Home > Uncategorized > Oh… My Lord! Please Forgive Me…

Oh… My Lord! Please Forgive Me…


பாராவின் பத்து வரங்கள் கிண்டலுக்காகவே எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். அந்தக் காலத்தில் அசுரர்களுக்கு வரம் கொடுத்து விட்டு, நிவர்த்தி செய்வதற்கு ஏதாவது மாற்று கண்டுபிடிப்பார்கள். ஹிரண்ய கசிபுக்கு நரசிம்மர், இந்திரஜித்துக்கு இலக்குவன் என்று. இதோ என்னுடைய பிராயசித்த பிரார்த்தனைகள்.

1. அம்மா, அன்னை, புனிதத் தாய், ஜெ.ஜெ., அவர்கள் தமிழ்நாட்டின் நாற்பது இடங்களிலும், கேரளா, கர்நாடகா, மிசோராம் என்று நான்கு இடங்களிலும் லோக் சபா தேர்தலில் வெற்றியடையட்டும்.

2. மருத்துவ சீட்டுகள் மூலம் மாரிவானா, கஞ்சா, இன்ன்பிற லாகிரி வஸ்துக்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும். (பின்னர், முறைகேடு, சீர்கேடு என்று காரணம் சொல்லி (பின்வரும்) திமுக அரசு மருந்துக் கடைகளை சுவிகரித்துக் கொள்ளும்).

3. அப்துல் கலாம் வெண்பாக்களிலும், சோனியா இத்தாலிய ஹைக்கூக்களிலும் வாழ்த்திக் கொள்ள ஆரம்பிக்கட்டும்.

4. வெகுஜன பிரசுரங்களை சிறு பத்திரிகையாளர்கள் எடுத்து நடத்தட்டும். (தமிழ் படிக்கும் ஓரிரு ஜீவன்களும் விட்டு விட்டு, இணையத்துக்கும், இன்னாததற்கும் பறந்து விடுவர்).

5. கட்சித் தலைவர்களை, உட்கட்சி பினாமிகளே காலை வாராதிருக்க வேண்டும்.

6. (பார்க்க 2-ஆம் கோரிக்கை). நூறு மில்லிகிராம் மேல் கஞ்சா அடிக்காமல் கூட்டங்கள் தொடங்கட்டும்.

7. ரஜினி, கமல், விஜயகாந்த், தனுஷ், நந்தா, கரண் எல்லோரும் காவிரி வருவதற்காகவும், சரத் விளையாடுவதற்காகவும் போராடட்டும்.

8. கனிமொழியை தமிழக முதல்வராக்க முயற்சிக்க வேண்டும்.

9. சங்கராச்சாரியார் சொல்லும் வேட்பாளர்களுக்கு ‘சாப்பா’ குத்தாதிருக்க புத்தி வரட்டும்.

10. சிம்ரன் ‘ஸ்டாண்டப் காமெடி’யாக புதிய படங்களையும், புத்தகங்களையும் அறிமுகம் கொடுத்து பொது மக்களுக்கு எடுத்து செல்லட்டும்.

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: