Archive
மகளிர் – கலை… விளையாட்டு… சமூகம்
கல்கி – 01.02.2004
‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் நாயகி அபர்ணா, அமெரிக்க அழகிப் போட்டியில் ‘மிஸ் ஃபோட்டோ ஜெனிக்’ ஆகத் தேர்வு பெற்றவர். அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், அண்ணி என இவரது குடும்பமே கல்விப் பணியில் இருக்கிறது. “சென்னை, திருச்சி, துபாய் ஆகிய பகுதிகள்ல மொத்தம் பதினான்கு ஸ்கூல் நடத்தறோம். நானும் அந்தத் துறைக்கு வரணும்னுதான் வீட்ல எல்லோருக்கும் ஆசை. லயோலாவில் விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டிருந்தேன். கேமராவுக்குப் பின்னால் நிற்கிற படைப்பாளிக்கான படிப்பு”
– அப்பு (அபர்ணாவை விரட்டிய பேய்!)
அபர்ணாவின் முழு பேட்டியையும் துரத்திய பேயையும் அறிய கல்கி – 01.02.2004 பார்க்கலாம்.
டென்னிஸ் உலகின் மகளிருக்கான பிரிவில், உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஸ்டெர்ஸ். சென்ற ஆண்டு பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓப்பனின் இறுதி சுற்றையும், ஆஸி. ஓப்பன் மற்றும் விம்பிள்டனின் அரையிறுதிச் சுற்றையும் அடைந்தவர் (ஏனுங்க அம்மணீ… ஒண்ணுத்திலும் கோப்பையை தூக்க மாட்டேன்றீங்க?!)
வரும் ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் கலந்து கொள்ளப் போவதில்லையென்று அடம் பிடிக்கிறார். காரணம் பதக்கம் அவர்கள் நாட்டுக்குத்தான் (என்பதாக இருக்கலாம்). பெரும் தொகையும் கிடைப்பதில்லை. இவர் மணக்கவிருக்கும்
ஆஸ்திரேலிய டென்னிஸ் சாம்பியனான லேட்டன் ஹெவிட்டும், ஏதென்ஸில் கலந்து கொள்ளப் போவதில்லையாம்.
– குல்லூ (அடம் பிடிக்கிறார் க்ளிஸ்டெர்ஸ்)
“உலகத்திற்கு சேவை செய்யவும், ஆன்மிக ஞானத்தைப் பரப்புவதற்கும், ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் குறைந்தது இரண்டு இளம் வயதினராவது முன் வந்தால், சமாதானமும் அன்பும் அனைவரும் ஒரே குடும்பம் என்னும் உணர்வும் நிறைந்த புதிய உலகை நாம் உருவாக்கிவிடலாம்” என்று அருளுரைக்கிறார் அம்ருதானந்தமயி. அப்படியொரு பக்குவம், ஆன்மிக நாட்டம், தன்னலம் நினையாத பெருமனம் எல்லோருக்கும் வாய்க்க இறைவன்தான் வழிகாட்ட வேண்டும்.
சின்ன வயதிலேயே வீட்டில் ‘அம்மா’ காசு திருடியதுண்டு. எந்த வீட்டிலாவது யாராவது பசித்திருந்தால் கதாமணிக்குப் பொறுக்காது. தாயாரின் உண்டியல் பணம் அங்கு இடம் மாறிப் பசி தீர்க்கும்.
ஏழைகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் ‘அமிர்தகுடீரம்’ முக்கியமானது. வரும் பத்தாண்டுகளில் நாடெங்கிலும் ஒரு லட்சம் வீடுகள் கட்டுகிற குறியீடு. இதுவரை உருவாகியிருப்பதில் புனேயில் உள்ள அமிர்தகுடீரம்தான் பெரியது; 1750 வீடுகள் கொண்ட குடியிருப்பு அது.
இன்னும் ஆதரவற்ற பெண்களுக்காக உதவும் மாதாந்திர உதவித் திட்டம் ‘அமிர்த நிதி, ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்கான ‘அமிர்த நிகேதன்’, அன்பு இல்லம் என்கிற பெயரில் ‘முதியோர் இல்லம்’ என்று சிறு சிறு திட்டங்கள் ஒரு புறம்.
“இந்த உலகமே உங்களுடைய குடும்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களை அறியாமல், நீங்கள் உங்களது இடது கையைக் காயப்படுத்தி விட்டால், உடனே உங்களது வலதுகை, இடதுகைக்கு உதவ முன் வருகிறது. ஏனெனில்,
அந்தக் கையும் உங்களது உடலின் அங்கமே என்னும் உணர்வு உங்களுக்கு உள்ளது. இதே போன்ற ஐக்கிய உணர்வோடு, உலகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளுக்கு நாம் உதவ வேண்டும்” என்கிறார் அம்மா.
– பாலன் (வேறென்ன வேண்டும்?)
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்… 🙂
தென்றல் – புத்தம் புது பாட்டு
நன்றி: Yahoo! Groups : Vaali
மற்றும் ராகா
புஷ்பவனம் குப்புசாமி:(திரையில் லாரென்ஸ்)
வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஓரு வேலை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியிலே வந்து பார்க்கும் நிலாவுக்கும் வணக்கும்
பரம்பரை சொல்லித் தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை போடத் தோலு தந்த மாட்டுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
கோரஸ் 1:
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவக்கோனே
ஏன் ரத்தமெல்லாம் தீ பிடிக்கும் தாண்டவக்கோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே
ஏன் நெத்தியிலே இடி இடிக்கும் (அல்லது) கிடுகிடுக்கும் தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோனே
ஏன் பழையகாலம் தெரியுதடா தாண்டவக்கோனே
ஹேய்…
கோரஸ் 1
ஏய் மாட்டு வால புடிச்சி மாடக் குளம் கடந்து
தாமரை பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்கு
ஆ மஞ்சுவிரட்டுக்குள்ள மயிலக் காளை அடக்கி
தங்கச் செயின் எடுத்து தந்தேனய்யா என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆலமரப் பொந்துக்குள்ள
ஆதியில புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்த கிளி நாளை செத்த கிளி
தந்தன… தந்தன…
ராஜா டாக்கீஸுக்குள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சு புடிச்சானே பாலயத்தான் – அந்த ரங்கசாமி
நேத்து நனவாக நாளை கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா, மனம் உருகுதடா
வந்த தேதி சொன்னதுண்டு, வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி, ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டார் உண்டா
அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா
எஸ்.பி.பி.: (திரையில் பார்த்திபன்)
பறை பறை பறை…
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை, வெற்றி பறை, போர்கள் முடிக்கும்,
புனித பறை ,
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை, புது வீறு கொள் இசை
வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை
பு.கு. : (வசன கவிதை)
என் பாட்டன் முப்பாடன்களோடு போயி சேரப் போறேன்
இப்ப நான் மறுபடியும் அம்மா கர்ப்பப் பையிலே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மவோட வயித்துக்குள்ளே இருக்குறப்போ தெரியுமாமே
ஓரு இருட்டு, அது இப்ப எனக்குத் தெரியுது
கதகதப்பா இருக்கு, நான் மறுபடியும் பொறந்து வருவேண்டா
பத்திரமா பாத்துக்கங்க என் பறையை…
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவக்கோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவக்கோனே
செய்திகளிலும் வலைப்பதிவுகளிலும் மகாமக முழுக்கு
என்னுடைய ஷார்ப்ரீடர் ஆர் எஸ் எஸ் செய்தியோடை பட்டியலை வலையேற்றி உள்ளேன். குமரகுரு கொடுத்த தமிழ் வலைப்பக்கங்கள் பட்டியலையும் ஸ்லேட்டின் opml கோப்பையும் இணைத்து இன்னும் கொஞ்சம் ஹிந்து ஸ்டேட்ஸ்மான் தேடிப்பிடித்து குருவியாய் சேர்த்த பட்டியல். இவ்வளவு செய்திகளும் படித்தால் வேலையும் பார்க்க இயலாது; சொந்த வலைப் பதிவும் செய்ய முடியாது; உருப்படியாக கிரகிக்கவும் முடியாது போல் மலைப்பாக இருக்கிறது. எனவே, எல்லாவற்றையும் கீழிறக்கி சேர்த்துக் கொள்வதற்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்துவிட்டு இணைத்துக் கொள்ளுங்கள்!
Recent Comments