Archive
கதை விட வாங்க – 1
தமிழின் பல இணைய தளமெங்கும் அடிபடும் ‘மரத்தடி சிறுகதைப் போட்டியில்’ வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய அம்மாவின் எழுத்துகள் மூலம் எழுதும் ஆசை வந்தாலும் கல்லூரிக் காலம் வரை வெகுஜன பத்திரிகை வாசகனாக மட்டுமே காலம் தள்ளி வந்தேன். கையெழுத்துப் பத்திரிகை நடத்த இயலாத வட இந்தியாவில் ஒரு மூலையில் இருக்கும் கல்லூரி. இப்பொழுது மாதிரி வலைக் குறிப்புகள், இணைய சஞ்சிகைகள், மடலாடற் குழுக்கள் எதுவும் மாட்டாததால் பலர் என்னுடைய எழுத்துக்களில் இருந்து தப்பித்து வந்தனர்.
தினம் ஒரு கவிதையில் சேர்ந்தது மடலாடற் குழுக்களுடன் ஆன முதல் தொடர்பு. திஒக-வில் செவ்வாய்தோறும் வரும் கொத்து பரோட்டவிலாவது எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. அப்பொழுதுதான் அகத்தியர் குறித்து திஒக மடலில் தெரியவர, அங்கு சேர்ந்தேன். பிரமிக்கத் தக்க அளவுகளில் ஆழமான மடல்களைப் பார்த்து ஒதுங்கியே இருந்தேன்.
கொஞ்ச காலத்தில் இரா.மு. ராயர் காபி க்ளப் துவங்க அங்கும் இணைந்தேன். இப்பொழுது வலைப்பூக்கள் முளைப்பது போல், போன வருடங்களில் தோன்றிய, நான் கண்டுபிடித்த வேறு பல மடலாடற் குழுக்களிலும் சேர்ந்தேன். மதில் மேல் பூனையாக ஒதுங்கி இருக்கும் சிலரையும் பாய்ச்சலுக்குத் தயாராக இருக்கும் புலிகளையும் உசுப்பி விட சொக்கர் சிறுகதைப் போட்டியை அறிவித்தார்.
‘சிவாஜி வாயிலே ஜிலேபி’ என்னும் தலைப்பு. நான் ஒரு புரியாத கதையும், பிரசன்னா பரிசுக் கதையையும், எல்லே சுவாமிநாதர் ஒரு நகைச்சுவைக் கதையையும், இன்னும் பலர் தங்கள் முதல் சிறுகதையையும் எழுத வைத்த போட்டி. அதன் பிறகு பல முயற்சிகளில் தடுக்கி விழுந்தாலும் இன்னும் தொடர்ந்து கதை விட முயல்கிறேன். என்னுடைய இந்த வாரக் கதையைப் படித்து விட்டு விமர்சித்தால் அடுத்த கதையில் அவற்றை மனத்தில் கொண்டு எழுதுவேன்.
இணையத்தில் ஆங்காங்கே இருக்கும் ‘எப்படிக் கதை எழுதுவது’ என்னும் அட்வைஸ்களையும், ராகாகி மடல்களில் டிப்ஸ் கொடுத்த சிஃபி வெங்கடேஷ், புத்தகப் புழுவில் பட்டியலிட்ட பாரா அவர்களின் மடல்களையும் வரும் நாட்களில் பகிர்ந்து கொள்வேன்.
சுற்றுபுற வீடுகள் – II
Dubukku- The Think Tank: “மாமா மிக கண்டிப்பானவர். அவருக்கு தலை வழுக்கையானாலும் மாதா மாதம் இசக்கியின் ‘சந்திரா சலூனில்’ முடி வெட்டிக் கொள்ள செல்ல வேண்டும். அப்பாவுடன் முடி வெட்டிக்கொள்ள செல்வதென்றால் ஜாலி. கையில் 50 பைசா தருவார். ஆனால் மாமா வீட்டிலே வளர்ந்ததால் அந்த சந்தர்பம் எப்போவாவது தான் கிடைக்கும். மாமா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். இசக்கியின் மகன்கள் மாமாவின் ஸ்கூலிலே படித்து வந்தார்கள்.அதற்காக மாமா சொல்வதை விட தாராளமாகவே முடி -வெட்டுவார் இசக்கி.
பின் தலையில் நனறாக மெஷின் கட்டிங் செய்து நல்ல புல் தரை போல் இருக்க வேண்டும். முடி வெட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்தால் எனக்கே அடையாளம் தெரியாது. எனக்கு அப்புறம் மாமாவுக்கு இல்லாத முடியை தேடி தேடி இசக்கி பொறுமையாக வெட்டுவார். முடி வெட்டிக் கொண்டு ஆத்தங்கரைக்கு போகும் வழியில் வெட்கம் பிடுங்கி தின்னும். பெண்கள் எல்லாம் சிரிக்கிறர்களா என்று ஒரு முறை நிமிர்ந்து பார்பேன்.
அன்றைக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் .”என்ன அறுவடை ஆயாச்சு போல..” என்று பின்ன்ந் தலையில் தடவிப் பார்பார்கள். குறுக வெட்டியிருந்தால் அப்படி செய்யும் போது கையில் கிச்சு கிச்சு மூட்டுவட்து போல இருக்கும். ஸ்கூலில் அன்று முழுவதும் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பையன் தொல்லை தாங்க முடியாது..தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பான். சில வம்பு பிடிதவர்களும் அவ்வப்போது வந்து தடவி வம்பு செய்வார்கள். அப்போதெல்லாம் மனதில் இசக்கியை திட்டுவேன்.
ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொண்டு வரும் நண்பர்களை ஆதங்கத்துடன் பார்த்த நாட்கள் அவை. இசக்கியை பொறுத்த வரை ஸ்டெப் கட்டிங்கெல்லாம் காலி பசங்கள் தான் வைத்துக் கொள்வார்கள். ”
இந்தியா பேசும்பொழுது (இன்னும் உண்மை அறியாத பிராமணக் குடும்பத்தின் சம்பாஷணைகளில்) இவை வரலாம் என்று சொல்வது nostalgic ஆக உள்ளது:
“இப்போ அங்க மணி எத்தனை?
ரொம்ப குளிரா அங்கே?
உடம்பப் பாத்துக்கோங்கோ…
குழந்தைக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?
எப்போ வரேள் ஊருக்கு?
ஆபீஸ் ஒண்ணும் ப்ரச்னை இல்லையே?
மேல ஏதாவது படிக்கிறாயா?
செவன் ஸீஸ் மாத்திரை ஒழுங்காப் போட்டுக்கறியா?
ஓழுங்கா சந்தி பண்ணு. தெனமும் நூத்தியெட்டு காயத்ரி ஜபிக்கிறியோ?”
சன் டிவி பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கல் அன்றும் அலுவலகம் வந்ததில் கரும்பு, சக்கரைப்
பொங்கல், வடைகளை விட சன் டிவி நிகழ்ச்சிகளை
உடனடியாகப் பார்க்காததே மனதில் நின்றது. சென்னைப்
பொங்கல்களில் பெரிதாக ஒன்றும் தவற விடவில்லை.
கொல்லைப் புறத்தில் இரண்டு கரும்பு, மஞ்சக் குலைகள்,
பட ரிலீஸ் என்று கழித்த நாட்கள்.
பாஸ்டனில் சூரியன் நன்றாக எட்டிப் பார்த்தாலும் உறைய வைக்கும் குளிர்.
இரயிலில் சென்று பத்து நிமிடம் நடக்கும் போது கூட குளிர்
அதிகம் தெரிவதில்லை. நடக்கிறேனா, ஓடுகிறேனா என்று அறியாமல்
உடம்பின் அத்தனை பாகங்களையும் மூன்று நான்கு ஆடை தடுப்பிட்டு
குளிரில் நடுங்காமல் அலுவலகம் வந்து விடலாம். ஆனால் காத்திருக்கும்
நிமிடங்கள்தான் அரள் வைத்தது. நாலைந்து நிமிடங்கள்தான் ரயிலுக்குப்
பொறுத்திருக்க வேண்டும். காதலிக்காக, தேர்வு முடிவுக்காக என பல
காத்திருத்தல்களில் இல்லாத கொடுமை அது.
சன் டிவியின் பனிரெண்டு மணி நேர சிறப்பு நிகழ்ச்சிகளை ஒரு மணி
நேரத்தில் இரவில் மேய்ந்தேன். கமல் சுவாரசியமாய்ப் பேசினார். தவற
விடக் கூடாத பல கருத்துகளைத் தாங்கிய பேச்சு. இணைய எழுத்துக்களைப்
படிக்கிறார்.
என்ன படிப்பீங்க என்ற கேள்விக்கு கதைகள் எல்லாம் இணையத்தில் கூட
நன்றாக இருக்கிறது என்றார். அம்பலமா, திண்ணயா என்று சொல்லவில்லை.
தன் கவிதைகளைப் பொதுவில் வைப்பதற்கு தைரியம் இருந்தால் போதும்
என்ற தன்னடக்கப் பார்வை கவர்ந்தது. கஷ்டப்பட்டு செதுக்கிய படம்
தோல்வி அடையும்போது ஏற்படும் வருத்தத்தை, குப்பையான படங்கள்
ஓடியதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் என்றது ஏதோ
பற்றற்றவர் மாதிரி ஆக்கிவிட்டது.
ஆனால், தொடர்ந்து வந்த ‘உன்னை விட’ காட்சிகள் விருமாண்டிக்கு
அன்னலட்சுமியுடன் இருக்கும் பற்றை நன்றாகவே சொன்னது.
பேரம் சரிப் படாததால் அமெரிக்காவில் படம் முக்கிய நகரங்களில்
மட்டுமே ரிலீஸ். முக்கிய நகரம் என்பது ரஹ்மானுக்கு நியு யார்க்
மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ். இவருக்கு எவை என்பது சொல்லவில்லை.
ஆனால், ‘விருமாண்டி உருவான கதை, ‘நீக்கப் பட்ட காட்சிகள்’,
‘விடுபட்ட பாடல்’, ‘கமல் இன்ன பிறர் பேட்டி’ என்று விஷய அடர்த்தியுடன்
கூடிய அமெரிக்காவில் மட்டுமே பார்க்கக் கூடிய திரை வட்டு வருகிறது.
உருப்படியான சிந்தனை என்று சொல்ல வேண்டும். ‘அன்பே சிவம்’
அதிகாரபூர்வமாக வந்தாலும் அதிகாரபூர்வமற்ற டிவிடிகளே அதிகம்
சுழற்சியில் இருக்கும் அமெரிக்க இந்தியர்களிடம், காசு சம்பாதிக்க
சரியான வழி.
மேக்ரோவிஷன் நகல் தடுப்பு, சகாய விலை என்று சீக்கிரமே வந்தால்
படம் வெளியிட்டு பணம் பண்ணுவதை விட வட்டு வெளியிட்டு லாபம்
ஈட்டலாம்.
அடுத்து ஒரு ஆங்கிலப் பேட்டிக்குத் தமிழில் விளமபரங்கள் வந்தது.
‘அலைகள் ஓய்வதில்லை – 2’-இல் நடிக்கும் சோனியா அகர்வால் என்று
சரியாக எழுதியிருந்தார்கள். மற்ற பல பெயர்கள் ‘அபர்னா’, ‘சிநெகன்’
என்று போட்டார்கள். நிஜப் பெயரே அப்படித்தானா இல்லை அபர்ணா,
சிநேகன் என்பதா என்று கேட்டு சொல்லுங்கள். எல்லா விளம்பரத்திலும்
‘வாழ்த்து*க்*கள்’ சொன்னார்கள்.
ஆணாதிக்க மனோபாவத்தை ஸ்ரீகாந்த அழகாக வெளிப் படுத்தினார்.
பெண்களைக் கிண்டல் செய்வது, பைக்கைத் தாறுமாறாக ஓட்டுவது,
சமைப்பதற்காகத் திருமணம் செய்து கொள்வது என்று ஒரு தமிழ்க்
குடிமகனுக்குரிய எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் பேசினார்.
கல்லூரியில் காதல் கவிதை எழுதுபவனும், ரக்ஷ¡பந்தனுக்கு ராக்கி
அமைத்துக் கொடுப்பவனும் அல்டாப்பாக ஊர் சுற்றுவான் என்பது
நம்ப முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் கலை நேசம் கொண்டவர்களை
எங்கள் கல்லூரியில் பெண்கள் கூட்டம் மொய்க்கும். அதற்காகவே
ஓவிய, அழகியல் உணர்ச்சி கொண்டவர்களாகக் காண்பித்துக்
கொண்டவர்கள் சிலர்.
காதல் கடிதம் கொடுத்ததை ஒப்புக் கொள்ளும் ஸ்ரீகாந்த்தும் காதலே
செய்யவில்லை என்னும் சோனியா அகர்வாலும் நம் ஹீரோ ஹீரோயின்களின்
ஆதர்ச அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு
எடுத்துக்காட்டு. இருவரும் மாற்றி சொல்லி இருந்தால் பத்திரிகைகளுக்கு
சரக்குக் கிடைத்திருக்கும். (பத்திரி*க்*கையா? பத்திரிகையா?)
‘பு.ச’ மலேசியாவில் எடுக்கப் பட்ட படம். ‘வாலி’ படத்தை உல்டா
செய்யும் கருணாஸ் காமெடி. ‘மலர்களே’ பாடல் குறித்து யாரும்
காமெராவில் பதிவு செய்யவில்லை. தனுஷ்ஷின் பேட்டி எதார்த்தமாக
இருந்தது.
தான் நடிப்பதை, ரசிகர்களின் கைதட்டலை ரசிப்பதை, தன் பெயர்
டைட்டிலில் வருவதை, திரையில் வருவதை கூட்டத்தோடுப் பார்ப்பதற்காக
முதல் காட்சி செல்வேன் என்றார். ஒருவர் கஷ்டப்பட்டு செய்யும்
சண்டைக் காட்சியை விட, பார்வையாளர்கள் ரசிக்கும் காதல் காட்சிகளே
அதிகம் அடிபடுவதற்கு வருத்தப் பட்டார். சூப்பர் ஸ்டார் ஒருவரே என
ஒத்துக் கொண்டார்.
நற்பணி மன்றம் வைப்பதற்கு அவசரப்படாததும் நம்ம உஷா போன்று
வெற்றிகளைக் கண்டு போதை தலைக்கேறாமல் இன்னும் நல்ல படைப்புகளைத்
தர வேண்டும் என்னும் ஆர்வமும், ரசிகர்களுடன் எப்போதும் நெருங்கி
இருக்க வேண்டும் என்னும் எண்ணங்களும் சுவாரசிய படுத்தியது.
பட்டிமன்றத்தின் ‘பெண்கள் அதிகமாக நேசிப்பது புகுந்த வீடா,
பிறந்த வீடா’ என்னும் அரதப் பழசான வாதங்களையும், politically correct
ஆனால் தவறான கணிப்பான புகுந்த வீடு என்னும் முடிவையும் நாளை
பார்க்க வேண்டும். உருப்படியான தலைப்பாக ‘ஆணாதிக்க மனோபாவத்தை
அதிகம் வெளிப்படுத்துவது ஆண்களே, பெண்களே’ என்று எல்லாம்
எங்காவது வாதிடுவார்களா?
தமிழ் உலகம் வழங்கும் சங்கமம்
இ-சங்கமம்:
பொங்கல் முதல் மலர்ந்துள்ள ஒரு புதிய வலைத் தளம்.
என்னினிய தமிழர்களுக்கு என தனது தலையங்கத்தைத் தொடங்கியுள்ளார் ஆல்பர்ட். தமிழர்களின் கலை, கலாசாரம், மரபு சேவையைப் பிரதானப்படுத்த இ-சங்கமம் ஓர் தளமாக அமையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் இ-சங்கமம் தொடங்கப்பட்டுள்ளதாக தமது தலையங்கத்தில் விளக்கியுள்ளார் ஆல்பர்ட்.
பொங்கல் சிறப்பு மலராக முதல் இதழ் மலர்ந்துள்ளதால், பொங்கல் பற்றிய கவிதைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் புகாரியின் கவிதையுடன், நண்பர்கள் இளங்கோவன், வாசன், ஐயா ஞானவெட்டியான் ஆகியோரின் கட்டுரைகளும் பொங்கலின் சிறப்பைக் கூறுகின்றன. கவிதைகள் பிரிவில் சகோதரிகள் புதியமாதவி, புஷ்பா கிறிஸ்ட்டியின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. இணையத்தில்
நகைச்சுவைக்கு என தனி முத்திரையைப் பதித்துள்ள அன்பர் சுவாமிநாதன் எப்படி இருப்பார் என்று பார்க்க வேண்டுமா? நட்டம் என்ற அவரின் கதை ஒன்றுடன் அவரின் படமும் இடம்பெற்றுள்ளது.
சிங்கப்பூர், இந்திய செல்வாக்கின் கீழ் இருந்த தீவு என்பதைக் குறிக்கும் எழுத்துக்கள் கொண்ட பழங்காலப் பாறைக்கு என்னவாயிற்று? அத்தீவுக்கு முதன் முதலில் சென்ற தமிழன் யார்? சிங்கப்பூர் வரலாறு அறிமுகத்தில் சிங்கப்பூர் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டுரைகள் பகுதியில் இ-சுவடியை நடத்தும் கண்ணன், அத்திட்டத்திற்கு உதவியாக இருக்கும் சுபாஷினி, கணினி பகுதியில் முகுந்தராஜ், உமர் என மேலும் பலரும் எழுதியுள்ளனர்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டுக்குச் செய்திகள் அனுப்ப வேண்டுமானால், அத்தகைய சேவையை
இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
சுட்ட பழமா? சுடாத பழமா?
K A T H A M B A M – The Complete Tamil Web Portal: பா.ராகவனின் ‘தமிழ் இலக்கியம் 2004’ மற்றும் பத்ரி சேஷாத்ரியின் ‘நீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா? ‘ கட்டுரையும் வலைப்பதிவுகளில் இருந்து ஒழுங்காக அனுமதி பெறபட்டதா? அல்லது எதையும் ப்ளாக் செய்கிறேன் என்று மறு பதிப்பு விடுவது போல் copy/paste தொழில் நுட்பமா?
Recent Comments