Archive

Posts Tagged ‘France’

How Tipu Sultan supported the French and where did Chidambaram Nataraja go to safe haven?

July 16, 2012 Leave a comment

“வரலாற்றில் தேவதாசிகள்’ என்ற புத்தகத்தில் சி.எஸ்.முருகேசன்.

தமிழகம் ஆங்கிலேயர்களாலும் பிரஞ்சுக்காரர்களாலும் பங்கு போடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு சுதேசி மன்னர்களும் இவ்விருவர் அணியிலும் பிரிந்து நின்ற அவலம்.

திப்பு சுல்தான் பிரஞ்சுக்காரர்களுக்காக சிதம்பரம் நகரை முற்றுகையிட்டான். அந்நியர் படையெடுப்பு எப்பொழுதுமே ஆலயங்களைக் குறிவைத்தே நடத்தப்படுவதால் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலிருந்த ஆடல் வல்லானின் ஐம்பொன் சிலை பாதுகாப்பு பெரிய விஷயமாகப்பட்டது.

கோயிலில் பணிபுரிந்த “வைப்பி’ என்னும் தேவதாசி தான் அப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாய் ஆறுதல் கூறி கோயிலாரின் அனுமதி பெற்று, நடராஜர் விக்கிரகத்தை தன் இருப்பிடத்திற்கு எடுத்துச் சென்றாள். தன் குடியிருப்பை ஒட்டிய புளியந்தோப்பிலுள்ள ஒரு புளியமரப்பொந்தில் நடராஜரை மறைத்து வைத்து பொந்தை முட்செடிகளால் மூடி வைத்தாள். பின்னர் அதன் வாயிலில் பசிய தழைகளைச் சார்த்தி, இலை மீது மஞ்சள் விழுது பூசி மறைத்தாள்.

தினசரி இம்மரத்தை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டாள். அவள் வழிபாட்டை எவரும் சந்தேகிக்கவில்லை. சில மாதங்களில் வைப்பி இறந்து போனாள்.

படையெடுப்பு முடிந்து திப்பு சுல்தான் சிதம்பரத்தை விட்டுத் திரும்பிச் சென்றதும் கோயில் நிர்வாகிகள் வைப்பியைத் தேடினர். அவள் இறந்துபோனதை அறிந்து திகைத்தனர். ஆனால் அவள் தினம் ஒரு புளியமரத்திற்குப் பூசை செய்த விவரத்தை அங்கிருந்தோர் கூற கோயிலார் அந்த மரத்தை ஆராய்ந்தனர்.

நடராஜர் சிலை இருக்குமிடம் தெரிந்தது. வைப்பியின் தியாகத்தையும் கடமையுணர்ச்சியையும் புகழ்ந்து கோயிலார் நடராஜரை மீண்டும் கோயிலுக்குக் கொண்டு வந்து பூஜை செய்தனர்.

அன்றிலிருந்து வைப்பி வாழ்ந்த இடம் “வைப்பி சாவடி’ என்றும் அந்தப் புளியமரம் “அம்பலப்புளி’ என்றும் அழைக்கப்பட்டன. இந்தத் தகவலை டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார்.

Charu Nivedhita, Paithiyakkaaran, Jeyamohan, French Translations by நாகார்ஜுனன்

June 30, 2009 Leave a comment

எழுத்தாளர் சாரு நிவேதிதா இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதி தற்போது வெளியிட்டிருக்கும் Mummy Returns பகுதி-1 பதிவை வாசித்தேன். இரு ஆண்டுகள் முன்பு 2007 செப்டம்பர் தீராநதி இதழில் கடற்கரய் என்னுடன் நிகழ்த்திய நேர்காணலில் என்னை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரை இது.

அத்துடன், “இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்துகொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்” என்கிறார் சாரு நிவேதிதா.

பைத்தியக்காரன் என்பவர் சாரு நிவேதிதா குறித்து எழுதிய இந்தப்பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் உள்ள சாரு குறித்த பல கருத்துக்களுடன் எனக்கு ஒப்புதலும் இல்லை. பைத்தியக்காரன் என்பவர் எழுதும் எந்த விஷயத்துக்கும் என்னைப் பொறுப்பாக்க முடியாது. பொறுப்பாக்குவதில் பொருளில்லை.

பைத்தியக்காரன் என்பவருக்கு ஏற்கனவே எழுதிய மின்-அஞ்சலில், “சாரு நிவேதிதாவுக்கு நான் பதில் எழுதின பிறகு, அதை அவர் பிரசுரித்த பிறகு, இப்படி ஒரு பதிவை நீங்கள் எழுதியிருக்க வேண்டாம்” எனவும் “சாரு நிறைய வாசிக்கக்கூடியவர். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை என்னுடன் நெருங்கிப் பழகியவர். ஒரே தலைமுறையைச் சார்ந்த பலரும் பரஸ்பரம் பலரின் எழுத்துக்களை அறிமுகம் செய்துகொண்டோம். அது அருமையான காலகட்டம், இடைநிலை-இதழ்களின் கை ஓங்காத காலகட்டம், அப்போது யாருக்கு யார் யாரை அறிமுகம் செய்தோம் என்பது அவ்சியமற்றதல்லவா..” என்றும் எழுதியிருக்கிறேன்.

இப்போது பின்வரும் மின்-அஞ்சலை சாரு நிவேதிதாவுக்கு அனுப்பியிருக்கிறேன்.

அன்புள்ள சாரு

(தமிழாக்கமும் ஆங்கில ஆக்கமும் குறித்த) என் பதிலை வெளியிட்டதற்கு நன்றி. இத்துடன் இந்த விஷயம் முடிந்துவிட்டது என நினைத்துக்கொண்டிருந்தேன்.

தற்போது மம்மி ரிட்டர்ன்ஸ்-1 பதிவில் என்னைப் பற்றி இரண்டு ஆண்டுகள் முன்பு எழுதியதை வெளியிருட்டிருக்கிறீர்கள். பரவாயில்லை. அதில் பின்வருமாறு குறிப்பிடுகிறீர்கள்:

“இப்போது நாகார்ஜுனன் பைத்தியக்காரன் என்ற ஆள் பெயரில் ஒளிந்து கொண்டு என்னைப் பற்றிய ஒரு ஆபாசக்கட்டுரையை எழுதியிருக்கிறார். அதற்கான எதிர்வினை நாளை வெளிவரும்.”

என்ன சொல்வதென்றே தெரியவில்லை! பைத்தியக்காரன் என்பவர் எழுதிய பதிவுக்கும் எனக்கும் எவ்விதத்தொடர்பும் இல்லை. அதில் வந்த விஷயங்களுடன் எனக்கு எவ்வித ஒப்புதலும் இல்லை. என்னை நோக்கிய உங்கள் எதிர்வினை அவசியமற்றது.

இதற்குமேல் நேரில்தான் பேசவேண்டும்.

தங்கள்
நாகார்ஜுனன்

சாரு நிவேதிதாவுடன் பேசிவிடலாம் என என்னிடமிருந்த அவருடைய கையகத்தொலைபேசி எண்ணை அழைத்தேன். தொடர்பு சரிவரக் கிட்டவில்லை. என்மீது அவருக்குக் கோபம் இருக்கலாம். என்மீது கோபம் தேவையில்லை, அவசியமற்ற கோபம், ஆற வேண்டும் என விரும்புகிறேன். – நாகார்ஜுனன்.

Pakistan & France

May 11, 2009 1 comment

Rampage in Pakistan Shows Reach of Militants By: Sabrina Tavernise, Waqar Gillani, and Salman Masood | The New York Times
Pakistan, a nuclear-armed state, has been mired in political wrangling since an election last year, with leaders fighting each other instead of joining efforts against the insurgency, which is slowly strangling the country. The government’s impotence will greatly complicate the Obama administration’s efforts to bring order to Afghanistan, whose militants slip through Pakistan’s porous borders.

Can Pakistan Be Governed? By: James Traub | The New York Times

Terrorists. Secessionists. Angry neighbors. Smoldering generals. And Asif Ali Zardari, with the job of keeping his country from becoming the most dangerous failed state in the world.

Zardari’s poll numbers are dreadful. More important, he has given little sustained attention to the country’s overwhelming problems — including, of course, the Islamist extremism that, for the Obama administration, has made Pakistan quite possibly the most important, and worrisome, country in the world. Zardari has bought himself more time, but for Pakistan itself, the clock is ticking louder and louder.

The Two Frances by Theodore Dalrymple, City Journal 7 April 2009: “One a bourgeois paradise; the other, an urban fear zone”

World Politics Review | Rights & Wrongs in Pakistan: The Normalcy of Crisis

World Politics Review | Kashmir Skirmishes Exacerbate India-Pakistan Tensions: A series of brazen infiltration attempts by militant groups in Indian Kashmir have resulted in fierce gun battles with security forces, and threaten to exacerbate already tense relations between India and Pakistan. The skirmishes come amid fears of militant attacks on prominent political leaders as the campaign for India’s parliamentary elections gets under way.