OIG – Siddharth Venkatesh
….இப்போ படிச்சிகிட்டு இருக்கற புத்தகம், எஸ்.ராமகிருஷ்ணனோட “உப பாண்டவம்”. கத மகாபாரத கதை தான். ஆனா ஒரே நேர் கோட்டுல சொல்லல. கதைய அக்கு அக்கா பிறிச்சிட்டாரு. மகாபாரதத்துல நடக்கற பிறப்புக்கள், உருமாற்றங்கள், கோபங்கள், பழி உணர்ச்சின்னு தனி தனியா எழுதரார். ஆனா முழு கதையும் நம்ம மனசுல உருவாகுது. ரொம்ப வித்தியாசமான நாவல். அதே சமயத்துல ரொம்ப சுவாரஸ்யமானதும் கூட. இத படிச்சப்போ, நான் படிச்ச இன்னொரு மகாபாரதத்த மையமா வெச்சு எழுதப்பட்ட நாவல் நினைவுக்கு வந்தது. அது, சஷி தரூர் எழுதின “The Great Indian Novel”….
தலைவா, என்ன பழைய பதிவுகளிலிருந்து எல்லாம் செலக்ட் பண்ணி எடுத்து போடுறீங்க. எங்கயோ படிச்ச மாதிரியிருந்துச்சேன்னு பாத்தா 2003ல எழுதுனது.
எப்படித்தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் கெடைக்குதோ?
எழுதன நானே இத மறந்துட்டேன். ஆனா தேடி புடிச்சு போட்டிருக்கீங்க. நன்றி 🙂