Archive
படித்தவை
தமிழக முதல்வர் லாட்டரி சீட்டுக்களுக்குத் தடை விதித்திருக்க வேண்டாம். அரசுக்கும் நல்ல வருமானமாக இருந்திருக்கும். மேலும், நீங்கள் (ஹரி) சொல்வது போல், இத்தகைய விவாதங்களை மக்களிடமே எடுத்து சென்று referendum கோரி, பெரும்பான்மை மக்களின் முடிவை சட்டமாக்கலாம். இதன் மூலம், நீதிமன்றங்களின் பலுவும் குறையும். சட்டமன்றம் ஒரு விஷயத்தை விவாதித்து சட்டமாக்க, அதை மக்கள் எதிர்த்து ரிட் போட, செஷன்ஸ் கோர்ட் அதற்குத் தடை விதிக்க, உயர்நீதிமன்றம்…. என்று endless loop கொஞ்சம் சீர்படுத்தபடலாம்?!
மன்மோகன் சிங்கின் மனக்கவலை – கி.கஸ்தூரி ரங்கன்: “யார் அமைச்சராக வேண்டும், என்ன இலாகாவைத் தரவேண்டும் என்பதையெல்லாம் கூட்டணிக் கட்சித் தலைவர்களே முடிவு செய்துவிட்டனர். லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட ஆறு அமைச்சர்கள் லஞ்ச ஊழல் மற்றும் கொலை கொள்ளை போன்ற கொடூர குற்றச்சாட்டுகளின் பேரில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர்கள்.
ஜகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார்: 1984-ல் தில்லியில் 2000க்கு மேல் அப்பாவி சீக்கியர்கள் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களைப் பின்னணியிலிருந்து இயக்கியவர்களில் இந்த இருவரும் உண்டு என்று சீக்கியத் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.
கூட்டணி ஆட்சிக்கு வெளியே இருந்துகொண்டு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை ஏற்று அமைக்கப்பட்ட எந்த ஆட்சியும் நிலைத்ததில்லை. ‘சூப்பர் பிரதமர்’ என்று கருதப்படும் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் மட்டுமல்ல. 19 கட்சிகள் கொண்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர். காபினட் அந்தஸ்துடன் கூடிய தேசிய ஆலோசகர் எனவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ம¦றி பிரதமர் செயல்பட முடியாது. கம்யூனிஸ்ட் தலைமை மற்றொரு அரசியல் அதிகார மையமாக இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சுதந்திரமாக செயல்பட முடியாது.”
The Maanga, Reloaded.: ICC’s Rule Changes:
“
Recent Comments