Archive
ஊடகப்போக்கன் (க்விஸ்)
1. 1920s National Dairy Council publication declares, “The people who have achieved, who have become large, strong, vigorous people, who have reduced their infant mortality, who have the best trades in the world, who have an appreciation for art, literature and music, who are progressive in science and every activity of the human intellect are the people who have used liberal amounts of
a. Milk
b. Sex
c. Money
d. Alcohol
2. In ‘My Life’ President Bill Clinton writes ‘I hated to leave this place‘. Which place is he referring to?
a. Monica Lewinsky
b. White House
c. Taj Mahal
d. Arkansas
3. What is ‘The Icarus Project’?
a. ஐகாரஸ் ப்ரகாஷ் ஆரம்பிக்கப் போகும் புதிய இணையப் பத்திரிகை.
b. ‘இருமுனை ஒழுங்கின்மை’ உள்ளவர்களுக்கான இணையத் தளம்.
c. அமெரிக்கா சூரியனுக்கு அனுப்பப்போகும் விண்கலத் திட்டம்.
d. ஏதன்ஸ் ஒலிம்பிக் கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் முடிப்பதற்கான பெயர்.
4. Dalian, a port city in northeastern China, has become the Bangalore of China. Why?
a. Starting salary: $90 a month
b. G.E., Microsoft, Dell, SAP, H.P., Sony and Accenture, are setting up offices
c. Due to its beautiful green spaces and nexus of universities, technical colleges.
d. More than half graduate with engineering or science degrees, and even those who don’t spend a year studying English and computer science.
5. மனேகா காந்திக்கு வருத்தம் தரும் போன வார நிகழ்வு எது?
அ. கோவில்களில் பிராணிகள் பலி கொடுப்பதை தடுக்கும் சட்டத்தை முதல்வர் ஜெயலலிதா ரத்து செய்தது.
ஆ.ஃப்ரெஞ்ச் டிவி நிஜ நாடக நிகழ்ச்சி ஒன்றில் கோழிகள் நிஜமாகவே இறந்தது.
இ. லஷ்மி மித்தல் திருமணத்திற்காக வருகை தந்த ஆயிரம் விருந்தினருக்கான மெனு.
ஈ. உக்ரேனியர்களின் புதிய பதார்த்தம் பிரபலமடைந்தது: சாக்லேட்டில் முக்கியெடுக்கப்பட்ட வராகத்தின் கொழுப்பு.
6. எது பெரிய ஊழல் குற்றச்சாட்டு?
அ. சைனாவின் ஒலிம்பிக் திட்டப் பணங்கள், கிராமப்புற விவசாயிகளை சென்றடையாதது.
ஆ. மாஸ்கோவில் சொந்தவீட்டுக்காரர்கள் காணாமல் போக்கப்பட்டு, அவர்களின் வீடுகள், அடுக்கு அகங்களாக சத்தமில்லாமல் மாறுவது.
இ. கனெக்டிகட் மாகாண கவர்னர் ஜான் ரௌலண்டை ராஜினாமா செய்ய வைத்த பின்புலங்கள்.
7. எவை நிஜமாகவே நடக்கிறது?
அ. தூத்துக்குடியில் தலித்கள் நாய் வளர்க்க தடை. தலித்துகளின் நாய்கள், மேல்ஜாதியினர் வளர்க்கும் நாயுடன் உறவு கொள்ளும் அபாயத்தினால், இந்த உத்தரவு கொண்டுவரப் பட்டது.
ஆ. திரையரங்குகளில் திருட்டுத்தனமாக ஆங்கிலப் படங்களை பதிவு செய்வோரை அடையாளம் காட்டினால் ஐநூறு டாலர் தரப்படும்.
இ. ஜெர்மனியின் ஐந்து வயது சூப்பர்மேன் குழந்தையால், ஏழு பவுண்ட் எடையைத் தூக்க முடிகிறது; சகவயதுக் குழந்தைகளை விட பாதி கொழுப்பு சத்து மட்டுமே கொண்டிருந்தாலும், அவர்களை விட இரண்டு மடங்கு தசைகளைக் கொண்ட பலசாலி.
ஈ. ஹார்வார்ட் போன்ற பல்கலைகளில், ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தீவிரமாக சேர்த்துக் கொள்ளப்பட்டலும், அவர்களில் பெரும்பான்மையானோர், வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டை சேர்ந்தவர்கள்தான்; அமெரிக்காவில் வாழ்பவர் இங்கும் சிறுபான்மையில்தான் இருக்கிறார்கள்.
8. ஜனாதிபதி கலாமுக்கு துப்பாக்கி மடல் அனுப்பியவர் யார்?
அ. முஷாரஃப்
ஆ. ஒஸாமா
இ. வீரப்பன்
ஈ. சோனியா
உ. மன்மோஹன்
ஊ. மஹேஷ்
9. ஐரோப்பாவில் குழந்தைகளின் இறப்பிற்கான #1 காரணம் எது?
அ. சாலை விபத்துகள்
ஆ. சுற்றுப்புற சுகாதாரக் கேடு
இ. மாசுள்ள அகங்கள்
ஈ. தீ விபத்துகள்
உ. நீரில் மூழ்குதல்
காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways)
கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா: “அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாகப் பல்வேறு விருதுகள். விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகி விடுவதாகச் சலிப்புறுவான். நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத்து விரியும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றிற்கான சிந்திப்பைக் கோரி நகரும்.
அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும் கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றுவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத் தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப் போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமை விரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுதிலுமே ரசசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப் பேருக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.
ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ – எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராய வில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்.”
நல்ல வாசிப்பை காட்சியாக்கும் கதை.
குவளைக் கண்ணன் – இடைப்பட்ட பொழுது:
பாட்டி வீட்டுக்குப் போனான்
ஒரு விடுமுறையில்
சலிப்படைந்த தினமொன்றில்
அந்தச் சிற்றூரில்
ஆடுகளைப் பின்தொடர்ந்து
காட்டினுள் நுழைந்தான்
கோடைப் பகலில்
பின்மாலைபோல
இருண்டிருந்த அந்தக் காட்டில்
விசித்திர இலைகளைக் கொண்ட
மரமொன்றுடன் நட்பானான்,
விடைபெறும் நாளில்
இலையொன்றைத்
தனது நினைவாகத் தந்தனுப்பியது மரம்.
விடுமுறை கழிந்து பள்ளி சென்றான்
புதிய
மொழியாசிரியை
அந்த மரத்தின் பூவையும்
உடற்பயிற்சி ஆசிரியர்
மரத்தின் பட்டைகளையும்
நினைவூட்டினார்கள்
தனது ஜியோமிதிப் பெட்டியில்
காட்டை எடுத்துக்கொண்டு
சிற்றோடை போல
ஓடிக்கொண்டிருக்கும் அவன்
வரிகளுக்கு இடையில்
மறைந்திருக்கும் வன்மிருகங்களைப்
பார்க்கவில்லை இன்னும்
நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”
பேராசிரியர் தொ. பரமசிவன்: “சங்க இலக்கியப் பாடல் தொகுப்புகளின் பெருமைகளில் ஒன்று அவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் படைக்கப்பட்டவை என்பதாகும். கூல வணிகன் (தானிய வணிகன்), வண்ணக்கன் (பொன்னின் மாற்று அறிந்து சொல்பவன்), அறுவை வணிகன் (துணி வாணிகன்), கணக்காயன் (ஆசிரியன்), காமாக் காணி (சோதிடம் வல்லவன்), குயத்தி, குறமகள் என்று அனைத்துத் தரப்பினரும் “செய்யுள்’ செய்யும் போது, அரசதிகாரம் பெற்ற கிழார்களும் அரசன் மனைவியரும் அரசர்களும் ஏன் பாடியிருக்கக்கூடாது?”
பெருமாள்முருகன்: “குறையை “மக்கள் மன்றத்தில்’ வைப்பதன் மூலமாக இரு நன்மைகள் ஏற்படும். அவை:
Recent Comments