Charu Nivedhita, Paithiyakkaaran, Jeyamohan, French Translations by நாகார்ஜுனன்
எழுத்தாளர் சாரு நிவேதிதா இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதி தற்போது வெளியிட்டிருக்கும் Mummy Returns பகுதி-1 பதிவை வாசித்தேன். இரு ஆண்டுகள் முன்பு 2007 செப்டம்பர் தீராநதி இதழில் கடற்கரய் என்னுடன் நிகழ்த்திய நேர்காணலில் என்னை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை இது.
அத்துடன், “இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்துகொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்” என்கிறார் சாரு நிவேதிதா.
பைத்தியக்காரன் என்பவர் சாரு நிவேதிதா குறித்து எழுதிய இந்தப்பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் உள்ள சாரு குறித்த பல கருத்துக்களுடன் எனக்கு ஒப்புதலும் இல்லை. பைத்தியக்காரன் என்பவர் எழுதும் எந்த விஷயத்துக்கும் என்னைப் பொறுப்பாக்க முடியாது. பொறுப்பாக்குவதில் பொருளில்லை.
பைத்தியக்காரன் என்பவருக்கு ஏற்கனவே எழுதிய மின்-அஞ்சலில், “சாரு நிவேதிதாவுக்கு நான் பதில் எழுதின பிறகு, அதை அவர் பிரசுரித்த பிறகு, இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம்” எனவும் “சாரு நிறைய வாசிக்கக்கூடியவர். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை என்னுடன் நெருங்கிப் பழகியவர். ஒரே தலைமுறையைச் சார்ந்த பலரும் பரஸ்பரம் பலரின் எழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டோம். அது அருமையான காலகட்டம், இடைநிலை-இதழ்களின் கை ஓங்காத காலகட்டம், அப்போது யாருக்கு யார் யாரை அறிமுகம் செய்தோம் என்பது அவ்சியமற்றதல்லவா..” என்றும் எழுதியிருக்கிறேன்.
இப்போது பின்வரும் மின்-அஞ்சலை சாரு நிவேதிதாவுக்கு அனுப்பியிருக்கிறேன்.
அன்புள்ள சாரு
(தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் குறித்த) என் பதிலை வெளியிட்டதற்கு நன்றி. இத்துடன் இந்த விஷயம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தேன்.
தற்போது மம்மி ரிட்டர்ன்ஸ்-1 பதிவில் என்னைப் பற்றி இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியதை வெளியிருட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறீர்கள்:
“இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்து கொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்.”
என்ன சொல்வதென்றே தெரியவில்லை! பைத்தியக்காரன் என்பவர் எழுதிய பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் வந்த விஷயங்களுடன் எனக்கு எவ்வித ஒப்புதலும் இல்லை. என்னை நோக்கிய உங்கள் எதிர்வினை அவசியமற்றது.
இதற்குமேல் நேரில்தான் பேசவேண்டும்.
தங்கள்
நாகார்ஜுனன்
சாரு நிவேதிதாவுடன் பேசிவிடலாம் என என்னிடமிருந்த அவருடைய கையகத்தொலைபேசி எண்ணை அழைத்தேன். தொடர்பு சரிவரக் கிட்டவில்லை. என்மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். என்மீது கோபம் தேவையில்லை, அவசியமற்ற கோபம், ஆற வேண்டும் என விரும்புகிறேன். – நாகார்ஜுனன்.
Recent Comments