Archive

Archive for June 6, 2005

விந்தியா

June 6, 2005 2 comments

விவரணப்படம் தேவை

தமிழோவியத்தில் ரஜினி ராம்கி ஜோதிகாவின் டாகுமெண்டரி குறித்து எழுதியுள்ளார்.

சன் டிவியில் ‘நட்சத்திரம்’, கேடிவியில் சில நிகழ்ச்சிகள், ‘நடித்ததில் பிடித்தது’ என பல நிகழ்ச்சிகள் சாதாரணமாகவே இருக்கிறது. புகழ்பெற்ற நடிகரின் புகழ்பெற்ற படங்கள், அதிகம் அறிமுகமாகாதவர் என்றாலும் சிறப்பான காட்சிகள் அல்லது பெரிய இயக்குநர்களின் படத்தில் தோன்றிய காட்சிகள் என்றே நிரப்பிச் செல்கிறார்கள்.

சமீபத்தில் ‘வயசுப் பசங்க” படம் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.

‘கண்ணம்மா’ படத்தில் வில்லத்தனமான நடிப்பு. ‘சங்கம’மில் வெகுளியான அறிமுகம். அப்பாவிக் களை சொட்டும் புதுமுக நாயகி. நடனமே தெரியாமல் அட்ஜஸ்ட் செய்த பாவங்கள்.

நடுவே ‘சார்லி சாப்ளின்’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ படங்களில் குணச்சித்திர வேடம். கடைசியாக ‘யெஸ் மேடம்’ போன்ற படங்களில் கவர்ச்சி ஆட்ட சாயம்.

இவரை எடுத்துக் கொண்டு விவரணப் படம் கொடுத்தால் எவ்வளவு அலசல்களை முன்வைக்கலாம்?

– தமிழ் சினிமா நாயகிகளின் நிலைகள்
– மேனேஜர்க்களின் கட்டுப்பாடுகள்
– பெற்றோர் கூடவே கவனிப்பதின் பலன்கள்
– முதல் கோணல் முற்றும் கோணல்?
– ஒரு படத்தில் இரண்டாம் மனைவியாக நடித்ததால் தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டவர்கள்
– இரண்டாம் நிலை ஹீரோக்களுடன் நடிப்பதால் மதிப்பிழத்தல்
– ஊடகத் தொடர்பாளர்களுடன் நட்பு பாராட்டலின் அவசியங்கள்

இது போன்ற பல்முகங்களை பல சந்திப்புகளின் மூலம் கொடுக்க முடிபவர்களைத்தான் டாக்குமெண்டரிகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

Categories: Uncategorized

மேற்கோள் படி

June 6, 2005 1 comment

சமீபத்திய புதுமைப் பெண்கள் நிகழ்ச்சியில் ரேவதி பேசியது:

‘இந்த நிகழ்ச்சி ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு என்றவுடன் நமக்கு உடனடியாக தோன்றுவது ஒன்றுதான். பெரியாரின் பிறந்த இடம் என்பதுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. அவரின் கொள்கைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரோட புக்ஸ் நிறைய படித்திருக்கிறேன்.’

Categories: Uncategorized

ரசனை

June 6, 2005 Leave a comment

Tamil Sify ::

  • முற்றத்திலிருந்து…
    வாகன இரைச்சலுக்கு நடுவிலும், காதைக் கிழிக்கும் ஒலிப்பான்களின் இடையிலும் எங்கிருந்தோ கேட்கிறது குயிலோசை.

  • இன்னொரு யுகசந்தி
    ஓவியக்கலை என்பது கல்லை ஆயுதமாக மனிதன் பயன்படுத்திய காலத்திலேயே தொடங்கி விட்டது.

  • மோனகுரு சந்நிதியில்
    பொன்னி நதி தன்னுடைய பல்வேறு கிளைநதிகளுடன் பாய்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளப்படுத்திய தஞ்சாவூர் மாவட்டத்தில், சோழப் பேரரசர்களும், அவர் களுடைய குறுநில மன்னர்களும் கட்டிய திருக்கோயில்கள் அனேகம்

  • சேற்றூர் காட்சிகளும் சில மனிதர்களும்
    கிராமங்களில் இப்போது உழைக்கும் மக்களின் வீடுகளிலும் பரவலாக தொலைக்காட்சிப் பெட்டி தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டதை நாமறிவோம்

  • அறங்கள் தளிர்க்கும் அந்த நாள் வருமா? – முனைவர் இரா. செல்வக்கணபதி
    நம் தாய்த்தமிழ் செம்மொழி என்ற பெருமிதத்தை எட்டிப் பிடிக்க இருப்பதாகச் சொல்கிறார்கள்

  • பின்பக்க ஜன்னலும்… மூன்றாவது கண்ணும்… – திரைச்சீலை ஓவியர் ஜீவா
    பிரெஞ்சு இயக்குனர் த்ரூஃபோ சொல்வது போல் இரண்டு வகை இயக்குனர்கள் இருக்கிறார்கள்.

  • புட்டா கவிதை
    ஸ்ரீசக்ரம்

  • பட்டணம் போனேன் பாட்டெழுத
    பாடலை படித்த வீரபத்ரன் என்மீது மிகுந்த பிரியம் காட்டினார்.

  • ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபு
    ஜெ.சைதன்யா அவர்கள் மீன்குஞ்சு நீரில் பிறப்பதுபோல இலக்கியத்திலேயே பிறந்தார் என்று கூறலாம்

  • ரசிகமணி கடிதங்கள்
    இன்று காலை முற்றத்திýருந்துகொண்டு நண்பர்களுக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்

  • மிதக்கும் காடு – தென்பாண்டியன்
  • கரி உரி போர்த்திய கண்ணுதற் கடவுள் – முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
    தாருகா வனத்து இருடிகள் ஆணவமலம் மிக்குற்று மீமாம்சை வழிநின்று ஆபிஜார வேள்வி புரிந்தனர்.

  • கி.ரா. கடிதங்கள்
    சுயம்புவுக்கு நலமாக இருக்கிறோம் நாங்கள்.

  • இரண்டுகால் பூச்சியும் ஆறுகால் அவளும்...
    விடுமுறை நாட்களின் மதிய நேரங்களுக்காக அந்த மரத்தடி நிழலை மானசீகமாய்க் குத்தகைக்கு எடுத்திருந்தாள் அவள்.

  • காற்றில் வாழும் கதைசொல்லிகிருபானந்த வாரியார்
    காற்றில் ஒலியலைகள் அடுக்கடுக்காகப் பதிவாகின்றன.

  • Categories: Uncategorized