Archive
கு.ப.ராஜகோபாலன்
எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவு முகம்
திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது.
ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டே வந்தார்கள். இடையிடையில் தாத்தா சாக்லெட் சாப்பிடுவதும், பாட்டி அதில் பாதியைப் பிடுங்கி வைத்துக்கொள்வதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது. பிறகு, தாத்தாவின் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டார் பாட்டி. அவரது நரையோடிய கேசம் காற்றில் பறந்து தாத்தாவின் முகத்தில் படர்ந்தது.
ஓடும் ரயிலில், தாத்தா டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்டபோது, தண்ணீர் சிதறி எதிரில் இருந்த எங்கள் மீதும் தெறித்தது. ‘‘இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே… கல்யாணமாகி நாப்பது வருசமாச்சு. உங்களை மாத்தவே முடியலை’’ என்று பாட்டி சொல்ல, ‘‘நாப்பது எங்கடி ஆச்சு? நாப்பத்தஞ்சு முடிஞ்சிருச்சு’’ என்றார் தாத்தா சிரிப்புடன். ‘‘அதெல்லாம் கரெக்டா கணக்கு வெச்சிருங்க’’ என்றபடி ஈரத்தைத் துடைத்தார் பாட்டி.
நாற்பத்தைந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும், களிப்பும் கேளிக்கையுமாக வாழ்வை அப்படியே பாதுகாக்கும் அந்த ரகசியம் என்னவென்று கேட்கலாம் போலத் தோன்றியது. அவர்களோ தீராத மையலில் புதையுண்டவர்களைப் போல் இருந்தார்கள். வாழ்வில் சுவை துவங்கும்போது தித்திப்பாக இருக்கலாம், ஆனால், அதன் கடைசி விளிம்பில்கூட இத்தனை இனிப்பு இருக்க முடிவது ஆச்சர்யம் தந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பன், தன் மனைவியிடம் அவர்களைக் காட்டி, ஏதோ சொன்னான். அவன் மனைவி, ‘‘அதான் நரையேறிப் போச்சுல்ல… இன்னும் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு?’’ என்றாள். ‘‘நீ எல்லாம் நினைச்சாலும், இந்த வயசுல இப்படி இருக்க முடியாதுடி!’’ என்றான் நண்பன். ‘‘ம்ம்ம்… இந்த மூணு வருஷமே போதும் போதும்னு இருக்கு. வயசானா நான் உங்களை விட்டுட்டுப் பையன்கூட அமெரிக்கா போயிருவேன்’’ என்றாள். அருகில் இருந்த அவர் களின் இரண்டு வயதுப் பையன் எதுவும் புரியாமல், சிப்பர் டம்ளரில் பால் குடித்துக் கொண்டு வந்தான். வாழ்தலின் சுவை நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கக் கூடியதுதானோ?
திருப்பதியில் நண்பனின் குழந்தைக்கு மொட்டை போடு வதற்காக டிக்கெட் வாங்கிக் காத்திருக் கும்போது, திரும்பவும் அந்த வயதான தம்பதி யைப் பார்த்தேன் அந்தப் பாட்டி கையில் டிக்கெட் டுடன் நிற்க, தாத்தா அவருடைய கையைப் பிடித்தபடி எதையோ சொல்லிச் சிரித்தார். பாட்டியும் சிரித்தபடியே நாவிதர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து தன் கையில் இருந்த சீட்டைத் தந்து, தன் தலையை மொட்டையடிக்கும்படி சொன்னார்.
சவரக்கத்தியை நன்றாகத் தீட்டி, பாட்டியின் தலையில் தண்ணீர் தெளித்து மழிக்கத் துவங்கியதும், அருகில் உட்கார்ந்திருந்த தாத்தாவின் கண்கள் தானே கசியத் துவங்கின. பாட்டியின் தலைமுடி கற்றை கற்றை யாக தாத்தாவின் கைகளில் வந்து விழுந்தன. அவர் அழுகையை அடக்க முடியாதவரைப் போல வெளியே எழுந்து போய், ஒரு மரத்தடியில் குழந்தை யைப் போல நின்று விசும்பினார்.
குளித்துவிட்டு, மொட்டையடிக் கப்பட்ட தலையும் ஈரப்புடவையுமாக வந்தார் பாட்டி. வயதானவரின் முகத்தில் இருந்த துயரக் களையைக் கண்டது போல, பாட்டி ஆறுதல் சொல்லும் தொனியில், ‘‘சாமி காரியம். இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க. தொடச்சுக்கோங்க’’ என்றார். மொட்டையடிக்கப்பட்ட பிறகு பாட்டி, ஒரு துறவி போலிருந்தார்.
அன்று மாலையில் நல்ல மழை பெய்தது. காற்றோடு கூடிய திடீர் மழை. தரிசனத்தை முடித்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் நனைந்தபடியே ஓடி வெளிப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒதுங்கினோம். அங்கே அந்தப் பாட்டியும் தாத்தாவும் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்திருந்தனர். ஒரு துண்டைக் கொடுத்து எங்களைத் தலை துவட்டிக்கொள்ளச் சொன்னார் பாட்டி. பிறகு, முறுக்கும் லட்டும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
மழை விடும் வரை அருகிலே இருந்தோம். நண்பனின் மனைவி, ‘‘வேண்டுதலுக்காக மொட்டை போட்டீங் களா?’’ என்று கேட்டார். ‘‘சொன்னா சிரிப்பீங்க. அது ஒரு கதை’’ என்று தாத்தாவைக் காட்டியபடி சொல்லத் துவங்கினார் பாட்டி. ‘‘இவர் என் அத்தை பையன். நாங்க அப்போ திருக்கடையூர்ல இருந்தோம். அத்தை வீட்ல ரொம்ப வறுமை. அதனால இவர் எங்க வீட்லதான் தங்கிப் படிச்சார். அப்போ எனக்கும் இவர் மேல ரொம்ப ஈடுபாடு இருந்தது. இது என் வீட்ல யாருக்கும் பிடிக்கலை.
அப்பா எனக்கு திருநாகேஸ்வரத்துல இருந்து ஒரு மாப்பிள்ளை பாத்து நாள் குறிச்சிட்டாரு. கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. என்ன செய்றதுனும் தெரியலை. முகூர்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு யோசனை வந்தது. யாருக்கும் தெரியாம ஒரு நாவிதர்கிட்டே போயி, என் தலையை மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்போ எனக்கு கருகருனு அவ்வளவு கேசம்.
மொட்டைத் தலையா வந்து நின்ன என்னைப் பாத்து வீடே பயந்து போயிருச்சு. ஒரே ரகளை. அப்பா வுக்கு அப்படி ஒரு கோபம். விஷயம் மாப்பிள்ளை வீடு வரைக்கும் போயி, கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம் வேற வழியில்லாம இவருக்கே என்னைக் கட்டி வெச்சிட்டாங்க. பிரச்னையில்லாம கல்யாண மாகி குழந்தை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுறேன்னு அப்போ மனசில வேண்டிட்டு இருந்தேன். இவருக்கு வடக்கே வேலை கிடைச்சது. பாட்னாவில் வேலை, நாற்பது வருஷம் அங்கேயே இருந்தாச்சு. குழந்தைகள் இல்லை. ஆனா, வேண்டுதல் அப்படியே இருக்கேன்னுதான் வந்து மொட்டை போட்டுட்டேன். இத்தனை வருஷமா இவர் என் தலையை மொட்டை அடிக்க விடவே இல்லை. வயசாறது இல்லையா… இனி எவ்வளவு காலம் இருக்கப் போறோம்னுதான் புறப்பட்டு வந்தோம்’’ என்றார் பாட்டி. தாத்தாவின் முகம், மேலும் வேதனையில் ஆழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது.
பேச்சற்றவர்களாக நாங்கள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். திடீரென தாத்தா தன் மௌனத்தைக் கலைத்தவரைப் போல, ‘‘அப்படி என்கிட்டே என்ன பிடிச்சிருக்கு?’’ என்று கேட்டார். ‘‘ஆங்… அதையெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது’’ என்றார் பாட்டி.
மழை நின்ற பிறகு நாங்கள் இறங்கி நடக்கத் துவங்கினோம். அந்தப் பாட்டி சொன்னது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஆணிடம் என்ன பிடித்திருக் கிறது என்று எந்தப் பெண்ணாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அதோடு வாழ்வைக் கொண்டு செலுத்துவது, ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனையும் ரகசிய எண்ணங்களும்தானே என்றும் தோன்றியது. என்றோ மனதில் ஒரு விதையைப் போலத் துவங்கிய ஆசையை இன்று விருட்சமான பிறகும் பாட்டி வளர்த்துக்கொண்டே இருக்கிறார். வாழ்வின் நிஜமான சுவை இதுதான் போலும். வீடு திரும்பும் வரை அவர்கள் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.
பெண்ணின் வாழ்வு திருமணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. திருமணத் துக்காக பாதியில் படிப்பை, வேலையை, எழுத்தை, இசையை விட்ட ஆயிரமாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். மருந்துக்குக் கூட ஒரு ஆண் இப்படி நடந்து கொண்டது கிடையாது. திருமண வாழ்வு இனித்தாலும் கசந்தாலும் அதுதான் அவளது தலைவிதி. அதற்கு மாற்றும் கிடையாது.
கணவனை இழந்த ஒரு பெண்ணின் மன உலகை மிக நேர்மையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்த கதை கு.ப.ராஜகோபாலனின் ‘திரை’. பெண்களின் வெளிப்படுத் தப்படாத ஆசைகளையும் கனவுகளையும் தனது படைப்பு களின் மூலம் கவனப் படுத்தியவர் கு.ப.ரா. அவரது கதைகள் மன உலகின் விசித் திரங்களைச் சித்திரிப்பவை.
பால்ய வயதில் திருமண மாகும் கால கட்டம் அது. ஆகவே, உரிய காலம் வரை மனைவி அவளது பெற்றோர் வீட்டில்தான் இருப்பாள். அப்படி பெற்றோர் வீட்டில் இருக்கும் தன் மனைவி ராஜத்தைக் காண்பதற்காக அவள் கணவன் வந்து சேர் கிறான். கடந்த சில மாதங் களாக தனது பெற்றோருக்குத் தெரியாமல் ராஜம் உருகி உருகி கணவனுக்குப் பல கடிதங்கள் எழுதி இருக் கிறாள். அந்தக் கடிதங்கள் தந்த மனமயக்கத்தில் விரகதாபம் ஏற்பட்டு வந்து சேர்கிறான் ராஜத்தின் கணவன். ஆனால், வீட்டுக்கு வந்த நாள் முதல் அவனை ராஜம் கவனிக்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கும் புரியவில்லை.
அந்த வீட்டில் ராஜத்தின் அக்கா சரஸ்வதி விதவையாகி யார் கண்ணிலும் படாமல் தனியே இருக்கிறாள். ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் திருவிழா பார்க்கப் போய்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டும் தனியே உட்கார்ந்து வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் பாடும் பாடலைக் கேட்டதும், இதுவரை தனக்குக் கடிதங்கள் எழுதியதுகூட இவளாக இருக்குமோ என்று ராஜத்தின் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சரஸ்வதியிடம் போய், ‘‘நீதானே எனக்குக் கடிதங்கள் எழுதினாய்?’’ என்று கேட்கிறான். அவள் உண்மை வெளியாகி விட்ட பதற்றத்தில், ‘‘அது என் தங்கையின் நல்வாழ்வுக்காக எழுதினேன்’’ என்று சமாளிக்கிறாள். ‘‘இல்லை, உன் மனதில் உள்ள ஆசைகள், கனவுகளைத்தான் கடிதமாக வெளிப்படுத்தி இருக்கிறாய். அதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்’’ என்று அவன் அவள் மீது மோகம்கொள்ளும்போது, சரஸ்வதி, அவன் ராஜத்துக்கு மட்டுமே உரியவன் என்றும், இப்படிக் கடிதம் எழுதுவதன் மூலம் மட்டுமே தன்னை சாந்தப் படுத்திக்கொள்ள முடிவதாகவும், விதவைக்கு வேறு வழி இல்லை என்றும் சொல்லி, அவன் மனதை மாற்றுகிறாள். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். சரஸ்வதி தன் அறைக்குப் போய் விடுகிறாள். அவர்கள் இருவருக் குள்ளும் முன்போல கண்ணுக்குப் புலப்படாத திரை விழுந்துவிடுகிறது என்று முடிகிறது கதை. காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கிவிடுகிறது போலும்! இன்று விதவையைத் திருமணம் செய்து கொள்வது எளிதாகி, அந்தத் திரை விலக்கப்பட்டுவிட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாயினும் திருமணத்தின் மூலம் உருவான அன்பும் காதலும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போலப் பறந்துபோய்விடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத நூறு திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.
பரமபதத்தில் பாம்பு எது… ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்துவிடுகிறது. வாழ்வில் பாம்பையும் ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதானதில்லையோ!
மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா. 1902&ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், முழு நேர எழுத்தாளராக வேண்டி, சென்னைக்கு இடம் மாறி கஷ்ட ஜீவனத்தை மேற்கொண்டவர். தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் கு.ப.ராவும் ஒருவர். விடியுமா, கனகாம்பரம், நூருன்னிசா போன்ற இவரது கதைகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக் கின்றன. 42 வருடங்களே வாழ்ந்த கு.ப.ரா. மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருக்கிறார். ‘ஆண் & பெண் உறவை நுட்ப மான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன இவரது கதைகள்’ என்கிறார் க.நா.சு. இவரது எழுத்தின் பாதிப்பு தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் எனப் பலரிடம் காணப்படுகிறது.
http://www.vikatan.com/av/2005/jul/24072005/av0602.asp
கு.ப.ராஜகோபாலன்
எஸ்.ராமகிருஷ்ணன்
நினைவு முகம்
திருப்பதி செல்லும் ரயிலில் அந்தத் தம்பதியைப் பார்த்தேன். இருவருக்கும் அறுபதைக் கடந்த வயது. தாத்தா ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ரயிலில் கூட்டம் இல்லை. அவர் படிப்பதற்காக வாங்கி வைத்திருந்த ஆங்கில பேப்பர், பிளாஸ்டிக் கூடையில் செருகப்பட்டிருந்தது.
ரயில் வேகமாகக் கடந்து செல்லும்போது, அவர் தொலைவில் உள்ள வயலில் வந்திறங்கும் கொக்குகளைக் காட்ட, ஒரு குழந்தையின் வியப்பில் வெளியே எட்டிப் பார்த்தார் அந்தப் பாட்டி. பயணம் முழுவதும் அவர்கள் தணிவான குரலில் எதையோ பேசிச் சிரித்துக்கொண்டே வந்தார்கள். இடையிடையில் தாத்தா சாக்லெட் சாப்பிடுவதும், பாட்டி அதில் பாதியைப் பிடுங்கி வைத்துக்கொள்வதுமாக ஒரு விளையாட்டு நடந்துகொண்டு இருந்தது. பிறகு, தாத்தாவின் தோளில் சாய்ந்து படுத்துக்கொண்டார் பாட்டி. அவரது நரையோடிய கேசம் காற்றில் பறந்து தாத்தாவின் முகத்தில் படர்ந்தது.
ஓடும் ரயிலில், தாத்தா டம்ளரில் தண்ணீர் ஊற்றி குடிக்க முற்பட்டபோது, தண்ணீர் சிதறி எதிரில் இருந்த எங்கள் மீதும் தெறித்தது. ‘‘இன்னும் சின்னப் பிள்ளையாட்டம் இருக்கீங்களே… கல்யாணமாகி நாப்பது வருசமாச்சு. உங்களை மாத்தவே முடியலை’’ என்று பாட்டி சொல்ல, ‘‘நாப்பது எங்கடி ஆச்சு? நாப்பத்தஞ்சு முடிஞ்சிருச்சு’’ என்றார் தாத்தா சிரிப்புடன். ‘‘அதெல்லாம் கரெக்டா கணக்கு வெச்சிருங்க’’ என்றபடி ஈரத்தைத் துடைத்தார் பாட்டி.
நாற்பத்தைந்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தும், களிப்பும் கேளிக்கையுமாக வாழ்வை அப்படியே பாதுகாக்கும் அந்த ரகசியம் என்னவென்று கேட்கலாம் போலத் தோன்றியது. அவர்களோ தீராத மையலில் புதையுண்டவர்களைப் போல் இருந்தார்கள். வாழ்வில் சுவை துவங்கும்போது தித்திப்பாக இருக்கலாம், ஆனால், அதன் கடைசி விளிம்பில்கூட இத்தனை இனிப்பு இருக்க முடிவது ஆச்சர்யம் தந்தது.
என்னுடன் வந்திருந்த நண்பன், தன் மனைவியிடம் அவர்களைக் காட்டி, ஏதோ சொன்னான். அவன் மனைவி, ‘‘அதான் நரையேறிப் போச்சுல்ல… இன்னும் என்ன கொஞ்சல் வேண்டியிருக்கு?’’ என்றாள். ‘‘நீ எல்லாம் நினைச்சாலும், இந்த வயசுல இப்படி இருக்க முடியாதுடி!’’ என்றான் நண்பன். ‘‘ம்ம்ம்… இந்த மூணு வருஷமே போதும் போதும்னு இருக்கு. வயசானா நான் உங்களை விட்டுட்டுப் பையன்கூட அமெரிக்கா போயிருவேன்’’ என்றாள். அருகில் இருந்த அவர் களின் இரண்டு வயதுப் பையன் எதுவும் புரியாமல், சிப்பர் டம்ளரில் பால் குடித்துக் கொண்டு வந்தான். வாழ்தலின் சுவை நாளுக்கு நாள் திரிந்து கொண்டே இருக்கக் கூடியதுதானோ?
திருப்பதியில் நண்பனின் குழந்தைக்கு மொட்டை போடு வதற்காக டிக்கெட் வாங்கிக் காத்திருக் கும்போது, திரும்பவும் அந்த வயதான தம்பதி யைப் பார்த்தேன் அந்தப் பாட்டி கையில் டிக்கெட் டுடன் நிற்க, தாத்தா அவருடைய கையைப் பிடித்தபடி எதையோ சொல்லிச் சிரித்தார். பாட்டியும் சிரித்தபடியே நாவிதர்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகே வந்து தன் கையில் இருந்த சீட்டைத் தந்து, தன் தலையை மொட்டையடிக்கும்படி சொன்னார்.
சவரக்கத்தியை நன்றாகத் தீட்டி, பாட்டியின் தலையில் தண்ணீர் தெளித்து மழிக்கத் துவங்கியதும், அருகில் உட்கார்ந்திருந்த தாத்தாவின் கண்கள் தானே கசியத் துவங்கின. பாட்டியின் தலைமுடி கற்றை கற்றை யாக தாத்தாவின் கைகளில் வந்து விழுந்தன. அவர் அழுகையை அடக்க முடியாதவரைப் போல வெளியே எழுந்து போய், ஒரு மரத்தடியில் குழந்தை யைப் போல நின்று விசும்பினார்.
குளித்துவிட்டு, மொட்டையடிக் கப்பட்ட தலையும் ஈரப்புடவையுமாக வந்தார் பாட்டி. வயதானவரின் முகத்தில் இருந்த துயரக் களையைக் கண்டது போல, பாட்டி ஆறுதல் சொல்லும் தொனியில், ‘‘சாமி காரியம். இதுக்குப் போயி கண்ணைக் கசக்கிட்டு இருக்கீங்க. தொடச்சுக்கோங்க’’ என்றார். மொட்டையடிக்கப்பட்ட பிறகு பாட்டி, ஒரு துறவி போலிருந்தார்.
அன்று மாலையில் நல்ல மழை பெய்தது. காற்றோடு கூடிய திடீர் மழை. தரிசனத்தை முடித்துவிட்டு வந்தபோது மழை பிடித்துக்கொண்டது. நாங்கள் நனைந்தபடியே ஓடி வெளிப் பிராகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒதுங்கினோம். அங்கே அந்தப் பாட்டியும் தாத்தாவும் ஜமுக்காளத்தை விரித்து உட்கார்ந்திருந்தனர். ஒரு துண்டைக் கொடுத்து எங்களைத் தலை துவட்டிக்கொள்ளச் சொன்னார் பாட்டி. பிறகு, முறுக்கும் லட்டும் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.
மழை விடும் வரை அருகிலே இருந்தோம். நண்பனின் மனைவி, ‘‘வேண்டுதலுக்காக மொட்டை போட்டீங் களா?’’ என்று கேட்டார். ‘‘சொன்னா சிரிப்பீங்க. அது ஒரு கதை’’ என்று தாத்தாவைக் காட்டியபடி சொல்லத் துவங்கினார் பாட்டி. ‘‘இவர் என் அத்தை பையன். நாங்க அப்போ திருக்கடையூர்ல இருந்தோம். அத்தை வீட்ல ரொம்ப வறுமை. அதனால இவர் எங்க வீட்லதான் தங்கிப் படிச்சார். அப்போ எனக்கும் இவர் மேல ரொம்ப ஈடுபாடு இருந்தது. இது என் வீட்ல யாருக்கும் பிடிக்கலை.
அப்பா எனக்கு திருநாகேஸ்வரத்துல இருந்து ஒரு மாப்பிள்ளை பாத்து நாள் குறிச்சிட்டாரு. கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை. என்ன செய்றதுனும் தெரியலை. முகூர்த்தத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ஒரு யோசனை வந்தது. யாருக்கும் தெரியாம ஒரு நாவிதர்கிட்டே போயி, என் தலையை மொட்டை போட்டுட்டு வந்துட்டேன். அப்போ எனக்கு கருகருனு அவ்வளவு கேசம்.
மொட்டைத் தலையா வந்து நின்ன என்னைப் பாத்து வீடே பயந்து போயிருச்சு. ஒரே ரகளை. அப்பா வுக்கு அப்படி ஒரு கோபம். விஷயம் மாப்பிள்ளை வீடு வரைக்கும் போயி, கல்யாணம் நின்னு போச்சு. அப்புறம் வேற வழியில்லாம இவருக்கே என்னைக் கட்டி வெச்சிட்டாங்க. பிரச்னையில்லாம கல்யாண மாகி குழந்தை பிறந்தா இங்கே வந்து மொட்டை போடுறேன்னு அப்போ மனசில வேண்டிட்டு இருந்தேன். இவருக்கு வடக்கே வேலை கிடைச்சது. பாட்னாவில் வேலை, நாற்பது வருஷம் அங்கேயே இருந்தாச்சு. குழந்தைகள் இல்லை. ஆனா, வேண்டுதல் அப்படியே இருக்கேன்னுதான் வந்து மொட்டை போட்டுட்டேன். இத்தனை வருஷமா இவர் என் தலையை மொட்டை அடிக்க விடவே இல்லை. வயசாறது இல்லையா… இனி எவ்வளவு காலம் இருக்கப் போறோம்னுதான் புறப்பட்டு வந்தோம்’’ என்றார் பாட்டி. தாத்தாவின் முகம், மேலும் வேதனையில் ஆழ்ந்ததைக் கவனிக்க முடிந்தது.
பேச்சற்றவர்களாக நாங்கள் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். திடீரென தாத்தா தன் மௌனத்தைக் கலைத்தவரைப் போல, ‘‘அப்படி என்கிட்டே என்ன பிடிச்சிருக்கு?’’ என்று கேட்டார். ‘‘ஆங்… அதையெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது. சொன்னாலும் உங்களுக்குப் புரியாது’’ என்றார் பாட்டி.
மழை நின்ற பிறகு நாங்கள் இறங்கி நடக்கத் துவங்கினோம். அந்தப் பாட்டி சொன்னது மறுக்க முடியாத உண்மை. ஒரு ஆணிடம் என்ன பிடித்திருக் கிறது என்று எந்தப் பெண்ணாலும் முழுமையாகச் சொல்லிவிட முடியாது. அதோடு வாழ்வைக் கொண்டு செலுத்துவது, ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டிருக்கும் கற்பனையும் ரகசிய எண்ணங்களும்தானே என்றும் தோன்றியது. என்றோ மனதில் ஒரு விதையைப் போலத் துவங்கிய ஆசையை இன்று விருட்சமான பிறகும் பாட்டி வளர்த்துக்கொண்டே இருக்கிறார். வாழ்வின் நிஜமான சுவை இதுதான் போலும். வீடு திரும்பும் வரை அவர்கள் நினைவில் வந்து கொண்டே இருந்தார்கள்.
பெண்ணின் வாழ்வு திருமணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறது. திருமணத் துக்காக பாதியில் படிப்பை, வேலையை, எழுத்தை, இசையை விட்ட ஆயிரமாயிரம் பெண்கள் இருக்கிறார்கள். மருந்துக்குக் கூட ஒரு ஆண் இப்படி நடந்து கொண்டது கிடையாது. திருமண வாழ்வு இனித்தாலும் கசந்தாலும் அதுதான் அவளது தலைவிதி. அதற்கு மாற்றும் கிடையாது.
கணவனை இழந்த ஒரு பெண்ணின் மன உலகை மிக நேர்மையாகவும் நுட்பமாகவும் பதிவு செய்த கதை கு.ப.ராஜகோபாலனின் ‘திரை’. பெண்களின் வெளிப்படுத் தப்படாத ஆசைகளையும் கனவுகளையும் தனது படைப்பு களின் மூலம் கவனப் படுத்தியவர் கு.ப.ரா. அவரது கதைகள் மன உலகின் விசித் திரங்களைச் சித்திரிப்பவை.
பால்ய வயதில் திருமண மாகும் கால கட்டம் அது. ஆகவே, உரிய காலம் வரை மனைவி அவளது பெற்றோர் வீட்டில்தான் இருப்பாள். அப்படி பெற்றோர் வீட்டில் இருக்கும் தன் மனைவி ராஜத்தைக் காண்பதற்காக அவள் கணவன் வந்து சேர் கிறான். கடந்த சில மாதங் களாக தனது பெற்றோருக்குத் தெரியாமல் ராஜம் உருகி உருகி கணவனுக்குப் பல கடிதங்கள் எழுதி இருக் கிறாள். அந்தக் கடிதங்கள் தந்த மனமயக்கத்தில் விரகதாபம் ஏற்பட்டு வந்து சேர்கிறான் ராஜத்தின் கணவன். ஆனால், வீட்டுக்கு வந்த நாள் முதல் அவனை ராஜம் கவனிக்கவே இல்லை. எதற்காக இப்படி நடந்துகொள்கிறாள் என்று அவனுக்கும் புரியவில்லை.
அந்த வீட்டில் ராஜத்தின் அக்கா சரஸ்வதி விதவையாகி யார் கண்ணிலும் படாமல் தனியே இருக்கிறாள். ஒரு நாள் வீட்டில் உள்ளவர்கள் திருவிழா பார்க்கப் போய்விடுகிறார்கள். சரஸ்வதி மட்டும் தனியே உட்கார்ந்து வீணை வாசித்துக்கொண்டு இருக்கிறாள். அவள் பாடும் பாடலைக் கேட்டதும், இதுவரை தனக்குக் கடிதங்கள் எழுதியதுகூட இவளாக இருக்குமோ என்று ராஜத்தின் கணவனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சரஸ்வதியிடம் போய், ‘‘நீதானே எனக்குக் கடிதங்கள் எழுதினாய்?’’ என்று கேட்கிறான். அவள் உண்மை வெளியாகி விட்ட பதற்றத்தில், ‘‘அது என் தங்கையின் நல்வாழ்வுக்காக எழுதினேன்’’ என்று சமாளிக்கிறாள். ‘‘இல்லை, உன் மனதில் உள்ள ஆசைகள், கனவுகளைத்தான் கடிதமாக வெளிப்படுத்தி இருக்கிறாய். அதை இப்போதுதான் நான் புரிந்து கொண்டேன்’’ என்று அவன் அவள் மீது மோகம்கொள்ளும்போது, சரஸ்வதி, அவன் ராஜத்துக்கு மட்டுமே உரியவன் என்றும், இப்படிக் கடிதம் எழுதுவதன் மூலம் மட்டுமே தன்னை சாந்தப் படுத்திக்கொள்ள முடிவதாகவும், விதவைக்கு வேறு வழி இல்லை என்றும் சொல்லி, அவன் மனதை மாற்றுகிறாள். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வந்துவிடுகிறார்கள். சரஸ்வதி தன் அறைக்குப் போய் விடுகிறாள். அவர்கள் இருவருக் குள்ளும் முன்போல கண்ணுக்குப் புலப்படாத திரை விழுந்துவிடுகிறது என்று முடிகிறது கதை. காலம் ஒரு திரையை விலக்கும் போது இன்னொரு திரையை உண்டாக்கிவிடுகிறது போலும்! இன்று விதவையைத் திருமணம் செய்து கொள்வது எளிதாகி, அந்தத் திரை விலக்கப்பட்டுவிட்டது. ஆனால் காதல் திருமணமோ, வீட்டார் பார்த்து வைக்கும் திருமணமோ எதுவாயினும் திருமணத்தின் மூலம் உருவான அன்பும் காதலும் பார்த்துக்கொண்டு இருக்கும்போதே இலவம் பஞ்சு காற்றில் பறப்பது போலப் பறந்துபோய்விடுவது மட்டும் ஏன் என்று புரியவில்லை. திருமணம் இன்றும் விலக்கப்பட முடியாத நூறு திரைகள் கொண்டதாகவே இருக்கிறது.
பரமபதத்தில் பாம்பு எது… ஏணி எது என்று பார்த்தவுடனே தெரிந்துவிடுகிறது. வாழ்வில் பாம்பையும் ஏணியையும் பிரித்தறிவது அத்தனை எளிதானதில்லையோ!
மணிக்கொடி காலச் சிறுகதை ஆசிரியர்களில் முக்கியமானவர் கு.ப.ரா. 1902&ல் கும்பகோணத்தில் பிறந்த இவர், முழு நேர எழுத்தாளராக வேண்டி, சென்னைக்கு இடம் மாறி கஷ்ட ஜீவனத்தை மேற்கொண்டவர். தமிழ்ச் சிறுகதையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட முக்கியமானவர்களில் கு.ப.ராவும் ஒருவர். விடியுமா, கனகாம்பரம், நூருன்னிசா போன்ற இவரது கதைகள் மிகுந்த சர்ச்சைக்குள்ளாகி இருக் கின்றன. 42 வருடங்களே வாழ்ந்த கு.ப.ரா. மிகக் குறைவான சிறுகதைகளே எழுதியிருக்கிறார். ‘ஆண் & பெண் உறவை நுட்ப மான பரிசோதனைக்கு உட்படுத்துகின்றன இவரது கதைகள்’ என்கிறார் க.நா.சு. இவரது எழுத்தின் பாதிப்பு தி.ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் எனப் பலரிடம் காணப்படுகிறது.
http://www.vikatan.com/av/2005/jul/24072005/av0602.asp
லா.ச.ராமாமிருதம்
தனிமையின் நிறம்
எஸ். ராமகிருஷ்ணன்
குற்றாலத்தின் தேனருவிக்குப் போகின்ற வழியில் உள்ள ஒரு பாறை இடுக்கில் படுத்துக்கிடந்த வயதானவர் ஒருவரைக் கண்டேன். அழுக்கேறிய உடையும், பிசுக்குப் பிடித்த தலையும், பிரகாசிக்கும் கண்களும் கொண்டவராக இருந்தார். யாருமற்ற மலையின் மீது அவர் எப்படி வாழ்கிறார் என்று ஆச்சர்யமாக இருந்தது. அவர் அருகில் உட்கார்ந்துகொண்டு, ‘‘எப்படித் தனியாக வாழ்கிறீர்கள்? நீங்கள் சாமியாரா?’’ என்று கேட்டேன்.
அவர் சிரித்தபடி, ‘‘நான் சாமி இல்லை. சாதாரண ஆசாமி. இங்கே இருப்பது பிடித்திருக்கிறது. தங்கிவிட்டேன். நான் தனியாக வாழவில்லை. இத்தனை மரங்கள், பறவைகள், அணில்கள், எறும்புகள் என ஒரு பெரிய உலகமே என்னைச் சுற்றி இருக்கிறதே!’’ என்றார். தவறு என்னுடையது என்பது போலத் தலைகுனிந்தேன். அவர் சிரித்தபடியே தொடர்ந்து சொன்னார்…
ÔÔசூரியனையும் சந்திரனையும் போல் தனிமையானவர்கள் உலகில் வேறு யாருமே கிடையாது. மனிதனுடைய பெரிய பிரச்னை அடுத்த மனிதன் தான். கூடவே இருந்தாலும் பிடிக்காது. இல்லாவிட்டாலும் பயம்!ÕÕ
அருவியை விடவும், என்னைச் சுத்த மாக்கின இந்தச் சொற்கள். வாழ்வின் நுட்பங்களை ஞான உபதேசங்களாக வாசிப்பதைவிடவும் வாழ்ந்து கண்டவனின் நாக்கிலிருந்து கிடைக்கும் போதுதான் நெருக்கமாக இருக்கிறது.
தனியாக இருப்பது பயமானது என்ற எண்ணம் குழந்தையிலிருந்தே நம்முள் ஊறத் துவங்கிவிடுகிறது. உண்மையில் தனிமை பயமானதா? நிச்சயமாக இல்லை. தனிமை ஒரு சுகந்தம். அதை நுகர்வதற்குத் தேவை மனது மட்டுமே!
சில நாட்களுக்கு முன், கடற்கரையில் இரவில் அமர்ந்திருந்தேன். குழந்தை விளையாடிப் போட்ட பலூன் ஒன்றை கடல் அலை இழுத்துக்கொண்டு இருந்தது. பலூன் உள்ளே போவதும் கரையேறுவது மாக ஒரு நாடகம் நடந்துகொண்டே இருந்தது. ஆச்சர்யமாக இருந்தது. இவ்வளவு பெரிய கடலால் இந்தச் சிறிய பலூனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. எவ்வளவு பெரிய அலைகளின் கைகளால் நீட்டிப் பிடித்தாலும், பலூன் தண்ணீரில் மிதந்துகொண்டுதான் இருக் கிறது. ஆனால், அலைகள் சலிப்புற்று நிறுத்துவதேயில்லை.
நம் தனிமையும் இந்த பலூன் போல அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும், தன்னியல்பு மாறாமல் இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டில் யாருமற்றுப் போன நேரங்களில்தான் நாம் தனிமையாக இருப்பதாக உணர் கிறோம். அது நிஜமானது இல்லை. ஒவ்வொரு நிமிஷமுமே நாம் தனிமை யானவர்கள்தான்!
நாம் பார்க்கும் காட்சியை, நாம் பார்த்த விதத்தில் இன்னொருவர் பார்ப்பதில்லையே! சாப்பிடும்போது, தண்ணீர் குடிக்கும்போது, படிக்கும் போது, உறங்கும்போது என எப்போ துமே தனிமையாகத்தான் இருக்கிறோம். ஆனால், அதை அறிந்துகொள்வதில்லை. இயற்கையின் முன் மட்டும்தான் தனிமையின் வாசனையை நம்மால் நுகர முடிகிறது. பிரமாண்டமான மலையின் உச்சி யில் நின்றபடி சூரிய அஸ்தமன காட்சியை ஒருமுறை கண்டேன். பறவை சிறகடித்துக்கொண்டு இருப்பது போல, மேற்கு வானில் சூரியன் அசைந்து அசைந்து உள்ளே ஒடுங்குவதைக் கண் டேன். பார்த்துக்கொண்டு இருந்த போதே, வெளிச்சம் மறைந்து இருட்டு கசிந்து வரத் துவங்கி, கண்முன் இருந்த பள்ளத்தாக்கும், மரங்களும் காணாமல் போகத் துவங்கின. அதுவரை இல்லா மல், இருட்டின் நெருக்கத்தில்தான் நான் தனியாக இருக்கிறேன் என்ற பயம் எழும்பத் தொடங்கியது. ஆச்சர்யமாக இருந்தது. நம் தனிமையை மறைக்கும் கைகள் சூரியனுடையவைதானா?
தனிமையாக இருப்பது என்றவுடனே மற்றவர்களை விட்டு விலகிப் போய்விடுவது என்று நம் மனதில் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றல்ல. தனியாக இருப்பது என்பது மாறாத ஒரு நிலை. எத்தனை ஆயிரம் நிறைந்த கூட்டத்திலும்கூட நாம் தனியாள்தானே! கடலில் நீந்துகிறோம் என்றால், கடல் முழுவதுமா நீந்துகிறோம்? ஆறடிக்குள்தானே? அப்படி, வாழ்விலும் பகுதி அனுபவத்தை முழு அனுபவமாக மாற்றிக்கொண்டு விடுகிறோம்.
பௌத்த ஸ்தல மான சாஞ்சியில் ஒரு பிக்குவைச் சந்தித்தேன். அவர் நேபாளத் திலிருந்து நடந்தே வந்திருக்கிறார். அவரது பையில் பௌத்த சாரங்கள் அடங்கிய புத்தகம் இருந்தது. அந்தப் புத்தகத்தில் உலர்ந்து போன அரச மர இலை ஒன்றை வைத்திருந்தார். ‘எதற் காக அந்த இலை?’ என்று கேட்டேன்.
அவர் அமைதியான குரலில், ‘ஒரே மரத்தில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. ஒவ்வொரு இலையும் ஒரு வடிவத்தில் இருக்கிறது. ஒரு நேரம் அசைகிறது… ஒரு நேரம் அசைய மறுக்கிறது. ஒரு இலை காற்றில் எந்தப் பக்கம் அசையும் என்று யாருக்காவது தெரியுமா? அல்லது, எப்போது உதிரும் என்றாவது தெரியுமா? இலை மரத்திலிருந்தபோதும் அது தனியானது தான். மரத்திலிருந்து உதிர்ந்த பிறகும் அது தனியானதுதான். உலகில் நாமும் அப்படித்தானே வாழ்கிறோம்! அதை நினைவுபடுத்திக்கொள்ளத்தான் இந்த இலை’ என்றார். மரத்தடியிலிருந்து பிறக்கும் ஞானம் என்பது இதுதானோ என்று தோன்றியது.
ஒரு வெளிநாட்டுக்காரன் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக அந்த பிக்குவை அருகில் அழைத்தான். அவர் எழுந்து ஒரு எட்டு நடந்துவிட்டு, மண்டியிட்டு தலையால் பூமியை வணங்கினார். திரும் பவும் மறு எட்டு வைத்துவிட்டு, அதே போல் தலையால் பூமியை வணங்கினார். எதற்காக அப்படி நடந்துகொள்கிறார் என்று எவருக்கும் புரியவேயில்லை.
அவர் சிரித்தபடியே, ‘பூமி எத்தனை பெரிதானது! மனித கால்களால் அதை முழுவதும் சுற்றி நடந்து, கடந்து விட முடியுமா என்ன? அதை விடவும் பேருண்மை என்ன இருக்கிறது? அதை புரிந்துகொண்டதால்தான் இப்படிச் செய்கிறேன்’ என்றார்.
‘இப்படி நடந்தேதான் நேபாளத் திலிருந்து வந்தீர்களா?’ என்று வெள்ளைக் காரன் கேட்க, ‘இதில் ஆச்சர்யப் படுவதற்கு என்ன இருக்கிறது? பத்து வயதிலிருந்து நான் இப்படித்தான் எங்கு போனாலும் நடந்தே போகிறேன். தற்போது எனக்கு வயது எழுபதாகிறது’ என்றார் பிக்கு.
பிக்கு என்னைக் கடந்து போய்விட்ட பிறகும், அவரது புத்தகத்தில் மறைந்திருந்த இலை மனதில் படபடத் துக்கொண்டே இருந்தது. ஒரு இலை காற்றில் எந்த பக்கம் அசையும், எப்போதும் உதிரும் என்பது ஏன் இன்று வரை ஆச்சர்யமாக இல்லை? தனிமையை இதைவிட வும் எளிமையாக விளக்க முடியுமா, என்ன?
புறநானூற்றுப் பாடல் ஒன்றில், இறந்து போன தன் தலைவனைப் பிரிந்த துக்கத்தில் தலைவி, ‘தேர்ச் சக்கரத்தில் ஒட் டிய பல்லியைப் போல அவரோடு வாழ்ந்து வந்தேன்’ என்கிறாள். எத்தனை நிஜமான வார்த்தை! தேர்ச் சக்கரத்தில் ஒட்டிக் கொண்ட பல்லி, தன் இருப்பிடத்தை விட்டு நகர்வதே இல்லை. ஆனாலும், தேரோடு எத்தனையோ தூரம் பயணம் செய்திருக் கிறது. எத்தனையோ மேடு பள்ளங்களைக் கடந்து போயிருக் கிறது. பெண்ணின் தீராத் தனிமையை விளக்கும் கவித்துவ வரிகள் இவை.
தனிமை உக்கிரம் கொள்ளும்போது அதை நாம் எதிர்கொள்ள முடியாமல் எதற்குள்ளாவாவது மூழ்கிக்கொண்டு விடுகிறோம். பெரும்பான்மை குடும்பங் களில் பெண்கள் இருப்பு இப்படித்தான் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் துணை வேண்டும் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டு ஒருவரோடு வாழத் துவங்கி, அந்தத் துணை ஏற்படுத்தும் வலியையும் நெருக்கடியையும் தாங்கிக் கொள்ள முடியாமலும், அதை விட்டு விலகி தனது வாழ்வை எதிர்கொள்ள முடியாமலும் அல்லாடுகிறார்கள்.
ஏதோ சில அரிய நிமிஷங்கள்தான் அவர்களை, தான் யாருடைய மனை வியோ, சகோதரியோ, தாயோ இல்லை; தான் ஒரு தனியாள் என்று உணர்த்து கின்றன. அந்த நிமிஷம் கூடப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே புகையென மறைந்துவிடுகிறது.
வாழ்வு அனுபவங்களை உன்னத தரிசனங்கள் போல, கவிதையின்மொழியில் கதைகள் ஆக்கியவர் லா.ச.ராமாமிருதம். அவரது கதைகள் இசை யைப் போல நிசப்தமும், தேர்ந்த சொற்களின் லயமும் கொண்டவை. சொல்லின் ருசியைப் புரிய வைக்கும் நுட்பம் கொண்டது அவரது எழுத்து. லா.ச.ரா&வின் ‘கிரஹணம்’ என்ற கதை, ஒரு பெண் தன் தனிமையை உணரும் அபூர்வ கணத்தைப் பதிவு செய்துள்ளது.
கதை, சூரிய கிரஹணத்தன்று கடலில் குளிப்பதற் காகச் செல்லும் கணவன்&மனைவி இருவரைப் பற்றியது. மனைவி கடலில் குளிக்கப் பயந்து போய் வரமாட்டேன் என்கிறாள். கணவன் கட்டாயப்படுத்தி அழைத்துப் போகிறான். பயந்து பயந்து தண்ணீரில் இறங்குகிறாள். ஒரு அலை அவள் மேல் விழுந்து கணவன் கையிலிருந்து அவளைப் பிடுங்கிக் கடலினுள் கொண்டு போகிறது.
மூச்சடைக்கிறது. ஒரு நூலளவு மூச்சு கிடைத்தால்கூடப் போதும் என்று போராடுகிறாள். அலை புரட்டிப் போடுகிறது. மூச்சுக் காற்று கிடைக்கிறது. தன்னை யாரோ காப்பாற்றியிருப்பது புரிகிறது. அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு யாரோ ஒருவன் சிரித்தபடி நிற்கிறான். யார் அவன், எப்படி இவ் வளவு உரிமையாக கையைப் பிடித்துக் கொண்டு இருக்கிறான் என்று யோசிப்ப தற்குள் இன்னொரு அலை வந்து அவளை உள்ளே இழுத்துப் போகிறது.
அவள் தண்ணீருள் திணரும் நிமிஷத்துக்குள், தான் ஒரு பெண்ணாகப் பிறந் ததுதான் இத்தனைத் துயரத்துக்குக் காரணம் என்று அவளுக்குப் புரி கிறது. தனது ஆசைகளை, தாபங்களை மறைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்ந்து வந்திருக்கிறோம், தனது சுயம் வாசிக்கப்படா மல் வீணயின் தந்தியில் புதைந்துள்ள இசை யைப் போல தனக்குள் ளாகவே புதைந்து போய்க் கிடப்பது புரிகிறது.
அதே ஆள் திரும்பவும் அவளைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றுகிறான். அவளது கணவன் சிறு தொந்தி தெறிக்க, பதறி ஒடி வருகிறார். காப்பாற்றியவன் சிரித்தபடியே, ‘இந்த அம்மா சாக இருந் தாங்க. நல்ல வேளை, நான் பார்த்துக் காப்பாற்றினேன்’ என் கிறான். அதுவரை நடந் தது அவளுக்குள் புதைந்து போய், அவள் பயம் கரைந்து வெறிச் சிரிப்பாகிறது. சிரிப்பு காரணமற்ற அழுகை யாக மாறி, ‘என்னை வீட்டுக்கு அழைச்சிட் டுப் போயிடுங்கோ!’ என்று கத்துகிறாள் என்ப தாக கதை முடிகிறது.
கிரஹணம் பிடித்தது போல வாழ்வில் இப்படிச் சில சம்பவங் கள் கடக்கின்றன. ஆனால், இந்த நிமிஷங் கள்தான் வாழ்வின் உண்மையான அர்த்தத் தைப் புரிய வைக் கின்றன.
சில வேளைகளில் தோன்றுகிறது… பிரமாண்டமான கடல் கூட தனிமையாகத் தானே இருக்கிறது! அதுவும் தனது தனி மையை மறைத்துக் கெள்வதற்குத்தான் இப்படி அலைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்துகொண்டு இருக் கிறதோ?
‘அலைகளைச் சொல்லிக் குற்றமில்லை, கடலில் இருக்கும் வரை’ என்கிற நகுலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
சாகித்ய அகாடமி பரிசு பெற்ற லா.ச.ராமாமிருதம் தனித்துவமான கதை சொல்லும் முறையும், கவித்துவமான நடையும் கொண்ட அரிய எழுத்தாளர். அவரது கதைகள் இயல்பான அன்றாட வாழ்வின் சித்திரங்களாகும். ஆனால், அதன் அடிநாதமாக மெய்தேடல் ஒன்று இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஒரு சிற்பியைப் போல சொற்களைச் செதுக்கி உருவாக்கும் கவித்துவ சிற்பங்கள் என இவர் கதைகளைச் சொல்லலாம். அபிதா, பச்சைக்கனவு, பாற்கடல், சிந்தா நதி, த்வனி, புத்ரா போன்றவை இவரது முக்கிய நூல்கள். இவரது கதைகள் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மனி உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தமிழ் உரைநடையில் லா.ச.ரா. நடை என தனித்துவமானதொரு எழுத்து முறையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற லா.ச.ராமாமிருதம் தற்போது சென்னை, அம்பத்தூரில் வசித்து வருகிறார்.
http://www.vikatan.com/av/2005/jul/17072005/av0602.asp
கந்தர்வன்
எஸ்.ராமகிருஷ்ணன்
கல் தடம்
கோயில், வழிபாட்டுக்கு உரிய இடம் மட்டுமல்ல; அதன் ஊடாக இசையும் கலையும் சிறுவணிகமும், மருத்துவ மும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்திருக் கின்றன. கோயில் ஒரு கூட்டு வெளி. அது யாருமற்றவர்களுக்கான போக்கிட மாகவும், காலத்தின் மாபெரும் சாட்சியாக வும், கோடிக்கோடி மனிதர்களின் ஆசைகளும் கனவுகளும் சமர்ப்பிக்கப் படும் இடமாகவும் இருக்கிறது.
ஆனால், பிரார்த்தனை என்பது வெறும் சடங்காகிவிட்ட சூழலில், தெய்வத்தைத் தவிர மற்ற யாவும் கவனிப்பாரற்றுப் போகத் துவங்கி விட்டிருக்கின்றன. ஓதுவார்களின் தேவாரப் பாடலும், நாகஸ்வர இசையும், படபடக்கும் புறாக் கூட்டமும், தண்ணீர் நிரம்பிய தெப்பத்தின் மீது கோபுர நிழல் ஊர்ந்துகொண்டு இருப்பதும், பண்டாரங்களின் ஞானப் பாடலும், எண்ணெய் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் தெரியும் மயக்கமான தோற்றங்களும், பிராகாரத்தை நிறைக்கும் மணியோசையும், சந்தன மணமும், கால் தூக்கி நிற்கும் யாளிகளும், உற்சவமும், உலாவும், தேரும், திருவிழாவும் கோயிலின் புராதன நினைவுகள் போலவே புதையுண்டு கிடக்கின்றன.
இன்று கோயில் ஒரு வணிக நிறுவனம். வாசலில் செருப்பை அவிழ்த்துப் போடுவதில் துவங்கி, ஒவ்வொரு பத்தடிக்கும் ஏதோ காரணம் சொல்லிப் பணம் கறக்கும் வித்தைக் கூடம். அதே கற்தூண்களும், சிற்பங் களும் இருக்கின்றன. ஆனால், அதன் மீது எரியும் டியூப் லைட்டிலிருந்து மின்சார மணி வரை உபயதாரர்களின் பெயர்கள், அவர்களின் முழு முகவரியோடு செல்போன் நம்பர் வரை பொறிக்கப்பட்டு மின்னுகின்றன. (நூற்றாண்டைக் கடந்தும் அழகு குறையாத யாளியைச் செய்த சிற்பியின் பெயரோ இன்று வரை யாருக்குமே தெரியாது!).
தரிசனத்துக்கும் முதல், இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள். சிபாரிசுக் கடிதங்கள், கையூட்டு, பல் இளிப்பு, என நடைமுறைத் தந்திரங்களின் கூடாரமாகிவிட்டது கோயில். அமைதி யையும் சாந்தத்தையும் இன்று கோயிலில் காண்பது அபூர்வமாகி விட்டது.
கோயிலுக்குச் செல்பவர்களில் ஒரு சதவீதம் பேர்கூட அங்குள்ள சிற்பங்களையோ, ஓவியங்களையோ, பிராகாரச் சுவர் முழுவதும் கல் வரிகளாக நீளும் கல்வெட்டுகளையோ நின்று பார்ப்பதை நான் கண்டதே இல்லை. பொதுச் சுவர்களில் சிவப்பு நிறங்களில் ஒட்டப்படும் விரை வீக்க விளம்பரங்களைக்கூட நின்று படிப்பதற்கு ஆள் இருக்கிறார்கள். ஆனால், மாறாத அழகும் புன்னகையும் கொண்ட சிற்பங்களை நேர்கொள்வதற்கு எவருமே இல்லை.
பல கோயில்களில், அங்கு பணிபுரிவர்களுக்கே எது என்ன சிற்பம் என்று பெயர்கூடத் தெரிவதில்லை. நான் கோயிலுக்குச் செல்ல நேர்ந்த சமயங்களில், வெகு அரிதாகவே சன்னதிக்குச் செல்வேன். மற்றபடி, எனக்குக் கோயில் ஒரு சிற்பக் கூடம். காலத்தின் கருவறை. வழிபாடுள்ள கோயில்களிலாவது யாராவது ஆட்கள் தென்படுகிறார்கள். கைவிடப்பட்டு தூர்ந்த நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான கோயில்களில் சிற்பங்கள் மூளியாக்கப்பட்டு, கை கால் இழந்த நிலையில் சிதறிக் கிடக்கின்றன. புளியமரத்தடியில் தேவகணங்களும், துவாரபாலகர்களும் உருச்சிதைந்து போய், கேட்பாரற்றுக் கிடக்கிறார்கள்.
சமீபத்தில், திருவிடைமருதூரில் உள்ள பாவை விளக்கைக் காண்பதற்காகச் சென்றிருந்தேன். சன்னதிக்கு அருகில் உள்ள மண்டபத்தில் நின்றிருக்கிறது அந்த விளக்கு. ஐந்தரை அடி உயர வெண்கல விளக்கு. தொலைவிலிருந்து பார்க்கும்போது யாரோ ஒரு பெண், நூற்றாண்டுகளாக கையில் விளக்குடன் நின்றுகொண்டு இருப்பது போல இருக்கிறது. அவளின் முக வசீகரமும், நகக்கண்கள்கூட துல்லியமாக வார்க்கப்பட்டிருந்த அழகுமாக, பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போன்ற ஈர்ப்பைத் தருகிற விளக்கு.
சரபோஜி மன்னர்களின் காலத்தில் வாழ்ந்த பெண் அவள். தனக்கு விருப்பமானகணவன் வேண்டும் என்பதற்காக வேண்டுதல் செய்து அதை நிறைவேற்றும் படியாக தன்னைப் போலவே வெண்கலத்தில் விளக்கு செய்து வைத்திருக்கிறாள். அந்த பெண்ணின் கண்கள் காதல் ஏறி கவிழ்ந்திருக்கின்றன. உதட்டில் சந்தோஷம் கரை தட்டி நிற்கிறது. அவள் காலடியில் உள்ள கல்வெட்டில் அவளது பிரார்த்தனையின் நோக்கம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதை வார்த்து எடுத்தவன் எத்தனை பெரிய கலைஞனாக இருந்திருப்பான்! எப்படி அவளது ஆடை மடிப்புகளைக்கூட இத்தனை சுத்தமாகச் செய்ய முடிந்திருக்கிறது அவனால்! அதுவும், அவளது கையில் உள்ள விளக்கு எரியும்போது முகத்தில் ஒளிர்ந்து படரும் சுடரொளியில் முகம் வெட்கத்தில் சுருங்கி விரிவது போலவே இருக்கிறது. இத்தனை வசீகரமும் கவனிக்கப்படாமல் ஒதுங்கியே இருக்கிறது. அவசரமும் பரபரப்பும் மிக்கவர்களாக கையில் காசை இறுக்கிப் பிடித்தபடியே சன்னதியை நோக்கி ஓடும் மனிதர்களின் கண்களில் அந்தப் பாவைவிளக்கு படுவதே இல்லை. ரயில் நிலையங்களிலும் ரேஷன் கடைகளிலும் காண முடிந்த பரபரப்பு கோயிலுக்குள்ளும் தொற்றிக்கொண்டு விட்டது.
இதன் இன் னொருபுறம், கிராமப்புற கோயில்களில் பெரும்பான்மை, சாதியைக் கட்டிக் காக்கும் காப்பரண் களாக ஆகி இருக்கின்றன. கிராமக் கோயில் எதிலும், எவரும் விருப்பம்போல நுழைந்துவிட முடியாது. ஒவ்வொரு தெய்வமும் ஒரு சாதிக்கு மட்டுமே உரியது! மற்ற எந்த சாதிக்காரனும் அந்தக் கோயிலின் வாசற்படியைக்கூட மிதித்துவிட முடியாது. ஆலயப் பிரவேசம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இன்னமும் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய முடியாத கோயில்கள் பல ஊர்களிலும் இருக்கத்தான் செய்கின்றன.
ஆறு வருடங்களுக்கு முன், நானே ஒரு சம்பவத்தை நேரில் கண்டிருக்கிறேன். சிவகாசி அருகில் உள்ள சிற்றூர் ஒன்றில் உள்ள காளியம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்பது தெரிந்து, அரசு அவர்கள் ஆலயப் பிரவேசம் செய்ய ஏற்பாடு செய்திருந்தது.
குறிப்பிட்ட நாளில், தாசில்தாரில் துவங்கி அத்தனை அரசு அதிகாரிகளும் அந்தக் கிராமத்தில் குவிந்தார்கள். ஆனால், எந்த மக்கள் ஆலயத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமோ, அவர்களில் ஒருவர்கூடத் தன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அரசு அதிகாரியே ஒரு தட்டில் பழம், தேங்காய் வாங்கி எடுத்துக்கொண்டு, அவர்களில் சிலருக்குத் தைரியம் சொல்லி அழைத்து வந்திருந்தார். ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் வந்தனர். கோயிலுக்குள் நுழைவதற்காக அவர்கள் வந்து நின்றபோது, அந்த முகங்களில் பயமும் நடுக்கமும் ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. வயதான பெண் ஒருத்தியின் கைகள் நடுங்கின. கோயிலுக்குள் அவர்களை அனுமதித்தது தங்களுக்கு உடன்பாடில்லை என்பதுபோல, மற்றொரு மேல்சாதியினர் கோயிலை விட்டு விலகியே நின்றிருந்தார்கள்.அதுவரை இருந்த பூசாரி, அன்று தான் பூஜை வைக்க முடியாது என்று விலகிக்கொண்டார். தாசில்தாரே துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பூஜை வைத்தார்.
பூஜை முடிந்தது. பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. ஆனால், இந்த நாடகம் முழுவதும் ஒரு நாள்தான்! மீண்டும், அந்தக் கோயில் எந்தச் சாதிக்குச் சொந்தமாக இருந்ததோ, அவர்கள் வசமே திரும்பிப் போய்விட்டது. அன்று கோயிலில் சாமி கும்பிட வந்தவர்கள், அதன் பிந்திய நாட்களில், வேறு வேறு காரணங்களுக்காக உதைபட்டார்கள்.
வழிபாட்டை விடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனைப் புரிந்துகொள்வதுமே ஆகும். நம்மைச் சுற்றிய மனிதர்களின் மீது தீராத துவேஷமும், பகையும், பொறாமையுமாக வாழ்கிற நாம், கோயிலில் மட்டும் எப்படிப் பரிசுத்தவாதிகளாக நடந்துகொள்ள முடியும்?
மனம் காழ்ப்பு உணர்ச்சியின் ஊற்றாக மாறிக்கொண்டு இருக்கும்போது, கருணையையும், அன்பையும் எப்படிக் கோயிலில் காண முடியும்? எளிய மனிதர்களின் விட்டுக்கொடுத்தல் எத்தகையது என்பதை நாம் உணரவே இல்லை. அடுத்தவனின் உரிமையை அபகரித்துக் கொள்வதற்குத்தான் நமது அறிவும் பலமும் அதிகம் பயன்பட்டிருக்கிறது.
கந்தர்வனின், ‘சாசனம்’ என்ற கதை எளிய மனிதர்களின் விட்டுக் கொடுத்தலையும் ஆவேசத்தையும் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது. கந்தர்வன் ஒரு கவிஞர். முற்போக்குச் சிந்தனையாளர். ‘விதவிதமாக மீசை வைத்தோம்… ஆனால், வீரத்தை எங்கோ தொலைத்துவிட்டோம்’ என்று பாடும் கவியுள்ளம் கொண்டவர். சிறந்த சிறுகதைப் படைப்பாளி.
‘சாசனம்’ கதை, ஒரு புளிய மரத்தைப் பற்றியது. அந்த மரம் குறவர்கள் குடிசைகளுக்கு மத்தியில் உள்ளது. பிரமாண்டமான அந்த மரத்தடியில் பன்றிகள் அடைந்து கிடக்கின்றன. கதைசொல்லி அதைத் தனது அப்பாவின் புளியமரம் என்று அறிமுகப்படுத்துகிறார்.
அருகில் உள்ள ஊர்களில் அப்பாவுக்கு நிறைய நிலங்கள் உண்டு. யாவையும் குத்தகைக்காரர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் இருந்தபடியே அப்பா அவர்களுக்கு உத்தரவு கொடுத்துக் கொண்டு இருப்பார். அந்த நிலம் யாவும் தாத்தாவுக்கு, மகாராஜா தானமாகத் தந்தவை. அதற்கு சாசனமும் இருக்கின்றன.
அப்பாவுக்கு ரொம்பவும் பிடித்த மானது அந்த கொறட்டுப் புளி தான் (குற வீட்டுப் புளி என்பதைச் சொல்லக் கூச்சப்பட்டு, கொறட்டு புளியாக்கி இருந்தார் அப்பா). ஒவ்வொரு முறை புளியம்பழங்களை உலுக்கும்போதும், அந்தப் பகுதியில் உள்ள கிழவி ஒருத்தி யும் அவளது மகளும் மரத்தடியில் வந்து நிற்பார்கள். அந்த கிழவியின் மகள் தாத்தாவின் சாடையிலே இருப்பாள். அப்பா பேசும்போது அவர்கள் வாஞ்சையாகக் கேட்பார்கள். பழம் உலுக்கி முடிந்ததும் அப்பா தன் காலால் கொஞ்சம் பழங்களை ஒதுக்கி, அந்தக் கிழவியை எடுத்துக்கொள்ளச் சொல்வார். அவள் மறுப்பேதும் இன்றி அள்ளிக்கொள்வாள். உண்மையில், அந்தப் புளியமரம் தனக்குச் சொந்தமானதுதானா என்று அப்பாவுக்கே சந்தேக மாகத்தான் இருந்தது. அதைச் சொந்தம் கொண்டாட அவரிடம் எந்தச் சாசனமும் இல்லை. ஆனா லும், அதை அனுபவித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால், அடுத்த வருஷம் அவர் புளியம்பழம் உலுக்க ஆளைக் கூட்டிக்கொண்டு போனபோது, அந்தக் கிழவி மரம் தனக்குத்தான் சொந்தம் என்றும், அதை உலுக்கும் உரிமை தனக்கு மட்டுமே உண்டு என்றும் அறிவிக்கிறாள்.
அப்பா கால மாற்றத்தை உணர்ந்துகொண்டு அதிர்ச்சியடைந் தவராக, வெளியேறி வீடு திரும்பி வருகிறார். ஆனால், அந்த மரம் தன்னுடையதுதானா என்று பரிசோதிக்க, அவர் சாசனம் எதையும் எடுத்துப் பார்க்கவில்லை என்பதோடு கதை முடிகிறது.
மறைமுகமாக இக்கதை விளக்குவதெல்லாம், அந்தக் கிழவி அவரது தாத்தாவின் மனைவிகளில் ஒருத்தி. அவளுக்கு உரிமையான மரத்தை இத்தனை வருடமாக அவள் அனுமதியோடு அப்பா அனுபவித்துக் கொண்டு இருந்தார். ஆனால், அதற்கான நன்றியோ, கருணையோ அவரிடம் இல்லை. முடிவாக, புளியமரத்துக்கு உரிமையானவள் குரல் தரும்போது, வழியின்றி வெறும் ஆளாகத் திரும்பிவிடுவதன் மூலம் அவர் உண்மையை ஒப்புக் கொள்வதை அறிய முடிகிறது.
பிறப்பில் உருவான பேதங்களைக் களைவதற்காகத்தான் கோயில்களும், பள்ளிக்கூடமும், அற நிலையங்களும் உருவாக்கப்பட்டன. இன்று அவையே சாதியையும், துவேஷத்தையும, வன்முறை யும் வளர்ப்பவை ஆகிவிட்டன.
சாலையோரத்தில் உள்ள நடுகல்லை ஒரு பௌத்தத் துறவி வணங்கிக்கொண்டு இருக்கிறார். அதைக் கண்ட மற்றொரு துறவி, ‘இதென்ன முட்டாள்தனம்?’ எனக் கேட்க, ‘கோயிலின் உள்ளே நீ வணங்கும் புத்தனும்கூட இதைப் போன்றதொரு கல்தானே?’ என்று சிரிக்கிறார் என்கிறது ஜென் கதை.
நிஜம்தானே! நாம் கடைப்பிடிக்க வேண்டிய சுய ஒழுக்கத்தையும், அன்பையும் தூர விலக்கிவிட்டு, அபிஷேகமும், ஆராதனைகளும் செய்வதால் மட்டும் மனம் மலர்ச்சியுற்றுவிடும் என்று நம்பினால், அதன் பெயர் முட்டாள்தனம்தான் இல்லையா?
தொழிற்சங்கவாதியாகவும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பை வகித்த கலைஞராகவும் தீவிர பங்களிப்பு செய்த கந்தர்வன், வாழ்வின் அரிய தருணங்களைக் கதைகளாக்கியவர். புதுக்கோட்டையைச் சேர்ந்த கந்தர்வனின் இயற்பெயர் நாகலிங்கம். Ôகண்ணதாசன்Õ இதழில் எழுதத் துவங்கிய இவர் Ôசெம்மலர்Õ, Ôசுபமங்களாÕ, ÔதாமரைÕ போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தார். கவியரங்க மேடைகளில் இவர் வாசித்த கவிதைகள் இன்றும் திரும்பத் திரும்ப பாடப்பட்டு வருகின்றன. Ôமீசைகள்Õ என்ற இவரது கவிதைத் தொகுப்பும் Ôபூவுக்கு கீழேÕ, Ôசாசனம்Õ போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் மிக முக்கியமானவை. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று சென்னையில் உள்ள அவரது மகளின் வீட்டில் வசித்தபடி இலக்கியப் பணியை மேற்கொண்டிருந்த கந்தர்வன் உடல்நலக் குறைவின் காரணமாக ஓராண்டுக்கு முன் மரணமடைந்தார்.
http://www.vikatan.com/av/2005/jul/10072005/av0602.asp
Recent Comments