Ranganna troupe’s drama :: N. Swaminathan
ரங்கண்ணா குரூப் ‘இதொ அதோ’ன்னு கீரி பாம்பு சண்டைவிடறவன் மாதிரி ஏதோ
சொல்லிட்டு லீவுல போயிட்டாங்க. இந்தக் கவலையோட நான் தூங்கறச்சே
என் கனவுல வந்து ஒரு நாடகம் போட்டாங்க. அதான் இது….
காட்சி – 1
நியு ஜெர்சியில் பல குடும்பங்கள் வாழும் ஒரு அபார்ட்மென்ட்.
ரங்கண்ணாவின் குடும்பத்தில்:
ரங்கண்ணா: ஹா, ஹ,ஹ், ஹா, ஹா…
மங்களம் : அப்படி பேப்பரிலே சிரிப்பா என்ன போட்டுருக்கான்?
ரங்: இந்த கோர்/புஷ் தேர்தல் சர்தார்ஜி ஜோக்கு மாதிரி ஆயிட்டுது.
முதல்ல ஓட்டு வித்தியாசம் 2000ன்னான், அப்புறம், 900ன்னான்,
அப்புறம் 370ன்னான், இப்ப 228தாங்கறான்…
மங்: இதுக்கும் சர்தார்ஜிக்கும் என்ன சம்பந்தம்?
ரங்: ஒரு சர்தார்ஜி பிள்ளைய பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாசில சேத்தான்.
அங்க ஒரு மாசத்துல பையன் மக்குன்னு தெரிஞ்சு ஆறாங்கிளாசுக்கு தள்ளினா.
ஒரு மாசம் கழிச்சு இதுக்கு அவன் லாயக்கில்லனு அஞ்சாம் கிளாசுக்கு
தள்ளிட்டா. அங்க போனா ஒரு மாசத்துல நாலாங்கிளாசுக்கு போன்னு
அனுப்பிட்டா. சர்தார்ஜிக்கு கவலை வந்துடுத்து. சர்தாரிணிட்ட,
உம் புள்ள பெயிலாகி பின்னால பின்னால வர வேகத்த பாத்தா ரொம்ப
கவலயாயிருக்கு. எதுக்கும் நீ உன் பைஜாமாவை இறுக்கி முடிஞ்சிக்கோன்னான்…
மங்: சீ. சீ. உங்களுக்கு ஜோக் சொல்றதுக்கு ஒரு வெவஸ்தயே கெடையாது
நடுக்கூடத்துல சொல்ற ஜோக்கா இது…
சாந்தி/தங்கராஜன் குடும்பம்
சாந்தி: என்னங்க பிரியாணி எப்படி இருக்கு ?
தங்கராஜன்: ரொம்ப நல்லாருக்கு வன்கேழி பிரியாணி.
சாந்தி: என்னங்க, அதுக்குள்ளயும் ரெண்டு காலைத்தின்னாச்சா..
வன்கேழிங்கிறீங்க. எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க.
பண்ணினவளுக்கு பானையும் கரண்டியும்தானா?
அண்ணாமலை வீட்டில்
அண்ணாமலை: எப்படி தத்துவராயர் சுமேரு தமிழைவிடப் பழங்கால மொழின்னாரு?
சுமேரு அருணகிரியார் காலத்ததுன்னு தெரியும். முருகந்தானே
அருணகிரிட்ட “சும்மேரு, சொல்லற”ன்னு சொன்னரு. அவருக்கு நெனவா
எழுதிக்கேக்கணும்.
(மணி சுவாமிநாதன் தலைவிரிகோலமாக ஓடி வருகிறார்)
அண் : என்ன மணி, சட்டையெல்லாம் கிழிஞ்சிருத்து? சண்டை போட்டியா?
மணி: இல்லீங்க. தெருவில ஒத்தரு மணி, மணின்னு கத்துனாரு. என்ன வேணும்
நாந்தான் மணின்னேனா. அவ்வளவுதான். எனக்கு மணியாட்ட உரிமை இல்லியாடான்னு
கத்தி என்னை உலுக்கி சட்டைய கிழிச்சிட்டார். மணி ஆட்டரதே வாழ்வின் குறிக்கோளா
அலையுறாரேன்னு வருத்தமா இருக்கு. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு மணிய
வாங்கி குடுத்து ஆட்டிக்கிட்டு கெடய்யான்னு சொல்லிடலாமா? ரங்கண்ணா
குடுப்பாரா?
அண்: ரங்கண்ணாவா. அவருதான் முன்னமே சொல்லிட்டாரே,
வேற வேல இல்லியாடா ஒங்களுக்குனு.
(ஒரு கார் வந்து நிற்கும் ஓசை. அதிலிருந்து இறங்குகிறார் சர்தார்ஜி.
கையில் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டு நம்பரை பார்க்கிறார்.)
மணி: சார், சர்தார்ஜி வரான், அன்னிக்கு சொன்னேனே, ஒரு சர்தார்ஜி ஜோக்…
ஒரு சர்தார்ஜி டிஜிட்டல் வாட்சு வாங்கினான். அதை உத்து பார்த்தான். என்னடா
பன்னண்டு நம்பரில்ல, நாலுதான் இருக்கு. மணி, நிமிஷம் காட்டற முள்ளை வேற
காணும்னு கத்தினான் …
இத அவருகிட்ட சொல்லிடாதீங்க..ப்ளீஸ்..
மங்களம் எட்டி பார்க்கிறாள்:
மங்: நீங்களும் ஒங்க ஜோக்கும். அப்பவெ சொன்னேன் இந்த பாழாப்போற
சர்தார்ஜி ஜோக் வாணாம்னு, கேட்டேளா ? இப்ப சர்தார்ஜி வந்துட்டான், போட்டு
மொத்தப்போறான், கையில பெரம்பு வெச்சிருக்கான்.
சாந்தி பார்க்கிறாள்:
சா: பாருங்க, சர்தார்ஜி வரான். ரங்கண்ணா வீட்ல இல்ல நுழையறான்? ஏன் ?
தங்க: ரங்கண்ணா அவன் கிளப்புள குடிச்ச பீருக்கு காசு வசூலிக்க வரானா?
சா: என்னங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணும் பின்னால ஆடிக்கிட்டு வருது?
தங்க: டான்ஸ் ஆடற பொண்ணா இருக்கும்.. நீ போயி பாக்கி பிரியாணிய
தின்னுமுடி. பார்வையை மறைக்காத. வெள்ளக்காரி வெள்ளக்காரிதான்..
சா: ஜொள்ளு விடாதீங்க. அவளப்பாத்தா கர்ப்பிணி பொண் மாதிரி இருக்கு.
தங்க: சர்த்தான். சர்தார்ஜி கிளப்புல ஒரு உண்டி இருக்கு. Place your
contributions in the slot னு அது மேல எழுதி வெச்சிருப்பான். ரங்கண்ணா அதை
தப்பா புரிஞ்சிண்டு டான்சர்கிட்ட ஏதோ சில்மிசம் பண்ணி இது மாதிரி ஆயிருக்கும்.
அம்மணி ய டே, கீப்ஸ் த டாக்டர் அவேன்னு தெனாவெட்டா சொல்றச்சயே
நெனச்சேன். நெள, ஹி ஹாஸ் டு ரீப் வாட் ஹி ஸோடு. வா போயி வேடிக்க
பாக்கலாம். அண்ணாமலை சாரயும் மணியயும் அழச்சிட்டு வரேன்.
மணி: அண்ணாமலை சார். சர்தார்ஜி, ஒரு வெள்ளக்காரி, சர்தார்ஜியோட
புள்ள மூணுபேரும் வராங்க.
அண்ணா: இது ஒரு புது சர்தார்ஜி ஜோக்கா? கேட்டதில்லயே.
மணி: இல்ல சார் நெசம்மாவே இங்க வராங்க. பாருங்க.
ரங்கண்ணா வீட்டுக்கு போறாங்க.
அண்ணா: சர்தார்ஜி புள்ளயா?
மணி: ஆமா சார் அவனுக்கும் தாடி இருக்கு. ஒரு சர்தார்ஜி பொண்டாட்டிய
அடிச்சானாம், பொறந்த கொழந்தைக்கு தாடி இல்லைனு.
இது என் கொழந்த இல்லடின்னு. என் குழந்தன்னா தாடி எங்க
போச்சுன்னு கத்தினானாம்.
அண்ணா: நீ அவன்கிட்ட அடிபட்டு சாகப்போறே. இந்த ஜோக்கெலாம்
வாணாம். வா போயிப் பாக்கலாம்.
மணி: சர்தாருக்கு தமிழ் தெரியாது.
அண்ணா: அதான் தப்பு. அவன் கிளப்புல ஓசில பீர் குடிக்கலாம்னு நான்
போயி ரங்கண்ணா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு
“விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்றூ”ன்னு
சொன்னேன். அதக்கேட்டுட்டு சர்தார்ஜி ஒரு ஸ்பூன் பீரை என் வாயில் ஊத்திட்டு:
“தினைத்துணையாக் கொடுப்பினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்”னுட்டு
போயிட்டான். யமகாதகன். வா போகலாம்.
அனைவரும் ரங்கண்ணா வீட்டுக்கு விரைகிறார்கள்.
காட்சி 2
ரங்கண்ணா: வா, சர்தார், வா… மங்களம் காபி குடு.
சர்தார்: நமஸ்தே ரங்கா…
தங்கராஜன், சாந்தி, அண்ணாமலை, மணி உள்ளே வருகிறார்கள்
தங்க: ரங்கண்ணா, நான் சும்மாத்தான் வந்தேன்..
அண்ணாமலையும், மணியும் இருக்காங்க, ஒரு கை கொறையுது,
சீட்டு ஆட்டம் போடலாம்னு..
ரங்கா: ஒக்காருங்க. சர்தார்ஜி என்னை பார்க்க வந்திருக்கார்.
சர்தார்: என்ன அன்னாமலே, கையில் என்ன பொஸ்தகம்? ஞான சைத்தான்யம்?
அண்ணா: இந்த மாதிரி வம்பு வரும்னுதான் அவர் தமிழ்லயும் போட்டிருக்கார். அது ஞான
சைதன்யம்.
தங்க: ரங்கண்ணா உங்களுக்கு இப்படி ஆகும்னு நெனக்கில. அப்பவே சொன்னேன்
பாத்து கைய விடுங்க, எந்த புத்துலே எந்த பாம்பு.. LeTex பத்தி சொன்னேன். நீங்க
கண்டுக்கல. எத்தினி மாசம் இப்ப? மாமிக்கு விசயம் தெரியுமா?
ரங்கா: தங்கராஜு நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. மொதல்ல சர்தார்ஜி என்ன
விசயமா வந்தாருன்னு கேட்டுட்டு அப்புறம் ஒங்கிட்ட பேசரேன். என்ன விசயம் சர்தார்?
சர்தார்: எல்லாம் இந்த சைத்தான் கி பச்சாவால வந்துது. இதொ இருக்கானே, எம்புள்ள .
நியுயார்க்குல படிக்க அனுப்பி இருந்தேன். திடீர்னு வந்து நிக்கறான் இந்த வெள்ளைக்கார
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு. வேண்ட்டம்னு சொன்னா கேக்கல.
ரங்கா: இது ஒம்புள்ளயா ! வளந்துட்டானே. சின்னப்பையன இருக்கறச்சே பாத்தது.
நாளக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட், அங்கிள், அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு கேப்பான்.
சர்தார்ஜி பையன்: அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு இன்னம் எனக்கு தெரியல அங்கிள்.
ரங்கா: ஒனக்கு மத்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. சர்தார், வளைகாப்பு, சீமந்தம்,
பேரனுக்கு காதுகுத்தல் கல்யாணம் பண்ற ஸ்டெஜில வந்து கல்யாணம்னு சொல்றீங்க…
பொண்ணு கர்ப்பமா இல்ல இருக்கு?
சர்தார்: ஆமாம், ரங்கண்ணா, 6 மாசமாம் ? ஆனா அவ வயத்துல இருக்கறது என் பையனோட
கொழந்த இல்ல.
அண்ணா: சர்தார், என்ன இது அசிங்கமாஅநியாயமா இருக்கு. நீங்க தப்பு பண்ணிட்டு ஒங்க பையனுக்கு
கட்டி வெக்கறது மொறையா?
சர்தார்: நான் தப்பு பண்ல. என் பையனும் தப்பு பண்ல.
சாந்தி: எனக்கு தலை வெடிச்சிடும்போல இருக்கு. அந்த பொண்ணு யாரால கர்ப்பமானா?
சர்தார்: ரங்க…
தங்க: (ரங்கண்ணாவை கண்னால் பார்த்துகொண்டே) சாந்தி, நான் நெனச்சது சரிதான்
மங்களம் மாமிய புடிச்சுக்க, மயக்கம் போட்டு விழுந்திரப் போறாங்க.. இந்த சேதியெல்லாம்
அவங்க தாங்க மாட்டாங்க..
ரங்க: என்ன அபாண்டமா இருக்கே?
சர்தார்: ரங்கண்ணா அதைத்தான் சொல்ல வரேன். அவளோட பாய் பிரண்டு பால்.
முழு பேரு Paul Gold King. அவன் பிள்ளைதான் இந்தப்பெண் வயத்துல இருக்கு.
சாந்தி: பால் கோல்ட் கிங் – அப்ப பால் தங்கராஜனா? என்னங்க இது உங்களுக்கு
நல்லாயிருக்கா ? லேட்டஸ்ட் லேட்டக்ஸ்னு ஏதோ சொல்லிட்டு, எனக்கு குழந்தையே
இல்ல. இந்தபொண்ணுக்கிட்ட போயி வெக்கமில்லாம…
சர்தார்: நீங்க அழாதீங்க. அந்தப் பால் இவரு இல்ல. அது வெள்ளைக்கார பால்.
மங்களம்: கல்யாணத்துக்கு முன்னால..சே..சே.. கேக்கவே நாராசமா இருக்கு.
இது தப்பு இல்லையா? அவளொட பாய் பிரண்டுக்கு கட்டி வெக்கரதுதான் மொறை.
சர்தார்: அவன் எங்கயே ஓடிப்போயிட்டானாமே? என் புள்ள இவளுக்கு வாழ்வு கொடுக்கப் போறானாம்.
புத்தி சொல்றதுக்கு ஒன்னைவிட்டா வேறு யாரு இருக்கா? ரங்கண்ணா நீதான் என் புள்ளக்கி
நல்ல புத்தி சொல்லி திருத்தணும். அதுக்குதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.
ரங்க: நான் என்ன செய்யறது ? தங்கராஜன் என்ன பண்லாம்னு சொல்லுங்க.
தங்க: வேணுன்னா சாந்தி பண்ண பிரியாணிய வெள்ளக்காரிட்ட கொடுக்கலாம். அதைத்தின்னுட்டு
ஒரைப்பு தாங்காம ஓடிடுவா.
சாந்தி: தின்னுமுடிச்சிட்டு கேலியா.. அண்ணாமலை சாரை கேக்கலாம்.
அண்ணா: சரி நான் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன்.
மணி: சார், ஒங்களுக்கு எத்தனியோ பேரு பொண்ணு தர சம்மதமா இருக்காங்க.ஒரு விரக்தில
இந்த பொண்ணை நீங்க கட்டிக்க வேண்டாம்.
அண்ணா: சே, நான் கட்டிக்கரேன்னு சொல்லல. அந்தப் பையன்கிட்ட தனியா பேசப்போறேன்.
புத்தி சொல்லித் திருத்தப் போறேன்.
ரங்கா: நான் அந்தப் பொண்ணோட கொஞ்சம் பேசட்டுமா?
மங்களம் நீ என்ன பண்ற, உள்ள போயி இந்தப்பொண்ணுக்கு ஏதாவது
ஸ்வீட் பண்ணி எடுத்துண்டு வா. பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு.
இங்க வாம்மா.
உம்பேரு என்ன ? இப்படி பக்கத்துல வந்து ஒக்காரு. கைய கால
வலிக்கரதோ? லேசா அமுக்கி விடவா? இதென்ன மார்ல ?
சே, அதை கேக்கல. அது கீழ கருப்பா புள்ளி?
மச்சமா? எனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்.
சாந்தி: அப்படியா? உங்களுக்கு தெரியுமா ? இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே.
எனக்கும் பாத்து பலன் சொல்லுங்க.
தங்க: (கோபத்துடன்) சாந்தி. நீ மொதல்ல வீட்டுக்கு போ. அப்புறம் வந்து பேசறேன்.
மெதுவா மெதுவா தொடலாமான்னு வருவான். அப்புறம் நீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு
குதிப்பே. நான் சட்டி சுட்டதடா, கை வெந்ததடான்னு பாடிக்கிட்டு போகணும். தேவையா இது?
காட்சி – 3
(அண்ணாமலையும் சர்தார் பையனும் இன்னம் வெளியே வரவில்லை)
ரங்கண்ணா: ஏன் சிரிக்கறே மணி?
மணி: இல்லே, உங்களுக்கு ஒரு பழய ஜோக் நெனைவிருக்கா? அண்ணாமலைசார்
மொதல்ல வெளில வருவாரா, இல்ல அந்தப்பையன் வருவானான்னு யோசிச்சேன்.
சிரிப்பு வந்துது.
சர்தார்: அது என்ன ஜோக்?
தங்க: மணிக்கு ஜோக் சொல்ல நேரம் காலம் இல்ல. அந்த பையன் புடிவாதம்மா
இருக்கான் போல. அண்ணாமலை என்ன செய்ய முடியும் ?
எனக்கு நம்பிக்கை இல்ல.
(அண்ணாமலையும் பையனும் முக மலர்ச்சியுடன் வெளியே வருகிறார்கள்)
அண்ணா: சர்தார்ஜி கவலய விடுங்க. உங்க பையன் அவளை இன்னிக்கே மறந்திடுவான்.
ஆனா, ஒரு நிபந்தனை.
சர்தார்: என்ன செய்யணும் ?
அண்ணா: நீங்க அவனுக்கு உங்க பென்ஸ் காரை கொடுக்கணும்மாம். கொடுப்பீங்களா?
சர்தார்: பூ, இவ்வளவுதானெ. இங்கயே கொடுத்திடறேன். இந்தா சாவி.
பையன்: தாங்ஸ். நான் இந்தப் பொண்ணை அவ வீட்டுல விட்டுடறேன்.
சர்தார்: அச்சா, பேட்டா. ரொம்பா நன்றி அன்னாமலே. ஒன்கு என்ன வேணும் கேளு.
தங்க : பேசாம ஹேப்பி அவர்ல எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வெச்சா போறும்
சாந்தியும் மங்களம் மாமியும் வீட்ல இருந்து முறுக்கு சுடட்டும்.
ரங்க : அப்படியே ஒரு ஷக்கலக்க பேபி டான்சுக்கும் ஏற்பாடு பண்ணு சர்தார்.
சர்தார்: ஓ.கே. அப்ப நாங்க கிளம்பரோம். எல்லாருக்கும் நன்றி.
சர்தார்ஜி, மகன், வெள்ளைக்காரப்பெண் மூவரும் போகிறார்கள்.
தங்க: எப்படி அண்ணாமலை இதை சாதிச்சீங்க.
அண்ணா: சிம்பிள். அந்த பையன் கெட்டிக்காரன். அவனுக்கு காரு வேணும். கேட்டா
சர்தார்ஜி தர மாட்டேன்னுட்டான். அதுக்குனு ஒரு பொண்ணை செட்டப் பண்ணி நாடகம்
போட்டு அடாவடி பண்ணீருக்கான். எங்கப்பன் காரை வாங்கி குடுத்துடுங்கன்னான்.
ரங்க: அதிசயம்மா இருக்கே. இருவதாம் நம்பர் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டான்னு
பத்தாம் நம்பர் பஸ்ஸில ரெண்டு தடவை ஏறினவனுக்கு இவ்வளவு சாமர்த்தியமா?
தங்க: நியுயார்க் காலெஜ் அப்ளிகேஷன்ல Fill in Capital போட்டிருக்கான்னு
வாஷிங்டன் போனவன்தானே.
மணி: ஒரு சர்தார்ஜி நடந்து போயிட்டு
இருந்தான். ஏண்டா ஒனக்குதான் காரு இருக்கே,
ஏன் நடக்கிறேன்னா, காரைத்திருடுவாங்கன்னு பயந்து காரைப்பூட்டி சாவிய முழுங்கிட்டேன்
அது வெளிய வர வரைக்கும் நடைதான்னானாம். இவன் எப்படியோ?
சாந்தி : இந்த வேடிக்கய பாருங்க. அப்பாவும் புள்ளயும் அந்த பொண்ணை உள்ள வெச்சு
காரைத்தள்ளிட்டு போறாங்க.
மணி: (உரக்க) சர்தார், பெட்ரோல் இல்லியா கார்ல?
சர்தார்: இருக்கு, இருக்கு. அதை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்னு காரைத்தள்ளிட்டு போறோம்.
மணி: அதான் சார் இந்தப்பசங்க இவ்வளவு காசு சம்பாரிச்சிட்டாங்க.
அண்ணா: மணி, ஒண்ணு சொல்றேன் தப்பா நெனக்காத. சர்தார்ஜிங்க உழைப்பாளிங்க.
அதனால உசர்ந்தாங்க. இந்திய சனத்தொகையில அவங்க 2%தான். அதுனால உனக்கு திமிர்
வரப்படாது. பொறாமை ப் படக்கூடாது. அவன் தாடி வெச்சிருக்கான், தலைப்பா
கட்டிருக்கான்னு இளக்காரம் பண்ணாத. அது அவனோட உரிமை. கிளப் வெச்சான்,
பேப்பர் நடத்தரான்னு வயிறு எரியாத. நீயும் பண்ணிப் பாரு. நாகரீகமா பேசு. நாராசமா பேசாத.
மல்லாந்து எச்சி துப்புனா ஒம் மூஞ்சி மேலதான் விழும்.
சாந்தி: என்னங்க இது, இன்னிக்கி தேங்ஸ்கிவிங். இப்ப போய் சீரியசா ஏதோ பேசிக்கிட்டு.
…ஒரு பாட்டு பாடவா?
தங்க: பாடு சாந்தி பாடு, இசை என்னும் நாத வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எனக்காக…
சாந்தி : போதும் பேசாம இருங்க.
(பாடுகிறாள்)
Turkey Dinner, turkey dinner,
Gather round, gather round,
Who will get the drumstick?
Yummy, yummy drumstick,
All sit down, all sit down.
Cornbread muffins, chestnut stuffing,
Puddin’ pie, one foot high,
All of us were thinner
Until we came to dinner;
Me oh my! Me oh my!
மங்களம்: ஏண்டியம்மா, எனக்கு புரியற மாதிரி தமிழ்ல ஏதாவது பாடப்படாதோ ?
கல்யாண சமயல் சாதம்
நல்ல கெளரவப்பிரசாதம்
அதுவே எனக்கு போதும்
புளியோதரை என்னும் சோறு
பொறுத்தமாய் ஒருசாம்பாரு
பூரி கெழங்கு லட்டு
பொரித்த கத்தரி கூட்டு
அழைத்திடுவோம் அனைவரையும்
ஆசையோடு வயிறார
உண்டிடுவோம்
கிடைத்த வாழ்வுக்கெல்லாம்
படைத்தவனுக்கு நன்றி
சொல்லியே.
(கைத்தாங்கலாக ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் மேடைக்கு ஏற்றப்படுகிறார்)
ரங்கபாஷ்யம்: நான் இதுல வரலைன்னு உங்களுக்கு கொறை வெக்கப்படாது, வந்து ஒரு
வார்த்தை சொல்லுன்னாள். சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னிக்கு தேங்ஸ் கிவிங் டேன்னு சொன்னா. என் வயசில தெனமும் நான் தூங்கி காலையில கண்
முழிச்சாலே கடவுளுக்கு நன்றி சொல்லிடுவேன். தெனமுமே எனக்கு தேங்ஸ் கிவிங்தான்.
லோகமே ஒரு நாடகம். ஆட்டுவிப்பான் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரேன்னு சொல்லுவா.
நாமும் குழந்தை, பையன், இளைஞன், சம்சாரி, தோப்பனார், தாத்தான்னு பல வேஷங்கள்
போடறோம். மத்தது எல்லாம் மறந்து போய் அந்த பாத்திரமா மாறிடறோம். இதான் சாச்வதம்னு
பகவானை மறந்திடறோம். அப்படி மறக்காம அவன் திருவடிகளை மனசில வெச்சிங்கோ.
எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துங்கோ. எம்பெருமான் கிருபை எல்லோருக்கும் உண்டு.
வணக்கம்.
(நிறைவு பெற்றது)
(என் கனவில் வந்து நாடகம் போட்ட ரங்கண்ணா குழுவினருக்கு நன்றி. )
I think that what you composed made a bunch of sense.
However, think on this, what if you were to write a awesome title?
I am not saying your information is not good.
, however suppose you added a title that grabbed people’s attention? I mean Ranganna troupes drama :: N. Swaminathan | Tamil Archives is a little boring. You should glance at Yahoo’s home page and see how they create post
titles to grab viewers interested. You might try adding a video or
a picture or two to grab readers interested about everything’ve got to say. In my opinion, it could bring your website a little livelier.