Archive

Archive for July 1, 2005

கல்கி

July 1, 2005 8 comments

அரசியல்வாதிகள் இழுக்கும் ஆதாயத் தேர்

அசம்பாவிதம் ஏதுமின்றி கண்டதேவி சுவர்ணமூர்த்தீசுவரர் தேர்த் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அதனை அமைதியாக நடத்திக் காட்டிய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் உரியன.

தலித்துகள் இந்தத் திருவிழாவில் தேரிழுக்கக் கூடாது என்ற சமூக சீர்கேட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியிருந்தது என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஜாதி ஆதிக்க உணர்வு நீடிப்பது கேவலமே. எனினும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக உருமாறி, அடிதடியிலும் உயிரிழப்பிலும்கூட முடிவடைந்த இந்தத் தேர்த் திருவிழா, இவ்வாண்டு அமைதியாக நடந்துள்ளது. தலித்துகளையும் அரவணைத்து, திருவிழாவை அமைதியாக நடத்தும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை, மாவட்ட நிர்வாகம் பொறுப்புணர்வோடு சிறப்பாக நிறைவேற்றியுமிருக்கிறது. இரு ஜாதியினரிடையே அன்பையோ, நட்பையோ, மனிதாபிமானத்தையோ சட்டத்தால் வலியுறுத்தி வளர்த்துவிட முடியாது. சட்டம் ஆணைதான்போட முடியும். அன்பும் அங்கீகாரமும் இல்லாத சூழலில், அந்த ஆணையைச் செயல்படுத்துவது மிகவும் கஷ்டம். பொது மக்களின் உணர்வுகள் கொந்தளிக்கக்கூடிய இதுபோன்ற சமயங்களில், வன்முறையையும் உயிர்ச்சேதத்தையும் தவிர்ப்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது;

வன்முறையைத் தூண்டக்கூடிய சிலரைத் தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து, தாற்காலிகமாகச் சிறை வைக்கிறது. இந்த அடிப்படையில்தான் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனும், கண்டதேவி தேர்த் திருவிழாவுக்குப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை அவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர்.

கிருஷ்ணசாமியும் திருமாவளவனும், தங்கள் தொண்டர்களுடன் கண்டதேவிக்குப் படையெடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்..? தொண்டர்களின் உற்சாகம் கட்டுமீறியிருக்கக்கூடும். நீதிமன்ற ஆணையைக் கூட, தலைவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கி முழங்கியிருப்பார்கள்.

அத்தலைவர்கள், தங்களுக்கேயுரிய உணர்ச்சிகளைத் தூண்டும் பாணியில் பேசி, மக்களை உசுப்பிவிடும் சூழல் உருவாகியிருக்கும். இதைக் கண்டு தலித் அல்லாதார் அச்சமுற்றோ, ஆவேசமுற்றோ வன்முறையைக் கிளப்ப வழி பிறந்திருக்கும். இத்தலைவர்கள் அதிகம் பேசாமலேயிருந்திருந்தால்கூட, அவர்களுடைய வருகையே கோப-தாபங்களைத் தூண்டியிருக்கும்.

இதெல்லாம் எதுவுமின்றி, கோயில் நிர்வாகமே ‘அனைத்து ஹிந்துக்களும் தேர் இழுக்கலாம்’ என்று அறிவித்து, கணிசமான தலித்துகளின் பங்கேற்புடன் ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறது.

ஆனால் திருமாவளவனுக்கும் கிருஷ்ணசாமிக்கும்தான் இந்த நல்ல காரியத்தால் திருப்தி இல்லை! தாங்கள் அனுமதிக்கப்படாததை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் உள்நோக்கம் ஏதுமின்றி, சமூக நோக்கில் மட்டுமே அவர்கள் கண்டதேவிக்குச் செல்ல விரும்பியிருந்தால், தமிழக முதல்வரை நேரடியாகத் தொடர்பு கொண்டு காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மக்களையும் சூழ்நிலையையும் தயார்ப்படுத்திவிட்டுப் போய்வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல், ஏதோ யுத்தத்துக்கு வியூகம் வகுப்பதுபோல், ரகசியத் திட்டம் தீட்டிப் புறப்படப் பார்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசும் மனம் வைத்திருந்தால், இவ்விரு தலைவர்களையும் கைது செய்யாமலே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிந்ததால்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். தகவல் அறிந்ததுமே முதல்வர் ஜெயலலிதா இரு தலைவர்களையும் அழைத்து, கண்டதேவி செல்லும் முயற்சியைக் கைவிடும்படி கூறியிருக்கலாம். அல்லது “எனது அமைச்சர் ஒருவரையும் அனுப்புகிறேன்; மூவருமாகச் சென்று திரும்புங்கள். ஆனால் தொண்டர் படையோ, உணர்ச்சி தூண்டும் பேச்சோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களால் மறுத்திருக்க முடியாது. மறுத்திருந்தால், அவர்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், முதல்வர் இப்படி கௌரவமாக நடந்து கொள்ளவில்லை. கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்.

பேதங்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிற அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு அப்போதுதான் முடிவுக்கு வரும். ஊர் கூடித்தான் ஆன்மிகத் தேர் இழுக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் ஆதாயத் தேராக அது மாறிவிடக்கூடாது.

Categories: Uncategorized

கல்கி

July 1, 2005 8 comments

அரசியல்வாதிகள் இழுக்கும் ஆதாயத் தேர்

அசம்பாவிதம் ஏதுமின்றி கண்டதேவி சுவர்ணமூர்த்தீசுவரர் தேர்த் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அதனை அமைதியாக நடத்திக் காட்டிய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் உரியன.

தலித்துகள் இந்தத் திருவிழாவில் தேரிழுக்கக் கூடாது என்ற சமூக சீர்கேட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியிருந்தது என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஜாதி ஆதிக்க உணர்வு நீடிப்பது கேவலமே. எனினும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக உருமாறி, அடிதடியிலும் உயிரிழப்பிலும்கூட முடிவடைந்த இந்தத் தேர்த் திருவிழா, இவ்வாண்டு அமைதியாக நடந்துள்ளது. தலித்துகளையும் அரவணைத்து, திருவிழாவை அமைதியாக நடத்தும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை, மாவட்ட நிர்வாகம் பொறுப்புணர்வோடு சிறப்பாக நிறைவேற்றியுமிருக்கிறது. இரு ஜாதியினரிடையே அன்பையோ, நட்பையோ, மனிதாபிமானத்தையோ சட்டத்தால் வலியுறுத்தி வளர்த்துவிட முடியாது. சட்டம் ஆணைதான்போட முடியும். அன்பும் அங்கீகாரமும் இல்லாத சூழலில், அந்த ஆணையைச் செயல்படுத்துவது மிகவும் கஷ்டம். பொது மக்களின் உணர்வுகள் கொந்தளிக்கக்கூடிய இதுபோன்ற சமயங்களில், வன்முறையையும் உயிர்ச்சேதத்தையும் தவிர்ப்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது;

வன்முறையைத் தூண்டக்கூடிய சிலரைத் தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து, தாற்காலிகமாகச் சிறை வைக்கிறது. இந்த அடிப்படையில்தான் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனும், கண்டதேவி தேர்த் திருவிழாவுக்குப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை அவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர்.

கிருஷ்ணசாமியும் திருமாவளவனும், தங்கள் தொண்டர்களுடன் கண்டதேவிக்குப் படையெடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்..? தொண்டர்களின் உற்சாகம் கட்டுமீறியிருக்கக்கூடும். நீதிமன்ற ஆணையைக் கூட, தலைவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கி முழங்கியிருப்பார்கள்.

அத்தலைவர்கள், தங்களுக்கேயுரிய உணர்ச்சிகளைத் தூண்டும் பாணியில் பேசி, மக்களை உசுப்பிவிடும் சூழல் உருவாகியிருக்கும். இதைக் கண்டு தலித் அல்லாதார் அச்சமுற்றோ, ஆவேசமுற்றோ வன்முறையைக் கிளப்ப வழி பிறந்திருக்கும். இத்தலைவர்கள் அதிகம் பேசாமலேயிருந்திருந்தால்கூட, அவர்களுடைய வருகையே கோப-தாபங்களைத் தூண்டியிருக்கும்.

இதெல்லாம் எதுவுமின்றி, கோயில் நிர்வாகமே ‘அனைத்து ஹிந்துக்களும் தேர் இழுக்கலாம்’ என்று அறிவித்து, கணிசமான தலித்துகளின் பங்கேற்புடன் ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறது.

ஆனால் திருமாவளவனுக்கும் கிருஷ்ணசாமிக்கும்தான் இந்த நல்ல காரியத்தால் திருப்தி இல்லை! தாங்கள் அனுமதிக்கப்படாததை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் உள்நோக்கம் ஏதுமின்றி, சமூக நோக்கில் மட்டுமே அவர்கள் கண்டதேவிக்குச் செல்ல விரும்பியிருந்தால், தமிழக முதல்வரை நேரடியாகத் தொடர்பு கொண்டு காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மக்களையும் சூழ்நிலையையும் தயார்ப்படுத்திவிட்டுப் போய்வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல், ஏதோ யுத்தத்துக்கு வியூகம் வகுப்பதுபோல், ரகசியத் திட்டம் தீட்டிப் புறப்படப் பார்த்திருக்கிறார்கள்.

தமிழக அரசும் மனம் வைத்திருந்தால், இவ்விரு தலைவர்களையும் கைது செய்யாமலே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிந்ததால்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். தகவல் அறிந்ததுமே முதல்வர் ஜெயலலிதா இரு தலைவர்களையும் அழைத்து, கண்டதேவி செல்லும் முயற்சியைக் கைவிடும்படி கூறியிருக்கலாம். அல்லது “எனது அமைச்சர் ஒருவரையும் அனுப்புகிறேன்; மூவருமாகச் சென்று திரும்புங்கள். ஆனால் தொண்டர் படையோ, உணர்ச்சி தூண்டும் பேச்சோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களால் மறுத்திருக்க முடியாது. மறுத்திருந்தால், அவர்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், முதல்வர் இப்படி கௌரவமாக நடந்து கொள்ளவில்லை. கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்.

பேதங்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிற அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு அப்போதுதான் முடிவுக்கு வரும். ஊர் கூடித்தான் ஆன்மிகத் தேர் இழுக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் ஆதாயத் தேராக அது மாறிவிடக்கூடாது.

Categories: Uncategorized

சோலை

July 1, 2005 Leave a comment

Kumudam REPORTER ::

காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் செயல் தலைவி.

முன்னர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். லக்னோவில் தந்தை பெரியாருக்கு சிலை வைக்க முயன்றார். மேட்டுக்குடியினர் சீற்றம் கொண்டனர். போர்க்கோலம் பூண்டனர். பெரியாருக்கு சிலை வைக்கும் அளவிற்கு, அவர் பிராமண எதிர்ப்பில் ஈட்டி முனையாக இருந்தார்.

பிராமண சமுதாயத்திற்கும் பி.ஜே.பி.க்கும் அவர் சூட்டிய பெயர் மனுவாதிகள் என்பதாகும். அதாவது பிறப்பால் நால்வருணத் தத்துவத்தைச் செயல்படுத்துகிறவர்கள் என்று பொருள். அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குத்தான் பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிராம் தொடங்கினார். மேட்டுக்குடியினருக்கு மேலே தலித் மக்களை வானவில்லில் குடியேற்றி வாழ்வளிப்போம் என்று பிரகடனம் செய்தனர்.

சமுதாயத்தின் இருண்ட குகைக்குள் பயணம் செய்த தலித் மக்களுக்கு அந்தக் கட்சி விடிவெள்ளியாக மினுமினுத்தது. எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பிராமணர்கள்தான் என்ற போதத்தை அவர்கள் நம்பினர். பிராமண எதிர்ப்பில் பிறந்த பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மாவட்டந்தோறும் மாநாடு நடத்தியது. பின்னர் மாநில மாநாட்டையும் மங்களகரமாக நடத்திவிட்டது. என்ன மாநாடு? பிராமணர் மாநாடுதான்.

தலை வணங்காத் தலைவி என்று கருதப்பட்ட அந்த அம்மணி, மாநில மாநாட்டில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்கின. பூரணகும்ப மரியாதைதான். நன்றாகவே தலை வணங்கினார். பிராமணர்களுக்கு சந்தனத் திலகமிட்டார். தலித் மக்கள் அடக்கப்பட்டவர்களாம். பிராமண மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாம். இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாம். இவர்களுடைய அணிதான் தமது லட்சியம் என்று மாயாவதி அறிவித்தார்.

முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இந்த மூன்று சமுதாயங்களும் பின்னணியாக இருந்தன. அந்தப் பழைய நினைப்பில் இப்போது தலித், இஸ்லாமிய, பிராமணர் கூட்டணிக்கு முயல்கிறார். மாநில மக்கள் தொகையில் தலித்துகள் 21 சதவிகிதம்; பிராமணர் 20 சதவிகிதம்; இஸ்லாமியர் 15 சதவிகிதமாக உள்ளனர்.

அரசியலில் எட்டு அடிக்குள் எந்த மாளிகையும் எழுப்ப முடியாது. தலித் வாக்கு வங்கியை மட்டும் நம்பி சிம்மாசனத்திற்குச் செல்ல முடியாது என்பதனை அவர் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவிகிதத்தினர் பிராமணர்கள்தான். அவர்களைக் காங்கிரஸ் கைவிட்டது! அந்தச் சமுதாயத்தின் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் கண்டு கொள்ளவில்லை.

1991-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இப்போது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் அன்றைக்கு ஒரே தொகுதியில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ் இன்று 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு 221 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இன்று 80 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அன்றைக்கு 12 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் இன்று 98 தொகுதிகளில் வென்றது.

பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மூன்றுமுறை ஆட்சி அமைத்தது. முதல்வராக ஒரு பிராமணருக்குக் கூட முடி சூட்டியதில்லை. மாநில பி.ஜே.பி. தலைவராக ஒரு பிராமணர்கூட வீற்றிருந்ததில்லை. ஆனால், அந்தச் சமுதாயம்தான் பி.ஜே.பி.யின் அடித்தளமாக இருந்தது.

பிராமண சமுதாயத்தில் பி.ஜே.பி. இழந்து வரும் செல்வாக்கை பகுஜன் சமாஜ் கட்சி சுவீகரிக்க விரும்புகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் கட்சி 25 சதவிகித வாக்குகள் பெற்றது. இப்போது மேல் தட்டினர், நடுத்தர மக்களின் வாக்கு வங்கியில் குறி வைக்கிறது. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, நேற்று வரை சண்டை போட்ட மேல் நிலைச் சமுதாயத்தின் பொற்பாதங்களில் விழலாம் என்று முடிவு செய்துவிட்டது. எனவே, பிராமணர் மாநாடுகளை நடத்துகிறது.

அந்தச் சமுதாயத்தைக் கந்தகச் சொற்களால் விமர்சித்தே வளர்ந்த பகுஜன் கட்சியை பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் மாயாவதி மனுவாதத் தத்துவம் பேசினால் என்ன செய்வது? கண்களில் கனவுகளைத் தேக்கி இருப்பவர்கள் இப்படி கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஊர் மணக்கும் அந்தர்பல்டிகள், உலகம் அறிந்ததுதான். ஒவ்வொரு தேர்தலிலும் மதவாத பி.ஜே.பி.யோடு மல்லுக்கட்டும். ஊது உலையில் சூடேற்றப்பட்ட நெருப்புக்கனிகள்தான் விமர்சனங்கள். தேர்தல் தீர்ப்பு வெளியானதும் அரியணைக்காக அந்த மனுவாதக் கட்சியுடன் பேரம் பேசும். கூட்டணி காணும். முதல் இரண்டரை ஆண்டுகள் மாயாவதியே முதல்வர் என்று உடன்பாடு காணும். இப்படி பி.ஜே.பி.யின் முதுகில் ஏறி மாயாவதி இரண்டு முறை முதல்வரானார். இதனை ஜனநாயகத்தின் அதிசயம் என்று வாஜ்பாய் கூட இசை பாடினார்.

ஆனால் அந்த இரு முறையும் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற அம்மணி அனுமதிக்கவில்லை. கொட்டிக் கவிழ்த்துவிட்டார். பி.ஜே.பி.யின் கனவு கங்கையில் வெள்ளப் பெருக்கே ஏற்படவில்லை.

அதே பாடத்தை இன்றைக்கு பிராமண சமுதாயத்திற்கும் மாயாவதி படித்துக் காட்டலாம் அல்லவா? எனவே உதவிக்குப் போகும் கரங்கள் சொர்க்கத்தையும் எதிர்பார்க்க வேண்டும். சூன்யத்தையும் எதிர்நோக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஜாதிக் கட்சிகளுக்குத்தான் அங்கே சலங்கை கட்டியிருக்கிறார்கள். யாதவர்-ராஜபுத்திரர் இஸ்லாமியர் என்று ஓர் அணியை உருவாக்க முலாயம் சிங் முயல்கிறார். எனவே தாமும் ஜாதிக் கூட்டணியை உருவாக்க மாயாவதி முனைகிறார்.

பிராமண சமுதாயத்திற்கு நைலான் வலை விரிக்கின்ற வேலையை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 பிராமணர்களுக்குத் தேர்தல் டிக்கெட் தந்தார். எட்டுப் பேர்தான் வெற்றி பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு பேரை நிறுத்தினார். பிரிஜேஷ் பதக் என்ற ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

மாயாவதி முதல்வராக இருந்த போது சதீஷ் மிஸ்ரா என்ற பிராமணர், அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அவரை ராஜ்ய சபைக்கு அனுப்பியிருக்கிறார். அக்கிரகாரத்து நந்தவனங்களில் பட்டாம்பூச்சிகள் பிடிப்பதில் அவர் வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இனம் புரியாத மோதல் இருந்ததாம். இப்போது இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே மாயாவதி மகிமையால் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டதாம். பிரதான அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பிராமண சமுதாயம், இனி தலை நிமிர்ந்து நிற்கும் என்கிறார் இந்த மிஸ்ரா.

வெளவால்கள் குடியிருக்கும் வீட்டிற்குப் போனால் நாமும் தலைகீழாகத் தொங்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிராமண சமுதாயத்திற்கும் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

மாவட்டந்தோறும் சகோதரத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைவரும் துணைத் தலைவரும் பிராமண சமுதாயத்தினர். செயலாளர் சேரியில் பிறந்தவர். சமூக நல்லிணக்கத்திற்கு இதுதான் சரியான வழி என்கிறார் மாயாவதி.

இப்போது அந்தச் சமுதாயத்தின் மீது அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்திருக்கிறது. காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய கட்சியை முலாயம் சிங் உடைத்தார். தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விலை போயினர். ஆனால் ஒரு பிராமண எம்.எல்.ஏ.கூட சோரம் போகவில்லை. அதன் பின்னர் தான் அந்தச் சமுதாயத்தை முழுமையாகக் கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பி.ஜே.பி.யில் உள்ள மூத்த தலைவர்கள் பலருக்குக்கூட இப்போது சிந்தனை மாறியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் நம்பிக்கையான அரசியல் அரங்கம் என்றால் அதன் பின்னே அணிவகுக்கத் தயாராகிறார்கள். அந்த அளவிற்கு மாயாவதி நடத்திய பிராமண மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தையே உலுக்கி எடுத்திருக்கின்றன.

வாஜ்பாய் கூறியது போல இது ஜனநாயக அதிசயமா? அல்லது பொம்மலாட்டமா? என்பது மீண்டும். அம்மணி முதல்வரான பின்னர்தான் தெரியும்.

Categories: Uncategorized

சோலை

July 1, 2005 Leave a comment

Kumudam REPORTER ::

காலத்திற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சியின் செயல் தலைவி.

முன்னர் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்தார். லக்னோவில் தந்தை பெரியாருக்கு சிலை வைக்க முயன்றார். மேட்டுக்குடியினர் சீற்றம் கொண்டனர். போர்க்கோலம் பூண்டனர். பெரியாருக்கு சிலை வைக்கும் அளவிற்கு, அவர் பிராமண எதிர்ப்பில் ஈட்டி முனையாக இருந்தார்.

பிராமண சமுதாயத்திற்கும் பி.ஜே.பி.க்கும் அவர் சூட்டிய பெயர் மனுவாதிகள் என்பதாகும். அதாவது பிறப்பால் நால்வருணத் தத்துவத்தைச் செயல்படுத்துகிறவர்கள் என்று பொருள். அவர்களை எதிர்த்துப் போராடுவதற்குத்தான் பகுஜன் சமாஜ் கட்சியை கன்ஷிராம் தொடங்கினார். மேட்டுக்குடியினருக்கு மேலே தலித் மக்களை வானவில்லில் குடியேற்றி வாழ்வளிப்போம் என்று பிரகடனம் செய்தனர்.

சமுதாயத்தின் இருண்ட குகைக்குள் பயணம் செய்த தலித் மக்களுக்கு அந்தக் கட்சி விடிவெள்ளியாக மினுமினுத்தது. எல்லாத் தீமைகளுக்கும் காரணம் பிராமணர்கள்தான் என்ற போதத்தை அவர்கள் நம்பினர். பிராமண எதிர்ப்பில் பிறந்த பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மாவட்டந்தோறும் மாநாடு நடத்தியது. பின்னர் மாநில மாநாட்டையும் மங்களகரமாக நடத்திவிட்டது. என்ன மாநாடு? பிராமணர் மாநாடுதான்.

தலை வணங்காத் தலைவி என்று கருதப்பட்ட அந்த அம்மணி, மாநில மாநாட்டில் எழுந்தருளினார். வேத மந்திரங்கள் முழங்கின. பூரணகும்ப மரியாதைதான். நன்றாகவே தலை வணங்கினார். பிராமணர்களுக்கு சந்தனத் திலகமிட்டார். தலித் மக்கள் அடக்கப்பட்டவர்களாம். பிராமண மக்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாம். இஸ்லாமிய மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாம். இவர்களுடைய அணிதான் தமது லட்சியம் என்று மாயாவதி அறிவித்தார்.

முன்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பீடம் ஏறுவதற்கு இந்த மூன்று சமுதாயங்களும் பின்னணியாக இருந்தன. அந்தப் பழைய நினைப்பில் இப்போது தலித், இஸ்லாமிய, பிராமணர் கூட்டணிக்கு முயல்கிறார். மாநில மக்கள் தொகையில் தலித்துகள் 21 சதவிகிதம்; பிராமணர் 20 சதவிகிதம்; இஸ்லாமியர் 15 சதவிகிதமாக உள்ளனர்.

அரசியலில் எட்டு அடிக்குள் எந்த மாளிகையும் எழுப்ப முடியாது. தலித் வாக்கு வங்கியை மட்டும் நம்பி சிம்மாசனத்திற்குச் செல்ல முடியாது என்பதனை அவர் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவிகிதத்தினர் பிராமணர்கள்தான். அவர்களைக் காங்கிரஸ் கைவிட்டது! அந்தச் சமுதாயத்தின் அரசியல் அரங்கமான பி.ஜே.பி.யும் கண்டு கொள்ளவில்லை.

1991-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 51 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இப்போது 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் அன்றைக்கு ஒரே தொகுதியில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ் இன்று 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1991-ம் ஆண்டு சட்டமன்றத்திற்கு 221 தொகுதிகளில் வெற்றி பெற்ற பி.ஜே.பி. இன்று 80 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அன்றைக்கு 12 தொகுதிகளை வென்ற பகுஜன் சமாஜ் இன்று 98 தொகுதிகளில் வென்றது.

பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கு என்ன காரணம்? மூன்றுமுறை ஆட்சி அமைத்தது. முதல்வராக ஒரு பிராமணருக்குக் கூட முடி சூட்டியதில்லை. மாநில பி.ஜே.பி. தலைவராக ஒரு பிராமணர்கூட வீற்றிருந்ததில்லை. ஆனால், அந்தச் சமுதாயம்தான் பி.ஜே.பி.யின் அடித்தளமாக இருந்தது.

பிராமண சமுதாயத்தில் பி.ஜே.பி. இழந்து வரும் செல்வாக்கை பகுஜன் சமாஜ் கட்சி சுவீகரிக்க விரும்புகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் கட்சி 25 சதவிகித வாக்குகள் பெற்றது. இப்போது மேல் தட்டினர், நடுத்தர மக்களின் வாக்கு வங்கியில் குறி வைக்கிறது. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, நேற்று வரை சண்டை போட்ட மேல் நிலைச் சமுதாயத்தின் பொற்பாதங்களில் விழலாம் என்று முடிவு செய்துவிட்டது. எனவே, பிராமணர் மாநாடுகளை நடத்துகிறது.

அந்தச் சமுதாயத்தைக் கந்தகச் சொற்களால் விமர்சித்தே வளர்ந்த பகுஜன் கட்சியை பிராமணர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதிகாரத்திற்கு வந்ததும் மீண்டும் மாயாவதி மனுவாதத் தத்துவம் பேசினால் என்ன செய்வது? கண்களில் கனவுகளைத் தேக்கி இருப்பவர்கள் இப்படி கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் ஊர் மணக்கும் அந்தர்பல்டிகள், உலகம் அறிந்ததுதான். ஒவ்வொரு தேர்தலிலும் மதவாத பி.ஜே.பி.யோடு மல்லுக்கட்டும். ஊது உலையில் சூடேற்றப்பட்ட நெருப்புக்கனிகள்தான் விமர்சனங்கள். தேர்தல் தீர்ப்பு வெளியானதும் அரியணைக்காக அந்த மனுவாதக் கட்சியுடன் பேரம் பேசும். கூட்டணி காணும். முதல் இரண்டரை ஆண்டுகள் மாயாவதியே முதல்வர் என்று உடன்பாடு காணும். இப்படி பி.ஜே.பி.யின் முதுகில் ஏறி மாயாவதி இரண்டு முறை முதல்வரானார். இதனை ஜனநாயகத்தின் அதிசயம் என்று வாஜ்பாய் கூட இசை பாடினார்.

ஆனால் அந்த இரு முறையும் பி.ஜே.பி. ஆட்சிப் பீடம் ஏற அம்மணி அனுமதிக்கவில்லை. கொட்டிக் கவிழ்த்துவிட்டார். பி.ஜே.பி.யின் கனவு கங்கையில் வெள்ளப் பெருக்கே ஏற்படவில்லை.

அதே பாடத்தை இன்றைக்கு பிராமண சமுதாயத்திற்கும் மாயாவதி படித்துக் காட்டலாம் அல்லவா? எனவே உதவிக்குப் போகும் கரங்கள் சொர்க்கத்தையும் எதிர்பார்க்க வேண்டும். சூன்யத்தையும் எதிர்நோக்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்திலும், பீகாரிலும் அரசியல் கட்சிகள் இருக்கின்றன. ஆனால் ஜாதிக் கட்சிகளுக்குத்தான் அங்கே சலங்கை கட்டியிருக்கிறார்கள். யாதவர்-ராஜபுத்திரர் இஸ்லாமியர் என்று ஓர் அணியை உருவாக்க முலாயம் சிங் முயல்கிறார். எனவே தாமும் ஜாதிக் கூட்டணியை உருவாக்க மாயாவதி முனைகிறார்.

பிராமண சமுதாயத்திற்கு நைலான் வலை விரிக்கின்ற வேலையை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டார். 2002-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 38 பிராமணர்களுக்குத் தேர்தல் டிக்கெட் தந்தார். எட்டுப் பேர்தான் வெற்றி பெற்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு பேரை நிறுத்தினார். பிரிஜேஷ் பதக் என்ற ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

மாயாவதி முதல்வராக இருந்த போது சதீஷ் மிஸ்ரா என்ற பிராமணர், அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தார். அவரை ராஜ்ய சபைக்கு அனுப்பியிருக்கிறார். அக்கிரகாரத்து நந்தவனங்களில் பட்டாம்பூச்சிகள் பிடிப்பதில் அவர் வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இனம் புரியாத மோதல் இருந்ததாம். இப்போது இந்த இரண்டு சமூகங்களுக்கிடையே மாயாவதி மகிமையால் நல்லிணக்கம் ஏற்பட்டு விட்டதாம். பிரதான அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட பிராமண சமுதாயம், இனி தலை நிமிர்ந்து நிற்கும் என்கிறார் இந்த மிஸ்ரா.

வெளவால்கள் குடியிருக்கும் வீட்டிற்குப் போனால் நாமும் தலைகீழாகத் தொங்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று பிராமண சமுதாயத்திற்கும் அவர் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.

மாவட்டந்தோறும் சகோதரத்துவக் குழுக்கள் அமைக்கப்படுகின்றன. தலைவரும் துணைத் தலைவரும் பிராமண சமுதாயத்தினர். செயலாளர் சேரியில் பிறந்தவர். சமூக நல்லிணக்கத்திற்கு இதுதான் சரியான வழி என்கிறார் மாயாவதி.

இப்போது அந்தச் சமுதாயத்தின் மீது அவருக்கு அழுத்தமான நம்பிக்கை பிறந்திருக்கிறது. காரணம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய கட்சியை முலாயம் சிங் உடைத்தார். தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விலை போயினர். ஆனால் ஒரு பிராமண எம்.எல்.ஏ.கூட சோரம் போகவில்லை. அதன் பின்னர் தான் அந்தச் சமுதாயத்தை முழுமையாகக் கவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

பி.ஜே.பி.யில் உள்ள மூத்த தலைவர்கள் பலருக்குக்கூட இப்போது சிந்தனை மாறியிருக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தங்கள் நம்பிக்கையான அரசியல் அரங்கம் என்றால் அதன் பின்னே அணிவகுக்கத் தயாராகிறார்கள். அந்த அளவிற்கு மாயாவதி நடத்திய பிராமண மாநாடுகள் உத்தரப் பிரதேசத்தையே உலுக்கி எடுத்திருக்கின்றன.

வாஜ்பாய் கூறியது போல இது ஜனநாயக அதிசயமா? அல்லது பொம்மலாட்டமா? என்பது மீண்டும். அம்மணி முதல்வரான பின்னர்தான் தெரியும்.

Categories: Uncategorized

சுகுமாரன்

July 1, 2005 2 comments

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம் ::

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது. க.நா.சு. தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி’ கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல. எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.

Categories: Uncategorized

சுகுமாரன்

July 1, 2005 2 comments

க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம் ::

திருவனந்தபுரத்தில் தங்கியிருந்த க.நா.சுப்ரமண்யத்தைச் சந்திக்க இருபத்து மூன்று வயது இளைஞரான சுந்தர ராமசாமி, அம்புஜவிலாசம் ரோட்டில் முன்னும் பின்னும் நடந்ததுபோல, நாகர்கோவில் மணிமேடைக்குச் சமீபமுள்ள ஜவுளிக்கடையை இலக்காகக்கொண்டு இருபத்தைந்து வயது இளைஞனொருவன் நடந்துபோகும் காட்சி மனதில் விரிகிறது. க.நா.சு. தங்கியிருந்த வீடு பூட்டியிருந்தது. ஜவுளிக்கடை ‘சாமி’ கொள்முதலுக்காக வெளியூர் போயிருந்தார்.அந்த தினத்தில் சந்திக்க முடியாமல் அடுத்தமுறைதான் அவரைச் சந்திக்க வாய்த்தது. சுந்தர ராமசாமிக்கு க.நா.சுவிடம் பயமும் சங்கோஜமுமிருந்தது போலவே அந்த அந்த இளைஞனுக்கும் இருந்தது. அவன் சந்திக்க விரும்பி சந்தித்த எழுத்தாளர் அந்த தயக்கத்தையும் சங்கோஜத்தையும் போக்கினார். அதன் பின்னர் அந்தச் சந்திப்புகள் சில ஆண்டுகள் வலுவாகத் தொடர்ந்தன.

க.நா.சு. பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடைக் குறிப்புகள் முதன்மையாக எனக்குத் தரும் உணர்வு இந்த நெகிழ்ச்சிதான். இந்த சந்தர்ப்பத்தில் இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் உரிமை பாராட்டவோ ஒப்பிடவோ அல்ல. எழுத்துலகில் பிரவேசிப்பவனின் மோகங்கள் எல்லாக் காலத்திலும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்ற பொது வியப்பைப் பகிர்ந்துகொள்ளவே.

எழுத்தாளனை அவனது எழுத்தின் வழியாக அறிந்துகொள்வதுதான் பிரதானம் என்று நம்புகிறேன். இந்த நம்பிக்கையின் அடிச்சரடாக அவனுடைய வாழ்க்கையை அறிந்திருப்பதும் அவசியம் என்ற இன்னொரு தரப்பும் எழுகிறது. வாழ்வின் மீதான விசாரணையுணர்வே எழுத்து என்ற எளிய அடிப்படையை வரையறுத்துக் கொள்ளும்போது இந்த இரண்டு அம்சங்களும் சமமான மதிப்புக்கொள்கின்றன. எழுத்தை அறிவது அதன் நுட்பங்களைப் புரிந்துகொள்வது அதை வாழ்வனுபமாக ஏற்றுக்கொள்வது ஒரு செயல். அதை மேலும் விரிவானதாக, ஆழமானதாக மாற்றிக்கொள்ள எழுத்தாளனின் வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துவைத்திருப்பது உதவியாக இருக்கலாம். பிரதி போதும். ஆசிரியன் வேண்டாம் என்று கறாராகத் தீர்மானிக்கிற போக்கில் பிரதியைப் புரிந்துகொள்ளத் துணைபுரியும் ஏதோ ஓர் அம்சம் குறைவுபடுவதாகக் கருதுகிறேன்.

Categories: Uncategorized