Archive
நிழல் – ஜூலை 05
இசை, நடனம், ஓவியம், இலக்கியம் முதலான கலைகள் உயர் கலைகளுக்குரிய பெருமிதத்துடன் போற்றப்பட்ட போதும், இந்தக் கலை வடிவங்கள் அனைத்தையும் தனதாகக் கொண்டு பொங்குகிற கூட்டுக் கலையான திரைப்படம், அந்த் நிலையை எய்தாதிருப்ப்தற்கு நம் அற, ஒழுக்கவியல் சார்ந்த தனிமையைத் திரைப்படம் சீண்டியிருப்பதும் ஒரு காரணம்.
– செழியன் (இந்தியா டுடே)
நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழை பிகேயெஸ் குறிப்பெடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் Central do Brasil திரைப்பட விழாக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகாடெமி விருதுகளில் ஆரம்பித்து உலகத்தின் பல திரைவிழாக்களின் பாராட்டைப் பெற்ற படம். இன்னும் பார்க்கவில்லை.
ரோகாந்த் எழுதிய ‘மணிசித்ரமுகி’ அரை வேக்காடு. அதை விட பல நல்ல பகிடிகளையும் பார்வைகளையும் அலுக்க அலுக்கப் படித்ததாலும் அயர்ச்சி கொடுத்திருக்கலாம்.
‘அன்னியன்’ மற்றும் ‘கனா கண்டேன்’ விமர்சனம் எல்லா பாய்ஸ் பசங்களும் வரைவின் மகளிரை வரவழைத்தது போல் அமெரிக்காவின் உப்பு சப்பற்ற இந்திய மசாலா சமையலை நினைவு கூற வைத்தது. விமர்சனம், அபிப்பிராயம், போன்றவை நிழல் போன்ற சஞ்சிகைகளிலாவது திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் கதை சார்ந்த ஒன்றாகவுமே எழுதப்படுவது ‘Gimme a break’ (த்ரிஷா சாப்பிடும் ப்ரேக் அல்ல). ‘செவ்வகம்’, படப்பெட்டி போன்ற மாற்று சினிமா சிறு பத்திரிகைகள் கலாபூர்வமாகவும் தொழில் நுட்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறதா என்று பார்க்க வேண்டும்.
எல்லாமே இலக்கணமாக சொல்லும்போது திகைப்பையே உண்டாக்கும். ஆனால், கலைச்செழியன் எளிய மொழியில் ஒளிப்பதிவிற்கு அறிமுகம் கொடுக்கிறார். ‘அன்னியன்’ போன்ற சமகாலப் படங்களை விமர்சிப்பதிலும் இந்த மாதிரி நுட்பங்களை உள்நுழைத்தால் மேலும் பயன்பெறலாம்.
‘ஓ’ பக்கங்களில் ஞாநி விமர்சனத்தை முன்வைத்தது போல் குறும்படங்கள் கூறிய பதிவுகள் தெளிவாக பரந்துபட்ட வாசிப்பை வழங்குகிறது.
கோவை IIFMA இணையத்தில் வெளியிட்டுள்ள ‘திசை’ இறக்கிக் கொண்டு பார்த்து விட்டு வழக்கம் போல் பதிவொன்றைப் போட வேண்டும். ஆவணப் பட இயக்குநர் அருண்மொழியின் படங்களை மையப்படுத்தி 58 நிமிட ஆவணப் படத்தை வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண்மொழியின் திரைப்படங்கள் பற்றி இயக்குநர் ஹரிஹரன், நாஸர், பிரளயன், பிலிம் நியுஸ் ஆனந்த்ன், சாருஹாஸன் பேட்டி தந்துள்ளனர்.
மற்றபடி சிவகுமார் எழுதியுள்ள நூர்ஜஹான் (கிட்டத்தட்ட நாலு ஃபாரம் புத்தகம்), சாருலதா, பார்வையின் சாட்சியம், ஜெயகாந்தன், டி. ஆர். ராமச்சந்திரன், கன்னட சினிமா போன்றவை மூச்சு முட்ட முட்ட நிறைவைக் கொடுக்கிறது. இது வரை வந்த சினிமாப் பதிவுகளை ‘நிழல் அடைவு’ என்று கொடுத்திருப்பது, ‘கற்றது கிலோபைட் அளவு; படித்து பயன்படுத்த வேண்டியது பெடாபைட் அளவு’ என்று அங்கலாய்க்க வைக்கும்.
நிழல் – ஜூலை 05
இசை, நடனம், ஓவியம், இலக்கியம் முதலான கலைகள் உயர் கலைகளுக்குரிய பெருமிதத்துடன் போற்றப்பட்ட போதும், இந்தக் கலை வடிவங்கள் அனைத்தையும் தனதாகக் கொண்டு பொங்குகிற கூட்டுக் கலையான திரைப்படம், அந்த் நிலையை எய்தாதிருப்ப்தற்கு நம் அற, ஒழுக்கவியல் சார்ந்த தனிமையைத் திரைப்படம் சீண்டியிருப்பதும் ஒரு காரணம்.
– செழியன் (இந்தியா டுடே)
நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழை பிகேயெஸ் குறிப்பெடுத்திருக்கிறார்.
தமிழகத்தில் Central do Brasil திரைப்பட விழாக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகாடெமி விருதுகளில் ஆரம்பித்து உலகத்தின் பல திரைவிழாக்களின் பாராட்டைப் பெற்ற படம். இன்னும் பார்க்கவில்லை.
ரோகாந்த் எழுதிய ‘மணிசித்ரமுகி’ அரை வேக்காடு. அதை விட பல நல்ல பகிடிகளையும் பார்வைகளையும் அலுக்க அலுக்கப் படித்ததாலும் அயர்ச்சி கொடுத்திருக்கலாம்.
‘அன்னியன்’ மற்றும் ‘கனா கண்டேன்’ விமர்சனம் எல்லா பாய்ஸ் பசங்களும் வரைவின் மகளிரை வரவழைத்தது போல் அமெரிக்காவின் உப்பு சப்பற்ற இந்திய மசாலா சமையலை நினைவு கூற வைத்தது. விமர்சனம், அபிப்பிராயம், போன்றவை நிழல் போன்ற சஞ்சிகைகளிலாவது திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் கதை சார்ந்த ஒன்றாகவுமே எழுதப்படுவது ‘Gimme a break’ (த்ரிஷா சாப்பிடும் ப்ரேக் அல்ல). ‘செவ்வகம்’, படப்பெட்டி போன்ற மாற்று சினிமா சிறு பத்திரிகைகள் கலாபூர்வமாகவும் தொழில் நுட்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறதா என்று பார்க்க வேண்டும்.
எல்லாமே இலக்கணமாக சொல்லும்போது திகைப்பையே உண்டாக்கும். ஆனால், கலைச்செழியன் எளிய மொழியில் ஒளிப்பதிவிற்கு அறிமுகம் கொடுக்கிறார். ‘அன்னியன்’ போன்ற சமகாலப் படங்களை விமர்சிப்பதிலும் இந்த மாதிரி நுட்பங்களை உள்நுழைத்தால் மேலும் பயன்பெறலாம்.
‘ஓ’ பக்கங்களில் ஞாநி விமர்சனத்தை முன்வைத்தது போல் குறும்படங்கள் கூறிய பதிவுகள் தெளிவாக பரந்துபட்ட வாசிப்பை வழங்குகிறது.
கோவை IIFMA இணையத்தில் வெளியிட்டுள்ள ‘திசை’ இறக்கிக் கொண்டு பார்த்து விட்டு வழக்கம் போல் பதிவொன்றைப் போட வேண்டும். ஆவணப் பட இயக்குநர் அருண்மொழியின் படங்களை மையப்படுத்தி 58 நிமிட ஆவணப் படத்தை வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண்மொழியின் திரைப்படங்கள் பற்றி இயக்குநர் ஹரிஹரன், நாஸர், பிரளயன், பிலிம் நியுஸ் ஆனந்த்ன், சாருஹாஸன் பேட்டி தந்துள்ளனர்.
மற்றபடி சிவகுமார் எழுதியுள்ள நூர்ஜஹான் (கிட்டத்தட்ட நாலு ஃபாரம் புத்தகம்), சாருலதா, பார்வையின் சாட்சியம், ஜெயகாந்தன், டி. ஆர். ராமச்சந்திரன், கன்னட சினிமா போன்றவை மூச்சு முட்ட முட்ட நிறைவைக் கொடுக்கிறது. இது வரை வந்த சினிமாப் பதிவுகளை ‘நிழல் அடைவு’ என்று கொடுத்திருப்பது, ‘கற்றது கிலோபைட் அளவு; படித்து பயன்படுத்த வேண்டியது பெடாபைட் அளவு’ என்று அங்கலாய்க்க வைக்கும்.
வம்பு
tamil cinema :: திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 புத்தகங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன் விஜய்க்கு வித்தக கவிஞர் விஜய் என்று பட்டமும் கொடுத்தார். இந்த விழா நடந்து சில நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்க, எங்கிருந்தோ கிளம்பிய வதந்திகள் இந்த விருதுக்கு பின்னணியில் மத்திய அரசில் ஸ்ட்ராங்காக அங்கம் வகிக்கும் கலைஞரின் பங்கும் இருக்கிறது என்று கூவ ஆரம்பித்தன.
cine south :: இளம் பாடலாசிரியருக்கு விருது கிடைத்ததற்குப் பின்னால் பத்து லட்சம் ரூபாய் கைமாறியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடலாசிரியரும் முக்கிய எதிர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பாடலாசிரியரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு பணத்தைக் கொட்டிய தென்னக கல்லூரியின் நிறுவனரும் இதே சாதியை சேர்ந்தவர்தான். இந்த சாதி அபிமானத்தின் அடிப்படையில் பாடலாசிரியருக்கு மற்ற இருவரும் செய்த பலமான ரெகமண்டேஷன்தான் தேசிய விருது என்கிறார்கள்.
வம்பு
tamil cinema :: திரைப்பட பாடலாசிரியர் பா.விஜய் எழுதிய 12 புத்தகங்களை தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன் விஜய்க்கு வித்தக கவிஞர் விஜய் என்று பட்டமும் கொடுத்தார். இந்த விழா நடந்து சில நாட்களுக்குள்ளாகவே மத்திய அரசு விஜய்க்கு சிறந்த பாடலாசிரியர் விருது வழங்க, எங்கிருந்தோ கிளம்பிய வதந்திகள் இந்த விருதுக்கு பின்னணியில் மத்திய அரசில் ஸ்ட்ராங்காக அங்கம் வகிக்கும் கலைஞரின் பங்கும் இருக்கிறது என்று கூவ ஆரம்பித்தன.
cine south :: இளம் பாடலாசிரியருக்கு விருது கிடைத்ததற்குப் பின்னால் பத்து லட்சம் ரூபாய் கைமாறியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்தப் பாடலாசிரியரும் முக்கிய எதிர்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். பாடலாசிரியரின் நூல் வெளியீட்டு விழாவுக்கு பணத்தைக் கொட்டிய தென்னக கல்லூரியின் நிறுவனரும் இதே சாதியை சேர்ந்தவர்தான். இந்த சாதி அபிமானத்தின் அடிப்படையில் பாடலாசிரியருக்கு மற்ற இருவரும் செய்த பலமான ரெகமண்டேஷன்தான் தேசிய விருது என்கிறார்கள்.
Priority to pointer over ponder
நாலு வார்த்தையில் திரைப்பட விமர்சனம் எழுதினால் எம்.டிவி யுகத்திற்கு எடுபடும். நாலு வரி ஆர்வமூட்டினால் தொடர்ந்து ஐ.எம்.டி.பி., ஸ்லேட், அல்வாசிட்டி என்று துழாவித் தெளியலாம். பாமரன், எளிமை, அறிமுகம் என்று ஏற்கனவே அப்லோட் செய்த கிலோபைட்டையே போஸ்ட் செய்யாமல் ‘ஒக்கமின் கத்தி‘யை துணுக்கிடுகிறேன். (ஒக்கமா, ஒச்சமா, ஒக்ஸாமா, ஓக்காமா என்பதை பிபிசி சொல்லியிருக்கலாம்; நான் மினுக்கிடவில்லை.)
Ockham’s razor சொல்வது ‘Pluralitas non est ponenda sine neccesitate’. அதாவது ‘ஷார்ட்டா முடிச்சுக்க கண்ணு’. எளிமையான விளக்கமே சரியான விளக்கமாக அமையும் என்று சொல்வதை மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டுக்கு, ‘கோரல் கோப்பு’ (Requirements Document) எழுதும்போது உணர்ந்திருக்கிறேன்.
இரும்புத்தளம், இத்தாலியம் என்று தமிழ்கள தடுப்புச் சொற்கள் போடாமல் 250 மீட்டர்… மன்னிக்க… 250 வார்த்தைகளுக்குள் சுளுவான அறிமுகம்: சுஜாதா
ஆர்வம் ஏற்பட்டால் மேலும் விரிவாக ரவி ஸ்ரிநிவாஸுடன் தொடரலாம்.
Priority to pointer over ponder
நாலு வார்த்தையில் திரைப்பட விமர்சனம் எழுதினால் எம்.டிவி யுகத்திற்கு எடுபடும். நாலு வரி ஆர்வமூட்டினால் தொடர்ந்து ஐ.எம்.டி.பி., ஸ்லேட், அல்வாசிட்டி என்று துழாவித் தெளியலாம். பாமரன், எளிமை, அறிமுகம் என்று ஏற்கனவே அப்லோட் செய்த கிலோபைட்டையே போஸ்ட் செய்யாமல் ‘ஒக்கமின் கத்தி‘யை துணுக்கிடுகிறேன். (ஒக்கமா, ஒச்சமா, ஒக்ஸாமா, ஓக்காமா என்பதை பிபிசி சொல்லியிருக்கலாம்; நான் மினுக்கிடவில்லை.)
Ockham’s razor சொல்வது ‘Pluralitas non est ponenda sine neccesitate’. அதாவது ‘ஷார்ட்டா முடிச்சுக்க கண்ணு’. எளிமையான விளக்கமே சரியான விளக்கமாக அமையும் என்று சொல்வதை மில்லியன் டாலர் ப்ராஜெக்ட்டுக்கு, ‘கோரல் கோப்பு’ (Requirements Document) எழுதும்போது உணர்ந்திருக்கிறேன்.
இரும்புத்தளம், இத்தாலியம் என்று தமிழ்கள தடுப்புச் சொற்கள் போடாமல் 250 மீட்டர்… மன்னிக்க… 250 வார்த்தைகளுக்குள் சுளுவான அறிமுகம்: சுஜாதா
ஆர்வம் ஏற்பட்டால் மேலும் விரிவாக ரவி ஸ்ரிநிவாஸுடன் தொடரலாம்.
Recent Comments