Archive

Archive for July, 2005

சத்யா

July 31, 2005 Leave a comment

நன்றி: துக்ளக் / ஆகஸ்ட் 3, 2005

| | |

Categories: Uncategorized

சத்யா

July 31, 2005 Leave a comment

நன்றி: துக்ளக் / ஆகஸ்ட் 3, 2005

| | |

Categories: Uncategorized

52 கேள்விகள்

July 29, 2005 Leave a comment

குமுதம் ::

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை?
ஆங்கிலம்

இப்போது 50 லிட்டர் கூவம் யார்?
நான்தான்

காதல் என்பது?
இயக்குநர்களின் கழிவு அல்லது பாடலாசிரியர்களின் அழிவு.

பிடித்த கலர்?
பொவொண்டோ

ரஜினி – கமல் ஒப்பிடுக?

அரசியலை ஜனரஞ்சகமாக்கியவர் ரஜினி;
ஜனரஞ்சகத்தை அரசியலாக்கியவர் கமல்

உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
முடி நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா – ரெஹ்மான்?
பண்ணைபுரத்தையும் பறங்கி மலையையும் பாஸ்டனுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

ரொட்டி பிடிக்காதா?
பசி பிடிக்கும்.

தம்பி…?
இல்லை மகன்தான் அரசியலுக்கு

ரஜினி?
நடிகர்களில் நடிப்பவர்

கமல்?
அறிவாளியாக நடிப்பவர்களில் ஒருவர்

மனைவி?
வீட்டுக்கு வந்த வேலைக்காரி

பெரியார்?
என்னவோ செய்தார்.

அண்ணா?
இவரும் என்னவோ செய்தார்.

சின்ன வயதில் ஹீரோ பக்தி உண்டா?
சினிமாவுக்குப் போனதுண்டு. படம் மட்டும் பார்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நம்பிக்கை, துணிச்சல், தைரியம், வீரம், செல்வம், கல்வி, குணம், தானியம், அரிசி, பருப்பு, மஞ்சள் என்று ஒன்று

முதல் பாடல்?
அழுவாச்சியா நிறுத்தறியா

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
எதைச் சொல்வது

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?
தமிழ்நாட்டை விட அயல்நாடுகளில் தமிழுணர்வு அதிகம் என்னும் பிரக்ஞை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)
50 கிலோவுக்குக் குறைவான தாஜ் மஹல்கள்

படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
மீண்டும் படம் எடுத்து பார்வையாளனைப் படுத்துவது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?
சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தீவிரவாதியாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; தலைவனாவாய்

சென்னையில் பிடித்த இடம்?
ஆளுங்கட்சியைப் பொறுத்தது

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?
வியப்பது ஆசையை
ரசிப்பது சாதுரியத்தை

வைகோ?
மதிமுகவில் திமுக கலப்பவர்
திமுகவில் மதிமுக கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?
நடிப்பது எப்பொழுது என்று தீர்மானித்துக் கொள்வது – திரைப்பட வெற்றி
நடிக்காதது எப்பொழுது என்று தீர்மானித்துக்கொள்வது – அரசியல் வெற்றி.
அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

ராஜா – ரகுமான் ஒப்பிடுங்கள்?
அவர் தமிழிசைப் பிரியர்;
இவர் ‘‘அங்ரேஸி லவ்வர்’’

துதி – காதல் எழுதுவதில் எது பிடிக்கும்?
காதலில் துதி எழுதப்பிடிக்கும்

கவிஞர்களில் கூட விரசம்தானே அதிகம் இருக்கிறது?
பக்தி உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

ரசிக்கும் வீடியோ..?
கண்கள் மூடிய முழுஅழுக்கு குளியல்

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்…
ஆண் : தாடி முத்தம் வேண்டுமா;
தாடி இல்லாத முத்தமா?
டாடி முத்தம் என்பது பெண்ணே
நான் உனக்குத் தருவது
தாடியில்லாத முத்தம் என்றால்
அம்மா உனக்குத் தருவது (வலைஞரின் கிளிப்பிள்ளைகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் நடுநிலைமை இல்லாதவர்களாக இருக்கிறார்களே ஏன்?
எனதுப் பிடிமானம் கொள்கைள் அல்ல – கூப்பாடுகள்தான்.

இன்றைய தலைமுடிக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?
முடிதிருத்தகத்தில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?
பணம் கூட மரத்தில் காய்க்கலாம்; அது பேப்பராவதற்கு முன்பே தட்டிப் பறித்தால்.

சந்திப்பு : திருவேங்கிமலை சரவணன்(னுக்காக பாஸ்டன் பாலாஜி)

Categories: Uncategorized

52 கேள்விகள்

July 29, 2005 Leave a comment

குமுதம் ::

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடிக்காத வார்த்தை?
ஆங்கிலம்

இப்போது 50 லிட்டர் கூவம் யார்?
நான்தான்

காதல் என்பது?
இயக்குநர்களின் கழிவு அல்லது பாடலாசிரியர்களின் அழிவு.

பிடித்த கலர்?
பொவொண்டோ

ரஜினி – கமல் ஒப்பிடுக?

அரசியலை ஜனரஞ்சகமாக்கியவர் ரஜினி;
ஜனரஞ்சகத்தை அரசியலாக்கியவர் கமல்

உங்கள் இளமையின் ரகசியம் என்ன?
முடி நரைக்காமல் பார்த்துக்கொள்வது

இளையராஜா – ரெஹ்மான்?
பண்ணைபுரத்தையும் பறங்கி மலையையும் பாஸ்டனுக்கு அறிமுகம் செய்தவர்கள்.

ரொட்டி பிடிக்காதா?
பசி பிடிக்கும்.

தம்பி…?
இல்லை மகன்தான் அரசியலுக்கு

ரஜினி?
நடிகர்களில் நடிப்பவர்

கமல்?
அறிவாளியாக நடிப்பவர்களில் ஒருவர்

மனைவி?
வீட்டுக்கு வந்த வேலைக்காரி

பெரியார்?
என்னவோ செய்தார்.

அண்ணா?
இவரும் என்னவோ செய்தார்.

சின்ன வயதில் ஹீரோ பக்தி உண்டா?
சினிமாவுக்குப் போனதுண்டு. படம் மட்டும் பார்ததில்லை.

ஜெயலலிதாவிடம் பிடித்தது?
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நம்பிக்கை, துணிச்சல், தைரியம், வீரம், செல்வம், கல்வி, குணம், தானியம், அரிசி, பருப்பு, மஞ்சள் என்று ஒன்று

முதல் பாடல்?
அழுவாச்சியா நிறுத்தறியா

நீங்கள் எழுதாததில் உங்களுக்குப் பிடித்த பாடல்?
எதைச் சொல்வது

தமிழர்களின் முக்கியக் குறைபாடு என்ன?
தமிழ்நாட்டை விட அயல்நாடுகளில் தமிழுணர்வு அதிகம் என்னும் பிரக்ஞை.

உங்கள் மனம் கவர்ந்த பெண்மணி யார்? (மனைவியைத் தவிர)
50 கிலோவுக்குக் குறைவான தாஜ் மஹல்கள்

படம் தோல்வியடைந்தால் என்ன செய்வது?
மீண்டும் படம் எடுத்து பார்வையாளனைப் படுத்துவது

தன்னம்பிக்கை வரிகள் ப்ளீஸ்?
சுடப்பட்டிருக்க மாட்டாய் நீ தீவிரவாதியாக இல்லாவிட்டால் சூடுதாங்கு; தலைவனாவாய்

சென்னையில் பிடித்த இடம்?
ஆளுங்கட்சியைப் பொறுத்தது

கலைஞரிடம் வியப்பது _ ரசிப்பது..?
வியப்பது ஆசையை
ரசிப்பது சாதுரியத்தை

வைகோ?
மதிமுகவில் திமுக கலப்பவர்
திமுகவில் மதிமுக கலக்காதவர்

விஜயகாந்த் அரசியலில் ஜெயிப்பாரா?
நடிப்பது எப்பொழுது என்று தீர்மானித்துக் கொள்வது – திரைப்பட வெற்றி
நடிக்காதது எப்பொழுது என்று தீர்மானித்துக்கொள்வது – அரசியல் வெற்றி.
அவர் தீர்மானித்து வெற்றி பெற வேண்டும்.

ராஜா – ரகுமான் ஒப்பிடுங்கள்?
அவர் தமிழிசைப் பிரியர்;
இவர் ‘‘அங்ரேஸி லவ்வர்’’

துதி – காதல் எழுதுவதில் எது பிடிக்கும்?
காதலில் துதி எழுதப்பிடிக்கும்

கவிஞர்களில் கூட விரசம்தானே அதிகம் இருக்கிறது?
பக்தி உள்ளவர்களும் கவிஞர்களாக இருக்கிறார்களே!

ரசிக்கும் வீடியோ..?
கண்கள் மூடிய முழுஅழுக்கு குளியல்

இந்த வாரம் எழுதியதில் பிடித்த பாடல்…
ஆண் : தாடி முத்தம் வேண்டுமா;
தாடி இல்லாத முத்தமா?
டாடி முத்தம் என்பது பெண்ணே
நான் உனக்குத் தருவது
தாடியில்லாத முத்தம் என்றால்
அம்மா உனக்குத் தருவது (வலைஞரின் கிளிப்பிள்ளைகள்)

நீங்கள் உட்பட இன்றைய கவிஞர்கள் நடுநிலைமை இல்லாதவர்களாக இருக்கிறார்களே ஏன்?
எனதுப் பிடிமானம் கொள்கைள் அல்ல – கூப்பாடுகள்தான்.

இன்றைய தலைமுடிக்குத் தகுந்தாற்போல் எப்படி உங்களை மாற்றிக் கொள்ள முடிகிறது?
முடிதிருத்தகத்தில் அதிகம் இருக்கிறேன்.

உங்களை உற்சாகப்படுத்தும் பொன்மொழி?
பணம் கூட மரத்தில் காய்க்கலாம்; அது பேப்பராவதற்கு முன்பே தட்டிப் பறித்தால்.

சந்திப்பு : திருவேங்கிமலை சரவணன்(னுக்காக பாஸ்டன் பாலாஜி)

Categories: Uncategorized

சுஜாதா

July 28, 2005 3 comments

என் இனிய இயந்திரா ::

  • ‘ஜீவாவுக்குப் பகிரங்கக் கடிதம்!

    பொய் வியாபாரியே! வயதானவர்களைக் கொல்ல உனக்கு என்ன உரிமை? தப்பிப் போன கருக்களைக் கலைக்க என்ன உரிமை? அருமையான நூல்களைத் தடை செய்ய என்ன உரிமை? பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்க உனக்கு என்ன உரிமை? பதில் சொல். உலுத்தனே, டிசம்பர் மூன்று ஞாபகம் இருக்கட்டும்.’

    இவண்,
    ம.தி.க.
    (மக்களாட்சி திரும்ப வரும் கழகம்)

  • “ஃப்ரமோன் அனலைஸர் என்று ஒன்று இருக்கிறது. அது சுமாராக வேலை செய்கிறது!” ஜீனோ மூக்கை மூக்கை உறிஞ்சியது. “என் டிஸைனிலேயே ரொம்ப ‘வீக்’ மூக்குதான். அப்படியிருந்தும் மற்றொரு மிஷினை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த ஆள் ஒரு ஃப்ராடு! இது மனிதனே இல்லை.”
  • “கவலைப் படாதே. ஜீவா கவனித்து விட்டார். ஜீவா நமக்கெல்லாம் பெருந்தலைவர். அவர் கருணையுள்ளவர். அன்புள்ளவர். திறமையுள்ளவர்… ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு ஒன்றே… ஜீவா வாழ்க!”
  • “ஜீவா ஜீவா ஜீவாதாரம் ஜீவனோபாயம் ஜீவாத்மா” என்றது ஜீனோ.
  • ‘ஜேவ்’ மனிதர்களும் ரோபாட்டுகளும் விளையாடும் ஆட்டம். ‘ ஜேவ்’ என்கிற ஒரு ரோபாட் இயங்கும். அதை மனித கட்சிக்காரர்கள் பிடிக்க வேண்டும். பிடித்துக் கொல்ல வேண்டும். ரோபாட் மிகத் திறமையாக ஓடும். அது யாரையும் எதிர்க்கது. யாருக்கும் துன்பம் கிடையாது. முட்டாது, மோதாது. மைதானத்தின் எல்லையை மீறாது. அதைப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான். ஜேவ் ஆடுவதற்கு, பிடிப்போன் – எடுப்போன் – அடிப்போன் என்று தனித் தனி விபாகங்கள் உண்டு. கடைசியில் ரோபாட்டைக் கொல்கிறவனுக்கு வெற்றிச் செல்வன் (வெ.செ.) என்கிற பட்டம் ஜீவாவே கொடுப்பார்.
  • “இன்று, இந்தக் கணத்தில், நான் உங்களுக்குத் தகுதியில்லாத தலைவன் என்று சொல்லுங்கள். உடனே விலகுகிறேன். இன்று இந்தக் கணத்தில் நான் உங்களுக்குத் தீங்கிழைத்து விட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் மார்பைப் பிளந்து கொள்கிறேன். இன்று, இக்கணத்தில் நான் உங்களைக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று சொல்லுங்கள். இதோ, என் காவலனின் லேசர் என்னைத் துளைக்கட்டும்…” – ஜீவா அந்த ஆயுதத்தை வாங்கித் தன் மார்பில் குறி வைத்துக் கொண்டு, “சொல்லுங்கள், நான் தகுதியில்லாதவனா?”

    “இல்லை… இல்லை” என்றன லட்சம் தொண்டைகள்.

  • “உங்கள் எல்லோரையும் ஆண்டது, ஆள்வது ஒரு புகை, ஒரு மாயத்தோற்றம் – ஜீவா!”
  • “இருங்கள்… இருங்கள். முழு உண்மையையும் சொல்லித் தீர்க்கிறேன்” என்று நிலா கதறினாள். “இவள்தான் நம் புதிய தலைவி!” என்ற கூட்டத்தினர், அவளை கவனிக்க விருப்பமின்றி ஆகாயத்தில் வீசப்பட்டாள். கீழே விழுவதற்கு முன் பந்தாகப் பிடிக்கப்பட்டாள்.
  • ‘யார் புரட்சிக்காரர், யார் சர்வாதிகாரி! யார் விடுதலை செய்கிறவர்கள்? யார் விடுவிக்கப் பட்டவர்கள்…? சற்றுமுன் ஜீவாவுக்காகக் கொடி அசைத்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்? ஜீவாவை சதிசெய்து கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் எங்கள் மூவரையும் இப்போது உயர்த்துகிறார்கள். இந்த ரவியும் மனோவும் யார்? இவர்கள்தான் சூத்திரதாரிகளா? இல்லை பிண்ணணியில் இதைவிட மகத்தான பொய் முக வடிவங்களா? ஒன்றுமே புரியவில்லையே!’
  • “அந்த நாய் சற்று அபாயகரமான நாய்! சொல்லிக் கொடுத்ததுக்கு மேலாகச் சிந்திக்கத் துவங்கிவிட்டது.”
    “நீ கற்றுக் கொடுத்ததுதான் ரவி.”

  • “என் கண்ணுக்கு முன்னால் வேண்டாம்! தயவு செய்து வேறு எங்கேயாவது கூட்டிப் போய் அதைக் கொல்லி. என் இனிய இயந்திர நண்பன் அது!”
    “ஒரு இயந்திரத்தின் மேல் ஏன் இத்தனை பாசம் என்று தெரியவில்லை.”

  • ‘எத்தனை பெரிய சக்தி இவர்கள்! விஞ்ஞானம், டெக்னாலஜி, பிம்பங்கள், குரல்கள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒருத்தியின் உண்மையான வடிவத்தை முழுவதும் கலைத்துவிட்டு, வேறு குணாதிசயங்களை ஒட்ட வைக்கும் இந்த மகத்தான சக்தியை எப்படி எதிர்ப்பேன்?’
  • “இதை ஏமாற்று என்று சொல்வது தப்பு. நீ மக்கியாவெல்லி படித்திருக்கிறாயா, இல்லை நீட்ஷே?” என்று கேட்டான் ரவி.
  • “சுதந்திரம் என்பதற்கே அர்த்தம் இல்லை. உன்னை சுதந்திரமானவள் என்று சொல்லிக் கொள்கிறாய். உன் புதிய சிந்தனை என்ன என்றுதான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எதிலிருந்து சுதந்திரம் என்பதைவிட எதற்காக சுதந்திரம் என்றுதான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்!”

    இன்று காலை பாஸ்டன் செல்லும் ரயிலில் திடீர் சோதனை. மோப்பம் பிடித்துக் கொண்டே நாய்கள் வந்தது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு நாயைத் தவிர சிறந்த சாதனம் வேறு எதுவும் இல்லை. முஸ்லீமாக இருந்தால் தீவிர சோதனை; பாதிரியாருக்கு பாதி சோதனை என்று செய்யத் தெரியாது. பைரவரைக் கொண்டே எல்லா இடத்திலும் பாதுகாவல் புரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தபோது. ‘என் இனிய இயந்திரா’/’மீண்டும் ஜீனோ’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!

    தமிழ் | Tamil | அறிவியல்

  • Categories: Uncategorized

    சுஜாதா

    July 28, 2005 3 comments

    என் இனிய இயந்திரா ::

  • ‘ஜீவாவுக்குப் பகிரங்கக் கடிதம்!

    பொய் வியாபாரியே! வயதானவர்களைக் கொல்ல உனக்கு என்ன உரிமை? தப்பிப் போன கருக்களைக் கலைக்க என்ன உரிமை? அருமையான நூல்களைத் தடை செய்ய என்ன உரிமை? பாட்டையும் கூத்தையும் பண்பாட்டையும் நீக்க உனக்கு என்ன உரிமை? பதில் சொல். உலுத்தனே, டிசம்பர் மூன்று ஞாபகம் இருக்கட்டும்.’

    இவண்,
    ம.தி.க.
    (மக்களாட்சி திரும்ப வரும் கழகம்)

  • “ஃப்ரமோன் அனலைஸர் என்று ஒன்று இருக்கிறது. அது சுமாராக வேலை செய்கிறது!” ஜீனோ மூக்கை மூக்கை உறிஞ்சியது. “என் டிஸைனிலேயே ரொம்ப ‘வீக்’ மூக்குதான். அப்படியிருந்தும் மற்றொரு மிஷினை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த ஆள் ஒரு ஃப்ராடு! இது மனிதனே இல்லை.”
  • “கவலைப் படாதே. ஜீவா கவனித்து விட்டார். ஜீவா நமக்கெல்லாம் பெருந்தலைவர். அவர் கருணையுள்ளவர். அன்புள்ளவர். திறமையுள்ளவர்… ஒவ்வொரு குடிமகனும் அவருக்கு ஒன்றே… ஜீவா வாழ்க!”
  • “ஜீவா ஜீவா ஜீவாதாரம் ஜீவனோபாயம் ஜீவாத்மா” என்றது ஜீனோ.
  • ‘ஜேவ்’ மனிதர்களும் ரோபாட்டுகளும் விளையாடும் ஆட்டம். ‘ ஜேவ்’ என்கிற ஒரு ரோபாட் இயங்கும். அதை மனித கட்சிக்காரர்கள் பிடிக்க வேண்டும். பிடித்துக் கொல்ல வேண்டும். ரோபாட் மிகத் திறமையாக ஓடும். அது யாரையும் எதிர்க்கது. யாருக்கும் துன்பம் கிடையாது. முட்டாது, மோதாது. மைதானத்தின் எல்லையை மீறாது. அதைப் பிடிக்க வேண்டும், அவ்வளவுதான். ஜேவ் ஆடுவதற்கு, பிடிப்போன் – எடுப்போன் – அடிப்போன் என்று தனித் தனி விபாகங்கள் உண்டு. கடைசியில் ரோபாட்டைக் கொல்கிறவனுக்கு வெற்றிச் செல்வன் (வெ.செ.) என்கிற பட்டம் ஜீவாவே கொடுப்பார்.
  • “இன்று, இந்தக் கணத்தில், நான் உங்களுக்குத் தகுதியில்லாத தலைவன் என்று சொல்லுங்கள். உடனே விலகுகிறேன். இன்று இந்தக் கணத்தில் நான் உங்களுக்குத் தீங்கிழைத்து விட்டேன் என்று சொல்லுங்கள். உங்கள் எல்லோர் முன்னிலையிலும் என் மார்பைப் பிளந்து கொள்கிறேன். இன்று, இக்கணத்தில் நான் உங்களைக் கொடுமைப்படுத்தி விட்டேன் என்று சொல்லுங்கள். இதோ, என் காவலனின் லேசர் என்னைத் துளைக்கட்டும்…” – ஜீவா அந்த ஆயுதத்தை வாங்கித் தன் மார்பில் குறி வைத்துக் கொண்டு, “சொல்லுங்கள், நான் தகுதியில்லாதவனா?”

    “இல்லை… இல்லை” என்றன லட்சம் தொண்டைகள்.

  • “உங்கள் எல்லோரையும் ஆண்டது, ஆள்வது ஒரு புகை, ஒரு மாயத்தோற்றம் – ஜீவா!”
  • “இருங்கள்… இருங்கள். முழு உண்மையையும் சொல்லித் தீர்க்கிறேன்” என்று நிலா கதறினாள். “இவள்தான் நம் புதிய தலைவி!” என்ற கூட்டத்தினர், அவளை கவனிக்க விருப்பமின்றி ஆகாயத்தில் வீசப்பட்டாள். கீழே விழுவதற்கு முன் பந்தாகப் பிடிக்கப்பட்டாள்.
  • ‘யார் புரட்சிக்காரர், யார் சர்வாதிகாரி! யார் விடுதலை செய்கிறவர்கள்? யார் விடுவிக்கப் பட்டவர்கள்…? சற்றுமுன் ஜீவாவுக்காகக் கொடி அசைத்தவர்கள் எப்படி மாறிவிட்டார்கள்? ஜீவாவை சதிசெய்து கொலை செய்ய முயற்சித்ததாக அவர்கள் நம்பிக் கொண்டிருக்கும் எங்கள் மூவரையும் இப்போது உயர்த்துகிறார்கள். இந்த ரவியும் மனோவும் யார்? இவர்கள்தான் சூத்திரதாரிகளா? இல்லை பிண்ணணியில் இதைவிட மகத்தான பொய் முக வடிவங்களா? ஒன்றுமே புரியவில்லையே!’
  • “அந்த நாய் சற்று அபாயகரமான நாய்! சொல்லிக் கொடுத்ததுக்கு மேலாகச் சிந்திக்கத் துவங்கிவிட்டது.”
    “நீ கற்றுக் கொடுத்ததுதான் ரவி.”

  • “என் கண்ணுக்கு முன்னால் வேண்டாம்! தயவு செய்து வேறு எங்கேயாவது கூட்டிப் போய் அதைக் கொல்லி. என் இனிய இயந்திர நண்பன் அது!”
    “ஒரு இயந்திரத்தின் மேல் ஏன் இத்தனை பாசம் என்று தெரியவில்லை.”

  • ‘எத்தனை பெரிய சக்தி இவர்கள்! விஞ்ஞானம், டெக்னாலஜி, பிம்பங்கள், குரல்கள் இவற்றை வைத்துக் கொண்டு, ஒருத்தியின் உண்மையான வடிவத்தை முழுவதும் கலைத்துவிட்டு, வேறு குணாதிசயங்களை ஒட்ட வைக்கும் இந்த மகத்தான சக்தியை எப்படி எதிர்ப்பேன்?’
  • “இதை ஏமாற்று என்று சொல்வது தப்பு. நீ மக்கியாவெல்லி படித்திருக்கிறாயா, இல்லை நீட்ஷே?” என்று கேட்டான் ரவி.
  • “சுதந்திரம் என்பதற்கே அர்த்தம் இல்லை. உன்னை சுதந்திரமானவள் என்று சொல்லிக் கொள்கிறாய். உன் புதிய சிந்தனை என்ன என்றுதான் நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். எதிலிருந்து சுதந்திரம் என்பதைவிட எதற்காக சுதந்திரம் என்றுதான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்!”

    இன்று காலை பாஸ்டன் செல்லும் ரயிலில் திடீர் சோதனை. மோப்பம் பிடித்துக் கொண்டே நாய்கள் வந்தது. வெடிகுண்டுகள் இருக்கிறதா என்று சோதிப்பதற்கு நாயைத் தவிர சிறந்த சாதனம் வேறு எதுவும் இல்லை. முஸ்லீமாக இருந்தால் தீவிர சோதனை; பாதிரியாருக்கு பாதி சோதனை என்று செய்யத் தெரியாது. பைரவரைக் கொண்டே எல்லா இடத்திலும் பாதுகாவல் புரிந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தபோது. ‘என் இனிய இயந்திரா’/’மீண்டும் ஜீனோ’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!

    தமிழ் | Tamil | அறிவியல்

  • Categories: Uncategorized

    டூட்டா சப்னா ஷாங்காய் கா

    July 28, 2005 1 comment

    நடுத்தர வர்க்கத்துக்கும் சராசரி இந்தியனுக்கும் அயல்நாடென்றால் பரிவான பார்வை உண்டு. எதை எடுத்தாலும்

    ‘அந்த நாட்டைப் பார்! எப்படி வளர்ந்திருக்கிறது?’
    ‘பக்கத்து வீட்டுப் புள்ளை எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறது!’
    ‘உன்னுடைய கஸின் அமெரிக்கா சென்றுவிட்டானே’

    என்று துலாக்கோலை வைத்து ஒப்புமைப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம்.

    ஹோண்டாவின் போராட்டத்தினால் ஏற்றுமதி குறைந்து விடும் என்று சொல்லும் எகனாமிக் டைம்ஸ் போல் ‘ஸ்டாரு‘ம் சீனாவை முந்துவது நிராசையாகியது என்று ஒளிபரப்பியிருக்கிறார்கள். (நன்றி: திலிப் டிசுஸா)

    இன்னும் ‘அந்நியனி’ன் பிரமிப்பில் இருந்தே விடுபடவில்லை. ஐம்பது வருடம் முன்பு வரை ஏம்போக்கியாகவிருந்து தென்கிழக்காசியாவையும் இந்தியாவையும் ஒப்பிடும்போது ஆற்றாமை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதே பாதிப்பில் எவராவது திரைப்படத்திற்கு நிகரான ஃபிலிம் காட்டும் வித்தையாக சிம்பொனி ஷெனாய் ஒலிக்க குறும்படம் எடுத்திருப்பார்.

    திலீப்பின் வலைப்பதிவு முக்கியமானது.

    நான் நடுத்தர வர்க்கம். ‘அடுத்தவனைப் பார்’ என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன். கூட்டு வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் மின்னுவதைப் பார்த்து பொறாமைப் படுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழில் இன்னும் கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் பற்றிக் கொள்ளவில்லையே என்னும் அன்னிய அங்கலாய்ப்பு தோன்றுகிறது.

    சிலரின் பக்கங்கள்: கிருபா ஷங்கர் | Dilip D’Souza

    Categories: Uncategorized

    டூட்டா சப்னா ஷாங்காய் கா

    July 28, 2005 1 comment

    நடுத்தர வர்க்கத்துக்கும் சராசரி இந்தியனுக்கும் அயல்நாடென்றால் பரிவான பார்வை உண்டு. எதை எடுத்தாலும்

    ‘அந்த நாட்டைப் பார்! எப்படி வளர்ந்திருக்கிறது?’
    ‘பக்கத்து வீட்டுப் புள்ளை எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறது!’
    ‘உன்னுடைய கஸின் அமெரிக்கா சென்றுவிட்டானே’

    என்று துலாக்கோலை வைத்து ஒப்புமைப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம்.

    ஹோண்டாவின் போராட்டத்தினால் ஏற்றுமதி குறைந்து விடும் என்று சொல்லும் எகனாமிக் டைம்ஸ் போல் ‘ஸ்டாரு‘ம் சீனாவை முந்துவது நிராசையாகியது என்று ஒளிபரப்பியிருக்கிறார்கள். (நன்றி: திலிப் டிசுஸா)

    இன்னும் ‘அந்நியனி’ன் பிரமிப்பில் இருந்தே விடுபடவில்லை. ஐம்பது வருடம் முன்பு வரை ஏம்போக்கியாகவிருந்து தென்கிழக்காசியாவையும் இந்தியாவையும் ஒப்பிடும்போது ஆற்றாமை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதே பாதிப்பில் எவராவது திரைப்படத்திற்கு நிகரான ஃபிலிம் காட்டும் வித்தையாக சிம்பொனி ஷெனாய் ஒலிக்க குறும்படம் எடுத்திருப்பார்.

    திலீப்பின் வலைப்பதிவு முக்கியமானது.

    நான் நடுத்தர வர்க்கம். ‘அடுத்தவனைப் பார்’ என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன். கூட்டு வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் மின்னுவதைப் பார்த்து பொறாமைப் படுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழில் இன்னும் கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் பற்றிக் கொள்ளவில்லையே என்னும் அன்னிய அங்கலாய்ப்பு தோன்றுகிறது.

    சிலரின் பக்கங்கள்: கிருபா ஷங்கர் | Dilip D’Souza

    Categories: Uncategorized

    நம்பிக்கை

    July 28, 2005 Leave a comment

    எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது…
    இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளும் படக்கவிதை:

    ஜானி,

    இருக்க பயமேன்

    உனக்கும் மேலே இயக்கும்
    கைவிடாது

    மணிக்கு கால் செண்டரோ சப்போர்ட் செண்டரோ

    Royal Challenge வரட்டும்

    Black Dog குரைக்கட்டும்

    Old Monk இருக்கிறான்… மயங்காதே

    இசையில் மூழ்கி அமிழ்ந்து விடாதே

    இவண்

    நம்பிக்கை போட்டி

    Categories: Uncategorized

    நம்பிக்கை

    July 28, 2005 Leave a comment

    எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது…
    இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளும் படக்கவிதை:

    ஜானி,

    இருக்க பயமேன்

    உனக்கும் மேலே இயக்கும்
    கைவிடாது

    மணிக்கு கால் செண்டரோ சப்போர்ட் செண்டரோ

    Royal Challenge வரட்டும்

    Black Dog குரைக்கட்டும்

    Old Monk இருக்கிறான்… மயங்காதே

    இசையில் மூழ்கி அமிழ்ந்து விடாதே

    இவண்

    நம்பிக்கை போட்டி

    Categories: Uncategorized