Home > Uncategorized > Silambu Selvar Ma Po Si on VO Chidambaram Pillai – Guru & Sishyan

Silambu Selvar Ma Po Si on VO Chidambaram Pillai – Guru & Sishyan


“வ.உ.சி. பற்றி ம.பொ.சி.’ நூல், தொகுப்பு: திருமதி ம.பொ.சி. மாதவி பாஸ்கரன்.

வ.உ.சி. தமிழ்ப்புலவர். பரம்பரைப் புலவர் அவர் தந்தை, பாட்டனெல்லாம் புலவர்கள். தன் சுயசரிதத்தைக் கவிதைத் தமிழில் எழுதியவர். திருக்குறள் முப்பால் முழுவதற்கும் உரையெழுதிக் கொடுத்தவர். சிதம்பரம் பிள்ளை தமது வீட்டிலேயே திருக்குறள் வகுப்பு நடத்தினார்.

ராஜாஜி தாம் வ.உ.சி.யிடம் திருக்குறள் பாடம் கேட்டதாக ஒருமுறை பொதுக்கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். வ.உ.சி. மிகவும் கடுமையான ஆசிரியராக இருந்தார். முதல்நாள் சொல்லிக் கொடுத்ததை மனனம் செய்து மறுநாள் ஒப்புவித்தாலொழிய மேலே பாடம் சொல்ல மாட்டார்.

அவரிடம் ராஜாஜி திருக்குறள் பாடம் கேட்டார். முதல்நாள் சொல்லித் தந்ததை மறுநாள் ஒப்புவிக்கச் சொன்னார் வ.உ.சி. “”இன்னும் மனனம் செய்யவில்லை. நாளை சொல்லுகிறேன். மேலே பாடம் சொல்லுங்கள்!”என்றாராம் ராஜாஜி.

அதற்கு வ.உ.சி. நேற்று சொல்லித் தந்ததை ஒப்புவிக்காவிட்டால் மேலே பாடம் சொல்ல முடியாது என்றாராம். உடனே ராஜாஜி,””எனக்குச் சொல்லிக்கொடுக்கும் பொறுமை உங்களுக்கும் இல்லை. உங்களிடம் பாடம் கேட்கும் பொறுமை எனக்கும் இல்லை. பாடத்தை இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்றாராம்!”

  1. No comments yet.
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: