Archive
Archive for March 18, 2009
நிசி அகவல்: அய்யப்பமாதவன்
March 18, 2009
1 comment
நிசி அகவல் – பக்கம் 48ல்
ஒரு மகிமை
அவள் கோயம்பத்தூருக்கு போய்விட்டாள்
நான் ஒழுங்காக இருந்த
வீட்டினில் விழுந்துகிடந்தேன்
நண்பர்கள் வந்துவிட்டனர்
ஒரே குடி கும்மாளம்
சிகரெட்டுக்கள் அணைக்கப்பட்டுவிட்டன
நான் அதி சுதந்திரவாதியாய் இருந்தேன்
இஷ்டம் போல்
என்னை வளைத்தேன் என் மூளையையும்
அவள் வேறொரு இடத்தில் உழன்று படுத்திருந்தாள்
நான் நண்பர்களுடன் குப்புறப் படுத்திருந்தேன்
அழகிய கனவான்றில் ஒரு பெண்ணுடன்
சல்லாபித்துக்கொண்டிருந்தேன்
புதிதான பெண் புதிதான நிர்வாணம்
புணர்தலில் உலகத்தைவிட்டு
விடைபெற நினைத்தேன்
விடிந்தபோது நண்பர்கள்
தலைதெறிக்க பணிக்கு திரும்பினர்
நான் வீட்டை ஒழுங்குக்கு கொண்டுவந்தேன்
ஊரிலிருந்து திரும்பியவள்
ஒரு சிகரெட் துண்டைக் கண்டுபிடித்துவிட்டாள்
நூல் நிசி அகவல்
எழுத்து அய்யப்பமாதவன்
வௌயீடு ஆழி பதிப்பகம்
விலை ரூபாய் 60.00
Categories: Authors, Books
Aiyappa Madavan, Kavidhai, Poems, X அய்யப்பமாதவன்
Recent Comments