Archive

Posts Tagged ‘Charu’

Tamil Writer Charu Nivethitha Interview in Webulagam (archives – Nov 2000)

May 16, 2012 Leave a comment

சாரு நிவேதிதா

தத்துவ இலக்கிய உலகிற்குள் எப்போது நுழைந்தீர்கள்? ஏன்?

அப்போது எனக்குப் பதினான்கு வயது-ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் இடையே செக்ஸ் உறவு ஏற்பட்டது. எனக்கு அந்தப் பெண் அபூர்வமாய்த் தோன்றினாள். உறவு தொடர்ந்தது. பிரபஞ்ச ரகசியங்களைப் போல் மர்மங்களையும் புதிர்களையும் கொண்டதாக இருந்தது அவள் உடல்.

நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் காதலித்துக் கொள்ளவில்லை. உடலின் மர்மங்களை அறிந்து கொள்ள முயற்சி செய்தோம். உடல் களியாட்ட வெறியென மாறியது. மனமும் சிந்தனையும் அற்றுப் போன சூன்யத்தின் பெரு வெடிப்பு அது. இருத்தலில் இருந்து சூன்யத்திற்குச் சென்ற நிகழ்வு அது.

பள்ளி இறுதி வகுப்பு வரும்போது நான் பள்ளிக்கூடம் செல்ல முடியாதவனானேன். காச நோய் கடுமையாக என்னைத் தாக்கியிருந்தது. தினமும் ஒன்று என 150 ஊசி போட்டார்கள். கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத விதவிதமான உணவு வகைகள் கொடுக்கப்பட்டன. இப்படியாக, போக இருந்த உயிர் காப்பாற்றப்பட்டது. “ஒரு வேளை செத்தே போயிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று யோசிக்க ஆரம்பித்தேன். அந்த விசாரணை என்னை மரணம் பற்றிய ஆதாரமான கேள்விக்குள் தள்ளியது.

சமணம், பௌத்தம், சைவம், வைணவம், இஸ்லாம் என்று எல்லா சமய நூல்களையும் படிக்கத் தொடங்கினேன். ஆய்வுக் கட்டுரைகள் சமயப் பத்திரிகைகளில் பிரசுரமாயின, நிவேதிதா என்ற பெயரில்.

கேள்வி : உங்கள் தத்துவ விசாரணை அத்துடன் முடிந்ததா?

பதில் : இல்லை . . திருவண்ணாமலைப் பகுதி மலைகளில் திரிந்தேன். பல துறவிகளைச் சந்தித்தேன். ஒரு துறவியிடம் இருந்து ஹடயோகம் பயின்றேன். பிராணாயாமம், நௌலி போன்ற பயிற்சிகள் கற்றேன்.

சேஷாத்திரி சுவாமிகள், விவேகானந்தர், ரமணர், சுவாமி சிவானந்தா என்று பல ஞானிகளின் உபதேசங்களைக் கற்றேன். ரிஷிகேசம், இமயமலைப் பிரதேசங்களில் சுற்றித் திரிந்தேன்.

மக்கள் குளிராலும், பனியாலும், பட்டினியாலும் செத்து மடிவதைக் கண்டேன். வருடத்தில் ஆறு மாதங்கள் அதிகப் பனியால் மக்கள் வாழ்வை இழந்து படும் இன்னல்கள் என்னை மிகவும் பாதித்தது.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று கதறிக் கொண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தேன்.

அதன் பின் ஒரு மார்க்சீயத் தோழரை சந்தித்தேன். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுத்துக்களை அவரே எனக்கு அறிமுகப் படுத்தினார். அதிலிருந்து மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாக மாறினேன். கிரேக்கத் தத்துவவாதிகளிலிருந்து துவங்கி, கீர்க்கேகார்ட், விட்ஜென்ஸ்டைன், ஹைடேக்கர், சார்த்தர், லெவி ஸ்ட்ராஸ், ஃபூக்கோ வரை வந்தேன். இன்றளவும் ஒரு மேற்கத்திய தத்துவ உலகின் மாணவனாகவே இருந்து வருகிறேன் . . .

கேள்வி : அப்படி என்றால், தற்போது நீங்கள் மார்க்சீயர் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில் : சார்த்தர் ஒரு முறை சொன்னார்-Marxism is the only unsurpassable philosophy of our time என்று.

சில ஆண்டுகளுக்கு முன்பு தெரீதா எழுதி வெளிவந்த Spectre of Marx  என்ற புத்தகம் கூட மார்க்சீயத்தை மிகவும் சாதகமான முறையிலேயே அணுகியிருப்பதாக அறிகிறேன்.

“பசியால் செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தைக்கு முன்னால் எனது நாசியாவுக்கு எவ்வித அர்த்தமும் இல்லை” என்று சார்த்தர் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒருபுறம் கலையும் இலக்கியமும் . . . மறுபுறம் பசியால் சாகும் குழந்தை . . . இரண்டுக்கும் நடுவே ஊடாடிக் கொண்டு தான் இருக்கிறேன். இந்தக் குரூரம் என்னை ஒரு மனநோயாளியாக ஆக்கிவிடக் கூடியதாக இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே எழுத்தைப் பற்றிக் கொள்கிறேன்.

கேள்வி : சிறு பத்திரிகைகளில் தீவிரமாக எழுத ஆரம்பித்தது எப்போது?

நான் தஞ்சாவூரில் படித்துக் கொண்டிருந்த போது “பிரக்ஞை” என்ற பத்திரிகையின் தீவிர வாசகனாக இருந்தேன். பிறகு சென்னை வந்த போது அதன் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களைச் சந்தித்தேன். வீராச்சாமி என்னை வெகுவாக ஈர்த்தார். ஆனாலும் நான் அப்போது வெகுஜனப் பத்திரிகைகளிலேயே எழுதிக் கொண்டிருந்தேன்.

1978 ல் தில்லி சென்றேன். கொல்லிப் பாவை, படிகள் போன்ற பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பட்டது. படிகள் பத்திரிகை என்னை மிகவும் ஊக்குவித்தது. வெங்கட்சாமி நாதனுடன் ஏற்பட்ட நட்பு மறக்கவே முடியாதது. சுமார் இரண்டு வருட காலம் அவரோடு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது விவாதிக்காத நாளே கிடையாது என்று சொல்லலாம். சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தியது அவர் தான்.

அப்போது இலக்கிய வெளிவட்டம் என்ற ஒரு பத்திரிகை வந்தது. அதன் ஆசிரியர் நடராஜன் வத்தாயிருப்புக்குப் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து அந்தப் பத்திரிகையைக் கொண்டு வந்தார். அதிலும் என்னுடைய முக்கியமான பல கட்டுரைகள் வெளிவந்தன. நடராஜன் அப்போது கிழிந்த ஜாக்கெட்டுகளுக்கு ஒட்டுப் போடும் டைலராக வேலை பார்த்து வந்தார் என்பது மிகவும் குறிப்பிட வேண்டிய விஷயம்.

அவரிடமிருந்து நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் குடும்பம் என்ற அமைப்பினால் அமுங்கிப் போனவர்களில் அவரும் ஒருவராகப் போனது நமது துரதிர்ஷ்டம்.

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்”, “ஸீரோ டிகிரி” என்றும் பெயர் வைக்கக் காரணம் என்ன?

சார்த்தரையே மீண்டும் குறிப்பிட்ட விரும்புகிறேன். “ஒரு ஐரோப்பியனாக இருந்த என்னை மூன்றாம் உலகத்தை நோக்கித் திருப்பியவர் ஃப்ரான்ஃஸ் ஃபானன்” என்றார் சார்த்தர். Wretched of the Earth என்ற நூலை வாசித்திருப்பீர்கள். சேகுவாராவின் தீவிர ஆதரவாளராக இருந்தார் சார்த்தர். தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மாவோயிஸ்டுகளோடு மட்டுமே அவர் உரையாடி வந்தார். அதனால் தான் அவரால் அப்போது ஸ்ட்ரக்சுரலிசத்தை எதிர்கொள்ள முடியாமல் போனது.

இந்தப் பின்னணியில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் என்ற தத்துவத்தைப் பாருங்கள். “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்” நாவலில் ஒரு வாசகம் வருகிறது. The main threat to existentialism is non-availability of good quality condoms” ” மார்க்சீயவாதிகள் எக்ஸிஸ்டென்ஷியலிசத்தை எப்படிப் பார்த்தார்கள் என்பதைப் பற்றிய கிண்டலே அந்தத் தலைப்பு. ஒரு வேளை சுய கிண்டலாகவும் இருக்கலாம்.

Zero visibility என்பார்கள். பார்வையே தெரியாத பனி மூட்டம். பனி என்பது மரணம். பச்சையின் எதிர்முனை பனி. பச்சை துவக்கம். பனி முடிவு. பனி என்பது apocalypse. மகாபாரதம் apocalypse ல் முடிகிறது. One Hundred Years of Solityde  நாவலும் apocalypse இலேயே முடிகிறது. பனியைப் பற்றி யோசிக்கும் வேளையில் ஒரு நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. லட்சக் கணக்கான பூத உடல்களை அப்புறப்படுத்துவது எப்படி என்று யோசிக்கிறார்கள் நாஜிகள். பனிப்பாறைகளாய் உறைந்து கிடக்கும் நதியில் வெடிகுண்டு வைத்து தகர்த்து உள்ளே ஓடிக் கொண்டிருக்கும் நதியில் யூத உடல்களைப் போடுகிறார்கள்.

ஸீரோ டிகிரியில்-வாழ்வின் அவலத்தால் துரத்தப்பட்டு பனிப் பாலையில் தனித்து அலைகிறான் ஒருவன். அவன் சொர்க்கத்துக்கு செல்லவில்லை. நாம் பின் தொடரவில்லை. மார்க்கமேதும் விளங்கவில்லை. மஹிமான் கூட்டங்கள் அலை அலையாய் நிழல் ரூபமென பாய்ந்து சென்று கொண்டிருக்கின்றன. வாழ்வின் அத்தனை வார்த்தைகளையும் தள்ளிவிட்டு மண்டியிட்டுக் கதறுகிறான்.

கிரேக்கத் துன்பவியல் காவியங்களில் கேட்கும் “கோரஸ்” இது.

இது ஒரு விதமான விளக்கம். இதே போல் joy, celebration, laughter, estacy, frenzy, eroticism, parady, humour என்பதாகவும் “ஸீரோ டிகிரியை வாசிக்கலாம்.

It is a blend of Apollonian and Dionysian Characters.. இந்த விதத்தில் “ஸீரோ டிகிரி” யை ஒரு “நீட்ஷேவிய நாவல்” என்று சொல்லலாம்.

அதோடு, Nothingness என்பதற்கு எதிர்ப்புள்ளியிலிருந்து அந்த நாவல் உடலை மையப் படுத்துவதையும் ஒருவர் மிகச் சுலபமாக கண்டு கொள்ளமுடியும். உடல் Carnival ஆக மாறுகிறது. “எல்லா” அர்த்தங்களுக்கும் அறிவுக்கும் உடலே ஆதாரம். ஆரோக்கியமும் வலிமையும் முக்கியப் பண்புகளாக அங்கீகரிக்கப் பட வேண்டும்” என்று ஜாரதூஷ்ட்ராவில் நீட்ஷே எழுதுவதையும் இங்கே ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றொரு இடத்தில் நீட்ஷே எழுதுகிறார் : “A mere disciplining of feelings and thoughts amounts to almost nothing . . . one must first persuade the body . . . It is decisire for the fate of peoples and humanity that one begins inculcating culture in the proper place-not in the ‘soul’ . . . the proper place is the body ; gestures, diet, physiology ; the rest will follow 

இங்கே நாம் தாவோவுக்கும், நீட்ஷேவுக்கும் உள்ள ஒற்றுமை-உடலை மையப்படுத்தும் ஜென் பௌத்தம்-ஜப்பானிய Martial arts-

நான் ஏற்கனவே குறிப்பிட்ட ஹடயோகம் எல்லாவற்றையும் நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

இங்கே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் “உன்னதம்” பத்திரிகையின் ஆசிரியர் கௌதம சித்தார்த்தன் புதுவகை எழுத்து அல்லது நவீன எழுத்து என்று ஏதோ ஒரு அசட்டுத் தனமான தலைப்பு-தலைப்பு சரியாக நினைவில்லை-அந்தத் தலைப்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்-ஈரோட்டில். முக்கியமான பேச்சாளரான எம்.டி.எம் வராததால்-பார்வையாளனாகச் சென்றிருந்த என்னை பேசுமாறு அழைத்தார் சித்தார்த்தன். நான் அப்போது, “நவீன எழுத்து என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லை” என்று தெரிவித்து விட்டு, வேட்டை பற்றியும், விதவிதமான சமையல் முறைகள் பற்றியும், மலையேற்றம், ஸ்கீயிங், பயணம் பற்றியும் பேசினேன். அந்தப் பேச்சைப் பற்றி உன்னதம் பத்திரிகையில் சித்தார்த்தன் குறிப்பிடும்போது

“நவீன எழுத்து பற்றிப் பேசுங்கள் என்றால் சமையல் பண்ணி சாப்பிடுவது பற்றிப் பேசினார் சாரு” என்று எழுதி என்னை ஒரு முட்டாளாகச் சித்தரிக்க முயன்றார்.

இவர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு முதலில் நீட்ஷேவைப் பயில வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

நேநோ என்று ஒரு கதைக்கு பெயர் வைத்திருக்கிறீர்களே?

Nine என்பதன் மூலவார்த்தை. ஒன்பது என்பது விளிம்பு. My preoccupation with numbers-Nine is mystical. It is a precipice. You will fall into an abyss-numberless-void-beginning of nothingness.. இங்கிருந்து தான் ஸீரோ டிகிரி துவங்குகிறது. But ‘Nano‘ is a story of procreation and mysteries of sexuality..

பனிவெளியில் முடியும் மரணத்துக்கும்-வாழ்வுக்கும் இடையிலான நாவல் ஸீரோ டிகிரி என்றால் நேநோ அதற்கு மாறாக ஸீரோ டிகிரி எங்கே முடிகிறதோ அங்கே துவங்குகிறது.

ஒன்பது என்பது முடிவின் துவக்கம். பாறை விளிம்பிலிருந்து பார்த்தால் அதல பாதாளம், எண்களைப் பற்றிய விஞ்ஞானத்தில் ஒன்பது அலளவiஉயட குணாம்சங்களைக் கொண்டது. வான வாஸ்திரத்தில் அது ரௌத்திரம், போர், mystical .

ஆனால் அதுவே ஜனனத்தின் குறியீடு. கருவியலைப் பயின்று கொண்டிருந்த போது அது எனக்குக் கிடைத்தது. Nano Seconds  என்று சொல்வார்கள். கலவியின் போது கருவணு கருமுட்டையை அடைய எடுத்துக் கொள்ளும் பாலம் சூயnடி ளநஉடினேள. ஒரு நொடியில் .000000009 அளவு அது. கருவணுவின் உருவமும் ஒன்பதை ஒத்திருக்கும்.

இவ்வளவு அற்புதமாக, அதிசயத்தைப் போல் உருவாகும் உயிர் எவ்வளவு சாதாரணமாக, அபத்தமாக அழிக்கப்படுகிறது என்ற துக்கத்தின் வெளிப்பாடே நேநோ சிறுகதை. ஜனனம்-மரணம்-வாழ்வின் குரூரம் பற்றிய கதை அது. ஒரே ஒரு கருவணு கருமுட்டையைச் சென்று அடைவதற்குள் லட்சக்கணக்கான கருவணுக்கள் சிதைவுறுகின்றன. அழிந்து போகின்றன. ஜனன கேந்திரத்திலேயே ஒரு பேரழிவு. பிறகு உயிரின் துளிர்ச்சி என்று இந்த வினை மாறி மாறிச் சென்று கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் நீட்ஷேவைப் படித்துக் கொண்டிருந்த போது “நேநோ”வுடன் இணைந்து போகும் ஒரு பகுதியைக் கண்டேன்.

What was it that the Hellene guaranteed himself by means of these mysteries, Eternal life. the eternal returen of life ; the future promised and hallowed in the past ; the triumphant. Yes to life beyond all death and change ; true life as the over-all continuation of life through procreation, through the mysteries of sexuality-For the Greeks the sexual symbol was therefore the venerable symbol par excellence, the real profundity in the whole of ancient piety. Every single element in the act of procreation, of pregnancy, and of birth aroused the highest and most solemn feelings. In the doctrine of the mysteries, pain is pronounced holy : the pangs of the woman giving birth hallows all pain. That there may be the eternal joy of creating that the will to life may eternally affirm itself, the agony of the woman giging birth must also be there eternally. All this is meant by the word Dionysuys . . .”

Twilight of the Idols என்ற புத்தகத்தில் What I owe to the Ancients என்ற கட்டுரையில் நீட்ஷே.

இப்படியாக, நேநோ சிறுகதை கிரேக்க புராணங்கள், கருவியல், தத்துவம், எண் கணிதம் என்று பல தளங்களில் விரியும் ஒன்று.

மௌனி மற்றும் புதுமைப் பித்தன் மீது உங்களுக்கு என்ன கோபம்?

நான் ஒரு அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை செய்கிறேன். அங்கே நான் ஒரு எழுத்தாளன் என்று அறிய நேர்கிற பெண்கள், தாங்களும் கதை என்று எதையோ எழுதி-அநேகமாக அது மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை, அல்லது முதல் காதல் என்பதாக இருக்கும். கற்பனையே கலக்காத அச்சு அசல் உண்மைச் சம்பவங்கள். என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்வார்கள். அழகான பெண்கள் என்றால் பொய் சொல்லி விடுவேன். அதை வைத்து மேற்கொண்டு பேசவும், பழகவும், எட்ஸெட்ரா, எட்ஸெட்ரா என்று மனம் கணக்குப் போடும்.

அந்த மாதிரிக் கதைகளின் தரத்தில் இருக்கிறது புதுமைப் பித்தன் கதைகள். அவருக்கு எழுதத் தெரியவில்லை. வாயிலேயே வைக்க வழங்காத சமையலைப் போல் இருக்கிறது அவர் கதைகள்

நான் ஒரு Connoisseur.. மிகத் தேர்ந்த சமையல்காரன், உலகின் அற்புதமான பதார்த்தமான அக்கார வடிசல் அதி ருசியாய் சமைப்பேன். ஓலன் போன்ற வழக்கொழிந்து போன உணவு வகைகளும் தெரியும். அதே போல் அசைவ உணவு வகையில் lobster, நியூசிலாந்திலிருந்து இங்கே இறக்குமதியாகும் ஒரு வகை மீன், trout மீன் என்று நூற்றுக்கணக்கான உணவு வகைகள்-பல்வேறு தேசங்களைச் சேர்ந்த உணவு வகைகள் எனக்கு அத்துப்படி, என் நண்பன் ஒருவன் என் சமையலைச் சாப்பிட்டு விட்டு ‘Creativity’ யின் உச்சம் இது. இதில் நூற்றில் ஒரு பங்கையாவது உன் எழுத்தில் காண்பிக்கக் கூடாதா? ‘ என்று கேட்டான். (அவனுக்கு என் எழுத்து பிடிக்காது)

சமையல் என்பது ஒரு கலை. ஆனால் அதை நாம் பெண்களுக்கென ஒதுக்கி விட்டதால் ஏதோ தினந்தோறும் மலம் கழிப்பது தான் வாழ்வின் ஆதாரமான கடமை என்பது போலவும், அந்த ஆதாரமான செயல் தடங்கல் ஏதும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதையோ தின்ன வேண்டும் என்பது போலவும் தான் சமையல் என்கிற கலை உருமாறியிருக்கிறது. பாவம் பெண்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ரஷ்யாவின் நிலக்கரிச் சுரங்கங்களில் கை விரல்களாலேயே நிலக்கரியைச் சுரண்டுவார்களாம். நகங்கள் கிழிந்து குருதி ஓடும் தொழிலாளர்களின் அவலம் பற்றி அப்போதைய ரஷ்ய இலக்கியங்கள் சொல்லுகின்றன. அந்தத் தொழிலாளர்களின் நிலையில் இருக்கிறார்கள் நமது பெண்கள்.

——————

நாட்டுப் புறத்தானை ஒருவழியாக தவிர்த்து விட்டு வேறு பக்கம் சென்று விடுகிறான் இவன். அனால் என்ன துரதிர்ஷ்டம். அங்கேயும் வந்து “உங்களைத் தானுங்க . . .” என்கிறான் நாட்டுப் புறத்தான். சரி தொலையட்டுமென்று “உனக்காகத் தான் காத்திருந்தேன்” என்கிறான் இவன்.

“ஆமாங்க-தெரியுங்க-” என்று அவன் பின் தொடர்கிறான். இவன் அவனுடைய மூக்கை கவனிக்க அவன் “ஆமாங்க-என்னைப் பாத்தாலே மறுக்காதுங்க-என் மூக்குங்க-” என்கிறான்.

இப்படியாக “ஆமாங்க . . சரீங்க” என்றபடி உரையாடல் தொடர்கிறது. ஸில்க் ஷர்ட்காரன் நாட்டுப் புறத்தானை “டா” போட்டுப் பேசுகிறான். இதில் ஒரு குளறுபடி என்னவென்றால் அந்த நாட்டுப்புறத்தானும் பிராமண பாஷை பேசுவது தான். கவனியுங்கள்.

“அவங்க-ரயிலிலே, என்னைத் தெரிஞ்சுண்டு-அந்த ஐயா எங்கிட்ட சொன்னாரு-கொடுத்தாரு-” நாட்டுப்புறத்தான் கதையின் போக்கில் “பட்டிக்காட்டான்” ஆகி விடுகிறான்.

“உங்களைப் பார்த்தே தெரிஞ்சுடுத்தே எனக்கு!” என்றான் பட்டிக்காட்டான்.

கடைசியில் கதையின் ‘labyrinth’ என்னவென்றால் வக்கீல் சுப்ரதிவ்யம் அய்யங்கார் என்று நினைத்து அந்தப் “பட்டிக்காட்டான்” அதே அடையாளமுள்ள (சில்க் சட்டை, விசிறி மடிப்பு அங்கவஸ்திரம்) மற்றொருவனைப் பிடித்து விடுகிறான். எப்படி இந்தத் தவறு நேர்கிறதென்றால், அன்று சாயங்காலம் “ஜவஹர்” அவ்வூருக்கு வருகிற படியால் அய்யங்கார் சில்க் சட்டைக்கும், விசிறி மடிப்புக்கும் ரஜா கொடுத்து விட்டு ஜிப்பாவும் குல்லாவுமாக வந்து விட்டார். கதாநாயகனோ அன்று எதேச்சையாக சில்க் சட்டையும், விசிறி மடிப்புமாக வந்து விட்டான். கதையின் முத்தாய்ப்பைக் கவனியுங்கள் . . .

“தனியாக பைத்தியக்காரத்தனத்தில் தான் இருப்பதாக ஒரு எண்ணம் முதலில்-பிறகு உலகமே பைத்தியக்காரத்தனமாய்ப் போய் விட்டதோ என்ற யோசனையும், சம்சயமும், கடைசியாக , ஒன்றுமே புலப்படாமல் “பைத்தியக்காரத்தனம்” என்று ஒரு தரம் முணுமுணுத்து மூச்சு விட்டான். யார் யார் எப்படி எப்படி என்பதை அவனால் உணர முடியவில்லை அப்போது”

இப்படி கதை எழுதுகிறவர்களின் முகத்தில் காறி உமிழ வேண்டும் என்று தோன்றவில்லையா உங்களுக்கு?

மௌனியையும், புதுமைப் பித்தனையும் Philistines என்கிறேன் நான்.

ஆனால் என்னுடைய முக்கியக் குற்றச்சாட்டு இது இல்ல. அவர்கள் எழுதிய கதைகள் குப்பைக் கூடைக்குப் போயிருக்க வேண்டியவை-இலக்கியமாகத் தேறாதவை என்பது தான்.

பாரதி அப்படி அல்ல.

தலித்துகளைப் பற்றி அவர் எழுதிய “ஆறில் ஒரு பங்கு” என்ற கதை சர்வதேசத்தரம் வாய்ந்தது அல்ல எனினும் அவர் கவிதைகள் பல உலக கவிதைகளுக்கு நிகரானவை. மேலும் அவர் கவிஞர் மட்டுமல்ல. பத்திரிகையாளர். விடுதலைப் போரளி. சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என்று பல்வேறு இலக்கிய வடிவங்களையும் செழுமைப் படுத்தியவர். மிகப் பெரிய கலகக் காரர். சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காத Dionysian Spirit ஐ என்னால் பாரதியின் எழுத்தில் மட்டுமே காண முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளாமல் அவரை மாயாவாதக் கவிஞர் என்று குறுக்குவது வறட்டுத் தனம். பாரதி கஞ்சா உட்கொண்டது உட்பட அவரது வாழ்வும் எழுத்தும் Unique ஆனவை. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் காணக் கிடைக்காதவை.

சிறு பத்திரிகை தளத்தில் தாஸ்தாவ்ஸ்கி கொண்டாடப் பட்ட அளவுக்கு டால்ஸ்டாய் கொண்டாடப் படவில்லை. உங்கள் இலக்கிய மதிப்பீட்டின் படி டால்ஸ்டாய் தானே உங்களுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும்-என்பது சரியா?

என்னைக் கிண்டல் செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி என்றே இதைப் புரிந்து கொள்கிறேன். டால்ஸ்டாய் ஒரு நீதிமான். உய்விப்பவர். மன்னிப்பு வழங்குபவர். புத்துயிர்ப்பு அளித்து பரலோக சாம்ராஜ்யத்துக்கு இட்டுச் செல்பவர்.

கிறித்தவம் குறித்து நீட்ஷே எழுதியவற்றை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் தாஸ்தாவ்ஸ்கி குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர். சூதாடி. சைபீரிய சிறைச்சாலைகளில் இருந்தவர். நோயாளி. பதிப்பகத்தாரிடம் பணம் வாங்கிக் கொண்டு குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியாமல் வழக்குகளைச் சந்தித்தவர். அப்படி ஒரு முறை அவரது நரம்பு வியாதியின் காரணமாக குறித்த தேதிக்குள் நாவலை முடித்துக் கொடுக்க முடியவில்லை. பதிப்பகத்தார் கடைசித் தவணையாக ஒரு தேதியைக் குறிக்கிறார். கடும் குளிர். உடல் உபாதை. கொடிய வறுமை. நரம்புத் தளர்ச்சியும் சேர்ந்து கொள்கிறது. பேனாவைத் தொடவே முடியவில்லை. மீண்டும் சைபீரியாவா என்று பதறுகிறார். அப்போது அவரிடம் ளுஉசiநெ ஆக வந்து சேர்கிறாள் அன்னா என்ற இளம் பெண்.

தாஸ்தாவ்ஸ்கியின் கதை சொல்லும் வேகம், அவரது passion, உக்கிரம், வெறி எல்லாம் சேர்ந்து அவள் அவரைக் காதலிக்க ஆரம்பித்து விடுகிறாள், அவரது மரணம் வரை உற்ற துணையாகவும் காதலியாகவும் இருக்கிறாள்.

தாஸ்தாவ்ஸ்கியின் வாழ்க்கையே ஒரு நாவலைப் போன்றது. குற்றவாளிகளின் உலகம் அது. ஒரு பத்தாண்டுக் காலம் நான் தாஸ்தாவ்ஸ்கியின் உலகத்தில் வாழ்ந்தேன் என்று சொல்லாம். எனது எழுத்தியக்கத்தின் எக்ஸிஸ்டெஷியலிச கால கட்டம் அது.

பின்னர் லெவி ஸ்ட்ராஸ், ரொலான் பார்த், ஃபூக்கோ என்று ஸ்ட்ரக்சுரலிசத்தின் பக்கம் நகர்ந்த போது போர்ஹேஸ், நபகோவ் போன்றவர்களைக் கண்டடைந்தேன். தாஸ்தாவ்ஸ்கியை விட நபகோவ் இப்போது எனக்கு மிகுந்த நெருக்கமானவராக இருக்கிறார். விளக்கங்கள் இல்லாத-புதிர்களும் மர்மங்களும் நிறைந்த உலகம் அது. பதிமூன்று வயதுப் பெண்ணின் மேல் ஐம்பது வயதுக்காரனுக்கு எப்படிக் காதல் ஏற்படும்?

Lolita வில் விளக்கங்கள் இல்லை.  It just happens..

நபகோவ் தாஸ்தாவ்ஸ்கியை நிராகரிக்கிறார். “அவர் ஒரு க்ரைம் ரைட்டர் . . . தினசரிகளில் க்ரைம் நியூஸ் படித்து எழுதுகிறவர்’ என்கிறார் நபகோவ். தாஸ்தாவ்ஸ்கிக்கு தினசரிகளைப் படிப்பது பெரிதும் விருப்பமான விஷயம் என்றாலும் அவரது எழுத்தை நான் அப்படி நிராகரிக்க மாட்டேன். மேலும் ஒரு சுவாரசியமான தகவல்-நபகோவ் ஒரு வண்ணத்துப் பூச்சி சேகரிப்பாளர். உலகெங்கிலும் உள்ள முக்கியமான பல்கலைக் கழகங்களில் நபகோவின் வண்ணத்துப் பூச்சி ஆய்வுகள் பாடத் திட்டத்தில் உள்ளன. “நான் இலக்கியத்தில் சாதித்ததை விட வண்ணத்துப் பூச்சி ஆய்வில் சில பெருமைக்குரிய சாதனைகளைச் செய்திருக்கிறேன்” என்கிறார் நபகோவ். அதற்காக அவர் மேற்கொண்ட பயணங்கள் பெரும் சாகசங்களைக் கொண்டவை. சுவாரசியமானவை. இலக்கியம் தவிர வேறு துறைகளையும் நலம் பயில வேண்டியுள்ளது. ஆனால் இலக்கியமே தயிர்வடையாக இருக்கும் தமிழ்ச் சூழலில் என்னுடைய எதிர்பார்ப்பு அதிகபட்சமானது தான்!
எந்த ஒரு கலைஞனும் தன்னுடைய காலத்திற்கு உணர்வுள்ளவனாக ஏன் இருக்க வேண்டும்? துசுசு டோல்க்கீன் போன்றவர்கள் கற்பனையின் உச்சத்தில் தானே சிறந்த எழுத்தாளராகிறார்? ஒரு political allegrory யைக் கூட அவர் மறுத்தார் என நான் படித்திருக்கிறன்.

ஒரு எழுத்தாளர் அரசியல் பிரக்ஞை கொண்டவராக இருந்தாக வேண்டும் என்பது என் நிபந்தனை அல்ல. கட்டாயம் அல்ல. போர்ஹேஸுக்கு அரசியல் தெரியாது. தென்னமெரிக்காவின் கொந்தளிப்பான, புரட்சிகரமான அரசியல் சூழலிலிருந்து தன்னை முற்றாக விலக்கிக் கொண்டவர். இடது சாரி எழுத்தாளர்களைக் கடுமையாகச் சாடியவர். அவருக்கும் ஹுலியோ கொர்த்தஸாருக்கும் நடந்த கடும் விவாதங்களுமே கொர்த்தஸாரைப் போல், மார்க்வெஸைப் போல்அரசியல் பிரக்ஞை கொண்டவர்களகாக இருக்க வேண்டும் என்று நலம் நிர்ப்பந்திக்க முடியாது.

இன்னும் ஒரு வேடிகக்கை என்னவென்றால், மாரியோ வார்காஸ் லோஸா-தென்னமெரிக்காவின் மிகச் சிறந்த கதை சொல்லியான அவர் பெரூவில் பயங்கரவாத அரசின் பக்கம் நின்றவர், புரட்சியாளர்களை எதிர்த்தவர். சில காலம் ஃபாஸிஸ அரசின் ஜனாதிபதியாக இருந்தவர்.

ஆனால் அவருடைய Real Life of Alejandro Majtaவை நீங்கள் படித்தால் நீங்களே புரட்சியாளராக மாறி விடுவீர்கள். ஊடிnஎநசளயவiடிளே in Conversations in the Cathedral  -நாவலில் பெரூவின் அவலத்தை-ஒரு தேசமே குப்பைத் தொட்டியாகக் கிடப்பதை-பெரூவின் கொடூரமான-ரத்தக் கறை படிந்த அரசியலை எவ்வளவு வலுவாக எழுதிருக்கிறார்! முழுக்கவும் இந்திய நிலைமைக்குப் பொருந்தி வருகிற ஒரு நாவல் அது. தெருவில் திரியும் நாய்களைப் பிடித்துக் கொண்டு போய் அடித்தே கொல்லும் அந்த முனிசிபாலிட்டி ஊழியனை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

லோசாவினால் இது எப்படி சாத்தியமாகிறது? கூடு விட்டுக் கூடு பாய்கிறான் லோஸா. அலெஜாந்த்ரோ மாய்த்தா என்ற புரட்சியாளனாக-முனிசிபாலிட்டி ஊழியனாக-ரேடியோ நாடக சீரியல் எழுதும் கதை வசன கர்த்தாவாக-புரட்சிகரப் பாதிரியாக-இன்னும் நூற்றுக்கணக்கான பாத்திரங்களாக மாறுகிறான் லோஸா. இதைத் தான் Travelling into the other என்கிறேன். ஆனால் தமிழ் எழுத்தாளர்களுக்கோ other என்பதே இல்லை,

இங்கே தான் வாசிப்பு என்ற செயல்பாடும் வருகிறது. போர்ஹேஸின் வாசிப்பு எப்படிப்பட்டது? அவர் ஒரு நடமாடும் நூலகம் என்பார்கள். இந்தியச் சமூகத்தைப் பற்றி ஒரு பத்து புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்வதை விட போர்ஹேஸின் “கூhந றயல வடி ஹட-ஆரவயளiஅ” என்ற ஒரே ஒரு சிறுகதையின் மூலம் நலம் அதிகம் தெரிந்து கொள்ள முடியும். வரலாறு, மானுடவியல், மொழியியல், அமைப்பியல் வாதம் போன்ற பல துறைகளில் அறிஞர்களில் கண்டு பிடித்த ஆய்வு முடிவுகளை போர்ஹேஸ் வெகு எளிதாக தனது கதைகளினூடே கண்டடைகிறார். போர் ஹேஸுக்கு அமைப்பியல்வாதம் தெரியாது என்றாலும் கூட அமைப்பியல்வாதிகள் எதிர் கொண்ட பல புதிர்களை போர்ஸேஸின் எழுத்து விடுவிக்கிறது.

மண்ணில் ஆழமாக ஒரு துளையிட்டால் நீர் பீறிட்டு அடிக்கும். ஆழம் எவ்வளவு போகிறதோ அவ்வளவு வீர்யமாகவும் உக்கிரமாகவும் இருக்கும் நீரூற்றின் வேகம். இதை நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் இலக்கிய வெளிவட்டத்தில் எழுதிய கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். சமீபத்தில் நீட்ஷே இந்த உதாரணத்தைக் கொடுத்திருப்பதைப் படித்தேன்.

நான் டோல்க்கீனை இன்னமும் படித்ததில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னால் இவரது எழுத்தை தர்மு சிவராமு எனக்கு அறிமுகப்படுதினார். இதே போல் கார்லோஸ் காஸ்டனாடாவைப் படிக்க வேண்டுமென ஒரு நண்பர் சிபாரிசு செய்கிறார். இதோடு, நானே தெரிவு செய்து சிலரை இன்னமும் படிக்காமல் வைத்திருக்கிறேன். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒரு வேளை டோல்க்கினின் நீரூற்று வெகு உக்கிரமானதாக இருக்கலாம்.

இரண்டு விதமான செயல்பாடு-ஒன்று-அரசியல் போராட்டம் பற்றிய பிரக்ஞை. இரண்டு-துறவு மனப்பான்மையுடன் செயல்படுவது-தத்துவத் தேடல்-இது போன்று, கலைஞனின் செயல்பாட்டை இப்படி இரண்டு எல்லைகளுக்குள் குறுக்க முடியுமா?

இந்த விஷயத்தை வேறொரு விதமாகப் பார்க்கலாம் என்று நினைக்கிறோம். தென்னமெரிக்காவிலம், இன்னும் உலகின் பல்வேறு மூலைகளிலும், அதிகாரத்திற்கெதிரான போராட்டங்களுக்கெல்லாம் சேகுவாராவின் பெயர் ஒரு குறியீடாகவே மாறியிருக்கிறது. இதே போல் Richard Feynmann, Stephen Hawking  போன்றவர்கள் இந்த உலகத்திற்கு வழங்கியுள்ளவை அதிகம்.

ஆக, கலைஞன் என்று தனியாக யாரும் இல்லை என்று தோன்றுகிறது. உதாரணமாக, தமிழ்ச் சூழலில், எழுத்தாளர்களை விட பெரியாரின் பங்களிப்பே அதிகம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
பயணம் பற்றி கூறினீர்கள், நீங்கள் சொல்லும் பெரியாருக்கு என்ன பயணம் இருக்கிறது? உங்களுடைய இலக்கிய / அரசியல் கொள்கையில் பெரியாரின் இடம் என்ன?

இரண்டு விதமான பயணங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் இருக்கிறார். நரசிம்மன் என்பது பெயர். வயது எண்பதுக்கு மேல் இருக்கும். எனது வட இந்தியப் பயணங்களில் அவரே எனது வழிகாட்டி. என்னோடு உடன் வராவிட்டாலும் ஒவ்வொரு இடமாக எனக்கு சொல்லித் தருவார். இமாசலப் பிரதேச எல்லையில் இருக்கும் ரோத்தங் பாஸுக்கு எப்படிப் போக வேண்டும்-தேசிய நெடுஞ்சாலை எண் : 1 என்ற அந்தச் சாலையின் அகலம் எவ்வளவு-அங்கிருந்து எப்படி எப்படிச் சுற்றி இந்தியாவின் மற்றொரு எல்லைப் புற மாவட்டமான லஹோல் ஸ்பிட்டிக்கு வர வேண்டும்-எவ்வளவு காலம் ஆகும்-அங்கே இருக்கும் பனிக் குகைகள்-வளைவுகள்-இன்னும் சொல்லப் போனால், குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் உள்ள குறிப்பிட்ட ஒருவரின் பெயர்-அவரைச் சந்தித்தால் என்னென்ன சாதகங்கள்-என்று மணிக்கணக்கில் சொல்லுவார். இமயமலைப் பிராந்தியத்தில்-அவர் கால் படாத இடமே இல்லை என்பது என்னுடைய எண்ணம். ரிஷிகேஷ் பற்றிச் சொல்லுவார். காசியிலுள்ள அத்தனை இடங்களும், சந்து பொந்துகளும் படித்துறைகளும் அவருக்கு அத்துப்படி. காசியில் சுடுகாட்டுப் பொறுப்பாளராக இருக்கும் ஹரிசிங்-அங்கே கங்கைக் கரையில் மரணத்துக்காகக் காத்திருக்கும் முதுமையின் விளிம்பில் நிற்கும் ஆண்கள், பெண்கள்-என்று ஏராளமாகச் சொல்லுவார். போய்ப் பார்த்தால், எல்லாமே சரியாக இருக்கும். ஆனால் சமீபத்தில் தான் தெரிந்தது-அவர் சென்னைக்கு வடக்கே சென்றதே இல்லை என்று.

போர்ஹேஸும் அதிகம் பயணங்கள் செய்ததில்லை. இந்தியாவுக்கு அவர் வந்ததே இல்லை. ஆனால் இந்தியாவைப் பற்றி அவர் நிபுணர். காரணம்-வாசிப்பே அவரது பயணமாக இருந்தது.

பெரியாரும் அப்படியே. உலகம் பூராவையும் சுற்றுவதை விட அதிக அளவு தமிழ்நாட்டில் சுற்றியவர் அவர்.

இலக்கியவாதிகளுக்கு அரசியல் பிரக்ஞை தேவை? அரசியல்வாதிகளுக்கு-பெரியார் போன்றவர்களுக்கு இலக்கியம் தேவையில்லையா? எழுத்தாளர்களை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்?

பெரியாருக்கு பியானோ வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மைக்ரோ பயாலஜியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு மலையேற்றம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? பெரியாரின் துறை வேறு. அதில் அவர் ஒரு சாதனையாளர். அவர் சிந்தித்த பல விஷயங்கள் அவரது காலத்திற்கு மிகவும் முன்னால் சென்றவை. Some people are born posthumously என்பார் நீட்ஷே. இது நீட்ஷேவுக்கே மிகவும் பொருந்தும் என்று சொல்லுவார்கள். இது பெரியாருக்கும் பொருந்தும். அவரது சிந்தனைகள் அவரது இறப்புக்குப் பின்னும் புதிதாக உள்ளன.

உலகிலேயே மிக அதிகமான சொற்களைப் பேசியவராக அவர் இருக்கக் கூடும். ஒரு நாளில் ஐந்து கட்டங்கள். இப்படியே ஐம்பது ஆண்டுகள். மலைப்பாக இருக்கிறது.

மூத்திரம் போவதற்கான டியூபைப் பிடித்துக் கொண்டு ஊர் ஊராக கலைந்த அந்தப் பெரியவர் ஒரு நாவலின் முக்கியப் பாத்திரமாகவே எனக்குள் கற்பிதங் கொண்டிருக்கிறார். பெரியாரின் இயக்கத்தை இலக்கியத்துக்குள் கடத்துவதே எனது எழுத்தின் அடிப்படை என்று நினைக்கிறேன்.

ஆனால் இந்தப் பதிலில் எனக்குத் திருப்தியில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாகக் குறுக்க முடியுமா? முடியாது. வில்லியம் பர்ரோஸுக்கும் பெரியாரின் நடவடிக்கைகளுக்கும் மிகுந்த ஒற்றுமை இருக்கிறது. பெரியார் வெளிநாடு சென்றிருந்த போது-நிர்வாணிகளாக இருந்த குழுவினரைச் சந்தித்திருக்கிறார். அப்போது பெரியாரும் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆலன் கின்ஸ்பெர்கின் நிர்வாணப்படம் நமக்குத் தெரியும். க்ஷநயவ றசவைநசள என்று அழைக்கப்பட்ட-பின்னாளில் ஹிப்பி இயக்கத்துக்கு முன்னோடியாகவும் உந்து சக்தியாகவும் இருந்த-வில்லியம் பர்ரோஸ், ஆலன் கின்ஸ்பெர்க், ஜாக் கெரோவாக் போன்ற எழுத்தாளர்களின் கலக இயக்கத்தோடு பெரியாரின் வாழ்வும், எழுத்தும், பேச்சும் இணைத்துப் பார்க்கத்தக்கது. எழுத்தாளர்கள் தங்கள் தேசம், மதம், ஜாதி போன்றவற்றுக்கு விசுவாசிகளாக இருந்த வேளையில் பெரியார் ஒருவர் தான் தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் என்ற மூன்றையும் ஒருவர் துறக்க வேண்டும் என்று சொன்னார்.

How can a literary person possess anything?? இந்த விதத்தில் பெரியாரை ஒரு literary phenomenon என்று சொல்லுவேன்.

இதற்கும் மேலாக, நீட்ஷேவுக்கும் பெரியாரின் சிந்தனைகளுக்கும் உள்ள ஒற்றுமை பற்றியும் நீங்கள் கவனிக்க வேண்டும். இது விரிவான ஆய்வுக்குரியது என்பதால் பிறகு இது பற்றிப் பேசுவேன்.
நீங்கள் கூறும் இலக்கிய அளவுகோல்களின் படி சுந்தர ராமசாமியின் பள்ளம், கி.ராஜநாராயணனின் கதவு போன்று இன்னும் பல கதைகள் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது, நீங்கள் தமிழ் எழுத்தை வறட்சியாகப் பார்ப்பது ஏன்?

நீங்கள் இப்படி இரண்டு கதைகளைக் குறிப்பிட்டால் நான் என் பங்குக்கு இரண்டு கதைகளைக் குறிப்பிடுவேன். ஏற்கனவே சொன்ன எம்.வி.வெங்கட்ராமின் பைத்தியக்காரப் பிள்ளை. லா.ச.ராவின் வேண்டப்படாதவன். இப்படியே ஒரு பட்டியல் போட்டால் கடந்த ஐம்பது ஆண்டுகளின் முக்கியமான கதைகள் என்று ஒரு முப்பது தேறுமா? போனால் போகிறதென்று மௌனிக்கு ஒரு கதை, புதுமைப் பித்தனுக்கு ஒரு கதை என்று கொடுத்தால் கூட முப்பது தேறுமா என்பது சந்தேகம். சரி, ஒரு பேச்சுக்கு-முப்பது கதைகள் தேறுகின்றன என்று வைத்துக் கொண்டால்-இது ஒரு மொழிக்கு வெட்கக் கேடான விஷயம் இல்லையா?

நான் குறைந்த பட்சம் பதினைந்து உலகச் சிறுகதைகளையேனும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கடல்கன்னி என்று ஒரு கதை. இதற்கு இணையான ஒரே ஒரு தமிழ்க் கதையை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கொர்த்தஸாரின் ‘சந்திப்பு’ என்று ஒரு கதை. ரத்த வேட்கை-என்று ஒரு Sadean கதை. மொழியில் பலவித சோதனைகளைச் செய்து பார்க்கும் ரொனால்ட் சுகேனிக்கின் ஒரு சிறு கதை. ‘மழை’ என்ற மேஜிகல் ரியலிசக் கதை.

இங்கே தமிழில் பிரச்சனை என்னவென்றால்-இதுவரை இங்கே செயல்பட்டிருப்பது Apollonian Character. பொருள்?  Individual as seperate from the rest of reality.. எனவே Individual தனிமைப் பட்டுப் போகிறார்.

இங்கே Dionysian spirit  இல்லை. Chorus இல்லை. நாம் முழுமையின் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. வாழ்க்கையில் ஈடுபடவில்லை. அதனால் Joy இல்லை-pleasure of the text இல்லை-Carnival  இல்லை-immediacy  இல்லை-sorrow  இல்லை-தமிழ் வாழ்வின் துக்கமும் சந்தோஷமும் கொண்டாட்டமும் கோரஸாக மாறவில்லை.

இதுவே தமிழ் இலக்கியத்தின் குறைபாடு, தயிர்வடை sensibility  என்று சொன்னதற்கு விளக்கம் கேட்டவர்கள் இப்போது நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். எதிர் கொள்ள வேண்டும்.

தலித்தியம், பெண்ணியம்-இதை பிரதிநிதித்துவப் படுத்துவது தான் இலக்கியத்தின் அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டுமா?

இலக்கியத்துக்கு இலக்கியம் என்பதைத் தவிர வேறு எவ்வித முன் நிபந்தனைகளும் கிடையாது. ஆனால் தலித்துகள், பெண்கள் என்ற பகுதிகளிலிநது தமிழில் பதிவுகளே இல்லை. அதனால் இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியுள்ளது. Apologia  வை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ‘நான் ஒரு தலித்-அதனால் முப்பது ரன்கள் எடுத்து விட்டால் அது செஞ்சுரி’ என்று சொன்னால் அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். விவியன் ரிச்சர்ட்ஸ் தன்னுடைய ஒவ்வொரு 4 ஐயும் ‘வெள்ளை இன-வெறிக்கு எதிரான அடி’ என்று கூறினான்.

ஆனால் இங்கோ அச்சு பிச்சு என்று உளறி வைத்து விட்டு தலித் இயக்கம் என்கிறார்கள். இதற்கு உதாரணம் இமயம். அவர் எழுத்து எனக்குSanctum Sanctorum  ஐயே நினைவு படுத்துகிறது. அவர் எழுத்தில்”புனிதப் புளிப்பு” தாங்க முடியவில்லை. க்ரியா ராம கிருஷ்ணன் போன்றவர்கள் இந்தப் புனிதங்களை தூக்கி விடுவதன் அரசியலும் இதனால் தான்.

வேறு சிலர் வெறும் கோபதாபங்களையும், ஏச்சுகளையும், வகைகளையும் எழுதி தலித் எழுத்து என்கிறார்கள். தான் ஒரு தலித் என்பதனாலேயே தான் எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற அசட்டு நம்பிக்கையில் இருக்கிறார்கள் இவர்கள்.
இலக்கியம் என்பது மிகுந்த உழைப்பை வேண்டும் ஒரு கலை. நீட்ஷே போன்றவர்கள் ஒரு நாளில் பதினெட்டு மணி நேரம் படித்தார்கள் என்று அறிகிறோம். ஒரு இசைக் கருவியைப் பயின்று கொள்வதற்கே தினமும் ஆறு மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு நாள் பயிற்சி தவறினாலும் தொடர்ச்சி விட்டுப் போகிறது. அப்படியானால் எழுத்துக்கு எவ்வளவு பயிற்சி வேண்டும்?

ஒரு மாட்டை அறுத்துக் கூறு போடுவதற்கும், ஆழ் கடலில் மீன் வேட்டைக்குச் சென்று வருவதற்கு எவ்வளவு பெரிய பயிற்சி தேவைப்படுகிறது? அதுவே தான் எழுத்துக்கும்.

மலும், தலித், பெண் என்றெல்லாம் இனிமேல் ஒற்றை அடையாளத்துக்குள் குறுக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனென்றால்-ஒரு மேட்டுக்குடி பிராமணப் பெண்ணை விட ஒரு தலித் ஆண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறான். ஒரு தலித் ஆணை விட தலித் பெண் அதிக ஒடுக்குதலுக்கு ஆளாகிறாள். ஒரு தலித் பெண்ணை விட ஒரு ஏழை பிராமணப் பெண் பாலியல் ரீதியாக அதிக ஒடுக்கு முறைக்கு ஆளாகிறாள். இவர்கள் எல்லோரையும் விட அலிகளின் நிலைமை மிகவும் அவசியமானது. இன்னும் நிறைய விளிம்பு நிலை மனிதர்கள் இருக்கிறார்கள். சிறு குற்றவாளிகள்-நாடோடிகள்-செக்ஸ் தொழிலாளிகள்-ஹோமோ செக்ஷுவல்கள்-அனாதைகள்-குழந்தைத் தொழிலாளர்கள்-பிச்சைக்காரர்கள் என்று இவர்கள் எழுதினால் அந்த எழுத்தையும் தலித்தியம் என்று சொல்ல முடியுமா?

எந்த எழுத்துமே Universalise  ஆக மாற வேண்டும். Mediocrity  க்கு இலக்கியத்தில் மன்னிப்பே கிடையாது.

எதார்த்தவாதம் பிரதிநிதித்துவம் செய்யும் பொது மனிதனின் அக / புறப் பிரச்சனைகளை பேசிய காலம் போக, சாதி-குலக் குறி நோக்கிச் செல்லும் போக்கு, தனித்த அடையாளக் கூட்டமைப்பு போன்றவைகளைப் பெருக்கும் நிலை ஆரோக்யிமானதா?

இன்றைய நிலையில் பெரியாரையே நாம் திரும்ப வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வெகுஜன அரசியல் போக்குகளின் செல்வாக்கையே தமிழ் எழுத்திலும் காண முடிகிறது. வெகு ஜனத் தளத்தில் சாதிச் சங்கம் என்றால் இலக்கியத்தில் சாதீய இலக்கியம். சுய இரக்கம், மத்திய தர வர்க்க மதிப்பீடுகள், தாங்களே அதிக பட்சம் ஒடுக்கப்பட்டதான கற்பிதங்கள், ஜாதி அபிமானம் போன்றவை இவ்வகை எழுத்துக்களின் அடையாளங்கள். இந்த வகையில் தமிழ் எழுத்து இன மைய வாதத்தை நோக்கிச் செல்லும் அபாயத்தில் இருக்கிறது.

தனது அடையாளத்தைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த அடையாளத்தை transcend செய்ய வேண்டும்.

வில்லியம் பர்ரோஸ்-அமெரிக்க ராணுவத்தின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக தன்னை / தனது உடலை தகுதியில்லாததாக ஆக்கிக் கொள்வதற்காக போதை ஊசிகளை தனது உடலில் ஏற்றிக் கொண்டான். அப்போது அவன் குறிப்பிட்டான்-நான் போட்டுக் கொள்ளும் ஒவ்வொரு (போதை) ஊசியும் அமெரிக்க ராணுவம் வியத்நாமில் போடும் ஒவ்வொரு குண்டுக்கும் எதிரானது. அவனது  Naked Lunch   போன்ற நாவல்களும் ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை தாண்டிச் செல்லக் கூடியது. தமிழ் இலக்கியம் உலகத்தரமான எழுத்தை உருவாக்க முடியாததன் காரணம்-இந்த transcendence  இங்கே நடக்கவில்லை என்பது தான்.

நன்றி !

சந்திப்பு : ஆர்.முத்துக்குமார்
வெப்உலகம்.காம்

Anandha Vikadan this week – Charu Nivethitha in ‘Enna Chethukkiya 7 Naatkal’

July 9, 2009 2 comments

http://www.vikatan.com/av/2009/jul/15072009/av0909.asp

இந்த வாரம்: சாரு நிவேதிதா — என்னைச் செதுக்கிய 7 நாட்கள்!

வாக்கிய அலங்காரங்களோ, வர்ணனை வார்த்தைகளோ எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு அடையாளம் அல்ல! வாழ்க்கையின் சுவையை – இனிப்போ, கசப்போ -‘உள்ளது உள்ளபடி’ உணர்த்துபவர் இங்கே தன் பெர்சனல் பக்கங்களைப் புரட்டுகிறார்…

———————————————————–

001 ”நாகூர் தேசிய உயர்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பில் குரு என்று ஒரு மாணவன் புதிதாக வந்து சேர்ந்தான். எங்களைவிட நாலைந்து வயது பெரியவன். சில புதிய ஆசிரியர்கள் அவனையும் ஓர் ஆசிரியர் என்றே நினைத்துவிடுவார்கள். அவ்வளவு பெரியவன். அது ஓர் ஆணின் வாழ்க்கையில் முதன்முதலாகக் காமம் எட்டிப் பார்க்கும் வயது. அதற்கேற்ப சரீரத்திலும், எண்ணங்களிலும் ஏற்படும் மாற்றங்கள்.

குருதான் எங்களுக்கெல்லாம் ஹீரோ. கொக்கோகப் புத்தகங்களைப் படித்து விட்டு வந்து கதை கதையாகச் சொல்லுவான். அவனுடைய கதைகளுக்குமாற்றாக நானும் அவ்வப்போது கதைகள் சொல்லுவேன். காதல் கதை, பேய்க் கதை, வீரதீர சாகசக் கதை என்று பலவிதமான கதைகள்! ஒரு கட்டத்தில் குருவிடம் சரக்கு தீர்ந்துவிட்டதால், நானே எல்லாக் கதைகளையும் சொல்ல நேர்ந்தது. அப்படிக் கதை சொல்வதற்காகவே நான் நிறைய கதைப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படிக்கும்படி ஆனது. குருவே என்னிடம் வாயைப் பிளந்தபடி கதை கேட்டதால், குருவுக்குக் கொடுக்கப்பட்டு இருந்த ஹீரோ பட்டம் எனக்கு வந்து சேர்ந்தது.

அந்தப் பட்டம் தந்த போதையால் மேலும் மேலும் புத்தகங்களைப் படித்து, மேலும் மேலும் கதைகள் சொன்னேன். பள்ளி நூலகத்தில் இருந்து 1001 அராபிய இரவுகளை எடுத்து வந்து பரீட்சைக்குப் படிப்பது போல் படித்தெல்லாம் கதை சொல்லி இருக்கிறேன். அப்போதுதான் கற்றுக்கொண்டேன் வசீகரமான கதைகளைச் சொல்வது எப்படி என்ற கலையை!”

———————————————————–

002 ”டெல்லியில் ஓர் அரசு அலுவலகத்தில் நான் ஸ்டெனோ வாக இருந்தபோது என் அதிகாரி ஒரு பெண். அரசு அதிகாரிகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் என்பதாலோ என்னவோ(!), அவர்களுக்கு மட்டும் சில சலுகைகள் உண்டு. மாதாமாதம் அவர்களுக்கு சோப்பு, சீப்பு, கண்ணாடிக்கு என்று அலவன்ஸ். அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுத்து, அதற்கு அக்கவுன்ட்ஸ் பிரிவில் கணக்கும் கொடுக்க வேண்டியது ஸ்டெனோவின் பொறுப்பு.

அந்த அதிகாரி ஒரு பரம்பரைப் பணக்காரர். அரசியலில் பெரும் செல்வாக்கு உள்ளவர். ஆனாலும் மாதா மாதம் சோப்பு, சீப்போடு அவருக்கு இரண்டு பேக் சானிட்டரி நாப்கின்களும் வாங்கச் சொல்வார். இதை நான் சானிட்டரி நாப்கின்ஸ் என்று கணக்கு எழுதக்கூடாது. ‘வேறு ஏதாவது எழுதிவிடுங்கள்’ என்பார். அந்த வேறு ஏதாவதை மாதாமாதம் புதிது புதிதாகக் கண்டுபிடிப்பதற்குள் எனக்குத் தாவு தீர்ந்துவிடும். ஒரு பெரிய எழுத்தாளனாக வேண்டும் என்று கனவு கண்ட நாம், இப்படி ஓர் இளம் பெண் அதிகாரிக்கு சானிட்டரி நாப்கின்ஸ் வாங்கிக் கொடுத்து, அதற்கு பொய்க் கணக்கு எழுதுகிறோமே என்று வருத்தப்படாத நாளே கிடையாது.

ஒரு நாள்… அந்த அதிகாரி வெளிநாட்டில் இருந்து சுங்க வரி கட்டாமல் நகைகள் கடத்தி வந்து, விமான நிலையத்தில் சிக்கிச் செய்தியாகி இருந்தார். அழகிய அதிகாரி என்பதால் எட்டுக் கால முன்னுரிமை கொடுத்துப் பத்திரிகைகளில் பெரிய பெரிய புகைப்படங் களாக வெளியிட்டு இருந்தார்கள். திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டபோது, எனக்குப் பலவிதமான கேள்விகள் எழுந்தன.

கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்தும், இவர் ஏன் திகார் ஜெயிலில் அடைந்துகிடக்க வேண்டும்? அங்கு இனி இவருக்கு யார் சானிட்டரி நாப்கின் வாங்கித் தருவார்கள்?”

———————————————————–

003 ”எனக்கு விலங்குகள் மீது அக்கறையே இருந்தது இல்லை. அதெல்லாம் ஒரு தொந்தரவு என்றே எண்ணி வந்திருக்கிறேன். காக்காய் கத்தினால் பிடிக்காது (என்ன இது ஒரே சத்தம்?). பல்லி பிடிக்காது (ஏதாவது சமையலில் விழுந்துவிட்டால் என்ன ஆவது?). நாய் பிடிக்காது (கடித்துவிட்டால்?). ஈ, எறும்பு எதுவுமே பிடிக்காது. எல்லாமே மனிதனின் சத்ரு என்று ஓர் எண்ணம்.

எனக்குத் திருமணமான புதிது. காதல் திருமணம்தான் என்றாலும், என் மனைவி அவந்திகாவும் நானும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டு இருந்த காலகட்டம். ஒருநாள் கதவருகே நின்றிருந்த அவந்திகா, ‘அஜ்ஜு குட்டி, செல்லக் குட்டி, உனக்கு என்ன வேணும்?’ என்று எதையோ கொஞ்சியபடி பேசிக் கொண்டு இருந்தாள். பூனையாக இருக்குமோ என்று சந்தேகத்துடன் என்னவென்று கேட்டேன். பல்லி என்றாள். என்னால் நம்ப முடியவில்லை. பூனையைக் கொஞ்சிப் பார்த்திருக்கிறேன்; நாயைக் கொஞ்சிப் பார்த்திருக்கிறேன்; யாராவது பல்லியைக் கொஞ்சுவார்களா? ‘இல்லை. இது என் குழந்தை மாதிரி. தினமும் வரும்’ என்றாள். அப்புறம்தான் கவனித்தேன். இதை நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, தினந்தோறும் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில், அந்தப் பல்லி அங்கே வந்து அவள் பேசுவதைக் கேட்டுவிட்டுப் போனது.

அந்தச் சம்பவம் விலங்குகளையும், மற்ற ஜீவராசி களையும் குறித்த என் பார்வையை மாற்றியது. ‘உனக்கு இந்தப் பூமியில் வாழ எத்தனை உரிமை இருக்கிறதோ… அதே உரிமை மற்ற ஜீவராசிகளுக்கும் இருக்கிறது தானே?’ என்று என்னையே கேட்டுக்கொண்டேன். ஜீவகாருண்யத்தை நேருக்கு நேர் கற்றுக் கொடுத்த நாள் அது!”

———————————————————–

004 ”நான் சிறிது காலம் நாத்திகனாகவும், பிறகு அக்னாஸ்டிக்காகவும் (கடவுள் உண்டு என்றோ, இல்லை என்றோ நம்பாத நடுவாந்திர ஜென்மங்கள்) இருந்திருக்கிறேன். எந்த நிலையில் இருந்தாலும், கோயில்களுக்கும் தேவாலயங்களுக்கும் செல்லத் தவறியதே இல்லை. பக்திக்காக அல்ல; அங்கே சென்றால் மனசுக்குப் பிடிக்கும். அதனால் போவேன். அப்படி ஒருமுறை ஜம்முவில் உள்ள வைஷ்ணவோ தேவி கோயிலுக்குச் சென்றேன். கீழே இருந்து மலை உச்சிக்கு ஏற ஏழெட்டு மணி நேரம் பிடித்தது. இரவு முழுதும் ஏறி காலையில் உச்சியை வந்து அடைந்தேன். ஆனால், அங்கே நான் எதிர்பார்த்தபடி எந்தக் கோயிலும் இல்லை. அவ்வளவு நேரம் நடந்து வந்து பயனில்லாமல் போய்விட்டதே என்று ஒரு கணம் தோன்றியது.

அப்போது அங்கிருந்த அறிவிப்புப் பலகையில் ஒரு வாசகத்தைக் கண்டேன். ‘தேவி இங்கே இயற்கை சொரூபியாக விளங்குகிறாள்!’ பிறகுதான் அந்த இடத்தை நிதானமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இமயமலையின் ஆயிரக்கணக்கான சிகரங்களில் ஒன்று அது. சொர்க்கம் என்ற ஒரே வார்த்தை போதும் அதை வர்ணிக்க. அப்படி ஒரு பேரழகு. அப்போதுதான் கிடுகிடுவென்று யாரோ என் காதுகளில் உபதேசிப்பது போல் ஏராளமான விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. கோடிக்கணக்கான மனிதர்கள் இன்றும், நேற்றும், நாளையும் வாழ்வதற்கு வழி வகுத்துக் கொடுத் திருக்கும் இந்தப் பூமியை நாம் மதிக்கிறோமா? நன்றி பாராட்டுகிறோமா? பூமி பூஜை செய்தால் பகுத்தறிவு கொண்டு நகைக்கும் நாம், இந்தப் பூமியை மனித வாழ்வுக்குத் தகுதியானதாக ஆக்கியிருக்கிறோமா? சாயக் கழிவுகளைக் கொட்டி நொய்யல் நதியைக் கொன்றுவிட்டோம். 100 ஆண்டுகளுக்கு முன்பு படகுகள் ஓடிக்கொண்டு இருந்த கூவம் நதிஇன்று சாக்கடையாகிவிட்டது.

ஆனால், இவ்விஷயத்தில் மேற்குலகம் விழித்துக்கொண்டுவிட்டது. மேற்கைப் பார்த்துக் காப்பியடிக்கும் நாம், இந்த நல்ல விஷயத்தை மேற்கிலிருந்து கற்றுக்கொள்ளத் தவறிவிட்டோம். உதாரணமாக, ஒரே ஒரு குப்பையைக்கூடப் பார்க்க முடியாத சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’ என்ற இடம் மட்டும் நம் ஊரைப் போலவே குப்பையாக இருக்கிறது!”

———————————————————–

005 ”ஓர் இயக்குநர் நண்பர் என்னை அவருடைய படப்பிடிப்பைப் பார்க்க அழைத்திருந்தார். அது ஒரு பாடல் காட்சி. ஆட்டக்காரர்களில் பாதி பெண்கள்; பாதி ஆண்கள். ஒவ்வொருவராக டான்ஸ் மாஸ்டரின் கால் தொட்டு வணங்கிவிட்டு, ஒரு மதிலின் மேல் ஏறிக்கொண்டு இருந்தார்கள். பெண்கள் மினி ஸ்கர்ட் அணிந்திருந்தனர். அன்றைய தினம் அந்த மதில் சுவரின் மீதுதான் ஆட வேண்டும் போலிருக்கிறது.

நாம் ஒரு சினிமாவுக்குப் போகிறோம். சூர்யா நன்றாக ஆடினார், விஜய் நன்றாக ஆடினார் என்கிறோமே தவிர, அந்த ஹீரோ, ஹீரோயினைச் சுற்றி ஆண்களும் பெண் களும் ஆடுகிறார்களே, அவர்கள் யார்? கேமராவில் முகம்கூட சரியாகத் தெரியாத அவர்களுடைய பெயர் என்ன? அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள்? அவர் களுக்கும் காதல், கல்யாணம், குடும்பம், குழந்தை, துக்கம், சந்தோஷம் எல்லாம் இருக்கும்தானே? வியர்க்க விறு விறுக்க ஆட்டம் போடும் இவர்களுக்கும் இந்தப் படத் துக்கும் என்ன சம்பந்தம்?

‘அண்ணே, ஸ்கர்ட் பறக்குதுண்ணே!’ – ஒரு பெண் ணின் கீச்சுக் குரல் என் சிந்தனையைத் துண்டித்தது. குரல் வந்த திசையில் பார்த்தால், பெண்கள் எல்லாம் காற்றில் பறக்கும் ஸ்கர்ட்டோடு போராடிக்கொண்டு இருந்தார்கள். டான்ஸ் மாஸ்டர் அவர்களைக் கீழே இறங்கி வரச் சொல்லி, ஸ்கர்ட் பறக்காமல் இருக்க ‘பின்’ செருகிக்கொள்ளச் செய்து மீண்டும் மேலே போகச் சொன்னார். மீண்டும் பாடல் காட்சி துவங்கியது.

என்னைப் பொறுத்தவரை அந்த மூன்று வார்த்தைகள் கனவுத் தொழிற்சாலையின் குரூர நிஜத்தை உணர வைத்தன. அதில் இருந்துதான் எந்த விஷயத்திலும் அதன் மையத்தை மட்டும் பார்க்காமல், ஓரத்தையும் விளிம்பையும் கவனிக்க ஆரம்பித்தேன்!”

———————————————————–

006 ”ரமலான் மாதத்தின்போது நோன்பு இருக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாளைய விருப்பம். அதில் எனக்கு ஒரே ஒரு பிரச்னைதான் இருந்தது. அதிகாலையில் நோன்பைத் துவக்குவதற்கு முன்னால் சிறிது சாப்பிட்டுக்கொண்டால், கொஞ்சம் தெம்பாக இருக்கும். சரி, அதையும் செய்துவிடலாம் என்று ஒரு வெள்ளிக்கிழமையன்று இரவு இரண்டரை மணிக்கே எழுந்து சிறிய அளவில் ஒரு சமையலைச் செய்தேன். நாலேகால் அளவில் நோன்பை ஆரம்பிக்க வேண்டும் என்பதால், குளித்துவிட்டு மூன்றரை மணிக்கே சாப்பிட ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் சாப்பிட்டுப் பழக்கம் இல்லாததால் சாப்பிட முடியவில்லை. அதனால், தண்ணீரை மட்டும் குடித்துக்கொண்டேன். இனிமேல் மாலை ஆறு மணி அளவில் நோன்பு துறக்கும் வரை சாப்பிடக் கூடாது; தண்ணீர் அருந்தக் கூடாது; எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது.

வாழ்க்கையில் அப்படி ஒரு நோன்பு இருப்பது அதுவே முதல் முறை என்பதால், அந்த அனுபவம் கடுமையாக இருந்தது. மதியம் இரண்டு மணிக்கு மேல் சாப்பாட்டைத் தவிர வேறு எந்தச் சிந்தனையுமே வரவில்லை. இறைச் சிந்தனையில் மனதைச் செலுத்த முயற்சித்தேன். ம்ஹ§ம்… முயற்சி பலன் அளிக்கவில்லை. பழக்கமே இல்லாததால், மனமும் உடலும் சோறு சோறு என்றே பரபரத்தன. கிட்டத்தட்ட நான்கு மணிக்கு மயக்கமே வந்துவிட்டதுபோல் இருந்தது. பல ஆண்டுகளுக்கு முன் பட்டினி கிடந்திருக்கிறேன். ஆனால், அது பட்டினி. இது நீர்கூட அருந்தாமல் இருக்கும் நோன்பு. இரண்டுக்கும் பெருத்த வித்தியாசம் இருந்தது.

அன்றைய தினம்தான் முதன்முதலில் பசி, தாகம் என்ற இரண்டு விஷயங்களையும் அனுபவபூர்வமாக உணர்ந்தேன். வார்த்தைக்கும், அதை அனுபவித்து உணர்வதற்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. இவ்வளவுக்கும் ஆறு மணிக்குச் சாப்பிட்டுவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்துமே என்னால் தாங்க முடியவில்லை. அப்படியானால் அந்த நம்பிக்கையே இல்லாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்? இந்தக் கேள்வியையே அன்றைய நோன்பு எனக்குக் கற்றுக்கொடுத்தது!”

———————————————————–

007 ”ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு கைகளிலும் இரண்டு ஆஸ்கர் கோப்பைகளை உயர்த்திக் காண்பித்தபடி நிற்கும் காட்சி எனக்குப் பலவித சிந்தனைகளை ஏற்படுத்தியது. ஆஸ்கரைவிடவும் உயர்ந்த விருதுகள் வாங்குவதற்குத் தகுதியானவர் ரஹ்மான். ஆனாலும், அவருடைய வாழ்வில் நடந்த அதிசயங்களுக்கு ஒரு காரணம், ஆந்திராவின் கடப்பாவில் உள்ள பெட்டா தர்காவின் ஹஜ்ரத் ஆரிஃபுல்லா ஹ§சேனியின்ஆசி.

நான் பாபாவின் பக்தன் என்றாலும், கண் முன்னே ஒரு சூஃபியைப் பார்க்க வேண்டும் என்று நீண்ட காலமாக எனக்குள் ஒரு விருப்பம். இந்த நிலையில்தான் மணலூர்ப்பேட்டையில் உள்ள உஸ்மான் சித்தர் என்ற பெரியவர் உதவியால் நான் அப்படி ஒரு சூஃபியைத் தரிசித்தேன். உஸ்மான் சித்தரே பல சித்து வேலைகள் தெரிந்தவர்தான். அவர் கைகளில் இருந்து விபூதியாகக் கொட்டுகிறது என்பதால், அவரை ‘விபூதிச் சித்தர்’ என்கிறார்கள். வள்ளலாரின் தீவிர பக்தர். ஆனால், முஸ்லிம். கடும் சைவ உணவுக்காரர். ஆன்மிகச் சொற்பொழிவாளர்.

இவர் என்னை பெட்டா தர்கா இருக்கும் அதே கடப்பா மாவட்டத்தில் உள்ள கமலாபுரம் என்ற ஊருக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் இவ்வ ளவு காலமாக நான் தேடிக்கொண்டு இருந்த அந்த மகானைச் சந்தித்தேன். இந்த உலகத்தின் அருளை எல்லாம் தன் கண்களில் தேக்கிவைத்திருந்த அந்த ஹஜ்ரத் என்னைப் பார்த்தபோது, எனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை எழுத்தில் வடிக்க முடியும் என்று தோன்ற வில்லை.

ஹஜ்ரத் ஒரு வள்ளல். மக்கள் எதைப்பிரார்த்தித்துக் கொண்டாலும் அதை அவர்களுக்கு வழங்குகிறார். அந்தக் கணத்திலிருந்து என் வாழ்க்கை வேறு திசையில் சென்றுகொண்டு இருக்கிறது. அந்த சூஃபி ஞானியின் பெயர்: ஸஹிருத்தீன் ஷா காதிரி. எனக்குள் இதுவரை சேகரித்துவைத்திருந்த அகங்காரம், திமிர், ஆணவம் எல்லாவற்றையும் அவர் பாதங்களில் வைத்துவிட்டு, அவர் அளித்த அருளையும் ஆசியையும் வாங்கிக் கொண்டு திரும்பினேன்!”

மூன்று தெய்வங்கள் : யமுனா ராஜேந்திரன்

June 30, 2009 Leave a comment

By இனி • Jun 23rd, 2009 • Category: அரசியல் – சமுகம்

1.

மூன்று தெய்வங்கள் என்று சொன்னேன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி அல்ல, அவரை விடவும் நடிப்புக் கில்லாடிகளான தமிழகத்தின் மூன்று தெய்வங்கள் பற்றிச் சொல்லப் போகிறேன்.

முதல் தெய்வம் ஜெயமோகன். இரண்டாவது தெய்வம் சாருநிவேதிதா. மூன்றாவது தெய்வம் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ் இலக்கியவாதிகளுக்குப் பொதுவாக அரசியல் ஈடுபாடு என்பது இருப்பதில்லை. அவர்கள் வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுப்பதும் இல்லை. தமிழ் இலக்கியச் சூழலில் ஜெயகாந்தன் ஒருவரே நானறிந்தவரை ஒரேயொரு விதிவிலக்கு. ஒப்பமுடியாத அவரது அரசியலுக்கும் அப்பால், தான் சரி எனக் கருதியதை வெளிப்படையாக எழுதியும், கட்சி மேடைகளில் கர்ஜனையுடன் பேசியும் வந்தவர் அவர்.

அவரது பார்ப்பனிய சார்புகளையும் இந்துத்துவ வேர்களையும் தற்போது நிறையக் கட்டுடைப்பு செய்கிறார்கள். அதற்கான அரசியல் காரணங்கள் தமிழ் கலாச்சாரச் சூழலில் உண்டு என்றாலும், ஜெயகாந்தன் ஒரு போதும் இடதுசாரிகளுக்கு எதிராகவும், மார்க்சிய புரட்சிகர மரபு தொடர்பாகவும் இழிவாகப் பேசியவரோ, எழுதியவரோ, அல்லது இவற்றுக்கு எதிராக நிற்பதை ஒரு அரசியலாக ஏற்றவரோ இல்லை. இன்றைய கட்டுடைப்பு விமர்சகர்கள் ஜெயகாந்தனை நிராகரிக்கவும் செய்யலாம்.

எவ்வாறு தமிழ் திரைப்பட வரலாற்றில் எம்.ஜி.ராமச்சந்திரன் வழி விளிம்புநிலை மனிதர்கள் தமிழ்த்திரைக்குள் பிரவேசித்தார்களோ, அதுபோல ஜெயகாந்தன் வழிதான் விளிம்புநிலை மனிதர்கள் வெளிப்படையாகத் தமிழ் இலக்கியத்திற்குள் பிரவேசித்தார்கள். இந்தத் தமிழ்க் கலாச்சார வரலாற்றை எந்தக் கொம்பனும் புறந்தள்ள முடியாது.

சுஜாதாவின் அடியொற்றியபடி இனிவருகிறார்கள் தமிழ் இலக்கிய வானின் மூன்று தெய்வங்கள். மரணத்திற்குச் சில மாதங்கள் முன்பாகச் சுஜாதா பார்ப்பனர் சங்க மாநாட்டு மேடையில் முழங்கினார். அசோகமித்திரன் தமிழகப் பார்ப்பனர்களின் நிலைமையை இரண்டாம் உலகப் போர்க்கால யூதர்களின் துயரநிலைமையுடன் ஒப்பிட்டுப் பேசினார். அசோகமித்திரன் அவரது கதைமாந்தர்கள் போலவே அமைதியானவர். ஆனாலும் என்ன, அமைதியின் பின்னால் பேரழிவின் தடங்களும் இருக்கவே செய்கிறது.

சுஜாதா மரணமுற்றபோது திடும்மென்று சாருநிவேதிதா சுஜாதா எனது ஆசான் என்றார். எஸ்.ராமகிருஷ்ணன் வாத்தியார் என்றார். இலக்கியத்தில் எவரும் கதை அளந்து கொண்டே இருக்கலாம். அரசியலில் மனோரதியத்திற்கோ உணர்ச்சிவசமான கொந்திப்புகளுக்கோ எந்தவிதமான அர்த்தமும் இல்லை. உணர்ச்சிகரமாக்கப்பட்ட அரசியலின் பின்னிருப்பது கூட, உணர்ச்சி ஊட்டுபவரினது அதிகார அபிலாஷைகளும், அவர்தம் பிரபலம் நோக்கிய நடவடிக்கைகளுமாகத்தான் இருக்கிறது.

உணர்ச்சியூட்டும் சாதுரியமான அதிகார நோக்கு கொண்டவராக ‘வாழும் தமிழ்’ கலைஞர் கருணாநிதியை நாம் சுட்டு முடியுமானால், பிரபலத்தை முன்வைத்து முக்கியத்துவம் பெறுவதற்கான எடுத்துக்காட்டாக ‘உணர்ச்சி எழுத்தாளர்’ சாநி, ‘எல்லோர்க்கும் நல்லவர்’ எஸ்ரா, ‘இந்துத்துவக் கும்பமுனி’ ஜெமோ போன்ற மூவரையும் குறிப்பிடலாம்.

இவர்கள் மூவருக்கும் நிறைய பொதுத் தன்மைகள் இருக்கிறது. மூவரும் தமிழ்வெகுஜன சினிமாவை அதில் ஈடுபட்டவர்களினுடனான உறவுக்காக விதந்தோதுபவர்கள். தமிழ் அரசியல்வாதிகளுக்கு உள்ள எல்லாக் கல்யாண குணங்களும் இவர்களுக்கு உண்டு. உணர்ச்சி அரசியல் தமிழக அரசியல். தடாலடியாக உணர்ச்சிவேகமாக உரைகளை வீசினால் நீங்கள் தமிழகத்தில் அதிகம் கவனம் பெறுவீர்கள். ஜெயமோகனும் சாநியும் இப்படியான அதிஉணர்ச்சிகரமான தடாலடி அரசியல் அபிப்பிராயங்ளை அவ்வப்போது வெளிப்படையாக எழுதுவார்கள்.

2.

தெருப் புழுதியில் கட்டிப் புரண்டு ‘ங்கோத்தா அம்மா’ ரேஞ்சுக்குச் charuசண்டை போடுகிற, பரஸ்பரம் வன்மத்தைத் தமது சொந்த வாழ்வில் நிறைத்துக் கொண்டிருக்கிற ஜெமோவும் சாநியும்தான் காந்தி பற்றியும் அகிம்சை பற்றியும் பிறருக்குப் போதிக்கிறார்கள். வன்முறை தோற்றுப் போனது பற்றியும் காந்தியம் வெல்லும் என சாநி தீர்க்கதரிசனங்களைச் சிந்தியபோது, ஜெமோ அதனைத் தனது குழிந்த உள்ளங்கையில் பிடித்து புனித தீர்த்தமென அருந்தியபடி ‘ஜெய்ஹிந்த்’ என்று சிலிர்த்துக் கொண்டார்.

இருவரும் தொடர்ந்து வன்முறை,குவேரா, கியூபா, சுதந்திரம், ஈழம், ஆயுதப் போராட்டம், காந்தியஅகிம்சை என கதாகாலட்வேபம் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

என்னாவானாலும், சாநி ‘மம்மி ரிட்டர்ன்’ பிரகடனத்துக்குப் பிறகு ஜெமோவுடன் சமரசத்திற்குத் தயாரில்லை.

இந்த இடத்தில் கொஞ்சம் பிளாஸ்பேக்குக்குப் போவோம். சாநிக்கும் ஜெமோவுக்கும் இடையில் என்ன நடந்தது? சாநியின் எழுத்துக்களை விமர்சித்து ஜெமோ ஒரு ஒண்ணரைப் பக்கம் எழுதினார். சாநி ‘லபோ திபோ’ என்று 45 பக்கத்துக்குப் புத்தகமே எழுதி உலகெங்கும் மின்னஞ்சலில் சுற்றுக்கு விட்டார்.

தனக்கு மாரடைப்பே வந்து உயிரே போயிருக்கும் என்ற ரேஞ்சுக்குப் புலம்பித் தீரத்துவிட்டார் சாநி.

தனக்கென்று வருகிறபோது இப்படித் ‘தாம் தூமென்று’ உணர்ச்சிவசப்படும் சாநி பிறரைத் துன்புறுத்துவதையும், சக எழுத்தாளர்களை அவமானப்படுத்துவதையும், தன்னுடன் முரண்படும் எழுத்தாளர்களுக்கு ‘பூணா சூணா’ என்று தூசனத்திலேயே கடிதம் எழுதுவதையும் தன்னுடைய வாழ்க்கை நெறியாகக் கொண்டிருந்த அறச்சீலர்.

ஜெமோவின் கழிசடை மனதுக்கு திகசி, மனுஷ்யுபுத்திரன், எம்.ஜி.ஆர் குறித்த அவரது வக்கிரமான தாக்குதல்களே போதும். இயற்கையாக நேர்கிற முதுமையையும் உடல் ஊனத்தையும் முன்வைத்து தனது அரிப்பைத் தீரத்துக் கொள்கிற வக்கிர மனம் கொண்ட நபர் ஜெமோ.

இவர்கள் இருவரும்தான் அகிம்சை குறித்துப் பேசுகிற மகான்கள்.

ஜெமோ சாநி விளையாட்டு பரஸ்பரம் இருவரதும் அங்கீகாரம் நோக்கிய எலி பூனை விளையாட்டு. சாநியின் உடல்நலம் குறித்து ஜெமோ விசாரித்த கொஞ்சநாளில் கருணாநிதி-ஜெமோ jeamooooவிவகாரத்தில் சாநி ஜெமோவுக்கு ஆதரவாகக் கட்டுரை எழுதுவார். பிற்பாடு என்ன கெட்ட காலமோ ஜெமோவுக்குச் சனிபிடித்து சாநியை விமர்சிக்க மறுபடி சாநிக்குச் சாமி வந்து ஜெமோ எதிர்ப்புச் சன்னதம் ஆடுவார்.

‘நான் கடவுள்’ என்கிற பாசிஸ்ட் படத்துக்கு அதனது வசனத்திற்காக ஜெமோவுக்குச் சாநி புகழ் மாலை சூடுவார். மனுஷ்யபுத்திரனிடம் போய் எனது விமர்சனத்தில் ‘என்னமோ’ தவறுகிறது, என்னவெனத் தெரியவில்லை என்பார். ‘இட்லரும் ஊனமுற்றவர்களைக் கொன்றான். அகோரியும் கொல்கிறான். இது பாசிஸ்ட் படம்’ என மனுஷ்யபுத்திரன் சொல்ல, அப்போது, அந்த நிமிசம் தான் இவருக்கு ஞான திருஷ்டி வந்து தனது விமர்சனத்தில் தவறிய ‘என்னவோ’ ஞாபகம் வந்ததாம். அயோக்கித்தனம். பாசிசம் என்கிற மனித விரோதம் ‘என்னவோ’ ஆக, வசனம் மட்டும்தான் தனக்கு மனதில் நிற்கிறது என்கிற நேர்மையாளன்தான் சாநி.

சாநியை நான் ஏன் ‘உணர்ச்சி’ எழுத்தாளர் எனக் குறிப்பிடுகிறேன் என்பதை அவர் எழுத்துக்களைக் கொஞ்சமேனும் வாசித்தவர் அறிவர். மழித்த அல்லது மழிக்கப்படாத ‘உலகு தழுவிய அல்குல்’ பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் அவர், திபுக்கென்று உலக புரட்சிகர இயக்கங்களின் ஞாபகத்திலீடுபட்டு, கியூபாவில் (கியூபா இல்லை கூபா – சாநி) சுதந்திரம் பற்றியும், கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் விவசாயிகளின் மீதான மனிதஉரிமை மீறல் பற்றியும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் வன்முறை பற்றியும், திடும்திக்கென்று அதிர்ச்சிகரமாக எழுதுவார்.

ஈழத்தில் வன்முறை தோற்றுவிட்டது எனக் கூறும் சாநி, காந்தியமே இனி உலகு இருளுக்கான அகல்விளக்கு எனவும் எழுதுகிறார். சாநியின் புரமவைரி ஜெயமோகன் சாநியின் இந்தப் பொன்மொழிக்காக அவரை வாழ்த்தியும் இருக்கிறார். கடன் திருப்பிக் கொடுத்து ஆயிற்று. ‘நான் கடவுள்’ வசனத்திற்கு சாநி போட்ட ‘சபாசு’க்கு, ஈழ வன்முறை குறித்து சாநி எழுதிய கட்டுரைக்கு ஜெமோ ‘சபாசு’ போட்டிருக்கிறார்.

சாநியும் சரி ஜெமோவும் சரி கதை விடுவதில் மன்னர்கள். சாநியின் ‘நான் கடவுள்’ கட்டுரையைப் படியுங்கள். சாநி எவ்வளவு அண்டப் புழுகன் என்பது அப்போது தெரியும். அகோரியின் பாத்திர வளர்ச்சியை அவனது கொலைச் செயல்பாட்டை சாநி அளவு ஜெமோ கூட தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தி டெமான்ஸ்ரேட் செய்திருக்க மாட்டார்.

‘நான் கடவுள்’ பட விமர்சனத்தில் அகோரிக்கு கடவுள்தன்மையை வழங்குகிற சாநியின் கருத்தாக்கத்தை உருவிவிடுங்கள். அந்தக் கட்டுரையில் மிஞ்சுவது வெங்காயம். பின்னால் சாநி ஏற்கிற பாசிசக் கூற்றை வைத்துக் கொண்டால், சாநியின் கட்டுரை ஒரு தன்வயமான மோசடிக் கட்டுரை. எப்படி ஒரு எழுத்தாளன் ஒரே சமயத்தில் பாசிஸ்ட்டாகவும் பாசிச எதிர்ப்பாளனாகவும் இருக்க முடியும்?

இதுதான் சாருநிவேதிதாவின் அரசியல் தரிசனம். புல்ஷிட்.

வேலுபிரபாகரன் படங்களின் வசனத்தை விட என்ன புண்ணாக்கு ஜெமோவின் நான் கடவுளில் இருக்கிறது என்பது இன்று வரையிலும் எனக்குப் புரியவில்லை. கடவுளை நிந்தனை செய்யும் திராவிட மரபைத் தனதாகக் கோரிக்கொள்கிற அயோக்கியத்தனம்தான் ஜெமோவின் நான் கடவுள் வசனங்கள்.

இந்த வசனங்களைப் புகழ்கிற சாருவுக்கான நன்றியைத் திருப்பிச் செலுத்தும் செயல்தான் ஈழம் பற்றிய சாநியின் கட்டுரைக்கான ஜெமோவின் புகழ்மாலை. அதைச் சாநிக்குத் தனியே மின்னஞ்சல் செய்யாமல் வலைத்தளம் மூலம் எட்டச் செய்ததூதன் சாநிக்கு ஜெமோ மேல் உள்ள கோபத்திற்கான காரணமாக இருக்கும்.

அது கிடக்கட்டும் சனியன். பிரச்சினை என்னவென்றால், வேறு எந்த தத்துவ மசிர் மாறுபாடுகளும் இருவருக்குள்ளும் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்வதுதான்.

3.

எஸ்.ரா, ஜெமோ, சாநி மூவருக்குமே எதிர்ப்பு அரசியல் பற்றிப் பேச எந்தவிதமான அடிப்படைத் தகுதிகளும் இல்லை.

இன்குலாப் போன்று ஈழவிடுதலைப் போராட்டத்தை ஆதரித்துத் தமது சொந்த வாழ்வில் ஒடுக்குமுறைகளையும் துன்பங்களையும் எதிர்கொண்ட எத்தனையோ தமிழக எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். வேறு வேறு காரணங்களுக்காக நான் அதனை இங்கு விரிவாக எழுதாமல் தவிர்க்கிறேன்.

தமது எழுத்துக்கள் தமது பிழைப்பைக் கெடுக்கும் என்றால் எத்தகைய சமரசத்திற்கும் தயாரானவர்கள்தான் இந்த மூன்று தெய்வங்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி பற்றிய கட்டுரைகளை அதன்மீது வந்த விமர்சனங்களை அடுத்து தனது வளைத்தளத்திலிருந்து அகற்றியவர்தான் ஜெயமோகன்.

‘மன்னிப்புக் கோராவிட்டால் திரைத்துறையில் பணியாற்ற முடியாது’ என்ற திரைப்படத் துறையினரின் தடையைக் கடந்து, நான் கடவுளுக்கும், அங்காடித் தெருவுக்கும் எவ்வாறு ஜெமோ வசனமெழுத எப்படி முடிந்துது என்பதை ஜெமோ எப்போதும் வெளிப்படையாகச் சொன்னதில்லை. என்ன சமரசத்திற்கு அவர் ஆட்பட்டார் என்பதும் ரகசியம் போல் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுரைகள் மட்டும் அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் ஜெமோவின் எதிர்ப்புக் குணாம்சம்.

எஸ்.ரா. மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ பற்றி ஒரு கடுமையான விமர்சனம் எழுதினார். ‘அமரோஸ் பெரோஸ்’ உள்பட பல ssraaaaaaபடங்களின் பாதிப்பினை அக்கட்டுரையில் அவர் சுட்டிக் காட்டினார். கொஞ்ச நாட்களில் அக்கட்டுரை அவரது வலைத்தளத்திலிருந்து அகற்றப்பட்டது. இதுதான் எஸ்.ராவின் விமர்சன ஆளுமை.

எஸ்.ரா நிஜத்தில் ஒரு தனிரகம். காம்ரேட் என விழித்து ஜெயகாந்தனுக்கு ரெட்சல்யூட் அடிப்பார். திரைப்பட இயக்குனர் லிஞ்குசாமி நல்ல இலக்கிய வாசகர் என விளித்து, அவருக்கு அறிவுஜீவி வேசம் கட்டுவார். ஜெயமோகன் இவருடைய ‘யாமம்’ நாவலுக்கு விதந்து விமர்சனம் எழுதினால், தனது வலைத்தள முகப்பில் அதனைப் போட்டுக் கொள்வார். எஸ்.ரா முன்பு சொன்ன, விஷ்ணுபுரம் ஜெமோவின் இந்துத்துவச் சாயம் கொண்ட நாவல் எனும் கூற்றை நீங்கள் மறந்து போய்விட வேண்டும்.

எஸ்.ரா.எல்லோர்க்கும் நல்லவராக விரும்புகிறவர். தடாலடி வேலைகளை அவர் செய்வதில்லை. இருந்தாலும் என்ன ‘பிறமலைக் கள்ளர்’ கோபமோ பா. வெங்கடேசனின் ‘காவல்கோட்ட’த்தை மட்டும் அவர் கடாசித்தள்ளிவிட்டார். முக்குலத்து மாணிக்கம் முத்துராமலிங்கத் தேவர் குறித்த திரைப்பட வசனகர்த்தாவான எஸ்.ராவுக்கு இப்படிக் கோபம் வருவதிலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

எஸ்.ரா. ஈழ இலக்கியம் எனும் அளவிலோ அல்லது ஈழஅரசியல் எனும் அளவிலேயோ அக்கறையுடன் எழுதிய எதுவும் என் கண்ணில் தட்டுப்படவில்லை. முக்கியமான தனக்குப் பிடித்த நாவல்களின் பட்டியலில் கோவிந்தனதும், ஷோபா சக்தியினதும் நாவல்களைப் பட்டியலிட்டிருந்தார்.

எஸ்.ராவின் பட்டியல்களின் மீது எனக்கு எப்போதுமே அவ்வளவாக மரியாதையில்லை. எடுத்துக் காட்டுச் சொல்கிறேன் பாருங்கள் : 2008 ஆம் ஆண்டு வெளியான முக்கியமான படங்கள் என அவர் சில படங்களை 2009 ஆரம்பத்தில் தனது வலைத் தளத்தில் வரிசைப்படுத்துகிறார். அதில் சோடர்பர்க்கின் ‘சேகுவேரா’ படத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

இப்படி ஒருவர் தனது ரசனை அடிப்படையில் எதனையும் வரிசைப் படுத்துகிறபோது, புத்தகமானால் வாசித்த அனுபவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்து வேண்டும், திரைப்படம் என்றால் திரைப்படம் பார்த்த அனுபவத்தில் வரிசைப்படுத்தவேண்டும். ‘சேகுவேரா’ திரைப்படம் முதலில் பிரான்ஸ் கேன் திரைப்படவிழாவில் 2008 பிற்பகுதியில் திரையிடப்பட்டது. பிற்பாடு 2009 ஆரம்பத்தில்தான் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வெளியாகியது. குறுந்தகடு 2009 மத்தியில்தான் வெளிவந்தது. அமெரிக்கா ஐரோப்பா தவிர அந்தத் திரைப்படம் வேறு எந்த நாடுகளிலும் திரையிடப்படவில்லை.

இந்தியாவிலோ தமிழகத்திலோ அல்லது குறுந்தகடிலோ அல்லது இணையத்திலோ இத்திரைப்படத்தினைப் பார்ப்பதற்கான வாய்ப்பேயில்லை. இந்தத் திரைப்படத்தினை அவர் கேன் திரைப்படவிழாவில் மட்டுமே பார்த்திருக்க முடியும். அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எஸ்.ரா. எந்த அடிப்படையில் சேகுவேரா படத்தை 2009 ஆரம்பத்தில், தான் படம் பார்த்த பாவனையில் வரிசைப்படுத்துகிறார்?

அவரது முன்வைப்பு முற்றிலும் நம்பகத்தன்மையற்றது, போலித்தனமானது.

சாநியை பாரிசுக்கு அழைத்த எதிர்ப்பிலக்கியம் பேசச் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. சாரு நிவேதிதா எதிர்ப்பிலக்கியவாதியென்றால், தமிழின் முதல் எதிர்ப்பலக்கியவாதி பெங்களுர் சரோஜாதேவிதான். முதல் எதிர்ப்பிலக்கியப் பிதாமகன், பதிப்பாளர், தமிழில் முன்முதலாக பரந்த விநியோகக் கட்டமைப்புடன் மஞ்சள் பத்திரிக்கை நடத்திய அன்றைய அதிமுக ஜேப்பியார்தான்.

‘இந்தியா டுடே’ வெளியிடுகிற செக்ஸ் புள்ளிவிவர இதழ்களை எதிர்ப்பு அரசியலின் அங்கமாகக் கொள்வோமாயின், சாருவும் எதிர்பிலக்கியவாதி என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பாலுறவு இலாபகரமான சந்தைக்குரிய பண்டமாகிவிட்ட இன்றைய உலகமயச்சூழலில் ஆண் பெண் குறிகளைச் சரக்கு விளையாட்டுப் பொருள்களாக்கி, பாலுறவை வெளிப்படையாக எழுதுவதற்கு எந்தவிதமான எதிர்ப்புத் தன்மையும் இல்லை, அது புரட்சியும் இல்லை.

இந்தியாவிலும் தமிழகத்திலும், ஈழப் பிரச்சினை, சாதியப் பிரச்சினை, காவல்துறையின் ஒடுக்குமுறை, தூக்குத் தண்டனைக்கு எதிரான இயக்கம் என எத்தனையோ வெகுமக்கள் போராட்டங்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ கருத்தரங்குகளை எழுத்தாளர்கள் முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். இப்படியான எந்த நிகழ்வுகளிலும் பங்குபற்றாதவர்கள் தான் இந்த மூன்று தெய்வங்கள்.

இவர்கள்தான், இப்போது, மிகப் பெரும் மானுடப் பேரழிவு ஈழத்தில் நடந்திருக்கிற சூழலில், ஒடுக்குமுறையின் குரூரம் குறித்துப் பேசவேண்டிய கூறைப் பின் தள்ளிவிட்டு, காந்தியம் பற்றியும் அகிம்சை பற்றியும் பேசுகிறார்கள். கியூபா பற்றியும் சேகுவேரா பற்றியும் பொறுக்கித்தனமாக எழுதுகிறார்கள். உலகப் புரட்சிகர அனுபவங்களை முற்றிலும் கொச்சைப்படுத்துகிற வேலையை இவர்கள் கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பொறுக்கித் தனத்தின் உச்சம் என்னவென்றால், ஜெயமோகனுக்கு அரசியலிலும் சினிமாவிலும் இலக்கியத்தின் அளவு அக்கறை இல்லையாம். இதை எந்தச் சந்தர்ப்பத்தில் சொல்கிறார்?

ஈழும் கொழுந்து விட்டெறிகிற நேரத்தில், தமிழகத் தேர்தல் நடந்துகொண்டிருக்கிறபோது, ஓட்டுப் போடப் போகாமல், சினிமாப்பட வசன வேலையில் சென்னையில் இருக்கிறபோது பேசுகிறார்.

உம்மை எந்த மடையன், தமிழகத் தேர்தல் பற்றியும், ஈழம் பற்றியும் எழுது எழுதெனக் கேட்டான்? ஓட்டுப் போடப் போகாமல் தமிழகத் தேர்தல் அரசியல் பற்றி எழுதும் ஜெமோ, தனக்கு அதிகமும் ஈடுபாடில்லாத சினிமா வேலை இருந்ததால்தான் ஓட்டுப் போடப் போவில்லையாம். சினிமா வசனம் எழுதுகிறவேலை என்னய்யா இலக்கியச் சேவை? கன்றாவி, வசந்தபாலன் எல்லாம் உம்மைக் காட்டி பின்நவீனத்துவம் என்றெல்லாம் பேசுகிறார். காலம் சாமி எல்லாம் காலம்.

ஜெமோ தான் இப்படியென்றால் எஸ்.ராவும் அதைத்தான் சொல்கிறார். அரசியலில் தனக்குப் பெரிய அறிவோ ஈடுபாடோ இல்லை என்கிறார். பெத்தாம் பெரிய அரசியல்வாதி முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு வசனம் எழுத நியமிக்கப்பட்டவர், காவல்கோட்டத்துக்குப் பின்னணியான வரலாறு-அரசியல் பற்றியெல்லாம் நுண்தளத்தில் வெளுத்துக் கட்டியவருக்கு, ஈழப்பிரச்சினை என்று வரும்போது மட்டும் பெரிதாக அறிவில்லையாம்.

எவனப்பா உம்மை ஈழப்பிரச்சினை பற்றி எழுது எழுது எனக் கேட்டவன்?

கேரளா பற்றின அரசியல் கட்டுரை எழுதும்போதே சாநி பாடிய புராணமும் இதுதான். தான் அடிப்படையில் எழுத்தாளன், இப்போது அரசியல் பற்றி எழுத நேர்ந்திருக்கிது என்கிறார். அடிப்படையில் படுகேவலமான வேடதாரிகள் இவர்கள்.

ஈராக் யுத்தத்தைக் கடுமையாக எதிரத்த காலஞ்சென்ற ஹெரால்ட் பின்ட்டரோ, உலக அளவிலும் இந்தியாவிலும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக வெளிப்படையாக அரசியல் நிலைபாடுகள் எடுக்கிற அருந்ததி ராயோ ‘உங்களை’ மாதிரி ஒரு போதும் பேசமுற்படமாட்டார்கள்.

அரசியல் கோடிக்கணக்கான மக்களது உரிமைகள் தொடர்பான, அவர்களது உயிர்வாழ்தல் தொடர்பான பிரச்சினை. உங்களுக்கு அக்கறையோ ஈடுபாடோ அறிவோ அல்லது இவைகளைத் தேடிச் செல்லும் மனமோ இல்லையானால், எவரும் உங்களை அதுபற்றி அபிப்பிராயம் சொல்லுமாறோ அல்லது எழுதுமாறோ கேட்க மாட்டார்கள்.

நீங்கள் மூன்றுபேரும் உங்களுக்கு அடிப்படை ஈடுபாடோ அக்கறையோ நுண்அறிவோ இல்லாத துறை பற்றி அதிரடியாக எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

4.

சாநியும் ஜெமோவும் ஈழப் பிரச்சினை குறித்து, அரசியல் மற்றும் கலாச்சாரம் என முன்பாக ஏதும் எழுதியிருக்கிறார்களா?

சாநி இரண்டு மாஸ்டர் பீஸ்கள் எழுதியிருக்கிறார். முதலாவது மாஸ்டர் பீஸ் பாரிஸ் சின்னக் கதையாடல்-சாநி வகை எதிர்க்கதையாடல் ‘கோ-புரடக்ஸனான’ சிறுகதை ‘உன்னத சங்கீதம்’.

இரண்டாவது ‘தமிழகச் சஞ்சிகையில் வரமுடியாத’ புரட்சித்தன்மை கொண்ட( சாநியின் இணையத்தில் வந்திருக்கிற) ‘கலாகௌமுதி’க் கட்டுரை.

கலாகௌமுதிக் கட்டுரையை விடவும் கடுமையான ஈழத்தமிழர் குறித்த கட்டுரைகளை தமிழகத்தில் உயிர்மையும், காலச்சுவடும் நெஞ்சுரத்துடன் வெளியிட்டிருக்கிறது. எந்தவொரு மதிமுக, திமுக பத்திரிக்கையிலும் வந்திருக்கக் கூடிய கட்டுரைதான் அது. கோரிக் கொள்கிற மாதிரியான அப்படியான எந்தக் கலகப் புண்ணாக்கும் அந்தக் கட்டுரையில் இல்லை.

முதலாவது மாஸ்டார் பீஸான உன்னத சங்கீதத்தில் சாநி தெரிவிக்கும் ஈழப் போராட்டத்தின் வரலாற்றுப் பின்னணி அவரது ஈழம் குறித்த, குறிப்பான அறிவுக்கு ஒரு சான்று-

இலங்கைக்கு வந்த இந்திய அமைதிப் படையினர் இலங்கைச் சிங்களப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் வெகுண்ட சிங்கள இளைஞன் ஒருவன், தமிழர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராட சிங்கள ராணுவத்தில் சேர்ந்து தமிழர்களைக் கொல்கிறான். ஈழப் போராட்ட வரலாறு பற்றிய நூற்றுக்கணக்கான தமிழ்-சிங்கள-ஆங்கில நூல்கள் எதிலும் காணக்கிடைக்காத சாநியின் நுண்விவர வரலாறு இது.

உன்னத சங்கீத்தின் இன்னொரு சிறப்பு, நபக்கோவின் பிரசித்தி பெற்ற நாவலான லோலிடாவின் தமிழ் உல்டாவாகவும் அக்கதை இருப்பதுதான்.

ஜெயமோகன் அவ்வப்போது, திண்ணை, காலம், ஜெமோ வலைத்தளம் என, எழுதிய ஈழ இலக்கியவாதிகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு ‘எனிஇன்டியன்’ பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அப்புறமாக ஈழத்தமிழர்களின் தமிழகத் தமிழர்கள் குறித்த பார்வையெனத் தான் கற்பித்துக் கொண்டது குறித்து, தனது அவுஸ்திரேலியப் பயணத்தை முன்வைத்து ஜெமோ ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

ஈழக்கவிஞர் வா.ஐ.ச. ஜெயபாலன் குறித்த, திண்ணையில் ஜெமோவின் பினாமியான சூர்யா அல்லது சூரியா எனும் அனானியால் பகிரங்கப்படுத்தப்பட்ட கடிதம் மற்றும் ஷோபாசக்தியின் ‘கெரில்லா’ நாவல் குறித்த பதிவுகள் வலைத்தள விமர்சனம் இரண்டும் ஈழத்தின் விடுதலைப்போராட்டம், அதனது ஆயுதப் போராட்டம் குறித்து முன்கூட்டிய ஜெயமோகனின் மனப்போக்கை முன்வைத்த ஆவணங்களாகும்.

மனிதனின் இயல்பான மிருகத்தனத்துக்கும் ஆயுதப் போராட்டத்தின் வன்முறைக்கும் பூடகமாக முடிச்சுப்போடப்பட்ட ஒரு விமர்சன மொழியை கெரில்லா நாவல் விமர்சனத்தில் ஜெமோ பாவித்திருப்பதை எம்மால் உணரமுடியும். வ.ஐ.சா.ஜெயபாலன் குறித்த கடிதத்தில் ஆயுதப் போராட்ட இயக்கத்துடனான அவரது தொடர்புகள் ஒருவிதமான அசூயை கலந்த தொனியில் எழுதப்பட்டிருக்கிறது.

சூர்யாவுக்கு ஜெயமோகன் தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்டு பகிரங்கப்படுத்தபட்ட அக்கடிதத்திற்கு ஜெயபாலன் எழுப்பிய கடுமையாக ஆட்சேபத்தினையடுத்து, திண்ணை ஆசிரியர் கோ.ராஜாராமும் ஜெமோவுக்கு கண்டனம் தெரிவித்ததாக ஞாபகம் இருக்கிறது.

இதுவன்றி தளையசிங்கம் மரணம் பற்றி ஜெமோ தத்துப் பித்தென்று உளறியதும், அதனை மறுத்து தளையசிங்கத்தின் சகோதரரான பொன்னம்பலம் மறுப்புரைத்ததும் அறியவரப்பட்ட செய்தி.

பிற்பாடு ஜெமோ ஈழத்தமிழர்களுக்கு உலக இலக்கிய, இந்திய இலக்கிய வாசிப்பில்லை என எழுதினார். கவிஞர் மு.புஷ்பராஜன் ‘ஈழத்தமிழர்கள் விரல்சூப்பிக் கொண்டிருக்கவில்லை’ எனக் காட்டமாகப்; பதில் எழுதியதன் பின் ஜெமோ வாயைத் திறக்கவில்லை.

சேரனையும் நா.சுகுமாரனையும் முன்வைத்து, பாலுறவையும் வன்முறையையும் முன்வைத்து, தமிழ் புரட்சிகரக் கவிதைகள் பற்றி எழுதப்பட்ட ஜெமோவின் கட்டுரை புரட்சிகர இலக்கியம் தொடர்பான ஒரு நகைச்சுவைக் கட்டுரை என்பதற்கு மேல் எதனையும் மேலாகச் செல்ல முடியாது.

புவியரசு, கங்கை கொண்டான், இன்குலாப், ஆத்மநாம் போன்றவர்களை அறிந்தவர்கள் இக்கட்டுரையை முற்றிலும் நிராகரித்து விடுவார்கள். இன்குலாபை கவிஞர்களின் கவிஞர் என எழுதினார் கோவை ஞானி. ஜெமோவுக்கு இது ஒரு நினைவூட்டு.

தமிழகத் தேர்தலை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரையில், பேரினவாதத்தினால் ஈழத்தமிழர் மீதாகச் சுமத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் வன்முறைகளை, இந்திய தமிழக ஆட்சியாளர்களின் கொள்கைகளால் விளைந்த தமிழகத் தமிழர்களின் வறுமையுடனும் பட்டினி வாழ்வுடனும் ஒப்பிட்டு எழுதுவது ஜெமோவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.

இந்த மாணிக்கப் பரல்கள் தவிர சாநியோ ஜெமோவோ ஈழத்தமிழர்களின் அவலவாழ்வும் போராட்டமும் குறித்து எதுவும் எழுதியர்கள் இல்லை.

5.

கியூபப் பிரஜைகளைச் சுதந்திரமாகவிட்டால் தொண்ணூறு சதமானவர்கள் கியூபாவை விட்டு ஓடிப்போய்விடுவார்கள் என தடாலடியாக எழுதுகிறார் சாநி.

குவேராவை காந்தியுடன் ஒப்பிட முடியாது எனும் ஜெமோ, குவேரா தனிமனித மூப்புக்கு கொண்ட ஒரு சாகசவாதி என எழுதுகிறார். சான்றுக்கு குவேரா பற்றிய காஸ்டநாடாவின் நூலை நல்ல நூல் என்கிறார். முன்பாகவே அ.மார்க்சும் அந்தப் புத்தகம் நல்ல புத்தகம் எனச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார். பகத்சிங் விடயத்திலும் காந்தியை நிலைநாட்ட அ.மாரக்சின் புத்தகம் ஜெமோவுக்கு உதவுகிறது.

ஆச்சரிப்படத்தக்க விதத்திலான ஒற்றுமை என்ன வென்றால், பகத்சிங் மற்றும் சேகுவரா திருவுருக்களைக் ‘கட்டு’ உடைத்துவிடுவதென்று அ.மாரக்சும் புறப்பட்டிருக்கிறார். ஜெமோவும் புறப்பட்டிருக்கிறார். இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில் ஜெமோ, அமா இருவரும் பின்நவீனத்துவம் பேசுபவர்கள்தான்.

கியூபாவிலிருந்து மியாமிக்கு ஓடிப்போனவர்கள் கியூபப் புரட்சியின் கருத்துருவம் பிடிக்காமல் ஓடிப்போனவர்கள். பாடிஸ்டா அமெரிக்காவுக்கு ஓடிப்போய் நாடுகடந்த கியூபா அரசும் கூட அமைத்தார். பிறிதொரு வகையில் கியூபாவிலிருந்து விலகுகுகிற கியூப இளைய தலைமுறையினர் கலாச்சாரக் காரணங்களுக்காக, இலக்கியம் மற்றும் இசை குறித்த கியூபாவின் கட்டுப்பாடுகளை மீறி ஓடிப் போகிறார்கள்.

இப்போது நிலைமை வேறு. முன்னொரு காலத்தில் கியூபாவில் தடைசெய்யப்பட்டிருந்த மரியா வர்கஸ் லோசாவின் நாவல்கள் உடனடியில் இப்போது வெளியாகிறது. இசை குறித்த எந்தக் கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. கியூப இசைச் சாதனைக்கு சான்றாக ‘புனாவிஸ்டா இன்டர்நேசனல்’ விவரணப்படத்தை சாநிக்குப் பரிந்துரைக்கிறேன்.

கியூபாவில் சிறுதொழில் முகவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். சிறுமுதலாளிகள் தோன்றுகிறார்கள். வேற்றுநாட்டவர்கள்; புதிதாகக் கட்டப்படும் மாளிகைகளில் கியூபாவில் வாங்கிக் குடியேறலாம். இப்படி நிறைய மாற்றங்கள் அங்கு நடந்து வருகிறது. முன்னொருபோது இலத்தீனமெரிக்க நாடுகளிடமிருந்து தனிமைப்பட்டிருந்த கியூபா இன்று சகல நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கக் கண்டத்தில் தற்போது அந்நியப்பட்டிருக்கிற ஒரே நாடு வடஅமெரிக்காதான்.

‘தவறு எங்கள் பக்கமும் இருக்கலாம்’ என கிலாரி பில்கிளின்டன் பேசுகிற காலம் இது.

கியூபக் கலைஞர்களின் சுதந்திரத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் முன்னிட்டு இரண்டு அமெரிக்கக் கலைஞர்களின் ஆக்கங்களைச் சாநிக்குப் பரிந்துரைக்கிறேன். ‘அபோகலிப்ஸ் நவ்’ திரைப்பட இயக்குனர் பிரான்ஸிஸ் கொப்போலா, கியூபாவில் கலைஞனின் சுதந்திரம் குறித்து எழுதியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கியூபா சென்ற ‘பிளட்டுன்’ திரைப்பட இயக்குனர் ஆலிவர் ஸ்டோன், ஃபிடலைச் சந்தித்து இரண்டு விவரணப்படங்கள் தந்திருக்கிறார். மூன்றாமுலக மக்களும் கியூப மக்களும் ஃபிடலை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை அந்த விவரணப்படத்தில் சொல்கிறார்கள். ‘தங்களுக்கென அடையாளம் தந்த தலைவன்’ ஃபிடல் என கரீபிய ஆப்ரிக்க முதியவர் சொல்கிறார். இது கியூபாவின் சமீபத்திய அரசியல் கலாச்சாரச் சித்திரம்.

கியூபாவின் அனைவருக்குமான கல்வி மற்றும் மருத்துவம் சம்பந்தமான சாதனைகளில் உலகில் கியூபாவுடன் ஒப்பிட எந்த நாடும் இல்லை. இது கியூபா குறித்த பிறிதொரு பரிமாணம்.

இதே கியூபாவில் மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அரசியல் ஒடுக்குமுறை ஒப்பீட்டளவில் நிலவி வருகிறது. ஓற்றைக் கட்சி இருக்கிறது. வீட்டுவசதிப் பிரச்சினை இருக்கிறது. கியூபாவுக்கு தற்போது பயணம் செய்யவும் மியாமியிலிருந்து கியூபஉறவுகளுக்கு பணம்தரவும் ஆன தடையை ஒபாமபா அரசு தளர்த்தியிருக்கிறது.

இலத்தீனமெரிக்காவில் முன்னாள் கெரில்லாக்கள் அனைவரும் தேர்தல் அரசியலைத் தேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்கர்கள் என்ற தேசியப் பெருமிதம் அவர்களுக்கிடையில் வளர்ந்து வருபதால்தான் அமெரிக்கா இந்தப் புவிப்பரப்பில் தனிமைப்பட்டிருக்கிறது.

இலத்தீனமெரிக்காவில் நிகரகுவா, பொலிவியா, எல்ஸல்வடோர் என வறிய நாடுகளின் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களிடம் தமது சின்னஞ்சிறு தேசியம் குறித்த குறைகள் இருக்கிறது. அதுபோல பெருமிதமும் இருக்கிறது. மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம்பெயர்கிற மக்கள் அவ்வாறு ஆவதற்கான காரணம் பொருள்தேட்டம்.

சாநி கேனத்தனமாக உளறுகிறமாதிரி இருந்திருந்தால் கியூபா உள்ளிட்ட இலத்தீனமெரிக்க நாடுகளில் இருந்து தொண்ணூறு சதவீதமானவர்கள் இலத்தீன் அமெரிக்காவை விட்டே ஓடியிருக்க வேண்டும்.

முன்பாக இந்த நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்கு ஓடியவர்கள் அமெரிக்க ஆதரவு ராணுவக் கொடுங்கோன்மைக்கு எதிராகவே வெளிநாடுகளுக்கு ஓடினார்கள். மறுதலையாக கியூபாவிலிருந்து ஓடியவர்கள், பெரும்பாலானவர்களாக மயாமியில் வாழ்கிறவர்கள். பாடிஸ்டாவின் அரசியலை ஆதரித்த காரணங்களுக்காக ஓடினார்கள்.

இந்த அரசியல் யதாரத்தங்கள் ஏதும் அறியாத முட்டாளாக ஈழப்பிரச்சினையும் ஆயுதவிடுதலைப் போராட்டமும் குறித்துப் பேசுகிற வேளையில் கியூபாவின் மீது பாய்கிற ஒட்டுண்ணியாக சாநி இருக்கிறார்.

6.

அமாவும் ஜெமோவும் பாராட்டுகிற கஸ்டநாடா இலத்தீனமெரிக்காவில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கை விரும்புகிறவர். சாவேசினதும் கியூப அரசினதும் எதிர்மறை விமர்சகர். சே கியூபாவை விட்டுப் போனதற்கு பிடல்-சேகுவேரா முரண்பாடே காரணம் என்பதை முன்வைப்பவர் இவர். இந்த வாதத்தை அமாவும் முன்வைக்கிறார் ஜெமோவும் முன்வைக்கிறார். இவர்கள் இருவருடையதும் வாசிப்பு எனக்கு மெய்சிலிர்க்கிறது.

ஃபிடல் ஒரு அரசுத்தலைவர். ஓரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டியவர். சேகுவேரா ஒரு மனோரதியமான புரட்சியாளர். முதலும் முடிவுமாக சேகுவேரா சர்வதேசியவாதி. ஃபிடலின் ஒப்புதலின்படிதான் சேகுவேரா ஆப்ரிக்கா சென்றார். அங்கிருந்து மீண்டு மாறுவேடத்தில் பொலிவியா சென்றார். எந்த இரண்டு புரட்சியாளர்களும் போலவே அவர்களுக்கிடையிலும் அரசியல் முரண்பாடுகள் இருந்தன. சோவியத் யூனியன் மற்றும் சீனா தொடர்பாக இருவருக்கும் முரண்பாடு இருந்தது.

சோவியத் யூனியனின் அரசியல் பொருளியல் அணுகுமுறைகள் குறித்து முதலில் அதிருப்தி வெளியிட்ட ஃபிடல், பிற்பாடு கியூபாவின் அன்றைய நலன்கருதி சோவியத் யூனியனை ஆதரித்தார். சேகுவேரா அவ்வாறு இருக்கவில்லை. சேகுவேரா மரணமுற்று நாற்பதாவது ஆண்டு நிறைவையொட்டி நிறைய புதியநூல்களும் விவரணப்படங்களும் வந்திருக்கின்றன. அமாவும் ஜெமோவும் இவ்வகையில் செய்வது பச்சை அயோக்கியத்தனம்.

பொலிவியாவில் அல்லாவிட்டால் கியூபாவிலேயே சேகுவேரா கொல்லப்பட்டிருப்பார் என எழுதுகிற ஜெமோ, இதற்கான ஆதாரம் என்ன என்பதை முன்வைக்கவேண்டும். வரலாறு இந்தக் கழிசடைத் தனத்திற்கு எதிராகத்தான் இருக்கிறது. சேகுவேராவின் மனைவியும் மகளும் மகனும் கியூபாவிலிருந்துதான் சேகுவேராவின் தொகுப்பு நூல்களை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சோடர்பர்க்கின் சேகுவேரா குறித்த ஐந்து மணிநேரத் திரைப்படத்தின் 20 பிரதிகளை சோடர்பரக் ஃபிடலின் கியூபாவுக்குத்தான் அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.

ஜான் ஆப்ரஹாம் பற்றியும் கோதார்த் பற்றியும் ஜெமோ எழுதுகிறார். இலத்தீனமெரிக்க நேர்த்தியற்ற சினிமா,சாஞ்சினோஸ், இந்தியாவில் அதனை விளைந்த ரித்விக் கடக், மிருணாள் சென் போன்றவர்கள் குறித்த எந்த அறிவும் அற்ற, மேல்போக்கான கருத்துக்கள் ஜான் ஆப்ரஹாம் பற்றிய ஜெமோவின் கருத்துக்கள்.

ஜெமோ அங்காடித்தெரு, நான் கடவுள், கஸ்துரிமான், முடிந்தால் மணிரத்னம் படம் என்பதற்கு அப்பால் போகாத ஒரு பிரகிருதி. ஜான் ஆப்ரஹாமின் படங்களைக் குறித்துப் பேசுவதற்கான திரைப்படக்கலை குறித்த எந்த தகைமையுமற்ற அறிவிலி ஜெயமோகன்.

செய்நேர்த்தியை நிராகரித்தவர், காரணத்துடன் நிராகரித்தவர் ஜான் அப்ரஹாம். இது கலை ஈடுபாடின்மையாக ஜெமோவுக்குத் தோன்றலாம். ஆனால் மக்கள் மீதான ஈடுபாட்டை முன்வைத்து நிலவிய கலைமதிப்பீடுகள் மீதான நிராகரித்தலை வலியுறுத்திய ஒரு தலைமுறைத் திரைக் கலைஞர்களின் கோட்பாடாக இருந்தது நேர்த்தியற்ற சினிமா மீதான அக்கலைஞர்களின் பார்வை.

இப்படியான எந்த வரலாற்று அறிவும் இல்லாமல், காதல், நான் கடவுள் என்று அலைந்து கொண்டிருக்கிற ஒரு அற்பத்தனமான சினிமாப் பார்வை கொண்ட ஜெயமோகனது ஜான் ஆப்ரஹாம் பற்றிய கூற்று வக்கிரம் கொண்டது.

ஜெமோவின் சில தனிப்பட்ட புலம்பல்களுக்கு அவ்வப்போது நான் பதிலளிப்பதில்லை. எஸ்.வி.ஆர், அ.மா, யமுனா ராஜேந்திரன், அ.முத்துக்கிருஷ்ணன் போன்றோர் இந்துத்துவம்-இஸ்லாம் குறித்த ஒற்றை அரசியலை முன்வைக்கிறார்கள் என எழுதுகிறார் ஜெமோ.

ஜெமோ நால்வரதும் எழுத்துக்களை வாசித்தவன் இல்லை என்பதற்கு இந்த ஒரு சான்றே போதும். அமாவின் அரசியல் இஸ்லாம் குறித்த விமர்சனமற்ற நிலைபாட்டை நான் முற்றாக நிராகரித்திருக்கிறேன். அமாவின் அழிவுவகைப் பின்நவீனத்துவத்தை நான் ஏற்பவன் இல்லை. ஜெமோ முட்டாள்தனமாகத் தனது இந்துத்துவ அரசியல் சௌகரியத்திற்காக நால்வரையும் ஒற்றைச் சிமிழில் அடைக்கிறார்.

ஜெமோ செய்து கொண்டிருக்கிற இன்னொரு மோசடி நான் நேசுகுமாரையும் அவரையும் ஒருவர் எனச் சொல்லி எழுதியதாகவும், அதனால் மனஉளைச்சல் தாளாது எனக்குப் பல மின்னஞ்சல் அனுப்பி மன்றாடியதாகவும் எழுதியிருக்கிறார். இதே விதமான விளையாட்டை திண்ணையில் நேசகுமாரும் எடுத்துப்போடுகிறார்.

ஜெமோ, நேசகுமார், சூர்யா என்கிற சூர்யா, அரவிந்தன் நீலகண்டன் தொடர்பாக நான் எழுதிய ‘ஸைபர் வெளி’ பற்றிய கட்டுரை பதிவுகள் வலைத்தளத்தில் ஆவணமாக இருக்கிறது. அந்தக் கட்டுரையில் நான் சொன்ன விடயங்களில் இன்னும் நான் தெளிவாக இருக்கிறேன்.

அச்சு ஊடகங்களை விடவும் ஸைபர் வெளியல் இந்துத்துவம் செயல்வோகத்துடன் இருக்கிறது. புனைபெயரில் எழுதுகிற பலர் ஒன்றே போலத் தோற்றம் தருகிறார்கள். இவர்களுக்கிடையில் பொதுத் தன்மைகள் இருக்கிறது. இவர்கள் தத்தமது சொந்த அடையாளங்களுடன் வராத வரையிலும் இவர்கள் ஒரே பெயரில் எழுதுவதாகவே கொள்ள முடியம்.

அதனோடு மறைந்துநின்று கொண்டு மற்றவர்களை கேவலமாக எழுதுகிறவர்களில் இந்த நால்வரில் முக்கியமானவர் சூர்யா என்கிற சூரியா. அதே ஜெயமோகனின் எழுத்து நடை. ஜெயமோகன் புராணம் என்பது தவிர இவர் எதுவும் எழுதியதில்லை.

நான் அந்தக் கட்டுரைகளில் கேட்ட பொதுவான விடயம் சொந்தப் பெயரில் அடையாளங்களுடன் வந்து எழுதுங்கள் என்பதுதான். சொந்தப் பெயரில் முத்தம் கொடுக்கலாம் கொலைவெறியாட்டமும் ஆடலாம். இப்படியானவர்களோடு விவாதிப்பது எளிது என எழுதினேன்.

நேசகுமார் நான் ஜெமோ இல்லை என்றார். ஆடிப்படைவாத இஸ்லாமியமர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்றார். அவர் கருத்துத்தளம் புரிகிறது. அவரது இஸ்லாமிய வெறுப்பு புரிகிறது. அவரது அர்.எஸ்.எஸ்.சார்பு புரிகிறது. அவர் நவீன இலக்கியம் அதிகமும் அறிந்தவர் அல்ல எனவும் பரிகிறது. அவர் ஜெமோ இல்லை என்பதும் புரிகிறது. நல்ல விடயம். அரவிந்தன் நீலகண்டன் சுயவாக்குமூலம் தந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பது தெளிவாக இருக்கிறது.

சூர்யா அல்லது சூர்யா தனது சொந்தப் பெயர் அல்லது அடையாளம் தெரிவிக்காததற்குக் காரணம் என்ன தெரியுமா?

இலக்கியம் என்றாலே இளக்காரமாகப் பார்க்கிற சினிமா உலகத்தில் இயக்குனராக அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறாராம். ஆகவே, ரகசியப் பெயரில் எழுதுகிறாராம். சொந்த அடையாளல் சொல்ல முடியாதாம். என்ன நம்பகமான பெகாறுத்தமான பதில் பாருங்கள். இன்றைய தேதிக்கு விநியோகமாகிற பாதி இலக்கியப் பத்திரிக்கைகளை சினிமா உதவி இயக்குனர்கள்தான் விலை கொடுத்து வாங்கி வாசிக்கிறார்கள். கோடம்பாக்கத்தில் இன்றைய திகதிக்கு கால்தடுக்கி விழுந்தால் எதிரில் ஒரு இலக்கியவாதியை வசனகர்த்தாவாகப் பாரக்கலாம். சூர்யா அல்லது சூரியா என்ன கதை அளக்கிறார் பாருங்கள்.

இதில் ரொம்பவும் வேக்கையான விடயம் என்னவென்றால், இந்தக் கட்டுரையால் நிரம்பவும் பதட்டமும் கலவரமும் அடைந்தவர் ஜெமோதான்.

ஏன் சொந்தப் பெயரில் எழுத முடியாது என்பதற்கு அவர்தான் வியாசங்கள் எழுதினார். அரவிந்தன் நீலகண்டன் நேசகுமார் எல்லோருக்கும் அறிவித்து மறுப்பும் எழுதச் சொன்னார்.

சூர்யா அல்லது சூர்யா ஜெயமோகன் அல்லது ஜெயமோகனின் பினாமி என நான் எழுதினேன். ஏனென்றால் சூர்யா அல்லது சூரியாவின் திண்ணை மற்றும் பதிவுகள் எழுத்துக்களின் பண்புமூன்று வகையில் மட்டுமே எழுதப்பட்டது. முதலாவதாக ஜெயமோகனின் நூல்களை எப்படி வாசிக்க வேண்டும் என ஜெமோவின் நடையில் தத்துவ விளக்கங்களுடன் அவர் எழுதினார். ஜெமோ மீதான விமர்சனங்களை நரகல் நடையில் அவர் எதிர்கொண்டார். ஈழத்தமிழ் இலக்கியம் பாலான அரசியல் என்ளலை முன்வைத்தார்.

இவர் ஒன்று ஜெயமோகன் அல்லது ஜெயமோகனின் பினாமி என நான் எழுதினேன். ஐம்பதாணடு கால நவீனத் தமிழிலக்கியத்தையும் சிறுபத்திரிககை விவாதங்களையும் அறிந்த, இணையத்தில் மட்டுமே எழுதிய, விட்டால் ஜெமோவின் ‘சொல்புதிதில்’ மட்டுமெ எழுதிய சூர்யா அல்லது சூரியா அதன்பின்னாக இணைய உலகைவிட்டே காணாமல் போய்விட்டார். ஜெயமோகன் இருக்கிறார்.

இதில் எங்கே அவதூறு இருக்கிறது? ஸைபர் ரியாலிட்டியின் புகைமூட்டமும் நிஜமும் குறித்த இந்துத்தவாதிகள் குறித்த ஒரு தேட்டம் இது. இதனை ஏதோ நேசகுமார் ஜெமோ ‘டபுள்ஆக்ட்’ விசயமாகத் தொடர்ந்து ஜெமோ முன்வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஜெயமோகன் செய்கிற இன்னொரு கயமைத்தனம் அவர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மன்றாடியதாக எழுதிக் கொண்டிருப்பது.

ஜெமோ நிறைய மனப்பிராந்தியில் வாழ்கிறவர் என்கிற எண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு. ஜெமோ, நீங்கள் எதுவும் எனக்கு மின்னஞ்சல் செய்யவில்லை என்பதை நான் இப்போது உறுதிப்படுத்தகிறேன். அன்றைய சூழலில் பரஸ்பரம் மின்னஞ்சல் அனுப்புகிற அல்லது பெறுகிற இணக்கம் எம் இருவருக்குமே இல்லை. அப்புறம் எப்படி நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி மன்றாடுவது சாத்தியம்?

எனக்கு நேசகுமார், அரவிந்தன் நீலகண்டன் போன்றவர்களுடன் நட்போ உரையாடலோ எப்போதும் சாத்தியமில்லை. அது போல உம்முடனும் நட்போ உரையாடலோ சாத்தியமில்லை. தயவு செய்து உளறிக் கொட்டி மற்றவர்களை அரக்கர்கள் மாதிரி சித்தரிக்கிற கேனத்தன்ததை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

வன்முறை ஆயதப்போராட்டம் என்பதை காந்தியை முன்வைத்து இந்திய அரசுக்கும், 500 தடவைக்கும் மேலாகப் .பிடலைக் கொல்லத் திட்டமிட்ட அமெரிக்க அரசுக்கும், இனக்கொலை மன்னன் மகிந்த ராஜபக்சேவுக்கும் போதியுங்கள்.

அறம், முறம், புறம், சுரம் என்கிற அளவில் நீங்கள் செய்ய வேண்டியது அதுதான். அதை விட்டுவிட்டு பெரிய ‘புடுங்கிகள்’ மாதிரி பிரபாகரன் பற்றியும், சேகுவேரா பற்றியும் அளந்து கொண்டிருக்க வேண்டாம்.

7.

எஸ்ரா என் மாதிரியே நினைக்கலாம், என சாநி சொன்னதால் கதி கலங்கிப் போயிருப்பார் போலிருக்கிறது. சாநிக்கும் ஜெமோவுக்கும் விழுந்த மொத்து தனக்கும் விழக் கூடாது என்கிற முன்னுணர்வுடன் ‘எல்லோர்க்கும் நல்லவர்’ ஈழப் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

சோகமான விடயம் என்னவென்றால் நண்பர் நாகார்ஜூனன் வலைப்பதிவு மூலம்தான் ஈழப்பிரச்சினையே இவருக்குத் தெரிகிறது. இலக்கியமென்றால் இணையத்திலிருக்கிற அத்தனை செய்திகளையும் வெட்டி ஒட்டி ஆராய்ச்சி செய்கிற எஸ்ராவின் அரசியல் அக்கறை நாகார்ஜூனன் தளத்திலும் தமிழ் வெகுஜனப் பத்திரிக்கை மற்றும் ஊடக தளத்திலும்தான் நிற்கிறது.

எஸ்ராவின் அரசியல் அறிவை உருவாக்குகிறவர்கள் தமிழ் வெகுஜன ஊடகத்துக்காரர்கள்தான்;. எத்தனைக் கேவலமான நிலைமை பாருங்கள்.

எஸ்ராவின் அசட்டுத்தனம் அல்லது நேர்மை என்னவென்றால் பொத்தாம் பொதுவாக எழுதிச் செல்வது. கீழ் வரும் ஐந்து பாயிண்டகளில் எஸ்ரா யாரைக் குறிப்பாகச் சொல்லுகிறார் என்று ஒரு தெளிவில்லை. பொத்தாம் பொதுவாக வாய் வீச்சு வீசுகிறார்.

எவன் எவன் ஈழத்துக்கு அட்வைஸ் செய்தான் என்று எழுதும் நேர்மை எஸ்ராவுக்கு இருக்கிறதா?

எஸ்ராவின் முதல் மேற்கோள் இது : நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சி கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறை பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாக போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்ரா அவர்களே, யார் அள்ளி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்.

எஸ்ராவின் இரண்டாவது மேற்கோள் இது : ஆயிரமாயிரம் மக்கள் கொட்டடிகளில் நிராதரவாக அடைக்கபட்டிருக்கிறார்கள். வதை முகாம் போல அகதிமுகாம்கள் உள்ளன என்ற கண்கூடான உண்மைகள் வெளிவந்த பிறகும் அதைபற்றிய எவ்விதமான கலக்கமும் இன்றி இனி ஈழம் செய்ய வேண்டியது என்னவென்று இலவச புத்திமதிகளை ஈழத்திற்கு வாறிவழங்கும் அறிவுவேசைத்தனம் வன்முறையில்லையா?

இந்த அறிவுவேசைத்தனத்தை, வன்முறை-அகிம்சை எனும் எதிர்மையில் செய்து கொண்டிருப்பது யார்? அது சாநியும் ஜெமோவும் அல்லவா? பெயரைக் குறிப்பிடாமல் எதற்கு குசுகுசுத்துக் கும்மியடித்துக் கொண்டிருக்கறீர்கள் எஸ்ரா அவர்களே?

இது எஸ்ராவின் மூன்றாவது மேற்கோள் : பிரபாகரன் உயிரோடு இல்லை. அவர் கொல்லபட்டுவிட்டார் என்ற செய்தியை (வதந்தியை) எதற்காக இத்தனை உற்சாகமாக ஊடகங்கள் கொண்டாடுகின்றன. என்ன வெறுப்பு அது. ஈழமக்களின் கடைசி யுத்தம் முறியடிக்கபட்டுவிட்டது என்பதை பொதுவெளிகள் ஏன் களிப்போடு பேசி கதைக்கின்றன.

செய்தி அப்புறமாகப் பிராக்கெட்டில் வதந்தி என எழுதுகிறீர்கள். செய்தியா வதந்தியா நிஜமா? புனைவுக்கும் நிஜத்துக்கும் பிம்பத்திற்கும் யதார்த்ததிற்கும் இடையிலான இடைnளியை மயங்கவைப்பது இலக்கியத்துக் பொருந்தும். அரசியலில் இதற்கு அர்த்தமில்லை. குறைந்தபட்ச அறிவு நேர்மை உங்களுக்கு இருந்திருந்தால் இதுபற்றிக் கூட அடர்த்தியான ஒரு கட்டுரையை உங்களால் எழுதியிருக்க முடியும். வார்த்தைகளுக்குள் தடுமாறிக் கொண்டிருக்கிறீர்கள். இயலாமையைச் சுரண்டும், அவலத்தைச் சுரண்டும் தமிழக உணர்ச்சிகர பொதுப்புத்திதான் உங்களுக்குள் செயல்படுகிறது கதாமகனே.

இது எஸ்ராவின் நான்காவது மேற்கோள் : ஒரு இனம் தன் வாழ்வுரிமை மறுக்கபட்டு ஒடுக்கபட்டதை கொண்டாட முடியும் மனிதர்களோடு எதற்காக எழுத்து படிப்பு இலக்கியம் என்று வீணடிக்கிறோம் என்று ஆத்திரம் வருகிறது.

நல்ல விடயம். முதலாக அறிவுவேசைத்தனத்தை செய்கிற ஜெமோ உங்கள் நூலுக்கு எழுதிய விமர்சனத்தை உங்கள் வலைத்தளத்திலிருந்து அகற்றி விடுங்கள். தமிழ்சினிமாவுக்கு வசனம் எழுதுவதை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வையுங்கள். தமிழ் சமூகத்திற்கு நீங்கள் கொடுக்கிற தார்மீகத் தண்டனையாக அது இருக்கும். செய்வீர்களா எஸ்ரா?

குறைந்தபட்சம் கோணங்கியோடு புதுதில்லி வரை போய் ஈழத்தமிழருக்காகப் பேச உங்களுக்கு வாய்ப்பிருந்தது. அதனையாவது நீங்கள் செய்திருக்கலாம் இல்லையா எஸ்ரா?

இரு எஸ்ராவின் கடைசி மேற்கோள் : நான் ஆழ்ந்த அரசியல் அறிவு கொண்டவன் இல்லை. ஈழப்போராட்டத்தின் வரலாற்றை முழுமையாக கற்று தேர்ந்து சரி தவறுகளை நிறுத்துப் பார்த்து எனது நிலைப்பாட்டை எடுப்பவனுமில்லை.

சாநி, ஜெமோ, எஸ்ரா மூவருக்கும் எவ்வளவு பாதுகாப்பு உணர்வு பாருங்கள். எதுவேனும் தத்துப் பித்தென உளறிவிட்டாலும் அறிவோ ஈடுபாடோ இல்லை என்று சொல்லி ஒதுங்கிக் கொள்ளலாம். அறிவும் ஈடுபாடும் எப்படி வரும்? தேடலும் படிப்பும் இருந்தால்தான் வரும். அக்கறை இருந்தால்தான் வரும். தீவிரமான அரசியல் இந்த இரண்டுக்கும் ஆபத்து. ஆள்பவருக்குச் சார்பாக எழுதினால் இது இரண்டையும் காப்பாற்றிக் கொள்ளலாம்.

அறிவோ அக்கறையோ ஈடுபாடோ இல்லாமல் இலக்கிய விமர்சனம் எழுதினால் அவர்களை மூவரும் நார் நாராகக் கட்டித் தொங்கவிட்டுவிடுவார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சாநி துருக்கிக்குப் போய் ஓரான் பாமுக்கையும், தென்அமரிக்கா போய் மரியா வர்கஸ் லோசாவையும் இழுத்து வந்துவிடுவார். ஜெமோ தாஸ்தாயவ்ஸ்க்கி, உளவியல், உபநிடதம்,அகோரி, வைணவம் என்று கலந்துகட்டி ஜமாயத்துவிடுவார்.

எஸ்.ரா. வுரலாற்று ஆய்வுகளைப் புரட்டோ புரட்டென்று புரட்டி பா.வெங்கடேசனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்.

ஆனால் அரசியலை மட்டும், அதுவும் விடுதலை அரசியல் பற்றி, அக்கறையில்லாமல், அறிவு இல்லாமல், ஈடுபாடில்லாமல், நாங்கள் இலக்கியவாதிகளாக்கும் எனப் பீடிகையோடு எழுதுவார்கள்.

எவரும் எதையும் யாரும் எழுதலாம். எழுதாமலும் விடலாம். அது அவரவரர் தெரிவு. அதற்கான சுதந்திரத்தை எவரும் தட்டிப் பறித்துவிட முடியாது.

முஷ்டிமைதுனம் செய்து கொண்டிருக்கும் போதும் எழுதலாம், கக்கூசுக்குப் போகும் போதும் எழுதலாம், பூஜையிலிருக்கும் போதும் எழுதலாம். சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருக்கும்போதும் எழுதலாம். ஆனால் எதை எழுதினாலும் அதனை ஈடுபாட்டுடன் அக்கறையுடன் அறிவுடன் எழுதவேண்டும். இல்லையெனில் எழுதக் கூடாது. அதனைத் தான் மானுடவிடுதலையில் அக்கறையும் ஈடுபாடும் அறிவுத் தேட்டமும் உள்ளவர்கள் சொல்கிறார்கள்.

நீங்கள் மூன்றுபேரும் இந்த விடயத்தில் சொல்சிலம்பம் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள்.

பெரிய மேதாவிகள் போலவும் எல்லாம் அறிந்த தெய்வங்கள் போலவும் வாசகர்களைக் கேனயர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஈடுபாடில்லாத, அக்கறையில்லாத, அறிவில்லாத விடயங்கள் குறித்து எழுத வேண்டாம்.

உங்களுக்கு அலப்பறை பண்ண எத்தனையோ மைதானங்கள் இருக்கிறது. அங்கே போய் உங்கள் கூட்டுக் கும்மியை அடித்துத் தொலையுங்கள். இரவில் அப்பவும் தூக்கம் வரவில்லையானால், கால்களுக்கிடையில் கைகளையிறுக்கிப் பொத்திக்கொண்டு படுங்கள்.