Archive

Archive for June, 2004

தேர்வு எழுத வருகிறீர்களா?

June 30, 2004 Leave a comment

WSPQ Results: Your Political Philosophy: Libertarian – “Libertarians are self-governors in both personal and economic matters. They believe government’s only purpose is to protect people from coercion and violence. They value individual responsibility, and tolerate economic and social diversity.”


Tickle: IQ and Personality Tests – Tickle.com: The Classic IQ Test: “Your IQ score is 133.

This number is based on a scientific formula that compares how many questions you answered correctly on the Classic IQ Test relative to others.

Your Intellectual Type is Word Warrior. This means you have exceptional verbal skills. You can easily make sense of complex issues and take an unusually creative approach to solving problems. Your strengths also make you a visionary. Even without trying you’re able to come up with lots of new and creative ideas.”

Just for fun you can take once. Little bit similar to the ones we would have seen in CSR for the BSRB & Railways!

Categories: Uncategorized

தேவை: விடை (மற்றும் அமெரிக்கப் பத்திரிகைகளில் இந்தியா)

June 30, 2004 5 comments

இது நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்வி. எனக்கு விடை தெரியாது.

இரண்டு குச்சிகள் இருக்கிறது. இரண்டையும் எரித்தால் (தனித்தனியே) ஒரு நிமிடத்துக்கு எரியும். இந்தத் தகவலை மட்டும் வைத்துக் கொண்டு 45 விநாடிகளை எவ்வாறு கணக்கிட முடியும். இரண்டு குச்சிகளும் எரிந்து முடிக்க அறுபது விநாடிகள் எடுத்துக் கொண்டாலும், ஒரே மாதிரி இருப்பவை அல்ல. அந்தக் குச்சிகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் – சதுரம், முக்கோணம், வட்டம், கோணல், மானலாக…. எந்த முறையற்ற வடிவத்தில் இருந்தாலும் நாற்பத்தைந்து நொடிகளைக் கணக்கு பண்ண வழி சொல்லவேண்டும்.

எப்படி? தெரியுமா…..???


சமீபத்தில் படித்ததில் நெஞ்சை விட்டு அகலாதது.
The New Yorker: In the Magazine: “Katherine Boo’s Letter from India – The Best Job in Town: What an American firm is offering.”

நேரம் கிடைக்கும்போது, பகுதிகளாக மொழியாக்கம் செய்ய விருப்பம். புத்தகக்கடைப் பக்கம் ஒதுங்கியோ அல்லது லைப்ரரியில் இருந்து படிக்க சான்ஸ் கிடைத்தாலோ, தவறவிடாதீர்கள். சென்னைவாசி ஒருவரின் வாழ்க்கையை வைத்துக் கொண்டு இந்தியாவை அலசி, அமெரிக்காவோடு ஒப்பிட்டு, அட்வைஸ் தொனி தெறிக்காமல் ஆராய்ந்து, inferenceகளை வாசகனிடம் விட்டுவிடும் கட்டுரை.


இந்திய நுகர்வோரை மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கும் பிஸினஸ் 2.0 மேட்டர் படிக்க சுவையானது. அமெரிக்க மல்டிநேஷனல்கள் ஏற்கனவே சுறுசுறுப்பாக களமிறங்கி இருக்கிறார்களே!
Business 2.0 – Magazine Article – The New Land of Opportunity: It’s a global economy — so quit whining about outsourcing. India’s booming middle class has $420 billion to spend. Here’s how to grab your share.


தெரிந்த விஷயம்தான்… 🙂
Economist.com | India and Pakistan: Though détente survives India’s election, a Kashmir peace is still elusive.

Categories: Uncategorized

படித்தவை

June 29, 2004 Leave a comment

சாராயமும், லாட்டரியும் – ஹரி:

தமிழக முதல்வர் லாட்டரி சீட்டுக்களுக்குத் தடை விதித்திருக்க வேண்டாம். அரசுக்கும் நல்ல வருமானமாக இருந்திருக்கும். மேலும், நீங்கள் (ஹரி) சொல்வது போல், இத்தகைய விவாதங்களை மக்களிடமே எடுத்து சென்று referendum கோரி, பெரும்பான்மை மக்களின் முடிவை சட்டமாக்கலாம். இதன் மூலம், நீதிமன்றங்களின் பலுவும் குறையும். சட்டமன்றம் ஒரு விஷயத்தை விவாதித்து சட்டமாக்க, அதை மக்கள் எதிர்த்து ரிட் போட, செஷன்ஸ் கோர்ட் அதற்குத் தடை விதிக்க, உயர்நீதிமன்றம்…. என்று endless loop கொஞ்சம் சீர்படுத்தபடலாம்?!


மன்மோகன் சிங்கின் மனக்கவலை – கி.கஸ்தூரி ரங்கன்: “யார் அமைச்சராக வேண்டும், என்ன இலாகாவைத் தரவேண்டும் என்பதையெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களே முடிவு செய்துவிட்டனர். லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் லஞ்ச ஊழல் மற்றும் கொலை கொள்ளை போன்ற கொடூர குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள்.

ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார்: 1984-ல் தில்லியில் 2000க்கு மேல் அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களைப் பின்னணியிலிருந்து இயக்கியவர்களில் இந்த இருவரும் உண்டு என்று சீக்கியத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.

கூட்டணி ஆட்சிக்கு வெளியே இருந்துகொண்டு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை ஏற்று அமைக்கப்பட்ட எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை. ‘சூப்பர் பிரதமர்’ என்று கருதப்படும் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. 19 கட்சிகள் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர். காபினட் அந்தஸ்துடன் கூடிய தேசிய ஆலோசகர் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ம¦றி பிரதமர் செயல்பட முடியாது. கம்யூனிஸ்ட் தலைமை மற்றொரு அரசியல் அதிகார மையமாக இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சுதந்திரமாக செயல்பட முடியாது.”


The Maanga, Reloaded.: ICC’s Rule Changes:

  • The idea of playing 12-a-side cricket, with 11 batsmen and 11 on the field at any time.
  • Gaining two dismissals with one ball.
  • Giving the umpires a ear-piece attached to Stump Camera.
  • Wireless aid for determining whether the ball pitched in line.”
  • Categories: Uncategorized

    சொல்லாமலே போன கதை

    June 28, 2004 1 comment

    ‘செயின்ஃபில்ட்’ (Seinfeld) அமெரிக்காவில் புகழ்பெற்ற காமெடித் தொடர். அதில் வரும் ஒரு காட்சியை இந்தப் படம் நினைவுக்குக் கொண்டு வந்தது.

    Seinfeld: ‘அந்த சினிமாவுக்குப் போகலாம்… ரெடியா?’
    நண்பர்கள்: ‘ஐயோ… அந்தப் படமா! படு மோசமாச்சே… நான் வர மாட்டேன்!’
    Seinfeld: ‘மோசமான படத்துக்குத்தான் கூட ஆள் வேண்டும். தனியாக காமெண்ட் அடிக்கமுடியாது; கிண்டல் செய்வதை ரசிக்க துணைக்கு ஒருத்தர் வேண்டும்!’

    ‘லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷனை’ (Lost in Translation) பார்த்த சோகத்தைப் பகிர்ந்து கொள்ள மனைவி இருந்தது ஆறுதல். படத்தின் அறிமுகம்+விமர்சனத்தை இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம்….

    அமெரிக்கர்கள் இருவர், ஜப்பானில் சந்தித்து நட்பு பாராட்டுகிறார்கள். நடு வயது போராட்டத்தில் தத்தளிக்கிறோமோ என்று குழம்பும் ஹீரோ ‘பில் முர்ரே’. இளவயது உளவியல் பட்டதாரியாக அழகு ஹீரோயின் ‘ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்’. தொலைபேசியில் ரிப்போர்ட் கொடுக்கும் மனைவியை காதில் வாங்கிக் கொண்டு, குழந்தைச் செல்வங்களிடமிருந்து தப்பித்து, வாழ்க்கையை தள்ளி வருகிறார் ஹீரோ. புகைப்பட பிடிப்பு மேல் பெரும்பிடிப்பு கொண்ட காதல் கணவனிடம் பிடிப்பில்லாமல், போரடிக்கிறது ஹீரோயினுக்கு. விஸ்கி விளம்பரத்திற்காக டோ க்யோ வந்து சேருகிறார் ‘எண்பதுகளின் மார்க்கெட் இழந்த சிவாஜி கணேசன்’ போன்ற ஹீரோ.

    சாதாரணமாக தனிமையில் வாடும் ஆண்-பெண் சந்தித்தால், ஒரு முத்தம், ஒரு நிலவு, ஒரு விருந்து, பிறகு படுக்கை என்று நிறையப் படங்கள் முன்னேறும். (படுக்கையில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்கள் என்று காட்டப்படுவதை பொறுத்து, PG-13, R, NC-17 என்று சான்றிதழ் தந்து விடுவார்கள்.) இங்கு இயக்குநர் சோஃபியா வித்தியாசப் படுகிறார். நிஜ வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்வோமோ, எவ்வாறு சும்மா, சாதாரணமாக அளவளாவுவோமோ, அவ்வாறே டயலாக்+காட்சியமைப்பு வைத்தது ஆச்சரியம்தான்.

    ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஜெட்-லாஃக்கினால் அவதிப்படுகிறார்கள். (இவ்வளவு நாள் ஜெட்-லாஃக் நீடிக்கும் என்று எந்த மறத்தமிழனும் ஒப்புக் கொள்ளமாட்டான். கிடைக்கும் இருபது நாள் விடுமுறையில் இவ்வளவு நாள் ‘இது இரவா… இல்லை பகலா’ என்று கஷ்டப்பட்டால் வெகேஷன் கோவிந்தா…. கோவிந்தா….). ஜப்பானிய மொழி தெரியாமல் சிற்றுண்டி முதல் ஆஸ்பத்திரி வரை அல்லல்படுகிறார்கள். (முப்பது நாளில் ஜப்பானிய மொழி புத்தகங்களையும் நக்கலடிக்கிறார்கள். காதலியிடம் சொல்லும் ‘நான் உங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாக விரும்புகிறேன்’ போன்ற சொற்றொடர்களை எசகுபிசகாக ஓட்டல் மேனேஜரிடம் சொல்லி ரியாக்ஷன் பார்த்து சிரிப்பது… சொக்கன் இப்பொழுதுதான் ஜப்பானில் இருந்து திரும்பியுள்ளார்… அவ்வளவு கஷ்டமா இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்).

    இந்தப் படத்தை இயக்கியவர் ‘காட்ஃபாதர்’ புகழ் கோப்போலாவின் மகள் சோஃபியா. அவரின் நிஜ வாழ்க்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பவராக ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கும், தன் முன்னாள் கணவனுக்கும் இடையிலே இருந்த பிஸினஸ் ஒப்பந்தத்தை ஒத்த திருமணம், கணவனுக்கும் ‘There’s Something About Mary’ கேமரான் டையாஸுக்கும் உள்ள உறவு போன்றவற்றின் தாக்கம் நிறைந்திருப்பதாக விஷயமறிந்த IMDB வட்டாரங்கள் சொல்கிறது.

    படத்தின் இறுதியில் பில் முரே, ஹீரோயினின் காதில் ஏதோ கிசுகிசுப்பார். அவர் என்ன சொன்னர், அவள் ஏன் மெல்ல சிரித்தாள் என்பது மிகவும் அலசப்பட்டது. அது என்ன என்பது நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே, அது போல் பூடகத்தன்மை.

    மரத்தடி குழுமத்தில் ஷக்தி எழுதியதுபோல் ஸ்ல்ல்ல்ல்லோ படத்திலும் இதை சேர்க்கமுடியாது. ஆனால், மாறுபட்ட எதையோ சொல்ல வரும் கதாசிரியர், வித்தியாசமான தாக்கத்தைக் கொண்டு வர நினைத்து ஏமாற்றிக் கொள்கிறார் என்றே தோன்றியது! கவிதையில் சப்-டெக்ஸ்ட் பார்த்திருக்கிறேன். கதைகளில், திரைப்படங்களில் கூட ரசித்திருக்கிறேன். வெளிப்படையாய் ஏதும் புரியாமல், பூடகத்தனமை மட்டுமே குடிகொண்டு, ஆஸ்கார் விருது தேர்வாளர்களுக்கு மட்டுமே விரும்பக்கூடிய படம்.

    Categories: Uncategorized

    விருப்பப் பட்டியல் – வைரமுத்து

    June 27, 2004 3 comments

    கேள் மனமே கேள்

    சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்
    சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்
    ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்
    ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்
    சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்
    சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்
    யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்
    உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

    கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்
    கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்
    பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்
    பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்
    வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்
    விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்
    மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்
    மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

    தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்
    தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்
    விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்
    விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்
    மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்
    மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்
    பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்
    போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

    கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்
    குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்
    மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்
    மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்
    வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்
    வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்
    பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்
    பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

    அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்
    அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்
    உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்
    உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்
    முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்
    மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்
    பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்
    பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

    முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்
    முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்
    எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்
    இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்
    தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்
    தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்
    இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்
    இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

    வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்
    வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்
    தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்
    தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்
    மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்
    மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்
    ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்
    ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

    1995

    பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். “விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது” என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.
    வைரமுத்து

    நோட் #1: ‘அமர்க்களம்’ படத்தில் இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு இடம்பெற்றது.
    நோட் #2: அதே படத்தில் இடம்பெற்ற ‘மேகங்கள் எனைத் தொட்டுப் போனதுண்டு’, எனக்கு இந்தப் பாடலை விட மிகவும் பிடிக்கும்.
    நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?

    Categories: Uncategorized

    ஊடகப்போக்கன் (க்விஸ்)

    June 25, 2004 Leave a comment

    1. 1920s National Dairy Council publication declares, “The people who have achieved, who have become large, strong, vigorous people, who have reduced their infant mortality, who have the best trades in the world, who have an appreciation for art, literature and music, who are progressive in science and every activity of the human intellect are the people who have used liberal amounts of
    a. Milk
    b. Sex
    c. Money
    d. Alcohol

    2. In ‘My Life’ President Bill Clinton writes ‘I hated to leave this place‘. Which place is he referring to?
    a. Monica Lewinsky
    b. White House
    c. Taj Mahal
    d. Arkansas

    3. What is ‘The Icarus Project’?
    a. ஐகாரஸ் ப்ரகாஷ் ஆரம்பிக்கப் போகும் புதிய இணையப் பத்திரிகை.
    b. ‘இருமுனை ஒழுங்கின்மை’ உள்ளவர்களுக்கான இணையத் தளம்.
    c. அமெரிக்கா சூரியனுக்கு அனுப்பப்போகும் விண்கலத் திட்டம்.
    d. ஏதன்ஸ் ஒலிம்பிக் கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கான பெயர்.

    4. Dalian, a port city in northeastern China, has become the Bangalore of China. Why?
    a. Starting salary: $90 a month
    b. G.E., Microsoft, Dell, SAP, H.P., Sony and Accenture, are setting up offices
    c. Due to its beautiful green spaces and nexus of universities, technical colleges.
    d. More than half graduate with engineering or science degrees, and even those who don’t spend a year studying English and computer science.

    5. மனேகா காந்திக்கு வருத்தம் தரும் போன வார நிகழ்வு எது?
    அ. கோவில்களில் பிராணிகள் பலி கொடுப்பதை தடுக்கும் சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தது.
    ஆ.ஃப்ரெஞ்ச் டிவி நிஜ நாடக நிகழ்ச்சி ஒன்றில் கோழிகள் நிஜமாகவே இறந்தது.
    இ. லஷ்மி மித்தல் திருமணத்திற்காக வருகை தந்த ஆயிரம் விருந்தினருக்கான மெனு.
    ஈ. உக்ரேனியர்களின் புதிய பதார்த்தம் பிரபலமடைந்தது: சாக்லேட்டில் முக்கியெடுக்கப்பட்ட வராகத்தின் கொழுப்பு.

    6. எது பெரிய ஊழல் குற்றச்சாட்டு?
    அ. சைனாவின் ஒலிம்பிக் திட்டப் பணங்கள், கிராமப்புற விவசாயிகளை சென்றடையாதது.
    ஆ. மாஸ்கோவில் சொந்தவீட்டுக்காரர்கள் காணாமல் போக்கப்பட்டு, அவர்களின் வீடுகள், அடுக்கு அகங்களாக சத்தமில்லாமல் மாறுவது.
    இ. கனெக்டிகட் மாகாண கவர்னர் ஜான் ரௌலண்டை ராஜினாமா செய்ய வைத்த பின்புலங்கள்.

    7. எவை நிஜமாகவே நடக்கிறது?
    அ. தூத்துக்குடியில் தலித்கள் நாய் வளர்க்க தடை. தலித்துகளின் நாய்கள், மேல்ஜாதியினர் வளர்க்கும் நாயுடன் உறவு கொள்ளும் அபாயத்தினால், இந்த உத்தரவு கொண்டுவரப் பட்டது.
    ஆ. திரையரங்குகளில் திருட்டுத்தனமாக ஆங்கிலப் படங்களை பதிவு செய்வோரை அடையாளம் காட்டினால் ஐநூறு டாலர் தரப்படும்.
    இ. ஜெர்மனியின் ஐந்து வயது சூப்பர்மேன் குழந்தையால், ஏழு பவுண்ட் எடையைத் தூக்க முடிகிறது; சகவயதுக் குழந்தைகளை விட பாதி கொழுப்பு சத்து மட்டுமே கொண்டிருந்தாலும், அவர்களை விட இரண்டு மடங்கு தசைகளைக் கொண்ட பலசாலி.
    ஈ. ஹார்வார்ட் போன்ற பல்கலைகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தீவிரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டலும், அவர்களில் பெரும்பான்மையானோர், வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்கள்தான்; அமெரிக்காவில் வாழ்பவர் இங்கும் சிறுபான்மையில்தான் இருக்கிறார்கள்.

    8. ஜனாதிபதி கலாமுக்கு துப்பாக்கி மடல் அனுப்பியவர் யார்?
    அ. முஷாரஃப்
    ஆ. ஒஸாமா
    இ. வீரப்பன்
    ஈ. சோனியா
    உ. மன்மோஹன்
    ஊ. மஹேஷ்

    9. ஐரோப்பாவில் குழந்தைகளின் இறப்பிற்கான #1 காரணம் எது?
    அ. சாலை விபத்துகள்
    ஆ. சுற்றுப்புற சுகாதாரக் கேடு
    இ. மாசுள்ள அகங்கள்
    ஈ. தீ விபத்துகள்
    உ. நீரில் மூழ்குதல்

    Categories: Uncategorized

    காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways)

    June 25, 2004 Leave a comment

    கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா: “அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாகப் பல்வேறு விருதுகள். விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகி விடுவதாகச் சலிப்புறுவான். நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத்து விரியும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றிற்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

    அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும் கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றுவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத் தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப் போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமை விரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுதிலுமே ரசசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப் பேருக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.

    ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ – எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராய வில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்.”
    நல்ல வாசிப்பை காட்சியாக்கும் கதை.


    குவளைக் கண்ணன் – இடைப்பட்ட பொழுது:

    பாட்டி வீட்டுக்குப் போனான்
    ஒரு விடுமுறையில்

    சலிப்படைந்த தினமொன்றில்
    அந்தச் சிற்றூரில்
    ஆடுகளைப் பின்தொடர்ந்து
    காட்டினுள் நுழைந்தான்

    கோடைப் பகலில்
    பின்மாலைபோல
    இருண்டிருந்த அந்தக் காட்டில்
    விசித்திர இலைகளைக் கொண்ட
    மரமொன்றுடன் நட்பானான்,
    விடைபெறும் நாளில்
    இலையொன்றைத்
    தனது நினைவாகத் தந்தனுப்பியது மரம்.

    விடுமுறை கழிந்து பள்ளி சென்றான்
    புதிய
    மொழியாசிரியை
    அந்த மரத்தின் பூவையும்
    உடற்பயிற்சி ஆசிரியர்
    மரத்தின் பட்டைகளையும்
    நினைவூட்டினார்கள்

    தனது ஜியோமிதிப் பெட்டியில்
    காட்டை எடுத்துக்கொண்டு
    சிற்றோடை போல
    ஓடிக்கொண்டிருக்கும் அவன்
    வரிகளுக்கு இடையில்
    மறைந்திருக்கும் வன்மிருகங்களைப்
    பார்க்கவில்லை இன்னும்


    நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”


    பேராசிரியர் தொ. பரமசிவன்: “சங்க இலக்கியப் பாடல் தொகுப்புகளின் பெருமைகளில் ஒன்று அவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் படைக்கப்பட்டவை என்பதாகும். கூல வணிகன் (தானிய வணிகன்), வண்ணக்கன் (பொன்னின் மாற்று அறிந்து சொல்பவன்), அறுவை வணிகன் (துணி வாணிகன்), கணக்காயன் (ஆசிரியன்), காமாக் காணி (சோதிடம் வல்லவன்), குயத்தி, குறமகள் என்று அனைத்துத் தரப்பினரும் “செய்யுள்’ செய்யும் போது, அரசதிகாரம் பெற்ற கிழார்களும் அரசன் மனைவியரும் அரசர்களும் ஏன் பாடியிருக்கக்கூடாது?”


    பெருமாள்முருகன்: “குறையை “மக்கள் மன்றத்தில்’ வைப்பதன் மூலமாக இரு நன்மைகள் ஏற்படும். அவை:

  • க. நூலைப் பயன்படுத்தும் வாசகர்கள் இக்குறைகளை மனத்தில் கொண்டு அவற்றைக் களைந்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் எல்லா வாசகர்களும் இக்குறைகளைக் கண்டுபிடிப்பவராகச் செயல்பட முடியாது.
  • உ. பல்கலைக்கழகம் இனி வெளியிடும் நூல்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒரு செய்தி வெளியிடப்படும்போது கிடைக்கும் கவனம், தனி நபர் கடித வெளிப்பாடுகளில் கிடைக்காது என்பது இன்றைய கால விதி.”
  • Categories: Uncategorized

    தேர்தல் வருது!

    June 24, 2004 7 comments

    நான் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இந்திய வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழின் சார்பாக பத்ரியும், வெங்கட்டும் போன வருடத்துப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்கள். சென்ற வருடத்தில் வாகை சூடியவர் நம்ம வெங்கட்.

    இந்த வருடத்திற்கான முஸ்தீபு வேலைகளை சுறுசுறுப்பாக துவங்கி விட்டார்கள். நம்மிடம் எவ்வாறு நடத்தலாம், எந்த தலைப்புகளில் கருத்து கணிப்பு நடத்தலாம் என்று கேட்டிருக்கிறார்கள்: அறிவிப்பு

    தமிழ் பதிவுகளில் என்னுடைய பரிந்துரையில் இடம்பெறுபவர்கள்:

    1. அருண்
    2. பத்ரி
    3. ஹரி கிருஷ்ணன்
    4. மதுரபாரதி
    5. பவித்ரா
    6. பா ராகவன்
    7. பிகே சிவகுமார்
    8. சுந்தரவடிவேல்
    9. வெங்கடேஷ்
    10. வெங்கட்
    Categories: Uncategorized

    ரெண்டு வரி நோட்

    June 24, 2004 Leave a comment

    முத்துராமன் – ராயர் காபி க்ளப்

    1. தொடரும் நேசம் – 7837
    2. ஒற்றை மரம் – 7762

    இரண்டு அப்பா கதைகளில், ‘தொடரும் நேசம்’ ரொம்ப பிடித்திருந்தது.

    • ‘சிங்கம், புலி போல அப்பாவுக்கு சைக்கிள்’
    • ‘சைக்கிளில் பட்ட வெயில் வெளிச்சம், மிதமான ஒளியில் மின்னியது’
    • ‘நிஜம் குற்றுயிராய்க் கிடந்தது. நிழல் பார்க்கத் தூண்டுவதாய் இருந்தது’
    • ‘நடக்கத் துவங்கிய குழந்தையை, கவனமாய் கையைப் பற்றி அழைத்துச் செல்வது போலிருக்கும்’
    • ‘அப்பா ‘மவுத்’ ஆன பிற்பாடு’
    Categories: Uncategorized

    முல்ஹோலண்ட் ஃபால்ஸ்

    June 24, 2004 2 comments

    ‘ஜெனிஃபர் கானலி’யைப் பார்த்தால் மகாத்மாவே சபலப்பட்டு போவார்IMDB-இல் துழாவியபோது ‘பிதாமகனில்’ ஒரு பாடலுக்கு வந்துபோகும் சிம்ரன் போன்றவரை குறித்து ஒருவர் எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி மெலனி கிரிஃபித்துக்கு, மோசமாக நடிப்பவர்களுக்காகத் கொடுக்கப்படும் ராஸ்ப்பெரி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1950களின் லாஸ் ஏஞ்சலீஸை கண்முன்னே கொண்டு வருகிறது. ஹாலிவுட்டின் சத்யராஜ் ‘ஜான் மால்கோவிச்’ நடித்திருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணனை கேட்டால் ‘காக்க… காக்க’வின் ஆங்கில ஒரிஜினல் இதுதான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.

    என்னதான் சிறப்பான நடிகர்களை பொருத்தமான வேடங்களுக்குப் போட்டாலும், கதாபாத்திரத்தின் சித்தரிப்பு தெளிவாக இல்லாவிட்டால், படம் மக்களை சென்றடையாது என்பதற்கு, இந்தப் படம் நல்ல உதாரணம். நான்கு எல்லே போலீஸ். சட்டத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை நிலை நாட்டுபவர்கள். ஹீரோ, மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கிறார். அப்பொழுது அங்கு நிகழும் ஒரு பெண்ணின் மரணம் எவ்வாறு அவர்களைப் பிரிக்கிறது என்பதை குழப்பாமல் சொல்லியிருகிறார்கள்.

    படத்தின் தலைப்பு ஒரு காரணப் பெயர். மாஃபியாத் தலைவர்களும், போதை ராஜக்களும் எல்லேயில் கால் வைத்தால், நால்வர் அணி அவர்களைத் தள்ளிவிட்டு விடும் இடத்தின் பெயர்தான் ‘முல்ஹோலண்ட் ஃபால்ஸ்’. என்கவுண்டர், ஜெயில், வாய்தா, வக்கீல், மனித உரிமை என்று எல்லாம் சிரமப்படாமல், ஒரேயொரு தள்ளு. ஹாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புக்குரிய தரத்தை 1950ல் உலாவந்த மகிழுந்துகளின் மூலமும், ஆடைகள் மூலமும் சிறப்பாக காட்டுகிறார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் நால்வரின் தலைவரே சபலப் படுவது, பெரிய மனிதர்களின் சிறுமைத்தனம், கணவன்-மனைவி இடையே நிகழும் புரிதல், கோவலன் ஹீரோவின் குற்றவுணர்ச்சி என்று மன அலசல்களை நிறைய கோடிட்டு காட்ட வாய்ப்பிருந்தும் 70-எம்எம் அளவுக்குக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

    ஜெனிஃபர் கானலியின் படங்களாக பார்த்து வரும் எனக்கு, அவருடைய மிகச்சிறிய காரெக்டர் வருத்தத்தைத் தந்தது. ஜான் மால்கோவிச்சும் கலக்கல் நடிகர். அவருக்கு சில சுவாரசியமான வசனங்கள் தரப்பட்டுள்ளன. அணுவை குறித்து ஐந்து வரிகளில் சிறுகுறிப்பு கொடுத்து, வாழ்க்கையின் பெருங்குறிப்பு வரைகிறார். அவருடைய வசனங்களில் இருந்து சில….

  • ‘ஆயிரம் பேர் நலமாக வாழ்வதற்கு, நூறு பேர் இறக்கத்தான் வேண்டும்’. (A hundred die so that a thousand may live.)
  • ‘நாகரிகத்தின் அடையாளமாக சிலர் தங்களின் வாழ்க்கையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மற்றவர்களை வாழவைப்பார்கள்’. (Some people die before their time so that others can live. It’s a cornerstone of civilization.)

    ஹீரோயின் மெலனி கிரிஃபித் தூக்கம் வராமல் கணவனுக்காக காத்திருக்கும்போது கையில் வைத்திருக்கும் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘A Farewell to Arms’ஐ யாராவது வாசித்திருக்கிறீர்களா?

    ஏ.எம்.சி.யில் ஒளிபரப்பாகும்போது அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

  • Categories: Uncategorized