Archive

Archive for April, 2009

Indru Poi Nalai Vaa – Ammadi Chinna

April 30, 2009 Leave a comment

Ammadi Chinna by Ilaiyaraja
Listen on Posterous

இன்று போய் நாளை வா இளையராஜா :: பாக்யராஜ் – அம்மாடி சின்னப் பாப்பா!

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Mann Vaasanai – Aanantha Then Sinthum

April 30, 2009 Leave a comment

Aanantha Then Sinthum by Ilaiyaraja
Listen on Posterous

மண் வாசனை :: இளையராஜா – ஆனந்தத் தேன் சிந்தும் – பாரதிராஜா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Journalist Annadurai: MS Venkatachalam

April 29, 2009 Leave a comment

பத்திரிகையாளர் அண்ணா

எம்.எஸ். வேங்கடாசலம்

ஓம்லேண்ட்(Homeland) என்னும் ஆங்கில வாரஇ இதழை 1957ம் ஆண்டு ஜனவரித் திங்களில் தொடங்கிட அண்ணா திட்டமிட்டிருந்தார். அதற்இகான அடிப்படைப் பணிகள் நிறைய இருந்தமையால், அவருஇடைஇஇய விருப்பத்தின்படி 1956 நவஇஇம்இஇபர் மாதத்திலேயே அதன் துணை ஆசிரியராக நான் பொஇறுஇப்இஇபேற்றேன். இடையில் பொதுத்இதேர்தல் குறுக்கிட்டதால் 1957 ஜுன் திங்களில்தான் இதழ் வெளியிடப்பட்டது. துவக்க காலத்தில் ஆதிராவிடநாடு இதழுக்கான அலுவலகமே ‘ஓம்லேண்ட்’ இதழுக்கும் அலுவஇலகமாக விளங்கியது. திராவிட நாடு அலுவல்களையும் வரவு செலவுகளையும் நிர்வகித்து வந்த ஈழத்து சிவானந்த அடிகளே இதையும் நிர்வகித்து வந்தார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஏடுகள் – நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகள் – அனைத்தும் வரவழைக்கப்பட்டன. டெல்லிஇயிலிருந்து வெளிவந்த ‘இந்து ஸ்தான் டைம்ஸ்’ (Hindustan Times), பம்பாயிலிருந்து வெளிவந்த ‘டைம்ஸ் ப் இண்டியா’ (Times of India), கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘அமிர்த பசார் பத்திரிகா’ (Amrita Bazaar Patrika), பெங்களுரிலிருந்து வெளிவந்த ‘டெக்கான் எரால்ட்’ (Deccan Herald), நாகபுரியிலிருந்து வெளியிடப்பட்ட ‘இடவாடா’ (Hitavada) ஆகிய நாளிதழ்கள் அனைத் தும் வரவழைக்கப்பட்டன. இலண்இடனில் இருந்து ‘மான்செஸ்டர் கார்டியன்’ (Manchester Guardian), மலேசியாவிலிருந்து ‘தமிழ் முரசு’ ஆகியவையும் வரவழைக்கப்பட்டன. இவை தவிர ‘தாட்’ (Thought), ‘ராடிக்இகல் ஹியூமனிஸ்ட்’ (Radical Humanist), ‘மேன்கைன்ட்’ (Mankind) கிய இதழ்களும் வரவழைக்கப்பட்டன. அந்தக் காலத்திலேயே இந்த இதழ்களுக்கென்று செலவிடப்பட்ட தொகை மாதம் சுமார் ரூ. 300-க்கு மேல்!

நாள்தோறும் அவற்றில் வெளிவந்த செய்திகளில் முக்கியமானவற்றைக் குறித்து வைத்து அண்ணாவிடம் காண்பிக்க வேண்டும். அவற்றை யெல்லாம் பார்த்துவிட்டு, அண்ணா அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கச் சொல்வார்; ஆங்கிஇலத்தில் உள்ளதைத் தமிழில், தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில்! இதுதான் துவக்கத்தில் எனக்கு இடப்பட்ட பணி, பயிற்சி!

இவற்றிற்கிடையே எப்படியாவது கட்டுரைகள் எழுதவேண்டும்; அவை திராவிடநாடு இதழில் வெளிவரவேண்டும் என்பது எனது உள்ளக்கிடக்கை. நான் ஏற்கெனவே படித்தும் எழுதியும் பழக்கப்பட்டிருந்த தமிழ் நடைக்கும், திராவிடநாடு இதழில் வெளிவந்த தமிழ் நடைக்குமிடையே வியப்பூட்டும் வேறுபாடுகள் இருந்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால், தொடக்க காலத்தில் எனக்கு அது ஒரு புது மொழி போலவே தோன்றியது. அண்ணாவின் கட்டுரைகளிலிருந்த அடுக்குச் சொற்கள், தொடர்கள், அவற்றிலிருந்த சரளமான ஓட்டம் சிந்தையைத் தொடவல்ல நளினம்; இவற்றையெல்லாம் பெருமளவு எதிரொலிக்கின்றவகையில் அந்த இதழின் துணை ஆசிரியர் இராம.அரங்கண்ணல் அவர்கள் தீட்டி வந்த பல்வேறு கட்டுரைகள்; இவை யனைத்தையும் மிகவும் ஊன்றிப் படித்தேன், ஒன்றுவிடாமல்! அவற்றை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டேன், மெல்ல மெல்ல!

மிகுந்த ஆர்வத்துடன் ஓரிரண்டு திங்கள்களில் எழுதத் தொடங்கினேன். ஆனால், எதை எழுதுவது என்பது சற்றும் புரியாத நிலை. மிக முக்கியமான நிகழ்ச்சி பற்றியோ, செய்தி பற்றியோ எழுதத் தோன்றும். அவற்றைப் பற்றி அண்ணா எழுதியிருப்பார்! அல்லது அரங்கண்ணல் எழுதியிருப்பார். அவர்கள் அதுவரை எழுதிடவில்லை யெனினும், அவற்றைப் பற்றி, கை தேர்ந்த எழுத்தாளர்களான அவர்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று கருதி, எனக்குள் அப்போதைக்கப் போது ஏற்படும் ஆசைகளை அடக்கிக் கொள்வேன். எனவே, மிகச் சாதாரண விஷயத்தை மட்டும் எனது எழுத்துக்குக் கருப்பொருளாக எடுத்துக் கொள்வேன்.

அப்படித் தேடிக்கொண்டிருந்த வகையில் நல்ல கருப்பொருளொன்று எனக்குக் கிடைத்தது – அல்லது அதை நல்ல கருப்பொருள் என்று நானே கருதிக்கொண்டேன். அன்றைய சோஷியலிஸ்ட் கட்சியின் மாத இதழான ‘மேன்கைண்ட்’ ஆசிரியராக, கட்சியின் தலைவராக அப்போது இயங்கிவந்த இராம் மனோகர் லோகியா இருந்தார். அவர் நல்ல எழுத்தாளர் என்றும் தரமான பேச்சாளர் என்றும் பெயரெடுத்தவர். ஆங்கிலேயருக்கு மட்டுமன்றி ஆங்கிலத்துக்கும் தான் எதிரி எனக்காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். ‘ஆங்கிலமே வெளியேறு’ என்று குரலெழுப்பி, அதற்கென்று ஓர் இயக்கத்தைக்கூட நடத்தி வந்தார். இந்தியை அரியணை ஏற்றிட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று சூளுரைத்தவர்.

அந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, தி.மு.க. கட்சியைத் தாக்கியும் கேலி செய்தும். ‘தி.மு.க. பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், அது மக்கள் இயக்கமல்ல – மக்களிடம் சென்றடையவில்லை! முதலியார் என்ற குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மட்டுமே இதற்கு தரவு அளிக்கின்றனர். தி.மு.கழகம் என்றால் ‘முதலியார் கட்சி’ என்று கூடத் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்படுகிறது’ என்று எழுதியிருந்தது, அந்த ஏடு! இது எனக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன்; எழுதித் தள்ளினேன்; ஆத்திரம் தீர! பின்னர் அடிகளிடம் கொடுத்தேன், அவருடைய ஒப்புத லுக்காக! அவர் அண்ணாவிடம் கொடுத்தார். அதைப் படித்த அண்ணா சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டார்: “இந்த ‘மேன்கைண்ட்’ பத்திரிகை தமிழ்நாட்டில் எவ்வளவு பிரதிகள் விற்பனை ஆகுமென்று நினைக்கிறாய்? அதிகமாகப் போனால் 50 போகுமா?”

“ஆம், அண்ணா!”

“50 பிரதிகள் விற்பனை என்றால், அதிகமாகப் போனால் 100 அல்லது 200 பேர் அதைப் படித்திருப்பார்களா?”

“ஆம், அண்ணா!”

\ “நமது பத்திரிகை எவ்வளவு விற்கிறது?”

“சுமார் 10,000 பிரதிகள்!”

“படிப்பவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

“ஒரு இலட்சத்தைத் தாண்டக் கூடும்.”

“சுமார் 100 பேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை நீ ஒரு இலட்சம் பேருக்கு எடுத்துச் சொல்லுகிறாயே, என்ன புத்திசாலித்தனம் இது?” என்று கேட்டுவிட்டு, “எழுதுவதற்கு ஒரு இலக்கணம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது எழுத்து நாம் கொண் ட கொள்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும், வலுவேற்றும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்! பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே எழுதவேண்டும். கண்டவற்றை எழுதி நம்முடைய நேரத்தையும் வாசகர்களுடைய பொன்னான நேரத்தையும் வீணாக்கக் கூடாது” என்றார்.

எவ்வளவு பொன்னான கருத்து, இது! எழுத்துலகில் ஈடுபடுவோருக்குத் தாரக மந்திரமன்றோ இது?

‘திராவிடநாடு’ இதழைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் பொங்கல் மலரை மிகச் சிறப்பாகத் தயாரிப்பது வழக்கம். அரங்கண்ணல் மற்றும் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவற்றில் இடம்பெறும். அவற்றைத் தேர்வு செய்வதில் அண்ணா மிகுந்த கவனம் செலுத்துவார்.

Selvi – Kuyila Kuilu

April 27, 2009 Leave a comment

Kuyila Kuilu by Ilaiyaraja
Listen on Posterous

செல்வி :: குயிலு குயிலு – இளையராஜா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Sri Raghavendrar – Rama Naamam

April 26, 2009 Leave a comment

Ramana Naam by Ilaiyaraja
Listen on Posterous

ஸ்ரீ ராகவேந்திரா – ராம நாமம் ஒரு வேதமே :: இளையராஜா ரஜினி

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Atharmam – Muthumani Muthumani

April 26, 2009 Leave a comment

Muthumani Muthumani by Ilaiyaraja
Listen on Posterous

அதர்மம் :: முத்துமணி முத்து மணி – இளையராஜா : முரளி & ரஞ்சிதா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Agal Vilakku – Etho Ninaivugal

April 26, 2009 4 comments

Etho Ninaivugal by Ilaiyaraja
Listen on Posterous

அகல் விளக்கு :: இளையராஜா – ஏதோ நினைவுகள்

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Aayiram Nilave Vaa – Devathai Ilam Devi

April 26, 2009 Leave a comment

Devathai Ilam Devi by Ilaiyaraja
Listen on Posterous

இளையராஜா – தேவதை இளம் தேவி

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

Raja Kaiya Vachha – maruthani

April 26, 2009 Leave a comment

Maruthani by Ilaiyaraja
Listen on Posterous

மருதாணி அரைச்சேனே – இளையராஜா :: ராஜா கைய வச்சா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized

December Pookal – Maalaigalidam Maruthu

April 26, 2009 Leave a comment

Maalaigalidam Maruthu by Ilaiyaraja
Listen on Posterous

மாலைகள் இடம் மாறுது – டிசம்பர் பூக்கள் :: இளையராஜா

Visit: http://snapjudge.blogspot.com/
Tamil Blog: http://snapjudge.wordpress.com/

Categories: Uncategorized