Archive
தினமணி
Dinamani.com – Kadhir: நோட்டம்: விழிப்பு – சுகதேவ்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அலுவலக நேரங்களில் தூங்கும் அல்லது தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. அலுவலக நேரத்தில் தூங்குவது மட்டும்தான் குற்றமா..?
வேலை நேரத்தை வேலை பார்க்காமலேயே கழிப்பது… உரிய வேலையில் பாதிக்குப் பாதியோடு நிறுத்திக்கொள்வது… வேலை பார்ப்பது போன்ற தோற்றத்தை உருக்குலையாமல் தக்கவைத்து, உண்மையில் வேலையே பார்க்காமலிருப்பது… வேலையைத் தவிர வேறு “வேலை’களைச் செய்வதன் மூலம் வேலையில் நீடித்திருப்பது… இப்படி நமது அலுவல் நேர மனிதர்களில் பல முகங்கள் உண்டு.
ஊழியர்கள் வேலை செய்கிறார்களா… இல்லையா… என்பதைத் தொடர்ந்து மதிப்பிடவும் கண்காணிக்கவும் தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும் வலுவான ஏற்பாடு இருக்கும். இந்த வளையத்திலிருந்து ஊழியர்கள் பெரிதாகத் தப்பிவிட முடியாது. ஆனால் அரசு மற்றும் அரசு சார் அலுவலகங்களில் ஊழியர்களின் அன்றாட வேலை ஒழுங்கை உள்ளது உள்ளபடி பதிவு செய்வதற்கு வளைக்கமுடியாத ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறதா..? விவாதத்திற்குரியது.
ஒரு பெரிய வேலைப் பட்டாளத்தை ஒற்றை முனையிலிருந்து கண்காணித்து முற்றிலும் சரிப்படுத்திவிடுவது எப்போதும் சாத்தியமில்லை. அலுவல் நேரத்தில் தடம்புரள்வது சுயமரியாதைக்கு இழுக்கு என்ற உணர்வு, அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்க வேண்டும். சுயமரியாதை நிறைந்த மனிதர்களே சமூகத்தின் மரியாதையையும் காப்பாற்ற முடியும்.
Dinamani.com – Editorial Page: அழுகிய ஆப்பிள் & அழகிய விதைகள் – ஜெ. மரிய அந்தோனி
குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினரோ தங்கள் பிள்ளைகளை அளவுக்கு அதிகமாகப் பராமரிக்கிறோம் என்ற பெயரில் தங்களுடைய சிந்தனைகளை அவர்கள் மீது புகுத்தி, அதிகக் கட்டுப்பாட்டுடன் வளர்ப்பவர்கள்.
இரண்டாவது வகையினரோ தற்போதைய உளவியல், நவீனத்துவம் ஆகியவற்றால் தூண்டப்பெற்று பிள்ளைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பவர்கள்.
– வாய்ப்புகள் பலவற்றை முன்வைத்து அவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தால் நலம் என்று வழிகாட்டக் கூடியவர்களாக (கட்டுப்படுத்தக் கூடியவர்களாக அல்ல) இருப்பது;
– குழந்தைகளின் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்பவர்களாக மட்டுமல்லாமல் உணர்வுத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு அவர்களோடு ஒவ்வொரு நாளும் நேரம் ஒதுக்கிப் பேசுவது;
– குடும்பத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் அவர்களது கருத்தையும் அவ்வப்போது கேட்பது;
– துன்பத்தில் ஆறுதல் சொல்லும்போது நண்பராகவும், கண்டிக்கும்போது பெற்றோராகவும் இருப்பது;
– அவர்கள் மீது கட்டுப்பாடுகளை வலிந்து திணிக்காமல் அவற்றிற்கான நோக்கங்களை விளக்கி அவர்களே மனமுவந்து ஏற்றுக்கொள்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்துவது
முதலியவை ஒரு சில வழிமுறைகள் மட்டுமே.
துக்ளக் கருத்துப் படங்கள் – சத்யா & ஸ்ரீ
Yahoo! Groups : Thuglak Files:
துக்ளக் கருத்துப் படங்கள் – சத்யா & ஸ்ரீ
Yahoo! Groups : Thuglak Files:
துக்ளக் கருத்துப் படங்கள் – சத்யா & ஸ்ரீ
Yahoo! Groups : Thuglak Files:
பொன்னியின் செல்வன் – ஆங்கிலப் படம்!
Yahoo! Groups : Maraththadi Messages : Message 23422: “பொன்னியின் செல்வன் படமாக்கப் பட்டிருந்தால் அதற்கு பொருத்தமான நபர்களாக யார் யாரை தேர்ந்தெடுக்கலாம் ?”
அப்படியே ஹாலிவுட் பக்கம் யோசித்தால் :-?!
1 – வந்தியத் தேவன் – டாம் க்ரூய்ஸ் (அல்லது) ப்ராட் பிட்
2 – ராஜராஜ சோழன் – ராபர்ட் ரெட்ஃபோர்ட் (அல்லது) டென்ஸல் வாஷிங்டன்
3 – நந்தினி – டெமி மூர் (அல்லது) காதரின் ஸீடா ஜோன்ஸ் (இரு வேடங்களில்)
4 – ஆழ்வார்க்கடியான் – ஜாக் நிக்கல்ஸன் (அல்லது) க்ரிஸ் ராக்
5 – மந்தாகினி – டெமி மூர் (அல்லது) காதரின் ஸீடா ஜோன்ஸ் (இரு வேடங்களில்)
6 – வானதி – ட்ரூ பாரிமோர்
7 – குந்தவை- ப்ரிட்ஜெட் மொய்னஹன்
8 – பூங்குழலி – ஜோடி ஃபாஸ்டர்
9 – இரவி தாசன்- ராபர்ட் டிநீரோ
10 – ஆதித்த கரிகாலன் – ஆல் பசினோ
11 – செம்பியன் மாதேவி – மெரில் ஸ்ட்ரீப்
12 – குடந்தை ஜோசியர்- ஆண்டனி ஹாப்கின்ஸ்
13 – பிரம்மராயர் – மார்கன் ஃப்ரீமான்
14 – பெரிய பழுவேட்டரயர் – ஜெஃப்ரி ரஷ்
15 – சின்ன பழுவேட்டரயர் – டஸ்டின் ஹாஃப்மன்
16 – சம்புவரையர் – பால் நியுமன்
17 – சேந்தன் அமுதன் – மாத்யூ மெக்கானஹே (இரு வேடங்களில்)
18 – மதுராந்தகர் – மாத்யூ மெக்கானஹே (இரு வேடங்களில்)
19 – சுந்தர சோழர் – க்ளிண்ட் ஈஸ்ட்வுட்(அல்லது) டாம் ஹான்க்ஸ்
20 – மலையமான் – பில் முர்ரே
21 – கந்தன்மாறன் – ஜானி டெப்
22 – பார்த்திபேந்திரன் – நிக்கொலஸ் கேஜ்
23 – மணிமேகலை – ரெனிஸெல்வெகர்
24 – பினாகபானி – ஆடம் ஸாண்ட்லர்
25 – பூதி விக்கிரமகேசரி – சாமுவெல் எல் ஜாக்ஸன்
மங்கையர் மலர்
நான் ஒரு
அதிர்ஷ்டசாலி
கூட்டணியின்றி
ருசிக்காத
என்னை
தனியா என்கிறார்கள்.
கண்ணாடியில்
மட்டுமல்ல…
சமையலிலும்
ரசம்
சரியில்லை என்றால்
திருப்தியிருக்காது
குருபிரியா:
“உன் வரவேற்பு அறையில் ஒன்றுக்கு இரண்டாய்… அமெரிக்கக் கொடிகளை வச்சிருக்கியா? இது உனக்கே நல்லா இருக்கா? இந்த நாட்டில பிறந்து விட்டு அன்னிய நாட்டுக் கொடியைப் போற்றுகிறாயே! இது கட்சி மாறிய அரசியல்வாதி செயல் போன்றது”.
“இதில் என்ன தப்பு? என் பையன்களை வாழவைத்து… ஏன் வாழ வைத்து கொண்டு இருக்கிற நாட்டுக் கொடியை வணங்கினால்… என்ன தப்பு?”.
“சோறு கண்ட இடம் சொர்க்கம்! என்பது போலவா? தாய்நாட்டுப் பற்றே உனக்கும்… உன் பிள்ளைகளுக்கும் இல்லை!”.
“இதற்குப் பெயர் நன்றி சொல்லல். என் குழந்தைகள் மட்டுமல்ல… எத்தனையோ வீட்டுக் குழந்தைகளை வாழ வைத்து… இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு நாட்டுக் கொடியை. நான் வணங்குவதும், மரியாதை செய்வதும் தப்பே இல்லை.”
என் தோழி மட்டுமல்ல… நிறையப் பேர் இப்படிச் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். அங்கு என்னவோ… அந்தக் குழந்தைகள் தண்ணி அடிச்சிட்டு… கிளப் டான்ஸ் ஆடுவதாக நிறையப் பேர் கற்பனையில் இருக்கு. அங்கு போய்ப் பார்த்தால்லவா தெரியும். அந்தப் பிள்ளைகள்.. சனி ஞாயிறு கோவிலுக்கு வருவதையும், தைப் பூசம்… விநாயக சதுர்த்தி போன்ற விசேஷங்களில் கோயிலில்… உட்கார்ந்து நெற்றி நிறைய விபூதி குங்குமமும், சஷ்டி கவச பாராயணமுமாக அமர்ந்திருப்பதும் கண்கொள்ளாக் காட்சி.
இந்தியாவில்… கோயிலில் எங்கே இத்தனை பையன்கள் வருகிறார்கள்? நம் நாட்டுப் பண்பை, நல்ல எண்ணங்களை வெளிநாட்டில் காப்பாற்றி, இந்தியாவை புகழச் செய்கிறார்கள். யார் உதவியும் இல்லாமல் அவரவர் வேலைகளை, சமைப்பது, வீடு கிளீனிங்… பாத்திரம் துலக்குவது என்று தனக்குத்தானே செய்து கொண்டு சோம்பித் திரியாத பிள்ளைகளைக் கண்டு நாமல்லவா பெருமைப்பட வேண்டும்!
என் குழந்தைகளை வாழவைக்கும் ஒரு நாட்டின் தேசியக் கொடிக்கு நான் மதிப்பு தருவது தவறில்லையே! நீங்களே சொல்லுங்கள் தோழிகளே!
எழுத்தாளர் பிரபஞ்சனையும் இந்த குருபிரியாவையும் சந்திக்க வைச்சா நல்லா இருக்கும் 😉
ஃப்ளாட்டில் விழும் விட்டில் பூச்சிகள்
வாடகை வீடு வசதிக் குறைவு.
சொந்த வீட்டில் சொகுசாய்
வாழலாம் என, வயிற்றைக்
கட்டி, வாயைக் கட்டி, குருவியாய்
சேர்த்த பணம் போதாமல், சொந்த
பந்தங்களிலிருந்து, சொஸைட்டி
வரை கடன் வாங்கியும் போதாமல்
மனைவி நகைகளை அடகு
வைத்து, ·ப்ளாட் ஒன்று வாங்க,
நண்பன் விரித்த வலையில் வீழ்ந்து
மொத்தத் தொகையையும் முன்னால்
கொடுத்து ஏமாந்த கதை, சோகக்
கதை : வெளியே சொன்னால் வெட்கம்,
உள்ளே இருந்தா துக்கம், இருந்தாலும்
சொல்றேன். சுவரிடம் சொல்லி அழ
லாமென்றாலோ, கலப்பட சிமெண்டில்
கட்டிய சுவர், கட்டிய ஆறு மாதத்திலேயே
காரையாய்ப் பிளந்து நிற்கும் அவலம்.
என் கண்ணீர் பட்டு காணாமல் போய்
விடுமோ என அச்சம்
”நந்தி கன்ஸ்ட்ரக்ஷன், நல்லதொரு
கன்ஸ்ட்ரக்ஷன், அப்டுடேட் மாடலில்
அழகான ·ப்ளாட், நீங்கள் விரும்பும்
விதத்தில், ஆறே மாதத்தில், ஆனந்தமாய்
குடிபோகலாம்” என அன்பொழுக, அருண்
ஐஸ்கிரீமாய் உருக வைத்தார்; கிருஷ்ணா
ஸ்வீட்ஸ் மைசூர்பா வாய்கரைய
வைத்தார் இனிய பேச்சில். இழப்பது
தெரியாமல் வேடன் விரித்த
வலையில் வீழ்ந்தது மான்.
ஆறு ஆறு மாதம் ஆகியும் ஆகாது வீடு,
·ப்ளாட்டிற்கும், அலுவலகத்துக்கும்
நடந்து, செருப்போடு, முட்டியும் தேய்ந்து
விடும். கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளியைக்
கண்ணால் கூட பார்க்க முடியாது.
உள்ளே இருந்து கொண்டே இல்லை
எனும் அலுவலக நந்திகள் படுத்தும் பாடு
அப்பப்பா! பாஸ் மீட்டிங்கில் இருக்கிறார்
நாளைக்கு வா என்பர். மறுநாள்
சென்றால் அதிகாலை ப்ளைட்டில்
அமெரிக்காவுக்கு, உல்லாஸப் பயணம்
சென்று விட்டதாக அலக்ஷ¢யமாக
சொல்வர். எத்தனை குருவிகள்
சேர்த்த பணமோ, பருந்து பறக்கிறது.
பங்களாவும் காருமாக, பவனி வருவர்.
பங்கு மார்க்கெட்டில் பல கோடி
சுருட்டி, மனைவி பேரில் மாளிகை
அமைப்பர். முள்ளில் போட்ட சேலை
யாகிப் போச்சு. வீட்டிற்குச் சென்றால்
மனைவியோ, ”முழுப் பணத்தையும்
முன்னதாகக் கொடுக்க வேண்டாம்
என முட்டிக் கொண்டேன், வீட்டு
வேலைக்கு ஆள் வைத்தால்,
ஆகும் பணம் என, நாயாய், பேயாய்
உழைத்துச் சேர்த்த காசு எப்போதும்
தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற வேலை”
என மூக்கைச் சிந்தி, முந்தானையில் துடைக்
கும் மனைவியை, கையை ஓங்கி
அடிக்கச் சொல்லும். கட்டடக்காரரிடம்
காட்ட முடியாமல், கட்டிய மனைவியிடம்
காட்டச் சொல்லும். இல்லத்தால், இல்லாளிடம்
சண்டை!
ஆனதுவரைக்கும், கட்டியது
முடிந்த வரைக்கும் விட்டுக் கொடுத்து,
வீட்டிற்குள் சென்றால், ஒரு பக்கம் கரண்ட்
கட்டாகியிருக்கும், பாத்ரூமில் தண்ணீர்
வாட்டமின்றி, பாத்ரூம், பாத் டப்பாய் மாறி
நிற்கும். இன்னும் எத்தனையோ? எடுத்துச்
சொன்னால் மாளாது. இத்தனையும் மறந்து
ஆசையாய்ப் போட்ட ஊஞ்சலில், உட்கார்ந்து
ஐந்து நிமிஷம் ஆடுவதற்குள், ‘போச்சு!
போச்சு!’ என உயரே இருப்பவர் ஓடி
வருவர். உரத்த குரலில், ‘ஊஞ்சல் சத்தம்
உயரே கேட்கிறது, உறக்கம் போச்சு’
என, ஊஞ்சலாட்டத்துக்குத் ‘தடா’, பொடா
போடுவர்.
ஆறு மாதம் ஆகியது, ஒருநாள்
”கட்டிய ·ப்ளாட்டில் வயலேஷன் இருக்கு,
ப்ளான்படி கட்டவில்லை, இடித்துத் தள்ளு
வோம்”, என முனிசிபாலிடி நோட்டீஸ் வந்து
பொக்ரான் குண்டாய் பயமுறுத்தும். வய
லேஷன் இடத்துக்கும் சேர்த்து பணம் வாங்கிக்
கொண்ட, கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளியிடம்
போனால், பணம் கட்டியாகி விட்டது என
கூசாமல் பொய்யுரைப்பர், கட்டிய
பணத்திற்கு ரசீதும், ஒரிஜினல் பிளானும்
தர மாட்டார். திருப்பதி பெருமாளைக்
கூடப் பார்த்து விடலாம், திரும்பிக் கூட
பார்க்க மாட்டார். திருநெல்வேலிக்கே
அல்வா கொடுப்பர். நம்பிச் சென்ற
நண்பனும், நைசா நழுவிக் கொள்வான்.
மற்ற ·ப்ளாட்காரர்களும் சேர்ந்து முடிவெடுக்க
லாமென்றாலோ, நவக்கிரகமாக ஒத்து
வரமாட்டார்.
கோயிலுக்கே போக வேண்
டாம் எல்லாம் ·ப்ளாட்டுக்குள்ளேயே இருக்கும்!
போதுமடா சாமி! புது வீட்டு வாழ்க்கை
ஆனந்தம் என்பது அணுவளவு இல்லை என
புண்ணாகி நிற்கையில் அழைப்பு மணி ஓசை
அருமை நண்பன், அவனுக்கொரு ·ப்ளாட் வேணுமாம்
அனுபவம் உள்ள நான் வாங்கித் தரவேணும்
என்ற நண்பனிடம், நான்பட்ட, படும் அனுபவத்தைச்
சொன்னால் கேட்க மறுக்கிறான்
அடம்பிடிக்கிறான், ஐயகோ! என் செய்வேன்?
இதோ! இன்னும் ஒரு, இல்லை, இல்லை
எத்தனை விட்டில் பூச்சிகளோ? விதி
வழி செல்லும் மதி. யான் பெற்ற இன்பம்
இவ்வையகமும் பெறுக.
1997-இல் என்னுடைய காரில் சிடி, டேப், எம்பி3, வைனில் என்று போட்டு பாட்டு கேட்க முடியாது. செல்பேசியும் அதிகம் பிரபலம் ஆகாததால் மிகக் குறைந்த நிமிடங்களே காரில் இருந்து அளவளாவ முடியும். நிறைய ஆங்கிலப் பாடல்கள் கேட்டதில் மனதில் தங்கிப் போன பாடல் இது. முணுமுணுக்க வைக்கும் மெட்டுதான் முதலில் கவன ஈர்ப்பு தந்தது. தெளிவாகப் புரியாத ஆங்கிலப் பாடல்களில் முதலில் கவர்வது இசைதான். அப்புறம் பாடல் வரிகளும் போட்டுத் தாக்க சிடி வாங்கி வைத்துக் கொண்டேன். ஒரு பாட்டினாலே மட்டும் கோடீஸ்வரனாவது ‘சூரியவம்சம்’ மட்டுமல்ல. மெரடித் ப்ரூக்ஸ் போன்ற பலருக்கும் பொருந்தும்.
கட்டுரை விருப்பங்கள்
திண்ணை/தமிழோவியம்/வலைப்பதிவுகளில் பின்வருபனவற்றில் எவை இடம்பெறும்?
1. சோனியா மிர்ஸாக்கள் உருவாக மேலும் மகேஷ் பூபதிகள் நமக்கு தேவை – டென்னிஸ் விளையாட்டின் பொருளாதாரங்களை புதிய நட்சத்திரத்தின் மூலம் அலசும் பதிவு.
2. ஈராக் தேர்தல்:
– ஆக்கபூர்வமான முயற்சியா அல்லது வறட்டு பயிற்சியா?
– என்ன, எப்படி, யார், ஏன்? விரிவான செய்திகள்
3. கொண்டலீஸா ரைஸ்: கடந்த நான்கு வருடங்களும் தொடரும் போர்களும்.
4. நியு ஜெர்ஸி எடிஸனின் உருமாற்றம்: இந்தியாவின் இரண்டாம் நிலை நகரங்களின் வளர்ச்சிக்கு எவ்வாறு முன்னுதாரணமாகிறது.
5. அமெரிக்காவின் பற்றாக்குறை பொருளாதாரமும் உலக சந்தை மாற்றங்களும்: இந்தியாவை எவ்விதம் பாதிக்கும்?
6. நியு இங்கிலாந்து பாட்ரியாட்ஸின் (Patriots) வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் என்ன காரணிகள்?
7. குறைந்த கலொரி பக்கார்டி ரம்மும் காஃபி கலந்த பட்வெய்ஸர் பியரும்.
8. நடன இயக்குநர் லாரென்ஸின் தெலுங்கு நெறியாள்கை சங்கதிகள்.
9. இலங்கையில் இஸ்லாமும் சுனாமியும்.
10. புஷ் பதவியேற்புக்கு காணிக்கை செலுத்தியவர்கள் கணக்கு.
11. ஆந்திராவின் நக்ஸல் : தற்போதைய நிலைமை.
12. பத்மஸ்ரீ ஷாரூக் தனது சொந்தப் படத்தில் ஹிந்துவை தீவிரவாதியாக வைத்தது ஏன்?
13. ‘காதல்’ இசையமைப்பாளரின் கள்ளக்காதல்.
14. சந்திரமுகிக்குப் பிறகு ரஜினியின் அடுத்த படம்.
15. சாத்தானா? பாபா-வா? – ‘டெக்ஸாஸ் ஃப்ரைய்ட்’ புஷ் முத்திரை.
16. இந்தியாவில் மக்கள் குவியும் இடங்களில் எளிதில் வெளியேற கட்டாய வழிமுறைகள்.
17. கலிஃபோர்னியாவில் தற்கொலை செய்ய எத்தனித்தவன், மூன்று ரயில்களை மோதவிட்ட கதை.
சுனாமி மதிப்பெண்கள்
1994-ஆகத்தான் இருக்கும். கலைஞர் ஆட்சி. புரட்சிகரமான திட்டம் அறிவித்தார். பள்ளிக்கூடம் செல்லாத பெற்றோரை உடையவர்களுக்கு பொறியியல்/மருத்துவ நுழைவுத்தேர்வில் ஐந்து மதிப்பெண்கள் கூட்டித் தருவதாக சொன்னார்.
எனக்கு மிகுந்த மனவேதனையை உண்டு செய்ய ஆரம்பித்த கொள்கை. அடுத்த ஆண்டு TNPCEE-யிலேயே இந்த முறை கைவிடப்பட்டாலும், நான் எழுதிய ஆண்டு மட்டும் கடைபிடிக்கப்பட்ட பழக்கம்.
முதன் முதலாக வேலையில் அமர்ந்தவுடன்தான் இந்த மாதிரி பாதிப்புகளை மிகச் சிறியதாக உணர்ந்தேன். ஐந்து மதிப்பெண் கொடுக்கப்பட்டதால் முன்னேறிய எவரும் எனக்கு அறிமுகமில்லை. மேலோட்டமாக கூகிளில் தேடினால் சார்புள்ள பக்கங்கள் கூட எதுவும் கிடைக்கவில்லை. கருணாநிதிக்கே கூட மறந்து போயிருக்கலாம்.
அதே போல், இந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து நுழைவுத்தேர்வு எழுதுவோருக்கு ஐந்து மதிப்பெண்களை அண்ணா பல்கலை ‘போட்டு‘க் கொடுக்கலாமே?
சினிமாவுக்கு பின்னால்…
(தமிழ்) சினிமாவின் தொழில்நுட்ப ரகசியங்கள் – பெ.கணேஷ்
திரைப்படத்திற்கு கதை எழுதுவது எப்படி? பாகம் -1
திரைக்கதை எழுதுவது எப்படி? பாகம் -2
சினிமாவின் இயக்கம் என்பது என்ன? பாகம் 3
சீனுக்கு ஷாட் பிரிப்பது எப்படி? பாகம் 4
ஒரு காட்சிக்கு எண்ட்ரி என்பது எவ்வளவு முக்கியம்? பாகம் 5
கேமராவை பத்தியும் லென்ஸ் பத்தியும் சொல்லுங்க பாகம் 6
பார்வை அதாவது கேமரா லுக் பாகம் 7
சினிமாவில் உதவி இயக்குனர்களின் பங்கு பாகம் 8
அவங்கதான் கேமரா அசிஸ்டெண்டா? பாகம் 9
எடிட்டிங் பாகம் 10
டப்பிங், ரீ-ரெக்கார்டிங், மிக்ஸிங் பாகம் 11
மினிமம் பட்ஜெட் படம் பாகம் 12
டிஸ்ட்ரிப்யூஷன் என்பது என்ன? பாகம் – 13
வெளியான வலை: kumudam.com
என் குறிப்பு: இலவசமா கொடுக்கும் போதே படித்து/சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். காதலர் தினத்துக்குப் பின் Vikatan.com காதல் முடிந்து கல்யாணம் கட்ட சொல்கிறார்கள். அடுத்து தமிழ் புத்தாண்டுக்குள் குமுதமும் காசு கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் ‘சுவடுகள்’, கோப்புகள் எல்லாவற்றையும் எங்காவது குழவி கொந்திப் போடுங்கம்மா.
Notable Notes (திண்ணை)
மதம் அலுத்துப் போனது – மாதவிக்குட்டி: தமிழில் : இரா முருகன்
மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை.
இது ஆபாசம் அப்படீன்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம்?
ஆறடி அறைகளின் குரல்கள் – பாவண்ணன்:
கிராமம், வாழ்வின் கசப்புகள், கையறு நிலை, இசைவான உறவில்லாததன் வலி, வாழமுடியாத தவிப்பு என்ற களங்களில் இயங்குபவை மற்ற கவிதைகள். 1984ல் அய்யனார் எழுதிய ஒரு வரி “எனக்குரிய காற்றை எனக்குப் பிரித்துத்தாரும்” என்பதாகும். 2002ல் அவரே எழுதிய இன்னொரு வரி “காற்று அழிந்துபோன இந்த நகருக்குள் வந்தேன்” என்பதாகும். இடைப்பட்ட பதினெட்டு ஆண்டுகளாக சுதந்தரத்தின் அடையாளமாக விளங்கும் காற்றைக் கண்டடைந்து துய்க்கும் ஆவலில் அலைந்த அலைச்சல்களையும் நீண்ட பயணத்தின் தவிப்புகளையும் தனிமைத் துயரங்களையும் பதிவுசெய்த வரிகளே இத்தொகுப்பில் கவிதைகளாக உள்ளன.
காற்று அழிந்துபோன நகரில் அய்யனார் வசிப்பதற்குத் தேர்ந்தெடுத்த இடம் மேன்ஷன். சுதந்தரத்தை அறியும் வாய்ப்பைத் தராவிட்டாலும் வாழ்வின் மற்ற முகங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்புகளைக் கொடுக்கிறது மேன்ஷன் அறை. எளிமையாக தூக்கத்தில் மூழ்க வழியற்ற இடம் அது. கனவுகளின் வெப்பத்தில் கொதிப்பேற்றும் இடம். தெரிந்த பெண்களின் முகங்களை மனப்பரப்பில் நௌ¤யவைக்கும் இடம். ஓர் இரவுத் து£ரத்தில் வசிக்கும் மனைவியின் ஞாபகத்தை வரவழைக்கும் இடம். சந்தேகங்களாலும் ரகசியங்களாலும் ஆளை உருட்டிஉருட்டி விளையாடும் இடம். இலக்கியப் பரப்பில் சிற்றில் என்றொரு சொல்லாட்சி உண்டு. குழந்தைப் பருவத்தில் விளையாடுவதற்காக மணல்வீட்டில் கட்டப்படும் வீட்டுக்குத்தான் சிற்றில் என்ற பெயர். கதவு, வாசல், ஜன்னல், தோட்டம் எதுவுமே இல்லாத ஒன்று அது. ஆனால் எல்லாமே இருப்பதைப்போன்று பாவிக்கப்படுகிற வடிவம். ஓடி உழைத்து உயிர்த்திருக்க பெருநகரைநோக்கி வருகிற ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உடனடித் தங்குமிடமாக அமையும் அறைகள் இத்தகு சிற்றில்வகைப்பட்டவை. எல்லாமே உருவகித்துக்கொள்ளப்படவேண்டிய இடம். அன்பையும் நட்பையும்கூட இருப்பதைப்போல உருவகித்துக்கொள்ளுமாறு அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய துரதிருஷ்டம். அப்படிப்பட்ட ஒரு கணத்தில் எழும் கேள்விதான் “அறை என்பது வீடாகுமா?” என்பது.
ஏன் இந்த மனிதர்கள் இப்படி கொடுக்குமுனை மின்னும் சொற்களை வீசிவிட்டுச் செல்கிறார்கள்? பழகியவர்கள், பழகாதவர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற எந்த பேதமும் ஏன் இச்சொற்களுக்கு இருப்பதில்லை? இப்படி கொட்டிக்கொட்டி எதற்காக விஷத்தைப் பாய்ச்சிக்கொண்டே இருக்கிறார்கள்? கொட்டிக்கொட்டி சாதாரண பிள்ளைப்பூச்சிகள்கூட ஏன் குளவிகளாக மாற்றப்படுகின்றன?எல்லாமே குளவிகளாக மாறினால் இந்த மண்ணில் வண்ணத்துப் பூச்சிகளையும் தேனீக்களையும் எங்கேபோய் கண்டுபிடிக்கமுடியும்? இந்த மாற்றத்தால்தான் எல்லாருமே கொம்புள்ளவர்களாகவும் உளவாளிகளாகவும் உருமாறிவிடுகிறார்களா?
‘நிகழ்’
வீடுகள் முளைக்கும்
விளைநிலம் எல்லாம்
காடுமேடெல்லாம் கார்கள்
காற்றை நசித்துக் கடக்கும்
பற்சக்கரப் பதிவுகள்
இனிய தோட்டத்தில்
இரும்புக் கழிகள்
இதயத்துக்கருகில்
இயந்திரப் பொறிகள்
கம்ப்யூட்டரின் மடியில்
படுத்துப் புரளும் பூமி
காற்றும் விற்கப்படும்.
சத்தியமும் அன்பும்
வாங்க ஆளின்றி!
— மேன்ஷன் கவிதைகள் :: பவுத்த அய்யனார்
தட்டிக்கொடுத்தவர் – சுஜாதா/Anandha Vikadan
அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங் — ஆசாரகீனன்:
“தியானமன் சதுக்கத்தில் மாணவர் புரட்சியை சீன அரசு வன்முறையைக் கையாண்டு அடக்கியதை ஒப்புக் கொள்ளாத சீனர்களின் வலிமை மிக்க அடையாளமாகத் திகழ்ந்தவர் இவர். ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டதற்காக சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர் மட்டத் தலைவர்களை கடுமையாகக் கண்டித்ததோடு, மாணவர் போராட்டமானது எதிர்-புரட்சித் தன்மை கொண்டது என்ற சீன அரசாங்கத்தின் அதிகாரபூர்வமான நிலையை ஒப்புக் கொள்ளவும் மறுத்தவர் ஜாவ் ஜியாங்.
அரசாங்கத்தின் தலைமைப் பதவியில் அமர்ந்ததன் மூலம் சீனப் பொருளாதாரத்தின் பொறுப்பாளராக ஆகிவிட்ட அவர் டெங்கின் ஆசியுடன் தீவிர பொருளாதார சீரமைப்புகளை மேற்கொண்டார். ஜாவ் ஜியாங் 1987-ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றதன் மூலம் டெங்கின் வாரிசாகவும் ஆனார்.”
நன்றி: Thinnai – Weekly Tamil Magazine
Recent Comments