Archive

Archive for April, 2004

ஸ்ரீதேவி ஜோடி ஆவாரா?

April 30, 2004 Leave a comment

ரஜினிகாந்தின் புதிய பட தொடக்க விழா, வருகிற மே 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சித்ராபவுர்ணமி அன்று நடைபெறுகிறது. ஜுலை மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

நன்றி:
TFM Pages
Daily Thanthi Article Pages
Ravikumar to direct Rajni`s next film – Sify.com

Categories: Uncategorized

இரண்டு சுந்தர்

April 30, 2004 Leave a comment

கடந்த வாரம் இரண்டு பதிவுகளை மிகவும் உணர்ந்து ரசித்தேன்.

சுந்தரவடிவேல்: நாடக விமர்சனத்தை விட அவர் கிளம்பிய விதமும், விழாவில் நடந்த கூத்துக்களும் அனுபவித்த ஒன்று. ஒரு இடத்துக்கு செல்வதற்கு ஒன்பது மேப் எடுத்துக் கொள்வது; கடைசி நேரத்தில் மனைவியிடம் வரைபடத்தை சரி பார்க்க சொல்வது; அவர்கள் சரியாக சொன்னாலும் நான் தவறான வழியை எடுப்பது; எங்கு சென்றாலும் குழந்தைக்கு ஸ்பெஷல் சாப்பாடு எடுத்து செல்வது; கார் நூறைத் தொடுமா என்று வேகமாக ஓட்டி பார்ப்பது; மாமாவை (போலீஸின் செல்லப் பெயர்) பார்த்தவுடன் பம்முவது; என்று எனக்கு மட்டும் உரித்தான குணாதிசயங்களை சுவாரசியமாக விவரித்திருந்தார்.

சுந்தர்ராஜன்:’குழலூதி மனமெல்லாம்’ மற்றுமொரு நினைவுகளை அசை போட வைத்தது. முன்னாள் அமைச்சர்கள் சாதிக் பாச்சா, பொன். முத்துராமலிங்கத்தின் மகன்களுடன் படித்த ஸ்கூல் காலங்கள் நினைவுக்கு வந்தது. மாண்புமிகு மகன்களோடு ஊரை வலம் வருவதின் பலமே தனி. அப்போது முயற்சி செய்த கோல்ட் ஃப்ளேக் கிங்ஸ்; கொஞ்ச காலம் கழித்து பிலானி மாணவிகளே தம் அடிக்கும் peer pressure-இனால் முயற்சி செய்த மென்தால்-More; ரம்மோடு சேர்ந்த ராத்மேனின் அனுபவமே தனி என்னும் பெங்களூர் சகாக்கள் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தது எல்லாம் நிழலாடியது. ஏனோ, எதுவுமே வெற்றியடையாததால் வளையமும் விடத் தெரியாது; Patch அணிந்து கொள்ளும் பாக்கியமும் கிடையாது. ‘ஆட்டோகிராஃபில்’ போகிற போக்கில் பட்டியல் போட்டு சென்ற சேரனின் பாடலுக்கு சுந்தரை விட அழகாக யாராலும் பொழிப்புரை எழுத முடியாது!

Categories: Uncategorized

‘பேரழகன்’ – காதலுக்கு

April 30, 2004 Leave a comment

புஷ்பவனம் குப்புசாமி பாடும் ‘பறை’ பீட் பாடல். நடுவில் ‘குனித்த புருவமும்’ ஷோபனா போல் பாசுரமும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


சுத்துகிற பூமியில எத்தனையோ சாமி உண்டு
ஏதாச்சும் ஒரு சாமி எங்களக் காக்க வேணுமடா
கூடிநிற்கும் சனங்க எல்லாம் கோஷம் போடுங்கடா
கஞ்சி கேக்கும் வயித்துக்காக காசு போடுங்கடா

காதலுக்குப் பள்ளிக்கூடம் கட்டப் போறேன் நானடி
காம்பவுண்டு சுவருல உன்ன ஒட்டப் போறேன் பாரடி
கண்ணகியின் சிற்பம் ஒண்ணு செத்துப்போச்சு சென்னையில
அந்தச் சில உசிரோட நிக்குது என் கண்ணுக்குள்ள

நட்சத்திரத்த நட்டுவச்ச பல்லுடா
கத்திமுனையில் ஏறி நிற்கும் தில்லுடா
பத்துவிரலும் அர்ச்சுனரு வில்லுடா
என்னப் போல எவனிருக்கான் சொல்லுடா

ஆலமரத் தோப்புக்குள்ள வாழமரம் நீயடி
முக அழகப் பாத்து மயங்கிப்புட்டேன் நானடி

யுவன ஷங்கர் ராஜாவின் முழுப் பாடலையும் கேட்க ராகா செல்லலாம்.

‘பேரழகன்’ பாடல் குறித்த முந்தைய பதிவு.

Categories: Uncategorized

அருள் – திரைப்பாடல் அறிமுகம்

April 30, 2004 Leave a comment

‘அநியாயம் பண்ணினா ஆண்டவனுக்குப் பிடிக்காது; அசிங்கமாப் பேசினா அருளுக்குப் பிடிக்காது’ என்று அருள் விக்ரம் உதாருடன் நம்மை வரவேற்கிறார். ட்ரெய்லரில் நிறைய அடிதடி; சண்டை முடிந்தவுடன் வேல் கம்பு; அப்புறம் மேற்சொன்ன வசனம். தொடர்ந்து குத்து சண்டை. டிஷ¤ம் டிஷ¥ம் ம்யுசிக் என்று நிறைய முஷ்டி தூக்கும் ரத்தம்.

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

மருத மலை அடிவாரம் ஒக்கடாத்துப் பப்படாமே: நா. முத்துகுமார் – எல்.ஆர்.ஈஸ்வரி, டிப்பு, தேனி குஞ்சரம்மா – ***/4

காதல் எதிர்ப்பு அருள்வாக்கு டப்பாங்குத்து. கொஞ்ச நாட்கள் அனைவரின் வேதமாக உலாவரும். எல்.ஆர்.ஈஸ்வரி இன்னொரு ரவுண்டு வரவேண்டும்.

‘கண்ண பார்த்து
கலர பார்த்து
காதலுன்னு நம்ப வேண்டாம்

லைட்டா நீ சிரிச்சாலும்
லைட் ஹவுஸில் பார்த்தேன்னு
சும்மாவே சுத்துவானே ரீலு

லேசா நீ பார்த்தாலும்
ரோசாப்பூ தூக்குதுன்னு
காதுலதான் வைப்பானே பூவு’

பத்து விரல்: வைரமுத்து – எஸ்.பி.பி., ஸ்வர்ணலதா – *.5/4

வரிகள் புரியும் சாதாரணமான தாலாட்டு. இரண்டு நல்ல பாடகர்கள் கடமையை முடித்திருக்கிறார்கள். ஆபீஸில் கேட்காதது உத்தமம். தூங்கிவிடும் அபாயம் இருக்கிறது. புதிய அறிவியல் விஷயங்களை சொல்லும் ஆர்வத்தில் பாதரசத்தின் தன்மையை எழுதியிருக்கிறார்.

ஓசையில்லாத பிம்பத்தை போல விழுந்து விட்டாயே மனசுக்குள்ள!

புண்ணாக்குன்னு: நா. முத்துகுமார் – டிப்பு, ஸ்ரீராம் – **/4

காரணமில்லாமலோ காரணத்துடனோ சாமியின் ‘வேப்பமரம் பாடல்’ நினைவுக்கு வரலாம்.
‘கள்ளில் சிறந்த கள்ளு ஒத்த மரத்து கள்ளு
டயரில் பெரிய டயரு லாரியோட டயரு’

ஒட்டியாணம்: வைரமுத்து – ஹரிஹரன், மதுமிதா – **/4

வைரமுத்து இனிப்பான காதல் பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார். இப்ப அவருக்கு என்னாச்சுங்க ?

‘தங்கத்தோடு நான் தாரேன்
அங்கத்தோடு நீ வாரியா?
மஞ்சக் கயிறு நீ தந்தா
என்ன உரிச்சு தாரேன்யா’

சூடாமணி: ஸ்னேஹன் – ரஞ்சித், ஷாலினி சிங் – **/4

சிட்டி காலத்திற்கு ஏற்ற பாய்ஸ் ‘டேட்டிங்’ ஆகவும் இல்லாமல், முதல் மரியாதை எசப்பாட்டாகவும் முடியாமல் தவிக்கும் பாடல்.

‘ஆம்பளைக்கு எப்பவுமே கை கொஞ்சம் நீளம்
கூட்டத்தில் பொண்ணு இருந்தா சீண்டிப் பார்க்க தோணும்
பொம்பளைக்கு எப்பவுமே வாய் ரொம்ப அதிகம்
ஆம்பளையக் கண்டா எப்பவுமே ஜாடை பேசத் தோணும்’

‘மின்னலே’ ஹாரிஸ் ஜெயராஜும் தெரியவில்லை; ‘சாமி’யும் ஆடவில்லை. இந்த ஒலி நாடாவைக் கேட்காவிட்டால் பெரிதாக ஒன்றும் தவறவிடப்போவதில்லை. கவிதைக்கெல்லாம் கஷ்டப்படாத பாடல் வரிகள். ஆனால், எனக்கு ‘கில்லி’யின் பாடல்கள் கூட பெரிதாக ரசிக்கவில்லை. சிலர் இப்பொழுது ரம்மியமான பாடல்கள், புத்திசை கானங்கள் என்று விமர்சிக்க, படம் ஹிட்டானதால் ‘கொக்கரக்கோ’வை நூற்றியெட்டு முறை கேட்டதாலும் குழப்பத்தில் உள்ளது போல், இந்தப் பாடல்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது.

நன்றி: தமிழோவியம்

Categories: Uncategorized

யாஹு க்ரூப்ஸ்

April 30, 2004 Leave a comment

சில தமிழ் சார்ந்த யாஹு குழுமங்களும் அவற்றில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைகளும்:

ஆதி மரத்தடி – 72
அகண்ட பாரதம் – 276
அகத்தியர் – 516
தினம் ஒரு கவிதை – 1800
எறும்புகள் – 29
ஈ-சுவடி – 272
ஈ-உதவி – 178
பெட்னா – Federation of Tamil Sangams of North America – 1646
க்ளோபல் தமிழ் – 1262
இந்திய மரபுகள் – 518
கலைச்சொல் – புதிய சொல்லாக்கம் – 81
கலைவாணி – 239
மரபிலக்கியம் – 42
மரத்தடி – 379
மெய்கண்டார் – 243
மதுரை திட்டம் – 309
பொன்னியின் செல்வன் – 405
பொ.செ.-வரலாறு – 86
புத்தகப்புழு – 60
ராயர் காபி க்ளப் – 255
ஆர்.கே.கே – கோப்புகள் – 218
சந்தவசந்தம் – 75
தமிழில் அறிவியல் – 36
தமிழ்ல் தொழிற்நுட்பம் – 21
தமிழ்-உலகம் – 541
தமிழ்-ஆராய்ச்சி – 2038
தமிழ்ப் பாடல்கள் – 4822
தமிழ் வலைப்பதிவாளர்கள் (ஆங்கிலம்) – 34
தமிழ் வலைப்பதிவாளர்கள் – 95
தமிழ் லீனக்ஸ் – 427
பாடல் வரிகள் – 1103
சிறுகதை விவாதகளம் – 57
தினம் ஒரு திரைப்பாடல் – 142
தமிழக மீனவர்கள் – 6
தமிழா! உலாவி – 90
‘தென்றல்’ – அமெரிக்காவில் வெளிவரும் மாத இதழ் – 1273
துளிப்பா – 106
உண்மை – 25
உயிரெழுத்து – 140
வாலி – தமிழ்ப்பாடல் வரிகள் – 582
‘ழ’ கணினி – தமிழ் பிசி திட்டம் – 69

Categories: Uncategorized

மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்…

April 30, 2004 Leave a comment
Categories: Uncategorized

தீராநதி & குமுதம்

April 29, 2004 Leave a comment


தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!


அரசு பதில்கள்
முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று…? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

Categories: Uncategorized

தீராநதி & குமுதம்

April 29, 2004 Leave a comment


தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!


அரசு பதில்கள்
முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று…? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

Categories: Uncategorized

தீராநதி & குமுதம்

April 29, 2004 Leave a comment


தீராநதி: அந்த ஆளைப் பார்த்தால் பஸ் நிறுத்தத்தில் நிற்கும் ஜேப்படிக்காரன் போல இருக்கிறது’’ என்று ஆந்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பாராளுமன்ற அங்கத்தினர் ரேணுகா சவுத்தரி சொன்னதாக ஒரு தேசிய ஆங்கில மொழி நாளேட்டில், ‘இவர்கள் சொன்னார்கள்’ பகுதியில் வெளி வந்தது. அந்த ஆள் யார் என்று இன்றைய இந்திய அரசியல் பரிச்சயம் உடையவர்கள் கூறி விட முடியும்; சந்திரபாபு நாயுடு. ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர். இதை அரசியல் விமரிசனம் என்பதைவிட வசை பாடல் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் நூலாக வெளிவந்தால் ரேணுகா சவுத்தரிக்கு ஒரு பிரதி அனுப்பலாம். பஸ் நிறுத்தங்களில் நிற்பவர்கள் பற்றி அவருக்கு நல்ல அபிப்பிராயம் ஏற்படக்கூடும்.ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம், ஒரு பாராளுமன்ற அங்கத்தினர் பஸ் நிறுத்தங்களைக் கவனித்திருக்கிறார்!


அரசு பதில்கள்
முரு. ராமலிங்கம், திருப்பத்தூர்.

‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ என்பதற்கு சமீபத்திய உதாரணம்?

யானையிறவு யுத்தத்தில் எதிரிகளைச் சிதறடித்தவர் அவர். பிரபாகரனின் சொந்த ஊரை ராணுவம் சூழ்ந்தபோது கிழக்கிலிருந்து மாபெரும் படையுடன் புறப்பட்டு வந்து முற்றுகையை உடைத்தெறிந்தவர். கொரில்லா போர் முறையில் கில்லாடியான வீரர். இன்று…? எங்கிருக்கிறார்? என்ன ஆனார்? என்னதான் நடந்தது?

Categories: Uncategorized

குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க நிரந்தர வழி – ப.மு.நடராசன்

April 29, 2004 Leave a comment

கட்டுரையாளர்: முன்னாள் துணை இயக்குநர் (நிலவியல்), நீர் ஆய்வு நிறுவனம்.

இந்திய நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்தபடியாக நீர்வளத்தில் மிகவும் பின்தங்கிய மாநிலம் தமிழகம் ஆகும். தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வழிகள்:

மழைநீர் சேகரிப்பு: தமிழகத்தின் 70 ஆண்டுகளின் சராசரி மழையளவு 925 மில்லி மீட்டர் ஆகும். இந்த மழை நீரை வீட்டுக் கூரைகள் அல்லது செயற்கை முறை நிலநீர்ச்செறிவு ஆகிய வழிகளில் சேகரிக்க முடியும். தமிழகத்தில் பெய்யும் எல்லா மழைநீரையும் சேகரித்தால் 4,57,900 கோடி கனஅடி தண்ணீர் பெற்று, தமிழக மக்கள் அனைவருக்கும் நபருக்கு நாள் ஒன்றிற்கு 5,730 லிட்டர் தண்ணீர் வழங்க முடியும். தற்பொழுது இங்கு சராசரியாக வழங்கப்படும் 70 லிட்டரைவிட இது 82 மடங்கு கூடுதலாகும்.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதால் பெரும் பயன் விளைவது உண்மை. ஆனால் தமிழகத்தின் வீட்டுக்கூரையின் பரப்பளவு இம்மாநிலத்தின் பரப்பளவில் சுமார் 5 விழுக்காடு. எனவே 1,850 கோடி கனஅடி நீரைத்தான் வீட்டுக்கூரைகளின் மூலம் சேகரிக்க முடியும். இத்தண்ணீரைக் கொண்டு தமிழக மக்களின் அன்றாட ஆண்டுத் தேவைக்குத் தேவைப்படும் 5,604 கோடி கனஅடி நீரில் சுமார் 33 விழுக்காடு தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும்.

செயற்கை நிலநீர்ச் செறிவு: சுமார் 30 வகைப்பட்ட செயற்கை நிலநீர்ச் செறிவுமுறைகளால், தமிழகத்தின் நிலநீர்ச் செறிவை மேற்கொள்வதன் மூலம் கூடுதலாக 37,500 கோடி கனஅடி நிலநீரைப் பெருக்க முடியும்.

* தமிழகத்தின் மொத்த ஆண்டு நீர்வளம் 1,67,400 கோடி கனஅடி.

* கி.பி. 2025 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த்தேவை 2,42,300 கோடி கனஅடி.

* நீர் இருப்பிற்கும் பற்றாக்கு றைக்கும் உள்ள இடைவெளி 74,900 கோடி கனஅடி – அதாவது 47.74 விழுக்காடு பற்றாக்குறை.

* கி.பி. 2050 ஆம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவைக்கும் இருப்பிற்கும் உள்ள இடைவெளி 1,49,900 கோடி கனஅடி – அதாவது 89.55 விழுக்காடு பற்றாக்குறை.

ஆனால் கூரை மழைநீர் சேகரிப்பு, செயற்கை நிலநீர்ச் செறிவு ஆகிய வழிகளில் 39,350 கோடி கனஅடி நீரைத்தான் சேகரிக்க முடியும். எனவே இக்கூடுதல் நீர்வளத்தைக் கொண்டு கி.பி. 2025 ஆம் ஆண்டு மற்றும் கி.பி. 2050 ஆம் ஆண்டின் தமிழக நீர்த்தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது.

இந்திய நதிகளில் ஒவ்வொரு நல்ல பருவமழைக் காலத்திலும் சுமார் 52,54,800 கோடி கனஅடி நீர் கடலில் வீணாகின்றது. கிழக்கு நோக்கிப் பாயும் மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய தென்னக நதிகளில் நல்ல மழைப் பருவத்தில் சுமார் 2,51,600 கோடி கனஅடிநீர் கடலில் வீணாகின்றது.

* தமிழகத்தின் கி.பி. 2025 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் 39 மடங்கும்,
* கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த் தேவையில் சுமார் 25 மடங்கும் இந்திய நதிகளில் வீணாகின்றது.

இதைப்போல மேலே கூறியுள்ள மூன்று தென்னக நதிகளில் தமிழகத்தின் கி.பி. 2050 ஆம் ஆண்டின் நீர்த்தேவையில் சுமார் இரு மடங்கு தண்ணீர் கடலில் வீணாகின்றது. எனவே நதிகள் இணைப்பின் வாயிலாகத் தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை முற்றிலுமாகப் போக்க முடியும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது ஒன்றே தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டை நிரந்தரமாகத் தீர்க்கக்கூடிய மாற்று ஏற்பாடு ஆகும். பல மத்திய கிழக்கு நாடுகள், அவற்றின் தண்ணீர்த் தேவைகளை கடல்நீரைத் தூய்மைப்படுத்தும் பல்வேறு வழிகளில் நிறைவேற்றி வருகின்றன. இவற்றில், குறைவெப்பப் பல்வழி காய்ச்சி வடிக்கும் முறையில் (Low Temperature Multi Effect Distillation Process – MED) ஒரு லிட்டர் கடல்நீரைத் தூய்மைப்படுத்த ஐந்து பைசா செலவாகின்றது. தமிழகத்தின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க இவ்வழியே மிகவும் சிறந்ததாகும்.

கடல்நீரைத் தூய்மைப்படுத்தி தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாகத் தேவைப்படும் 3,000 கோடி கனஅடி தண்ணீரைப் பெற ரூ. 4,248 கோடி செலவு செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் 8 கோடி கனஅடி நீரைப் பெற ரூ. 12 கோடி கூடுதலாகச் செலவு செய்து கடல்நீரைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

சென்னை நகரின் குடிதண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க தெலுங்கு கங்கைத் திட்டத்திற்குச் சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் இருந்தால்தான் வீராணம் திட்டம் வெற்றி பெறும். சென்னையில் தற்பொழுதுள்ள வறட்சியைப் போக்க 700 கோடி ரூபாய் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனாலும் நிரந்தரத் தீர்வு காண முடியாது. ஆனால் மேலே கூறியுள்ள மொத்தச் செலவையும் கடல்நீரைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தினால், 1,734 கோடி கனஅடி நீர்வளத்தைப் பெருக்கி, நபருக்கு நாள் ஒன்றிற்கு 245 லிட்டர் வீதம் சென்னை மக்களுக்குத் தொடர்ந்து தண்ணீர் வழங்க முடியும்.

நன்றி: தினமணி – 27-04-2004

Categories: Uncategorized