Archive
Nanjil Nadan visiting USA: East Coast Meetups
எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.
சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது
வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.
i) ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்
ii) வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்
iii) சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் நகரம்
மேலும் விவரங்களுக்கு பின்னூட்டமிடவும்/மறுமொழியவும்.
அனைவரும் வருக.
நாஞ்சில் நாடன் சிறுகதை குறித்து ஜெயமோகன்: பாலாவும் இடலாக்குடி ராஜாவும்
அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது?’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்
….
பிற்பாடு நண்பர் சுகா நாஞ்சில்நாடனை கூட்டிவந்து அறிமுகம்செய்தபோது பாலா அவர் காலடியில் அப்படியே விழுந்து வணங்கினார் ‘என்னை ஆட்கொண்ட குரு’ என.
எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்
- வாஸ்கோட காமா,
- மார்க்கோ போலோ,
- இபின் பதூதா,- ibn battuta
- அல்பெரூனி – Alberuni
– உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.
Òஆதியில் கோவா பழங்குடியினரின் வாழ்விடமாக இருந்தது. அவர்களைக் கொன்று அந்த நிலப்பகுதியைக் கிறிஸ்துவ ராஜ்யமாக்கியதில் முதற்காரணகர்த்தா வாஸ்கோடகாமா. காமாவின் கடற்பயணம் எத்தனை சாகசங்களும், விசித்திரங்களும் நிறைந்ததோ அத்தனை அளவு வன்முறையும், வெறிச் செயலும், கட்டுப்பாடற்ற அராஜகமும் கொண்டது. வாஸ்கோட காமா போன்ற கடலோடிகள் தான் நாடு பிடிக்கும் ஆசைகளுக்கு அடிகோலிட்டவர்கள். அவர்களைக் கடல்வழி கண்டு பிடித்தவர்கள் என்று கொண்டாட முடியாது. மாறாக, ராஜ விசுவாசம் என்ற பெயரில் பல தேசங்களைக் கொள்ளையடித்து உயிர்க்கொலை செய்தவர்கள் என்றுதான் கொள்ள வேண்டும். . .’
வெறும் நிகழ்ச்சித் தொகுப்பாக இல்லாமல் இத்தகைய சமூக – அரசியல் சார்ந்த விமரிசனப் பார்வையுடன் எழுதியிருக்கிறார் எஸ்ரா.
Recent Comments