Archive

Posts Tagged ‘Chithambaranadhan’

What does ‘walk the talk’ mean during Indian Freedom Movement with Movie stars?

July 16, 2012 Leave a comment

“நாடகமும் சினிமாவும்’ நூலில் ஏ.எல்.எஸ்.வீரய்யா.

ஈரோட்டில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது.

“தேசியப் பாடல்களைத் தவிர சுதந்திரம் பெறும்வரை வேறு எந்தப் பாடலையும் பாடமாட்டேன்’ எனச் சபதம் பூண்டு, செயலிலும் அதைக்காட்டி வந்த நடிகை எம்.ஆர்.கமலவேணி. சபதப்படி, விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தயாராக நின்ற போலீஸôர், “”பாடாதே, பாடினால் கைது செய்வோம்” என்று கத்தினார்கள்.

“”பாடுவேன், கைது செய்” என்று மேடையிலிருந்து கர்ஜித்த கமலவேணி, கம்பீரமான தொனியில் “”போலீஸ் புலிக் கூட்டம், நம்மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்று பாடினார்.

கைது செய்தார்கள். கைக்குழந்தையோடு ஆறு மாதம் சிறையிலிருந்தார்.

மதுரையில் நடிகை கே.பி.ஜானகி ஆகஸ்ட் போராட்டத்தில் கைதானார்.

“”கலெக்டர் கடவுள் அல்ல. கான்ஸ்டபிள் எமனுமல்ல, எதற்கும் அஞ்சோம்” என்று பாடியவாறு எம். எஸ். சிதம்பரநாதன் போராட்டத்தில் புகுந்தார்.