Archive
மறுப்புக்கூற்று – ஆனந்த் சங்கரன்
எதற்காக இந்த அசட்டு அடைக்குறிப்பு
அடைக்குறிப்புகளை எழுதிய பொருளை மெருகேற்ற அல்லது அதன் பொருளை உணர்த்த உபயோகம் செய்யலாம்.
ஆனால் பலர் அதை தவறான முறையில் பின்குறிப்பு போல் உபயோகம் செய்கின்றனர். குறிப்பாக வெகுகாலமாக இணையத்தில் உள்ளவர்களே எழுதுகிறார்கள். இது ஒரு தவறான பழக்கமாகும்.
உங்கள் எழுத்தை மேம்படுத்த நினைத்தால் அடைகுறிப்பை குப்பை போல் உபயோகம் செய்வதை நிறுத்துங்கள்.
உதாரணம் ..
முளையை கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றேன் (ஆமாம் பெருசா மூளை இருக்குன்னு நினைப்பா)
நான் இந்த வார எழுத போவது என்னவென்றால் (இவன் எழுதலைனு யாரு அழுதா)
இப்படி பல உண்டு.
நீங்கள் பின்குறிப்பு தரவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் எழுதுங்கள் நாங்கள் படிக்கிறோம். உங்களை யாரும் இந்த ஒரு கட்டுரையை வைத்து மதிப்பீடு செய்யமாட்டார்கள். உங்களின் எழுத்தை பலவற்றை படித்து பின்னர் இந்த ஆள் இப்படி என்று மதிப்பீடு செய்யலாம்? அதை இது போன்ற அசட்டு அடைகுறிப்பால் மாற்ற முயலாதீர்கள்.
சின்னா
கேகே, அனுராதா ஸ்ரீராம்
பெண்: காலங்காத்தால
இம்சை பண்ணாதே
ஆண்: கலங்க கலங்க
உன் கதி கலங்க
பெண்: வேணாம் வேணாம்
விடுடா
ஆண்: அப்ப
மதியம் நேரம்
கரெக்டா
பெண்: வேணாம் வேணாம்
விடுடா
ஆண்: அப்ப
சாயுங்காலம்
கரெக்டா
வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி
எதுக்கு இருக்கு?
காலையிலே குளிச்சு
கோலம் போடணும்
நீ புள்ளி
வைக்கும் நேரத்தில
இம்சை பண்ணாத
புள்ளி வைக்கும்போது
நீ முன்னழகில
என்னை
புல்லரிக்க வச்சு நீ
இம்சை பண்ணாத
வாங்கி வெச்ச
பாலெடுத்து
காபி போடணும்
பால்
பொங்கி வரும் நேரத்தில
இம்சை பண்ணாத
பாலைக் காய்ச்சும்போது
நீ பின்னழகில
என்னை
சுண்ட சுண்டக் காட்டி
இம்சை பண்ணாத
ஆட்டி வச்ச மாவெடுத்து
தோசை ஊத்தும் நேரத்தில்
உனக்கிந்த குறும்பெதுக்கு?
வட்ட வட்ட தோசைகள
சுடும்போதில
என்ன வட்டம்போட வைக்குதடி
இன் இடுப்பு
ஊற வச்ச துணிக்கு
சோப்புப் போடணும்
நீ
சோப்பு போடும் நேரத்தில்
இம்சை பண்ணாத
இடுப்பில சேலைய
தூக்கி செருகி
துணி கும்முகின்ற
அசைவுகளில்
இம்சை பண்ணாத
உலை வைக்கணும்
நீ
மார்கெட்டுக்குப் போகும் போது
இம்சை பண்ணாத
மார்க்கெட்டுக்கு
கிளம்பற நேரம் பார்த்து
நீ முந்தானையை சரி பண்ணி
இம்சை பண்ணாத
எத்தனையோ
எத்தனையோ
வேலை இருக்கு
ஆம்பளைக்கு
ஒரு வேலைதான் இருக்கு
ஒரு வேலை மட்டும்தான்
என்று சொன்னாலும்
அடீ
அதுக்குள்ள பலப்பல
வேலை இருக்கு
(இந்தப் பாடல் வரிகளில் ஒரேயொரு தவறு மட்டும் இருக்கிறது. பாடலைக் கேட்டுவிட்டு திருத்துங்கள். கேட்காமலும் திருத்தலாம்?!)
Recent Comments