Home > Uncategorized > குமுதம்.காம்

குமுதம்.காம்


விஜயகாந்த்

நா.கதிர்வேலன் :: சிலபேர் நீங்க அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் என்னன்னு கேட்கிறாங்க. இதைத்தான் ஆறேழு வருஷமாக நானே யோசிச்சுக்கிட்டு இருந்தேன். மனசுக்குள்ளே போராட்டம். இப்போ இந்த நடிகர் சங்கத்தலைவர் வாய்ப்பு வருதுன்னா அதுல நம்மால என்ன பண்ணமுடியும்னு யோசிப்பேன். சங்கத்துக்கு நிறைய கடன் இருந்துச்சு, அடைச்சோம். இன்னும் சில முக்கியமான விஷயங்கள் முடிக்கப்படாமல் இருக்கு. ஒவ்வொண்ணா சரிபண்ணணும். இப்படித்தான் ஜனங்கள் எங்கே போனாலும் தருகிற ஆதரவையும், அன்பையும் ஏத்துக்கிட்டு என்ன செய்யறது! அவர்களுக்கு நாம் திருப்பிச் செலுத்தவேண்டியது என்ன? ஜனங்களுக்கு ஏதாவது நல்லது பண்ணணும். ஜனங்களுக்கு நல்லது செய்யலை என்றாலும் கெடுதல் பண்ணிடவே கூடாது. கொஞ்ச நாளைக்கு முன்னால் மவுண்ட்ரோட்டில் பெரிய அளவில் மறியல் நடந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் சின்ன வார்டு தேர்தல். ஏழெட்டு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்துப் போய்விட்டது. மக்களுக்கு எவ்வளவு துயரம்! கேள்வி கேட்க யாரும் இல்லை. ஸ்கூலுக்குப் போறவங்க, இண்டர்வியூ போக அவசரப்படுகிறவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் எல்லோரும் காத்துக்கிட்டு இருக்காங்க. அரசியல்கட்சிக்கு அது முக்கியமே இல்லை. வெட்கங்கெட்டுப்போய் நாமும் எந்தக்கேள்வியும் கேட்காமல் விடுகிறோம்.

நமக்கு கஷ்டங்களைத் தாங்கிப் பழகிவிட்டது. ஏழெட்டு மணிநேரம் பொதுமக்கள் துயரப்படவேண்டியதின் அவசியம் என்ன? எனக்கு ஜனங்கள் பெரிசா வசதி வாய்ப்போடு வாழந்து செழிக்கணும் என்ற விருப்பமெல்லாம் அதிகம் இல்லை. அவங்க பாதுகாப்பாக இருக்கணும், சவுகரியமாக இருக்கணும், நிம்மதியாக இருக்கணும் இதுதான் என் விரும்பம்னு சொல்லத் தோணுது. சேவை செய்யணும் என்ற எண்ணம் ஒரு நடிகனுக்கு வரக்கூடாதா?

நன்றி: குமுதம்


பிரமோத் மகாஜன்

சோலை :: ‘‘டெல்லியில் தி.மு.க. அமைச்சர் ஒருவரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் வந்தார். அவரது இல்லத் திருமண அழைப்பிதழை எனக்குத் தந்தார். தி.மு.க. அமைச்சருக்கு அவர் தரவில்லை. ஏன் என்று கேட்டேன்.

‘தி.மு.க. அமைச்சரும் நானும் உயிருக்கு உயிரான நண்பர்கள்தான். அவருக்குப் பத்திரிகை கொடுத்து அந்தத் தகவல் எமது கழகத்தலைமைக்குத் தெரிந்தால் எம்.பி. பதவியே பறிபோய் விடும்’ என்றார்.

அதிர்ச்சியால் உறைந்து போனேன்.

அமிர்தசரசிலிருந்து லாகூருக்கு பஸ் விடலாம். ரெயில் விடலாம். ஆனால் போயஸ் தோட்டத்திலிருந்து கோபாலபுரத்திற்கோ அங்கிருந்து போயஸ் தோட்டத்திற்கோ சைக்கிள் ரிக்ஷாகூட விடமுடியாது. இந்தக் கலாசாரத்திலிருந்து பி.ஜே.பி. விடுபட வேண்டும்’’ என்றார் பிரமோத் மகாஜன்.
—-
இஞ்சி எப்படி இருக்கும் என்று ஒருவன் கேட்டானாம். இது தெரியாதா? எலுமிச்சம்பழம் போல் தித்திப்பாக இருக்கும் என்றானாம் இன்னொருவன். இப்படித்தான் பி.ஜே.பி.யை கிராமத்து மக்கள் புரிந்திருக்கிறார்கள்.

நன்றி: ரிப்போர்ட்டர்

Categories: Uncategorized
  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: