Home
> Uncategorized > சுகிர்தாராணி
சுகிர்தாராணி
நான் திகைக்க நினைக்கையில்
அந்தரங்கம் அச்சிடப்பட்ட
புத்தகத்தையே படித்து முடித்திருந்தேன்
என் கண்களின் ஒளிக்கற்றைகள்
முன்னறையில் உறங்குபவனின்
ஆடை நெகிழ்வுகளில் பதிந்திருந்தன
கோப்பை நிறைய வழியும் மதுவோடு
என் உடல் மூழ்கி மிதந்தது
கூசும் வார்த்தைப் பிரயோகங்களை
சன்னமாய்ச் சொல்லியவாறு
சுயபுணர்ச்சியில் ஆழ்ந்திருந்த வேளை
பறவைகளின் சிறகோசை கேட்டதும்
என்னை… என்னிடத்தில் போட்டுவிட்டு
ஓடிவிட்டது இரவு மிருகம்
Categories: Uncategorized
Comments (0)
Trackbacks (0)
Leave a comment
Trackback
Recent Comments