Archive

Posts Tagged ‘Discussions’

நியு ஜெர்சி தமிழ் இலக்கிய சங்கம்: நாஞ்சில் நாடன் வாசகர் சந்திப்பு

June 4, 2012 1 comment

நன்றிDyno Buoy

இன்றைய மாலை நாஞ்சில் நாடன் அவர்களுடன் இனிதே கழிந்தது. மெல்லிய பேச்சு, ஆனால் அதே சமயத்தில் தன் கருத்துக்களை வலுவாகவும் ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்.

அமெரிக்க இந்திய கல்வி முறை, தமிழக அரசியல், ஈழ போராட்டம் என்று ஆரம்பித்த பேச்சு கம்பனைப்பற்றி பேசத்துவங்கியதும் நாஞ்சிலின் கண்களில் ஒரு ஒளி வந்து சேர்ந்து கொண்டது. கம்பனை பற்றி பேசும் போது ஒருவகை பரவச நிலையை அடைவதை பார்க்கமுடியும். கம்பனின் செய்யுளை மேற்கோள்காட்டிப்பேசும் போது அந்த பரவசம் உச்சத்தை அடைக்கிறது. கம்பனின் சொற்பிரவாகங்களைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். சட்டென்று கம்பராமாயணத்தில் இருந்து செய்யுள் எதையாவது சொல்லி அதன் அர்த்தங்களை ஒரு ஆராய்ச்சி மாணவனின் துறுதுறுப்புடன் விவரிக்கிறார்.

இசையை பற்றி அறிந்து வைத்திருக்கிறார். சஞ்சய் சுப்ரமணியனை பற்றி உயர்ந்த அபிப்பிராயங்களை கொண்டிருந்தார். தமிழ் இசை வளர தமிழ் பாடல்கள் ஸ்வரப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை வழியுறுத்தினார். அதை செய்ய இன்று யாரும் நம்மிடையே இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

தமிழ் மொழியில் சுமார் 8-10 லட்சம் சொற்கள் இருக்கலாம் என்றும், அதையெல்லாம் தொகுக்க ஆளில்லை என்று அங்கலாய்த்தார். இப்போதைய லெக்சிக்கான் அகராதிகளில் அதிகபட்சம் 40-50 ஆயிரம் வார்த்தைகளே இருக்கும் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

விமர்சகர்களின் பார்வை, அவர்களின் நோக்கம் குறித்து பேசினார். அன்றைய விமர்சகர்கள் எதையும் எதிர்பாராமல் படைப்பை வாசித்தே மதிப்புரை வழக்கிய காலகட்டத்தையும் இன்று ரூம் போட்டு சரக்கும் கொடுத்தால்தான் ரெண்டு பக்க மதிப்புரை தேத்த முடியும் என்பதையும் வருத்தத்தோடு தெரிவித்தார்.

இன்னும் பல விசயங்களை பற்றியும் ஆணித்தரமான கருத்துக்களை மென்மையாக வழியுறுத்தினார்.

தமிழின் நல்ல ஆளுமையை சந்தித்த மகிழ்ச்சியில் மனநிறைவோடு வீடு திரும்பினோம்… வயிற்றுக்கும் உணவளித்த மதுசூதனன் தம்பதியினருக்கு நன்றிகள் பல!!

Nanjil Nadan visiting USA: East Coast Meetups

May 29, 2012 2 comments

எழுத்தாளர் நாஞ்சில்நாடனுடன் சந்தித்து உரையாட ஒரு வாய்ப்பு.

சாகித்திய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார்.

நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இவரது முதல் நாவல் தலைகீழ்விகிதங்களை இயக்குநர் தங்கர்பச்சான் ’சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.

2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது

வட அமெரிக்காவில் நியூ ஜெர்சி, பாஸ்டன் மற்றும் வாஷிங்டன் டிசி மாநிலங்களில் சந்திப்பு நடைபெறும்.

i) ஞாயிறு – ஜூன் 3 மாலை 6:30 மணியளவில் – ஓக் ட்ரீ ரோடு, எடிசன் உணவகம்

ii) வியாழன் – ஜூன் 7 மாலை 7 மணியளவில் – பாஸ்டன்

iii) சனி – ஜூன் 9 மாலை – வாஷிங்டன் நகரம்

மேலும் விவரங்களுக்கு பின்னூட்டமிடவும்/மறுமொழியவும்.

அனைவரும் வருக.

நாஞ்சில் நாடன் சிறுகதை குறித்து ஜெயமோகன்: பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

அமெரிக்கன் கல்லூரியில் மூன்றாம் வருடம் படிக்கும் போது மெதுவாக ‘மேலே என்ன செய்வது?’ என்ற அச்சம் எழுந்தது. நான் யார், எனக்கு இந்த உலகை எதிர்கொள்ள என்ன தகுதி இருக்கிறது என்ற ஐயங்கள் குடைந்தன.தற்கொலையைப்பற்றிக்கூட சிந்தனை ஓடியது. அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்

….

பிற்பாடு நண்பர் சுகா நாஞ்சில்நாடனை கூட்டிவந்து அறிமுகம்செய்தபோது பாலா அவர் காலடியில் அப்படியே விழுந்து வணங்கினார் ‘என்னை ஆட்கொண்ட குரு’ என.

இடலாக்குடிராசா