Archive
Kavinjar Vaali: ‘I tried to cast Sivaji Ganesan and Jeyandira Saraswathi in my Plays’
‘நினைவு நாடாக்கள்’ நூலில் கவிஞர் வாலி
திருவானைக்கோவில். அங்கு ஒரு எலிமெண்டரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியின் பராமரிப்பில் உள்ளது. அங்கு “காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத,பள்ளி மாணவர்களை வைத்துப் போட்டேன்.
அதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க இரு பையன்கள் வருவார்கள். இருவரும் 20-வது வயதை நெருங்கிக் கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் இருக்கலாம்.
குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை- நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.
இன்னோர் இளைஞன் நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன். பக்கத்தில் உள்ள ப.ந.ப. பஸ் டெப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன். ஏற்கெனவே “பாய்ஸ் கம்பெனியில்’ இருந்து பழக்கப்பட்டவன்.
அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!
நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த வேத பாடசாலை மாணவன்தான்- காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!
நாடகத்தை வேடிக்கை பார்த்த ப.ந.ப. பஸ் டெப்போ பயிற்சி மெக்கானிக்காகப் பணி புரிந்த பையன் – கணேச மூர்த்தி- சிவாஜி கணேசன் என்றால் உங்களுக்கு நன்றாகப் புரியும்!
Recent Comments