Archive

Posts Tagged ‘Images’

Swaminarayan Satsang – Mandirs Worldwide: Shree Saminarain Temple

October 26, 2009 3 comments

With @ksrk Satyarajkumar in East Falls Church

July 25, 2009 1 comment
Img00044-20090725-1027

Sent from my Verizon Wireless BlackBerry

தாயின் அருமை – Short Stories for Kids

July 9, 2009 Leave a comment
Thaiyin arumai-ponnammalThaiyin arumai-ponnammal

தாயின் அருமை:

விலை: ரூ-30.00

Ph: no: (044) 24342810

கிடைக்கும் இடம்: திருவரசு புத்தகநிலையம்,

23,தீன தயாளு தெரு,

தியாகராய நகர்,

சென்னை-600017.

குழந்தை நூல்களுக்காக பல பரிசுகள் பெற்றுள்ள திருமதி ஆர்.பொன்னம்மாள் குழந்தைகளுக்காக இந்நுலில் அரிய அறிவுரைகளை கதையோடு கலந்து கொடுத்திருக்கிறார். மொத்தம் 13 கதைகள். முதல் கதையில் சிறுமி வித்யா கிராமத்து மனிதர்களிடமிருந்து உதவும் குணத்தைப் புரிந்து கொள்கிறாள்.

அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை இரண்டாம் கதையின் நாயகன் நவீன் உணர்கிறான். மூன்றாம் கதையில் சங்கீதா நீதிக்கதையையும், சுமித்ரா அறிவாற்றலுடைய போட்டிக்கதையையும், விமலா பொன்வட்டில் கதையையும், மானஸா நாற்காலி கதையையும், பிரேமா தவளைக் கதையையும், கீதா மொட்டைத்தலைக் கதையையும் கூறி அசத்தியிருக்கின்றனர். பொய் சொன்னாள் தண்டனை தனக்குத்தான் என்பதை “யாருக்கு ஏமாற்றம்” சொல்கிறது. சுரேஷ் நடத்திய நாடகம் “சுதும், வாதும்” வேதனை செய்யும் என்கிறது. உருதுகவிஞர் மிர்ஜா காலிப் நட்பைப் போற்றிய சம்பவம், பூதத்தை விக்டர் வென்ற கதை இரண்டும் கதைக்குள் கதையாக சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.

மனதால் உயரமான பார்வதியின் படிப்பறிவு வெளிப்படும் விதம் நம்மை பிரமிக்க வைக்கிறது. தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்துள்ளது. “என்னால் முடியுமா!” புத்தகத்தலைப்பைக் கொண்ட ஒன்பதாவது கதை வருணையும், வர்ஷாவையும் திருத்துகிறது.

உபகாரம் அவதூறையும், அனாவசியச் செலவையும் தந்ததை அடுத்த கதையில் படித்து மனம் உருகுகின்றது.

குழந்தைகளிடம் எதைச் சொல்ல வேண்டும் என்று பெரியவர்களுக்கும், கூட்டுக் குடும்பத்திலுள்ள குழந்தைகள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் மென்றும் “திரியாவரக்காரி” விளக்குகிறது.

“யார் அசடு” உம்மண மூஞ்சியையும் வாய் விட்டு நகைக்க வைக்கும். எளிமையாக மாறு வேடமிட்டாலும் திறமையாகப் பேசி முதல் பரிசைத்தட்டிச் சென்ற ஹரீஷ் கதை சிலிர்க்க வைகிறது. மொத்தத்தில் சிறுவர் சிறுமியரை பண்பாளராக மாற்றும் முயற்சி இந்நூல்.