Archive
வாழ்க்கையை இன்ச் பை இன்ச் ரசிக்கிறேன் – அனுராதா ரமணன்
சந்திப்பு : மாயன் (குமுதம் ஜங்ஷன்): “நான் பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரம அன்னையின் பக்தை. அன்னைக்காக தினமும் நூறுரூபாய் வரை பூக்கள் வாங்குவேன். தாமரைப்பூ, செண்பகப்பூ என்று பலவிதமான பூக்கள்.
எழுதுவதற்காக உட்கார்ந்தால் எழுத்துகள், வார்த்தைகள், வரிகள், பக்கங்கள், அத்தியாயங்கள் என்று போய்க்கொண்டே இருக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது என் பழக்கம். எழுதிக் கொண்டிருக்கிறபோதே முன்பின் தெரியாத சிநேகிதிகள் எனக்கு போன் செய்வார்கள். அவர்களின் பிரச்னையை எடுத்துச் சொல்வார்கள். அவர்களின் பிரச்னையை போனிலேயே தீர்த்து வைப்பேன்.
பகல் நேரத்தில் என்னை யாராவது பார்த்தால் புல் மேக்கப்பில் இருப்பேன். ‘மேடம், எங்கேயாவது வெளியே போறீங்களா?’ என்று என்னைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள். இந்த அலங்காரத்தை நான் வேஷமாக நினைப்பதில்லை. உற்சாகமாக இருக்க இதுவும் அவசியம் என்று எனக்குப் படுகிறது.”
மரபு காக்கும் தமிழ் நாள் காட்டி — தமிழ்க்கனல்
ஆறாம்திணை: “அனைத்தும் தமிழ்மயமாக வேண்டும் எனும் குரல்கள் வலுப்பெற்று வரும் நிலையில், முழுவதும் தமிழ் முறையிலான தமிழ் நாள்காட்டியைப் பின்பற்ற வேண்டும் என்ற குரலும் கூட வலுத்து வருகிறது.
‘வழக்கில் −ருந்து வரும் பிரபவ முதல் அட்சய வரையிலான அறுபது ஆண்டுகளும் தமிழ் ஆண்டுகள் அல்ல. −வற்றுக்குச் சொல்லப்படும் கதை அறிவியலுக்குச் சற்றும் பொருத்தமானதாக −ல்லை. சித்திரை தொடங்கி பங்குனி வரை தமிழ் மாதங்களாகச் சொல்லப்படுபவை தமிழ்ப் பெயர்களே அல்ல.
கி.மு. 31 ஆம் ஆண்டைத் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டு, திருவள்ளுவர் (தமிழ்) தொடர் ஆண்டின் அடிப்படையில் −ந்த நாள்காட்டி அமைக்கப்பட்டுள்ளது. −ன்றைய எண்களுக்கு மூலமான தமிழ் எண்களே −ந்த நாள்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளன. கோள்களை அடிப்படையாகக் கொண்டு பண்டைத் தமிழர் பின்பற்றி வந்த மாத, நாள் முறையே −தில் −டம் பெற்றுள்ளது.
மேழம் (ஆடு வடிவம்), விடை (காளை), ஆடவை (−ரண்டு ஆடவர்), கடகம் (நண்டு), மடங்கல் (சிங்கம்) கன்னி (பெண்), துலை (தராசு), நளி (தேள்), சிலை (வில்) ஆகிய மாதங்களும் பெயரிடப்பட்டன.
சந்திரனை அடிப்படையாகக் கொண்டு ஆரிய −னக் குழுவினர் ஏற்படுத்திய மாதங்களை நடைமுறைக்கு வரச் செய்தனர். அறிவன், காரி ஆகிய நாள்களை முறையே புதன், சனி என வடமொழிமயமாக்கினர். பக்கல் என்பதைத் தேதி என மாற்றினர். பற்சக்கர முறையிலமைந்த பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் முறையைப் புகுத்தினர். பெண்ணாக மாறிய நாரத முனிவனுடன் கிருஷ்ணன் அறுபதாண்டுகள் கூடியிருந்ததாகவும் அப்போது ஆண்டுக்கு ஒன்றாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களே பிரபவ முதல் அட்சய வரையும் என்ற கதையும் கூறப்பட்டது.
மறைமலையடிகள் தலைமையில் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடினர். எந்த சாதி, சமயப் பிரிவையும் சாராத உலகப் பொதுமறையை −யற்றிய திருவள்ளுவரின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தொடராண்டு பின்பற்றுவதென அவர்கள் முடிவு செய்தனர். −லங்கைத் தனித் தமிழ் அறிஞர் கா.பொ. ரத்தினம் உள்பட உலகெங்கும் உள்ள தனித்தமிழ் ஆர்வலர்கள் திருவள்ளுவர் தொடர் ஆண்டு முறையைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
தேவநேயப் பாவாணரின் உலகத் தமிழ்க் கழகம், பெருஞ்சித்திரனாரின் உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், தென்மொழி −தழ், கல்பாக்கம் வேம்பையன் எனப் பல தரப்பினராலும் அப் பணி −ன்றும் தொடர்ந்து வருகிறது. “
தமிழோவியமும் தத்துவமும்
மனத்திற்கு : கன்றுக்குட்டி டெக்னிக்: ”
கம்பராமாயணத்தில் ஒரு இடம்…
செத்துக்கிடந்த ராவணணைப் பார்த்து அழுகிற மண்டோதரி, ” ஐயா.. இளமையில் நீ தவம் தவம் என்று காமத்தை அடக்கினாய். அதனால்தான் அந்தக் காமம் இன்று உன்னைப் பின்னாளில் பழிவாங்கிவிட்டது..” என்று புலம்புகிறாள். எனவே எதையும் எதிர்த்து நீங்கள் உங்கள் சக்தியை பிறயோகிக்கவேண்டாம். அடக்குமுறை நிச்சயம் எதிர்மறை விளைவை ஏற்படுத்தும். தாயுமானவர் ” மனம் அடங்க கல்லாருக்கு வாய் ஏன் பராபரமே ” என்றார். ” மனம் அடக்க ” என்று பாடவில்லை. மனம் தானே அடங்கவேண்டும். நீங்கள் அதை அடக்கக்கூடாது. ”
எதையுமே திணித்தால் எடுபடாதுதான்; அந்த சிந்தனையோடு ஒத்துப் போகிறேன். ஆனால், விளையாட்டாக ஒரு கேள்வி:
காமத்தை சில காலம் அடக்கின ராவணனுக்கே அந்த கதி என்றால், பல காலம் அடக்கியாண்ட ராமருக்கு? மனைவியே பக்கத்தில் இல்லாமல் இருந்த இலக்குமணருக்கு எப்படி பழி வாங்கியதாம்!?
Recent Comments