Archive

Archive for May 2, 2004

ஹேஷ்ய செய்திகள் – ரஜினி படக்கதை

ஜுனியர் விகடன்.காம்: தனது புதுப்படத்துக்கு ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் கதையில் அரசியல் வாடை ஒரு படி தூக்கலாகவே இருப்பது உறுதியாகிவிட்டது. கூடவே, தனது லட்சிய கோஷமான நதி நீர் இணைப்பை நினைவுபடுத்தும் ஒரு முடிச்சையும் இந்தக் கதைக்குள் அவர் நுழைத்திருக்கிறார் என்கிறது விஷயமறிந்த கோடம்பாக்க வட்டாரம்.

‘‘மே நான்காம் தேதி படம் பற்றிய அறிவிப்பு.. அதன்பிறகு, கேரளாவுக்குப் போய் இயற்கை மூலிகை வைத்தியசாலையில் உடம்புக்கு பொலிவும் தெம்பும் கொடுப்பது.. ஜூன் மாதம் பூஜை போட்டு ஷ¨ட்டிங்.. தீபாவளிக்கு ரிலீஸ். இதுதான் ரஜினியின் திட்டம்’’ என்கின்றன கோடம்பாக்கத்துப் பட்சிகள்.

இசைக்கு வித்யாசாகர் அல்லது ஹாரீஸ் ஜெயராஜ்.. கதாநாயகியாக ஜோதிகா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேசி வைத்திருக்கிறார்கள்.

சரி என்னதான் கதை?

ரஜினிக்கு இரட்டை வேடம். அப்பா ரஜினி, அந்த ஊரின் உச்சகட்ட மதிப்பைப் பெற்ற மனிதர். அவருக்கு ஒரு பங்காளி! இவர் எதைச் செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து கிண்டலடிப்பதே அந்தப் பங்காளியின் வேலை (‘பாபா’ யாரைச் சொல்ல வர்றார்னு புரியுதா?).

மகன் ரஜினி வெளிநாட்டில் படிக்கிறார். அங்கே காதல், மோதல் என்று அவர் ஜாலி பண்ணிக் கொண்டிருக்கும்போது.. இங்கே ஊருக்குள் தண்ணீர் பிரச்னை பெரும் பூதமாக வந்து வாட்டுகிறது. பக்கத்து ஊர் வழியே ஓடுகிற நதியிலிருந்து நீரை கால்வாய் மூலம் இந்த ஊருக்குக் கொண்டு வந்தால்தான் தாகம் தீரும்.. விவசாயம் பிழைக்கும் என்ற நிலை.

முழுக்கதையும் கதைக்க: திசை திருப்பவா.. திணறடிக்கவா? – புதுப்படத்துக்கு ரஜினி தயார்!

Categories: Uncategorized

ஆச்சிமகனின் கேள்விகள்

கற்றலின் இனிமை:

கவிதைத் துறையில் மரபுக் கவிதை காணாமல் போனதை – இல்லையில்லை கொன்றழிக்கப் பட்டதை – நினைத்துக் குமுறிக் கொண்டிருக்கும் தமிழ் ஆர்வலர்களில் நானும் ஒருவன். புதுக் கவிதை என்ற பெயரால் தமிழை அழித்த இவர்கள் கூறுவது என்ன? எதுகையும் மோனையும் இன்புறக் கூடி அழகிய நடையில் கவிதை வடிப்பது குற்றமாம்.

மரபு சார் கவிதைக்கு முயற்சியும் பயிற்சியும் தேவைப்பட்டது. கண்டதைக் கிறுக்கி விட்டுக் கவிதை என்று பெயர் சூட்ட முடியவில்லை. இலக்கணம் படித்து எழுதுதல் கடினம் என்று இவர்கள் எண்ணிக் கொண்டார்கள். கல்லடுக்கி வீடு கட்டுதல் போல சொல்லடுக்கிக் கவிதை கூற முயன்றார்கள். அடுக்கும் பயிற்சியில் தோற்றுப் போய்க் கவிதை மரபையே உடைத்து நொறுக்கி விட்டார்கள்.

கற்பனை நயம் போதுமாம் – கருத்தாழம் போதுமாம் – அழகிய மொழிநடை மட்டும் வேண்டாமாம். வாலறுந்த நரி உங்கள் நினைவுக்கு வந்தால் அது என் குற்றம் அல்ல. அழகிய மொழிநடையிலான மரபுசார் கவிதைகள் மட்டும் தொடர்ந்திருந்தால் தமிழும் தமிழனும் மென்மேலும் வளர்ந்திருப்பர் என்று நான் நம்புகிறேன்.

முழுவதும் படிக்க: எனக்குப் புரியவில்லை..

Categories: Uncategorized