Archive
Lal Bahadur Sastri: Why Kalainjar Karunanidhi did not become a Gandhian?
“ஆயிரம் நீதிக்கதைகள்’ என்ற நூலில் நாடோடி
1936-ம் ஆண்டு அலகாபாத் நகரசபை, நகருக்குப் பக்கத்தில் நிறைய நிலம் வாங்கி அதை வீடு கட்டும் மனைகளாக விற்கத் தீர்மானித்து. அதைக் கவனித்துக் கொள்ளும் கோஷ்டியின் அங்கத்தினர்களில் ஒருவராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார்.
ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரி வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நகரசபைத் தலைவரின் அனுமதி பெற்று தம் பெயரில் ஒரு மனையும் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் ஒரு மனையும் வாங்கி அதற்கான பணத்தையும் கட்டினார்.
ஊரிலிருந்து திரும்பி வந்த லால்பகதூர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிக்க வருத்தம் அடைந்தார். தன் நண்பரை அழைத்து “”நகர அபிவிருத்தி கோஷ்டியின் அங்கத்தினராக இருந்து கொண்டு நாமே வீட்டுமனைகளை வாங்குவது மிகவும் தவறு. ஆகவே அந்த இரண்டு மனைகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.
தமக்கென்று சாஸ்திரிக்கு வீட்டு மனை இல்லாதபோது அவர் வாங்கியதில் தவறே இல்லை என்று இதர நகர அபிவிருத்தி கமிட்டி அங்கத்தினர்கள் எவ்வளவோ சொல்லியும் லால்பகதூர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை!
“”பிறருக்கு மனைகள் விற்கும் நாமே நமக்கென்று மனைகளை ஒதுக்கி வைத்துக்கொள்வது தர்மமாகாது. அதோடு சொத்து சேர்க்கமாட்டேன் என்று மகாத்மா காந்திக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எனக்கென்று எந்த நாளும் சொத்து சேர்த்துக்கொள்ள மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறினார் லால் பகதூர் சாஸ்திரி!
உண்மை.
பின்பு அவர் பாரதத்தின் பிரதமராகச் செயயல்பட்டபோதும் எந்த ஒரு சொத்தும் சேர்க்காமல் ஒரு ஏழையாகவேதான் மறைந்தார்.
Urban Legends on Mahatma Gandhi & Aruna Asaf Ali for Thamizhachi Thangapandiyan by Anita Ku Krishnamurthy
‘தேசியக் கொடியின் தந்தை திருப்பூர் குமரன்’ நூலில் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி
காந்திக்கு இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தின் மீது ஈடுபாடு இருந்தது. ஏனென்றால் சுமார் இருபது ஆண்டுகாலம் ஆப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்த காந்திக்கு குமாஸ்தா வேலை பார்த்தவர் ஒரு தமிழர்.
காந்திக்கு உண்மையான சுதந்திர வளர்ச்சியை உள்ளத்துக்குள் விதையாய் நட்டவர், ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தமிழச்சி தில்லையாடி வள்ளியம்மை.
காந்தியின் விடுதலை வேட்கையைத் தூண்டி அடிமைத்தளையை உடைத்தெறிய விழுதாய் நின்றவர் டர்பன் நகரத்து ஏழைத் தமிழன் பாலசுந்தரம்.
காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது குஜராத்திய உடை அல்ல. தமிழ்நாட்டின் ஏழைக் கதராடைதான் காந்தியை உலகுக்கு அடையாளம் காட்டியது.
தென் ஆப்பிரிக்காவில் 1100 ஏக்கர் நிலப்பரப்பில் டால்ஸ்டாய் பண்ணை என்ற ஒன்றை காந்தி ஏற்படுத்தியிருந்தார். தானும் தமிழ் கற்று, குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுத் தருவதை காந்தி கடமையாகக் கொண்டார்.
அவற்றையெல்லாம் விட பிறந்தபோது ராம்சந்த் என்ற குஜராத்தி அவர். ஆனால் தமது 50-ம் வயதில் பாரதியார் என்ற தமிழ்க் கவிஞனால் மகாத்மா என்று மறுபெயர் சூட்டப்பட்ட தமிழர் அவர். இப்படிப்பட்ட காந்தியைத்தான், அவர் வயதில் பாதி கூட இல்லாத குமரன் தமக்கு தாதியாய் ஏற்றுக்கொண்டார். குமரனைவிட காந்தி 35 வயது மூத்தவர்.
காங்கிரஸ் சோசலிஸ்ட்டுகள், தொழிற்சங்க வரலாறு என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு அருணா ஆசப் அலி வரலாற்றில் திரும்பியது.
ஒருமுறை சுதந்திர போராட்ட வீரர்கள் போலீஸ் தடியடியால் கீழே விழுந்து கதறுகின்றனர். ஒருவர் தண்ணீர்…தண்ணீர்… என்று அலறுகிறார். தண்ணீர் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதுகண்டு பொறுத்துக்கொள்ள முடியாத அருணா ஆசப் அலி, திடீரென்று அந்தத் தொண்டரின் அருகில் படுத்துக்கொண்டு தன் மேலாடையை அகற்றித் தன் மார்புகளை அந்தத் தொண்டரின் வாய்க்குள் திணித்து…ஒரு தாயைப் போல அத்தொண்டரை குழந்தையாய் பாவித்து சுவைக்கக் கொடுத்திருக்கிறார். தொண்டரின் வறண்ட நாவில் மார்புகள் பட்டதும் கண்களில் வழிகிறது கண்ணீர்.
அப்படிப்பட்ட மகத்தான தியாகியான அருணா ஆசப் அலி திருப்பூர் வந்திருந்தபோது அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியின் யானைகள் அனைத்தும் தம் துதிக்கையால் மாலைகளைத் தூக்கி அவர் கழுத்தில் போட்டன.
Recent Comments