Science and Spirituality: A Vedanta Perception by V. Krishnamurthy
“கண்ணன் சொற்படி வாழ்வதெப்படி?’ நூலிலிருந்து பேராசிரியர் (பிலானி) கிருஷ்ணமூர்த்தி.
“கடவுளை அறிவதெப்படி?’ என்றொரு ஆங்கிலப் புத்தகம் (வெளியீடு 1953). அது பதஞ்சலியோக சூத்திரத்தை விளக்கும் நூல். நூலாசிரியர்கள் இருவர். சுவாமி பிரபவானந்தா, மற்றும் கிறிஸ்டபர் இஷர்வுட்.
மனதானது ஒரு பொருளில் இடைவிடாமல் 12 செகண்டுகளுக்கு இருந்து கொண்டிருந்தால் அது ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
இவ்விதம் ஒருமுகப்பட்ட மனது அதே பொருளில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால் அது தியானம் ஆகும்.
அந்த தியானத்தில் அதைப்போல 12 மடங்கு கால அளவு நீடித்தால், அதாவது 12x12x12 செகண்டுகள் (28 நிமிஷம் 48 செகண்டுகள்) அது சாதாரண சமாதியாகும்.
இந்த சாதாரண சமாதி அதைப்போல் 12 மடங்கு கால அளவு (அதாவது 5 மணி 45 நிமிடம், 36 செகண்ட்) நீடித்தால் அது நிர்விகல்ப சமாதியில் கொண்டுவிடும்.
வெறும் கால அளவைகளினால் மட்டும் தியானம், சமாதி, நிர்விகல்ப சமாதி முதலியவை கிட்டிவிடும் என்று நாம் நினைத்துவிடக்கூடாது.
ஒரு பொருள், ஒரு முகம், ஒரு முனை என்பதுதான் முக்கியம். தீரபொருளில் ஒருமுகப்பட்ட மனது சிறிதேனும் சிதறாமல் அவ்வொறே முனையில் லயித்திருப்பதுதான் தியானத்தின் உச்சி நிலையாகிய சமாதி நிலைக்குக் கொண்டு போய் விடும். தொடக்கத்திலிருந்து எவ்வளவு நிமிஷங்கள் ஆயின என்று கடிகாரம் பார்க்கத் துடிக்கும் மனது அக்கணமே தியானத்தைத் தவறவிட்டு விட்டதாகவே கொள்ள வேண்டும்.
Recent Comments