உலகமெலாம் தமிழோசை – திருப்பூர் கிருஷ்ணன்
அமுதசுரபி – சிஃபி:”ஒருமுறை என் சகோதரியுடன் பேருந்தில் கேரளப் பயணம் மேற்கொண்டேன். அவளுக்காக வழியில் இறங்கிப் பூ வாங்கினேன். அதற்குள் பேருந்து புறப்பட எத்தனித்தது. அவசர அவசரமாகப் பூவுடன் பேருந்தில் ஏறினேன். “பூவா!’ என்று உரத்த குரýல் கூவினார் நடத்துநர். “ஆமாம்!’ என்றேன் நானும் பதிலுக்கு உரத்த குரýல்! என் சகோதரியின் முகமெல்லாம் முறுவல். என்ன செய்ய? “பூவா’ என்றால் “போகலாம்!’ என்று அர்த்தம் என்பதும் நடத்துநர் ஓட்டுநரிடம் போகலாம் என்பதைத்தான் உரத்த குரýல் தெரிவித்திருக்கிறார் என்பதும் அப்போது எனக்குத் தெரியவில்லை!
இந்தி மக்கள், மிக ஆதரவான வர்கள். நாம் சுமாரான இந்தியில் பேசினால் கூட, அன்போடு சிரித்தவாறே பதில் சொல்வார்கள். ஆங்கிலத்தில் பேசினால் அவர்களிட மிருந்து பதில் கிடைப்பது சிரமம். ஆங்கிலம் பெரும் பாலானவர் களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல; தெரிந்த சிலரும் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
ஆங்கிலம் தெரியாவிட்டாலும் கூடத் தெரிந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் பெருமையும் அடைபவர்கள் தமிழர்கள் மட்டுமே. இந்தியர்கள் இருவர் எங்கு சந்தித்தாலும் தாய்மொழியில் பேசிக்கொண்டால் அவர்கள் மலையாளிகள் என்றும் தப்புத் தப்பான ஆங்கிலத்தில் பேசினால் அவர்கள் தமிழர்கள் என்றும் சொல்வதுண்டு.
தாய்மொழியைத் தவிரக் கூடுதலாக ஓரிரு மொழிகள் தெரிந்துகொள்வது எல்லோருக்கும் நல்லது. குறிப்பாக எழுத்தாளர்களுக்கு மிக மிக நல்லது. எழுத்தாளர்கள் ராஜம்கிருஷ்ணனைப் போல அதிகப் பயணங்கள் மேற்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் மனம் விசாலமடையும். தமிழ் மட்டுமே தெரிந்து தமிழகத்தில் மட்டுமே உழன்று கொண்டி ருக்கும் எழுத்தாளர்களால் குறுகிய கண்ணோட்டங்களிýருந்து மீள இயலாது. அடிமனத் திலேயே குறுகிய கண்ணோட் டங்கள் தவறு என்று அவர்கள் உணராதவரை வெறும் அறிவுபூர்வ விவாதங்களால் அவர்களை மாற்றவும் இயலாது. அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, சுந்தர ராமசாமி போன்ற எழுத்தாளர்கள், ஜாதி, மதம் போன்ற குறுகிய பார்வைகளை விட்டுவிட்டு மேலான தளத்தில் மனிதனை மனிதனாகப் பார்த்து எழுதப் பல காரணங்கள் உண்டு. அவர்கள் பல வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதும் அதற்கான முக்கியமான காரணமாய் இருக்கக்கூடும். நாட்டின் பல பாகங்களையும் உலகின் பல பாகங்களையும் போய்ப் பார்த்து வருகிற போது மனம் சுலபமாய் விசாலமடைகிறது. “யாதும் ஊரே!’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வார்த் தைகளை உண்மையாகவே அனுபவித்து உணர்ந்தால்தான் “யாவரும் கேளிர்!’ என்ற அடுத்த வார்த்தைகளின் ஆழம் புரியும்.”
Recent Comments