Archive

Posts Tagged ‘Journals’

TV, Media Updates from Tamil Nadu: Magazines, Journals, Periodicals

July 16, 2009 Leave a comment

எனக்குப் பத்திரிகையும் பதிப்பகமும் மீடியாவும்தான் சந்தோஷத்தைத் தருவன. அதுவும் புதிய முயற்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பன. அந்த வகையில்,

1. நேற்று திரிசக்தி என்ற ஆன்மிக இதழும், தேவதை என்ற பெண்கள் இதழும் வெளியாயின. திரிசக்திக்கு, பி.சுவாமிநாதன் ஆசிரியர். இவர் சக்தி விகடனின் முன்னாள் பொறுப்பாசிரியர். தயாமலர் தேவதைக்கு ஆசிரியர். இவர் அவள் விகடனின் முன்னாள் ஆசிரியர்.

2. நான் விரும்பிப் படிக்கும் ஆங்கில வணிக இதழான மிண்ட், சென்னை பதிப்பு கொண்டு வந்துவிட்டது. சென்ற திங்கள் (13.07.2009) முதல் சென்னைப் பதிப்பு வந்திருக்கிறது. பெரிய பப்ளிசிட்டி இல்லாமல் சாஃப்ட் லாஞ்ச். மிகவும் உபயோகமாக இருக்கிறது.

3. ஆகஸ்டு மாதத்தில், மாலனை ஆசிரியராகக் கொண்டு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்கள் இளைஞர்களுக்கான ஓர் தமிழ் வார இதழைத் தொடங்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஆங்கில இதழும், ஒரு தொலைக்காட்சி சேனலும் வரவிருக்கின்றன.

4. விகடனின் அடுத்த குழந்தை – டாக்டர் விகடன். எஸ்.நாகராஜகுமார் பொறுப்பாசிரியர். இவர் மறைந்த எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் வளர்ப்பு மகன்.

5. ஆகஸ்டு 23 முதல், சேலத்தில் புகழ்பெற்ற லோக்கல் சேனலான பாலிமர், இப்போது உலகமெங்கும் தெரியும் அளவுக்குத் தன் பரப்பை விரிக்க இருக்கிறது. ஜெயா டிவியில் இருந்த முரளிராமன் மற்றும் அவரது நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவினர், பாலிமருக்கு வந்துவிட்டனர்.

கவிதை ஒன்றுகூடல்

June 10, 2009 Leave a comment

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி

  • அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது,
  • நகர வேண்டிய திசைவெளி,
  • தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது
  • சாதி,
  • இனம்,
  • மொழி,
  • மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும்
  • பண்டம்,
  • சந்தை,
  • போர்,
  • மரணம் என்னும்
  • உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது
  • எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என
  • விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது
  • தொடர்ந்து சிந்திப்பது,
  • எழுதுவது,
  • ஒன்றுகூடுவது,
  • இயங்குவது

என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:

இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறுநாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு

வரவேற்பு: கரிகாலன்
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்

அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி

திறனாய்வுகள்:

1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்

2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா

3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்
ம. மதிவண்ணன்

4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்
க. மோகனரங்கன்

5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி
வெ.பாபு
6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை
க. பஞ்சாங்கம்

7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி

8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்

அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்

ராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும் சுகிர்தராணி
1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்
யாழன் ஆதி
2. எனக்கு கவிதை முகம்/ அனார்
செல்மா பிரியதர்ஸன்
3.உறுமீன்களற்ற நதி/ இசை
கரிகாலன்

4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி
விஷ்ணுபுரம் சரவணன்

6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை

கம்பீரன்
7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி
எஸ். தேன்மொழி

கருத்தாளர்கள்:
  • சுந்தர்காளி,
  • பிரேம்,
  • சஃபி,
  • ராஜன்குறை,
  • வியாகுலன்,
  • சுகன்,
  • நட. சிவக்குமார்,
  • முஜுப்பூர் ரஃமான்,
  • சாகிப்கிரான்,
  • ரவீந்திரபாரதி,
  • மணிமுடி,
  • யதார்த்தா ராஜன்
கவிதை வாசிப்பு
  • தா.அகிலன்,
  • நிசாந்தினி,
  • ஜீவன் பென்னி,
  • வெயில்,
  • கணேசகுமாரன்,
  • அமுதா

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993

நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்

Journalist Annadurai: MS Venkatachalam

April 29, 2009 Leave a comment

பத்திரிகையாளர் அண்ணா

எம்.எஸ். வேங்கடாசலம்

ஓம்லேண்ட்(Homeland) என்னும் ஆங்கில வாரஇ இதழை 1957ம் ஆண்டு ஜனவரித் திங்களில் தொடங்கிட அண்ணா திட்டமிட்டிருந்தார். அதற்இகான அடிப்படைப் பணிகள் நிறைய இருந்தமையால், அவருஇடைஇஇய விருப்பத்தின்படி 1956 நவஇஇம்இஇபர் மாதத்திலேயே அதன் துணை ஆசிரியராக நான் பொஇறுஇப்இஇபேற்றேன். இடையில் பொதுத்இதேர்தல் குறுக்கிட்டதால் 1957 ஜுன் திங்களில்தான் இதழ் வெளியிடப்பட்டது. துவக்க காலத்தில் ஆதிராவிடநாடு இதழுக்கான அலுவலகமே ‘ஓம்லேண்ட்’ இதழுக்கும் அலுவஇலகமாக விளங்கியது. திராவிட நாடு அலுவல்களையும் வரவு செலவுகளையும் நிர்வகித்து வந்த ஈழத்து சிவானந்த அடிகளே இதையும் நிர்வகித்து வந்தார்.

தமிழகத்தில் வெளியிடப்பட்ட ஏடுகள் – நாளேடுகள், கிழமை ஏடுகள், திங்கள் ஏடுகள் – அனைத்தும் வரவழைக்கப்பட்டன. டெல்லிஇயிலிருந்து வெளிவந்த ‘இந்து ஸ்தான் டைம்ஸ்’ (Hindustan Times), பம்பாயிலிருந்து வெளிவந்த ‘டைம்ஸ் ப் இண்டியா’ (Times of India), கல்கத்தாவிலிருந்து வெளிவந்த ‘அமிர்த பசார் பத்திரிகா’ (Amrita Bazaar Patrika), பெங்களுரிலிருந்து வெளிவந்த ‘டெக்கான் எரால்ட்’ (Deccan Herald), நாகபுரியிலிருந்து வெளியிடப்பட்ட ‘இடவாடா’ (Hitavada) ஆகிய நாளிதழ்கள் அனைத் தும் வரவழைக்கப்பட்டன. இலண்இடனில் இருந்து ‘மான்செஸ்டர் கார்டியன்’ (Manchester Guardian), மலேசியாவிலிருந்து ‘தமிழ் முரசு’ ஆகியவையும் வரவழைக்கப்பட்டன. இவை தவிர ‘தாட்’ (Thought), ‘ராடிக்இகல் ஹியூமனிஸ்ட்’ (Radical Humanist), ‘மேன்கைன்ட்’ (Mankind) கிய இதழ்களும் வரவழைக்கப்பட்டன. அந்தக் காலத்திலேயே இந்த இதழ்களுக்கென்று செலவிடப்பட்ட தொகை மாதம் சுமார் ரூ. 300-க்கு மேல்!

நாள்தோறும் அவற்றில் வெளிவந்த செய்திகளில் முக்கியமானவற்றைக் குறித்து வைத்து அண்ணாவிடம் காண்பிக்க வேண்டும். அவற்றை யெல்லாம் பார்த்துவிட்டு, அண்ணா அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்கச் சொல்வார்; ஆங்கிஇலத்தில் உள்ளதைத் தமிழில், தமிழில் உள்ளதை ஆங்கிலத்தில்! இதுதான் துவக்கத்தில் எனக்கு இடப்பட்ட பணி, பயிற்சி!

இவற்றிற்கிடையே எப்படியாவது கட்டுரைகள் எழுதவேண்டும்; அவை திராவிடநாடு இதழில் வெளிவரவேண்டும் என்பது எனது உள்ளக்கிடக்கை. நான் ஏற்கெனவே படித்தும் எழுதியும் பழக்கப்பட்டிருந்த தமிழ் நடைக்கும், திராவிடநாடு இதழில் வெளிவந்த தமிழ் நடைக்குமிடையே வியப்பூட்டும் வேறுபாடுகள் இருந்தன. சரியாகச் சொல்லவேண்டுமானால், தொடக்க காலத்தில் எனக்கு அது ஒரு புது மொழி போலவே தோன்றியது. அண்ணாவின் கட்டுரைகளிலிருந்த அடுக்குச் சொற்கள், தொடர்கள், அவற்றிலிருந்த சரளமான ஓட்டம் சிந்தையைத் தொடவல்ல நளினம்; இவற்றையெல்லாம் பெருமளவு எதிரொலிக்கின்றவகையில் அந்த இதழின் துணை ஆசிரியர் இராம.அரங்கண்ணல் அவர்கள் தீட்டி வந்த பல்வேறு கட்டுரைகள்; இவை யனைத்தையும் மிகவும் ஊன்றிப் படித்தேன், ஒன்றுவிடாமல்! அவற்றை உள்ளத்தில் ஏற்றிக்கொண்டேன், மெல்ல மெல்ல!

மிகுந்த ஆர்வத்துடன் ஓரிரண்டு திங்கள்களில் எழுதத் தொடங்கினேன். ஆனால், எதை எழுதுவது என்பது சற்றும் புரியாத நிலை. மிக முக்கியமான நிகழ்ச்சி பற்றியோ, செய்தி பற்றியோ எழுதத் தோன்றும். அவற்றைப் பற்றி அண்ணா எழுதியிருப்பார்! அல்லது அரங்கண்ணல் எழுதியிருப்பார். அவர்கள் அதுவரை எழுதிடவில்லை யெனினும், அவற்றைப் பற்றி, கை தேர்ந்த எழுத்தாளர்களான அவர்கள் எழுதினால் நன்றாக இருக்குமே என்று கருதி, எனக்குள் அப்போதைக்கப் போது ஏற்படும் ஆசைகளை அடக்கிக் கொள்வேன். எனவே, மிகச் சாதாரண விஷயத்தை மட்டும் எனது எழுத்துக்குக் கருப்பொருளாக எடுத்துக் கொள்வேன்.

அப்படித் தேடிக்கொண்டிருந்த வகையில் நல்ல கருப்பொருளொன்று எனக்குக் கிடைத்தது – அல்லது அதை நல்ல கருப்பொருள் என்று நானே கருதிக்கொண்டேன். அன்றைய சோஷியலிஸ்ட் கட்சியின் மாத இதழான ‘மேன்கைண்ட்’ ஆசிரியராக, கட்சியின் தலைவராக அப்போது இயங்கிவந்த இராம் மனோகர் லோகியா இருந்தார். அவர் நல்ல எழுத்தாளர் என்றும் தரமான பேச்சாளர் என்றும் பெயரெடுத்தவர். ஆங்கிலேயருக்கு மட்டுமன்றி ஆங்கிலத்துக்கும் தான் எதிரி எனக்காட்டிக்கொள்வதில் மிகுந்த அக்கறை செலுத்தி வந்தார். ‘ஆங்கிலமே வெளியேறு’ என்று குரலெழுப்பி, அதற்கென்று ஓர் இயக்கத்தைக்கூட நடத்தி வந்தார். இந்தியை அரியணை ஏற்றிட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்று சூளுரைத்தவர்.

அந்த இதழில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது, தி.மு.க. கட்சியைத் தாக்கியும் கேலி செய்தும். ‘தி.மு.க. பார்ப்பன எதிர்ப்பு இயக்கம் என்பதென்னவோ உண்மைதான்; ஆனால், அது மக்கள் இயக்கமல்ல – மக்களிடம் சென்றடையவில்லை! முதலியார் என்ற குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் மட்டுமே இதற்கு தரவு அளிக்கின்றனர். தி.மு.கழகம் என்றால் ‘முதலியார் கட்சி’ என்று கூடத் தமிழ்நாட்டில் பரவலாகப் பேசப்படுகிறது’ என்று எழுதியிருந்தது, அந்த ஏடு! இது எனக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஊட்டியது.

பேப்பரையும் பேனாவையும் எடுத்தேன்; எழுதித் தள்ளினேன்; ஆத்திரம் தீர! பின்னர் அடிகளிடம் கொடுத்தேன், அவருடைய ஒப்புத லுக்காக! அவர் அண்ணாவிடம் கொடுத்தார். அதைப் படித்த அண்ணா சிரித்துக் கொண்டே என்னைக் கேட்டார்: “இந்த ‘மேன்கைண்ட்’ பத்திரிகை தமிழ்நாட்டில் எவ்வளவு பிரதிகள் விற்பனை ஆகுமென்று நினைக்கிறாய்? அதிகமாகப் போனால் 50 போகுமா?”

“ஆம், அண்ணா!”

“50 பிரதிகள் விற்பனை என்றால், அதிகமாகப் போனால் 100 அல்லது 200 பேர் அதைப் படித்திருப்பார்களா?”

“ஆம், அண்ணா!”

\ “நமது பத்திரிகை எவ்வளவு விற்கிறது?”

“சுமார் 10,000 பிரதிகள்!”

“படிப்பவர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள்?”

“ஒரு இலட்சத்தைத் தாண்டக் கூடும்.”

“சுமார் 100 பேருக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயத்தை நீ ஒரு இலட்சம் பேருக்கு எடுத்துச் சொல்லுகிறாயே, என்ன புத்திசாலித்தனம் இது?” என்று கேட்டுவிட்டு, “எழுதுவதற்கு ஒரு இலக்கணம் வகுத்துக்கொள்ள வேண்டும். நமது எழுத்து நாம் கொண் ட கொள்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படும், வலுவேற்றும் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்! பயன்படும் என்று தெரிந்தால் மட்டுமே எழுதவேண்டும். கண்டவற்றை எழுதி நம்முடைய நேரத்தையும் வாசகர்களுடைய பொன்னான நேரத்தையும் வீணாக்கக் கூடாது” என்றார்.

எவ்வளவு பொன்னான கருத்து, இது! எழுத்துலகில் ஈடுபடுவோருக்குத் தாரக மந்திரமன்றோ இது?

‘திராவிடநாடு’ இதழைப் பொறுத்த வரை ஆண்டுதோறும் பொங்கல் மலரை மிகச் சிறப்பாகத் தயாரிப்பது வழக்கம். அரங்கண்ணல் மற்றும் நன்கு அறிமுகமான எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவற்றில் இடம்பெறும். அவற்றைத் தேர்வு செய்வதில் அண்ணா மிகுந்த கவனம் செலுத்துவார்.

Read – Nov 24, Monday

November 24, 2008 Leave a comment

1. வாசகசாலையும் போதனா சுதந்திரத்தின் எல்லைகளும்

An Authoritative Word on Academic Freedom – Stanley Fish Blog – NYTimes.com: Stanley Fish discusses the merits of “For the Common Good: Principles of American Academic Freedom,” to be published in 2009 — two distinguished scholars of constitutional law, Matthew W. Finkin and Robert C. Post, that argues that academic freedom should be seen in the context of practical sense.

2. இராக்கிற்கு சுதந்திரம் கொணர்ந்த அமெரிக்காவும் இந்தியாவிற்கு விடுதலை தந்த பிரிட்டிஷாரும்

East India Company :: Book Review – ‘The Decline and Fall of the British Empire 1781-1997,’ by Piers Brendon – Review – NYTimes.com

3. பாரிஸ் என்றாலே புகைபிடித்தலுடன் மதுவருந்தல் அல்லவா?

Across France, Cafe Owners Are Suffering – NYTimes.com: “Business at Paris, declined after a smoking ban took effect.”

4. தாய்நாட்டின் குரல் கேட்கிறதா? முதல் தலைமுறையினர் இந்தியாவிற்கு திரும்பினால்?

The World – India Calling – NYTimes.com By ANAND GIRIDHARADAS

5. கத்தாரில் பெரும் பொருட்செலவில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அருங்காட்சியகம்

Museum of Islamic Art, in Doha, Qatar – NYTimes.com: There is nothing timid about the ambitions of the new Museum of Islamic Art that opens in Qatar next week.

Categories: Tamil Tags: , , , , , , ,