Home
> Uncategorized > விருது பெற்ற புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (9)
விருது பெற்ற புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (9)
கசந்த இனிப்புகள்: டில்லியில் நடத்திய குடும்பக்கட்டுப்பாடு நாவல் போட்டியில் 1978-இல் தமிழுக்குப் பரிசு கொடுக்கப்பட்ட படைப்பு. குழந்தைகள் கடவுள் கொடுத்த பரிசு; அந்த இனிப்பான பரிசு எப்படிக் கசந்து போகிறது என்பதை ருசிகரமாகச் சொல்லும் புதினம்.
விதியின் பின்னல்: தமிழக அரசால் 1977-இல் மதுவிலக்கு நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகம். திரு. ப. நீலகண்டன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசி ‘நீளமாயிருக்கிறதென்று’ குறைத்துத் தரச் சொன்னார். மாண்புமிகு முன்னாள் அமைச்சர் ஆர். எம். வீரப்பன் அவர்கள் பரிசு வழங்கினார்கள். பொருட்காட்சியில் இந்நாடகம் நடிக்கப்பட்டது. மெட்ராஸ் பாஷை ஊடாடிய போரடிக்காத நாடகம். புத்தகமாக வெளிவராமல் ‘பழனியப்பா பிரதர்ஸில்’ உறங்கிக் கொண்டிருக்கிறது.
(சிறு குறிப்பு வளரும்)
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments