Archive
Chennai Meet – Symposium on Movies, Impact of Cinema on Society
காட்சிப் பிழை – ஊடக அய்வுகளுக்கான இதழ் நடத்தும்
‘வேட்கையின் தாகம்’
வெகுமக்கள் திரைப்படம் குறித்த கருத்தரங்கம்
நாள்: 04.10.2008 & 05.10.2008 / சனி, ஞாயிறு
நேரம்: காலை 10.00 முதல் மாலை 5.00 வரை
இடம்: பவள விழா அரங்கு, தமிழ்ப் புலம்.
மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005
தொடக்கவிழா
04.10.2008, காலை 10.00 மணி
தலைமை: திருமிகு எம்.எஸ்.எஸ். பாண்டியன்
சிறப்புரை: திருமிகு தியடோர் பாஸ்கரன்
திரைப்பட வரலாற்று ஆய்வாளர்
அமர்வு 1
04.10.2008, நண்பகல் 12.00 மணி
தலைமை: திருமிகு சுந்தர் காளி
‘ஏ.வி.எம். – ஒரு சரித்திர வாசிப்பு’
கட்டுரையாளர்கள்:
திருமிகு ப்ரித்தம் சக்கரவர்த்தி & வெங்கடேஷ் சக்கரவர்த்தி
திரைப்பட ஆய்வாளர்கள்
‘பேசும்படங்கள் பேசாத தளங்கள்’
கட்டுரையாளர்:
திருமிகு பிரேமானந்தன்
விரிவுரையாளர், தற்கால இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுத் துறை, தில்லி
பல்கலைக்கழகம்
அமர்வு 2
04.10.08, நண்பகல் 2.30 மணி
தலைமை: பேரா. ஜான் பெர்னார்டு பேட்
மானுடவியல் துறை, யேல் பல்கலைக்கழகம், அமெரிக்கா
‘ஒளித்திரையில் உயிர்த்தெழும் சீதையும் கண்ணகியும்’
கட்டுரையாளர்:
திருமிகு கவிஞர் மாலதி மைத்ரி
‘சின்னத் திரையும் பெரிய திரையும்’
கட்டுரையாளர்:
திருமிகு சுரேஷ்பால்
விரிவுரையாளர், காட்சித் தகவலியல் துறை, லயோலா கல்லூரி, சென்னை
அமர்வு 3
04.10.08, மாலை 4.00 மணி
தலைமை: திருமிகு சஃபி
மனநல ஆலோசகர்
‘நினைவு அழிக்கும் வரலாறுகளும் மறுகாட்சி வரலாறுகளில் உழலும் நினைவுக் குட்டைகள்’
கட்டுரையாளர்:
வளர்மதி
எழுத்தாளர்
‘உலகம் சுற்றும் வாலிபனும் தசாவதாரமும்’
கட்டுரையாளர்:
‘எதிர்வு’ சிவகுமார்
அமர்வு 4
05.10.08, காலை 10.00 மணி
இயக்குநர்கள் களம்
திருமிகு பாலாஜி சக்திவேல்
திருமிகு வெற்றிமாறன்
திருமிகு ஐந்து கோவிலான்
அமர்வு 5
05.10.08, நண்பகல் 12.00 மணி
தலைமை: பேரா. திருமிகு வீ. அரசு
பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர், தமிழிலக்கியத் துறை, சென்னைப்
பல்கலைக்கழகம், சென்னை
‘வீதியில் வெள்ளித்திரை: சினிமா பேனர்கள் குறித்த சில குறிப்புகள்’
கட்டுரையாளர்:
திருமிகு வ. கீதா
‘வடிவேலுவின் நகைச்சுவையில் தென்படும் உதிரித் தன்மையின் பன்முகம்’
கட்டுரையாளர்:
திருமிகு அமுதன்
ஆவணப்பட இயக்குநர்
”இசையுரு’ ஆகிய இசை – இளையராஜா’
கட்டுரையாளர்:திருமிகு கவிஞர் வேணு மணி
கண்காணிப்பாளர், மத்திய கலால் துறை
அமர்வு 6
05.10.08, பிற்பகல் 2.00 மணி
தலைமை: திருமிகு சுபகுணராஜன்
‘கமலஹாசன் பெரியாரைக் கல்லில் கட்டிக் கடலில் விட்டெறிந்த கதை’
கட்டுரையாளர்:
திருமிகு சுந்தர் காளி
விரிவுரையாளர், தமிழ்த்துறை, காந்தி கிராமியப் பல்கலைக் கழகம், காந்தி கிராமம்
‘When a women called shots’
கட்டுரையாளர்:
திருமிகு லீனா மணிமேகலை
ஆவணப்பட இயக்குநர்
காட்சிப் பிழை
16/25 ஆனந்த குடிர்
2அவது சீ வார்ட் தெரு
வால்மீகி நகர்
திருவான்மியூர்
சென்னை – 600 041
தொலைபேசி: 94439 87166
subagunarajan@gmail.com
ஆடம் எகோயான் – மைத்ரேயன்
The Walrus Magazine » The Unsettler » By Denis Seguin » Film: “Atom Egoyan’s Adoration renews a provocative intellectual vision”
உலக இயக்குநர்களில் குறிப்பிடத் தக்க ஒருவர். எனக்குப் பிடித்தமான இயக்குநர்களில் ஒருவர்.
கனடியர். ஏதேதோ அதிசயமான பொருளை எல்லாம் கருவாகக் கொண்டு திரைப்படங்கள் எடுப்பவர்.
ஆர்மீனிய மூலம் இவரது குடும்பம் என்பதால் உலக அகதிகளின் அவல வாழ்வில் இவரது சிந்தனை ஆழமாக வேர் கொண்டது. மனிதத்தின் பல பரிமாணங்களை இரக்கமற்ற நேர்ப்பார்வையில் காட்டக் கூடிய அதே நேரம் இவரது பாத்திரங்களை இவர் சிறிதும் வெறுக்காது கதைகளை நகர்த்துகிறார்.
பல படங்களைப் பார்த்தால் இவரது உலகப் பார்வை வசப்படும். சாவி போட்டால் போல எல்லா படங்களுக்கும் கதவு உடனே திறக்கும்.
Recent Comments