஒன்கு என்ன வேணும் கேளு.

தங்க : பேசாம ஹேப்பி அவர்ல எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வெச்சா போறும்
சாந்தியும் மங்களம் மாமியும் வீட்ல இருந்து முறுக்கு சுடட்டும்.

ரங்க : அப்படியே ஒரு ஷக்கலக்க பேபி டான்சுக்கும் ஏற்பாடு பண்ணு சர்தார்.

சர்தார்: ஓ.கே. அப்ப நாங்க கிளம்பரோம். எல்லாருக்கும் நன்றி.

சர்தார்ஜி, மகன், வெள்ளைக்காரப்பெண் மூவரும் போகிறார்கள்.

தங்க: எப்படி அண்ணாமலை இதை சாதிச்சீங்க.

அண்ணா: சிம்பிள். அந்த பையன் கெட்டிக்காரன். அவனுக்கு காரு வேணும். கேட்டா
சர்தார்ஜி தர மாட்டேன்னுட்டான். அதுக்குனு ஒரு பொண்ணை செட்டப் பண்ணி நாடகம்
போட்டு அடாவடி பண்ணீருக்கான். எங்கப்பன் காரை வாங்கி குடுத்துடுங்கன்னான்.

ரங்க: அதிசயம்மா இருக்கே. இருவதாம் நம்பர் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டான்னு
பத்தாம் நம்பர் பஸ்ஸில ரெண்டு தடவை ஏறினவனுக்கு இவ்வளவு சாமர்த்தியமா?

தங்க: நியுயார்க் காலெஜ் அப்ளிகேஷன்ல Fill in Capital போட்டிருக்கான்னு
வாஷிங்டன் போனவன்தானே.

மணி: ஒரு சர்தார்ஜி நடந்து போயிட்டு
இருந்தான். ஏண்டா ஒனக்குதான் காரு இருக்கே,
ஏன் நடக்கிறேன்னா, காரைத்திருடுவாங்கன்னு பயந்து காரைப்பூட்டி சாவிய முழுங்கிட்டேன்
அது வெளிய வர வரைக்கும் நடைதான்னானாம். இவன் எப்படியோ?

சாந்தி : இந்த வேடிக்கய பாருங்க. அப்பாவும் புள்ளயும் அந்த பொண்ணை உள்ள வெச்சு
காரைத்தள்ளிட்டு போறாங்க.

மணி: (உரக்க) சர்தார், பெட்ரோல் இல்லியா கார்ல?

சர்தார்: இருக்கு, இருக்கு. அதை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்னு காரைத்தள்ளிட்டு போறோம்.

மணி: அதான் சார் இந்தப்பசங்க இவ்வளவு காசு சம்பாரிச்சிட்டாங்க.

அண்ணா: மணி, ஒண்ணு சொல்றேன் தப்பா நெனக்காத. சர்தார்ஜிங்க உழைப்பாளிங்க.
அதனால உசர்ந்தாங்க. இந்திய சனத்தொகையில அவங்க 2%தான். அதுனால உனக்கு திமிர்
வரப்படாது. பொறாமை ப் படக்கூடாது. அவன் தாடி வெச்சிருக்கான், தலைப்பா
கட்டிருக்கான்னு இளக்காரம் பண்ணாத. அது அவனோட உரிமை. கிளப் வெச்சான்,
பேப்பர் நடத்தரான்னு வயிறு எரியாத. நீயும் பண்ணிப் பாரு. நாகரீகமா பேசு. நாராசமா பேசாத.
மல்லாந்து எச்சி துப்புனா ஒம் மூஞ்சி மேலதான் விழும்.

சாந்தி: என்னங்க இது, இன்னிக்கி தேங்ஸ்கிவிங். இப்ப போய் சீரியசா ஏதோ பேசிக்கிட்டு.
…ஒரு பாட்டு பாடவா?

தங்க: பாடு சாந்தி பாடு, இசை என்னும் நாத வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எனக்காக…

சாந்தி : போதும் பேசாம இருங்க.
(பாடுகிறாள்)

Turkey Dinner, turkey dinner,
Gather round, gather round,
Who will get the drumstick?
Yummy, yummy drumstick,
All sit down, all sit down.

Cornbread muffins, chestnut stuffing,
Puddin’ pie, one foot high,
All of us were thinner
Until we came to dinner;
Me oh my! Me oh my!

மங்களம்: ஏண்டியம்மா, எனக்கு புரியற மாதிரி தமிழ்ல ஏதாவது பாடப்படாதோ ?

கல்யாண சமயல் சாதம்
நல்ல கெளரவப்பிரசாதம்
அதுவே எனக்கு போதும்

புளியோதரை என்னும் சோறு
பொறுத்தமாய் ஒருசாம்பாரு
பூரி கெழங்கு லட்டு
பொரித்த கத்தரி கூட்டு

அழைத்திடுவோம் அனைவரையும்
ஆசையோடு வயிறார
உண்டிடுவோம்
கிடைத்த வாழ்வுக்கெல்லாம்
படைத்தவனுக்கு நன்றி
சொல்லியே.

(கைத்தாங்கலாக ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் மேடைக்கு ஏற்றப்படுகிறார்)

ரங்கபாஷ்யம்: நான் இதுல வரலைன்னு உங்களுக்கு கொறை வெக்கப்படாது, வந்து ஒரு
வார்த்தை சொல்லுன்னாள். சொல்றதுக்கு என்ன இருக்கு?

இன்னிக்கு தேங்ஸ் கிவிங் டேன்னு சொன்னா. என் வயசில தெனமும் நான் தூங்கி காலையில கண்
முழிச்சாலே கடவுளுக்கு நன்றி சொல்லிடுவேன். தெனமுமே எனக்கு தேங்ஸ் கிவிங்தான்.
லோகமே ஒரு நாடகம். ஆட்டுவிப்பான் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரேன்னு சொல்லுவா.
நாமும் குழந்தை, பையன், இளைஞன், சம்சாரி, தோப்பனார், தாத்தான்னு பல வேஷங்கள்
போடறோம். மத்தது எல்லாம் மறந்து போய் அந்த பாத்திரமா மாறிடறோம். இதான் சாச்வதம்னு
பகவானை மறந்திடறோம். அப்படி மறக்காம அவன் திருவடிகளை மனசில வெச்சிங்கோ.
எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துங்கோ. எம்பெருமான் கிருபை எல்லோருக்கும் உண்டு.

வணக்கம்.

(நிறைவு பெற்றது)

(என் கனவில் வந்து நாடகம் போட்ட ரங்கண்ணா குழுவினருக்கு நன்றி. )

Categories: Authors Tags: , , , , ,

Rangabashyam group on Bharathi Dasan songs :: லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்

ரங்கபாஷ்யம் குழுவில் பாரதிதாசன் பாடல் பற்றி யார் எழுதுவது
என்ற குழப்பத்தில் யாரும் எழுதாதிருந்தபோது, “அய்யா, இது
விழா முடியும் நாள். சட்டு புட்டுனு எழுதிக்குடுங்க” என்று
சிலரைக்கேட்டு வாங்கியதை இங்கு வெளியிடுகிறேன்.
=====================================
ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்:

கனக. சுப்புரத்தினம்ங்கிற பேரை பாரதி *தாசன்*னு மாத்திண்டார்.
தாசன்னா யாரு. பகவானுகிட்ட சரணாகதி அடஞ்சு சேவகம்
பண்றவன். சரணாகதியப் பத்தி நா வெவரிக்க தேவையில்லை.

நிகமாந்த தேசிகன் சொல்லிட்டு போயிட்டார்.
உகக்குமவை உகந்து,
உதவா அனைத்தும் ஒழித்து
மிகத்துணிவு பெற உணர்ந்து
காவலென வரித்து
புகலில்லாத தவமறியேன் என்று
பகவான் காலைப்பிடித்துக்கொள்ளுதல்..

ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கலாம்… ராகமாலிகையில பிச்சு ஒதற வேண்டிய பாட்டு..

சம்சார சோக மயமே யலாது சுக
சஞ்சார மேது இகமே பொலாது இதில்
சந்தேகமேதுன் சுகமே நிலையாகும்

இந்த மேல் பாராவிலேயே he tells it all..

நீயே கதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைத்தனன் பரனருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா

நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின் பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா

சீராருநன் மயிலம் நன்மயிலம்
வளமியலும் நலம்பயிலும்
திருவடி நிழலென அமையும்
தருவின மழகொடு குளிரும்

சிங்கார கோகிலம் கீதமோக மிருதங்கம்
சிற்றலை போய்மோதப் பட்சி ஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாட ரங்கமாம்
சுப்புரட்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்

சுகமெது வெனிலுன தருளெனவே
சொலும் இதிற் பிறிதொரு பொருள் கனவே

சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
திரவாரா திராய் கெம்பீரா

என்னடா ஒரு வைஷ்ணவன் முருகன் பாட்டை புகழறான்னு
நெனக்காதேள். எனக்கு சிவ-வைஷ்ணவ பேதம் இல்ல.
அரியும் சிவனும் ஒண்ணுதான்.
தவிர மாமாவைப் பாடினா என்ன, மருமகனைப்பாடினா என்ன?
same family தானே..

அவர் பாட்டுல உள்ள சத்தை எடுத்திண்டு, சக்கையை உதறுமாறு
கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.

எம்பெருமான் அருள் எல்லோருக்கும் உண்டு.

அடியேன்
பாஷ்யம்
============================
ரங்கண்ணா ராமன்:

இதான் பெரியவர மொதல்ல எழுதவிடக்கூடாதுங்கரது..
எவ்வளவு பாட்டு எழுதிருக்கார் பாரதிதாசன்..கிளுகிளுப்பா ஒரு பாட்டைப் போடாம..

கையில் ஒரு பிட்சர் பீர்ரொட சர்தார்ஜி கிளப்பில் இருக்கிறதா கற்பனை பண்ணிங்க,
ரம்பா மாதிரி ஒரு பெண்ணு ஆடறா..

“பட்டாணி வண்ணப் புதுச்சேலை-அடி
கட்டாணி முத்தே உன் கையாலே – எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை-
உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே!

ஆவணி வந்தது செந்தேனே -ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே- எனைப்
போவேன்று சொன்னாய் நொந்தேனே- செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே !

பூவோடி விழிக்கொண்டையிலே?- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே- நீ
வா வா என்ரன் அண்டையிலே – என்று
கூவா யோகருங் குயிலே !”

ஒரு விசிலடிச்சு ஒன்ஸ் மோர் கேக்க தோணலே ?

=============================

மணி சுவாமிநாதன்

பாரதிதாசன் வாரம்னு வெச்சு ஒனக்கு பிடிச்ச பாரதிதாசன்
பாட்டை போடு என்பது ஒரு வகை உளவியல் சோதனை.
டாக்டர் லோகநாதன் சொல்லுவாரே Hermaneutic Testingங்கோ
என்னவோ..ஒரு மரம் வரைடாங்கறது. அவன் வரையறத வச்சு
அவனுடைய மன பாதிப்புகளை, உள் மன எண்ணங்களை வெளிய
வரவழைக்கிறது.

எனக்கு புடிச்ச பாவேந்தர் வரிகள் :

“இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்திரம் உண்டாகுமோ?

சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில் (இணையத்தில்)
தீதினி நீங்காதடி- சகியே
தீதினி நீங்காதடி !”

=============================
S. அண்ணாமலை

எனக்கு புடிச்ச பாட்டு:

மேசை விளக்கேற்றி நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்

ஆசைத்தமிழ் படித்தேன் என்னருமை
அம்மா அருகில் வந்தார்

மீசைத்தமிழ் மன்னர்- தம் பகையை
வென்ற வரலாற்றை

ஓசையுடன் படித்தேன் அன்னை மகிழ்
வுற்றதை என்ன சொல்வேன் ?

செந்தமிழ் நாட்டினிலே – வாழ்கின்ற
சேயிழையார் எவரும்

வந்த விருந்தோம்பும்- வழக்கத்தை
வாய்விட்டு சொல்லுகையில்

அந்தத்தமிழ் அன்னையின் – முகத்தினில்
அன்பு பெருகியதை

எந்த வகை உரைப்பேன் ! – கேட்ட பின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார் !

கிட்ட நெருங்கி எனைப்- பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்

சொட்டுவது போலே- வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்

கட்டுக் கரும்பான- இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்

எட்டுவகைச் செல்வமும் – தாம் பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார் !

(இன்னிக்கு நடக்குமாய்யா இது.
Sorry , Mommy, I can’t read Tamil னு சொல்லிட்டு
போயிடாதா பிள்ளை)
======================================

தகர டப்பா

தகரம்ன்னா ஒங்களுக்கு எளக்காரம்.
எவர் சிலவர் பாட்டை நான் எழுதரதுதானே மெறை.

ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைபெண்களும் வேண்டும் என்று சொல்வர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்…

ஏழைங்க கூட மதிக்கரதில்லன்னு சரியா சொன்னாரு..

சே, ஒரு பாட்டுல கூட தகரத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சு.

=====================
வெட்டி

கொடுவாளை எடுத்து வெட்டற சமாசாரம் எனக்கு புடிச்சது.
எல்லோரும் அதச்சொல்லி சொல்லி நாற அடிச்சிட்டாங்க. எனக்கு புடுச்ச
வெட்டர பாட்டு இங்க..

தங்கக் கதிர்தான் தன்
தலை சாய்ந்ததே
சிங்கத் தமிழர்- தம்
செல்வம் உயர்ந்ததே

பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள்
செங்கை பிடிப்போம்
போத்துக்கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவொம்..

வெட்டும் இடமெல்லாம் – நாம்
வேண்டிய பொன் கிட்டும்
எட்டுத்திசை பாடும்- நம்
இன்பத்திருநாட்டை !

===========================

சாந்தி தியாகராஜன்:

பெண் விடுதலயப்பத்தி பாரதிதாசன் சொன்னத
எழுதணும்னு ஆசை. ஆனா அவரு கோவிச்சுப்பாரு.
அதோட இல்ல. அவரு இப்ப கொஞ்சம் சரியில்ல.
இந்தப் பாழாப்பொன்ன சர்தார்ஜி கிளப்புல எவளயோ
பாத்து ஜொல்ளு விடரதா தகவல் வந்திச்சு. அதுனால
இந்த ப்பாட்டை போடறேன்.

“புதுக்கோயில் மதில் மேலே முத்து மாமா – இரண்டு
புறா வந்து பாடுவதேன் முத்து மாமா

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா

ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா- கோழி
ஒன்றை ஒன்று பர்ப்பதென்ன முத்து மாமா?

எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா….”

அவருக்கு புரிஞ்சா…ம்.ம்.. I may get lucky ….

================================

குப்பன்:

என்னைக் கடைசியா வந்து கேக்கறீங்க. ஒரு பாட்டு சமாசாரத்துல
கூட கடைசியா. சரி ஆகட்டும்.

“வெறிமது உண்போர் நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டெதுக்கடி? சகியே
நிறை முக்காடெதுக்கடி ?”

தெரியாத்தனமா இந்த பாவேந்தர் பாட்டை எழுதினதுக்கு
சர்தார்ஜி கிளப்புல தான் ரகசியமா பீர் குடிச்சிட்டு
நடனம் பாக்கப்போனத எழுதினதா நெனச்சு ரங்கண்ணா
கீச்சி போட்டாரு. “நம்ம எல்லாருமே மொகமூடிதான்.
முக்காட எடுத்தா எல்லாருக்கும் வேல போயிடும், தெரிஞ்சிக்க”ன்னு
பெரியவரும் திட்டினாரு.
சரி, இந்தப்பாட்டை போடுங்க..

“சித்திரச்சோலைகளே, -உமை நன்கு
திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலமே, – உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தன்ர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்த அந்தக்காலத்திலே – எங்கள்
தூய்மை சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே

மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வையமெல்லாம் வகுத்தார்- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக்கூட்டங்களே- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ?- இனிப்
புலிகள் நரிக்கு புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்து கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை – சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.”

================================================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

நெல் நாகரிகம் – தமிழ் மூவேந்தர் பங்களிப்பு முனைவர் குருசாமி சித்தன்

- முனைவர் குருசாமி சித்தன், B.E.M.Sc (Engg.) Ph.D (Uconn-USA)

- தலைவர், தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்

‘உலகின் நாகரிகங்களை வகைப்படுத்தும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் நாகரிகத்தை “நெல் நாகரிகம் (சுiஉந ஊரடவரசந)” என்று கூறுகிறார்கள். இந்த நெல் நாகரிகம் தோன்றியது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்திலே தான். தமிழகத்தில் இந்த நாகரிகம் மள்ளர் நாகரிகம் எனப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் எல்லாம் இந்த நாகரிகத்தின் தோற்றத்தையும் இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் பற்றியும் அதன் “பண்பாடுத் தலைவர்கள் (ஊரடவரசயட ர்நசழ)” பற்றியும் அந்தப் பண்பாடு பற்றியும் விரிவாகவும் பெருமையுடன் கூறுகின்றன.

நெல் முதலிய வித்துக்களை கண்டுபிடித்தல் – திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்பக்கம் உள்ள கல்வெட்டு விசுவாவசு வரு~ம் வைகாசி மாதம் 14 நாள் திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள் தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன் துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும் சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம் மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும் வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து. தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல் விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும் பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும் ஒரு சாவியும் கொண்டு éமியில் வந்தான். நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப் பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன், அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப் பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும் வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம் பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக் கொடுக்கும் நன்மைக்கு

16 பந்தக்காலும் துன்மைக்கு 2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .

18 மேளமும் கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . .

- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் ஐஐ எண் 863ஃ பக்கம் 803

துவாபர யுகம் என்பது கி.மு. 3102 க்கு முற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளைக் கொண்ட ஊழி. நெல், கரும்பு, வாழை, பனை முதலிய வித்துக்களையும் நீர்ப் பாசனத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் துவாபர யுகத்தில் கண்டுபிடித்த பாண்டிய வேந்தர் வம்சத்தைச் சேர்ந்த மள்ளர், குடும்பர் எனும் தேவேந்திர குலத் தமிழர்கள் பற்றிய செய்தியை மேலே காட்டப்பட்ட கல்வெட்டு கூறுகிறது.

தமிழ் நில வகைகள் – தமிழர்கள் மக்களின் வாழ்விடங்களை ஐந்து வகைகளாகப் (திணை) பிரித்தனர். இவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனப்பட்டது. குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த நிலமும் ஆகும். முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலமும் ஆகும். மருத நிலம் என்பது நீர் வேளாண்மை செய்யப்படும் வயலும் வயல் சார்ந்த நீர் வளம் மிகுந்த நிலம் ஆகும். நெய்தல் என்பது கடலை ஒட்ழய மணல் பரந்த நிலம் ஆகும். பாலை நிலம் என்பது குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் மழையின்மையாலும் கதிரவனின் வெப்பத்தாலும் காய்ந்து வரண்டு திரிந்த நிலம் ஆகும்.

உலக நாகரிகஙகள் – ஆற்றுப் பள்ளதாக்குகள் மற்றும் ஆறு பாயும் சமவெளிகள் மருதநிலப் பகுதிகள் ஆகும். உலகின் பல நாடுகளிலும் நீர் வளம் மிகுந்த நதிக் கரைகளில் அமைந்த இந்த மருத நிலப் பகுதிகளிலெயெ நாகரிகங்கள் தோன்றியுள்ளன. கி.மு. 3400 வாக்கில் தோன்றிய எகிப்திய நாகிகம் நைல் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும்.கி.மு. 3500 வாக்கில் தோன்றிய சுமேரிய நாகரிகம் ய+ப்ரட்டீஸ். டைகீரீஸ் நதி சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 3000 வாக்கில் தோன்றியது சிந்து நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1600 வாக்கில் தோன்றியது சீன மஞ்சள் நதிச் சமடிவளி நாகரிகம் ஆகும். கி.மு. 2500 வாக்கில் தோன்றிய கிரேக்க நாகரிகமும் நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். கி.மு. 1000 வாக்கில் தோன்றியது கங்கை நதிச் சமவெளி நாகரிகம் ஆகும். இப்படிப் பல நாடுகளிலும் நாகரிகங்கள் தோன்றியது ஆற்றுச் சமவெளிப் பகுதிகளான மருத நிலங்களில் தான்.

தமிழர் நாகரிகம் – காவிரி, தென்பெண்ணை, பாலாறு, பவானி, அமராவதி, வைகை, தாமிரபரணி பொருணை மற்றும் கடல் கொண்ட பஃறுளி ஆற்றுச் சமவெளிகளான மருத நிலத்தில் தோன்றிய தமிழர் நாகரிகம் “நெல் நாகரிகம்” எனப்படும்;. இந்த நெல் நாகரிகத்தைத் தோற்றுவித்த தமிழர் மள்ளர் எனப்பட்டனர். இந்த நெல் நாகரிகம் தமிழகத்தில் தோன்றி தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பரவியது.

தொல்காப்பிய வேந்தன் – தமிழகத்தில் மருத நிலத்தில் முதன் முதலில் மள்ளர்களால் நெல் கண்டுபிடிக்கப்பட்டு விளைவிக்கப்பட்ட காலத்தில் குடும்பம், ஊர். பேரூர், நகரம், நாடு, அரசுகள் தோன்றின. நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவன் இந்தப் பண்பாட்டினை உடைய மக்களுக்குத் தலைவனானான். தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்ககூடிய மிகப் பழமையான நூலான தொல்காப்பியம் இந்தப் பண்பாட்டுத் தலைவனை வேந்தன் எனக் கூறுகிறது. இந்நூலில் இந்தப் பண்பாட்டுத் தலைவனான வேந்தன் கடவுள் நிலைக்கு உயர்த்தப்பட்ட மிகவும் வளர்ச்சி அடைந்த நிலையைக் கூறுகிறது.

வேந்தன் மேயத் தீம்புனல் உலகமும் – தொல்காப்பியம் – பொருளதிகாரம்
நெல் நாகரிகம் தோன்றிய மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனக் கூறுகிறது. தொல்காப்பிம் தோன்றியது கி.மு. 500 என்று கூறப்படுகிறது. ஆகையால் இந்த நெல் நாகரிகம் அதற்கும் பல நூற்றாண்டுகள் முன்னமேயே தோன்றி இந்நிலைக்கு முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பின்பு நெல் நாகரிகத்தைதத் நமது பண்பாடாகக் கொண்ட மருத நில மள்ளர்களின் பண்பாட்டுத் தலைவர்கள் பலரும் வேந்தன்-வேந்தர் எனப்பட்டனர். இப்பண்பாட்டுத் தலைவர்களான தமிழக அரசர்கள் தமிழ் மூவேந்தர் சேர வேந்தன், சோழ வேந்தன், பாண்டிய வேந்தன் எனப்பட்டனர். மருத நில இறைவனானா (அரசனான) வேந்தனின் வழித் தோன்றல்கள் தாம் மள்ளர் குல சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள்.

பாண்டியன் வேந்தன் – பாண்டியன் நெடுஞ்செழிய மள்ளரை வேந்தன் என்றதும் அவனுடைய நீண்ட மதில் கொண்ட மதுரையை மல்லன் மூதூர் என்றதும் அவன் நெல்லின் மக்களின் குலத்தைச் சார்ந்தவன் என்பதும் பின்வரும் பாடல்களால் அறியலாம்.

வானுட்கும் வழ நீண்டமதில்
மல்லன் மூதூர் வய வேந்தெ.

- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.

சீர் சான்ற உயர் நெல்லின் ஊர்
கொண்ட உயர் கொற்றவ

- மதுரைக் காஞ்சி வரி 87 – 88, மாங்குழ மருதனார்.- (பாண்டிய வேந்தர் தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்ழயன் நெடுஞ் செழிய மள்ளரைப் புகழ்ந்து பாடியது.

பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீன்குடைக் கொடித் தேர்ச் செழிய

- புறநானூறு 24 மாங்குடி மருதனார் தலையாலாங்காத்துச் செருவென்ற நெடுஞ்செழிய மல்லரைப் பாடியது.

சோழ வேந்தன் – சோழன் குளமுற்றுத் துஞ்சிய கிள்ளி வளவன் மள்ளரை வெள்ளைக்குடீ நாகனார் தமிழ் மூவெந்தருள்ளும் சிறந்த வேந்தர் எனப் பாடியது.

மண்திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்
முரசு முழ ங்கு தானை மூவருள்ளும்
அரசெனப்படுவது நினதே பெரும
ஆடுகட் கரும்பின் வெண்ப+ நுடங்கும்;
நாடெனப்படுவது நினதே யத்தை, ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தெ.

- புறநானூறு 35, வெள்ளைக் குழ நாகனார்
கிள்ளி வளவன் மள்ளரைப் பாடியது.

சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆக
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

- பொருநர் ஆற்றுப் படை வரி 246 – 248 – கரிகாற் பெருவளவந்தான் மள்ளரைப் புகழ்ந்து பாழயது.

சேர வேந்தன் – சேரன் வேந்தன் பாலை பாழய இளங்கோ மள்ளரை ஏருடைய வேந்தன் என்றது.

விண்பொருபுகழ் விறல் வஞ்சிப்
பாடல் சான்ற விறல் வேந்தனும்மெ
வெப்புடைய வரண் கடந்து
தும்புறுவர் புறம் பெற்றிசினே
புறம் பெற்ற வயவேந்தன்
மறம் பாழய பாடினியும்மே
ஏருடைய விழுக் கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே

-புறநானூறு 11, பேய்மகள் இளவெயினி பாடியது.

உழுபடையல்லது வேறு படையில்லை
திருவில் அல்லது கொலை வில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்.

(நாஞ்சில் – கலப்பை) – புறநானூறு 20,
குறுங்கோழிய+ர் கிழார் பாடியது.

(சேர வேந்தர் யானைகட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை மள்ளர் பற்றி).

கேரள மாநிலம், வயநாடு பகுதியில் 2000 ஆண்டு பழமையான எடக்கல் குகைக் கல்வெட்டு சேரவேந்தன் வி~;ணுவர்மன் குடும்;பர் குலத்தினன் எனக் கூறுகிறது. “வி~;ணுவர்மம் குடும்பிய குல வர்த்த நஸ்ய லிகித”.

இதன் பொருள் – வி~;ணுவர்மனின் குடும்பம்; குலம் வளர எழுதியது என்பதாகும். குடும்பன் என்பது மள்ளர்களில் பட்டப் பெயர்களில் ஒன்றாகும்.

வேந்திர குலத்தினரின் உயர்வு (வேந்தன் குலத்தினர்) இந்த வேந்தர்கள் மள்ளர் குலத்தினர் என்பது சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் கூறப்படுகின்றன. வேந்தன் பின் நாளில் இந்திரன், தேவேந்திரன் எனப்பட்டதால் இவர்களும் – இவர்களின் வழித்தோன்றல்களும் தேவேந்திர குலத்தினர் என்றும் கூறப்படுகின்றனர்.

சேர, சோழ, பாண்டியர்கள் வேந்தர்கள் என்பதையும் அவர்கள் நெல் நாகரிகத்தின் பண்பாட்டுத் தலைவர்கள் என்பதையும் இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நெல் நாகரிகத்தின் தலைமக்களாகிய உழவர்களும்,

மல்லர் குலத்தினரும் – தேவேந்திர குலத்தினரும் இருந்த சிறப்பை, முதன்மையை கீழ்வரும் பாடல்கள் காட்டுகின்றன:

உண்டி கொடுத்தோ ருயிர்கொடுதோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே

- புறநானூறு – 18, குடபுலவியனார் பாடியது.

சுழன்றும் ஏர்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவெ தலை

- குறள் 1031

உழதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.

- குறள் 1033

மருத நில மக்கள் மள்ளர், உழவர். களமர். கடைஞர். வினைஞர், களைஞர், கம்பளர், தொழுவர். கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் எனப்பட்டனர். உழவுத் தொழிற் தலையாகிய தொழிலாகவாகவும் உழவர்கள் தலை மக்களாகவும் போற்றப்பட்டனர். மன்னர்களும் வேந்தர்களும் மள்ளர் என்றும் உழவர் என்றும் பெருமைப் படக் குறிப்பிடப்பட்டனர். பிற தொழில்களில் உள்ள சாதனையாளர்களும் உழவர்களாக மேன்மையடைந்ததாகக் கூறப்பட்டனர். அதனாலேயே ஏருழவர், சொல்லெருழவர், வாளெருழவர், வில்லேருழவர் என்ற சொற்றொடர்கள் இலக்கியங்களில் ஆளப்பட்டன. உழவர், வீரர், மன்னர் என்ற மூன்று சொற்களுக்கும் பொருள்படுவதாக மள்ளர் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இம்மூவரும் மள்ளர் குலத்தினராதலால் மள்ளர் என்பதற்கு இலக்கணமாக

அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்

- என்று திவாகர நிகண்டும்.

செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப

- என்று பிங்கல நிகண்டும் கூறுகின்றன.

நெல் நாகரிகத்தில் பண்பாட்டுத் தலைவர்கள் மற்றும் அவர்களின் சுற்றுத்தார் தமது செல்வ வளத்தாலும் படை வலிமையாலும் பிற நில மக்களுக்கும் தலைவர்களாக (இறைவனாக) இருந்தார்க்ள. இதனைத் தொல்காப்பியம்.

மாயோன் (திருமால்) மேய காடுறை (முல்லை) உலகமும்
சேயோன் (முருகன்) மேய மைவரை (குறிஞ்சி) உலகமும்
வேந்தன் (தேவேந்திரர்) மேய தீம்புனல் (மருதம்) உலகமும்
வருணன் மேய பெருமணல் (நெய்தல்) உலகமும்

தொல்காப்பியம் என திருமால், முருகன், தேவேந்திரர், வருணன் ஆகியோர் முறையே முல்லை, குறிஞ்சி, மருதம் மற்றும் நெய்தல் நிலங்களுக்கு இறைவர்கள் எனக்கூறும். பாலை நில இறைவி கொற்றவை ஆகும்.

இலக்கியங்கள், புராணங்கள் இந்தப் பண்பாட்டுத் தலைவர்களின் உறவு முறைகள் பற்றி தெளிவாகக் குறிப்பிடுகின்றன. சிவன் மள்ளர். கொற்றவை எனப்படுகிற பார்வதி ஆகியோரின் குமரன் சேயோன் என்படுகிற முருகன் ஆகும். தேவேந்திரர் எனப்படுகிற வேந்தனின் மகள் தெய்வயானையின் கணவர் சேயோன் பார்வதியின் சகோதரர் மாயோன் எனப்படுகிற திருமால் மள்ளர் ஆகும். வருணன் மள்ளர் வேந்தன் எனப்படுகிற தேவேந்திரருக்குக் கீழ்பட்ட ஒரு தலைவன்.

மள்ளர் குலத்தினரின், தேவேந்திர குலத்தினரின், தமிழரின் இந்த நெல் நாகரிகம் தான் பல கலைகளையும் பண்பாட்டுக் கூறுகளையும் தோற்றுவித்து ஆதரித்து வளர்த்து மக்களிடையே பரப்பியுள்ளது. மனித குலத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், வளத்திற்கும் பண்பாட்டு மேலாண்மைக்கும் காரணமாக அமைந்துள்ளது.

மள்ளர் – தேவேந்திர குல வேளாளர் வளமை – நெல் வேளாண்மைக்கு இன்றியமையாத நீரை இம்மக்கள் வேண்ட அவர்களின் இறைவனும் மாரிக் கடவுளுமான தேவேந்திரர் கோடை காலத்திலும் கொடுப்பார் என்கிறார் பெரிய புராண ஆசிரியர் சேக்கிழார் பெருமான்.

பிள்ளை தைவரப் பெருகுபால் சொரி முலைத்தாய்போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர் பிசைந்து கைவருட
வெள்ள நீரிரு மருங்குகால் வர்p மிதந் தேறிப்
பள்ள நீள் வயல் பருமடை உடைப்பது பாலி.

- பெரியபுராணம், திருக்குறிப்புப் தொண்டர் நாயானார் புராணம், பாடல் 22.

இவர் விளைத்துக் குவித்த வானளாவிய நெற்குன்றுகள் மருத நிலத்தைக் மலைகளடர்ந்த குறிஞ்சி நிலமாகக் காட்டியது என்கிறார் இன்னொரு பாடலில்.

கைவினை மள்ளர் வானங் கரக்க வாக்கிய நெற் குன்றால்
மொய் வரை யுலகம் போலும் மளரிநீர் மருத வைப்பு

- பெரியபுராணம், – திருநாட்டுச் சிறப்பு, பாடல் 25

“குன்றுடைக் குலமள்ளர்” என்னும் கம்பர் தமது இராமாயணத்தில் இவர்கள் போர்க்களத்தில் பகைவர்களின் தலைகளை வெட்டி வீழ்த்தியதை உழவு, தொளி கலக்குதல், நாற்று முடிகளைப் பரவுதல் முதலிய நிகழ்வுகளோடு ஒப்பிட்டு கூறுவார்.

நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்

- கம்பராமாயணம், வானரர் களம் – காண் படலம், செய்யுள் 25. பழனிச் செப்புப்பட்டயம் கி.பி. 1528 (மள்ளர் மலர் அக்டோபர் 1998 பக. 20 – 21)

இம்மக்களின் தோற்றம்; மற்றும் வரலாறு பற்றிக் கூறும். உலக மக்களுக்கு செந்நெல் அமுது படைப்பதற்காக சிவனும் உமையும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களைப் படைத்ததார்கள். இவர்கள் இப்ப+மியில் செந்நெல் தோற்றுவித்தார்கள் என செப்புப்பட்டயம் பெருமைப்பட கூறும்.

தெய்வேந்திரர் வரலாறு:

சிவனுயுமையும் மதிறுக் காஞ்சி தன்னில்
ஏகாம்பரரா இருந்தருள் புரிந்து
மதுரையை நோக்கி வரும் வழியதனில்
உலகலாமீன்ற உமையவள் மனதில்
திருவருள் தோன்றி சிவனிடத்துரைக்க
அரன்மன மகிழ்ந்து முகமது வேர்க்க
கரமதில் வாங்கி வரமதுக்கியந்து
வைகையில் விடுக்க
வருணன் பொழிந் துருழிக் காத்தடித்து
குளக் கரையதனில் கொடி வள்ளல் தாங்க
ஓமம் வளர்ந்து உற்ப்பணமாக
ஈ~;வரி தேடி யிருளில் நடக்க
கூவிய சத்தம் குமரனை நோக்கி
வாரிடியடுத்து வள்ளலை வலபுறம் வைத்து
வலமார் பிய்ந்து அமுர்தம்
பொழிந்து அ~;த்தம் கொடுக்க
பாலன் நரிவு பணிவிடைக்காக
புரந்தரன் மகிழ்ந்து ப+ரித்தெடுக்க

தெய்வேந்திரன் அன்னம் படைத்தல் :

கன்னல் சென்னல் கதழி பிலாவுடன்
தென்னை கமுகு செறந்த வெள்ளிலை
அன்ன மிளகு மாந்துளிற் மஞ்சள்
மல்லிகை முல்லை மகழி நுவர்ச்சி
பரிமள சுகந்தம் பாங்குடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசிக்க வென்று
காராவின் பாலை கரகத்திலேந்தி
சீறாக அன்னம் சிறப்பித்த போது

தெய்வேந்திரன் விருதுகள் :

ஈ~;வரன் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து இணைமுடி தரிக்க
அமரர்கள் மகிழ்ந்து அதிசயத் திவாகும்
விமரிசையாக விருது கொடுக்க
மாலயன் ருத்திரன் மகே~;பரன் மகிழ்ந்து
பொன்முடி யதனில் ப+சன மணிய
வாடாத மாலை மார்பினி லிலங்க
வெட்டுப் பாவாடைகள் வீணைகள் முழங்க
செந்நெல் சேறாடி சிறப்புடன் சூழ
வெள்ளைக் குடையும் வெங்களிறுடனே
டாலுடம்மான சத்தம் அதறிட
மத்தாளம் கைத்தாமம் மகெ~;பரத் துடனெ
எல்லா விருதும் இயல்புடன் கொண்டு
தெய்வ சபையை தெரிசனம் செய்து
பதினெட் டாயுதம் பாங்குட னெடுத்து
புரவியிலேறி ப+லோக மதனில்
சென்னலா யெங்கும் சிற்ப்பிக்கும் போது
விசுவ கண்ணாளர் மேழியும் கொடுக்க
மூவராசாக்கள் முடிமணம் சூட்ட
செந்நெல்லை படைத்தோர்
குகவேலருளால் குடும்பன் தழைக்க
சிவனரளாலே திருநீறணிந்து
யெ;லலா வுலகும் யிறவியுள் ளளவும்
தௌ;ளிமை யாத செந்நெலை படைத்தோர்
சேத்துக்கால்ச் செல்வரான
செந் நெல் முடி காவரலான
முத்தளக்கும் கையாதிபரான
பாண்டியன் பண்டான பாறதகதபரான
அளவு கையிட்டவரான
மூன்று கைக்குடையாதிபரான
பஞ்ச கலசம் பாங்குடன் வயித்து
அஞ்சலித் தேவர்கும் அன்னம் படைத்தவரான
மண்ணை வெட்டிக் கொண்டு மலை தகத்தவரான
கடல் கலங்கினும் மனங் கலங்காத வல்லபரான
மாடக் குளத்தில் வந்துதித்தவறான
பரமசிவனுக்கு பாத பணிவிடை செய்கின்றவரான
தெய்வலோகத்தில் தெய்வேந்திரன் பிள்ளைகளாகிய
பழனித் தலத்தில் காணியாளனாகிய

கொங்குப் பள்ளரில் பழனிப் பண்ணாடி – பழனிப் பட்டயம், வரி 195 – 217

நெல் நாகரிகத்தின், நெல்லின் மக்களாகிய மள்ளர்களும் அவர்களுடைய பண்பாட்டுத் தலைவர்களுமாகிய (வேந்தன்) தேவேந்திரர், முருகன், மள்ளர், திருமால் மள்ளர், சிவன் மள்ளர், பார்வதி, சேர வேந்தர், சோழ வேந்தர், பாண்டிய வேந்தரும் அனைத்துக் தமிழ் இலக்கியங்களிலும் பலவாறு புகழ்ந்து பேசப்படுவார்கள். சங்க காலத் தழிழ் இலக்கியங்கியங்கள் தொடங்கி இன்று வரை இலக்கியங்களில் பேசப்படும் நெல்லின் மக்களாகிய மள்ளர் என்னும் தேவேந்திர குல வேளாளர்களின் பண்பாட்டு மேலாண்மை, தமிர்; வளர்ச்சிக்கும் தமிழர் முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. முழுமையானது.

சங்க காலம் தொட்டு சென்ற நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட அனைத்துத் தமிழ் இலக்கியங்களும் இந்த தேவேந்திர மள்ளர்களின் புகழ் பாடும். இலக்கியங்களில் நாட்டு வளம் என்னும் படலம் நெல் நாகரிகத்தின் மேன்மையையும் அம்மக்களின் சிற்பபையும் கூறும். ஏர் மங்கலம், வான் மங்கலம், வாள் (கலப்பையில் உள்ள கொழுவு) மங்கலம் உழத்திப்பாட்டு முதலியன அரசர்களுக்கு இணையாக இம்மக்களின் சிறப்பை உயர்த்திப் பாடும். அரசர்களின் இந்நெல் நாகரிகத்தின் தலைவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்நெல் நாகரிகத்தினைத் தோற்றுவித்த மக்களின் தற்போதைய பெயர்களான மள்ளர், பள்ளர், தேவேந்திரர், தேவேந்திர குலத்தார், தேவேந்திர குல வேளாளர், பண்ணாடி, காலாடி, குடும்பன், குடையர், அதிகாரி, குடும்பனார், மூப்பனார், பணிக்கர், வாய்;காரர் (வாய் – நீர்வரும் வாய், மதகு), குளத்து மள்ளர் முதலிய பெயர்களுக்கும் தற்போதும் இம்மக்களுடைய முதன்மைத் தொழில் நஞ்செய் விவசாயம் என்பதுவும் நெல் நாகரிகத்தின் தொன்மையும் தொடர்ச்சியையும் இந்நாகரிகத்தின் பங்களிப்பையும் உணர முடியும்.

தமிழ் மள்ளர்களின் இந்நெல் நாகரிகம் இந்தியா முழுவதிலும் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர் (பர்மா), பாகிஸ்தான், சீனா, சப்பான், இந்தோனேசியா, மலேசியா, கம்போடியா, பங்காள தேசம், பிலிப்பைன்ஸ் முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் பரவியுள்ளது, இதன் சிறப்பையும் இன்றியமையாமையையும் உணர்த்துகின்றது.

Kaalachuvadu Kannan Interview: Uyir Ezhuthu

……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
1
ஆண்டிலேயே என்னுடைய வருங்காலத் திட்டங்கள் பற்றித்
தெளிவாக அவரிடம் சொன்னேன் என்றார். எனக்கு ஞாபகம்
இல்லை. பெங்களூர்ல இருக்கிறப்ப முக்கியமாக உலக
ஆங்கிலப் பத்திரிகைகளை நிறையப் படிச்சேன். உலக
இதழியல் பற்றிய ஒரு வரைபடம் மனதில் ஏற்பட்டது.

􀁺. உங்கள் வீட்டிற்குப் பல்வேறு இலக்கிய ஆளுமைகள் வந்து சுந்தர ராமசாமியுடன்
பேசிக்கொண்டிருந்திருப்பார்கள். மாணவப் பருவத்தில் உங்கள் மனநிலை எப்படியிருந்தது?

􀁺 பொறியியல் பட்டதாரியான நீங்கள் ‘காலச்சுவடு’ இதழுக்கு ஆசிரியராக மாறிய சூழல் எப்படி
உருவானது?

என்னைப் பொறியாளர் என்று சொல்ல முடியாது. வெளியூர்ல போளிணிப் படிக்க விரும்பினேன். அதனால் பெங்களூர் போனேன். அப்ப மீடியா படிப்புக் கிடையாது; இருந்திருந்தால் அதுதான் படிச்சிருப்பேன். ஆறேழு மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து என் அக்கா தைலா வந்திருந்தார். பேசிக்கொண்டிருந்தபோது 1986 – 87ஆம் தமிழ்ச் சிறுபத்திரிகைகளில் 1994ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாகக் கண்ணனால் தொடங்கப்பெற்ற ‘காலச்சுவடு’ தனித்த அடையாளத்துடன் விளங்குகின்றது; பல்வேறு புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் ‘அதிகார
மையம்’, ‘வணிகக் குழுமம்’, ‘அதிகார பீடம்’ போன்ற சொற்கள் மூலம் ‘காலச்சுவடு’ பற்றிய ‘பேச்சுகள்’ வெளியெங்கும் மிதக்கின்றன. சிறுபத்திரிகை என்றால் மட்டமான அச்சமைப்பில் 300 பிரதிகளுடன் அவ்வப்போது வெளிவந்து, அற்ப ஆயுளில் மடிந்திட்ட சூழலில், ‘காலச்சுவடு’ புதிய போக்கினை உருவாக்கியுள்ளது. இன்று ‘உயிர் எழுத்து’, ‘தீராநதி’, ‘உயிர்மை’, ‘அம்ருதா’, ‘வார்த்தை’ போன்ற இதழ்கள் ஆழமான விஷயங்களுடன் வண்ணமயமாக, அழகிய அச்சமைப்பில் வெளிவந்துகொண்டிருப்பது தற்செயலானது அல்ல. இதனால் தமிழில் தீவிரமான வாசகத்தளம் விரிவடைந்து, உலகெங்கும்
பரவியுள்ளது. சுந்தர ராமசாமி என்ற இலக்கிய ஆளுமையினை அடையாளமாகக்கொண்டு தொண்ணூறுகளில் தமிழ் அறிவுலகிற்கு அறிமுகமான, ‘காலச்சுவடு’ ஆசிரியரான கண்ணன் பற்றியும் அவருடைய செயற்பாடுகள் பற்றியும் ஆன உரையாடல் இது. நாகர்கோவிலில் பதிவு செளிணியப்பட்ட நேர்காணலின் பிரதியில், சிலவற்றைச் சேர்த்தும் திருத்தியும் சீரமைத்துள்ள கண்ணன், இரண்டாம் கட்டமாக அனுப்பப்பட்ட கேள்விகளுக்கான பதிலையும் எழுத்துபூர்வமாக அனுப்பியிருந்தார். அவையும் உரிய இடங்களில் நேர்காணலில் சேர்க்கப்பட்டுள்ளன.
ந. முருகேசபாண்டியன்

􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..

பொதுவாக அப்பாவோட நண்பர்கள் பலர் எங்க வீட்டிற்கு வந்து போளிணிக்கொண்டிருப்பார்கள். பல நாட்கள் தங்கியிருப்பார்கள். பல மாதங்கள் தங்கியிருந்ததும் உண்டு. எங்க அம்மா அதைத் தொந்தரவாக
எடுத்துக்கொள்ளமாட்டாங்க. அதனால, நாங்களும் அப்படித்தான் இருந்தோம். எனக்குப் பலதரப்பட்ட
அனுபவம் கிடைச்சுது. புத்தகங்கள், எழுத்தாளர்கள், பிறதுறைக் கலைஞர்கள் புழங்கிய சூழல், பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வை எனக்கு ஏற்படுத்தியது. பொதுவாக எங்கள் வீட்டில் எல்லோருக்குமே வாசிக்கிற பழக்கம் உண்டு.

􀁺 எழுத்தாளர்களின் குழந்தைகளுக்குப் பொதுவாக இலக்கிய ஆர்வம் இருப்பதில்லை. . . நீங்கள் எப்படி
விதிவிலக்கானீர்கள்? சு.ரா.வின் வழிகாட்டுதலின் பேரில் உங்களுக்குள் இலக்கியத் தேடல்
ஏற்பட்டதா?

நான் என்னை இலக்கியவாதியாகப் பார்க்கவில்லை; பத்திரிகையாளனாகப் பார்க்கிறேன். பதிப்பாளராகப்
பார்க்கிறேன். அப்பா பண்பாட்டுத் தளத்தில் என் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக எதாவது வலுக்கட்டாயமாகப் பண்ணியிருந்தால் எனக்கு முரண்பாடு வந்திருக்கலாம்.

எனக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் கல்யாணமான புதிதில் மனைவிக்கு ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ புத்தகம்
கொடுப்பார்கள். அப்புறம் இன்னும் சில இலக்கியப் புத்தகம் தருவார்கள். மனைவி அதைப் படிக்கவில்லை என்றால் ‘மக்கு’ என்ற எண்ணம் உருவாகும். வாசிப்பைப் பொறுத்தவரை யாரும் விரும்பினால் படிக்கலாம். படிக்காமலும் இருக்கலாம். ஒருவரை வாசிப்பின் அடிப்படையில் மட்டும்
எடைபோடுவது அபத்தமானது. அப்பா மறைமுகமாக என்னைத் தூண்டியிருக்கலாம், நேரடியாக
வலியுறுத்தியதில்லை.

அவர் எழுத்திலும், அவர் எழுத வேண்டும், தொடர்ந்து உற்சாகமாக இயங்க வேண்டும் என்பதிலும் அதற்குத் தேவையான காரியங்களைச் செளிணிவதிலும் எனக்கு மட்டுமல்ல மறைந்த என் அக்கா சௌந்திராவுக்கும், சகோதரிகள் தைலா, தங்குவிற்கும் அவர்களின் கணவர்களுக்கும் என் மனைவிக்கும், முக்கியமாக என் தாயாருக்கும் முழு விருப்பம் உண்டு. அவர் மரணமடையும்போது தனக்கு மூன்று மகன்களும் மூன்று மகள்களும் இருப்பதான மனநிறைவுடனேயே இருந்தார் (என் சகோதரிகளின் கணவர்களையும் என் மனைவியையும் சேர்த்து). தமிழக இலக்கியச் சூழலுக்கு நேர்மாறானதாக
இருந்தது அவருக்கு அமைந்த குடும்பச் சூழல்.

அந்த விதத்தில் அவர் கொடுத்து வைத்தவர். தமிழக இலக்கியச் சூழலில் பிரமிள், ஜெயமோகன் போன்றவர்களின் வெறித்
தாக்குதல்களைப் புறந்தள்ளி இறுதிவரை வேகத்தோடு
இயங்க, சு.ரா.வின் இயல்பான மன வலிமையோடு
குடும்பத்தின் ஆதரவும் முக்கியக் காரணம்.
􀁺 உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை, சாஸ்திர
சம்பிராதயங்களில் நம்பிக்கை உண்டா?
இல்லை. சுமார் 14 – 15 வயதில் இன்று சென்னையில்
மனோதத்துவ நிபுணராக இருக்கும் டாக்டர் மோகனும்
நானும் பல ‘உலகளாவிய’ விஷயங்களை விவாதிப்பது
வழக்கம். இப்போது நினைத்துப் பார்க்கும்போது வயதுக்கு
மீறி யோசித்தோமோ என்று தோன்றுகிறது. சாதி
சம்பிரதாயங்கள் தேவையில்லை என்பது அதில் ஒன்று.
ஜெயேந்திரர் நாகர்கோவில் வரும்போது எங்கள் வீட்டிற்கு
அருகில்தான் தங்குவார். அவருடைய நடவடிக்கைகளைக்
கடுமையாக விமர்சித்துப் பேசி, மோகன் வீட்டில் நாங்கள்
திட்டுவாங்கியது நினைவிருக்கிறது. மாமிச உணவை
உண்பதில்லை என்றும் – வன்முறை தவிர்த்தல் கருதி – முடிவு
செளிணிதோம். மோகனின் வைராக்கியம் இரண்டு வாரம்
நீடித்தது. நான் இன்றும் மரக்கறி உணவுதான். போதைப்
பொருட்களையும் இன்ன பிற புசிக்கக்கூடாத கனிகளையும்
தீண்டிப் பார்த்துவிடுவது, ஆனால் எதற்கும்
அடிமையாவதில்லை என்பது என் முடிவாக இருந்தது.
வாழ்க்கை ஏகதேசமாக இந்த வரைகோட்டில்தான்
ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளைப் பற்றி நான்
சிந்திப்பதில்லையே தவிர நான் நாஸ்திகவாதி அல்ல. வாழ்வின்
தாக்கமும் அனுபவமும் பரம்பொருளின் இருப்பை எனக்கு
உணர்த்தினால், தமிழக முற்போக்காளர்களின் குட்டையில்
என் பிம்பம் சிதறிவிடுமோ என்ற கவலை எதுவும் இன்றி
அந்தப் பாதையிலும் பயணிப்பேன்.
􀁺 உங்கள் எழுத்தில் சு.ரா.வின் செல்வாக்கு எந்த அளவு
உள்ளது?
சு.ரா.வின் மதிப்பீடுகள்மீது எனக்கு மரியாதை உண்டு.
நான் எழுத ஆரம்பித்த நாளிலிருந்து சு.ரா.வின் மொழியின்
தாக்கம் என் எழுத்தில் இல்லை. ஆனால், என்னோடு
சமகாலத்தில் இயங்கிய பலருக்கும் அவருடைய
மொழிநடையின் தாக்கமிருந்தது. இன்றும் இருக்கிறது.
அவருடைய எதிர்நிலைக்குச் சென்ற பின்னரும் அவரைச்
சிறுமைப்படுத்தும் கருத்துக்களை அவருடைய
மொழியிலேயே முன்வைக்கிறார்கள். அவர்கள் பின்பற்றும்
புதிய விக்ரகங்களின் பாதிப்புகள் எதுவும் அவர்கள்
மொழியில் இல்லை.
􀁺 சு.ரா.வுடன் ஒருமுறை நான் பேசிக்
கொண்டிருந்தபோது, அவர், “எனக்கு எந்த
விஷயமும் ஜீமீக்ஷீயீமீநீt ஆக இருக்க வேண்டும்.
கண்ணனுக்கு அது பிரச்சினை இல்லை” என்றார்.
அது சரிதானா?
அப்பாவுக்கு நேர்த்தி சார்ந்த அழுத்தம் அதிகமாக
இருந்தது. அளவுக்கு மீறித் தன்னை வருத்திக்கொண்டு அப்பா
செளிணியிற வேலையைப் பார்த்து, எனக்கு அது வேண்டாம்னு
தோன்றியது. பொதுவாக நேர்த்தியை விரும்புறது நடைமுறை
சார்ந்து இருக்க வேண்டும். ‘காலச்சுவடு’ பத்திரிகை உள்பட,
செளிணியுற எந்த வேலையையும் சிறப்பாக, ஒழுங்காகச்
செளிணியμம்னு நினைப்பேன்; மேலோட்டமாகச் செளிணிவது
கிடையாது.
􀁺 ‘காலச்சுவடு’ இதழைச் சு.ரா.வினால் தொடர்ந்து
கொண்டுவர இயலாத நிலையில், நீங்கள்
ஆசிரியரான சூழல் எப்படி ஏற்பட்டது?
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
3
சு.ரா. நடத்திய ‘காலச்சுவடு’ காரணமாக எனக்குப்
பத்திரிகை நடத்தμம்னு ஆசை வரவில்லை. அதனால நான்
வீஸீsஜீவீக்ஷீமீ ஆகவில்லை. சு.ரா. நடத்திய ‘காலச்சுவ’டைத் திரும்ப
நான் நடத்தவில்லை. 1987இல் கணினி படிக்கச் சென்னைக்குப்
போயிருந்தபோது, ‘புதுயுகம் பிறக்கிறது’ ஆசிரியர்
குழுவினரோடு இருந்த காலகட்டத்தில், பத்திரிகை நடத்தும்
ஆசை ஏற்பட்டது. ‘புதுயுகம்’ குழுவின் செயல்பாடு எப்படிப்
பத்திரிகை நடத்தக் கூடாது என்பதற்கான ஆழமான
கல்வியாகவும் அமைந்தது. நான் பத்திரிகை ஆரம்பிக்க
முயலும்போது, வீட்டில் ஏற்கனவே பதிவுசெளிணியப்பட்டிருந்த
‘காலச்சுவடு’ பெயரைப் பயன்படுத்திக்கொண்டேன்.
ஏற்கனவே இருந்த சிறுபத்திரிகைகளின் தாக்கம் எந்த
அளவுக்குப் புதிய ‘காலச்சுவ’டில் இருந்ததோ, அந்த
அளவுதான் பழைய ‘காலச்சுவ’டின் தாக்கமும் புதிய
‘காலச்சுவ’டில் இருந்தது.
􀁺 உங்கள் ஆசிரியர் பொறுப்பில் ‘காலச்சுவடு’
கொண்டுவர முயன்றபோது, சு.ரா.வின் செயற்பாடு
எவ்வாறு இருந்தது?
அப்பாவுக்கு நான் பத்திரிகை தொடங்கி நடத்துவதில்
இஷ்டம் இல்லை. வேண்டாம் என்றுதான் நினைத்தார்.
நான்தான் அப்ப வியாபாரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன்;
என் நிர்வாகத்தில் வியாபாரம் நன்றாக நடந்தது. அது
பாதிக்கப்படும் என்று அவர் நினைத்தார். பின்னாட்களில்
அவ்வாறே நடந்தது. பத்திரிகை ஆரம்பித்தால்
நண்பர்களுடன் உறவு பாதிக்கப்படும் என்றும்
தீர்க்கதரிசனமாகக் கூறினார். நான் தீவிரமாக இருந்தபோது,
அதைத் தடுக்கவும் இல்லை. பத்திரிகை ஆரம்பித்த பிறகு அது
அவருக்குப் பிடிச்சிருந்தது. பத்திரிகையில் வெளிவந்த
படைப்புகளைப் படிச்சுப் பார்த்து அபிப்ராயம் சொல்வார்.
எதைப் போடுவது, போடக் கூடாது என்று எதுவும்
சொன்னது இல்லை. ‘காலச்சுவ’டின் வளர்ச்சி அவருக்கு
உற்சாகம் தருவதாக இருந்தது. ‘காலச்சுவடு’ செயல்படத்
துவங்கிய பின்னர் சுமார் 15 புதிய நூல்களை அவர்
எழுதியுள்ளார் என்பதை நண்பர் சலபதி ஒருமுறை
கவனப்படுத்தியபோது மனநிறைவாக இருந்தது.
􀁺 ‘காலச்சுவடு’ இதழை எப்படிக் கொண்டுவர
வேண்டும் எனக் கருதினீர்கள்?
தமிழில் வெளியான முக்கியமான இலக்கியப்
பத்திரிகைகளின் பைண்டு வால்யூம்களை ஏற்கனவே
படித்திருக்கிறேன். அவை வீட்டில் இருந்தன. அவற்றின்
தொடர்ச்சியாகக் ‘காலச்சுவடு’ வருவதில் எனக்கு விருப்பம்
இல்லை. பல இலக்கியப் பத்திரிகைகள் பிரசுரிக்கத் தரமான
படைப்புகள் இல்லாமல் சிரமப்பட்டன. இது அவர்கள்
உருவாக்கிக்கொண்ட வரையறை சார்ந்த பிரச்சினையாக
எனக்குத் தோன்றியது. அதை மாற்றμம்னு நினைத்தேன்.
உதாரணத்திற்கு முத்தம்மாவின் பேட்டியைச்
சிறுபத்திரிகையில் வெளியிட மாட்டார்கள். அது
‘காலச்சுவ’டில் வெளியானவுடன் நல்ல வரவேற்பு இருந்தது.
‘காலச்சுவ’டைத் தீவிரமான இதழாக நடத்த விரும்பினேன்;
சிறுபத்திரிகையாக அல்ல.
􀁺 ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழு எப்படி உருவானது?
மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் இருவருமே
‘காலச்சுவ’டைத் துவக்கியதற்கு ஓராண்டு இடைவெளியில்
எனக்கு அறிமுகமானவர்கள். சிறுபத்திரிகைச் சூழலுக்கு
வெளியே இருந்து வந்தவர்கள்தான் என் கூட வேலை
செளிணியμம்னு நினைச்சேன். மணிவண்ணனுடன் பேசினேன்.
அவருக்கு ஆர்வம் இருந்தது. உற்சாகமாகப் பேசிய அளவிற்கு
அவரால் செயலாற்ற முடியவில்லை என்றாலும்கூட
அவருடைய தோழமை அன்று எனக்கு முக்கியமானதாகவே
இருந்தது. பிற்காலத்தில் தமிழ் இலக்கியச் சூழலில்
கொண்டாடப்பட்ட குடிவெறி, வன்மம், வக்கிரம் எல்லாம்
இல்லாத வோறொரு மனிதராக அன்று எனக்குத் தெரிந்தார்.
மனுஷ்யபுத்திரனை முதல்முறையாக வீட்டிற்கு
அப்பாவைப் பார்க்க வந்திருந்தபோது சந்தித்தேன் என்று
நினைவு. இன்னொரு முறை மதுரையில் ஒரு குட்டிச்
சந்திப்பில் அவர் பேசியதைக் கேட்டேன். இரண்டு முறையும்
அவருடன் பேசிய நினைவில்லை. ஆசிரியர் குழுவில்
மூன்றாவதாக இணைய அவரை அழைத்தேன். என் முடிவுகள்
பல சமயம் உள்ளுணர்வின் அடிப்படையில்
மேற்கொள்ளப்படுபவை. இந்த உறவு பத்தாண்டுகாலம்
நீடித்தது. அந்தப் பத்தாண்டுகளில் ‘காலச்சுவடு’க்கு அவரது
உழைப்பும் பங்களிப்பும் கணிசமானது.
2000க்குப் பிறகு சங்கடம் தருவதாக அந்த உறவு மாறத்
துவங்கியது. சென்னை அவரிடம் நிலை குலைவை
ஏற்படுத்தியது. 2002இல் உயிர்மை
பதிப்பகத்தை என்னைக்
கலந்தாலோசிக்காமல் நான்
வெளிநாட்டுப் பயணத்தில்
இ ரு ந் த « ப £ து ,
ர க சி ய ம £ க த்
து வ ங் கி ன £ ர் .
சு ஜ £ த £ ¬ வ
முன்னிறுத்திச்
செயல்பட்டபடியே
‘காலச்சுவடு’
ஆசிரியராக
வும் இயங்
கத் திட்ட
மிட்டார்.
அ தி ல்
அவருக்குக்
கூ ச் ச ம்
இ ரு க் க
வி ல் ¬ ல .
ந £ ன்
வி ல கி « ய
நி ன் « ற ன் .
ª ச ன் ¬ ன
அ லு வ ல க
நண்பர்களாலும்
பணியாளர்களாலும்
நான் என்னை
இலக்கியவாதியாகப்
பார்க்கவில்லை;
பத்திரிகையாளனாகப்
பார்க்கிறேன். பதிப்பாளராகப்
பார்க்கிறேன். அப்பா
பண்பாட்டுத் தளத்தில் என்
ஆர்வத்தைத் தூண்டும்
விதமாக எதாவது
வலுக்கட்டாயமாகப்
பண்ணியிருந்தால் எனக்கு
முரண்பாடு வந்திருக்கலாம்.
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
4
அவரைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. சென்னை புத்தகச்
சந்தையில் ‘உயிர்மை’ வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள்
நன்றாக விற்பனை யானதும் ‘காலச்சுவடு’க்கு ராஜினாமா
கடிதம் அனுப்பினார். அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று
அவர் எதிர்பார்க்கவில்லை. அவருடைய மனப் பிரமையில்
‘காலச்சுவடு’ அவர் இல்லாமல் இயங்க முடியாது.
ராஜினாமா கடிதத்தைப் பார்த்ததும் மிகப்பெரிய விடுதலை
உணர்வு எனக்கு ஏற்பட்டது. உடனடியாக
ஏற்றுக்கொண்டேன். வாழ்வில் முதல்முறையாகத்
தன்னிச்சையாகச் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சில
மணிநேரம் இருந்தேன். ஓரிரு நாட்களில் ராஜினாமா
கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு இன்னொரு
மின்னஞ்சல் வந்தது! இக்காலகட்டத்தில் அவருக்கு
ஏற்பட்டதாகச் சொல்லப்படும் கடும் மன நெருக்கடியின்
பின்னணி இதுதான் – மனப் பிரமைகளின் உடைவு. அவர்
விலகிய பின்னர் ‘காலச்சுவடு’ எந்தச் சிறு இடையூறும் இன்றி
இயங்கியது மட்டுமல்ல, குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியும்
கண்டது.
சிலருக்கு, ‘காலச்சுவடு’ ஆசிரியர் குழுவில் அவர்களை
அழைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. சு.ரா. கூட்டிய
பாம்பன்விளைக் கூட்டத்தில் ‘காலச்சுவ’டை மீண்டும்
ஆரம்பிக்கப் போறோம் என்று அறிவித்தபோது,
ஜெயமோகன் கடுமையாகவும் பதற்றமாகவும்
எதிர்வினையாற்றினார்; பத்திரிக்கை தொடர்ந்து வராது
என்றார். இப்படிப் பல சாபங்களை மீறித்தான் ‘காலச்சுவடு’
இன்றுவரை வெளிவந்துகொண்டிருக்கிறது.
􀁺 பளபளக்கும் அட்டைப்படத்துடன் நகைக்கடை
விளம்பரத்துடன் ‘காலச்சுவடு’ வெளியானவுடன்,
“அது சிறுபத்திரிகை மரபினைத் தூளாக்கிவிட்டது,
நாம் ‘மணிக்கொடி’யின் வாரிசுகள்” என்ற இலக்கிய
ஆளுமைகளின் தீவிரமான பேச்சை எப்படி
எதிர்கொள்கிறீர்கள்?
அப்படிச் சொல்கிறவர்கள் ‘மணிக்கொடி’யை படித்துப்
பார்க்காதவர்கள். ‘மணிக்கொடி’ பத்திரிகையில் எந்த
விளம்பரம்தான் வெளியாகவில்லை? ‘எழுத்து’ பத்திரிகையின்
முதல் இதழில் சி.சு. செல்லப்பா எழுதிய புகழ் பெற்றத்
தலையங்கம் முதல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்தத்
தாளைத் திருப்பினால் சினிமா விளம்பரம் வந்திருக்கு. ஒரு
படைப்புக்கு இடையில் விளம்பரம் போடுவதை
இன்றுவரைக்கும் ‘காலச்சுவ’டில் செளிணியமாட்டோம்.
சிறுபத்திரிகை மரபைத் தூளாக்கும் ஆசை எப்போதும்
எனக்கு இருந்ததில்லை. ‘காலச்சுவடு’ ‘எழுத்’தின் மரபை
மீட்டிருக்கிறது. சூழலை எதிர்கொண்டு போராடுவதுதான்
‘எழுத்’தின் மரபு. அதுதான் சி.சு செல்லப்பாவின் பாணி.
அவலம், அவலம் என்று புலம்பிக்கொண்டிருப்பதல்ல.
􀁺 ‘காலச்சுவடு’ தொடர்ந்து வெளியானபோது,
சு.ரா.வுக்கு நெருக்கமான நண்பர்கள் விலகிப்
போனதற்குக் காரணம் என்ன?
பொதுவான காரணம் சொல்ல முடியமா என்று
தெரியலை. சிலர் விலகிப்போளிணி என் மேலுள்ள கசப்பைச்
சூழலில் பரவ விட்டனர். ‘காலச்சுவ’டில் இருந்தபோது
வெளிப்பட்ட படைப்பூக்கத்தை இவர்கள் யாராலும் விலகிய
பின்னர் வெளிப்படுத்த முடியவில்லை. ‘காலச்சுவடு’
பரவலானதும் புத்தகங்கள் வெற்றிகரமாகப் போனதும் ஒரு
சிலருக்கு வருத்தமாகப் போச்சு. சு.ரா. அதுவரை தமிழ்ச்
சூழல் பற்றி வைத்த எல்லா விமர்சனங்களையும் முழுக்கக்
காலி பண்ண வேண்டும் என்று நான் நினைத்தேன்.
சு.ரா.வுக்குப் பிற்காலத்தில் சூழலில் ஏற்பட்ட மாற்றம்
மகிழ்ச்சியாக இருந்தது.
1980களில், 90களில் தமிழ்ச் சூழலின் மோசமான நிலை
பற்றிப் பலர் பேசிக்கிட்டே இருப்பார்கள். பல வருஷங்களாக
அதை நான் கேட்டிருக்கேன். ஆனால் இப்ப தமிழ்ச் சூழலின்
அவலம் பற்றிப் பொதுப்படையாகப் பேசினால் சிரிக்கும்
நிலை எற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தைப் பலரால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அப்பாவுக்கு நெருக்கமான நண்பர்கள் ‘காலச்சுவ’டில்,
பதிப்பகத்தில் வெளியாகும் படைப்புகளைக் கட்டுப்படுத்த
முயன்றனர். அது நடக்கவில்லை. ஒரு படைப்பு வந்தால்,
அதை வெளியிடுவது பற்றி ஆசிரியர் குழுதான்
முடிவெடுக்கும். ‘ஆளுமை’களின் படைப்பையும்
மதிப்பிடாமல் வெளியிடவில்லை என்பதும், ‘காலச்சுவ’டிற்கு
எதிர்ப்பாகப் பின்னர் மாறியது.
1994, 95ஆம் ஆண்டுகளில் புதுமைப்பித்தனின்
வெளிவராத, தொகுக்கப்படாத படைப்புகளைக்
‘காலச்சுவ’டில் வெளியிடுவதில் ஆவேசமாகச்
செயல்பட்டுக்கொண்டிருந்தோம். தொ.மு.சி.யிடம் இருந்த
புதுமைப்பித்தன் கடிதங்களை மிகச் சிரமப்பட்டு வாங்கி
வெளியிட்டோம். தொ.மு.சி.யின் அடிக்குறிப்புகளுடன்
அவை வெளியானபோது சு.ரா.வுக்கு மிக
நெருக்கமானவர்களால் நடத்தப்பட்ட ‘வேர்கள்’ இதழில்,
அக்கடிதங்கள் வெட்டித் திருத்தப்பட்டவை என்ற
பொருளில் ஒரு குறிப்பு மு.ரா. என்ற பெயரில் வெளியானது.
தொ.மு.சி.க்குப் பு.பி. எழுதிய கடிதங்களின் புகைப்பட நகல்
எங்களிடம் இருந்ததால் இது அபத்தம் என்று தெரியும். மு.
ராமலிங்கத்தைப் பின்னர் நேரில் இதுபற்றிக் கேட்டேன்.
அப்போது பத்திரிகையைப் பொறுப்பேற்று
நடத்திக்கொண்டிருந்த சச்சிதானந்தன் அவர்களின்
நிர்ப்பந்தத்திலேயே அக்குறிப்பை வெளியிட்டதாகச்
சொன்னார். சச்சிதானந்தன் 30 ஆண்டுகளாக எங்கள் குடும்ப
நண்பர். இதுபோன்ற விளங்கிக்கொள்ளவே முடியாத
அனுபவங்களும் உண்டு. எல்லா ஆத்மார்த்தமான
முயற்சிகளையும் சிறுமைப்படுத்தும் நம் மனோபாவம்தான்
நம்முடைய உண்மையான அவலம்.
􀁺 1980கள் வரை ‘கணையாழி’ என்றால் தீவிரமான
இலக்கியப் பத்திரிகை என்ற பெயர் இருந்தது.
இன்று ‘காலச்சுவடு’ என்ற பெயர், ஒருவகையான
sமீக்ஷீவீஷீus விணீரீணீக்ஷ்வீஸீமீs எல்லாவற்றுக்கும் பொதுப்பெயர்
போல மாறியுள்ளதே.
‘காலச்சுவடு’ தொடங்கிய காலத்திலிருந்து
தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது.
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
5
எந்தவொரு செயல்பாடும் தொடர்ந்து நடக்கும்போது,
தாக்கம் ஏற்படுத்தும். அலட்சியமாக நாங்கள் பத்திரிகை
நடத்தவில்லை. எந்தவொரு படைப்பையும் படித்துப்பார்த்து,
ஏதாவது திருத்தம் செளிணிய வேண்டியிருந்தால்,
சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, திருத்தப்பட்ட பிரதியை
வெளியிடுகிறோம். புதிது புதிதான விஷயங்கள் வெளிவர
வேண்டுமெனக் கடுமையாக முயற்சி பண்μகிறோம்.
குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மட்டும் எழுதக்கூடிய
பத்திரிகையாக வரக்கூடாது என்பதில் கவனமாக
இருக்கிறோம். ‘காலச்சுவ’டின் பக்கங்களை
எழுத்தாளர்களுக்கு மாத வாடகைக்கு விடும் பழக்கம்
இல்லை. பத்திரிகையை ‘மேன்ஷன்’ மாதிரி நடத்தக் கூடாது.
மின்னஞ்சல் மூலம் வரக்கூடிய கட்டுரைகளைத் தொகுத்து
மூன்று நாட்களில் ஒரு இதழைத் தயார் பண்ணிவிடலாம்.
விற்பனை ராசி கொண்ட சில பெயர்களைப் பிடித்து
வைத்துக்கொண்டு இதழ் நடத்தும் பாணியை இன்று வணிக
இதழ்கள் கைவிட்டுவிட்டன. ‘மாற்று’ இதழ்கள் இன்று
இந்த பார்முலாவில் ஓட்டிக்கொண்டிருப்பது காலத்தின்
கோலம். ஆனால் ‘காலச்சுவடு’, ஆசிரியர் குழுவின்
கடுமையான உழைப்பின் வழியேதான் ஒவ்வொரு இதழும்
உருவாகிறது.
􀁺 ‘காலச்சுவடு’ குழுவினர் என்று ஒரு குழுவைத் தக்க
வைப்பதன் பின்புலம் என்ன?
‘காலச்சுவ’டில் உள்ள குழு நிரந்தரமானது அல்ல. அது
மாறிக்கொண்டே இருக்கும். எனக்குப் பிடிக்காத பேட்டி/
கட்டுரைகூடக் ‘காலச்சுவ’டில் குழுவினரின் முடிவுக்கேற்ப
சு.ரா. கூட்டிய
பாம்பன்விளைக் கூட்டத்தில்
‘காலச்சுவ’டை மீண்டும்
ஆரம்பிக்கப் போறோம் என்று
அறிவித்தபோது, ஜெயமோகன்
கடுமையாகவும் பதற்றமாகவும்
எதிர்வினையாற்றினார்; பத்திரிகை
தொடர்ந்து வராது என்றார்.
இப்படிப் பல சாபங்களை
மீறித்தான் ‘காலச்சுவடு’
இன்றுவரை வெளிவந்து
கொண்டிருக்கிறது
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
6
வெளிவருகிறது.
உயிர்ராசிகளின் பரிணாம வளர்ச்சியில் எவை அழிந்தன,
எவை தங்கின எனப் பார்க்கும்போது, பிழைத்த உயிர்ராசிகள்
அதிக பலம் வாளிணிந்தவையோ, அதிக புத்திசாலித்
தனமானவையோ அல்ல. எவை கால மாற்றங்களுக்கு ஏற்பத்
தங்களை மாற்றிக்கொண்டனவோ அவையே பிழைத்து
நிற்கின்றன.
மாறிவரும் காலத்தோடு கொள்ளும் உறவுதான்
‘காலச்சுவ’டின் பலம்.
􀁺 ‘காலச்சுவ’டில் இலக்கிய அம்சங்களுக்கு
முக்கியத்துவம் குறைவாக உள்ளதே?
இலக்கியப் பத்திரிகை என்ற அடையாளம்
‘காலச்சுவடு’க்குக் கொடுக்கப்படவில்லை. ஒரு
படைப்பாளிக்கும் வாசகனுக்கும் எல்லாமே தேவை.
இலக்கியத்துடன் எல்லாமே முடிந்துவிட்டது என்று
நினைக்கிறவர்களால் ‘காலச்சுவடி’ற்குள் நுழைய முடியாது.
அப்படி நினைக்கும் இலக்கிய அடிப்படைவாதிகளின்
எண்ணிக்கை மீஸீபீணீஸீரீமீக்ஷீமீபீ sஜீமீநீவீமீs போல இன்று தமிழில்
அருகிவிட்டது.
􀁺 ‘தமிழ் இனி – 2000’ தமிழ் இலக்கிய வரலாற்றில்
குறிப்பிடத்தக்க நிகழ்வு. அதற்கான திட்டம் எப்படி
உருவானது? அந்நிகழ்வைப் பற்றிச் சொல்லுங்கள்.
90களின் இறுதியில் அர்த்தமற்ற வெறுப்பு, கசப்பு பல
பக்கங்களில் இருந்து ‘காலச்சுவ’டின் மீது வந்து குவிந்தது.
எதிர்நிலைகள் தீவிரமடையும்போதும் என் செயல்பாடும்
வேகம் கொள்ளும். இக்காலகட்டத்தில் கவிஞர் சேரன்
மூலமாக உலகத் தமிழர்களுடன் தொடர்பு ஏற்பட்டது.
2000ஆம் ஆண்டில் பல்வேறு நிகழ்வுகளைப் பலர்
அறிவித்துக்கொண்டிருந்தனர். அதுபோல நாமும் ஏதாவது
நடத்தலாமென்ற யோசனையில் ‘தமிழ் இனி – 2000’ திட்டம்
ஒரு கனவாக உருவானது. அப்படியரு முரட்டுத்தனமான
திட்டத்தை நான் இப்பொழுது செளிணியமாட்டேன். ஆனால்
மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற மூன்று
நாட்களிலும் சந்தோஷமாகக் கலந்துகொண்டவர்கள்,
நான்காம் நாளே கடுமையாகப் பேசினர். கடுமையான
எதிர்வினைகள் ஏற்பட்டன. இன்று அதன் பின்விளைவாக
நடைபெறும் நடவடிக்கைகளில் அம்மாநாடு பற்றிக்
குறிப்பிடாத கூட்டுமௌனம் ஏற்பட்டுள்ளது.
􀁺 ‘ரஸ்புடீன்’ விருதை உங்களுக்கு நீங்களே கேலியாகக்
கொடுத்திருக்கிறீர்கள். சதியாலோசனை,
மந்திராலோசனை செளிணிளிணிளிணிளிணிளிணிவதில் நீங்கள் நிபுணர்
என்று சிறுபத்திரிகை வட்டாரத்தில் ‘பேச்சு’
உள்ளதே?
அப்படியரு பேச்சு இருப்பது எனக்குத் தெரியும்.
அந்தப் பேச்சுக்கேற்ற ஒரு பட்டத்தைப் பரிந்துரை செளிணிய
வேண்டும் என்று கனிமொழியைக் கேட்டேன். அவருடைய
பரிந்துரைதான் ‘ரஸ்புடீன்.’
திடீர்ன்னு ஒருத்தரைச் சந்திக்க நேரிடும். அவர்
என்னுடன் உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருக்கும்போது,
‘உங்களைப் பற்றி வேறுமாதிரி கேள்விப்பட்டேன், நீங்கள்
அப்படி இல்லையே’ என்பார். இந்த மாதிரி நூறு
பேரையாவது பார்த்திருக்கேன்.
இந்த மனோபாவம் பற்றி ‘உயிர் எழுத்’தின் ஆசிரியர்
சுதீர் செந்திலிடமே கேட்கலாம். என்னைச் சந்திக்காமல்,
என்னைப் பற்றி எதுவும் அறியாமல் மேற்படி ‘பேச்சு’ பரவக்
கரசேவை செளிணிதவர்களில் அவரும் ஒருவர். ‘உயிர் எழுத்’தின்
உருவாக்கத்தின் பின்னணியில் நான் இருப்பதாக
மனப்பிராந்தியில் திளைக்கும் மனங்கள் பேசியபோது
உண்மை அவரை இடிபோல வந்து தாக்கியிருக்க வேண்டும்.
􀁺 புதுமைப்பித்தன் படைப்புகள் பற்றி முனைவர்
பட்ட ஆளிணிளிணிளிணிளிணிளிணிவு மேற்கொண்டிருந்த வேதசகாய
குமாரைப் புறக்கணித்துவிட்டு, புதுமைப்பித்தன்
படைப்புகள் பதிப்பில் வேங்கடாசலபதிக்கு
முன்னுரிமை தந்தது ஏன்?
வேதசகாயகுமாரை என்னுடைய சிறுவயதிலிருந்தே
எனக்குத் தெரியும். எனக்கு வேதசகாயகுமார் மீது நல்ல
அபிப்ராயம் இருந்தது. புதுமைப்பித்தன் கதைகள் தொகுக்கும்
வேலையை நேரடியாகவும் அப்பா மூலமாகவும் அவரிடம்
பலமுறை செளிணியச் சொன்னேன். அவர் பல காலமாக எதுவும்
செளிணியவில்லை. அவரால் செளிணியவும் முடியாது. சலபதி
உருவாக்கிய ‘புதுமைப்பித்தன் கதைகள்’ செம்பதிப்புக்கு
நிகரான ஒரு பதிப்பைக் குமாரால் உருவாக்க முடியும் என்று
நான் நினைக்கவில்லை. மனக்கோணலை நேர்
செளிணிதுவிட்டால் அவரால் இலக்கிய விமர்சனம் எழுத
முடியும். பதிப்பு அவர் துறை அல்ல.
வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தன் ஆளிணிவு
1970களோடு முடிந்துபோன ஒன்று. 1980கள் முழுக்க அவர்
ஆளிணிவைக் கைவிட்டிருந்தார். 1990களில் டாக்டர் பட்டம்
பெற்ற பேராசிரியர்களுக்கு, மும்மாரி பெளிணிவதுபோல மூன்று
படிநிலைச் சம்பள உயர்வு கிடைத்தது. திடீரென்று குமார்
இலக்கிய உலகில் மறுபிரவேசம் செளிணிதார்.
இப்பிரவேசத்தின் ரகசியம் என்ன என்று சு.ரா.,
வேதசகாயகுமாரின் ஆசிரியர் பேரா. ஜேசுதாசனிடம்
கேட்டபோது நானும் உடன் இருந்தேன். பேராசிரியர் மிகுந்த
இளக்காரத்தோடு மேற்படி சம்பள உயர்வு விஷயத்தைக் கூறி,
‘காசுதான், வேறு ரகசியம் ஒன்றுமில்லை’ என்றது
நினைவிருக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் இக்கூற்று எனக்கு
ஏற்படுத்திய அதிர்ச்சியை எளிதில் விளக்கிவிட முடியாது.
1994இல் சென்னைக்குப் போனபொழுது, ‘காலச்சுவடு’
விஷயமாகப் பல எழுத்தாளர்களை நேரில் போளிணிப்
பார்த்தேன். குவளைக் கண்ணனும் கூட வந்திருந்தான். அந்தச்
சமயம் சலபதியைப் பார்த்தபோது, புத்தகமாக அச்சில் வராத
பு.பி. படைப்புகளைப் பத்திரிகைகளிலிருந்து கையால் எழுதி
எடுத்தவை இருக்கு என்றார். அதைக் ‘காலச்சுவ’டில்
வெளியிடுவதற்காக நான் வாங்கிக்கொண்டு நாகர்கோவில்
வந்தவுடன், இந்த விஷயத்தை யாரிடமாவது பகிர்ந்துகொள்ள
வேண்டுமெனத் துடித்தேன். குமாரை மகிழ்ச்சிக் கடலில்
ஆழ்த்த வேண்டுமென நினைத்து வீட்டிற்குக் கூப்பிட்டேன்.
அவர் வீட்டிற்கு வந்தார். நான் பு.பி.யின் பிரதிகளை அவரிடம்
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
7
கொடுத்தவுடன், ‘இதெல்லாம் புதுசு ஒன்றுமில்லை. . .
நான்சென்ஸ்’ என்ற tஷீஸீமீஇல் பத்து நிமிஷம் பொரிந்து
தள்ளினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஓரிரு மாதங்கள்
கழித்துப் பாம்பன்விளைக் கூட்டத்துக்கு வந்திருந்த
சலபதியை எந்தக் காரணமுமின்றி அவமதிக்கும் வகையில்
குமார் நடந்துகொண்டார். பு.பி.க்கு ஒரே வாரிசு தானேதான்
என்ற நினைப்பு குமாருக்கு இருந்தது. வல்லிக்கண்ணன்
இளம் வயதில் பு.பி. மீது மரியாதை கொண்டு தன்னுடைய
ஒரு நூலைப் பு.பி.க்கு இவ்வாறு சமர்ப்பணம் செளிணிதாராம்:
“என்னுடைய ஆசான்
புதுமைப்பித்தனுக்கு
இந்த ஏகலைவனின்
சமர்ப்பணம்.”
இதைப் பு.பி.யிடம் காட்டியபோது, “நேரில்
பார்க்கட்டும், கட்டை விரலை வாங்கிடறேன்,” என்றாராம்.
பு.பி., தன் பிற்கால ‘சிஷ்யர்’ குமாரின் கட்டை விரலையும்
வாங்கிவிட்டாரோ என்று எனக்குத் தோன்றியதுண்டு.
தொ.மு.சி. பற்றிய கடுமையான விமர்சனம் அடங்கிய
குமாரின் கட்டுரையை- அவரது ஆளிணிவேட்டின் ஒரு பகுதி
அது – ‘காலச்சுவ’டில் வெளியிட்டேன். அந்த இதழைத்
தொ.மு.சி.க்கு அனுப்பினேன். அதற்கு அவர் பதில் எழுத,
மீண்டும் குமார் பதில் எழுத விவாதம் முற்றியது.
தொ.மு.சி.யின் எழுத்தில் தகவல் பிழை, பொளிணி கிடையாது
என்பதை அறிந்துகொண்டேன். ஏற்கனவே ‘காலச்சுவடு’
பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளியிடுவதற்காக வாங்கி
வைத்திருந்த குமாரின் பு.பி. பற்றிய ஆளிணிவேட்டைப்
பிரசுரிக்கும் முயற்சியைக் கைவிட்டேன். காரணம், அதில் பல
இட்டுக் கட்டிய தகவல்கள் இருப்பது இவ்விவாதத்தின் வழி
தெரியவந்தது.
பு.பி., ஆளிணிவுக்கூட்டம் எங்கள் வீட்டில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில் சு.ரா., குமார், சலபதி, பொதிய வெற்பன்,
அதியமான், சச்சிதானந்தன், ராஜமார்த்தாண்டன் இன்னும்
சிலர் கலந்துகொண்டனர். அக்கூட்டம் முழுக்க டேப்பில்
பதிவாகியுள்ளது. அக்கூட்டத்தில் பு.பி.யின் வெளியிடப்படாத
படைப்புகளைத் தேடியெடுத்து வைத்திருப்பதாகக் குமார்
சொன்னார். சு.ரா. அவற்றைத் தருமாறு கேட்டார். ‘மழையில்
தூக்கிப்போட்டு அவற்றை அழிந்துவிட்டேன்’ என்றார்
குமார். இப்படி ஆளிணிவுக் கூட்டத்தில் பேசிய நபருடன்
இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பே
அபத்தமானது.
􀁺 ‘சுந்தர விலாஸ்’ வீட்டுடன் நெருங்கிய தொடர்பு
கொண்டிருந்த சி.மோகன், லஷ்மி மணிவண்ணன்,
சங்கர ராமசுப்பிரமணியன், தளவாளிணிளிணிளிணிளிணிளிணி சுந்தரம்
போன்றோர் அங்கிருந்து வெளியேறியமைக்கான
காரணங்கள் என்னவாக இருக்கும்?
சி. மோகனுக்கு சு.ரா.வுடன் இருந்த உறவு
கோணலானது. அது சிஷ்யனாக இருக்க ஏங்கி,
நிராகரிக்கப்பட்ட ஊமைக் காயம் என்பது என் அனுமானம்.
‘காலச்சுவடு’ இதழ் 2இல் முத்துசாமியின் ‘நற்றுணையப்பன்’
வெளியானபோது சி. மோகன் தமிழ் இலக்கிய வரலாற்றில்
முதலும் கடைசியுமாக அது பற்றிக் ‘கருத்துக் கணிப்பு’
நடத்தினார். அவருடைய ‘வயல்’ இதழைக் ‘காலச்சுவ’டில்
அறிவித்தார். சந்தா சேர்ந்தது. இதழ் வெளிவரவில்லை.
சந்தாவையும் திருப்பிக் கொடுக்கவில்லை. சந்தா சேர்ந்தவர்கள்
சு.ரா.தான் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்குப் பொறுப்பு
என்று எழுதிய கடிதங்களைப் பார்த்திருக்கிறேன்.
சி. மோகனின் ‘புனைகளம்’ இதழுக்கும் பொது நிதி
திரட்டப்பட்டது. இன்றுவரை கணக்குவிவரம்
வெளியிடப்படவில்லை. ஓர் இதழ் வெளிவந்ததும்
இரண்டாவது இதழிலேயே ‘எழுத்து’க்குப் பிறகு
‘புனைகளம்’ என்ற ரீதியில் தன் தோளில் தட்டு
வாங்கிக்கொண்டதைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது.
‘புதிய பார்வை’ முதல் இதழில் சு.ரா. எழுதுவதாக
அறிவிப்பு வந்ததும் சி. மோகன் அதைக் கண்டித்து
சு.ரா.வுக்குக் கடிதம் எழுதினார். ‘புதிய பார்வை’ இதழ்
வெளிவந்ததும் சு.ரா.வுக்கு நிறைவு தரவில்லை. எனவே அவர்
அறிவித்தபடி எழுத மறுத்துவிட்டார். விரைவில் ‘புதிய
பார்வை’யில் சி. மோகனின் தொடர் அறிவிக்கப்பட்டு
வெளிவந்தது. சிற்றிதழ் மனோபாவத்தின் பிரதிநிதியாகத்
தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் சி. மோகன் கடந்த
25 ஆண்டுகளில் சிறுபத்திரிகைகளில் எழுதியிருப்பது அரிது.
இந்தப் பின்னணி எல்லாம் அறிந்துதான் அவரை
‘ஜி. நாகராஜன் படைப்புகள்’ தொகுக்க அழைத்தேன். அவர்
மீண்டும் விலகியபோது எனக்கு வியப்பு எதுவும்
ஏற்படவில்லை. ஒரு நிறுவனத்தில்
என்னுடைய முயற்சியில் அவருக்கு
வேலை வாங்கிக் கொடுத்
தேன். அங்கே போளிணி ஷிமீttறீமீ
ஆனதும் ‘காலச்சுவ’
டுக்கு எதிரான
அ ர சி ய ¬ ல த்
துவக்கினார்.
துரோகத்தை
ருசிக்காமல்
அ வ ர £ ல்
வாழமுடியாது.
லஷ்மி
மணிவண்
ண னி ன்
மிதமிஞ்சிய
குடிப்பழக்
கத்தையும்
அ த ற் கு த்
« த £ த £ க
அ வ ர்
உருவாக்கிக்
ª க £ ண் ட
கோட்பாடுகளையும்
ந £ ங் க ள்
ஏற்கவில்லை. வேறு
என்னைச் சந்திக்காமல்,
என்னைப் பற்றி எதுவும்
அறியாமல் மேற்படி ‘பேச்சு’
பரவக் கரசேவை
செளிணிதவர்களில் சுதீர் செந்திலும்
ஒருவர். ‘உயிர் எழுத்’தின்
உருவாக்கத்தின் பின்னணியில்
நான் இருப்பதாக
மனப்பிராந்தியில் திளைக்கும்
மனங்கள் பேசியபோது
உண்மை அவரை இடிபோல
வந்து தாக்கியிருக்க வேண்டும்.
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
8
காரணம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. இன்றுவரை தன்
எதிர்நிலையை நேரடியாக என்னிடம் முன்வைக்கும் திராணி
இவரிடம் இல்லை. நான் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து
என் மனைவியையும் மக்களையும் வன்மத்திற்கு
உட்படுத்தினார். தமிழ்ச் சூழலில் ஒரு கண்டனக் குரல்கூட
எழும்பவில்லை.
தளவாளிணி சுந்தரத்திற்கு ‘குமுத’த்தில் வேலை கிடைத்
ததும், வெகுஜன ஊடகத்தில் பணியாற்ற ஏற்ற தந்திரோபாய
மாகக் ‘காலச் சுவடு’ எதிர்ப்பு அரசியலில் ஈடுபட்டார்.
இவரைப் பலவிதங்களிலும் ஊக்குவித்த சு.ரா.வை
இழிவுபடுத்தி, சி. மோகனின் மேற்பார்வையில்,
‘குமுத’த்திலும், ‘தீராநதி’யிலும் இவர் பிரசுரித்தவற்றைத்
தொகுத்து வெளியிடும் எண்ணம் எனக்கு உண்டு. இன்று பல
இலக்கிய வாதிகளை வெகுஜன ஊடகங்களுக் காட்டிக்
கொடுத்தும் கொச்சைப் படுத்தியும் இயங்கிவருகிறார்.
வெகுஜன ஊடகங்களில் போகும் இடமெல்லாம்
சி.மோகனையும் இன்னும் ஓரிருவரையும் உப்புமூட்டை
தூக்கிக்கொண்டு போவதுதான் இன்று இவரது ஒரே
‘இலக்கிய’ச் செயல்பாடாக உள்ளது.
இவர்களுடைய செயல்பாட்டில் எந்த மதிப்பீடுகளையும்
நான் காணவில்லை. வெறுப்பு, கோணல், சந்தர்ப்பவாதம்
இவற்றிற்குக் கருத்தியல் அடிப்படைகள் எதுவும் இல்லை.
􀁺 பிறப்பின் அடிப்படையில் தீண்டாமையைக்
கற்பித்த வைதீக சமயத்தின் அடையாளமாக
விளங்கும் சங்கர மடத்தைத் தகர்க்க வேண்டும்
என்பது சரியான பார்வை தானே? பிரபஞ்சன்
போன்றோர் அதைச் சொன்னால், பார்ப்பனியத்தின்
மீது நம்பிக்கையற்ற உங்களுக்கு ஏன் முரண்பாடு
ஏற்படுகின்றது?
இந்தக் கேள்விக்குப் பொதுப்படையாகவே பதில்
சொல்ல விரும்புகிறேன். எனது எதிர்வினை தமிழக
‘முற்போக்கு’ மனோபாவம் நோக்கியது.
‘காலச்சுவடு’ தலையங்கம் இக்கருத்துகளை
முன்வைத்தது:
“சங்கராச்சாரியாரின் கைது தமிழக அரசியல்
வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வு. ஜெயேந்திரர் மீது
அனுதாபம் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை. அவர்
கீழான அரசியல் தளத்தில் செயல்பட்டார். ரவுடிக் கும்பலின்
அதிகார போதையின் புழுதியில் புரண்டு திளைத்தது சங்கர
மடம். ‘நக்கீர’னின் புலனாளிணிவுத் துணிச்சலும் பாராட்டுதற்கு
உரியது. மடத்தை உண்மையான ஆன்மீக அமைப்பாக மாற்ற
வேண்டும். மடத்தின் நடவடிக்கைகள்
வெளிப்படையானவையாக மாறி, மக்களின் கண்காணிப்புக்கு
உட்படுத்தப்பட வேண்டும். சங்கர மடம் தன்னுடைய
சாதியப் பார்வையையும் மறுபரிசீலனை செளிணிது குறிப்பிட்ட
சாதி சம்பிரதாய வட்டத்தை மீறி வெளிவர வேண்டும்.
பெண்கள் பற்றிய பார்வையைச் சங்கர மடம்
மாற்றிக்கொள்ள வேண்டும்.”
இத்தலையங்கத்தை நான் எழுதவில்லை. ஆனால் என்
ஒப்புதலுடனே பிரசுரமானது. மேற்படித் தலையங்கத்தில்
உள்ள ஒவ்வொரு சொல்லுக்கும் தொனிக்கும் நான் முழுப்
பொறுப்பெடுத்து அதை முழுமையாக ஆதரிக்கிறேன்.
இதுபற்றிய சில எதிர்வினைகள் கோணலும் வன்மமும்
நிறைந்தவை. எந்தவித ஆதாரமும் இல்லாமல்
இத்தலையங்கத்தை என் பிறப்பின் அடிப்படையில்
மதிப்பிட்டவை.
இப்பார்வை ‘காலச்சுவ’டோடு இணைந்து செயல்படும்
ஆளுமைகளின் பன்முக வலுக்களை முற்றாகப்
புறக்கணிக்கிறது. கருத்து வேறுபாடு இவற்றில்
வெளிப்படவில்லை. சாதிய வன்மமே வெளிப்பட்டது.
இன்றுவரை பிராமணர்கள் நீங்கலாக வேறு யாரையேனும்
சாதிய அடிப்படையில் இவர்கள் விமர்சித்தது உண்டா?
வேறு யாரிடமும் சாதியும் வன்மமும் வெளிப்படவில்லையா?
திராவிட இயக்கம் கற்றுக்கொடுத்த முரண்பாடுகளை மேலே
அப்பிக்கொண்டேயிருப்பதுதான் அறிவுஜீவிகளின்
செயல்பாடா? சமூகத்தின் மௌனத்தைத் தகர்க்க
வேண்டியவன் அல்லவா ‘அறிவுஜீவி?’
முத்துராமலிங்கத் தேவர் பற்றிய முற்போக்காளர்களின்
கருத்து என்ன? இன்று அவர் புனருத்தாரணம்
செளிணியப்பட்டுக் கொண்டாடப்படுவது பற்றி அவர்கள் கருத்து
என்ன? எல்லா ‘முற்போக்கு’ அரசியல் தலைவர்களும்
அவரை ஆண்டுதோறும் வழிபாடு செளிணிவது பற்றி என்ன
கருத்து? கிறிஸ்தவத்தில் அரங்கேறிவரும் சாதிய மோதல்
பற்றிய இவர்கள் கருத்து என்ன? வெங்டேசப் பண்ணையார்
கொல்லப்பட்டவுடன் ஏற்பட்ட சாதிய அரசியலையும்
இன்று அவர் மனைவியார் மத்திய அரசின் உள்துறை இணை
அமைச்சராக இருப்பதையும் பற்றிய கருத்து என்ன?
சாதிக் கட்சிகள் உருவாக்கும் சாதியப் படைப்பாளிகள்
அமைப்புப் பற்றி இவர்கள் கருத்து என்ன? அதில்
பங்குகொள்ளும் படைப்பாளிகள் பற்றி இவர்கள் கருத்து
என்ன? தமிழக ஊடகங்களில் பிராமணர் அல்லாதவர்களால்
நடத்தப்படும் ஊடகங்களின் சாதி அரசியல் பற்றி இவர்கள்
கருத்து என்ன? சு.ரா. மரணமடைந்த செளிணிதியை
வெளியிடாத, நாகர்கோவிலிலேயே பதிப்பு வைத்திருக்கும் ஒரு
குழும நாளிதழ்கள், குமரி அனந்தன் துக்கம் விசாரித்ததை
வெளியிட்டன. அதுபற்றி ஏதேனும் கருத்து உண்டா? தம்
சாதியினருக்கு இலக்கியப் பரிசு வழங்கும் நிறுவனங்கள் பற்றி
என்ன கருத்து? அதை வாங்கிக்கொள்ளும் ‘முற்போக்கு’
எழுத்தாளர்கள் பற்றிக் கருத்து என்ன?
இளையபாரதி என்ற ‘வளர்ந்து’வரும் நபரைப் பல
ஆண்டுகளாகக் கவனித்து வருகிறேன். இவர் மேற்பார்வையில்
நடைபெறும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுகிறவர்கள்,
பதிப்பாளராக இவர் முன்னுரிமை கொடுத்து வெளியிடும்
எழுத்தாளர்கள், இவரது அதிகாரத்தால் ஊக்கமும் பரிசும்
பெறும் ஆளுமைகள், பதிப்பகத்திற்காக தேர்வு செளிணியும்
பெயர்கள் ஆகியவற்றில் இவரது சுயசாதிச் சார்பை என்னால்
பார்க்க முடிகிறது. இன்று இயல் இசை நாடக மன்றமும்,
சென்னைச் சங்கமமும் இவரது சுயசாதி அரசியல் துள்ளி
விளையாடும் களங்களாக இருப்பதையும் அவதானிக்க
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
9
முடிகிறது.
கவிஞர் விக்ரமாதித்யன் போலப் பொது அரங்குகளில்
ஒடுக்கப்பட்ட சாதியினரையும், பெண்களையும்,
தலித்துகளையும் சாதிய வன்மத்தோடு அவமதிக்கும் தமிழ்
இலக்கியவாதி இல்லை.
இவர்களைப் பற்றித் தமிழ் முற்போக்காளர்களின்
எதிர்வினை என்ன? இவர்களைப் பற்றிய மௌனத்திற்கு
அவர்கள் பிராமணர் அல்லாதவர் என்பது தவிர வேறு
காரணங்கள் உண்டா? இந்த மௌனத்தில் வெளிப்படுவது
இவர்கள் கூட்டுச் சாதியச் சார்பன்றி வேறு என்ன?
யாரும் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டுப் பிறந்துவிட்ட
புனிதப் பிறவிகளல்ல. எந்தச் சாதியும் தூய சாதி அல்ல.
ஆதாரமின்றி சந்தேகத்தையும், வன்மத்தையும் கலந்து
அடித்தால் யாரையும் சாதிய அடிப்படைகளில் எதிர்த்
தாக்குதல் தொடுத்துப் புண்படுத்த முடியும். அது அறமல்ல.
உரிய ஆதாரத்தோடு பேசும்போது அது சமூக விமர்சனம்.
ஆதாரமின்றியும் அல்லது எதிர்நிலை ஆதாரத்தை மீறியும்
பேசும்போது அது சாதிய அவதூறு.
􀁺 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற
கொலை முயற்சி பற்றிய ‘தெகல்கா’
ஆவணங்களைக் ‘காலச்சுவடு’ வெளியிட்டுள்ளது
பாராட்டிற்குரியது. ஆனால் சங்கராச்சாரியார்
கைது, மலேசியாவில் ‘ஹிண்ட்ராப்’ போன்றவற்றில்
வைதிக சமயத்திற்கு ஆதரவான நிலைப்பாடு
எடுத்தது ஏன்?
ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மனித உரிமை, தலித்
போராட்ட ஆதரவு, சிறுபான்மை மத, இன,
மொழியினருக்கு ஆதரவு, அடிப்படைவாத எதிர்ப்பு,
பெண்ணியப் பார்வைக்கும் படைப்புக்கும் ஆதரவு, சாதி
ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய தளங்களில் கடந்த 15
ஆண்டுகளில் ‘காலச்சுவடு’க்கு நிகராகப் பங்களித்திருக்கும்
பண்பாட்டு இதழ் – இயக்கம் வேறு இல்லை. இதுபற்றிய
றிணீtக்ஷீஷீஸீவீக்ஷ்வீஸீரீ ஆன முற்போக்குச் சான்றிதழ் எதுவும்
எங்களுக்குத் தேவையும் இல்லை.
மலேசியாவில் தமிழர்கள் இன அடிப்படையில், மத
அடிப்படையில், மொழி அடிப்படையில்
ஒடுக்கப்படுகின்றனர். இது சை.பீர்முகம்மது அவர்களுடன்
நான் மேற்கொண்ட மூன்று மலேசியச் சுற்றுப்பயணங்களில்
அனுபவபூர்வமாக அறிந்த செளிணிதி. தமிழ் மக்களின்
கொந்தளிப்பின் வெளிப்பாடாக ‘ஹிண்ட்ராப்’ தோன்றியது.
அவர்கள் முன்னிருத்தும் அடையாள அரசியலை அவர்கள்
முடிவு செளிணிய வேண்டும். தமிழக முற்போக்காளர்களின்
பாவனைகளுக்கு ஏற்ப அவர்களின் அடையாள அரசியல்
இருக்காது. அவர்கள் அமைப்பின் பெயரில் ‘இந்து’ என்ற
சொல் இடம் பெற்றுள்ளதை, தமிழ் அடையாளத்திற்கு
இன்றைய உலகச் சூழலில் இருக்கும் பிரச்சனைகளின்
பின்னணியிலும், மலேசியப் பின்னணியில் ‘இந்து’ என்பதன்
பொருள் என்ன என்பதையும் உள்வாங்கிக்கொள்ளாமல்,
இங்கு மத அடையாளம் கொண்ட சிறுபான்மை
ஆதாரமின்றி
சந்தேகத்தையும்,
வன்மத்தையும் கலந்து
அடித்தால் யாரையும் சாதிய
அடிப்படைகளில் எதிர்த்
தாக்குதல் தொடுத்துப்
புண்படுத்த முடியும். அது
அறமல்ல. உரிய
ஆதாரத்தோடு பேசும்போது
அது சமூக விமர்சனம்.
ஆதாரமின்றியும் அல்லது
எதிர்நிலை ஆதாரத்தை
மீறியும் பேசும்போது அது
சாதிய அவதூறு.
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
1 0
அமைப்புகளைத் தாம் ஆதரிப்பதைப் பற்றிய யோசனையும்
இல்லாமல், ‘ஹிண்ட்ராப்’ஐக் கண்டிப்பதும்
அறிவுறுத்துவதும் அபத்தமானது. மலேசியாவில் தமிழன்,
இந்து என்பது பெரும்பான்மையானவர்களுக்கு ஒரே
அடையாளத்தின் இரு முகங்கள்.
சங்கராச்சாரியார் பற்றிய தலையங்கம் முக்கியமானது
என்பதால், ஆசிரியர் குழுவினர், குறிப்பாக சலபதியும்
ரவிக்குமாரும் ஓகே செளிணித பிறகுதான் வெளியிடப்பட்டது.
சங்கரமடம் மீது பக்தி உள்ளவர்களை நோக்கித்தான் அந்தத்
தலையங்கம் எழுதப்பட்டது. அத்தகையோரும் அதனை
ஏற்றுக்கொண்டனர். சங்கராச்சாரியார் மீது வெறுப்புக்
கொண்டவர்களுடன், அவரை வெறுத்துப் பேசுவதால் என்ன
பயன்? பொதுவாக நமக்குள்ளேயே பேசும் அரசியலை நான்
மறுக்கிறேன். எதிர்எதிர்த் தரப்பினர் விவாதிக்க வேண்டும்;
உரையாடலைக் தொடங்க வேண்டும். சங்கராச்சாரியாரை
எதிர்த்து எழுதியதால், ஆண்டுக்குப் பத்து லட்சம் ரூபாளிணி
‘காலச்சுவடு’ நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது. மிகவும்
கஷ்டப்பட்டோம். இப்படி எங்களின் சுதந்திரமான
நிலைப்பாடுகளுக்காகப் பலவற்றை இழந்திருக்கிறோம்.
‘காலச்சுவடு’ மீது விமர்சனம் வைக்கிறவர்கள் தம்
நிலைப்பாட்டுக்காக எந்த இழப்பை எதிர்கொண்டனர்?
􀁺 உங்களுக்குப் பிரபஞ்சனுடன் என்ன முரண்பாடு?
எனக்குத் தனிப்பட்ட முறையில் பிரபஞ்சனுடன்
பிரச்சினை எப்போதும் இருந்ததில்லை. அவர்மீது எனக்கு
மரியாதை உண்டு. விமர்சனங்களும் உண்டு. அவருடைய
எழுத்து எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு கதைசொல்லி.
நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். பிறர் சொல்கிற
நகைச்சுவையையும் நுட்பமாக ரசிக்கக்கூடியவர். பொதுவாகக்
கர்வம், தன்முனைப்பு இல்லாதவர். இளையவர்களை
மதிப்பவர். அவர் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர். புதிய
நூல்களையும் புதிய இளம் எழுத்தாளர்களையும்
தெரிந்துகொள்வதில் அவருக்கு இருக்கும் ஆர்வம்
அபூர்வமானது. ஆனால், அவரிடம் உறுதியான
நிலைப்பாடுகள் கிடையாது. பல்வேறு காலக்கட்டங்களில்
தங்களுடைய நிலைப்பாடுகளைச் சூழலுக்கு ஏற்ப
மாற்றிக்கொள்கிறவர்கள் பலர் உண்டு. அவர்கள் அதனால்
பல்வேறு வசதி வாளிணிப்புகளை அடைந்திருப்பார்கள். ஆனால்
பிரபஞ்சன் எந்தவிதமான வசதிகளையும் அனுபவிக்காதவர்.
இன்றும் அன்றாடம் காளிணிச்சிப்போல அவர் வாழவேண்டிய
சூழலிருப்பது ஒரு தமிழ்ப் பண்பாட்டாளராக எனக்குத்
தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.
􀁺 சங்கராச்சாரியார் பற்றிய ‘காலச்சுவடு’
கருத்தாடலுடன் பிரபஞ்சன் ஒத்துப் போயிருந்தால்,
அவர் நிலைப்பாடு மாறாதவர் என்று
கருதமுடியுமா? ஒரு பிரச்சினை உருவாகும்போது,
ஏற்கனவே உள்ள நிலைப்பாட்டில் மாற்றம்
ஏற்படுவது இயல்புதானே? அதை எப்படிக்
குறையாகக் கருத முடியும்?
பிரபஞ்சனின் நிலைப்பாடுகளின் மாற்றங்கள் பற்றிய என்
மதிப்பீடு ‘காலச்சுவடு’டன் அவர் கொள்ளும் உறவு சார்ந்தது
அல்ல. உதாரணத்திற்கு, கடந்த 15 ஆண்டுகளில் கலைஞர்
பற்றிய அவருடைய மதிப்பீடுகள் அடிக்கடி மாறி வருவதைப்
பார்க்கிறேன். அதே போல டாக்டர் ராமதாசு பற்றியும்.
மண்டோ நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், பு.பி., அவருடன்
ஒப்பிடவே முடியாத அளவுக்குப் படைப்புத் தரத்தில் குன்றி
இருப்பதாகப் பொருத்தமற்று ஒப்பிட்டுப் பேசியதும்
உறுத்தலாக இருந்தது. எப்போதும் றிறீணீஹ்வீஸீரீ tஷீ நிணீறீறீமீக்ஷீஹ்
என்றழைக்கப்படும் சபையின் பொதுக் கருத்துடன் இசையும்
தன்மையை ஓர் இழையாகவும் ஒரு கலைஞனாக மாற்றுக்
கருத்தை முன்வைக்கும் பொறுப்புணர்வை இன்னொரு
இழையாகவும் அவர் ஆளுமையில் முரண்பட்டுப்
பிணைந்துள்ளன.
􀁺 நீங்கள் முதன்முதலாக எந்தப் பத்திரிகையில் என்ன
எழுதினீர்கள்?
நான் தமிழில் எழுதிய முதல் எழுத்து அ. மார்க்ஸைக்
கிண்டலடித்து ‘சுபமங்களா’வில் எழுதிய கடிதம்தான்.
1993இல் அவர் ஐரோப்பாவிற்கு, பாத்திரம் கழுவித்
தெருக்கூட்டிக்கொண்டிருந்த தமிழர்களிடம் ஸ்பான்சர்
வாங்கி, பயணம் போயிருந்தார். ‘உண்மை + தூளிணிமை + மரபு
மீறாமை = பாசிசம்’ என்று அந்த அனுபவத்தைக்
கட்டுரையாக எழுதியிருந்தார். ஐரோப்பியச் சமூகமே
பாசிஸ்ட் சமூகம் என்றும் ஒவ்வொரு குடிமகனும் பாசிஸ்ட்
என்றும் எழுதியிருந்தார். மேலோட்டமான தகவல்களின்
அடிப்படையில் எழுதப்பட்டிருந்த அந்தக் கட்டுரைதான்
பாசிஸ்ட் தன்மையுடையதாக இருந்தது. நான்
அக்கட்டுரையைக் கிண்டல் பண்ணிக் கடிதம் எழுதினேன்.
எதிர்வினையாற்றினால் அவரால் ஏற்றுக்கொள்ள முடியாது;
பிறர் கேலி செளிணிவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது.
சகிப்பின்மையின் இலக்கணம் அ. மார்க்ஸ்.
􀁺 அ. மார்க்ஸ் பல்வேறு நிலைகளில் விழிப்புடன்
செயலாற்றிக்கொண்டிருப்பவர். அவரைக் கேலி
செளிணிளிணிளிணிளிணிளிணியும் முயற்சியில் ஈடுபட்டது எந்த வகையில்
நியாயம்?
அ. மார்க்ஸ் நிறைய மாற்றுக் கருத்துக்களை
முன்வைக்கிறார். அந்தக் கருத்துக்களுக்கு ஏற்ப அவர்
நடக்கிறது கிடையாது. கருத்துச் சுதந்திரம் பற்றி நிரம்ப
எழுதுகிறார். ஆனால் கருத்துச் சுதந்திரத்தில் அவருக்கு
எவ்விதமான நம்பிக்கையும் கிடையாது. மாற்றுக்
கருத்துள்ளோரை அழிக்க நினைக்கும் பாசிச மனோபாவம்
அவருடையது. ஆந்திராவில் பத்திரிகை தாக்கப்பட்டால்
சிலிர்த்து எழுவார். மதுரையில் ‘தினகரன்’ தாக்கப்பட்டால்
மௌனம் பூண்டுவிடுவார். மட்டுமல்ல, அழகிரி
ஆதரவாளர்களால் ஞாநிக்கு எதிராக நடத்தப்பட்ட
கூட்டத்தில் கலந்துகொண்டு ‘தினகரன்’ தாக்குதல் பற்றி ஒரு
வார்த்தையும் பேசாமல் ‘கர்ஜித்துவிட்டு’ வந்தார். அதைத்
தொடர்ந்து, ‘கலைஞரைத் தாக்குவது திராவிட
இயக்கத்தையே தாக்குவது போன்றது’ என்று அவர் உதிர்த்த
வாக்கியம் பொன் எழுத்துக்களில் பொறித்துப்
பாதுகாக்கப்பட வேண்டியது. அவர் நடத்திய இதழ்களில்,
அரங்குகளில் மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம்
இருந்ததில்லை.
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
1 1
அ. மார்க்ஸின் நேர்மை சார்ந்தும் எனக்குச் சந்தேகம்
உண்டு. அவரிடம் ஆளிணிவாளருக்குரிய நேர்மை கிடையாது.
தன் கட்டுரைகளுக்கு ஆதாரமான பிரதிகளை அவர் பல
சமயங்களில் அங்கீகரிப்பது இல்லை. எல்லாம் சுய
கருத்துபோலப் பதிவுபெறும். ஓர் எடுத்துக்காட்டில்
மேற்கோளைத் திரித்துக் காட்டுவார். எந்தச்
சூழ்நிலையிலிருந்து சொல்லப்பட்டிருந்ததோ, அதிலிருந்து
பிளிணித்து எடுத்துக்காட்டுவார். அவருடைய கருத்துகளுக்கு
ஏற்றவகையில் வார்த்தைகளைப் பிடுங்குவார். ‘காந்தியின்
கடைசி 200 நாட்கள்’ நூலுக்குப் ‘புதிய புத்தகம் பேசுது’
இதழில் எழுதிய மதிப்புரையில் மேற்கோளின் அறம் பற்றி
நீட்டி முழக்கியிருந்தார் அ. மார்க்ஸ். ஒரு நண்பரிடம் அதைப்
படித்துக் காட்டினேன். சாத்தான் வேதம் ஓதுவது போல
இருக்கிறது என்றார் அவர்.
புதுமைப்பித்தன் பற்றிய ஆளிணிவில் அவர் கொஞ்சம்கூட
ஆளிணிவு நேர்மை இல்லாமல் செயல்பட்டார். பு.பி. மீது
பல்வேறு பொளிணிகளைச் சுமத்தினார். இலக்கிய
அடிப்படையில் அ. மார்க்ஸ் விமர்சனம் எதுவும்
செளிணியவில்லை. வக்கீல் மாதிரி, அங்கே இருந்தும் இங்கே
இருந்தும் சில வரிகளை எடுத்து வாதத்தில் முன்வைப்பார்.
அ. மார்க்ஸினால் கவனம் பெற்றப் படைப்பாளி யார்? அழிவு
வேலையை மட்டும்தான் அவரால் செளிணிய முடியும்.
இன்று தன் பதிப்பாளர் தன்னைக் காப்புரிமையில்
ஏமாற்றிவிட்டார் என்று புலம்பி எழுத்தாளர்களை ஒன்றுசேர
அறைகூவல் விடுத்துள்ளார். இது உண்மையென்றால்
அ. மார்க்ஸ§க்குக் கவித்துவ நீதி வழங்கப்பட்டுள்ளது என்றே
கூறுவேன். புதுமைப்பித்தன் மனைவியாருடனும் மகளுடனும்
முறைப்படி ஒப்பந்தம் செளிணிது, முழுப் பொறுப்புணர்வுடன்
பதிப்பித்து, காப்புரிமையையும் ஒழுங்காக வழங்கிய
காலச்சுவடுக்கு எதிராக, இளையபாரதியுடன் மேடை ஏறி
முழங்கியதை மறக்க முடியுமா? பு.பி., காப்புரிமைப்
பிரச்சனையில் பொதுச்சொத்து வாழ்க என்றார். இப்போது
தன் தனிச்சொத்துக்காக உரிமைக் குரல் கொடுக்கிறார்.
ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும், இந்திய
அரசியல் அமைப்பிலும் நம்பிக்கையற்ற இஸ்லாமிய
அடிப்படைவாத அமைப்புகளுக்கு அவர் அளித்து வரும்
விமர்சனமற்ற ஆதரவு இந்துத்துவத்திற்குச் சாதகமானதாகவே
அமையும்.
உண்மை, பொளிணி எல்லாம் கிடையாது என்று
அ. மார்க்ஸ் தத்துவம் பேசியது நினைவிருக்கும். இன்று
வாரம் ஒருமுறை பல்வேறு சிக்கலான பிரச்சினைகளின் முழு
உண்மையை அதிரடி விசிட்டுகள் மூலம் அறிந்து எந்தத்
தயக்கமும் குழப்பமும் இன்றி 100% அக்மார்க் உண்மையாக
அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.
அ. மார்க்ஸின் 30 ஆண்டு கால எழுத்துக்களையும்
பேச்சுகளையும் தொகுத்து வெளியிட்டால், அவை ஒன்றை
ஒன்று அடித்துக்கொண்டு சாகும். அந்த அளவுக்கு
முரண்பாடுகள் கொண்டவை அவர் கருத்துக்கள்.
􀁺 ஊடகங்கள் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள்
எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். இன்று ஊடகத்திற்கு
எதிராக என்ன செளிணிளிணிளிணிளிணிளிணிய முடியும்?
ஊடகத்தை மாற்றுவது நமது கட்டுப்பாட்டில் இல்லை.
இன்று ஊடகத்தை எப்படி அμகுவது என்பது
முக்கியமானது. ஊடகத்தை வெள்ளந்தியாக அμகுவது
ஆரம்பகட்ட மனநிலை. நாம் ஊடகத்தின் இன்னொரு
முகத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. ஊடக விமர்சனம் என்ற
போக்கை ஏற்படுத்துவதன் மூலம் புதிய பார்வையை ஏற்படுத்த
முடியும். ஆங்கில நாளிதழ்களில் இலக்கணப் பிழையாக
எழுத முடியாது. தமிழில் பிழைகள் மலிந்திட்ட நாளிதழ்
நடத்த முடியும். தமிழ் வாசகர்கள் அதைப்
பொருட்படுத்துவதில்லை. ஏற்கனவே இங்கு உருவாகியுள்ள
வாசகர்களுக்கேற்பப் பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன.
அகில இந்திய அளவில் டாக்டர் தல்வார் மீதான
கொலைக் குற்றச்சாட்டு, பரபரப்பான செளிணிதியாக
இருந்தபோது அவரோட மகள் தீப்தி கொலை செளிணியப்பட்ட
கேசில் ஊடகங்கள் செயல்பட்ட விதம் குறித்தும்
கடுமையான சுய விசாரணை ஆங்கில ஊடகங்களில்
நடைபெற்றன. ஊடகங்கள் பரப்பிய கட்டுக்கதைகள்
ஊடகங்களிலேயே அம்பலப்படுத்தப்பட்டன. இங்கே தமிழில்
இதுபோல ஆயிரம் நிகழ்வுகள் இருக்கு. ஊடகங்களில் ஒரு
விவாதம்கூட நடந்ததில்லை. தமிழில் புலனாளிணிவு இதழ்கள்,
இதழியல் சீரழிவை ஏற்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
􀁺 பிரமிள் ஒரு காலகட்டத்தில் – நீங்கள் சிறுவனாக
இருக்கும்போது – உங்கள் வீட்டில்
தங்கியிருந்தார். அவருடனான
உங்கள் உறவு
எப்படியிருந்தது?
அ வ ரு ¬ ட ய
இ ய ல் பு
எப்படிப்பட்டது?
எ ங் க ள்
வீ ட் டு
ம £ டி யி ல்
பி ர மி ள்
மூ ன் று
மாதங்களுக்
கும் மேலா
கத் தங்கியி
ரு ந் த £ ர் .
அப்பாவுக்கு
அவர் மீது
மி கு ந் த
மரியாதை
இ ரு ந் த து .
அவர் ஒரு
விநோதமான
ஆள் என்பது
எனக்கு அந்த
வ ய சி « ல « ய
கருத்துச் சுதந்திரம் பற்றி
நிரம்ப எழுதுகிறார். ஆனால்
கருத்துச் சுதந்திரத்தில்
அவருக்கு எவ்விதமான
நம்பிக்கையும் கிடையாது.
மாற்றுக் கருத்துள்ளோரை
அழிக்க நினைக்கும் பாசிச
மனோபாவம் அவருடையது.
ஆந்திராவில் பத்திரிகை
தாக்கப்பட்டால் சிலிர்த்து
எழுவார். மதுரையில் ‘தினகரன்’
தாக்கப்பட்டால் மௌனம்
பூண்டுவிடுவார்.
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
1 2
தெரிந்தது. அவர் தரையில் ஊர்கின்ற எறும்பைப் பத்து
நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருப்பார். எனக்கு அவர்மீது
ஈடுபாடு ஏற்படவில்லை; என் சகோதரிகள் அவருடன்
நன்றாகப் பழகினர். பின்னாட்களில் அவர் தங்கிய வீடுகளில்
குழந்தைகளை அவர் துன்புறுத்தியதில் பிரச்சினை
ஏற்பட்டிருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கேன். எங்கள்
வீட்டில் அப்படி எதுவும் ஏற்படவில்லை. பிரமிள் வீட்டை
விட்டுப் போளிணிவிட்டார். அப்பாவுடன் அவருக்கு இருந்த
உறவு முறிந்துபோளிணிவிட்டது. அதுபற்றி அப்பா எங்களிடம்
எதுவும் சொல்லவில்லை.
என் மூத்த சகோதரிக்கு சுமார் 20 வயதில் திருமணமான
புதிதில், சென்னையில் அவருடைய கணவருடன் சினிமா
பார்க்கப் போயிருந்திருக்கார். பெண்கள் வரிசையில் கூட்டம்
குறைவாக இருந்தது என்று அவரை நிற்க வைத்து விட்டு,
கணவர் பக்கத்தில் ஏதோ வாங்கப் போயிருக்கார்.
அப்பொழுது பிரமிள் சற்றுத் தள்ளிப் போவதைப்
பார்த்தவுடன், வீட்டில் அவர் தங்கியிருந்த போது பழகிய
அதே உணர்வுடன், அவரை ‘மாமா’ என்று அக்கா
கூப்பிட்டிருக்கிறார். அக்கா கூப்பிடுவது, பிரமிள் கிட்ட
வருவது, பேசுவது, விலகிப்போவது . . . எல்லாம் அவருடைய
கணவர் பார்த்திருக்கிறார். சில நொடிகளில் கணவர் அருகில்
வந்தபோது, அக்கா குலுங்கிக்குலுங்கி
அழுதுகொண்டிருந்தார். அந்த ஒரு நிமிடத் தில் பிரமிள்
என்ன சொன்னார்? ஏன் அவர் அழுதார்? என்பதற்கான
காரணத்தைக் கடைசிவரை யாரிடமும் சொல்லவே இல்லை.
இதுபற்றிச் சில ஆண்டு களுக்கு முன்னர், என் சகோ தரியின்
மறைவுக்குப் பிறகு அப்பா என்னிடம் சொன்னார். அவர்
முகபாவம், குரல், தொனி எல்லாம் மனதில் பதிந்திருக்கிறது.
பிரமிளுக்கு நிறையத் திறமை இருந்திருக்கிறது. ஆனால்
அவருடைய இன்னொரு பகுதியை மறைக்க முயற்சி
நடக்குது. அவருடன் நெருங்கிப் பழகியவர்கள், அதுபற்றி
எழுதினால் அதைக் கண்டனம் செளிணியச் சிலர்
முயலுகின்றனர். பிரமிளை இந்த அம்சங்களுடன்
சேர்த்துத்தான் பார்க்க வேண்டும். அவருடன் கூடுதலாக
ணீபீழீust பண்ணிய அவருடைய சமகாலத்து எழுத்தாளர்கள்
மாதிரி, இன்றைக்கிருக்கிறவர்களால் முடியுமா? அவரை
வீட்டில் வைத்துப் பார்க்க இவர்களால் முடியுமா?
பிரமிளையோ, ஜி. நாகராஜனையோ மிநீஷீஸீ ஆக மாற்றி
மிகைப்படுத்திப் பேசுகிற பலர், அவங்க கூடப் பழகியிருக்க
மாட்டார்கள்; பலர் நேரில் பார்த்திருக்கமாட்டார்கள். இப்ப
விக்ரமாதித்யனுக்கு வயசு அறுபது ஆச்சு. இவருக்கு 30 வயது
தாண்டிய பின்னரும் ஜி.என். வாழ்ந்துகொண்டிருந்தார். அவர்
ஜி. நாகராஜன் வாழ்ந்த காலத்தில் அவரைப் பார்த்திருக்கிறாரா
என்பது சந்தேகம். மதுரையில் ஒரு கூட்டத்தில் -
ஜி. நாகராஜன் மறைந்த பின்னர் – சுந்தர ராமசாமி
பேசும்பொழுது, கூட்டத்திலிருந்த விக்ரமாதித்யன்,
‘மதுரையில் ஜி. நாகராஜன் என்று ஒரு மகான் வாழ்ந்தார்,
நீங்க பார்த்திருக்கீங்களா?’ என்று கேட்டிருக்கிறார். இந்த
மாதிரி எழுத்தாளர்களைத் தூக்கிப் பிடிக்கிறவர்களுக்கு,
அவர்களுடைய படைப்பு சார்ந்த உறவு என்பது ஒரு
பகுதிதான். பெரும் பகுதி மோஸ்தர் சார்ந்தது.
􀁺 உங்கள் வீட்டிற்கு வந்துபோன வேறு
எழுத்தாளர்கள் பற்றிச் சொல்லுங்கள்.
நான் சின்னப் பையனாக இருந்தபோது கிருஷ்ணன்
நம்பி அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். ரொம்ப
நகைச்சுவையாகப் பேசுவார். பூதப்பாண்டியில் இருந்த
அவருடைய வீட்டுக்கு நாங்கள் எல்லோரும் போவோம்.
அவங்க வீட்டுக்குப் பின்னால் ஆறு ஓடியது. அருமையான
ஊர். அவர் தன்னுடைய பிள்ளைகள் பற்றிய கதைகளைச்
சொல்லுவார்; வேடிக்கையாக இருக்கும். பின்னாளில்
அவருக்குப் புற்றுநோளிணி வந்து ஒரு காலை எடுத்துவிட்டனர்.
அவர் எங்க வீட்டுக்கு வந்து பொளிணிக் காலைக் கழட்டி
வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து எனக்குப்
பெரிய அதிர்ச்சி. அவர் ‘. . . ம் . . . பக்கத்தில் வா. . .
இதுக்கெல்லாம் அதிர்ச்சியடையாதே. எங்கள் ஊரில்
பாண்டி விளையாட்டில் என்னை ஜெயிக்கறதுக்கு ஆளே
இல்லை’ என்றார். அவருடைய நகைச்சுவை ததும்பும்
இயல்பும் கடைசிவரை மாறவில்லை.
􀁺 நாகராஜன் பற்றிய நினைவைச் சொல்லுங்கள்.
ஒருமுறை ஜி. நாகராஜன் எங்கள் வீட்டிற்கு வந்து
தங்கியிருந்தபோது, நான் ஏழாம் வகுப்புப்
படித்துக்கொண்டிருந்தேன். இப்பக் ‘காலச்சுவடு’ அலுவலகம்
இருக்கிற முன் அறையில்தான் நான் இருந்தேன்.
ஜி. நாகராஜன் வீட்டுக்கு முன்னால் உள்ள வராண்டாவில்
படுப்பதற்காகப் படுக்கை, குடிக்கத் தண்ணீர்ச் சொம்பு
வைக்கப்பட்டிருக்கும். முன்கதவைப் பூட்டுவது கிடையாது.
அவர் பின்னிரவில் வந்து படுத்துக்கொள்வார்.
ஒருநாள் லண்டனுக்குப் போளிணிவிட்டு வந்தது பற்றி
அப்பாவிடம் ஒரு மணிநேரம் விலாவாரியாகச்
சொல்லிக்கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில் ஏறியது,
கண்டக்டர் பேசியது என்று லண்டன் வாழ்க்கை பற்றி
நுட்பமாகச் சொல்லியது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.
அழுக்குச் சட்டை, தாடி, நீளமான நகங்களுடன் இந்த ஆள்
எப்படி வெளிநாட்டுக்குப் போளிணிவிட்டு வந்தார் என்று
யோசித்தேன். எழுபதுகளில் லண்டனுக்குப் போவது பெரிய
விஷயம். அப்படிப் போனவர்களை ‘ஃபாரின் ரிட்டர்ன்’
எனப் பெருமையாகச் சொல்லுவார்கள். அவர் எழுந்து
போனபிறகு அப்பாவிடம் கேட்டேன். ‘நாகராஜன் லண்டன்
போனதில்லை’ என்று சாதாரணமாகச் சொன்னார். ரொம்ப
அதிர்ச்சியாக இருந்தது.
ஜி. நாகராஜன் என்னிடம் ரொம்பப் பிரியமாக
இருப்பார். என்னிடம் மட்டுமல்ல, குடும்பத்தினர்
அனைவரிடமும். ஒரு முறை என் அத்தை மகளைத் தெருவில்
பார்த்ததும் விசாரித்துவிட்டு ஓடிச்சென்று பூ வாங்கிக்
கொடுத்திருக்கிறார். அவர்தான் எனக்குச் ‘செஸ்’
விளையாட்டைச் சொல்லித்தந்தது. என்னுடைய காயை
வெட்டப்போகிறேன் என்று முதலிலே சொல்லிவிடுவார். நான்
காயை மாற்றி வைத்துக்கொள்வேன். நான் தோற்கிற மாதிரி
……………………………………………………………………………………………………………………………………………………..
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
1 3
இருந்தால், ‘ம். . . போதும்’ என்று சொல்லி, மீண்டும் புதிதாக
விளையாட்டைத் தொடங்குவார்.
ஜி. நாகராஜன் காலையில் நான்கு மணிக்கு எழுந்து
இரும ஆரம்பித்தால் விடாமல் தொடர்ந்து இருமுவார். அப்ப
எங்கள் வீட்டில் சமையல் வேலையில் ஹரிகர ஐயர்
இருந்தார். அவர் காலையில் முதல் வேலையாகப் பாலைக்
காளிணிச்சிக் காப்பிப் போட்டுக்கொண்டுபோளிணி நாகராஜனுக்குக்
கொடுப்பார். அப்புறம்தான் இருமல் அடங்கும். அப்புறம்
ஆறுமணிக்குமேல் எழுந்து வந்து பார்த்தால் சிகரெட்
பாக்கெட்டையும் கஞ்சாவையும் வைத்துக்கொண்டு
உட்கார்ந்திருப்பார். அந்த வயசில் அது கஞ்சா என்று
எனக்குத் தெரியாது. அவரிடம் அது என்ன என்று கேட்டால்,
‘இருமலுக்கு மருந்து’ என்பார். சிகரெட்டை எடுத்து மெல்ல
உருட்டுவார். புகையிலை வெளியே வந்துவிடும். அதை ஒரு
காகிதத்தில் வைத்துக் கஞ்சாவைக் கசக்கிக் கொஞ்சம்
புகையிலைத் தூளுடன் சேர்த்து, சிகரெட் காகிதத்துக்குள்
திணிப்பார். அது தானாக உள்ளே ஓடுற மாதிரி இருக்கும்.
ஒரு பாக்கெட் முழுக்கச் சிகரெட்களை நிரப்பிக்கொண்டு
வெளியே கிளம்புவார். அப்புறம் ராத்திரிக்குத்தான் வீட்டுக்கு
வருவார்.
􀁺 தமிழில் நிறையப் புத்தகங்கள் வெளிவருகின்றன.
‘காலச்சுவ’டில் ஏன் புத்தக மதிப்புரைக்கு
முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
புத்தக மதிப்புரைக்காக ஓர் இதழுக்கு ஐந்தாறு பக்கங்கள்
ஒதுக்க வேண்டும். ‘காலச்சுவடு’ காலாண்டு இதழாக
இருந்தபோது, அது முடிந்தது. மதிப்புரையாளர்களின்
ஆர்வமின்மையும் ஒரு பிரச்சனை. அப்ப மதிப்புரை
எழுதியவர்கள் இப்ப எழுதுவதில்லை. அப்புறம் இப்ப யார்
மதிப்புரை எழுத முன்வருகின்றனர் என்பதை அடையாளம்
காணமுடியவில்லை. பதிப்பகத்தினர் எங்களுக்குப்
புத்தகங்களை அனுப்பி எங்களால் மதிப்புரை போட
முடியாததனால் வருத்தப்படுகின்றனர். ஆனால் இப்ப என்ன
செளிணியுறது என்று தெரியவில்லை. பத்திரிகையைப்
பொறுத்தவரை புத்தக மதிப்புரை என்பது முக்கியமான
விஷயம். ஒரு மாற்று இதழ் கண்டிப்பாக அதைச் செளிணிய
வேண்டும்.
􀁺 ‘காலச்சுவடு’ இதழ் பற்றியும் உங்களைப் பற்றியும்
தொடர்ந்து முன்வைக்கப்படும் கண்டனங்கள்/
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
அவை ஒருவகையில் ‘காலச்சுவடு’
பிரபலமடைவதற்கு ஆதாரமாக உள்ளன என்று
கூறலாமா?
‘காலச்சுவ’டைத் தொடர்ந்து பிரசுரிப்பது என்பது
ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே இருக்கிறது. தாக்குதல்,
புறக்கணிப்பு என்பது இலக்கியக்குழு முரண்களிலிருந்து
பின்னர் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பரவி இன்று
தமிழக அரசுவரை வளர்ந்திருக்கிறது. மேட்டுக் குடிகள்
தமக்குள்ளே பேசிக்கொள்வதாகக் கூறி, மாற்று இதழியல்
இயக்கத்தைப் புறக்கணித்தவர்களால் இன்று அது
பிரமிளையோ,
ஜி.நாகராஜனையோ மிநீஷீஸீ ஆக
மாற்றி மிகைப்படுத்திப்
பேசுகிற பலர், அவங்க கூடப்
பழகியிருக்க மாட்டார்கள்;
பலர் நேரில் பார்த்திருக்க
மாட்டார்கள்.
விக்ரமாதித்யனுக்கு 30 வயது
தாண்டிய பின்னரும் ஜி.என்.
வாழ்ந்துகொண்டிருந்தார்.
அவர் ஜி. நாகராஜன் வாழ்ந்த
காலத்தில் அவரைப்
பார்த்திருக்கிறாரா என்பது
சந்தேகம்.
􀂋 உயிர் எழுத்து 􀂋 ஜனவரி 2009 􀂋
……………………………………………………………………………………………………………………………………………………..
1 4
முடியவில்லை.
முன்னர் இந்த வெறுப்பு தூக்கமற்ற இரவுகளைத் தந்தது.
இப்போது அதிகம் பாதிப்பு இல்லை. நாகர்கோவில் சற்றே
ஒதுங்கியிருப்பது சில்லறைச் சர்ச்சைகளைத் தவிர்க்க
உதவுகிறது. அதிகாரத்தின் சாளிணிவுகள் நண்பர்களிடையே
ஏற்படுத்தும் நிலைகுலைவுகளைப் புரிந்துகொள்ளும் முயற்சி
இப்போது மனதைக் கசக்கிக் கொண்டிருக்கிறது.
கண்டனங்கள் வழி ‘காலச்சுவ’டின் பெயரை அறிய
வருகிறவர்கள் அதைப் படித்துப் பார்த்தால் எவ்வளவோ
நன்றாக இருக்கும்.
􀁺 காலச்சுவடு பதிப்பகத்தை வெறுமனே வியாபாரம்
என்று கருதுகிறீர்களா?
காலச்சுவடு என்றுமே வெற்றிகரமான வியாபாரமாக
இல்லை. நஷ்டமாகவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும்
வளர்ந்துவருகிறது. துவங்கிய காலம் முதலே என் மீது
வியாபாரி என்ற குற்றம் சாட்டப்பட்டபோது நான் மறுத்தது
இல்லை. வியாபாரத்தைத் தொழில் திறனுடன், தொழில்
அறத்துடன் செளிணிதால் அது சமூகத்திற்குப் பயனுடையது.
வியாபார நோக்கம் இன்றி மேற்கில் பதிப்பகங்கள் இல்லை.
சிறந்த புத்தகங்கள் வெளியாகவில்லையா? அங்கு பண்பாடு
கொழிக்கவில்லையா?
தமிழ் புத்தகத் தொழிலின் வளர்ச்சியைப் பொருளாதார
அடிப்படையில் மட்டும் விளக்கி விட முடியாது. தமிழக
மாற்றுப் பண்பாட்டுச் செயல்பாட்டை ‘அதிகாரப் போட்டி’
என்ற அடிப்படையிலேயே விளங்கிக்கொள்ள முடியும்.
இத்தகைய போட்டி தனிநபர்களை ஒட்டியும். பல்வேறு
சமூகக் குழுக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. காலச்சுவடு
வியாபாரமாகக் கொழிக்கிறது என்று நம்பிப் பதிப்பகம்
துவங்கியவர்கள் அவ்வாறு இல்லை என்பதை
அனுபவபூர்வமாக உணர்ந்துவிட்டார்கள். பலருக்கு இன்று
தேள் கொட்டிவிட்டதை வெளிக்காட்ட முடியாத நிலை.
􀁺 ‘காலச்சுவடு’ பத்திரிகையுடன் பதிப்பகம்
தொடங்கியது முன்கூட்டியத் திட்டமா?
பத்திரிகை ஆரம்பிக்கிறது முன்கூட்டித் திட்டமிட்டு
நடந்த விஷயம். பதிப்பகம் அப்படிக் கிடையாது. சு.ரா.வோட
புத்தகங்களை க்ரியா பதிப்பகம்தான் வெளியிட்டது. அதில்
அவர் பங்காளராகவும் இருந்தார். அவரோட புத்தகங்களில்
ஏதாவது ஒன்றுதான் மார்க்கெட்டில் கிடைத்தது. அரசாங்க
நூலகங்களுக்கு க்ரியா பதிப்பகம் நூல்களைத் தராது. நூலகம்
போகிற வாசகர்களுக்குத் தனது புத்தகம் கிடைக்கவில்லையே
என்று அப்பா ஆதங்கப்பட்டார். அவருடைய புத்தகங்கள்
எல்லாவற்றையும் வெளியிட வேண்டுமென க்ரியா
ராமகிருஷ்ணனுடன் என்னைப் பேசச் சொன்னார். ‘அது
சாத்தியமில்லை’ என்று ராமகிருஷ்ணன் மறுத்துவிட்டார்.
‘க்ரியா’ பதிப்பகத்தின் மீது சு.ரா.வுக்குப் பல
விமர்சனங்களுமிருந்தன. க்ரியாவை விட்டு வெளியே வந்து
தனது புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டார். மதுரை
சிவராமனின் உறவினர் விஜயகுமார் வர்ஷா பதிப்பகம்
துவங்கி சு.ரா.வின் புத்தகங்களை வெளியிட முயன்றார். சில
புத்தகங்களை வெளியிட்டதுடன் அப்பதிப்பகம்
செயல்படவில்லை.
இந்தச் சமயத்தில் நாமே புத்தகங்களைப் போட்டால்
என்ன என்று தோன்றியது. பத்திரிக்கை உறுதியாக லாபம்
தராது என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான்
கணக்குப்போட்டுப் பார்த்து எவ்வளவு நஷ்டம் வரும், அதை
எப்படித் தாங்குவது என்று திட்டமிட்டு
நடத்திக்கொண்டிருந்தேன். பதிப்பகத்தை லாபகரமாக நடத்தி,
பத்திரிக்கை நஷ்டத்தை ஈடுகட்டலாம் என்று நினைச்சேன்.
முதலில் ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘107 கவிதைகள்’
புத்தகங்கள் வெளியிட்டோம். அப்புறம் ஜி. நாகராஜன்
படைப்புகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம்.
சி. மோகன் பதிப்பித்து உதவினார். அதுக்கு நல்ல வரவேற்பு
இருந்தது. முதலில் வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு
புத்தகங்கள் போட்டோம். 2000ஆம் ஆண்டில் எட்டுப்
புத்தகங்கள் வெளியாயின. இதுவரை போட்ட ஒரு
புத்தகம்கூட லாபம் வரும் என்று போட்டது இல்லை;
நஷ்டம் வரும் என்று போடாமல் இருந்ததும் இல்லை.
சூழலுக்கேற்ற மாதிரி புத்தகங்களை விற்பனை செளிணிகிறோம்.
ஆனால் கடுமையான உழைப்பின் மூலம் புத்தகங்களை
நேர்த்தியாக வெளியிடுகிறோம். அது வாசகர்களுக்குப்
பிடிச்சிருக்கு.
􀁺 செம்மொழித் திட்டத்தை விமர்சித்துக்
‘காலச்சுவ’டில் எழுதப்பட்ட தலையங்கத்தின்
பின்விளைவுகள் பற்றி உங்களுக்கு முன்னரே
தெரியுமா?
நிச்சயம் தெரிந்துதான் எழுதினோம். எல்லோரும்
தனிப்பட்ட முறையில் பேசும்போது, பிறரிடம்
பகிர்ந்துகொள்ளும் பொதுக்கருத்துகள்தான் அவை. ஆனால்
அதையே எழுத்தில் பதிவு செளிணியும்போது, துணிச்சலான
முயற்சியாகின்றது. இது நம்ம சூழலின் சகிப்பின்மையைக்
காட்டுகிறது. இத்தலையங்கத்தை முகாந்திரமாகக்கொண்டு
நூலகங்களில் ‘காலச்சுவடு’ தடை செளிணியப்பட்டது.
எங்களுக்கு ஆதரவாக மாற்று இதழ்கள் எதுவும் ஒரு வரிகூட
இன்னும் எழுதவில்லை. பண்பாட்டுத் தளத்திலிருந்து
அரசியலுக்குச் சென்றிருப்பவர்களுடன் நல்லுறவைப் பேμம்
சபலம் பலரையும் வாட்டிக்கொண்டிருக்கிறது.
􀁺 ‘காலச்சுவடு’ தமிழில் ஏற்படுத்திய முக்கியமான
பாதிப்புகள் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?
இன்று தமிழில் தீவிர வாசகர் வட்டம்
விரிவடைந்துள்ளது. மாற்றுப் பதிப்பகம், முக்கியமான
புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
சிறுபத்திரிகைச் சூழல் வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய
சூழல் உருவாக்கத்திற்குக் ‘காலச்சுவடு’ ஒரு காரணம்.
பல்வேறு மாற்றுக் கருத்துகளைப் பதிவுசெளிணிது கருத்துரிமை
சார்ந்த புதிய போக்கினை அறிமுகப்படுத்தியுள்ளதும்
முக்கியமானது என்று கருதுகிறேன்.

Nesamudan R Venkatesh – Image, Ego, Stars, Saleability, marketing

July 17, 2009 Visitor Blogs 1 comment

சமீப காலமாக மீண்டும் மீண்டும் இந்த இமேஜ் என்ற விஷயத்துக்குள் நாம் எப்படி போய் மாட்டிக்கொண்டு விழிக்கிறோம் என்பதை கண்கூடாகப் பார்த்து வருகிறேன்.

ஒரு கட்டத்தில் இயல்பை விட, இமேஜ் பெரிய சைஸில் முன்னே நிற்க, அதற்குப் பயப்படவே தொடங்கிவிடுகிறோம்.

இன்றைக்கு ஜூனியர் விகடன் படித்துக்கொண்டு இருந்தபோது, மீண்டும் அதே இமேஜ் விஷயம்தான் என் கவனத்தை ஈர்த்தது. சிவாஜி த லாஸ் என்றொரு கட்டுரை வந்திருக்கிறது.

இத்தனை ஆண்டுகளாக, தேவையில்லாமல், ரஜினியை ஆகா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி, அவரை உச்சாணிக்கொம்புக்குக் கொண்டு போய் வைத்துவிட்டனர் ரசிகர்களும் பத்திரிகைகளும். விளைவு, இன்றைக்கு அவர் எது செய்தாலும் அது விற்பனையாகியாகி ஆகவேண்டும், வெற்றி அடைந்து ஆக வேண்டும். அப்படி வெற்றி அடையவில்லை என்றாலும் அதை வாயைத் திறந்து சொல்ல முடியாது.

சிவாஜி திரைப்படத்தை அது வெளியான முதல்நாளே பார்த்தேன். எனக்குத் தெரிந்த இரண்டு விநியோகஸ்தர்கள் அதை வாங்கி இருந்தனர். அது நினைத்துப் பார்க்க முடியாத விலைக்கு. படத்தைப் பார்த்தவுடனே, இது ஐம்பது நாள்கள் ஓடினால் அதிகம், நிச்சயம் கையைச் சுட்டுக்கொண்டு விட்டோம் என்று அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

ஆனால், வெளியே சொல்ல முடியாது. பத்திரிகைகளிலும் எழுத முடியாது. என்ன ஒரு இக்கட்டு.

இன்றைக்கு படம், நூறு நாளைக்கு மேல் ஓட்டப்பட்ட பின்பு, ஜூ.வி.யில், இந்தக் கட்டுரை வந்திருக்கிறது. விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்திருக்கிறார்கள் என்று.

இதே நிலைதான், அழகிய தமிழ் மகன் திரைப்படத்துக்கும். நடிகர் விஜயை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ஏற்றிவிட்டு ஏற்றிவிட்டு, அவர் தனக்குப் பின்னே ஒளிவட்டம் சுழலுவதாக நினைத்துக்கொண்டு அலைகிறார். போக்கிரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அ.த.மகனை  கட்டுபடியாகாத விலைக்கு வாங்கியிருக்கிறார்கள்.

இந்தப் படம், 30 நாள்கள் ஓடினால் அதிகம். ஆனால், நூறு நாள்கள் ஓட்டுவார்கள் பாருங்கள். எந்த விநியோகஸ்தரும் வாயை திறக்கமாட்டார். பத்திரிகைகளும் அப்படியே. இரண்டு மாதங்கள் கழித்து இது ஜூ.வி.யி. ஒரு ஸ்டோரி வரும்.

இது நன்றாக இல்லை, சரியாக இல்லை என்று எவரும் வாயைத் திறக்கமாட்டார்கள். ரஜினி, விஜய் ரசிகர்கள் கோபித்துக்கொள்வார்கள்.

மக்களுடைய பொதுபுத்திக்கு மாறாக எதையும் சொல்லிவிடக் கூடாது, எழுதிவிடக் கூடாது என்ற பயம் எல்லாருக்கும் இருக்கிறது. சினிமா, கிரிக்கெட், அரசியல் மூன்றும் தமிழ்ச் சமூகத்தின் பொதுபுத்தியின் மேல்மட்டத்தில் இருக்கிறது. பாப்புலர் கல்ச்சர் என்பது இவர்களை ஒட்டியே தீர்மானமாகிறது. இவர்கள் எல்லாம் டெமிகாட்கள்.  விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்.

சிவாஜி திரைப்படத்துக்கு விகடனில் ஒரு விமர்சனம் வந்தது. ரஜினி தன் பணியைத் திறம்படச் செய்திருந்தார், ஷங்கர்தான் சொதப்பிட்டார், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்று எழுதி இருந்தார்கள்.

இதுதான் நாம் உருவாக்கும் இமேஜைக் கண்டு நாமே பயப்படுவது என்பது.

நேசமுடன்
வெங்கடேஷ்


ஒருவிதமான சங்கிலித் தொடர் விளைவுகள் இங்கே இருக்கு. ஊடகமும் சமூகமும் இங்கே இரண்டறக் கலந்து இருக்கின்றன. இந்தச் சமூகத்துக்குள் யார், எது deciding factors ஆக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. நான் ஊர் ஊராய் போய் பார்த்திருக்கிறேன்.

1. பெண்கள் கதை படிப்பதை நிறுத்திவிட்டு, டிவி தொடர்களுக்குப் போய்விட்டார்கள்.

2. ஆண்கள், பெரும்பாலும் தனியார் துறை வேலைகளில் இருக்கிறார்கள். அவர்கள், மிகவும் கேரியர் ஓரியண்ட்டாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பத்திரிகைகளில் ஈடுபாடே இல்லை.

3. இளைஞர்கள் புத்தகம் படிக்கவோ, பத்திரிகை படிக்கவோ ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு கோல் தெளிவாக இருக்கிறது. படிப்பு, அதை முடித்தவுடன் ஏதேனும் பிபீஓவிலோ ஐடி கம்பெனியிலோ வேலைக்குப் போக வேண்டும். இதில் சிற்றூர் பெரிய ஊர் என்று வித்தியாசம் இல்லை.

4. இதில் சின்ன வயது பெண்களுக்குக் கொஞ்சம் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. ஆனால், முதல் கவனம், படிப்பும் வேலையும்தான். ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு சில விஷயங்களைப் பொதுவாகப் பார்க்கிறார்கள்.

அதாவது கவனம் செலுத்தவில்லை என்றாலும் இவர்கள் காதுகளிலும் கண்களிலும் அதுதான் வந்து விழுந்து கொண்டே இருக்கிறது.  அதுதான் இவர்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்கிறது. அது சினிமா, அரசியல் மற்றும் கிரிக்கெட். இந்த மூன்றும்தான் எந்த வியாபாரத்துக்கு அடிப்படையாக அமைந்துவிட்டன.

கார் விற்க வேண்டுமானால், ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரைக் கூப்பிடு. ஒரு குழந்தைகள் பானம் அறிமுகப்படுத்த வேண்டுமா, ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரரைக் கூப்பிடு. ஒரு பிஸ்கெட்டை பத்திச் சொல்ல வேண்டுமா, ஒரு நடிகரைக் கூப்பிடு. ஏதேனும் கிண்டல் செய்ய வேண்டுமா, ஒரு அரசியல்வாதி கேரக்டரை வைத்துக்கொள்.

நான் தொடர்ந்து ஏஜென்சிகள் தரும் மீடியா பிரீஃப்ங்குகளைப் பார்க்கிறேன். அவர்கள் ஒரு கேரக்டரைக் கட்டமைக்கும்போதே, இந்தப் பொதுபுத்தியின் தன்மைகளை அதிகம் சார்ந்திருக்கிறார்கள்.

இந்தப் பொதுப்புத்தியின் அடிப்படையில்தான் கோடிக்கணக்கான வியாபாரம் நடந்துகொண்டு இருக்கிறது. ஸோ, இந்த அடிப்படையைக் கேள்வி கேட்கவே முடியாது. இதைக் கேள்வி கேட்டால், உங்கள் வியாபாரத்தைத் தொடர முடியாது. வியாபாரம் முக்கியமா, இந்த அடிப்படைகளைக் கேள்வி கேட்பது முக்கியமா என்று கேள்வி எழும்போது, வியாபாரத்தில் இருப்பவர்கள் வியாபாரத்தையே முன்னிறுத்துவார்கள்.

இன்று ஊடகங்களும் அதைத்தான் செய்கின்றன.

வெங்கடேஷ்

Carnatic vocalist Pattammal passes away: Anjali & Memoirs

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

சென்னை, ஜூலை 16:

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் இன்று காலமானார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகிகளில் முக்கியத்துவம் பெற்று போற்றப்படுபவர்களில் இவரும் ஒருவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் கர்நாடக இசையின் முப்பெரும் தேவியராக விளங்கியவர்கள் ஆவர். இவர்களில் பட்டம்மாள் தவிர மற்ற இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான மேடைகளில் இசையை பரப்பிய டி.கே.பட்டம்மாள் மறைவுக்கு, இசைக் கலைஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக இசை மற்றும் திரை இசையில் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

டி.கே.பட்டம்மாள்: வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரத்தில் 1919-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்தார் டி.கே.பட்டம்மாள். அவரது தந்தை தாமல் கிருஷ்ணமூர்த்தி. அலுமேலு என்பது டி.கே.பட்டம்மாளின் இயற்பெயராகும். பட்டா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் சிறு வயதிலேயே தனது தாயார் காந்திமதியம்மாளிடம் இசை பயின்றார்.

கர்நாடக இசைக் கலைஞர் அம்பி தீட்சிதர், டி.எல்.வெங்கட்ராம ஐயர், பி.சாம்ப மூர்த்தி மற்றும் வித்யலா நரசிம்ம நாயுடு ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றார். பாபநாசம் சிவன் மற்றும் கோடேஷ்வர ஐயர் ஆகியோரது இசையில் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 1929-ம் ஆண்டு தனது 10வது வயதில் பட்டம்மாள் முதல்முறையாக சென்னை வானொலியில் பாடினார். பின்னர் 13வது வயதில் முதல்முறையாக ரசிக ரஞ்சன சபாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். கடந்த 1939ம் ஆண்டில் ஈஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த பட்டம்மாளை திரைப்படங்களில் பாட பாபநாசம் சிவன் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு திரைப்படங்களில் பாட அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும், பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களை மட்டுமே அவர் திரைப்படங்களில் பாட முன்வந்தார். பாரதியாரின் பல பாடல்களை அவர் பாடி அவை இன்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணியாற்றிய இவர், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்திய பட்டம்மாள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவரிடம் இசைக் கற்றவர்களில் இவரது இளைய சகோதரர் டி.கே.ஜெயராமனும் ஒருவர்.

கடந்த 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்ம பூஷண் விருது,  1998ம் ஆண்டில் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது இசைப் பணியை கெளரவிக்கும் விதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TV, Media Updates from Tamil Nadu: Magazines, Journals, Periodicals

எனக்குப் பத்திரிகையும் பதிப்பகமும் மீடியாவும்தான் சந்தோஷத்தைத் தருவன. அதுவும் புதிய முயற்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பன. அந்த வகையில்,

1. நேற்று திரிசக்தி என்ற ஆன்மிக இதழும், தேவதை என்ற பெண்கள் இதழும் வெளியாயின. திரிசக்திக்கு, பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர். தயாமலர் தேவதைக்கு ஆசிரியர். இவர் அவள் விகடனின் முன்னாள் ஆசிரியர்.

2. நான் விரும்பிப் படிக்கும் ஆங்கில வணிக இதழான மிண்ட், சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. சென்ற திங்கள் (13.07.2009) முதல் சென்னைப் பதிப்பு வந்திருக்கிறது. பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் சாஃப்ட் லாஞ்ச். மிகவும் உபயோகமாக இருக்கிறது.

3. ஆகஸ்டு மாதத்தில், மாலனை ஆசிரியராகக் கொண்டு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கான ஓர் தமிழ் வார இதழைத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆங்கில இதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் வரவிருக்கின்றன.

4. விகடனின் அடுத்த குழந்தை – டாக்டர் விகடன். எஸ்.நாகராஜகுமார் பொறுப்பாசிரியர். இவர் மறைந்த எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் வளர்ப்பு மகன்.

5. ஆகஸ்டு 23 முதல், சேலத்தில் புகழ்பெற்ற லோக்கல் சேனலான பாலிமர், இப்போது உலகமெங்கும் தெரியும் அளவுக்குத் தன் பரப்பை விரிக்க இருக்கிறது. ஜெயா டிவியில் இருந்த முரளிராமன் மற்றும் அவரது நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர், பாலிமருக்கு வந்துவிட்டனர்.

அணியம் :: வறீதையா கான்ஸ்தந்தின்

வெளியீடு :: தமிழினி 2008.
விலை ரூ.80

ஒரு சமூகம் குறித்தான சிந்தனை, அச்சமூகத்திலிருந்துதான் எழவேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது.

சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப்படும் பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது.

கடலோர சமூகம் காலம் காலமாக பிற சமூகங்களோடு குறைந்தபட்ச உறவுடன் ஒதுங்கி வாழ்ந்த சமூகம். இம்மக்கள் காலத்தின் மாற்றத்தினை அறிந்துகொள்ள முன்வருவதில்லை. அதே சமயம் காலத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் பிற சமுகங்கள் இவர்களோடு உரையாடவும் முன்வருவதில்லை. இதன் காரணமாக புரிதல் என்பது இல்லாததாகிறது. ஆழிப்பேரலை சொல்லவொண்ணாத் துன்பத்தை இம்மக்களிடம் தோற்றுவித்தபோது, ஒட்டுமொத்த சமூகத்தின் அனுதாபமும் ஒரு போரலையாக இவர்கள் மீது பாய்ந்தது. ஆழிப்பேரலை தோற்றுவித்த துன்பத்தைவிட இந்த அனுதாபப் பேரலை தோற்றுவித்த துன்பம் அதிகமானது. ஜெயபதி அடிகளாரின் நோக்கம் இம்மக்களைக் குறித்த புரிதலைத் தோற்றுவிப்பத்துதான். தொடர் கருத்தரங்குகளிலிருந்து குறிப்பிட்ட எல்லைவரை அவர் நோக்கம் நிறைவேறவும் செய்தது. என்றாலும், எல்லா சிக்கல்களுக்கும் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட தீர்வுகளைப் புட்டிகளில் அடைத்து கையோடு எடுத்துவரும் விற்பன்னர்களின் இடையூறும் இருக்கவே செய்தது.

ஆழிப்பேரலை ஒர் இயற்கைப் பேரிடர். மனித சமூகம் இதுபோன்ற பேரிடர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறது. மானுடம் தோற்பதில்லை. ஏதோ ஒருவகையில் அது வென்றுவிடுகிறது. ஒருபோதும் நிலை தடுமாறுவதில்லை. ஆனால் கடலோர சமூகம் நடுக்கம் கொண்டது. இந்த நடுக்கம் ஆழிப்பேரலையினால் தோற்றுவிக்கப்பட்டதில்லை. ஒரு வகையில் இந்நடுக்கம் வெகுகாலம் இச்சமுகத்தில் உறைந்திருந்த ஒன்று. ஆழிப்பேரலை வெளி உலகிற்கு அதனை இனங்காட்டியது. அக்கறையுள்ள மக்கள் இது குறித்து சிந்திக்கவும் துவங்கினர். ஆனால் புரிதலின்மை பெரும் இடையூறாக அமைந்தது. இம்மக்களைக் குறித்து அறிவுரீதியான புரிதலைக் கொண்ட இம்மக்களில் ஒருவருக்கான தேவை எழுந்தது. இங்கு வறீதையா என்ற குரல் மட்டுமே இத்தேவையை நிறைவு செய்யும் சக்தியைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறேன்.

அணியம்’ வறீதையாவின் எட்டாவது நூல். அறிவியல்தான் அவர் இயங்குதளம். அடிப்படையில் அவர் ஒரு விஞ்ஞானி. கட்டுப்பாடுடன் கடல்சார்ந்த வாழ்வு குறித்து ஆய்வுகளை நிகழ்த்தியவர். மொழி சார்ந்த அவர் இயக்கம் காலத்தின் கட்டாயத்தால் எழுந்தது. ஆனால் ‘எழுத்து சமுக எழுச்சியின் அடையாளம்; எதிர்காலம் குறித்த தரிசனத்தின் வெளிப்பாடு’ என்னும் நிலைப்பாட்டிற்கு அவரால் வரமுடிந்துள்ளது. ஒரு விஞ்ஞானி இந்நிலைப்பாட்டிற்கு வருவது என்பது அபூர்வமானது. விஞ்ஞானி என்ற ஒளிவட்டம் அவன் தலையை சூழும்போது அவன் தன் சமுகத்திலிருந்து வெகுதூரம் அகன்றுவிட்டிருப்பான். நுண்கலைகளில் ஆர்வம் கொண்ட விஞ்ஞானிகள் பலரைக் காண முடியும். ஆனால் எழுத்துத் துறையில் தடம்பதிக்க ஆர்வம் கொள்பவர்கள் வெகுசிலரே. வறீதையாவின் இந்நூல் முழுமையும் கடல் சார்ந்த வாழ்வு தொடர்பானது. தன்னைச் சூழ்ந்த வாழ்வு குறித்து, அதன் தற்கால நிலை குறித்து, பதைபதைப்புடன் சிந்தித்த நேர்மையான ஒரு மனதின் வெளிப்பாடு.

ஒவ்வொரு கட்டுரையும் வாசகனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் குடிமக்களுள் ஒரு பிரிவினரை இன்னொரு நாட்டின் கடற்படை தொடர்ந்து வேட்டையாடுகிறது. அவன் தொழில் கருவிகளைப் பிடுங்கிக் கொள்கிறது. அவன் படகுகளை மூழ்கடிக்கிறது. இக்கொடுமையைத் தொடர்ந்து எதிர்கொண்ட ஒரு தலைமுறை இன்று எழுந்துள்ளது. ஆனால், இந்திய அரசிடமிருந்து மட்டுமில்ல, இந்திய மக்களிடமிருந்தும் எவ்விதமான எதிர்வினையும் இல்லை. மிருகங்களைக்கூட இன்று சுட்டுக்கொல்ல முடியாது. ஆனால் இந்த மனிதர்களை மட்டும் வேட்டையாடலாம். இந்தியாவின் ஒரு மாவட்டம் அளவேயான ஒரு நாட்டின் கடற்படை தொடர்ந்து இந்த வேட்டையை நிகழ்த்துகிறது. எல்லை தாண்டி மீன் பிடிப்பதைக் காரணமாகச் சுட்டுகிறது. இந்தியக் கடற்படையும், இந்திய அரசும் இக்காரணத்தைத்தான் சுட்டுகின்றன. இந்தியக் கடல் எல்லைக்குள் இவைகள் நிகழ்ந்ததாக மீனவர்கள் சுட்டினாலும், எவ்விதப் பரிசீலனையுமின்றி எல்லைக்கப்பால் நிகழ்ந்ததாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

கடல் முழுமையிலும் மீன்கள் நிறைந்திருப்பதில்லை. மீன்கள் விளையும் வயல்கள் கடலில் ஆங்காங்கே உண்டு. அந்த வயல்களில் சென்றுதான் அறுவடையை நிகழ்த்தியாக வேண்டும். கச்சத்தீவு தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கொண்ட மீன்வயல், அதை தமிழர்களின் பாரம்பரிய எதிரிகளுக்கு தாரை வார்த்த இந்திய அரசு, கச்சைத்தீவின் மீதான தமிழ் மீனவர்களின் பாரம்பரிய உரிமை கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட பின்பும் உண்டு என்றுதான் கூறியது. (சிங்களர்களின் அரச வரலாற்றைக் கூறும் மகாவம்சம் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான பகையை மட்டுமே கூறுகின்றது.) அவசர நிலைக் காலத்தின்போது அதிகாரிகளின் அளவில் தமிழ் மீனவர்களின் தொழில் செய்யும் உரிமை சிங்களர்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது என்ற செய்தியும் உண்டு.

சிங்களக் கடற்படை இந்திய கடற்படையால் பயிற்றுவிக்கப்படுவது, ஒரு வகையில் இருதரப்பாரும் வகுப்புத் தோழர்கள். நண்பர்கள். ஆனால், தமிழ் மீனவர்கள் இந்த நண்பர்கள் வட்டத்திற்குள் வருவதில்லை. நடுக்கடலில் மீனவர்களை எதிர்கொள்ளும் இந்திய கடற்படையின் விசாரணை மொழி கன்னத்தில் அறைவதுதான் என்கிறார்கள் மீனவர்கள். மொழி தெரியாமை இதன் காரணமாகலாம். தமிழ் மொழி தெரிந்த கடற்படை வீரர் ஒருவரைக் குழுவில் இணைப்பதின் மூலம் தகவல் தொடர்பில் நிகழும் குளறுபடிகளைத் தவிர்த்துவிட முடியும். எல்லாவற்றிற்கும் உள்நோக்கங்கள் கற்பிக்க வேண்டியதில்லை. குளறுபடிகளைத் தவிர்ப்பதற்கான அக்கரை அரசியல் தலைமையிடம் இல்லை. மக்களாட்சியில் சாதாரண குடிமகன் அரசியல் தலைமையிடம்தான் முறையிட முடியும். ஒவ்வொரு மீனவன் கொல்லப்படும்போது சடங்குகளை மட்டும் நிகழ்த்திவிட்டு ஒதுங்கிவிடும் அரசியல் தலைமை. எதிர்கட்சிகள் கூட இதில் அக்கரை கொள்வதில்லை என்பதே பெரும் சோகம்.

‘தொடரும் துயரம்’ கட்டுரையில் தகுந்த சான்றுகளோடு இச்சிக்கலை முன்வைத்து தன் சிந்தனையை விரித்துள்ளார் வறீதையா. ‘அலையையும் காற்றையும் அன்றாட எதிர்கொள்ளும் தொழில் முறையினால் துணிச்சலும் முரட்டுத்தனமும் அவனுக்குள் இயல்பாகவே ஊறிக் கிடக்கிறது. மரணத்தின் தாலாட்டு அவன் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அடுத்த நாள் உணவிற்கு உத்தரவாதம் இல்லாத நிச்சயமற்ற வாழ்க்கை முறைக்கு பழகிப்போனவன் அவன். அதனால், எவ்வித ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தலுக்கும் அடங்கிப்போகும் தன்மை அவனிடம் இராது.’ கடல் சார்ந்த மக்களைக் குறித்த இப்புரிதலை அச்சமுகத்தில் வாழும் ஒருவரால்தான் பெற முடியும் மனிதன் என்ற உயிரினத்தின் தனித்தன்மை – ஒருபோதும் அது ஒடுக்குதல்களை ஏற்பதில்லை என்பதுவே. விடுதலை அதன் உயிர்மூச்சு. சுதந்திரத்திற்கான அதன் போரட்டத்தை அது துவக்கும் போது உலகின் எந்த சக்தியும் அதை அடக்கியதாக வரலாறு இல்லை. தமிழ் மீனவன் தொடர்ந்து தன் உயிரை அந்நிய நாட்டின் துப்பாக்கி குண்டிற்கு இரையாக தரப்போவதில்லை. வன்முறையை அது தன் ஆயுதமாகக் கொள்ளும் போது கடல்சார்ந்த சமுகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமுகமும் அலறும். வறீதையா தொலை தூரப்பார்வையில் எதார்த்தத்தை உணர்கிறார். அறிவார்ந்த மொழியில் தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறார்.

கடலோர சமுகத்தின் வாழ்வியல் சிக்கலை பிற சமுகங்கள் ஏறெடுத்துப்பார்க்க தயங்குகின்றன. தங்களுக்கு தொடர்பில்லாதவை என்ற உணர்வு இருக்கத்தான் செய்கிறது. நடுக்கடலில் அந்நிய நாட்டின் கடற்படை துப்பாக்கி குண்டுகளுக்கு ஒரு மீனவன் பலியாகும்போது, மேலோட்டமான அனுதாபத்தைக் கூட தமிழ் சமுகம் திறந்த மனதோடு முன் வைப்பதில்லை. ஆழிப்பேரலை நிகழ்த்திய அழிவின் போது கடலலையில் சிக்கி மாண்ட மீனவர்களின் பிணங்கள் ‘புள்டோசரால்’ ஒட்டுமொத்தமாக குவித்து தள்ளப்பட்டு மூடப்பட்டன. தமிழ் சமுகம் இறந்தவர்களுக்கு செய்யும் இறுதிக்கடனை பல இடங்களில் அப்போது மறந்திருந்தது. இறந்த மனிதனின் பிணத்தை புதைக்க மனித கரங்கள் இல்லாதிருந்தது. அப்போது இரண்டாயிரம் வருடப் பாரம்பரியம் கொண்ட தமிழ் நாகரிகமும் ‘புள்டோசரால்’ புதைக்கப்பட்டது. கடல் சார்ந்த சமுகத்தை தமிழ் சமுகத்தின் ஒரு பாகமாக நாம் உணர்ந்திருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் நிகழ்ந்திருக்க முடியாது. இதைவிட பெரும் சோகம் இதற்கு எதிராக அச்சமுகத்திடம் மொழி இல்லை. அவ்வப்போது அது வெளிப்படுத்தும் வன்முறை முகம் அதன் இயலாமையின் வெளிப்பாடு. இந்த இயலாமை, அதன் பலவீனம் இவற்றைத் தொடர்ந்து அதிகார வர்க்கம் பயன்படுத்திக்கொள்கிறது.

கடற்கறை யாருக்கு சொந்தமானது? நிச்சயமாக அது கடலோர மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிற சமூகம் அது. மாற்றுத் தொழில்களில் அதற்கு பழக்கமும் இல்லை, நாட்டமும் இல்லை. அவர்கள் வாழ்விற்குப் பாதுகாப்பளிப்பது சமுகத்தின் கடமை. வாழ்க்கை அதற்கான ஒழுங்குகளைக் கொண்டுள்ளது. இவ்வொழுங்குகள் அனைத்தும் மனிதன் காலம் காலமாகப் பெற்ற அனுபவங்களிலிருந்து முகிழ்ந்தவை. இவ்வொழுங்குகளைச் சிதைக்கும்போது வாழ்வும் சிதைந்துவிடுகிறது.

விடுதலைக்குபின் உணவு பற்றாக்குறையை இந்தியா எதிர்கொண்டது. விவசாயத்தையே முதன்மைத் தொழிலாகக் கொண்ட நாடு தன் உணவுத் தேவைக்கு வேற்று நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை. உணவு உற்பத்தியைப் பெருக்குவது என்ற அரசியல் நிலைபாடு எடுக்கப்பட்டது. அரசியல் தலைமையால் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுக்க முடிவும். அதைச் செயல்படுத்த வேண்டியது அதிகார வர்க்கத்தின் கடமை. பசுமைப்புரட்சி என்ற திட்டம் உருக்கொண்டது. அதற்கு வடிவம் கொடுத்த அதிகாரி பன்முகம் கொண்ட விவசாயத்தின் தனித்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கூடவே உணவுப்பழக்கம் இந்திய சமுகம் முழுமையிலும் ஒருபோல் அமையவில்லை என்ற உண்மையையும் எதிர்கொள்ளவில்லை. பார்ப்பண உணவுப்பழக்கம் மட்டுமே அவனுக்குத் தெரிந்த ஒன்று. பார்ப்பண வாழ்வு உடல் உழைப்பை அறியாதது. காலம் காலமாகப் பிறரை சுரண்டிச் செழித்த ஒன்று. தென்னாட்டில் அரிசி உணவை மட்டுமே அது அறிந்திருந்தது. உணவில் ருசி அதற்கு முதன்மையானது. தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் அரிசி ஒருபோதும் முதன்மையான உணவாக அமைந்ததில்லை. கடும் உடல் உழைப்பிற்குத் தேவையான உணவுப்பழக்கத்தை அது கொண்டிருந்தது. அரிசி அதில் இடம் பெறவே இல்லை. விழாக்காலத் தேவைகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டது. அன்று பார்ப்பனச்சமுகம் உழைப்பதில்லை. தனக்குத் தேவையான தானியங்களை அச்சமுகம் உற்பத்தி செய்து கொண்டது. விடுதலையைத் தொடர்ந்த காலக்கட்டங்களைக் களமாகக் கொண்ட தமிழ் நாவல்களிலிருந்து இவ்வுண்மைகளை உணர்ந்து கொள்ள இயலும். இதையெல்லாம் புறக்கணித்த ஓர் அதிகாரியால் பசுமைப்புரட்சி என்ற நச்சு விதை தூவப்பட்டது.

காலம்காலமாக இம்மண்ணின் தன்மைக்கேற்ப, பருவ நிலையின் இயல்பிற்கேற்ப வளர்தெடுக்கப்பட்ட விவசாயமுறை நசுக்கப்பட்டது. குறைந்த அளவு நிலத்திலிருந்து கூடுதல் உணவு உற்பத்தி என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டு மண் நஞ்சாக்கப்பட்டது. மண் தாய் என்றால் (அப்படித்தான் நாகரிகம் கூறுகிறது) அவள் மடியை அறுத்து, உதிரத்தைப் பாலாகக் குடித்த பெருமை இவ்வதிகாரிக்கு உண்டு. உற்பத்தி பெருகினாலும் பயிரிட்ட விவசாயி கூடுதல் ஆதாயத்தைப் பெறமுடியாது என்ற உண்மையையும் அவன் அறிந்திருந்தான். விவசாயி தியாகியாக்கப்பட்டான். இப்போதும் தன்னை மாய்த்துக்கொண்டு அந்த அதிகாரி ஏற்றிவைத்த யாகத்தீயை அணையாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்.

நியாவிலைக்கடையில் அரிசி வழங்கப்பட்ட போது தானிய உற்பத்தியை மறந்து முன் வரிசையில் நிற்கத் துவங்கினான். ஒரு நேரம் கோதுமை உணவு என அவன் பார்த்தறியாத தானியமும் அவன் மேல் கொட்டப்பட்டது. அரிசியும் கோதுமையும் நன்செய் நிலத்தில் விளைவன. நன்செய் விவசாயம் மட்டுமே இவ்வதிகாரியால் விவசாயமாகக் கருதப்பட்டது. இந்தியா உணவுத் தேவையை நிறைவு செய்தது. ஆனால், தன் குடிமக்களை நோயாளியாக்கியது. மக்களின் விழிப்புணர்வற்ற நிலை ஒட்டுமொத்த அழிவிற்கு வேகமாக இட்டுச்சென்றது. எஸ்.என்.நாகராஜன் போன்றோர் உரத்தக்குரலில் இதற்கு எதிராகக் கூவிக்கொண்டிருந்தனர். ஆனால் அதிகாரவர்க்கம் தன் செவியை மூடிக்கொண்டது. பாரம்பரியமான நம் கால்நடைகளை நாம் இழந்ததிலும் பசுமைப்புரட்சிக்கு பங்குண்டு. மனிதன், வேளாண்மை, கால்நடை என்ற தொடர்புச் சங்கிலி எம்.எஸ்.சாமிநாதனால் அறுக்கப்பட்டது.

இப்போது கடலோர வாழ்விற்கு வருவோம். இந்தியா விவசாயத்தைப் பின்தள்ளிவிட்டு தொழிற்துறையில் முன்னே செல்ல அரசியல் கொள்கை வகுக்கப்பட்டுவிட்டது. தொழில் வளர மூலப்பொருட்கள் வேண்டும். இந்திய துணைக் கண்டத்திலுள்ள கனிமங்கள் அனைத்தையும் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தாக வேண்டும். அதிகார வர்க்கம்தான் இதற்குத் திட்டங்கள் வகுத்து நிறைவேற்ற வேண்டும். கடற்கரையிலுள்ள, கடலிலுள்ள கனிமங்களையும் விட்டு வைக்க முடியாது. வெள்ளைத்தோல் கொண்டவர்களுக்கு உடலின்பம் அளிக்கும் சுற்றுலாத்துறையும் ஒரு தொழில்தான். அதற்கும் கடற்கரை வேண்டும். தாயின் மடியை அறுத்து உதிரத்தைப் பாலாகக் குடித்தவர்களின் பெயர்கள்தான் இங்கும் ஒலிக்கின்றன.

கடற்கரை மேலாண்மை மண்டல வரைவு அறிவிக்கை சாமிநாதன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. மேலாண்மை என்ற சொல் கவனத்தில் கொள்ள வேண்டியது. இதன் வேறொரு பொருள் ‘உன்னைவிட நான் மேலானவன், கீழடங்கு அல்லது சத்துமடி’ என்பதுதான். இந்த அறிவிக்கை எந்த அளவிற்குக் கடலோர மக்களின் வாழ்வைப் பொருட்படுத்தியுள்ளது என்ற கேள்வியை ‘கடற்கரை வெளியேற்று மண்டலம்’ கட்டுரையில் வறீதையா எழுப்பியுள்ளார். எஸ்.என். நாகராஜனைப்போல் வறீதையாவும் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி, என்றாலும் மானுடப்பண்பை இழந்துவிடாத விஞ்ஞானி. விரிவாகவே இதுப்பற்றி பேசுகிறார். விவசாயிகளின் மரணத்தில் விவசாய உற்பத்திப் பெருக்கம்! இதற்கு இணையானதுதான் கடலோர மக்களின் வாழ்வை புறக்கணித்துவிட்டு கனிமங்களை சுரண்டுவது. ஒன்றின் விளைவை நாம் அனுபவித்துவிட்டோம். மற்றொன்றின் விளைவு நிகழாதிருக்க நம்முடைய பங்கு என்ன? நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளாகக் கேட்க வேண்டிய கேள்வி இது. வறீதையாவைப்போல் பலகுரல்கள் அன்று ஒலிக்கத்துவங்கியிருந்தால் விவசாயிகளின் இன்றைய தற்கொலைகள் நிகழ்ந்திருக்காது. பல வறீதையாக்கள் கடலோர சமுகத்திலிருந்து மேலெழும்ப வேண்டும்.

தென்மாவட்டக் கடலோரங்கள் இன்று கனிமங்களுக்காகச் சுரண்டப்படுகின்றன. இச்சுரண்டலை விரிவாகவே விமர்சிக்கிறார் வறீதையா. காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைய வறட்சி. இக்காடுகளை அழித்தது காடுகளையே சார்ந்து வாழ்ந்த பழங்குடி மக்களல்ல; அவர்களால் காடுகளை அழிக்கவும் முடியாது. காடு அவர்களுக்குத் தாயின் முலையைப்போல். தேவையான அளவு பாலை அது தன் குழந்தைகளுக்குக் கொடுத்தது. தோட்டத் தொழில் ஊக்குவிக்கப்பட்டபின்தான் காடுகள் அழிந்தன. தேயிலைக்கு ஏற்றுமதி வாய்ப்பு இருந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டபோது காடுகளுக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத சமவெளி மனிதர்கள் காட்டை சூறையாடினர். இப்போது தேயிலைக்குச் சந்தை வாய்ப்பு இல்லை. தேயிலைத் தோட்டங்கள் கைவிடப்படுகின்றன. வறட்சி மட்டுமே நமக்கு மிஞ்சுகிறது.

கடல் கடலோர சமுகத்தின் தாய். குழந்தைக்குத் தாயிடமிருந்து பாலைக் குடிக்கத் தெரியும். முலையை அறுத்து பாலைக்குடிக்கும் பேதமை அதற்கு இருக்காது. காட்டைவிட கடற்கரையின் இயற்கை நுட்பமானது. காலம் காலமாகக் குவிக்கப்பட்ட மணல்மேடுகளே கடலை தடுத்து நிற்கும் அரண். இம்மணல் மேடுகளில் நிறைந்திருக்கும் கனிமங்கள் தொழில் பெருக்கத்திற்குத் தேவையானவை எனில் காடுகளை அழித்தது போல் கடற்கரையை அழித்து எதிர்காலம் நாம் பெறப்போவது என்ன?

நம் அதிகாரவர்க்கம் உண்மைகளை மட்டும் ஒருபோதும் கூறாது. சில்லறைச் சுரண்டல்காரர்களை ஓரங்கட்டிவிட்டு பெரியசுரண்டல்காரனான டாடா நிறுவனம் கால்பதிக்கப்போகிறது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை. ஆனால் இதை உரிமையாகக் கொள்ளக்கூடாது என்கிறது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் நிறுவனங்கள்கூட நிலம் கொடுத்த அனைவருக்கும் வேலைவாய்ப்புகளைத் தரவில்லை. விவசாயத்திற்கு மேல்மண் மட்டுமே பயன்படக்கூடியது. மேல்மண் நீக்கப்படும்போது நிலம் விவசாயத்திற்குப் பயன்படுத்தாத பாலையாகும். மீண்டும் மண்ணை வளப்படுத்த வேண்டுமென்றால் டாடா வெட்டி எடுத்த கனிமங்களைவிட செலவு கூடுதலாகும். டாடா தொழிற்சாலைகள் உள்ள இடங்களிலெல்லாம் மயிலிறகால் பெண்களின் இடுப்பை வருடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற ‘உண்மையை’ டாடாவும் கூறுகிறார். அரசியல்வாதிகளும் கூறிக்கொண்டிருக்கின்றனர். விஞ்ஞானியின் மொழியில் வறீதையா இச்சிக்கலை மேலான ஒரு தளத்தில் எதிர்கொள்ளுகிறார். ‘சர்வாதிகாரத்தின் கொம்பு முளைக்கும்’ ஒவ்வொரு முறையும் ஜனநாயகம் அதைத் தறித்துவிடும். வறீதையாவின் குரல் இளம் தலைமுறையின் குரல். நம்பிக்கையை அது இழந்துவிடவில்லை. இழக்கப்போவதும் இல்லை என்பதை நூல் முழுமையிலிருந்தும் உணரமுடிகிறது.

கடலோர வாழ்வின் மற்றொரு சிக்கலான வறீதையா இனங்காண்பது – கத்தோலிக்க சமயம். ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைந்த கருத்தரங்குகளில் மிக விரிவாகப் பேசப்பட்ட விஷயங்களுள் ஒன்று இது. சீர்திருத்த கிறிஸ்தவம் நாடார் இனக்குழு மக்களின் கல்வி உயர்வுக்கும் பொருளாதார உயர்வுக்கும் காரணமாக அமையும்போது, கத்தோலிக்க சமயம் கடலோர மக்களின் கல்வியின் மீது கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கரத்தரங்குகளில் கலந்துகொண்ட கடலோர மக்கள் தங்கள் கோபங்களை அழுத்தமாக வெளியிட்டனர். ஆனால் கோபத்திற்கு பின்னால் இருந்தாக வேண்டிய சிந்தனை அவர்களிடம் முற்றிலுமாக இல்லை என்றே இப்போது கூறத் தோன்றுகிறது. சிந்தனையின் அடிப்படையில் பிறக்கும் கோபம் மட்டுமே வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வறீதையா சமயத்தை எதிர்கொள்ளும் கோணம் தனித்துவமானது. “நான் சார்ந்திருக்கும் கத்தோலிக்க கிறிஸ்தவம் வாழ்க்கையை விமர்சனப் பார்வையுடன் அணுகவும், அறிவைக் கேள்விக்கு உட்படுத்தவும் என்னை பயிற்றுவித்தது” என வெளிப்படையாகவே சமயத்துடனான தன் உறவை நினைவுகூர்கின்றார். சமயத்தை வாழ்வின் எதிரிடையான ஒன்றாக, உதறித்தள்ள வேண்டிய ஒன்றாக ஒருபோதும் அவர் கருதவில்லை. ஆனால் கடலோர மக்களின் இன்றைய வாழ்வில் சமயத்தின் நிலை குறித்த ஆழமான கவலை அவரிடமிருந்து எழுகிறது. அவர் கையாளும் ‘இறந்த நாய்க்குட்டியைச் சுமந்து திரியும் குரங்கின்’ படிமம் சக்தி வாய்ந்தது. வறீதையா இப்படிமம் ஒன்றின் மூலமாகவே தாம் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகிறார்.

குமரிமண்ணில் குறிப்பாகக் கடலோர மக்களிடம் கத்தோலிக்க கிறிஸ்தவம் வந்து சேர்ந்தது ஓர் அரசியல் விபத்தின் காரணமாகத்தான். முத்துக்குளிக்கரையைச் சார்ந்த மீனவர்கள் இஸ்லாமியர்களின் நெருக்குதலிலிருந்து தங்களை காத்துக்கொள்ள கொச்சியிலிருந்து போர்த்துக்கீசியர்களின் துணையை நாடினர். கடலோர மக்களுக்கு சேவியர் ஆற்றிய பணி மகத்தானது. ஒரு தந்தையைப்போல் இம்மக்களைப் பாதுகாத்தார். ஒரு நெருக்கடியான அரசியல் சூழலில் சேவியர் இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு உதவிய காரணத்தால், குமரிக்கடற்கரை மீனவர்களையும் தன் சமயத்தில் இணைத்துக்கொள்ளும் அனுமதியையும் பெற்றுக்கொண்டார். ஓரிரு நாட்களில் பணி முடிந்துவிட்டது. அக்காலத்தில் ‘முழுமையான விசுவாசமே’ சபையின் இலக்காகக் கருதப்பட்டது. என் பள்ளிப் பருவ நாட்களில் ‘விசுவாசம் கெட்ட தொம்மை’ என்பது வசைச் சொல்லாகவே வழங்கப்பட்டது. சமயப்பணியாளர்கள் இம்மக்களின் விசுவாசத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்டதில்லை. எப்போதும் சந்தேகக் கண்ணுடனேயே இவர்களை எதிர்கொண்டனர். வெளி உலகுடனான தொடர்பு தங்கள் மூலமாகவே நிகழவேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர். கடலோர மீனவன் வெளி உலகுடனான தொடர்பை என்றோ இழந்துவிட்டிருக்கிறான். அவனுக்கென்று பிரதிநிதித்துவ அரசியல்கூட இன்றில்லை. காலத்தின் மாற்றத்தைக் கத்தோலிக்க சமயம் உணர மறந்துவிட்டபோது மீனவன் காலத்தையும் இழக்கும்படியாயிற்று. இன்று கடலோர வாழ்வின் வேதனைகள் அனைத்தும் இதன் வெளிப்பாடுதான்.

சீர்திருத்த கிறிஸ்தவம் இங்குவந்த சூழல் வேறு. கிறிஸ்தவ அறிவைப் பெற்று கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுதல் என்பதே அன்று இலக்காக அமைந்தது. கிறிஸ்துவை அறிந்துகொள்ளுவதற்கு வேதநூலைக் கற்றாக வேண்டும். இதற்கு மொழி அறிவு கட்டாயமானது. புதிய காலச் சூழலில் ஒரு கிறிஸ்தவனுக்கு மறுஉலக வாழ்வு மட்டுமல்ல, இவ்வுலக வாழ்வும் உண்டு. கிறிஸ்தவனாக அவனை வாழச்செய்வதும் சமயத்தின் பணியே. கோவில்கள் கட்டப்படும்போது அதன் ஒரு பகுதியாகக் கல்வி நிலையங்களும் கட்டப்பட்டன. சமுக விடுதலைக்கான போராட்டத்தில் சமயப் பணியாளர்கள் முன்னின்று போராடினர். வளர்ச்சியின் ஒரு காலக்கட்டத்தில் உலகியல் வாழ்வை அவர்கள் பொறுப்பிற்கே விட்டுவிட்டு ஆன்மீக வாழ்வை மட்டுமே சமயப்பணியாளர்கள் தங்கள் கடமையாகக் கொண்டனர். இது வரலாற்றடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. கத்தோலிக்கக் கிறிஸ்தவமும், சீர்த்திருத்தக் கிறிஸ்தவமும் ஒரே காலகட்டத்தில் இம்மண்ணில் கால் ஊன்றவில்லை. முழுமையான விசுவாசமும், அறிவின் அடிப்படையில் அமைந்த விசுவாசமும் வேறானவை. வெவ்வேறு திசைகளில் இயங்குவன.

என் பள்ளிப்பருவ நாட்கள் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளியில் கழிந்தன. வயது முதிர்ந்த ஆசிரியர் ஒருவர் அன்போடு என்னை அணைத்துக்கொண்டு செல்வார்: “வேதநூலை நீ படிக்கக் கூடாது. தவறாகப் புரிந்து கொள்வாய். குருவானவர் படித்து சொல்லக் கேட்க வேண்டும்” கடலோர வாழ்வின் பெரும் துன்பங்களுக்கு முதன்மையான காரணம் குருவானவர் சொல்லச் சொல்ல கேட்பதுதான். வானுயர்ந்த கோபுரங்களைக் கொண்ட கோவில்கள் உண்டு – ஒவ்வொரு சிறு கிராமத்திலும். ஆனால் பள்ளிக்கூடங்கள் தேவையானவை; குழந்தைகள் படித்தாக வேண்டும் என குருவானவர் சொல்லி மக்கள் கேட்கவேயில்லை. கடலோர மக்களின் வறுமை சொர்க்கத்திற்கான வாயில்.

கத்தோலிக்க சமயம் பல நூற்றாண்டுகள் இறுகிப்போன அமைப்பினை கொண்டது. மாறுதல்கள் மிக மிக மெதுவாகத்தான் அதில் தோன்றக்கூடும். ஆனால் மாறுதல்களை எந்த அளவிற்கு வேகமாக சமுகம் ஏற்கின்றதோ அந்த அளவிற்கு அச்சமுகம் முன்னேறும். ஓர் இந்து இயக்கத்தைச் சார்ந்த நண்பர் ஒருவர் சொன்ன இக்கதையை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். குமரிக் கடற்கரையில், ஓர் இந்து இயக்கத்தை இந்தியா முழுமையிலும் கட்டி எழுப்பிய அதன் தலைவர் கடலுக்கு நடுவே இருந்த ஒரு பாறைக்குச் செல்ல ஆசைகொண்டு ஒரு மீனவனை உதவிக்கு அழைத்தார். மீனவன் அவ்வூர்ப்பாதிரியாரின் அனுமதியைக் கேட்டான். பாதிரியார் விசாரித்துவிட்டு ‘கூடாது’ என்றார். அந்த இயக்கத் தலைவர் கடல் நீரைவாரி இறைத்து சபதம் பூண்டார். குமரிமண்ணில் நிகழ்ந்த பெரும் சமயக்கலவரத்தின் ஆணிவேர் இது. ஆழிப்பேரலையின் கொடுமைக்கு நிகரான அழிவை அது கடலோரத்தில் அன்று நிகழ்த்தியது.

கத்தோலிக்க சமயம் காலத்தின் மாறுதலை அப்பணியாளருக்கு உணர்த்தவில்லை. சிலுவைப்போர்க் காலகட்டத்திலிருந்து அப்பணியாளர் அப்போது வெளியேறி இருக்கவில்லை.

இதில் வறீதையாவின் பார்வை ஆரோக்கியமானது. அவர் பணி சமயத்தை விமர்சிப்பதல்ல. ஆனால் ‘பணியாளர்’, ‘விசுவாசி’ என்னு இரட்டைநிலை ஒழிந்தாக வேண்டும். உலகியல் வாழ்வில் ‘விசுவாசி’ என்றொருவன் இல்லை. சமுக மனிதன் மட்டுமே இருக்கிறான். வாழ்வின் நிலைநிற்பிற்காக அவன் போராடியாக வேண்டும். தலைமை தாங்க அவர் தலைவர்களை தோற்றுவித்தாக வேண்டும். ஆன்மீக வாழ்வைச் செம்மைப்படுத்தும் பொறுப்பை பணியாளர் மட்டுமே வகிக்க முடியும்.

கடலின் இயற்கை மிக நுட்பமானது. மனிதக் குறுக்கீடுகளை அது ஒருபோதும் ஏற்பதில்லை. என் கல்லூரி நாட்களில் கன்னியாகுமரி ஒரு சிறு கிராமம்தான் குமரி பகவதி அம்மன் கோவிலும், மலையளவு உயர்ந்த மணல் தேரியும்தான் அன்றைய கன்னியாகுமாரியின் அடையாளங்கள். கடலின் நடுவிலிருந்து ஒரு பாறையின் மீது மனிதன் காலூன்ற மேற்கொண்ட முயற்சியின் துவக்கமே இன்றைய சீரழிவின் தொடக்கம். கட்டுமானப் பொருட்கள் கொண்டுசெல்ல சில மீட்டர் அளவிலான படகணையும் துறை கட்டப்பட்டபோது, காலம் காலமாக இருந்துவந்த மணல்தேரி காணாமலானது. குழந்தைகளின் காலடிகளை முத்தமிட கரையை மெதுவாக மோதிக்கொண்டிருந்த கடலலைகள் சீற்றம் கொண்டு கரையைத் தாக்கின. கடற்கரையில் கற்பாறைகள் அடுக்கப்பட்டு, குழந்தைகளின் கால்களுக்கும் கடலைக்குமான உறவு நிரந்திரமாகத் தடுக்கப்பட்டது. கடல் நீரோட்டம் தடைபட்டதே இதன் காரணம். கடல் நீரோட்டம் கடலின் உயிர்மூச்சு. கடல்சார்ந்து வாழும் மீன்கள் மனிதர்கள் என அனைத்து உயிரினங்களுக்கும் உயிர்மூச்சு கடல் நீரோட்டம்தான். கடலோர சமுகம் காலம் காலமாக கடலோடு இணைந்து வாழ்ந்த சமுகம். வாழ்வனுபவங்களிலிருந்து கடல்சார்ந்த அறிவை சேகரித்து அது சேமித்து வைத்துள்ளது. கடற்கரையில் புதிய திட்டங்களுக்கு இடமேயில்லை என்பதல்ல. திட்டங்களை முடிவு செய்யும்போது கடலோர சமுகத்தின் கடல்சார்ந்த அறிவும் கணக்கிலெடுக்கப்பட வேண்டும் என்பதுதான்.

கடற்பாசி குறித்த வறீதையாவின் பார்வையை இங்குக் குறிப்பிட வேண்டும். கடற்பாசி வளர்க்கும் தொழில் அரசின் மானிய உதவியுடன் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மீனவர்கள் வளர்க்கும் பாசியை அந்நிய நாட்டு நிறுவனமான பெப்ஸிகோ வாங்கிக் கொள்ளும். இதுபோலவே கொக்கோ பயிரிட விவசாயிகள் தூண்டப்பட்டனர். மலையோர கிராமங்கள் கொக்கோ தோட்டங்களாக மாற்றவும் பட்டன. ஆனால் வாங்கிக்கொள்வதாக வாக்குறுதி தந்த அந்நிய நிறுவனங்கள் கைவிரித்தபோது, கொக்கோ விவசாயிகள் அரசாலும் கைவிடப்பட்டனர். காலணி ஆட்சியின்போது நீல அவுரியைப் பயிரிடத்தூண்டி, பின் வெள்ளைத்தோல் மனிதர்கள் வாங்க மறுத்தபோதுதான் இந்திய விடுதலைப்போரே வேர் கொண்டது. கடந்தகால வாழ்வனுபவங்களே மனிதனை வழி நடத்துகின்றன.

மீன்துறை அமைச்சரரான லூர்தம்மாள் சைமனால் நன்னீர் மீன்வளத்தைப் பெருக்கும் பொருட்டு திலேப்பியா மீன் தமிழ்நாட்டு நீர்நிலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாயில் வைத்து தன் குஞ்சுகளை பாதுகாக்கும் திலேப்பியா, பிற மீன்களின் குஞ்சுகளை முற்றிலுமாக அழித்துவிடும். அதன் இயற்கை சூழலில் பிற மீன்கள் அதனோடு இணைந்து வாழும் சக்தியைப்பெற்றிருந்தன. புதிய சூழலில் திலோப்பியா பிற மீன்களை வாழ அனுமதிக்கவில்லை. இன்று நன்னீர் மீன்வளர்ப்பில் திலேப்பியா ஒரு களை. கடற்பாசி இனமான ‘கப்பாஃபைகஸ்’ நம் நாட்டு பாசியினம் அல்ல. புதிய சூழலில் இது நிகழ்த்தப்போகும் தாக்கத்தை இன்று கணிக்க இயலாது. திலேப்பியாவை இங்கு அறிமுகம் செய்ய முடிவெடுத்த அதிகாரவர்க்கம் இதனால் எவ்விதப் பாதிப்பினையும் எதிர்கொள்ளவில்லை. பாதிப்பு மக்களுக்கு மட்டும்தான். ‘கப்பாஃபைகஸ்’ நாளை பாதிக்கப்போவது மக்களைத்தான். மக்களின் பாரம்பரிய அறிவு வரப்போகும் ஆபத்தை முன்னுணர்கிறது. வறீதையா என்ற விஞ்ஞானியின் அறிவு, அவர் பிறந்து வளர்ந்த சமுகத்தின் பாரம்பரிய அறிவைக் கணக்கிலெடுத்துக் கொண்டு எச்சரிக்கை செய்கிறது.

கடலோர மக்களின் வாழ்வே ஒரு கட்டுமரம்தான். மனித அறிவில் தோற்றங்கொண்ட மிக எளிமையான, சக்தி வாய்ந்த தொழிற்கருவி. அதன் அமைப்பு எளிதானது. ஆனால் காற்றின் சக்தியை தன் சக்தியாக வரிந்துகொள்கிறது. அதன் திசையைத் தீர்மானிக்க கருவிகள் உண்டு. கருவிகளை இயக்க கடலோர இளைஞர்கள் முன்வந்தாக வேண்டும்.

இது வறீதையா என்ற விஞ்ஞானியின் கனவு.


நீரை நோக்கி மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த மீனவர் சமுகம் இன்று நிலத்தை நோக்கிப் பொது வெளியில் உரையாடத் தொடங்கியிருக்கிறது.

பலிசோறாக வீசியடிக்கப்படும் மீனவர் வாழ்வு - மாலதி மைத்ரி

‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந்தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல்களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக்கிடையே எண்ணத் தோன்றுகிறது. உல்லாச விருந்தில் கலந்துகொள்ள அடிக்கடி கடலுக்கு போய்வரும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கடற்கரையில் மீனவர்கள் வாழ்வது சங்கடத்தை உருவாக்குகிறது. இவர்கள் கொள்ளையடித்ததை ஆடம்பரமாகச் செலவழிக்க ‘பீச் ரெசார்ட்களும்’ உண்டுகொழுத்த உடலைக் குறைக்க மீனவர் நடமாட்டமற்ற கடற்கரையும் தேவைப்படுகிறது. ‘கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்தை’ மக்கள் விரோதி எம்.எஸ் சாமிநாதன் ‘ கடற்கரை மேலாண்மை மண்டலமாக’ மாற்றி அறிவிக்கை தயார் செய்து அளிக்கிறார். சுனாமியில் பேரழிவைச் சந்தித்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒட்டுமொத்தமாகப் பறிக்க ‘கடற்கரை மேலாண்மை மண்டல அறிவிப்பாணையை” வெளியிடுகிறது மத்திய அரசு. அரசியல் சக்தியாக மாற்றம் பெறாத மீனவச் சமுகத்தைக் கடற்கரையிலிருந்து வாரி வழித்துப் பலிசோறாக நிலத்தை நோக்கி வீசிடத் துடிக்கின்றனர் முதலாளிகளும், அரசு யந்திரக் கைக்கூலிகளும்; மீனவச் சமுகத்திடையே அரசியல் விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், மீனவரை எளிதாக ஏமாற்றிவிடலாமென அரசு எண்ணுவதில் வியப்பில்லை. இவர்கள் அரசியல் மாற்றத்தை உருவாக்கக்கூடிய மக்களில்லை என்கிற வருத்தத்துடன்தான், மீனவச் சமுகத்தை பலி கேட்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான தனது நிலைப்பாடுகளையும் எதிர்ப்பையும் மீனவ மக்களின் வாழ்வுரிமை நியாயங்களையும் இந்நூலில் வலியுறுத்த விரும்புகிறார் வறீதையா.

நிலத்தை மீனவர்கள் சொத்தாக என்றுமே கணக்கு வைத்துக்கொள்வதில்லை. சொத்து, வாழ்வு அனைத்தையும் கடலோடு மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ளும் மக்கள், சுதந்திர இந்தியாவில் ஓட்டு வங்கிகளாக மட்டுமே மீந்திருக்கும் மீனவர்களின் பிரச்சனைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பேசவும் தீர்வுகாணவும் அதிகார மட்டத்திலிருந்து ஆட்சி மட்டம்வரை ஒருவருமில்லை என்பதுதான் யதார்த்தம். சொத்துரிமைப் பத்திரம் வைத்துக்கொள்ளத் தெரியாத பழங்குடி மக்களை ‘காட்டின் ஆக்கிரமிப்பாளர்கள், காட்டையும் வன விலங்குகளையும் அழிக்கும் சமுக விரோதிகள்’ எனப் பழிசுமத்தியவர்கள் நமது அதிகாரிகள். பழங்குடி மக்கள் காட்டில் பிழைக்கவும் வாழவும் உரிமை கிடையாது என்று அரசாணை பிறப்பித்து, பழங்குடிகளிடமிருந்து காட்டைப் பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டது அரசாங்கம். பிரிட்டிஷ் காலத்திலேயே இந்த வெளியேற்றம் தொடங்கியது என்றாலும், காட்டின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட இவர்களை இன்றைய மக்களாட்சி நடைபாதைக்குக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது. மரங்களை, வனவிலங்குகளைக் கொள்ளையிட ஏகபோகக் குத்தகையை முதலாளிகளுக்கு எப்படி அரசு அளித்ததோ, அதேபோல் இன்று கடல் வளமும், கடற்கரையும் தொல்குடி மீனவருக்கு பாத்தியதை இல்லையென விரட்ட முனைகிறது அரசு. தமிழகக் கடற்கரையைக் கொள்ளையிடப் பெட்டிகளுடன் வரிசையில் நிற்கின்றனர் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள், முதலாளிகளுக்குப் பட்டாவாக்கிக் கல்லா கட்டிக்கொண்டிருக்கின்றனர் நம் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்.

‘ஆறிலும் சாவு நூறிலும் சாவு’. இந்த வாக்கைக் கடற்கரையில் மூலை முடுக்கெல்லாம் கேட்க முடியும். தினமும் மரணத்தைத் தூக்குச் சட்டிபோல் உடன் அழைத்துச் சென்று கரை திரும்பும் மீனவச் சமுகம், மரணத்தைத் தன் நிழலாகவே நினைக்கிறது. மரணத்தை வெல்லவே தினமும் கடலுக்குப் போகிறது. மீன்பிடி தடை செய்யப்பட புயல் நேரத்தில்கூட, பந்தயம் வைத்து கட்டுமரத்தில் கடலுக்குப் போய் மீன் பிடித்து மரணத்தை வென்று திரும்பிய வீராதி வீரர்களும் உண்டு. அல்லது வறீதையா குறிப்பிடுவதுபோல் தன் மக்கள் பசியாற்ற சீற்றமான கடலில் துணிந்து மீன்பிடிக்கப் போவதும் நடைமுறைதான். பாடுபடத் தெரியாத ஆணை மதிக்கவே மாட்டார்கள் கடின உழைப்பாளிகளான மீனவப் பெண்கள். சென்ற தலைமுறைவரை இதுதான் மீனவக் கலாச்சாரம். அதுபோல் நிராதரவாக மீனவக் கிராமத்துக்கு வந்து சேரும் அனாதைகள் மற்றும் மனநிலை பிறழ்ந்தவர்களை அந்தக் கிராமமே அரவணைத்து அவர்களுக்கு ஒரு புதிய வாழ்வை உருவாக்கித் தரும். கடலைப் போலவே ஈரம் நிறைந்த மனதுடைய மக்கள். மீனவச் சமுகத்தில் சம்பளத்துக்கு உத்தியோகம் பார்க்கும் ஒரு புதிய தலைமுறை உருவான பிறகு கலாச்சாரம் மாறிவிட்டது. சமுகத்திடையே ஏற்றத்தாழ்வும் அதிகரித்துவிட்டது என்பதை அணியத்தின் மூலம் பேசுகிறார் ஆசிரியர்.

மரணத்துடன் கைகோர்த்து நடைபயிலும் மீனவரை தற்போதைய அரசியல் படுகொலைகள் நிலைகுலையச் செய்கின்றன. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவன், சிங்கள் ராணுவத்தினரால் குண்டடிப்பட்டு இறப்பதும் படகை, மீனை, வலைகளைப் பிடுங்கிக்கொண்டு தமிழக மீனவனை நடுக்கடலில் தள்ளிவிட்டுஸ் செல்லும் நிலையும் தொடர்ந்து கொண்டிருப்பது மீனவர்களிடையே ஒரு கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. ‘கடல்போல் ஆர்ப்பரித்து எழுந்தாலும், சிறிது நேரத்தில் காயல் போல் வடிந்துவிடும் குணமுடையவர்கள் மீனவர்கள்’ என்கிறார் வறீதையா. ஆனால், சுனாமிக்குப் பிறகு மீனவர்களிடையே அரசியல் விழிப்புணர்வு சற்று அதிகரித்திருப்பதாகவே எனக்குப்படுகிறது. இனியும் மீனவர்கள் பொறுமையைக் கையாள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது. அம்பேத்கர் நூற்றாண்டு விழாவிற்குப் பின் எப்படி தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சி ஏற்பட்டதோ அதேபோல் டிசம்பர் 2004 சுனாமிக்குப் பிறகு மீனவச் சமுகத்திடையே ஒரு அரசியல் எழுச்சி உருவாவதைக் காணமுடிகிறது. சுனாமியை ஒட்டி மீனவ மக்கள் தங்களையும் தாங்கள் இதுநாள்வரை அரசியலால் வழி நடத்தப்பட்ட விதத்தையும் மீள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். இது மீனவச் சமுகத் தலைமைத்துவப் பண்மைச் சிறிது சிறிதாக வளர்க்க உதவும். மீனவன் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் வலதுகை, இடதுகையென எடுபிடிகளாக வாழ்ந்து மீனவக் கிராமத்தை ஆட்டிப்படைத்த ‘கூலிக்கு மாரடிக்கும் அரசியல் கலாச்சாரம்’ மாறி வருவதைக் காண முடிகிறது. இவர்கள் தற்சமயம் இனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பது அதிகரித்து வருகிறது. அதே போல் மறைமாவட்டங்களில் மீனவக் கிராமங்களில் பாதிரியாரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களும் கேள்விகளும் எழுதுவதை வறீதையா குறிப்பிடுகிறார். பாதிரியார் மார்க் ஸ்டீபன் பங்குப் பணியாளரின் பணி குறித்து எழுப்பும் கேள்விகள் மிக முக்கியமானவை.

தற்போது கடலில் புயல் காலங்களில் மட்டுமல்ல, சாதாரண நேரங்களில்கூட மீன்பிடிப்பு குறைந்துவிட்டது. ரசாயனக் கழிவுகளால் ஏற்படும் நீர்நிலைச் சூழலியல் கேட்டினால் பல்லுயிர் பெருக வழியற்று மீன்படுவது வெகுவாக குறைந்துவிட்டது. கடற்கரையில் உருவாக்கப்படும் மகா திட்டங்கள் மீனவர் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கின்றன.

  • சென்னை மீனவர் வாழ்வாதாரத்தைக் கபளீகரம் செய்த சென்னை துறைமுக விரிவாக்கம்,
  • எண்ணூர் அனல்மின் நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள பிற தொழிற்சாலைகள்
  • திருவள்ளூர் மாவட்ட மீனவர்களைக் கூலிகளாகவும், உதிரிகளாகவும், அடியாட்களாகவும் மாற்றிவிட்டன.
  • காஞ்சீபுர மாவட்டத்தில் கல்பாக்கம்;
  • கடலூரில் சிப்காட்;
  • தஞ்சை,
  • நாகை மாவட்டங்களில் இறால் பண்ணை,
  • தூத்துக்குடி,
  • திருநெல்வேலி மாவட்டங்களில் ஸ்டெர்லைட்,
  • கூடங்குளம்.
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் சேதுக் கால்வாய்த் திட்டம் மற்றும்
  • சிங்கள் இராணுவம் நடத்தும் படுகொலைகள்.
  • கடற்கரையின் அனைத்து மாவட்ட மீனவர்களும் அரசின் தவறான திட்டங்களால் ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடற்கரைச் சூழலில் நாசத்தால் கடலுயிரிகள் மட்டுமின்றி நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. இப்பாதிப்பு விவசாய நிலங்களையும் விவசாயிகளையும் பாதிக்கிறது. விவசாயம் பாதிக்கப்படுவதால் வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மக்கள் நேரடியாகப் பட்டினிச்சாவை நோக்கித் தள்ளப்படுவர்.

இந்த உயிரியல் சுழற்சி காடு அழிவதிலிருந்து ஆரம்பித்து நீர்நிலை பாதிப்பு, விவசாய பாதிப்பென ஒரு வட்டத்துள் சுற்றுவதை வறீதையா சுற்றுச்சூழல் ஆய்வாளர் என்ற பார்வையிலிருந்து வாசர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

இயற்கை சுனாமியிலிருந்து கடல்சார் சமுகம் எழுந்தாலும், இன்று சுழன்றடிக்கும் அரசியல் சுனாமியிலிருந்து மீனவர்கள் தப்பிப்பிழைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஆசிரியர் கூறுவதுபோல் அதிக கல்வியறிவு அடைந்த மாவட்டமான கன்னியாகுமரியிலேயே மீனவர்களின் கல்வியறிவு 50 சதவிதத்தைக்கூட எட்டவில்லை. மற்ற மாவட்ட மீனவர்களின் கல்வியறிவு மற்றும் பிற தொழிலறிவு குறித்து சொல்லத் தேவையில்லை.

அரசின் மகா திட்டங்களாலும் பாதிக்கப்படப்போகும் மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வந்த திட்டமான ‘கப்பாஃபைகஸ்’ நச்சுப்பாசி வளர்ப்பின் பின்னணி குறித்து அதிர்ச்சியூட்டுவது ஒரு கட்டுரை என்றால், ஒவ்வொரு ஆண்டும் வளிமண்டல வெப்பம் சில டிகிரி அதிகரிப்பதால் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து உலகம் அழிவை நோக்கி ராக்கட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் உண்மையைச் சொல்லி நம்மை பயமுறுத்துகிறது ‘முகம் மாறும் நிலம், மரம் ஏறும் மனிதன்’ கட்டுரை. அந்தமானின் ‘ஜாரவாஸ்’ பழங்குடிகள் போல் நாமும் எளிய முறையில் இயற்கையுடன் இயைந்து வாழப்பழகினால் என்ன என்ற கேள்வி எழுகிறது. உயிரின வளத்தைப் பூமிப்பந்திலிருந்து முற்றிலுமாக அழிக்காமல் நிற்காது போலிருக்கிறது அதிநவீன அறிவியல் வளர்ச்சி.

மானுடவியல் அறிஞராக, சமுகவியல் ஆய்வாளராக, சுற்றுச்சூழல் ஆர்வலராக, இயக்கவாதியாக மற்றும் ஒரு வாசராக நின்று தனது சமுகம் சார்ந்த கள ஆய்வை அணியத்தின் மூலம் நமக்குத் தந்திருக்கிறார் வறீதையா. இந்த ஒன்பது கட்டுரைகளின் வழியே ஐந்து தளங்களில் நின்று மீனவச் சமுக வாழ்வைப் பல பரிணாமங்களில் வாசர்களுக்குக் கொடுக்க முனைந்த அவரது கடின உழைப்பு அளவிடமுடியாதது. சில விசயங்களை நேரடியாகப் பேசாமல் இடம், பெயர் போன்றவைகளைத் தவிர்த்துள்ளதை வெளிப்படையாக முன்வைத்திருக்கலாம். குறிப்பாக மீனவர்களின் எதிர்ப்பை மீறி எதிர்கால மீனவச்சமுக நலனைக் கருதி உயர்நிலைப்பள்ளி கட்ட முன்வந்த பாதிரியாரின் பெயர் மற்றும் ஊரைச் சொல்லியிருக்கலாம். அதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிம மணல் கொள்ளையில் ஈடுபட்ட முதலாளியின் பெயர் தற்போது தினப்பத்திரிக்கை படிக்கும் வாசகர் அனைவருக்கும் தெரிந்ததுதான் என்பதால், கனிம மணல் கொள்ளையில் ஈடுபட்ட தனியார் கம்பெனி முதலாளிப் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.

ஒரு வாசகர் இக்கட்டுரைகளைத் தன் துறைசார்ந்த அல்லது அரசியல் சார்ந்த கருத்தாக்கத்துடன் வாசிக்கும்போது மீனவ சமுகத்துடன் ஒரு உரையாடலைத் தொடர சாத்தியம் உள்ளது. ஒரு சமுகம் மொழியால் மட்டுமே இனிவரும் காலங்களில் உயிர்த்திருக்க முடியும். கதையாடல்கள் மூலமும் தன்னை ஆவணப்படுத்திக்கொள்வதன் மூலமும்தான் அச்சமுகம் எதிர்காலத்தை நோக்கி நகர முடியும். நீரை நோக்கி மட்டுமே உரையாடிக்கொண்டிருந்த மீனவச் சமுகம் இன்று நிலத்தை நோக்கிப் பொது வெளியில் உரையாடத் தொடங்கியிருக்கிறது. இதுவரைக்கும் வாசிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலிருந்த மீனவத் துயரம் இன்று நம் மேசைக்கு வந்துள்ளது.


விடியலை நோக்கி – தடம் பதித்த பொது நிலையினர் சந்திப்பு

அறிவியலில் முனைவர் பட்டம் பெற்று, தூத்தூர் யூதா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றும் கான்ஸ்டன்டைன் வறீதையா பல புத்தகங்களின் ஆசிரியர், நல்ல சிந்தனையளர், சிறந்த பொதுநிலையினர் ஒருவருக்கு எடுத்துக்காட்டு எனலாம். மனிதர்களையும் உலகத்தையும் நேசித்து, பெற்ற அனைத்தையும் நன்றியோடு நினைவில் கொண்டு, கிறிஸ்தவ சமுகத்தின் மீது பாசம் குறையாமல் நல்லதையே மனதில் தேக்கி, விமர்சனம் செய்யவும் அச்சப்படாமல் இருக்கும் ஒரு முதிர்ச்சியான பொது நிலையினர், ‘அமுது’ அவரை பேட்டி கண்டார்.

அமுது: உங்களை உருவாக்கிய சக்திகளைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்லலாமா?

வறீதையா: மூன்றைப்பற்றிச் சொல்ல வேண்டும். நான் தொன்போஸ்கோ இளைஞர் இல்லத்தில் பயின்றவர். செர்வாசியூஸ் அடிகளார் நல்ல தலைவர்களை அழைத்துச் சிறந்த பயிற்சி அளித்தார்கள். அங்கு இருக்கும் போது ஐக்கப் அமைப்பில் சேர்ந்திருந்தேன். அருளப்பா போன்றவர்களின் உரைகளைக் கேட்க முடிந்தது. சமூகப்பார்வை கிடைத்தது. கல்லூரியில் தேசிய நாட்டு நலப்பணித்திட்ட அலுவலராகப் பலப்பல முகாம்கள் நடத்தியுள்ளோம். இவற்றில் சமூகத்தின்பால் ஈடுபாட்டை வளர்க்க முடிந்திருக்கிறது

அமுது: உங்கள் வாழ்வில் திருப்பம் ஏற்பட்ட கட்டங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்?

வறீதையா: 1997இல் முனைவர் பட்டம் பெற்ற காலம் முக்கியமானது. கடலோர பகுதிகளிலிருந்து படித்து முன்னேறிவிட்டவர்கள் வெளியேறிக் கொண்டிருந்தது எனது மனதைப் பாதித்தது. கடலோர வளர்ச்சிக்காக இன்னொரு தலைமுறை ஆவன செய்யும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில் முனைவர் என்ற அங்கீகாரம் ஒரு அழைப்பாக வந்தது. டிசம்பர் 26, 2004, முக்கியமான திருப்பம். நான் பல காரியங்களைப்பற்றி வைத்திருந்த எண்ணம் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது. எல்லாமே சுனாமிக்குமுன் அதற்குப்பின் என்று சொல்கிற வகையிலே மாற்றமடைந்தன.

அமுது: உங்கள் எழுத்துப்பணியில் வளர்ச்சி. . . .

வறீதையா: முனைவர் அங்கீகாரத்திற்குப் பின் என்னில் வந்து கொண்டிருந்தச் சிந்தனைகளைப் பதிவுசெய்ய விரும்பினேன். அவை என்னுடையவை மட்டுமல்ல, பலரின் கருத்துக்களை நான் பிரதிபலித்துக் கொண்டிருந்தேன் இவற்றைப் பதிவு செய்ய வேண்டுமென்று தோன்றியது.

கணியம் பத்திரிகையில் எழுதத் தொடங்கிய போது வெகுஜனத்தைத் தொடும் வகையில் எழுத முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. தட்டுத்தடுமாறிப் பேனாவைக் கையில் எடுத்தேன். ஆனால் பேனா என்னை விடமாட்டேன் என்று விட்டது. நான் 25-க்கு அதிகமான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். அதில் கிடைக்காத திருப்தி வெகுஜன எழுத்துக்களில் கிடைத்தது.

எனது எழுத்துக்களில் தீர்க்கமும் தெளிவும் இருப்பதாகச் சொன்னார்கள். எழுத்தால் வெகுஜனங்களைத் தொடமுடியும் என்ற உணர்வு எழுத்து எனது அழைப்பின் ஒரு பகுதியாக விளங்கத் துணை செய்தது. விளைவு,

  • ‘நெய்தல் சுவடுகள்’,
  • டிசம்பர் வடுக்கள்,
  • ஆழிப்பேரிடருக்குப்பின் (கலை இலக்கியப் பெருமன்றம் New Century Book House இணைந்து பரிசளித்தது).
  • பேரலைக்கு அப்பால்,
  • அணியம் (தமிழினி வெளியீடு).
  • The Catastrophy and After (நியூசெஞ்சரி புத்தகப் பண்ணை) போன்ற புத்தகங்கள்.

அமுது: நமது மறைமாவட்டத்தில் குறிப்பாக கடலோரத்தில் பொதுநிலையினரின் நிலை எப்படி இருக்கிறது?

இதற்கு வறீதையா அளித்தப் பதிலை மூன்று பகுதிகளாக குறிப்பிடலாம்.

கத்தோலிக்கப் பாதிரியார்களைப் பற்றி. . . . .

உங்கள் கேள்விக்குள்ளே நுழைவதற்கு முன்பு கேள்வியின் பின்புலமாக அமைந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களைப் பற்றிப் பேசியாக வேண்டும்.

அறிவாக்கத்தின் வாயில்கள் இன்று அகலத் திறந்து கிடக்கின்றன. பாதிரியார்தான் அனைத்து ஞானத்தின் ஊற்று. அவர்களை விட்டால் நமக்கு எதிர்காலமே இல்லை என்ற பார்வை தகர்ந்து வருகிறது. பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது.

ஆனால் பாதிரியார்களின் மொழியும் வழியும் பெரிதாய் மாறிவிடவில்லை. இன்றும் அவர்கள் கட்டளை மொழியை (Prescriptive language) விதியெழுதும் ஆகம மொழியை (Dogmatic language) பிரயோகித்து வருகிறார்கள். பொது மக்களின் பார்வையிலும் பாதிரிமார் பார்வையிலும் குருத்துவம் என்பது வெறும் பிழைப்புவழி என்று அடையாளம் காணப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்புவரை கத்தோலிக்கக் கிராமங்களிலிருந்து செல்வச் செழுமையும் செல்வாக்கும் மிகுந்த குடும்பங்களிலிருந்துதான் குருமாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இன்று செழுமையான வர்க்கமும் நடுத்தர வர்க்கமும் இறைசேவைக்கு பிள்ளைகளை அனுப்புவதில் முனைப்பு காட்டவில்லை. அடிமட்டக் குடும்பங்களிலிருந்துதான் குருக்கள் உருவாகிறார்கள். வார்ப்பும் வளர்ப்பும் சிறுபருவப் பின்னணியும் இந்த குருக்களின் சிந்தனைப் போக்கையும் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. குருக்கள் தனித்தீவுகள் அல்ல. சராசரித்தனம் நிறைந்த மக்களோடு வாழ்பவர்கள்தாம். தொழில் நுட்பமும் காலமாற்றமும் கற்புநெறி, துறவு, பாலுறவு குறித்த குருக்களின் பார்வையில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலாதிக்கம் முற்றாண்மை மீது திருச்சபை அளவற்ற நம்பிக்கை கொண்டிருக்கிறது. பெண்குருத்துவம் முதலிய சவால்களைத் திறந்த விவாதத்திற்கு உட்படுத்தும் துணிச்சலும் மனஉறுதியும் திருச்சபைக்கு இல்லாதிருக்கிறது.

கத்தோலிக்கத் திருச்சபையைக் குறித்து. . . . . . .

திருச்சபையின் இருத்தலையும் வரலாற்றுச் சாதனைகளையும் இருட்டடிப்பு செய்ய முடியாது. ஆனால் மதிப்பீடு செய்வது தவிர்க்க முடியாததது. திருச்சபையின் அடிப்படைக் கோளாறுகளாக நான்கு விசயங்களைப் பார்க்கிறேன்.

ஒன்று - இன்றைய திருச்சபை ஏழைகளுடன் இல்லை என்பது ஏழைகள் குறித்த பைபிளின் பார்வையும் திருச்சபையின் அணுகுமுறையும் நேர்கோட்டில் இல்லை.

இரண்டு - திருச்சபையின் அதிகாரச் சேகரம். அது கைக்கொண்டிருக்கும் முற்றாண்மை சமத்துவச் சித்தாந்தத்துக்கும் கிறிஸ்துவின் போதனைக்கும் எவ்வகையிலும் பொருந்தவில்லை. சான்றாக திரித்துவ மறைஉண்மை ஒரு முக்கோண உறவு வெளிப்பாடு. அதுபோன்றே கடவுள் – திருச்சபைத் தலைமை – விசுவாசிகள் என்பதும் முக்கோண சமதள உறவாகவே இருக்க வேண்டும். ஆனால் திருச்சபை அதிகாரம் செங்குத்துக்கோட்டுறவாகவே மேலிருந்து திணிக்கும் ஒரு வழிப்பாதையாக இயங்குகிறது. இதைவிட ஆபத்தானது என்னவென்றால், இப்படி அதிகார சேகரமாய் இயங்குவதுதான் கடவுளின் திருவுள்ளத்தை நிறைவேற்றும் ஒரே உபாயம் என்று திருச்சபை நம்புவது.

மூன்று – குருமைய நிலைப்பாடு (Cclerico-Centrism):

‘கிறித்து அரசர்’ என்ற சொல்லாக்கம் பாதிரியார்கள் தரப்பில் தவறாக அணுகப்படுகிறது என்று நான் கருதுகிறேன். அன்பும் அமைதியும் நிலவும் சமூகத்துக்குக் கிறித்து தலைமை ஏற்கிறார் என்பதே ‘கிறித்து அரசர்’ என்ற பதத்தின் சரியான விளக்கமாக இருக்க முடியும், ‘என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று’ என்ற கிறித்துவின் வாக்கு இதற்குச் சான்று. கிறித்துவை உலகின் அரசராகவும் தன்னை அந்த அரசின் ‘திவானாகவும்’ பாவித்துக் கொள்ளும் பாதிரியார் அதிகாரங்களைத் திரட்டித் தன்னை மையப்படுத்த முனைகிறார்; தன்னை கேள்விக்கு அப்பாற்பட்ட, புனிதத்துள் புனிதமான அதிகார அடுக்கின் கூறாகப் பார்க்கிறார். ‘உலகின் உப்பு’ என்ற அழைப்பு இங்கே சிதறிப் போகிறது. தன்னைக் கரைத்துக் கொள்வதன் மூலமே உப்பு உணவுக்கு ருசியூட்ட முடியும். உப்பின் நோக்கமும் அதுவே. அதிக பலன் கொடுப்பதற்காக புதையுறும் விதையாக மாறிவிடும் துணிவோ அதிகாரத்தைத் துறக்கும் தீர்க்கமோ இன்று பாதிரியார்களுக்கு இல்லை.

நான்கு – திருச்சபைக்குள் நிலவும் உட்பிரிவுகள்:

3. பொதுநிலையினரைப்பற்றி . . . . . .

‘பொதுநிலையினர்’ என்ற பதத்தையே நான் ஆட்சேபிக்கிறேன். விசுவாசிகள் (the faithful) திருச்சபையின் கடைநிலையினரல்ல; திருச்சபை அமைப்பின் இடுபொருளோ உற்பத்தியோ அல்ல, அதன் நோக்கும் இலக்கும் அவர்களே. புரோகிதச் சமூகத்தின் ஞானத்தை எதிர்நோக்கி, அவர்களின் தயவுக்காய்ப் பணிந்து நிற்க வேண்டியவர்களல்ல. திருச்சபையில் இறைமக்களின் இடம் என்னவென்பது இன்று வரை நடைமுறையில் அங்கீகரிக்கபபடவில்லை. இதுதான் முக்கிய செய்தி. இறைமக்களின் அழைத்தல் (vocation) என்பது இறைவாக்குரைஞனாய் வாழ்வது. நீதிக்காகத் துணிந்து குரல் கொடுப்பது. உலகியல் தளங்களில் முழுமையாகப் புகுவது. ‘உலகின் முகத்தைப் புதுப்பிக்கும் முழுப்பொறுப்பு பொது நிலையினரைச் சார்ந்தது’ என்று 43 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டாம் வத்திக்கான் சங்கம் அறிக்கையிட்டது. கத்தோலிக்கர்கள் அரசியல் களத்தில் தடம் பதியாமல் போனது மிகப்பெரிய குறைபாடு. திருச்சபையின் கட்டளைக்காகக் காத்திருக்கும் போக்குதான் இதற்குக் காரணம்.

கத்தோலிக்க விசுவாசி எனப்படுபவரின் இரு கூறுகள் – உரிமை குடிமகன் (civilian), கிறித்தவ விசுவாசி (laity). இதில், ‘சிவிலியன்’ பெருங்கூறு, லெயிற்றி என்பது ஆன்மீக வாழ்வு சார்ந்த சிறுகூறு. திருச்சபை அதிகாரக்கட்டமைப்பு விசுவாசியின் முதற்பெருங்கூறான ‘சிவிலியன்’ பரிமாணத்தைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. பங்கு நிர்வாகம் என்ற பெயரில் கிராம நிர்வாகம் திருச்சபையால் கையாளப்படுகிறது. தமிழகத்தின் 17 கத்தோலிக்க மறைமாவட்டங்களில் பொதுநிலையினர் பணிகுழுக்களில் ‘விசுவாசி’ செயலர் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு ‘வழங்கப்பட்டிருப்பது’ ஆறில் மட்டும். இதில் கோட்டார் மறைமாவட்டம் முன்னோடி என்று சொல்லப்படுகிறது.

4. கோட்டாறில் பொதுநிலையினர்:

விசுவாசிகள் (பொதுநிலையினர்) கடலோரத்திலும் உள்நாட்டிலும் இருவேறு விதங்களில் கையாளப்படுகின்றனர். கடற்கரையில் திருச்சபை அதிகாரிதான் மக்களின் வாழ்வியல் கூறுகளைக் கட்டுப்படுத்துகிறார். அறிவுபெற்ற, நடுத்தரவர்க்கம் சார்ந்த மக்கள் இதை முற்றாக வெறுக்கிறார்கள். பாமர மக்கள் வேறு உபாயங்கள் கண்ணில்படாத சூழலில் பாதிரியாரே கதி என்று கட்டுண்டு கிடக்கிறார்கள். இதுபற்றி பல்வேறு அறிவு ஜீவிகள் மற்றும் பாதிரியார்களின் கருத்துக்களை எனது நூல்களில் பதிவு செய்திருக்கிறேன். கல்வியறிவும் வெளி உலகத் தொடர்பும் கிடைத்து விட்டால் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் தெளிவு பெற்று விடுகிறார்கள். கல்வி கொடுப்பது மிக முக்கியமானது. அதே வேளையில், கல்வியும் மாற்றுத் தொழிலும் கைவந்தவர்கள் கடற்கரைச் சமூகத்தைத் திரும்பிப் பார்க்காமலே சென்று விடுகிறார்கள். இவர்களின் அறிவும் மனிதவளமும் சிறிதளவு இந்தக் கிராமங்களுக்குக் கிடைத்தால் நிலைமையை இலகுவாக மாற்ற முடியும். இதற்கு இணையாக மக்கள் விழிப்பூட்டப்பட்டு அணிதிரள வேண்டும். வெளிநாட்டு நிதி பெற்று இயங்கும் தொண்டு நிறுவனங்களுக்கு இது சாத்தியமல்ல. அறிவு பெற்ற இளைய தலைமுறை கங்கணம் கட்டிக்கொண்டு முன்வர வேண்டும்.

பாதிரியார்களின் வழிகட்டுதலும் கண்காணிப்பும் இல்லாமலும் பொதுநிலையினரால் வாழ்வியல் களங்களில் சாதிக்க முடியும். கருத்துப் புரட்சியை ஏற்படுத்த முடியும். கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் பொதுநிலையினர் நடத்திவரும் சமூக அரசியல் ஆய்வரங்கு இதற்கு ஒரு சான்று. நெய்தல் படைப்பாளிகள் சந்திப்பு மற்றொன்று. இது தமிழ்நாடு – பாண்டிச்சேரி நெய்தல் படைப்பளிகள் இயக்கம் உருவாகுவதற்குப் பொறியாய் அமைந்தது.

Tamil Words for Common Shop Signs

July 13, 2009 Visitor Blogs 1 comment
விளம்பரமும் பெயர்ப்பலகையும்
ஆங்கிலம்
தமிழ்
Advertisers
விளம்பர வினைஞர்
Agency
முகவாண்மை
Audio Centre
கேட்பொலி நடுவம் / கேலி நடுவம்
Auto Spare Parts
தானி உதிரிப் பாகங்கள்
Backery
அடுமனை
Bar
அருந்தகம்
Beauty Parlour
அழகு நிலையம்
Beef Stall
மாட்டிறைச்சிக் கடை
Biriyani Ready
புலவு அணியம் / ஊன்சோறு
Boarding and Lodging
உண்டுறை தாவளம் / உறையுள் உணவகம்
Book Publishers
பொத்தக வெளியீட்டாளர்கள்
Book Sellers
பொத்தக விற்பனையாளர்கள்
Book Shop
பொத்தகக் கடை
Book Stall
பொத்தக நிலையம்
Booth
சாவடி
Brothers
உடன்பிறந்தோர்
Children’s World
சிறுவர் உலகம்
Cloth Store
துணிக் கடை / சவளிக் கடை
Coffee Bar
குளம்பி அருந்தகம்
Coffee Club
குளம்பி முன்றில்
Communication Centre
தொடர்பு நிலையம்
Company
குழுமம்
Concession Sales
சலுகை விலை விற்பனை
Co-optex
கூட்டுறவு நெசவு / நெசவகம்
Corner
முனை / முனையம்
Cut Piece Stores
வெட்டுத் துணிக்கடை
Cycle Mart
மிதிவண்டிக் கடை
Dealers
கொண்டு விற்போர்
Departmental Stores
துறைவாரி அங்காடி
Display Boards
விளம்பரப் பலகைகள் / காட்சிப் பலகைகள்
Distributor
வழங்குனர் / பகிராளியர்
Drive in Hotel
உள்ளோட்ட உணவகம்
Drug Stores
மருந்தகம் / மருந்துப் பண்டகம்
Dry Cleaners Shop
உலர் வெளுப்பகம்
Electricals
மின் பொருட்கள்
Electronic Components
மின்னணுப் பொருட்கள் (பொருத்துகள்)
Emporium
வணிக நிலையம்
Enterprises
தொழில் முனைவம்
Evening Market
அந்திக்கடை / அல்லங்காடி
Eversilver Mart
நிலைவெள்ளி மாளிகை / வெள்ளிரும்பு மாளிகை
Exhibition Cum Sale
கண்காட்சியும் விற்பனையும்
Exporting Company
ஏற்றுமதிக் குழுமம்
Fancy Stores
அழகுப்பொருள் அங்காடி / புதுபாங்கு அங்காடி
Fashion Corner
புதுபாங்கு முனையம்
Fast Food
விரைவு உணவகம்
Festival Sales
விழாக்கால விற்பணை
Fish Market
மீன் அங்காடி
Fixed Price
நிலை விலை / மாறா விலை
Food World
உணவுலகம்
Footwear
மிதியடி / காலணி அங்காடி
Fruit Stall
பழக்கடை
Furniture Mart
அறைக்கலன் அங்காடி
Garments Showroom
ஆடைகள் காணகம்
General Store
பல்பொருள் அங்காடி
Gold House
தங்க மாளிகை / பொன் மாளிகை
Gymghana
உடற்கலைக் காட்சியகம்
Hair Cutting Saloon
முடி திருத்தகம்
Hair Dressers
முடி ஒப்பனையாளர்கள்
Handicraft
கைவினைப் பொருள்கள்
Handloom House
கைத்தறித் துணியகம்
Hardware Merchant
வன்சரக்கு வணிகர்
Health Center
நலவகம் / நலவக்கூடம்
Hearing Aids
கேட்புதவிக் கருவிகள்
Hotel
உணவகம் / விடுதி
Ice Cream Parlour
பனிக்குழை முன்றில்
Iron & Hardware
இரும்பு மற்றும் வன்சரக்கு
Iron & Steel Merchant
இரும்பு எஃகு வணிகர்
Jewellery
நகை வணிகம் / அணி வணிகம்
Jewellery Mart
அணிகலன் அங்காடி
Kid Wears
குழந்தைகள் உடையகம்
Laundry
உடை வெளுப்பகம்
Lodge
தங்கு விடுதி
Lucky Center
நற்பேறு நடுவம்
Market
சந்தை
Mart
அங்காடி
Meals Ready
உணவு அணியம்
Medical Equipments
மருத்துவக் கருவியங்கள்
Medical Store
மருந்துக் கடை
Medicals
மருந்தகம்
Mess
உண்பகம் / உணவகம்
Military Hotel
புலால் உணவகம்
Mutton Stall
ஆட்டிறைச்சிக் கடை
News Agency
செய்தித்தாள் முகவாண்மை
News Mart
செய்தித்தாள் கடை
No Bills
விளம்பரம் கூடாது
No Smoking
புகைக்கக் கூடாது
Non-Vegetarian Hotel
புலால் உண்டிச் சாலை
Nursary
நாற்றங்கால்
Nursing Home
மருத்துவ இல்லம்
Oil Store
எண்ணெய்க் கடை
Opticals
கண்ணாடிக் கடை
Paints
வண்ணங்கள்
Paper Store
தாள் கடை / தளங்காடி
Pavilion
காட்சிக் கூடம் / கூடாரம்
Pawn Brokers
அடகுப் பிடிப்போர்
Pen Centre
தூவல் நடுவம்
Pen Corner
தூவல் முனையம்
Pest
நச்சுயிரி
Photo Studio
ஒளிப்பட நிலையம்
Platform
நடை மேடை
Plaza
அங்காடி முன்றில்
Price List
விலைப் பட்டியல்
Prohibition
தடை / தடுப்பு / விலக்கு
Provision Stores
மளிகைக் கடை
Readymade
அணியப்பொருள் / உடனணியம்
Readymade Store
அணியநிலை அங்காடி
Real Estate Business
வீட்டுமனை விற்பனை
Repair
பழுது / பழுது பார்ப்பு
Resort
மகிழ்விடம் / போக்கிடம்
Restaurant
தாவளம் / உணவு விடுதி
Retail Sales
சில்லறை விற்பனை
Roofing Materials
கூரை இடுபொருள்கள்
Sales Depot
விற்பனைக் கிடங்கு
Sanitary Ware
துப்புரவுப் பொருள்கள்
Saw Mill
வாள் பட்டறை
Sea Food Sales
கடலுணா விற்பனை
Selling Price
விற்பனை விலை
Shoe Mart
காலணி நிலையம்
Shoes & Slippers
மிதியடிகள் மற்றும் நடைமிதிகள்
Showcase
காட்சிப் பேழை
Showroom
காணகம் / காட்சிக்கூடம்
Silk Emporium
பட்டு வணிகம்
Silk House
பட்டு மனை / பட்டு இல்லம்
Silk Palace
பட்டு மாளிகை
Snacks
நொறுவைகள் / தின்பண்டங்கள்
Sons
மக்கள்
Sports World
விளையாட்டு உலகம்
Stall
நிலையம்
Star Hotel
விண்மீன் விடுதி / உடு விடுதி
Stationery Mart
எழுதுப்பொருள் அங்காடி
Store
சரக்கரை
Sunday Market
ஞயிற்றங்காடி
Super Market
சிறப்பங்காடி / உயரங்காடி
Suppliers
வழங்குநர்
Sweet Stall
இனிப்பகம்
Tailoring Mart
தையல் நிலையம்
Tea Stall
தேநீர் கடை
Telephone Booth
தொலைபேசிச் சாவடி
Tiffin Centre
சிற்றுண்டி முன்றில்
Tiffin Ready
சிற்றுண்டி அணியம்
Tiffin Stall
சிற்றுண்டி நிலையம்
Traders
வணிகர்கள்
Tution Centre
தனிவகுப்பு நடுவம்
Tutorial Centre
தனிப்பயிற்சி நடுவம்
Vegetable Mart
காய்கனி அங்காடி
Vegetarian Hotel
மரக்கறி உண்டிச்சாலை
Wall Paper Sales
சுவர்த் தாள் விற்பனை
Wine Shop
மதுக்கடை
Women’s Apparel
மகளிர் உடைகள்
Xerox
படப்படி