Archive

Archive for February, 2009

ஆண்டன் பாலசிங்கம் லண்டன் பேட்டி: டி.அருள்செழியன்

February 26, 2009 1 comment

ஆனந்த விகடன்

பிரபாகரன் தந்த சயனைட் குப்பி!

‘‘ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்… ‘ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!’ என்று. அதுதான் சத்தியம்!’’

வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்!

சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் Ôசிந்தனைச் சுரங்கம்’!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்…

‘‘எழுபத்தெட்டாம் வருடம்… லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு ‘கெரில்ல’ விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு!

இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்.

விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம்.

இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!’’ என்கிறார் அழகான சிரிப்புடன்.

கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன அவரின் பேச்சில்.

“முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?”

“புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!

அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).

அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.”

“இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?”

“தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.

தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.”

“தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?”

“இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.

ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.”

“ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?”

“இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.

நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.

குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.

மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.

நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.

அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!”

பிரபாகரனின் திருமணத்தை நடத்திவைத்தவர் ஆண்டன் பாலசிங்கம்தான்!

அந்த நிகழ்வை அழகாக விவரிக்கிறார்… ‘‘அப்போது பிரபாகரனுடன் நானும் சென்னையில் இருந்தேன். இந்தியா கொடுக்கிற ராணுவப் பயிற்சியை முறையாகப் பயன்படுத்துவதிலும், சரியான திட்டமிடலோடு பணியாற்றுவதிலும் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தார் பிரபாகரன்.

இந்நிலையில், திருவான்மியூரில் நாங்கள் வசித்த வீட்டுக்கு மதி, வினோஜா, ஜெயா, லலிதா என்ற நான்கு இளம் பெண்கள் வந்தனர். யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்த இந்த நால்வரை யும் சிங்கள ராணுவத்திடமிருந்து காப்பாற்றி சென்னைக்கு அனுப்பிவைத்திருந்தார்கள் போராளி கள். இந்தப் பெண்களுக்குக் குடும்பமோ உறவு களோ இல்லாத நிலையில், பிரபாகரன் இந்த நால் வரின் நலனிலும் அக்கறையுடன் இருந்தார். இந்தப் பெண்களின் வருகை, புலிகள் இயக்கத்துக்குள் ஒரு குட்டி புரட்சி ஏற்படக் காரணமாகும் என்று முதலில் நான் நினைக்கவில்லை.

எங்களுடைய அமைப்பைப் பொறுத்தவரை, யாழ்ப்பாண இந்து மரபில் பேணக்கூடிய ஒழுக்கக் கோட்பாடுகள் எல்லாமே கண்டிப்பாகவும் கறாராகவும் கடைப் பிடிக்கப்பட்டன. திருமணத்துக்கு முன் ஓர் ஆணும் பெண்ணும் தனித்தனியே பிரிந்துதான் வாழ வேண்டும் என்ற கோட்பாட்டைப் போராளிகளும் பேணினார் கள். மக்களிடையே பரந்த ஆதரவைப் பெற வேண்டு மானால், இந்தச் சமூகப் பண்பாட்டு அம்சத்துக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பதில் பிரபா கரன் கவனமாக இருந்தார்.

இந்த ஒழுக்கக் கோட் பாட்டில் எனக்கும் உடன்பாடு தான். ஆனால், இந்த ஒழுக்க விதிகள் நெகிழ்ச்சித்தன்மை இல்லாமல் இறுக்கமாக இருப்பதில் உடன்பாடில்லை. பிடிவாதத்தால் பேணப்படும் கட்டுப்பாடுகளைக் கட்டாயத் தால் கடைப்பிடித்தால், இயற்கை தன் போக்கில் ஆண் & பெண் உறவைத் தோற்று விக்கும். எங்கள் தலைவரின் விஷயத்திலும் இதுதான் நடந்தது. வந்த நான்கு பெண் களில் மதி என்கிற மதிவதனி யிடம் ஆழ்ந்த காதல்வயப் பட்டார் பிரபாகரன்.

மதியையும் பிரபாகர னையும் திருமண வாழ்க்கையில் இணைத்துவைக்கும் பொறுப்பு எனக்கும் அடேலுக்கும் இருந்தது. அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் இந்தக் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களிடம் தமிழ்ச் சமூகத்தில் காதலுக்கு உள்ள முக்கியத்துவத்தை எடுத்துப் பேசினேன். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக்கொண்டார்கள்.

1984&ல் திருப்போரூர் கோயிலில், பிரபாகரனின் திருமணத்தை தமிழ் முறைப்படி நடத்திவைத்தோம். ஒரு காதல் திருமணமாக பிரபாகரனின் திருமணம் நடந்தது, புலிகளிடையே நல்ல பல மாற்றங்களைத் தோற்றுவித்தது. இன்றைக்குப் போராளிகளுக் கிடையே காதல் திருமணங்கள் சாதாரணமாக நிகழ்வதற்கு மதி & பிரபாகரன் காதல் திருமணம்கூட ஒரு காரணமாக இருக்கலாம்’’ என்று தன் நெருங்கிய நண்பனின் காதல் கதையை விவரித்துச் சிரிக்கிறார்.

பேச்சு தற்போதைய சூழல் பற்றி திரும்புகிறது. மிகுந்த நிதானத்துடனும் கவலையுடனும் பேசுகிறார் ஆண்டன்.

“இலங்கைப் பிரச்னையில் இந்தியா விலகியிருப்பதால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் சில சுயநலங்களோடு இந்த பிரச்னையில் தலையிடக்கூடும் என்று புலிகள் நினைக்கிறார்களாமே?”

“ஆம்! எங்களைப் பொறுத்த வரையில், இதற்கான ஒரு புறச் சூழல் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். தற்போதைய இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் இந்தியா வந்து, இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டுத் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரினார். ‘நீங்கள் சமாதான வழியில் ஓர் அரசியல் தீர்வை முன்வைத்து இந்தப் பிரச்னையைத் தீருங்கள். அதைத்தான் நாங்கள் விரும்புகிறோம்’ என்று கைவிரித்துவிட்டது இந்தியா.

தற்போது பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களை வாங்கி சிங்கள ராணுவத்தைப் பலப்படுத்தி, புலிகளுக்கு எதிராக ஒரு யுத்தத்தைத் துவங்கத் திட்டமிட்டிருக்கிறது இலங்கை அரசு. அதற்காகத்தான் அதிபர் ராஜபக்ஷே போன வாரம் பாகிஸ்தான் சென்றார். அங்கே ஒரு ரகசிய ராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆயுதங்களைப் பெற்று, ஸ்ரீலங்கா ராணுவத்தை பலப்படுத்தி புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். இதே போன்று அவர் அடுத்த மாதம் சீனாவுக்கும் செல்லவிருக்கிறார்.

பாகிஸ்தான், சீனா போன்றவை இந்தப் பிரச்னையில் தலையிட்டால், இந்தியாவின் செல்வாக்கு நிரம்பிய இந்த பிராந்தியத்தின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்கத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அது இந்தியாவுக்கும் ஆபத்தாக அமையும்.”

“இன்னொரு பக்கம், இந்தியாவை மட்டுமே அழைத்துப் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் என்று இலங்கையில் ஜே.வி.பி. அமைப்பு கூறிவருகிறதே?”

“அது வேறு கணக்கு! ஜே.வி.பி. ஒரு தீவிரவாத கம்யூனிஸ்ட் அமைப்பு. சிங்கள பேரினவாதத்தை லட்சிய மாகக்கொண்ட ஒரு தீவிரவாத இயக்கம். அவர்கள் எண்பத்து மூன்றுக் குப் பிறகு, ஈழப் பிரச்னையில் இந்தியா தலையிடுவதைக் கண்டித்துப் பெரும் புரட்சிகளை நடத்தியவர்கள். இந்தியத் துருப்புகள் ஈழ மண்ணில் வந்து இறங்கியபோது அதை எதிர்த்து இலங்கையில் பெரும் கிளர்ச்சிகளை நடத்தியவர்கள். இவர்கள் தற்போது இலங்கைப் பிரச்னையில் மீண்டும் இந்தியா தலையிட வேண்டும் என்று அழைக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இந்தியா மீதான நன்மதிப்பல்ல. இந்தப் பிரச்னையில் இந்தியா தலையிட்டு, ராணுவ ரீதியாக புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் உள்ளார்ந்த விருப்பம்.

கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்துவரும் நீண்ட போராட்டத்தில்

“கிழக்கு இலங்கையிலுள்ள ஜிகாத் குழுக்கள் பற்றி தாங்கள் சமீபத்தில் கவலை தெரிவித்து, சில கருத்துகளை வெளியிட்டிருந்தீர்களே..?”

“ஆம். கிழக்கு மாகாணங்களில் தற்போது ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குப் பாகிஸ்தான் நிதி உதவியும் ஆயுதப் பயிற்சியும் வழங்கியுள்ளது. இங்கிருந்து பல இளைஞர்கள் பாகிஸ்தான் சென்று ராணுவப் பயிற்சி பெற்றுத் திரும்பியிருக்கிறார்கள். வட கிழக்கு இலங்கையில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் தமிழர்களும் காலங் காலமாக சகோதரர்களாகப் பழகி வருகிறார்கள். இந்த நல்லுறவைக் கெடுத்து, எமக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கிலேயே இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரிகளும், பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினரும் இணைந்து சில இஸ்லாமிய அமைப்புகளைப் பயன்படுத்தி, இந்தப் புதிய சதி வேலையைச் செய்திருக் கிறார்கள். இது குறித்த அனைத்து விவரங்களையும் ஸ்ரீலங்கா அரசாங் கத்துக்கும், நார்வே அரசாங்கத்துக்கும், சர்வதேச உலகத்துக்கும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். இலங்கை அரசு இப்போது அவசர அவசரமாக, இஸ்லாமிய படைப் பிரிவு ஒன்றினைக் கிழக்கு இலங்கையில் அமைத்து, அதை வைத்து முஸ்லிம் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதுவும் மிகவும் ஆபத்தான விஷயம். இஸ்லாமிய இளைஞர்களை அணி திரட்டி, அவர்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்து, அவர்களை விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதி ராகத் திசை திருப்பும் நோக்கத்துடன்தான் சிங்கள அரசு இந்தக் காரியத்தைச் செய்கிறது.”

“விடுதலைப் புலிகளின் மீதான Ôபயங்கரவாதிகள்’ என்ற குற்றச்சாட்டுக்குத் தங்கள் பதில்தான் என்ன?”

“எங்களது இயக்கம் நீண்ட வரலாறு கொண்ட ஒரு விடுதலை இயக்கம். பதினெட்டாயிரம் போராளிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்து, ஆக்கிரமிப்பில் இருந்த எங்கள் தமிழ் மண்ணை மீட்டெடுத்து, இன்று அந்த நிலப்பரப்பில் ஒரு நிழல் அரசாங்கத்தை நடத்தி வருகின்றோம். ஆனால்,

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது எங்களுக்குத் தெரியும். எமது போராட்டத்தின் வரலாறு, அதன் உள் நிகழ்வுகள், புலிகள் செய்த மகத்தான தியாகங்கள் ஆகியவற்றைத் தமிழக மக்கள் தெரிந்துகொள்ளும் நாள் வரும். அப்போது எம்மைப் பற்றிய உண்மைகளை அவர்கள் அறிந்துகொள்வார்கள். எமக்கும் தமிழக மக்களுக்குமான தொப்புள் கொடி உறவை அறுக்க நினைப்பவர்கள், அப்போது காணாமல்போவார்கள்.”

“கருணா ஏன் இந்த இயக்கத்திலிருந்து வெளியேறி, உங்களுக்கு எதிராக மாறினார்?”

“கருணா எங்கள் அமைப்பில் ஒரு தளபதியாக இருந்தவர். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவரைப் பற்றி பல புகார்கள் வந்தன. குறிப்பாக, இயக்க நிதியில் பெரும் மோசடி செய்து, தனிப்பட்ட வங்கிகளில் காசுகளைப் போட்டு, சில ஊழல்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். இயக்கத் தலைமைக்குத் தெரியாமல், வயது குறைவான பள்ளிச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து, அவர்களைத் தனக்குக் கீழான ஒரு சிறுவர் படையணியாக உருவாக்கினார். இவை போக, பெண் போராளிகளைப் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார். இஸ்லாமிய மக்களுக்கு எதிராகச் சில படுகொலை களையும் நிகழ்த்தினார் என்பது போன்ற பல உண்மைகள் வெளி வந்ததும், தலைவர் பிரபாகரன் இவரை விசாரணைக்காக வன்னிக்கு அழைத்தார். விசாரணைக்குப் போனால் தனது குற்றங்கள் அம்பலத்துக்கு வரும், இயக்க ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தில், கருணா திடீரென்று இயக்கத்திலிருந்து விலகி, எங்களுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டார். ஆனால், நாங்கள் உடனடியாக எங்கள் படையணிகளை அனுப்பி, அவரது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை மீட்டெடுத்தோம்.

அதைத் தொடர்ந்து, அவர் கொழும்புவுக்கு ஓடிப்போய் ஸ்ரீலங்கா ராணுவத்துடன் இணைந்து, தற்போது எமக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். இவருக்குக் கீழ் ஒரு சிறு குழு செயல்படுகிறது. இவர்கள் இப்போது எமது ஆதரவாளர்களைக் கொல்வது, எம்மை ஆதரித்து எழுதும் பத்திரிகையாளர்களைக் கொல்வது, கல்விமான்களைக் கொல்வது எனப் பல படுகொலைகளைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவேதான், எங்கள் பேச்சுவார்த்தைகளின்போதுகூட, கருணா குழு என்ற துணைப் படைக் குழுவின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும், அவர்களால் நிகழ்த்தப்படும் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்தோம்.’’

“நீங்கள் வெளிநாடுகளில் ‘இறுதி யுத்தம்’ என்ற பெயரில், அங்குள்ள தமிழர்களை மிரட்டிக் கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே..?”

“இல்லவே இல்லை! ஆனால், ஈரத்துடன் இங்கே ஒன்றைப் பதிவுசெய்ய விரும்புகிறேன்… உலக நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான், ஈழத்திலுள்ள தமிழர் களின் ஜீவாதாரத்துக்குக் காலங் காலமாக உதவி வருகிறார்கள். பொரு ளாதாரரீதியாகத் தமிழீழம் ஒதுக்கப் பட்டிருக்கிறது. வேலையின்மை, வறுமை, போர் அழிவு, இயற்கை இடர்ப்பாடுகள்… இப்படிப் பல துயரங்களை எமது சமூகம் அங்கு சந்தித்து வருகிறது. எமது மக்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்க உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை. எங்கள் மக்கள் தாமாக மனமுவந்து செய்யும் கொடை யினால்தான் எமது இயக்கமும், இயக்க வேலைகளும், சமூக அமைப்புகளும் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தாய் மண்ணுக்காக எம் தமிழ்ப் பிள்ளைகள் தருகிற நிதி இது!”

இந்தச் சந்திப்பின்போது சிக்கலான சில கேள்விகளுக்குப் பதிலளிக்க நாசூக்காக மறுத்த ஆண்டன் பால சிங்கம், என்கிறார்.

‘‘தம்பி, அடுத்த முறை வரைக்குள்ள எங்களுடனேயே சாப்பிட வேணும்!’’ & ஈழத் தமிழில் கை கூப்பி வழியனுப்புகிறார் அடேல் பாலசிங்கம் என்கிற வெள்ளைக்காரத் தமிழச்சி!

Flag this message Geopolitical Weekly : Internal Divisions and the Chinese Stimulus Plan

February 24, 2009 1 comment

Internal Divisions and the Chinese Stimulus Plan

February 23, 2009


Graphic for Geopolitical Intelligence Report

By Rodger Baker and Jennifer Richmond

Due in large part to fears of dire consequences if nothing were done to tackle the economic crisis, China rushed through a 4 trillion yuan (US$586 billion) economic stimulus package in November 2008. The plan cobbled together existing and new initiatives focused on massive infrastructure development projects (designed, among other things, to soak up surplus steel, cement and labor capacity), tax cuts, green energy programs, and rural development.

Ever since the package was passed in November, Beijing has recited the mantra of the need to shift China’s economy from its heavy dependence on exports to one more driven by domestic consumption. But now that the sense of immediate crisis has passed, the stimulus policies are being rethought — and in an unusual development for China, they are being vigorously debated in the Chinese media.

Debating the Stimulus Package

In a country where media restrictions are tightening and private commentary on government officials and actions in blogs and online forums is being curtailed, it is quite remarkable that major Chinese newspaper editorials are taking the lead in questioning aspects of the stimulus package.

The question of stimulating rural consumption versus focusing the stimulus on the more economically active coastal regions has been the subject of particularly fierce debate. Some editorials have argued that encouraging rural consumption at a time of higher unemployment is building a bigger problem for the future. This argument maintains that rural laborers — particularly migrant workers — earn only a small amount of money, and that while having them spend their meager savings now might keep gross domestic product up in the short term, it will drain the laborers’ reserves and create a bigger social problem down the road. Others argue that the migrant and rural populations are underdeveloped and incapable of sustained spending, and that pumping stimulus yuan into the countryside is a misallocation of mo ney that could be better spent supporting the urban middle class, in theory creating jobs through increased middle-class consumption of services.

The lack of restrictions on these types of discussions suggests that the debate is occurring with government approval, in a reflection of debates within the Communist Party of China (CPC) and the government itself. Despite debate in the Chinese press, Beijing continues to present a unified public face on the handling of the economic crisis, regardless of internal factional debates. Maintaining Party control remains the primary goal of Party officials; even if they disagree over policies, they recognize the importance of showing that the Party remains in charge.

But, as the dueling editorial pages reveal, the Party is not unified in its assessment of the economic crisis or the recovery program. The show of unity masks a power struggle raging between competing interests within the Party. In many ways, this is not a new struggle; there are always officials jockeying for power for themselves and for their protégés. But the depth of the economic crisis in China and the rising fears of social unrest — not only from the migrant laborers, but also from militants or separatists in Tibet and Xinjiang and from “hostile forces” like the Falun Gong, pro-Democracy advocates and foreign intelligence services — have added urgency to long-standing debates over economic and social policies.

In China, decision-making falls to the president and the premier, currently Hu Jintao and Wen Jiabao respectively. They do not wield the power of past leaders like Mao Zedong or Deng Xiaoping, however, and instead are much more reliant on balancing competing interests than on dictating policy.

Party and Government Factions

Hu and Wen face numerous factions among the Chinese elite. Many officials are considered parts of several different factional affiliations based on age, background, education or family heritage. Boiled down, the struggle over the stimulus plan pits two competing views of the core of the Chinese economy. One sees economic strength and social stability centered on China’s massive rural population, while another sees China’s strength and future in the coastal urban areas, in manufacturing and global trade.

Two key figures in the Standing Committee of the Politburo (the center of political power in China), Vice President Xi Jinping and Vice Premier Li Keqiang, highlight this struggle. These two are considered the core of the fifth-generation leadership, and have been tapped to succeed Hu and Wen as China’s next leaders. They also represent radically different backgrounds.

Li is a protege of Hu and rose from the China Youth League, where Hu has built a strong support base. Li represents a newer generation of Chinese leaders, educated in economics and trained in less-developed provinces. (Li held key positions in Henan and Liaoning provinces.) Xi, on the other hand, is a “princeling.” The son of a former vice premier, he trained as an engineer and served primarily in the coastal export-oriented areas, including Hebei, Fujian and Zhejiang provinces and Shanghai.

In a way, Li and Xi represent different proposals for China’s economic recovery and future. Li is a stronger supporter of the recentralization of economic control sought by Hu, a weakening of the regional economic power bases, and a focus on consolidating Chinese industry in a centrally planned manner while spending government money on rural development and urbanization of China’s interior. Xi represents the view followed by former President Jiang Zemin and descended from the policies of Deng. Under that view, economic activity and growth should be encouraged and largely freed from central direction, and if the coastal provinces grow first and faster, that is just fine; eventually the money, technology and employment will move inland.

Inland vs. the Coast

In many ways, these two views reflect long-standing economic arguments in China — namely, the constant struggle to balance the coastal trade-based economy and the interior agriculture-dominated economy. The former is smaller but wealthier, with stronger ties abroad — and therefore more political power to lobby for preferential treatment. The latter is much larger, but more isolated from the international community — and in Chinese history, frequently the source of instability and revolt in times of stress. These tensions have contributed to the decline of dynasties in centuries past, opening the space for foreign interference in Chinese internal politics. China’s leaders are well aware of the constant stresses between rural and coastal China, but maintaining a balance has been an ongoing struggle.

Throughout Chinese history, there is a repeating pattern of dynastic rise and decline. Dynasties start strong and powerful, usually through conquest. They then consolidate power and exert strong control from the center. But due to the sheer size of China’s territory and population, maintaining central control requires the steady expansion of a bureaucracy that spreads from the center through the various administrative divisions down to the local villages. Over time, the bureaucracy itself begins to usurp power, as its serves as the collector of taxes, distributor of government funds and local arbiter of policy and rights. And as the bureaucracy grows stronger, the center weakens.

Regional differences in population, tax base and economic models start to fragment the bureaucracy, leading to economic (and at times military) fiefdoms. This triggers a strong response from the center as it tries to regain control. Following a period of instability, which often involves foreign interference and/or intervention, a new center is formed, once again exerting strong centralized authority.

This cycle played out in the mid-1600s, as the Ming Dynasty fell into decline and the Manchus (who took on the moniker Qing) swept in to create a new centralized authority. It played out again as the Qing Dynasty declined in the latter half of the 1800s and ultimately was replaced — after an extended period of instability — by the CPC in 1949, ushering in another period of strong centralized control. Once again, a more powerful regional bureaucracy is testing that centralized control.

The economic reforms initiated by Deng Xiaoping at the end of the 1970s led to a three-decade decline of central authority, as economic decision-making and power devolved to the regional and local leadership and the export-oriented coastal provinces became the center of economic activity and power in China. Attempts by the central government to regain some authority over the direction of coastal authorities were repeatedly ignored (or worse), but so long as there was growth in China and relative social stability, this was tolerated.

With Hu’s rise to power, however, there was a new push from the center to rein in the worst of excesses by the coastal leaders and business interests and refocus attention on China’s rural population, which was growing increasingly disenfranchised due to the widening urban-rural economic gap. In 2007 and early 2008, Hu finally gained traction with his economic policies. The Chinese government subsequently sought to slow an overheating economy while focusing on the consolidation of industry and the establishment of “superministries” at the center to coordinate economic activity. It also intended to put inland rural interests on par with — if not above — coastal urban interests. When the superministries were formed in 2008, however, it became apparent that Hu was not omnipotent. Resistance to his plans was abundantly evident, illustrating the power of the entrenched bureaucratic interests.

Economic Crisis and the Stimulus Plan

The economic program of recentralization and the attempt to slow the overheating economy came to a screeching halt in July 2008, as skyrocketing commodity prices fueled inflation and strained government budgets. The first victim was China’s yuan policy. The steady, relatively predictable appreciation of the yuan came to a stop. Its value stagnated, and there is now pressure for a slight depreciation to encourage exports. But as Beijing began shaping its economic stimulus package, it became clear that the program would be a mix of policies, representing differing factions seeking to secure their own interests in the recovery plan.

The emerging program, then, revealed conflicting interests and policies. Money and incentives were offered to feed the low-skill export industry (located primarily in the southeastern coastal provinces) as well as to encourage a shift in production from the coast to the interior. A drive was initiated to reduce redundancies, particularly in heavy industries, and at the same time funding was increased to keep those often-bloated industrial sectors afloat. Overall, the stimulus represents a collection of competing initiatives, reflecting the differences among the factions. Entrenched princelings simply want to keep money moving and employment levels up in anticipation of a resurgence in global consumption and the revitalization of the export-based economic growth path. Meanwhile, the rur al faction seeks to accelerate economic restructuring, reduce dependence on the export-oriented coastal provinces, and move economic activity and attention to the vastly underdeveloped interior.

Higher unemployment among the rural labor force is “proving” each faction’s case. To the princelings, it shows the importance of the export sector in maintaining social stability and economic growth. To the rural faction, it emphasizes the dangers of overreliance on a thin coastal strip of cheap, low-skill labor and a widening wealth gap.

Fighting it Out in the Media

With conflicting paths now running in tandem, competing Party officials are seeking traction and support for their programs without showing division within the core Party apparatus by turning to a traditional method: the media and editorials. During the Cultural Revolution, which itself was a violent debate about the fundamental economic policies of the People’s Republic of China, the Party core appeared united, despite major divisions. The debate played out not in the halls of the National People’s Congress or in press statements, but instead in big-character posters plastered around Beijing and other cities, promoting competing policies and criticizing others.

In modern China, big posters are a thing of the past, replaced by newspaper editorials. While the Party center appears united in this time of economic crisis, the divisions are seen more acutely in the competing editorials published in state and local newspapers and on influential blogs and Web discussion forums. It is here that the depth of competition and debate so well hidden among the members of the Politburo can be seen, and it is here that it becomes clear the Chinese are no more united in their policy approach than the leaders of more democratic countries, where policy debates are more public.

The current political crisis has certainly not reached the levels of the Cultural Revolution, and China no longer has a Mao — or even a Deng — to serve as a single pole around which to wage factional struggles. The current leadership is much more attuned to the need to cooperate and compromise — and even Mao’s methods would often include opportunities for “wayward” officials to come around and cooperate with Mao’s plans. But a recognition of the need to cooperate, and an agreement that the first priority is maintenance of the Party as the sole core of Chinese power (followed closely by the need to maintain social stability to ensure the primary goal), doesn’t guarantee that things can’t get out of control.

The sudden halt to various economic initiatives in July 2008 showed just how critical the emerging crisis was. If commodity prices had not started slacking off a month later, the political crisis in Beijing might have gotten much more intense. Despite competition, the various factions want the Party to remain in power as the sole authority, but their disagreements on how to do this become much clearer during a crisis. Currently, it is the question of China’s migrant labor force and the potential for social unrest that is both keeping the Party center united and causing the most confrontation over the best-path policies to be pur sued. If the economic stimulus package fails to do its job, or if external factors leave China lagging and social problems rising, the internal party fighting could once again grow intense.

At present, there is a sense among China’s leaders that this crisis is manageable. If their attitude once again shifts to abject fear, the question may be less about how to compromise on economic strategy than how to stop a competing faction from bringing ruin to Party and country through ill-thought-out policies. Compromise is acceptable when it means the survival of the Party, but if one faction views the actions of another as fundamentally detrimental to the authority and strength of the Party, then a more active and decisive struggle becomes the ideal choice. After all, it is better to remove a gangrenous limb than to allow the infection to spread and kill the whole organism.

That crisis is not now upon China’s leaders, but things nearly reached that level last summer. There were numerous rumors from Beijing that Wen, who is responsible for China’s economic policies, was going to be sacked — an extreme move given his popularity with the common Chinese. This was staved off or delayed by the fortuitous timing of the rest of the global economic contraction, which brought commodity prices down. For now, China’s leaders will continue issuing competing and occasionally contradictory policies, and just as vigorously debating them through the nation’s editorials. The government is struggling with resolving the current economic crisis, as well as with the fundamental question of just what a new Chinese economy will look like. And that question goes deeper than money: It goes to the very role of the CPC in China’s system.

Categories: America Tags: , , , , , ,

Nooravadhu Naal – Ulagam Muzhuthum Pazhaiya Raaththiri

February 24, 2009 2 comments

Ulagam Muzhuthum Pazhaiya Raaththiri by Ilaiyaraja
Listen on Posterous

நூறாவது நாள்: இளையராஜா – உலகம் முழுதும் பழைய ராத்திரி

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Thambi Durai – KaniyaKumari

February 24, 2009 Leave a comment

Kaniyakumari by Ilaiyaraja
Listen on Posterous

தம்பிதுரை: கன்னியாகுமரி: இளையராஜா இரட்டுற மொழிதல், சிலேடை, பெண்

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Nandhini – Maanoothu odayila – Manivannan

February 24, 2009 Leave a comment

Maanoothu Odayila by Ilaiyaraja
Listen on Posterous

நந்தினி: இளையராஜா – மானூத்து ஓடையில: மணிவண்ணன்
Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்

February 12, 2009 1 comment

காதலென்பது…- ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 1 comment

இரண்டு பஸ்கள் நிற்கவில்லை. தீப்தி அடுத்த வந்த பஸ்ஸை நிறுத்த இன்னும் அதிகம் முனைப்பு எடுத்துக்கொண்டாள். மணியும் சாலையின் பாதிக்கே போய் நின்றுகொண்டான். சரியாக அவர்களைக் கடக்கும்போதுதான் பஸ்கள் வேகமெடுத்தன. டிரைவர் முகங்களில் ஒருவித வன்மம் போல் ஏதோவொன்று தெரிந்தது.

அடுத்த பஸ்ஸும் நிற்கவில்லை. தீப்தி முகம் கூம்பிப் போய்விட்டது. கல்லூரி வாசலில் இருந்து இன்னும் தெரிந்த முகங்கள் வெளியே வந்தன. இவர்களைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். கெஸ்மிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். கம்பைண்ட் கிளாஸ்களில் பார்க்க முடியும் கூட்டம்.

மீண்டும் மரநிழலில் வந்து நின்றுகொண்டான் மணி. தார் உருகும் வெயில். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆட்டோ வந்தாலாவது இவளை அழைத்துக்கொண்டு போய்விடலாம். அவ்வப்போது லாரிகள் உறுமிக்கொண்டு போயின. தீப்தி இன்னும் நடுத்தெருவில் தலையில் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு நின்றாள்.

சின்ன உருவம். சொப்பு பொம்மை மாதிரி. நிறைய கூந்தல். அதைப் பின்னி மாளாததுபோல், கீழ்முனையில் கட்டாமல் அவிழ்ந்துகிடந்தது. சட்டெனத் திரும்பி, மணியைப் பார்த்துச் சிரித்தாள். பஸ் வருகிறது, வாவா என்று சைகையில் அழைத்தாள். இந்த பஸ்ஸும் நிற்காது என்று மணிக்குத் தோன்றியது. எல்லாம் எல்.எஸ்.எஸ். பஸ்கள். கல்லூரி வாசலில் இவற்றுக்கு நிறுத்தம் இல்லை.

வழக்கப்போல், டிரைவர் தீப்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அடித்துக்கொண்டு போனார்.

“என்னய்யா பஸ்காரன் நிறுத்தவே மாட்டேங்கறான்?”

நொடிக்கொரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மணி கையில் கடிகாரம் இல்லை. பத்து இருக்கலாம். முதல் வகுப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தாயிற்று.

“ஆஸ்பிட்டல் உனக்குச் சரியா தெரியுமா? போயிட்டு மத்தியானத்துக்குள்ள வந்துட முடியுமா?”

மணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காலையில் கல்லூரிக்கு வந்ததில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறாள். முதல் வகுப்பையும் தியாகம் செய்துவிட்டுக் கிளம்புவதுதான் திட்டம். முதல் வகுப்பு, துறைத் தலைவர் எடுக்கும் வகுப்பு. அவ்வளவு சீக்கிரம் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது.

“வந்துடலாம்மா. எதுக்குக் கவலைப் படறே? பஸ் கிடைச்சா, இங்கேயிருந்து அடுத்த பதினஞ்சு நிமிஷம். திரும்பிவர இன்னொரு அதிகபட்சம் அரைமணி நேரம். போயிட்டு வந்துடலாம்.”

அவளுக்கும் இந்த கணக்கின் எளிமை புரிந்திருக்கவேண்டும். ஆனாலும் சந்தேகம். முடியுமா என்ற அச்சம். நண்பர்களிடம் இருந்து பைக்கை வாங்கிக்கொண்டு போய்வந்துவிடலாம் என்று மணி முதலில் யோசனை சொன்னான். அதை அப்போது ஒப்புக்கொண்டவள், என்ன தோன்றியதோ, அப்புறம் வேண்டாம் என்றுவிட்டாள். வீணா எதுக்கு வம்பு?

மீண்டும் வெயிலில் போய் நின்றுகொண்டாள் தீப்தி. வகுப்பைவிட்டு இந்த நேரத்துக்கு மணி வெளியே வந்ததில்லை. பொதுவாக மூன்று நான்கு வகுப்புகளுக்குப் பின் தான் வெளியே வருவான். மணி பனிரெண்டு பனிரெண்டரை மணி அளவில் ஒன்றன் பின் ஒன்றாக பஸ்கள் வர ஆரம்பிக்கும்.

எதிர்பார்க்கும்போது வராமல் போவதுதான் பஸ்ஸின் மகத்துவம். இந்தப் பூந்தமல்லி ஐரோடு போகும் பல பஸ்களை அவன் தொடர்ந்து பார்த்திருக்கிறான். தீப்தி குறிப்பிடும் மருத்துவமனையை அவன் பல முறை கடந்திருக்கிறான். சொல்லப்போனால், எல்லா பஸ்களுமே அந்த மருத்துவமனையைக் கடந்துதான் போகவேண்டும்.

அதுவுமில்லாமல், மனத்தில் அவசரம். பதற்றமில்லாமல் இருக்குமா?

“எங்க ஆஸ்சிடெண்ட் ஆச்சு?”

மணி தீப்தியைப் பார்த்துக் கேட்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தவள், மணி பக்கம் திரும்பினாள்.

“நெல்லூர்லேருந்து திரும்பிவரும்போது, இவங்க வந்த காரை ஒரு லாரிக்காரன் பின்னாலேயிருந்து மோதியிருக்கான்.”

“எதுக்கு நெல்லூர் போனார்?”

“அவர் சர்வீஸ் எஞ்சினியர்தானே. அங்கே ஏதோ கிளையண்ட் இருக்காங்களாம். இவரும் இன்னொரு எஞ்சினியரும் போயிருக்காங்க. வேலையை முடிச்சுட்டு அடுத்த நாளே திரும்பியிருக்காங்க. வரும்போதுதான் இந்த ஆஸ்சிடெண்ட்.”

ஜன்னல் வெளியே தீப்தி பார்வையை விலக்கிக்கொண்டாள். பஸ் தடதடவென சத்தம் கொடுத்துக்கொண்டு ஓடியது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னே இருந்த வரிசைகளில் யாருமே இல்லை. டிரைவர் அருகே இரண்டு மூன்று கூடைகள் அடுக்கப்பட்டு, பக்கத்தில் சில் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கண்டெக்டரும் முன்னால் உள்ள சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

“நாலு நாள் ஆச்சு ஒரு விவரமும் தெரியல. போனும் இல்ல. அவங்க வீட்டுப் பக்கமே போக முடியல. முந்தாநேத்து ராத்திரி அவரோட தம்பிதான் வந்து விஷயம் சொன்னான். காலு கை எல்லாம் ஃப்ராக்சராம். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. நேத்தே போய் பார்க்கணும்னு பார்த்தேன். முடியல…”

பேசப் பேச குரல் மெல்லிதாகிக்கொண்டே வந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பிக்கொண்டாள். வெளியில் இருந்து வெப்பக்காற்று மட்டுமே உள்ளே வந்தது. ஜன்னல் ஓரமெல்லாம் தகித்தது. இவளோடு பழக ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் இருக்குமா? இருக்கலாம். இன்றுவரை அவள் உற்சாகம் குன்றி, குரல் கம்மி அவன் பார்த்ததில்லை.

“நேத்து ஃபுல்லா, அவரோட அம்மாதான் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தாங்க. போயிருந்தாலும் பார்த்திருக்க முடியாது. இன்னிக்குத் தம்பி கூட இருக்கானாம். “

அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பத்து நாற்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தது. ஒரு மணிக்குள் திரும்பிவிட முடியும் என்றுதான் மணிக்குத் தோன்றியது.

“அவங்கம்மாவுக்கு என்னைக் கண்டாவே பிடிக்கல. ரெண்டு மூணு முறை என்னையும் அவரையும் பார்த்திருக்காங்க. வீட்டுல போய் ஓரே காச்மூச்சுனு கத்தலாம். என்கிட்ட என்ன கொறையக் கண்டாங்களோ, தெரியல..”

அடுத்து வந்த நிறுத்தத்தில் கூடைக்காரர்கள் இறங்கிக்கொண்டார்கள். பஸ் இன்னும் தடதடத்தது. அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கவில்லை. கண்டெக்டர் டபுள் விசில் கொடுத்தார். இவர்களைப் பார்த்து, அடுத்த ஸ்டாபிங்கில் இறங்குகிறீர்களா என்பதுபோல் சைகைக் காட்ட, ஆமாமென தலையாட்டினான் மணி.

பஸ்ஸை விட்டு இறங்கிப் பின்னால் நடக்க வேண்டும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். தீப்தி எழுந்து படிக்கட்டின் அருகே போய் நின்றுகொண்டாள். மணி குனிந்து அந்த மருத்துவமனை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தான்.

“அண்ணா எதுவும் சொல்லவேண்டாம்னு சொன்னான். நான்தான் மனசு கேக்காம, தீப்திகிட்ட போய் சொன்னேன். தீப்தி அழவே அழுதுட்டா. பயப்பட ஒண்ணுமில்லை. பிராக்சர்தான், இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாயிடும்னு சொன்னேன்.”

“டாக்டர் என்ன சொன்னார்?”

“மருந்து மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க. இன்னும் பத்து நாள் இங்க இருக்கச் சொல்வாங்கன்னு நினைக்கறேன். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”

மணி அந்த மருத்துவமனை வரண்டாவைப் பார்தான். எதிரெதிர் அறைகள். ஒவ்வொரு அறை வாசலிலும் இரண்டு மூன்று சேர்கள் போடப்பட்டிருந்தன. சில காலியாக இருந்தன. தூரத்து அறை வாசலில் ஒரு பெண் தூங்கிக்கொண்டு இருந்தாள். சவரில் ஆங்காங்கே வண்ண ஓவியங்கள். உடல் நோய் இருக்கும்போது, யார் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? தெரியவில்லை.

“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”

“ஆமா. நேத்து ஃபுல்லா அம்மா இருந்தாங்க. ராத்திரி அப்பா இருந்தாங்க. அம்மா சமைச்சு எடுத்துகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் நான் இருப்பேன். சைக்கிள் டெஸ்ட் வேற வருது. வீட்டுல போய் படிக்கணும்.”

“இங்க படிக்க முடியலையா?”

“ஐயே.. இந்த ஆஸ்பத்திரி நாத்தம் தாங்கவே முடியலை. முதல் நாளெல்லாம் பயம் வேற. இவனை பார்க்கவே முடியாது. ஐசியூல இருந்தான்.”

இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே சுவரில் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருந்தது. இடதும் வலதுமாக அது போய் போய் வரும்போது, வெப்பக்காற்றோடு, பினாயில் வாசனையையும் தெளித்துவிட்டுப் போனது. மேலே ஃபால்ஸ் சீலிங்.

டியூட்டி நர்ஸுகள் உட்காரும் இடம் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள். அல்லது, கையில் ஒரு காகிதக் கட்டுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகப் போய் வந்தார்கள். நடுநடுவே இரண்டு வார்த்தைகள். ஒரு சிரிப்பு. ஒரு அவசரக் கிறுக்கல்.

அடுத்த இரண்டாவது அறையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு முதியவர் சாப்பாட்டுக் கூடையை எடுத்து வந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்தவர், ஒரு கணம் நின்றுவிட்டு, அப்புறம் உள்ளே நுழைந்தார். எங்கேயாவது மணியைப் பார்த்தவராக இருக்கலாம்.

“சங்கர், உன்னை அண்ணா கூப்பிடறாரு.”

அடுத்திருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு தீப்தி வெளியே வந்தாள். மணி முகத்தைப் பார்த்துவிட்டு, தன் கைக்கடிகாரத்தையும் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்ததைப் போல் தோன்றியது.

“ஃபை மினிட்ஸ் மணி. இதோ சொல்லிட்டு வந்துடறேன். போய் சேர்ந்துடலாம் இல்லியா?”

பேராசிரியர் தனபால் சாரின் ஸ்கூட்டர் கல்லூரி அருகே வந்து நின்றபோது மணி மதியம் 1.10. தீப்தி பின்னால் போய் உட்கார்ந்துகொண்டாள். மணியையும் ஏழுமலையையும் பார்த்து மையமாகப் புன்னகைத்தார்.

“செமஸ்டருக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சா?”

“இனிமேதான் சார்.” எதற்கும் இருக்கட்டும் என்று புன்னகைத்து வைத்தான் மணி. ஏழுமலை வாயே திறக்கவில்லை. சென்ற ஆண்டு வரைக்கும், அவனுக்கு இயற்பியல் வகுப்பெடுத்தவர். அப்புறம் ரிடையரானார்.

தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அவர் ஸ்கூட்டரை வேகப்படுத்தினார். தீப்தி தலைகவிழ்ந்திருந்தாள்.

“எங்கடா, ரெண்டு பேரும் அவசரமா போயிட்டு வந்தீங்க?”

“தீப்தி லவ்வர் ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தார். அவரைப் போய் பார்த்துட்டு வந்தோம்.”

தற்செயலா இல்லை இயல்போ தெரியவில்லை. ஏழுமலை தன்னைக் கூர்மையாகப் பார்ப்பதுபோல் இருந்தது மணிக்கு. அவன் ஏதேனும் சொல்லிவிடுவானோ என்றும் பயமாக இருந்தது. ஒரு கணம் அவன் பார்வையை மணியால் சந்திக்க முடியவில்லை.

தலையைத் திருப்பிக்கொண்ட ஏழுமலை, “பைத்தியம்டா நீ” என்று மட்டும் சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க எதிர்பக்கம் நடக்கத் தொடங்கினான்.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

தொடரும்… – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 Leave a comment

நந்தினி பால்கனிக் கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெறுக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும்.

ஜன்னல் கர்ட்டன்களைக் கூட விலக்கி வைக்கவில்லை.

எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம்வரை மழை பெய்துகொண்டிருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலைமேல் பூக்கள் சிதறிக்கிடந்தன. தெருவின் இருபுறமும் வரிசைகட்டிய கார்கள். சிவப்பும் மஞ்சளுமாய் பூக்கள்.

இன்று ஞாயிறாக இருக்கவேண்டும். தெருவில் மனித சப்தமே இல்லையே. தெருவில் காலை அகலப்போட்டு நடக்கலாம். எவரும் பார்க்கமாட்டார்கள்.

அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பார்த்தால்தான் என்ன? அடையாளம் காண்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அடையாளம் காண்பவர்களும் அதிகபட்சம் உதிர்ப்பது சின்னப் புன்னகை. இயல்பாக மறுபுன்னகை சிந்திவிட்டு நகர்ந்துவிட முடிகிறது. பெரும்பாலும் கேள்விகள் இல்லை. விசாரிப்புகள் மட்டும் தெரிந்தவர்களிடமிருந்து வரும். “பொண்ணு எங்க படிக்கறா?”, “மெட்ராஸ்லேயே வந்து செட்டிலாகிட்டீங்களா?”. கீழ் ஃப்ளாட் எம்.எம். குடுவா மட்டும் அம்மையும் அச்சனையும் சேர்த்துக் கேட்பார்.

இதெல்லாம் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இல்லை. விசாரிப்புகள். இந்த விசாரிப்புகள் மூலம் மட்டுமே பெறப்பட்ட பல செய்திகள், முன்னர் பத்திரிகைகளை அலங்கரித்தது உண்டு. இப்போது நான் செய்திப் பொருளில்லை. அதனால் விசாரிப்புகளும் இல்லை.

அறைக்குள் வந்து துப்பட்டாவை மேலே எடுத்து அணிந்துகொண்டாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தாள். காலை முதல் ஓடுகிறது. ஒன்று மாற்றி ஒன்றாகக் குழந்தைகளின் சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு சேனல்கள்! எவ்வளவு கற்பனைகள்! தன் வயதுக் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகளைக் கண்டது இல்லை.

கதவைப் பூட்டிவிட்டு, சாவியைக் கையடக்கப் பர்ஸுக்குள் வைத்துக்கொண்டாள். உள்ளே அதிகப் பணம் இல்லை. என்ன செலவு இருக்கிறது? ஒன்றும் வாங்கப் போவதில்லை. கடைகளும் இந்த மழையில் திறந்திருக்கப் போவதில்லை. வாங்கிக் குவித்தக் காலங்கள் இப்போது அபத்தமாகத் தோன்றுகின்றன. வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனவை ஏராளம்.

வாசல் கூர்க்கா எழுந்து நின்றான். பக்கத்தில் அவன் மனைவி தேசலாகத் தெரிந்தாள். சிரித்தாள். கொஞ்சம் தள்ளி குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டு இருந்தது. சப்பை மூக்கு, வெளிறிய வெண்மை நிறம். ரோஸ் நிறத்தில் அவள் கட்டியிருந்த புடைவை, அவ்வளவு இணக்கமாக இருந்தது.

“சாவியைக் கொடுங்கள், காரை வெளியே எடுத்துத் தருகிறேன்” என்றான் கூர்க்கா. சாவியைக் கொண்டு வரவில்லை. பரவாயில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு கேட் அருகே போய் நின்றுகொண்டாள். சும்மா காலார நடக்க எதுக்கு கார்? சாலை முழுவதும் பூக்கள் கொட்டிக் கிடந்தன. எதிர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்கள் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தெருவெங்கும் மரங்கள் மூடி வெளிச்சத்தை மையிட்டுக்கொண்டு இருந்தன.

“குழந்தைக்கு ஸ்வெட்டர் போடு. அப்புறம் சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள் கூர்க்காவிடம். அவன் அரைஉதடு விரித்துச் சிரித்தான். மனைவியிடம் என்னவோ கூறினான். அவள் லேசாக நந்தினியைப் பார்த்தபடி குழந்தையை அள்ளிக்கொள்ள எழுந்துகொண்டாள்.

அகலமான சாலை. இருபுறமும் கார்கள் நிறுத்திவைத்து, சாலையைக் குறுக்கியிருந்தார்கள். அதிசயமாக இந்த இருபது ஆண்டுக் காலத்தில் அதிக மரங்கள் வெட்டப்படவில்லை. அவள் அந்தப் ஃப்ளாட்டை வாங்க வந்தபோது, எதிர்ப்புறம் முழுவதும் காலி மனைகள். வந்து இங்கே வாழ்வோம், இப்படியொரு மாலைப்பொழுதில் நடப்போம் என்று யார் அன்று நினைத்துப் பார்த்தார்கள்? முதலீடு. அவ்வளவுதான்.

பல மாதங்கள், ஆண்டுகள் கூட, ஃப்ளாட் பூட்டிக் கிடந்தது. வாடகைக்கு விடவும் பயம். வாடகையே தரமாட்டான், ஏமாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்புறம் யார் அவன் பின்னால் அலைவது? அதுவும் ஓர் முன்னணி நடிகை, எவனோ குடித்தனக்காரன் பின்னால் அலைவதா? அந்த வாடகை வந்து என்னவாகிவிடப் போகிறது? பூட்டி வைப்பதே சாலச் சிறந்தது. இன்னொரு நடிகையும் ஃப்ளாட்டை வாடகைக்கு கேட்டாள். அவள் இங்கே காலூன்றத் தொடங்கியிருந்த நேரம். சாதாரண ஆள்களுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம், சினிமாக்காரர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றார் அச்சன். பயம்.

சொல்லப்போனால், பயம்தான் எங்கும் எப்போதும் ஆட்டி வைத்தது. இதெல்லாம் உழைப்பின் சம்பாத்தியம் என்பதைவிட, ஏதோ அனாமத்தாக வந்ததைப் போன்றதொரு எண்ணம். அதனால், எப்போதும் இதையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் இவை அபகரித்துக்கொள்ளப்படலாம் என்றும் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

எதிரே கார் ஒன்று அவசரமாகப் போய்க்க்கொண்டு இருந்தது. இவள் ஓரம் ஒதுங்கிக்கொண்டாள். ஞாயிறு மாலையிலும் யாருக்கோ இன்னும் அவசரம் மிச்சமிருக்கிறது. தன்னைப் போல பல சினிமாக்காரர்கள் இந்தத் தெருவிலும் அடுத்திருந்தத் தெருக்களிலும் வீடும் ஃப்ளாட்டும் வாங்கிக் குடியிருந்தார்கள். தங்கள் தலைமேல்தான் சினிமா உலகமே நடக்கிறது என்ற எண்ணமும் அதுதரும் அவசரமும், அழகிய கற்பனை. தெரிந்த முகங்கள் கூட, சட்டென ஓர் அவசரத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, விரைவாக விடைபெறுவது, இந்தக் கற்பனையின் தொடர்ச்சிதான்.

இந்த சுயமோகமும் முக்கியத்துவமும் இல்லையெனில், பலருக்கு இங்கே வாழ்க்கைச் சப்பென்று இருக்கும்.

திருமணமாகி அமெரிக்க போய், விசாலமான ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தத் தொடங்கியபோதுதான், வெறுமை உறைத்தது. சுற்றி யாருமே இல்லை. உங்களை அறிந்த முகம் ஒன்றுகூட இல்லை. தூர தூர வீடுகள். அமெரிக்க முகங்களுக்கு நீ யாரென்றே தெரியாது. விழாக்கள் இல்லை. அழைப்புகள் இல்லை. பரிசளிப்புகள் இல்லை. அதனால் முகப்பூச்சு தேவையே இல்லை. கண்ணாடி ரொம்பக் குரூரமாகத் தெரிந்தது. உச்சிவரை ஏறியிருந்த மயக்கத்தை, யாரோ தண்ணீர் தெளித்து, கலைத்துவிட்டாற்போ இருந்தது. சட்டெனப் புற உலகில் வந்து விழுந்த குழந்தையில் வலி.

கண் திறந்து பார்க்க, விஸ்வம் மட்டுமே இருந்தான், காதலுடன், அரவணைப்புடன். பல ஆண்டுகள் அமெரிக்க வாசம் அவனை சுயசார்பு உள்ளவனாக ஆக்கியிருந்தது. கனவுகளை எங்கே நிஜத்தோடு பிணைக்கவேண்டும் என்று தெரிந்திருந்தது. மீண்டும் இந்தியா ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தடுத்து நிறுத்தியது விஸ்வம்தான். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளியை அவனது காதலால் நிரப்ப முயன்றான். புரியவைக்க முயன்றான். புரிந்தும் ஏற்கமுடியாமல் தவித்த தவிப்பு சொல்லில் வராது.

அதையும் மீறி, மீண்டும் இந்தியா வந்தது, உடனே நடிக்க வாய்ப்பு கோரி அலைந்தது, நேற்றுவரை புகழோடு பார்த்த ஒருத்தி, இன்று வாசல் வந்து நிற்கிறாள் என்றவுடன் வன்மம் கொப்பளிக்க, எடுத்தெறிந்து பேசியது, வேண்டுமென்றே இழுத்தடித்தது, காக்கவைத்து கழுத்தறுத்தது எல்லாம் மற்றொரு மூன்றாண்டுக் கதை. தன்னைக் காலம் பழைய குப்பையில் அள்ளிப் போட்டுவிட்டது என்று புரிய அந்த மூன்றாண்டுகள் தேவைப்பட்டன.

நெஞ்சு முழுக்க வெறுப்பு. எரிச்சல். கையாலாகாத்தனம். நடிக்க வந்தபோது இருந்ததைவிட, இப்போது நடிப்பு பற்றி நன்கு தெரியும். ஒவ்வொரு வசனத்தின் பொருள் உணர்ந்து, பாவத்தோடு இன்று திரையில் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பு மட்டும் வரவே இல்லை. பத்திரிகைகளின் பத்திகளில் நக்கல் தொனித்தது. நேர்ப்பேச்சுகளில் சமத்காரம் வழிந்தோடியது. உன் காலம் முடிந்தது என்பதை இவையெல்லாம் சொல்லாமல் தெரிவித்தன.

பிணக்குகள் மறந்து, விஸ்வம் சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா அழைத்துப் போனான். வலிக்கும் ரணத்துக்கும் அன்பென்னும் அருமருந்தால் நீவிவிட்டான். எந்த ஆர்வம் இந்தப் பதற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்ததோ, அதற்கு மீண்டும் மடைமாற்றிவிட்டான். வீணை.

தோளில் தாங்கி, தந்திக் கம்பிகளைப் பிடித்தபோது, தனக்கான சாதனமாக வீணையை உணரத் தொடங்கினாள். மீண்டும் சந்தித்த தோழி போல் வீணை கொஞ்சத் தொடங்கியது. பதினைந்து பதினாறு வயது குறைந்துபோய் துள்ளல் காலங்கள் திரும்பிவரத் தொடங்கின. ஆதூரத்துடன், ஆவேசங்களை, அலைக்கழிப்புகளை, அபத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டது அவ்வீணை.

இசை மெல்ல அவளை ஒருமுகப்படுத்தியது. கூர்மைப்படுத்தியது. தன் தேடலின், அவசரத்தின், ஓட்டத்தின் லகானை இனம்காட்டியது. இழுத்துப் பிடித்து நிறுத்த வலுகொடுத்தது. முப்பத்தாறாவது வயதில், அந்த உண்மை விளங்கியது: காலகட்ட மாறுதல். இனி தன்னால் எப்படிக் குழந்தையாக ஆக முடியாதோ அதுபோலவே மீண்டும் நடிகையாக ஆக முடியாது. அதன் தன்மையைத் தான் கடந்துவிட்டோம். கடந்துபோன ஒன்றை நினைத்து நினைத்து அசைபோடலாம். பெருமைப்படலாம். ஆனால், மறுகுவதில் என்ன பயன்?

வாழ்க்கை, சிலருக்கு தன் அக்குளில் சினிமாவை வைத்துக் காத்திருக்கலாம். எப்போது வந்தாலும் திறந்துகொள்ளும் கதவாக அது இருக்கலாம். தன்னைப் பொறுத்தவரை அது கடந்து வந்துவிட்ட வாசல். திரும்பவும் யாராவது எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு படிக்கிறோமா என்ன?

தெருமுனையில் வந்து நின்றுகொண்டாள். இங்கே ஒரு பாக்குமரம் இருந்தது ஞாபகம் வந்தது. பெரிய பெரிய இலைகள், காம்பவுண்ட் சுவரை மீறி வெளியே நீண்டிருக்கும். கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். எதிரே உயர்ந்த மேம்பாலம் எழுந்து நின்றது. விளக்குகள் போடப்பட்டிருந்தன. ஓரிரு மோட்டார்பைக்குகள் மேம்பாலத்தின் மேலே போய்க்கொண்டு இருந்தன.

பெரிய மேம்பாலம். இரண்டு முனைகளை இணைக்கும் மேம்பாலம். விரைவாகக் கடக்க் உதவும் மேம்பாலம். அரை மணி முக்கால் மணி நேரம் நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள், மேம்பாலத்தில் ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் மனைவி குழந்தைகளோடு மேம்பாலத்தில் போய்கொண்டிருந்தார். தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றியது. அவருடைய நினைவு மடிப்புகளில் என் இளமை முகம் ஞாபகம் வரலாம். வராமலும் போகலாம்.

வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெறுவதற்கும் இல்லை, இழப்பதற்கும் இல்லை. அவருக்கு நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது. கையை அசைத்தார். அவசரமாகத் தன் மனைவியிடம் சொல்கிறார். அவளும் ஞாபகம் வந்தவள் போல் ஆச்சரியம் பொங்கப் புன்னகைத்தாள். இவளும் புன்னைத்தாள். வண்டி போய்கொண்டிருந்தது.

“ ரசிகர்கள் உங்களை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் நடிக்க வரலாமே” என்றாள் அந்த ஆங்கில நாளிதழின் சினிமா பெண் நிருபர். பழைய நட்பு. இந்த முறை சென்னை வந்தவுடன், ஒரு பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் என்று வந்து பார்த்தாள்.
சினிமாவும் வேண்டாம், பேட்டியும் வேண்டாம் என்றுவிட்டாள். நட்பாகச் சந்திக்க வருவதென்றால், எப்போதும் தன் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும் என்று மட்டும் சொல்லி அனுப்பினாள்.

நண்பர்களை எல்லாம் போய் சந்தித்தாள். தன்னை வைத்துப் படம் எடுத்தவர்களையும் டைரக்டர்களையும் போய் சந்தித்தாள். சிலர் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். ஏனென்று அவள் யோசிக்கவில்லை. கற்பனையில் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. சந்தித்தவர்களும் பெரிதாக ஏதும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

அவளை அறிமுகப்படுத்திய இயக்குநர் முரளி மட்டும் அதிகநேரம் பேசினார். கணவர், குழந்தைகள், ஆர்வங்கள் என்று எல்லாம் விசாரித்தவர், சென்ற முறை தன்னால் உதவ முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார். தான் தொலைக்காட்சித் தொடர்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் நடிக்க வரமுடியுமா என்றும் கேட்டார் முரளி. புன்னகைத்தபடி மறுத்தாள். உன்னைப் போல் நடிகையின் பங்களிப்பு வேஸ்டாகப் போகக்கூடாது என்றார். அவள் மறுபடி புன்னகைத்தாள். சட்டெனத் தோன்றிய கோபத்தை, என்ன நினைத்துக்கொண்டாரோ, மறைத்துக்கொண்டார் முரளி.

தான் நடிக்க வாய்ப்பு கேட்டு வரவில்லை, நண்பர்களை எல்லாம் சந்திக்கவே வந்ததாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபரும் இதையே சொன்னார். தொலைக்காட்சி இன்று பெரிய ஊடகமாக வளர்ந்து நிற்கிறது. உன் நடிப்பு ஆசைக்கு, திறமைக்கு, இங்கே நல்ல வாய்ப்பு என்றார். அப்போதும் புன்னகை சிந்தி மறுத்துவிட்டாள்.

உண்மையில் இது நிர்மலமான பயணம். எதிர்பார்ப்புகள் அற்ற பயணம். கற்பனைகள் அற்ற பயணம். எதார்த்த வாழ்வில் காலூன்றிய பின் மேற்கொண்ட பயணம். தன்னைத் தானே சோதித்துக்கொள்ள மேற்கொண்ட பயணம். எதிர்பார்ப்புகளோடு வந்த முந்தைய பயணங்கள் தந்தது வலியும் வேதனையும்தான். இம்முறை அப்படி இல்லை. மகிழ்ச்சியும் இனிய நினைவுகளுமே மிச்சம்.

வாசல் கேட் அருகே இருந்த அறையில் கூர்க்காவின் மனைவி குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கியிருந்தாள். கம்பளிக் கதகதப்பில் அம்மாவின் அரவணைப்பில் தன்னை மறந்து அக்குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. நிம்மதியான உறக்கம்.

ஃப்ளாட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். செல்போனில் நான்கைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அமெரிக்க எண்கள். கணவர், குழந்தைகள். புதிதாக ஒரு எண்ணும் மூன்று நான்கு முறை அழைத்திருந்தது. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் காத்திருந்தது. அதைத் திறந்தாள் அவள்:

Call immediately. You are my next heroine – Murali.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

அழகான பெண் வேண்டும்! – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 2 comments

சுந்தருடைய கால்கள் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதோ, தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்போதோ, அந்த ஆட்டம் தெரியும். வளைந்த மூங்கில் கழிபோன்ற நீண்ட கால்கள் அவனுக்கு. தாமரை இலையென பாதங்கள் படர்ந்திருக்கும். பலமுறை அவனது அம்மா, அவனிடம் எடுத்துச் சொல்லியும் அவனது கால்கள் நின்றதில்லை. வேட்டியோ கால்சராயோ எதுவானாலும் அவனது கால்கள் தனித்து தென்படும்.

மரியாதையே தெரியவில்லை என்பதுதான் வீட்டில் உள்ளோருக்கு அவன்மீது இருந்த குறை. பெரியவர் உயர்ந்தவர் என்று எவர் வீட்டுக்கு வந்து கூடத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் சுந்தரும் போய் எதிரே உட்கார்ந்துவிடுவான். உட்கார்ந்தவுடன் அவனை அறியாமலே அவனது கால்கள் லேசாக ஆட ஆரம்பிக்கும். பேச்சு சுவாரசியம் கூடும்போது, அந்த ஆட்டம் தாளலயத்தை எட்டிவிடும்.

பேச்சு சுவாரசியம் என்பது அவனைப் பொறுத்தவரை, திருப்பதி மலையின் படியேறுவதுதான். ராஜஸ்தான் பாலியில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் பார்வதி அக்கா, வந்தவுடன் சுந்தரைத் தேடுவாள். கணவரோடு வந்தாலும் குழந்தைகளோடு வந்தாலும் தனியே வந்தாலும் மறக்காமல் திருப்பதி படியேறி போய் பெருமாள் தரிசனம் செய்வது அவளது வழக்கம். துணை சுந்தர்.

அவள் சென்னை வரும்முன்பே, அம்மாவுக்கு கடிதம் போட்டுவிடுவாள். சுந்தரைத் தயாராக இருக்கச் சொல்லி. ”அவனது தயாருக்கு என்ன? எப்போதும் தயார்தான்” என்பாள் பெரியம்மா. அவனுக்கு வேலை இல்லை, படிப்பு இல்லை என்பது பெரியம்மாவின் குறைகளில் தலையானது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள்.

சுந்தர் உடனே மாம்பலத்தில் இருக்கும் தேவஸ்தான அலுவலகம் போய் திருப்பதியில் உள்ள கூட்டம் பற்றி விசாரித்து வந்துவிடுவான். இத்தனைக்கும்,
அதற்கு ஒரு வாரம் பத்து நாள்களுக்கு முன்புதான், திருப்பதி போய்விட்டு வந்திருப்பான் சுந்தர். ஏதேனும் ஒரு உறவினர் கூப்பிட்டிருப்பார். அல்லது, நண்பர்களாகச் சேர்ந்து போயிருப்பார்கள். அக்கா வரும் செய்தி வந்தவுடன், அடுத்த பயணத்துக்குத் தயாராகிவிடுவான்.

விடிகாலை வந்து சேரும் ரயிலுக்கு அதற்கு முன்பே கிளம்பி, சென்ட்ரல் ரயில் நிலையம் போய் நிற்பான். ஆட்டோவோ டாக்ஸியோ, அக்கா கொண்டு வரும் பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப வண்டியை அமர்த்திக்கொண்டு, வீட்டுக்கு அழைத்து வருவான். வந்ததில் இருந்து ஆரம்பிக்கும் புராணம்.

கடந்த முறை பார்வதியோடு படியேறினபோது என்னானது என்று தொடங்கும் பேச்சு. அது ஆறு மாதங்களோ ஒரு வருடமோ முந்தையக் கதையாகக் கூட இருக்கும். ஆனால், அன்றுதான் அக்காவோடு படியேறினதாகத் தொடங்கும். பெரும்பாலும் படியேற முடியாமல் ஒவ்வொரு இடத்திலும் அக்கவும் அத்திம்பேரும் உட்கார்ந்தது, காளி கோபுரத்தில் சூடான பஜ்ஜி சாப்பிட்டது, முழங்கால் முட்டியில் ஏற முடியாமல் திண்டாடியது என்று போய், கடைசியாக பெருமாளைச் சேவித்தது வரை வந்து சேரும்.

கேட்பவருக்கு கொஞ்சம் எரிச்சல் வரவே செய்யும். ஆனால், காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். பல காரணங்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக திருப்பதி படியேறி வந்து வழிபடுகிறேன் என்று வேண்டிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டில் வளரும் குழந்தைகளின் நலன் கருதியே இந்த வழிபாடு, வேண்டுதல் செய்யப்பட்டிருக்கும். அதுவும் உடல்நலன் இதில் மிகவும் முக்கியம். பல சமயங்கள், அவர்கள் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துண்டு துணியில் முடித்து வைத்துவிடுவார்கள்.

இன்னொரு அக்கா டாட்டா நகரில் இருந்து சென்னை வருவாள். அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறை. திருப்பதி படியேற அவளுக்கு பல ஆண்டுகளாக அந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்தது. வீட்டுக்கு வரும் சம்பந்தி வீட்டார், தூரதேச நண்பர்கள் எல்லாம் மறக்காமல் போகுமிடம் திருப்பதி.

அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் திருப்பதிக்கு மட்டும் படியேறி வருவதாகவே வேண்டிக்கொண்டு இருப்பார்கள். முடியிறக்குகிறேன் என்று வேண்டிக்கொள்பவர்களைவிட, இவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

கீழ் திருப்பதி வரை எந்த பஸ்ஸில், எந்த ரயிலில் எப்படிப் போனால், சரியாக இருக்கும்; அப்புறம் மேல் திருப்பதி படியேற எவ்வளவு நேரம் பிடிக்கும்; அல்லது திருப்பதிக் கோவில் முறையில் இருக்கும் தரிசன நேரங்கள் என்னென்ன; அதற்கு எப்படிச் சரியாக திட்டமிட்டால் போய்ச் சேரலாம், முக்கியமாக கீழ்த் திருப்பதி மற்றும் மேல் திருப்பதியில் என்னென்ன உணவகங்களில் நல்ல உணவு கிடைக்கும் போன்ற அத்தனை விவரங்களும் சுந்தரிடம் துல்லியமாக உண்டு.

என்ன ஒரு பிரச்னை என்றால், இதையெல்லாம் அவனிடம் உட்கார்ந்து கேட்டால், ஒன்றும் புரியாது. கோவையாக அவனுக்குச் சொல்லத் தெரியாது. இங்கே ஒன்று சொல்லுவான், திடீரென்று வேறொன்று சொல்வான். இரண்டுக்கும் உள்ள தொடர்பை சேர்க்கவே முடியாது. ”பேசக் கூடச் சரியாத் தெரியல, சரியான அச்சுபிச்சு” என்று பெரியம்மா குறைபட்டுக்கொள்வாள். அதனாலேயே அவனை உடன் அழைத்துப் போய்விடுவது ரொம்பவும் சுலபமான வழியாக வீட்டில் கருதப்பட்டது.

பெரியவர்கள் படியேறும்போது, சுந்தரைப் போல் உதவியானவர்கள் எப்போதும் தேவை. உடலை மட்டும் தூக்கிக்கொண்டு மற்றவர்கள் ஏறினால் போதும். தேவைப்படும் பிற பொருள்கள் எல்லாவற்றையும் சுந்தர் தோளில் சுமந்துகொள்வான். ஒரு கட்டத்தில், கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறவும் உதவுவான். அவசரம் கிடையாது. பரபரப்பு கிடையாது.

ஒவ்வொருவரும் படியேற எவ்வளவு நேரமாகும் என்று வருபவர்களின் உடல்வாகைப் பார்த்தே சுந்தர் சொல்லிவிடுவான். அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பார்வதி நினைத்துக்கொள்வாள். எந்தப் போட்டியாக இருந்தாலும் முதல் ஆயிரம் படிகளுக்குள்ளேயே முடிந்துபோய்விடும். அதற்குமேல் எந்த உடலும் அசதியும் நோவும் கண்டுவிடும்.

பார்வதி அக்காவின் அப்பா, சுந்தருக்குச் சித்தப்பா. அவருக்குத் தம் வக்கீல் தொழிலில் பிரச்னை ஏற்பட்ட போது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்றும் திருப்பதி செல்லத் தொடங்கினார். அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர், திருமலைக்குப் படியேறி வந்து வணங்குகிறேன் என்று வேண்டிக்கொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றாராம். கிட்டத்தட்ட 21 அமாவாசைகள் அவர் படியேறினார். அவரோடு சுந்தரும் துணைக்கு போக ஆரம்பித்தான்.

கீழ்த் திருப்பதியில் இருந்து மேலே ஏற குறைந்தபட்சம் நான்கரை மணி நேரம் ஆகும். சித்தப்பா மெதுவாக ஏறுவார். அவருக்கு அப்போதே வயது ஐம்பதுக்கும் மேல். அவருக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே மலையேறுவார். சுந்தர் அவரோடே இருப்பான். முதலில் ஐந்நூறு படிக்கட்டுகள் வரை உற்சாகம் மிதக்கும், விறுவிறுவென ஏற முடியும். அதன்பிறகுதான் உடலின் உபாதைகள் தெரியத் தொடங்கும்.

அதன்பிறகு நூறு படிக்கட்டுகளுக்கு ஒருமுறை நின்று, உட்கார்ந்து, தண்ணீர் குடித்து, நான்கு வார்த்தை பேசி, சட்டைகளைத் தளர்த்தி விட்டு, காற்றை நெஞ்சுக்குள் வாங்கி, பசுமையைப் பருகி மீண்டும் நடக்கத் தொடங்கும்போது, ஒருவித ஆசுவாசம் வரும். அடுத்த நூறு படிக்கட்டுகளுக்குள் மீண்டும் முட்டுகள் நோகத் தொடங்கும். சித்தப்பா நின்றுவிடுவார்.

சுந்தர் சிரித்துக்கொண்டு நிற்பான். அவன் தோளிதான் தண்ணீர் பாட்டில், ஒரு மாற்று உடை, துடைக்கும் டவல் எல்லாம் கொண்ட பை இருக்கும். அவர்களை கடந்து எண்ணற்ற ஆந்திர கிராம பக்தர்கள் படியேறிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆந்திரப் பெண்கள், ஒவ்வொரு படிக்கட்டாக பொட்டு வைத்துக்கொண்டும், தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கிடுகிடுவென படியேறுவார்கள்.

காளி கோபுரம் தாண்டியபின், ஓரளவுக்கு தரைமட்டமான சாலைப் பயணம் தொடரும். ஒரு கட்டத்துக்குப் பின் சாலையோரம் நடக்கவேண்டும். நடக்க நடக்க மாளவே மாளாதோ என்னும்படியான நீண்ட பயணம் அது.

சித்தப்பாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் நூறு படிக்கட்டுகள்வரை கூட நடக்க முடியவில்லை. நூறு ஐம்பதும் ஆயிற்று. பின்னர் அரை மணி நேரம் ஒரு மலையோரத்தில் அமர்ந்து காற்று வாங்கத் தொடங்கினார். உண்மையில் கடவுள் தன்னைச் சோதிப்பதற்காகவே இத்தனை கடுமையான பயணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவருக்குத் தோன்றியது.

வாழ்வில் இத்தனை நாள் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு படிக்கட்டுகளாயினவோ என்னவோ? கடக்க நடக்க மாளவே இல்லையே? அதைக் கடக்கும் உறுதியும் திண்மையும் தளர்ந்துபோய்விட்டதே? காற்று இன்னும் பலமாக வீசிக்கொண்டிருந்தது.

என்ன விரும்புகிறார் கடவுள்? என் உறுதி, என் முயற்சி, என் கர்வம், என்னுடைய நான் எல்லாவற்றையும் இந்தப் படிக்கட்டுகளில் சமர்ப்பித்துவிட்டு மேலே வரச் சொல்கிறாரோ? சட்டென தான் நிறைய யோசிக்க, இந்த நீண்ட நடை உதவுவதை அவரால் உணர முடிந்தது. இப்படி ஒரே சீராக நான்கு மணி நேரம் யோசிக்கவே முடிந்ததில்லையே.

சுந்தர் காலை ஆட்டிக்கொண்டு படிக்கட்டு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். மேலே படியேறுவோரை அவன் பார்வை தொடர்ந்துகொண்டிருந்தது. நான்கைந்து பையன்கள் எதிர்புறம் கீழே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். சுந்தர் முகத்தில் தெரிந்த அபரிமிதமான அமைதி அவரை வியப்பில் ஆழ்த்தியது. வலி, வேதனை என்று இதுநாள்வரை ஒருமுறை கூட அவன் பாயை விரித்துப் படுத்ததில்லை என்பது ஏனோ அப்போது ஞாபகம் வந்ததுபோல் தோன்றியது.

”கால் வலிக்கலியாடா சுந்தர்?”

”இல்ல சித்தப்பா. நடந்து நடந்து பழக்கமாயிடுச்சு. ”

”நீ மட்டும் வந்தா எவ்வளவு சீக்கிரம் மலையேறுவே?”

”ரெண்டரை மணி நேரம் போதும் சித்தப்பா.”

இவனை இத்தனை ஆண்டுகளாக ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது அவருக்கு மனத்தில் உறைத்தது. எத்தனை ஆண்டுகளாக மலையேறுவான்? அவருக்கு நினைவு தெரிந்து பத்து, பனிரெண்டு ஆண்டுகளாக இருக்கலாம். இவனும் தன்னுடைய சின்ன மகளும் ஒரே வயது.

ஆறாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. கடலூர் பக்கம் ஏதோ ஒரு ஊரில் அவன் அப்பாவுக்கு அரசு வேலை இருந்தது. அவர் காலமானபின்பு, இவனை அழைத்துக்கொண்டு இவனது அம்மா சென்னை வந்து சேர்ந்தது, அவர்களது பெரிய வீட்டின் ஒரு சிறு அறையில் பின்னால், இவர்களைக் குடிவைத்தது எல்லாம் ஒரு கனவுபோல் அவருக்கு ஞாபகம் வந்தது.

இன்றுவரை, இவனது அம்மா தனக்கென்றோ, இவனுக்கென்றோ எதுவுமே வந்து கேட்டதில்லை. வக்கீல்கள் நிறைந்த குடும்பத்தில், இப்படி ஒரு ஜீவன் இருப்பதே யார் கவனத்திலும் படவில்லை. ஆனால், அலுவலகத்தில் அவன் நிற்பதையும் ஏதோ உதவுவதையும் அவர் கவனித்திருக்கிறார். எல்லாம் வெளுத்துப் போன சித்திரம் போலிருந்தது.

அவ்வப்போது, அவன் ஒரு அச்சுபிச்சு, பேசத் தெரியவில்லை, காரிய சாமர்த்தியமில்லை என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை காதில் வாங்கியிருக்கிறார். ஆனால், அது மூளையின் ஏதோ ஒரு அடுக்கில் போய் உட்கார்ந்திருப்பது இப்போது நினைக்கும்போது வெளியே வரத் தொடங்கியது. யாரும் அவனைப் பள்ளிக்கூடம் போவென்றோ, படியென்றோ வற்புறுத்தியதில்லை. பலருக்கும் சுந்தர் செளகரியமாக இருந்திருக்கிறான். எதுவேண்டுமானாலும் ஓடிப்போய் செய்துதரக்கூடிய செளகரியம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.

”மாசத்துக்கு எத்தனை தடவைடா திருப்பதி வருவே?”

”ரெண்டு மூணு தடவை வந்துடுவேன் சித்தப்பா..”

”பெருமாள்கிட்ட என்ன வேண்டிப்ப?”

”எங்கம்மா மாதிரி அழகான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கணும்.”

வீட்டினர் நடுவே இவன் இப்படிப் பேசியிருந்தால், அவன் அம்மாவே கோபப்பட்டு இருக்கக்கூடும். இப்படி வளர்ந்து நிற்கும் ஒருவன் பேசும் பேச்சாக இது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. அசட்டுத்தனம் என்றிருப்பார்கள். சித்தப்பா அப்போதும் எதுவும் பேசவில்லை.

அடுத்த அமாவாசைக்குத் திருப்பதி பயணம் அவர் மேற்கொள்ளும்முன் வேறொரு விஷயம் நடந்தது. ஒரு நாள் மாலை அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, கூரியர் எடுப்பவன் ஒருவன் கதவுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். அவன் போனபின்பு, அலுவலக குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.

”தினமும் எத்தனை கூரியர் அனுப்புவீங்க கணேசன்?”

”கட்சிக்காரங்களுக்கு லெட்டர் போட்டுடுவோம் சார். கூரியர்ல அனுப்பறது ஒரு நாலைஞ்சு கவர்ங்க இருங்க சார். ”

”நாளைலேருர்ந்து மெட்ராஸ்குள்ள அனுப்பற கூரியரையெல்லாம் சுந்தர்கிட்ட கொடுத்துடுங்க. அவன் போய் டெலிவரி பண்ணட்டும். ”

அப்போது ஆரம்பித்தது அவன் பயணம். இப்போதும் நீங்கள் அவனை ஏதேனும் ஒரு சாலையில் பார்க்கலாம். மழையோ வெயிலோ எதுவானாலும், வேட்டியை கொஞ்சம் மேலே கட்டிக்கொண்டு, இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகள் நிறைய கடிதங்கள் தொங்க, விறுவிறுவென உங்களை ஒருவர் கடந்து போனால், ஒரு நிமிடம் நின்று பாருங்கள். கால்கள் கொஞ்சம் வளைந்து மூங்கில் கழி போல் இருக்கும். தாமரை இலையென பாதங்கள் படர்ந்து இருக்கும்.

இப்போதும் பேச்சில் கொஞ்சம் அச்சுபிச்சுத்தனம் உண்டு. ஆனால், அவன் ஆசைப்பட்டதில் இரண்டாவது நடந்துவிட்டது. விரைவில் முதலாவதையும் நடத்திவிடவேண்டும் என்று அவன் அம்மா மெனக்கட்டுக் கொண்டிருக்கிறாள். நல்ல அழகானப் பெண் இருந்தால், கொஞ்சம் சொல்லுங்களேன், பிளீஸ்!

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

Ennamma Raani: TMS

February 4, 2009 Leave a comment

Engamma Rani
Listen on Posterous

எங்கம்மா/என்னம்மா ராணி! பொல்லாத மேனி :: சங்கே முழங்கு டி எம் எஸ் எம் ஜி ஆர்

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized