Archive
A letter in Warren Buffet Style – Meenaks
warren buffet பாணியில் ஒரு கடிதம். மீனாக்ஸ் எழுதுகிறார்.
ம்ம்ம்ம்ம்.
Sivasankaran acquires stake in Sahara One
ஸ்டெர்லிங் சிவசங்கரன் மாதிரி பரபரப்பு உண்டாக்குகிற வியாபார காந்தங்கள் சென்னையில் குறைவு. take over tycoon என்று பட்டமே கொடுக்கலாம். அவர், சஹாரா ஒன் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தில் 14.98% பங்குகளை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளார். இது மற்றும் சிவசங்கரனின் பிற முதலீடுகள் குறித்த பத்ரியின் அலசல் கட்டுரை இங்கே…
An interview with Azim Premji
knowledge@wharton க்கு விப்ரோவின் தலைவர் அசிம் ப்ரேம்ஜி அளித்த நேர்காணல்.
If you look at business schools in India such as the Indian Institutes of Management (IIMs) or the Indian School of Business, companies like Wipro, Infosys or TCS are not attracting the top talent from those institutions. The employers of choice for those students seem to be the investment banks and consulting companies. This poses two kinds of challenges for you. First, how do you attract the top talent from campuses? And second, how do you get lots of really sharp people for your middle- and upper-middle management? I would really like to hear your perspective on this.
Premji: For one thing, we have spread our recruitment net wider than the top five business schools in India; we now hire people from the top 25 management institutes. We have MBAs whom we have recruited from these institutes, and they rank very close in quality to people we hire from the IIMs. We have to be careful to focus on the top half or top 33% of the class, because then the students tend to be very bright. Our experience with these students has been extremely good. Many investment banks and multinational companies that recruit in India, paying students multinational salaries and offering overseas jobs, are not present at these institutes. Our competition here typically tends to be companies hiring for domestic jobs and non-investment banks. That has made these institutes a strong source for recruiting management talent
[ அருண் நடராஜன் வழியாக]
The road less travelled
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து விட்டு, பொறியலாளர் ஆகுபவர்கள் ஒரு பக்கம். எம்பீயே படித்து விட்டு, சோப்பு, சீப்பு கண்ணாடி விக்கிறவங்க இன்னொரு புறம். 'பொட்டி தட்டுற' உத்தியோகம் பாக்கிறவங்க இன்னொரு புறம். ஆனால் இவர்களில் இருந்து வித்தியாசப்படும் தங்கபாண்டி என்பவரைப் பற்றி சோடா பாட்டில் பாலா எழுதுகிறார்…
தங்கபாண்டி…. சூப்பர் மச்சீ..
update : பொறியியல் படித்துவிட்டு ஓவியரானவர் கதை இருக்கட்டும்., ஐஐஎம்மில், முதுகலை மேலாண்மை படித்துவிட்டு, உணவுக் கடை வைக்கப் புறப்பட்ட சுரேஷின் கதையை சுட்டிக் காட்டுகிறார் kaps.
சமூக நலத்திட்டங்களைச் சந்தைப்படுத்தல்
நாம் எல்லோரும் பல சமயங்களில் சமூக நலம் சார்ந்த விஷயங்களில் பங்களிக்கிறோம். சில சமயம் அதைப்ற்றிய பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறோம். சந்தைப்படுத்தலின் ஆதாரக் கோட்பாடுகளை எப்படி இலாப நோக்கமற்ற விஷயங்களிலும் கையாளலாம் என்று சொல்கிறார் மீனாக்ஸ்.
Bar Camp – Narain
பார் கேம்ப் ன்னா என்னா? டெண்ட் அடிச்சு தண்ணி போடறதா?
இல்லியாம்… உருப்படாத நாராயண் வேற என்னமோ சொல்றார்
Portable Shopping – Meenaks
நவீனமயமாகிவரும் சிறப்பங்காடிகளில் நடக்கும் தொழில் நுட்ப முன்னேற்றங்கள் குறித்த சிறப்பான கட்டுரை.
Leadership Images – Meenaks
இளங்கலை பயிலும் மாணாக்கரிடையே ‘தலைமை’ (leadership) குறித்த பிம்பங்களைப் பற்றிய ஆய்வு ஒன்று வார்ட்டன் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக நடந்து வந்துள்ளது. குறிப்பிட்ட மேலாண்மைப் பாடத்தை விருப்பத் தேர்வு செய்து பயிலும் மாணாக்கர், ‘தலைமை’ என்ற கருத்துடன் அவர்கள் தொடர்பு படுத்துகின்ற ஏதேனும் படம் அல்லது பிம்பத்தைத் தேர்வு செய்து, அதைத் தேர்ந்தெடுத்தது ஏன் என்றும் நூறு சொற்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
தமிழ்நாட்டில் கேட்டால் ‘தல போல வருமா’ என்பது போன்ற கிண்டல் இல்லாமல் சேரியமாய் ஒரு கட்டுரை.
Broad gauge from Coimbatore – Radhakrishnan
இந்திய இருவுள் வாயில் (Railway) அலுவல் மற்றும் வியாபாரத்துக்கும், மறுவழிப் பயணங்களுக்கும் (return journeys) சிற்றூர் பயணிகளுக்கும் பயன்படுமாறு மாறவேண்டும் என்று மானகைத் துறை (management field) துப்புகள் தருகிறார்கள் கோவைக்காரங்க…
ஊர்களெல்லாம் பேருந்தை மையமாகக் கொண்டு ஆக்கப்பட்டுவிட்டதால் மக்களுக்கு ரயில் நிலையம் ‘தொலைவில்’ என்றாகிவிட்டது. விளைவு, கிராமங்களில் இருந்த அற்புதமான சிறிய ரயில்நிலையங்கள் கைவிடப்பட்டன. கோவை-பொள்ளாச்சிக்கு இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகலப்பாதை இருந்து, குறைந்தது அரைமணி நேரத்திற்கொருமுறையாவது வண்டிகள் இயக்கப்பட்டால் எப்படியிருக்கும்!
இந்த மாதிரி வடக்கில் செய்து இருவுள் வாயில் லாபம் ஈட்டிய செய்தியை தேசிகன் பகிர்கிறார்.
ஒரு சின்ன பிளாட்பாரம், நான்கு பென்ச்கள், குடிக்க ஒரு தண்ணீர் குழாய் என்று 8 லட்சம் ரூபாய் செலவில் ஒரு ஸ்டேஷனை கட்டியுள்ளார்கள். பின்னர் ரயில்வே அதிகாரிகள் அதை ஸ்டேஷனாக ஏற்றுக்கொண்டு அதன் வழியாக போகும் ரயில்களை ஒரு நிமிடம் நிறுத்த சம்மதித்தனர். இந்த ஸ்டேஷன் கட்டிய ஒரு வருடத்தில் 12,918 பயணிகள் ரயில் ஏறி இறங்கியிருக்கிறார்கள். ரயில்வேக்கு இதனால் கிடைத்த வருவாய் 1.5 லட்சம் ரூபாய்!
(தமிழாக்க வார்த்தைகள்: இராமகி)
Kerala Bus does eTickets
மின்னணு வாக்குப் பதிவை வெற்றிகரமாக நடத்தும் இந்தியாவின் அடுத்த கணினிமயமாக்கமாக டிக்கெட் கொடுக்கிறார்கள். ‘வித்-அவுட்’களை கண்டுபிடிக்குமா என்று தெரியலை 😉
Recent Comments