VS Sundararajan on GNB and Ustad Bade Ghulam Ali Khan
’20-ம் நூற்றாண்டின் சங்கீத மேதைகள்’ புத்தகத்தில் ஜி.என்.பி.யைப் பற்றிய கட்டுரையில் சு.ரா (வி.எஸ்.சுந்தரராஜன்)
ஜி.என்.பி., விழா மலர்களுக்கு அருமையான கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.சம்பாஷணை புரிவதிலும் சமர்த்தர். நயமான ஹாஸ்யம் விரவிய பேச்சு அவருடையது.
“தமிழ்நாட்டு உணவை நினைத்தால் நாக்கில் ஜலம் ஊறும்; ஆந்திர உணவை எண்ணினால் கண்ணில் ஜலம் வரும்’ என்பது ஓர் உதாரணம்.
ஒரு முறை கச்சேரி முடியும் முன்பாக அரங்கை விட்டுச் செல்ல எழுந்திருந்தாள் ஒரு பெண். ஒரு பாட்டை முடித்து விட்டு அடுத்த பாட்டு ஆரம்பிக்கும் வேளை அது. டகாலென்று, “”நல்ல சகுணம் நோக்கிச் செல்லடி” என்ற துக்கடாவைப் பாடத் தொடங்கியதும் கிளம்பிய அந்தப் பெண் சடக்கென்று உட்கார்ந்து விடவே சபையில் கரகோஷம்! இதுவும் அவரது ஹாஸ்யத்தைக் காட்டுவதுதான்.
படே குலாம் அலிகான் ஜி.என்.பி.யிடம் பெருமதிப்பு வைத்திருந்தார். இவருடைய “ஹிந்தோளம்’ அவரை அசத்திவிட்டதாம். அதேபோல் ஆந்தோளிகா ராகத்தை இரண்டு, மூன்று முறை பாடச் சொல்லிக்கேட்டு அதே மாதிரிப் பாடக் கற்றாராம். அதோடு நில்லாமல் பம்பாய், டில்லி, கல்கத்தா முதலான நகரங்களில் அதைப் பாடி,””இதை நான் ஜி.என்.பி.யிடம் கற்றுக் கொண்டபடி பாடுகிறேன்” என்று அறிவிப்பு செய்தாராம்.
“கச்சேரி பத்ததி’யை அரியக்குடி ஏற்படுத்தினார்; ஜி.என்.பி. அதற்கு மெருகூட்டினார் என்று சொல்லலாம். அந்த மெருகேறிய பத்ததியைத்தான் இன்று பெருமளவில் கலைஞர்கள் பின்பற்றுகிறார்கள்.
Recent Comments