Archive

Posts Tagged ‘Movie’

மிரட்டல் சந்தானம்

August 8, 2012 Leave a comment

1. டேய், நாயே, நீயே ஜெயில்ல இருந்துதானே வந்திருக்கே? என்னமோ ஜெர்மன்ல இருந்து வந்தா மாதிரி ஃபிலிம் காட்றே?


2. ஹீரோ – ஐ ஆம் பப்லு

நீ என்ன பராக் ஒபாமாவா?


3. சட்டையை கழட்டு.. ..


ஏய்.. நீ பொம்பளை.. உன்னை சொல்லலை.. நல்ல வேளை..


4. என்னடா சிரிப்பு.. ?

அண்ணா, கொட்டாவி விட்டேனுங்க./.


5. சாகடிக்கறவனுக்கு சாகற தைரியம் வேணும்னு சொல்லித்தரலை?


6. நீ ஏன் ரிசைன் பண்ணாம வந்துட்டே?

இது என்ன கவர்மெண்ட் வேலையா? ரிசைன் பண்ண?


7. அந்த தாதா அவரோட தங்கச்சிக்கு ஒருத்தன் விபூதி வெச்சு விட்டான்னு அவன் விரலையே வெட்டிட்டாராம்..

அய்யயோ.. அப்போ குங்குமம் வெச்சு விட்டா குடும்பத்தோட கொளுத்திடுவாரா?


8. ஏன் எல்லாரும் அந்த கிழவன் கைல கிஸ் பண்றாங்க?

நீ வேணா அவர் லிப்ல கிஸ் பண்ணீக்கோ, யார் வேணாம்னா?


9. இவன் ஆள் அசைய முடியாது, பேச முடியாது எல்லாம் ஓக்கே, சலங்கை ஒலி கமல் மாதிரி அபினயத்துல போட்டுக்குடுத்துட்டா?


10. முன்னால எல்லாம் ஆள் செத்தா தந்தி அனுப்புவாங்க, ஆனா இப்போ..

செத்தவனே போய் தகவல் சொல்லிடறானா?


11. இந்த மிஷின் ஈசியா ஒரே டைம்ல லட்ச ரூபாயை எண்ணும்..

கள்ள நோட்டை கண்டு பிடிக்குமா?

அது என்ன சி பிசி ஐடி ஆபீசரா?


12. இந்த இடத்துக்கு யாரும் வர மாட்டாங்க, வடை சுட்டுப்போட்டாக்கூட காக்கா வராது.

ஏன்?

அப்டி காக்கா வந்தா அதை சுட்டு இவனுங்க சாப்டுறுவாங்களே?


13. சார், உங்களுக்கு என்ன வேணும்?

3 பொண்ணுங்க, ஒரு ஆண்ட்டி./. \


14. நம்ம கடை பேரை எதுக்கு பலூன்ல எழுதி மேலே பறக்க விட்டிருக்கே?

பின்னே? பாறாங்கல்ல எழுதியா பறக்க விட முடியும்?


15. இவன் பலூன் மேட்டரை வெச்சு பல்சர் பைக்கே வாங்கிடுவான் போல இருக்கே?


16. எனக்கு வரப்போற மனைவி கேத்ரீனா கைஃப் மாதிரி இருக்கனும்..

என்னது? கேத்ரீனா கைஃப்பா?

பின்னே? பி வி சி பைப்பா?


17. கட்டுனா கைஃப் மாதிரி பொண்ணைத்தான் கட்டனும், நமக்குன்னு ஒயிஃப் வந்து மாட்டி இருக்கு பாரு நைஃப் ( KNIFE) மாதிரி


18. நீ தாதாவோட தங்கச்சியை பார்க்கறது அவனுக்கு தெரிஞ்சுது அவன் உன் தலையை வெட்டிடுவான்

நிஜமாவா?

பின்னே பொய்யாவா? அவன் அவளோட தங்கச்சியோட உன்னைப்பார்த்தா எதை வெட்டுவான்னு சொல்லவே முடியாது


19. ஆஹா, வாட் எ பாடி?

ஏன்? இதுக்கு முன்னால பொம்பளை பாடியை ( பிரா) பார்த்ததே இல்லையா?


20. அவ ஃபிஃப்டி கே ஜி தாஜ்மகால் மாதிரியே இருக்கா.

அவ அண்ணனை நீ பார்க்கலையே? திருமலை நாயக்கர் மகால் மாதிரியே இருப்பாங்க..


21. நான் மட்டும் உன் கூட சினிமாவுக்கு வர்ற மேட்டர் தெரிஞ்சுது? அவ்ளவ் தான் ஆ,மா, இவ்லவ் சீரியஸா நான் புலம்பிட்டு இருக்கேன், நீ என்ன பண்றே?

பார்த்தா தெரியலை? பாப்கார்ன் சாப்பிடறேன்


22. பின்னால உக்காந்திருக்கறவன் என்னை பார்த்து கேஸ் அப்டிங்கறான்.. கேஸ்னா என்ன அர்த்தம்?

ஹி ஹி பிராஸ்டிடியூட்னு..


23. வெறும் 1500 ரூபா தான் கைல இருக்கு..

நான் வேணா என் பொண்டாட்டி கொலுசை அடமானம் வெச்சு பணம் கொண்டாரவா?

தொலைச்சுடுவேன்\

இருக்கறதே 1500 ரூபா தான், அதையும் தொலைச்சுட்டா அப்புறம் செலவுக்கு என்ன செய்வே?


24. ஆமா, நீ என்ன லவ்வர் கூடவா பேசறே? இப்படி குசுகுசுன்னு ஏன் பேசறே?


25. அட, செம ஐடியாவா இருக்கே? எல்லா இங்கலீஷ் டி விடியையும் சுட்டுட்டியா?


26. என் தங்கச்சி பத்தி உனக்குத்தெரியாது

எல்லாம் ஐ நோ. பாசமலர் 50%, தங்கைக்கோர் கீதம் 50 %


27. …………………….

கரெக்ட் சார்

நான் எதுவும் சொல்லவே இல்லையே?

நீங்க எது சொன்னாலும் கரெக்ட் தான் சார்..


28. எங்கே இங்க்லீஷ்ல பேசு பார்ப்போம்

ஹலோ./.


29.பொண்ணுங்களுக்கு கெட்டிக்காரங்களை பார்த்ததும் பிடிக்கும்.


30. வாப்பா, உக்காரு

பரவாயில்ல

அப்போ நான் நின்னுக்கிடவா?

அவ்வ்வ்வ்வ்


31. உங்கப்பா குடிப்பாரா?

ஆஃப் சைஸ் பாட்டில் அளவுக்கு இருந்துட்டு ஃபுல் சைஸ் அளவுக்கு குடிப்பாரு.


32. தீபி..

என் சாவுக்கு ஊதப்போறே பீ பீ


33. சும்மா சீன் போடாம ஏதாவது ஐடியா குடு

ஐடியா வராததால தான் சீன் போடறேன்


34. வில்லன் – என் கொள்கை ஒண்ணே ஒண்ணுதான்.. சாவடி! முடியலைன்னா சாவு


35. உங்களுக்கு பி பி இருக்கு..

உன் கூட சேர்ந்ததால வந்துடுச்சு


36. உன் நடு விரலை பிடிச்சு கெஞ்சிக்கேட்டுக்கறேன்.. என்னை விட்டுடு


37. உன் கிட்டேதான் ஃபோன் இருக்கே? ஏன் அதுல இருந்து பண்ணலை?

எனக்கு ஃபேமிலியும் இருக்கே? வில்லன் கண்டு பிடிச்சா என்னை மேஞ்சுடுவானே?


38. ஆமா, நீ இப்போ ஃபேஸ் வாஷ் பண்ணுனியா?

ம்ஹூம், பயத்துல வேர்த்திருக்கு


39. சாந்தி முகூர்த்தத்துக்குத்தானே பூ பழம் , ஊது பத்தி எல்லாம் கொண்டு போவாங்க.?

ஹூம் , பாடைக்கும் அதே தான்


40. உன் பேரு ஜேம்ஸ் கேமரூனா? ஏன் அந்த பேரு வெச்சாங்க?

என் மம்மி ஜுராசிக் பார்க் படம் பார்க்கறப்போ நான் பொறந்தேனாம்.

அநேகமா ஏதாவது டிஸ்கவரி சேனல் பார்க்கறப்போ பொறந்திருப்பேனு நினைக்கிறேன்


41. காட்டிக்கொடுக்கறதுலயும் , கூட்டிக்கொடுக்கறதுலயும் நான் எக்ஸ்பர்ட்..

நாட்டுக்கு ரொம்ப தேவையான ஆள் தான் நீ


42. நான் ஆல்ரெடி மேரீடு, என்ன விட்டுடு

ரெண்டாந்தடவை பண்ணி இருந்தா?

நீ வந்து மொய் வைக்கப்போறியா?


43. யார், இந்த பொண்ணு, செக் பண்ணாத சிலிண்டர் மாதிரி இருக்கு?


44. குழந்தை பொய் சொல்லாதுன்னு சொல்வாங்க, அந்தப்பொய்யே குழந்தையா பிறந்திருக்கே?


45. இதென்ன? பிளாக் மார்க்கா?

இல்லை, லக் மார்க்


46. மாப்ளை நல்லா ஜோக் அடிக்கறார் இல்லை?

ஓஹோ, சிரிச்சே ஆகனுமா?


47. அது எப்படி ஒருத்தனை கெடுக்கனும்னா கேரியர்ல சோறு கட்டிட்டு கிளம்பிடறீங்க?


48. எல்லாரும் எஞ்சாய் பண்ணுங்க, என் தங்கச்சிக்கு வருஷம் ஒரு நாள் தானே பிறந்த நாள் வருது?

மத்தவங்களுக்கு மட்டும் மாசாமாசம் வருதா?


49. அவன் ஒரு துரு பிடிச்ச பொடி டப்பா போல..

ஓஹோ போற வர்றப்ப எல்லாம் தும்மிட்டே போவானா?


50. வாங்க வாங்க.. எ;ல்லாரும் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்க தானே?

உங்களுக்கு எப்டி தெரியும்? நீங்களும் அதே குட்டைல ஊறிட்டு இருந்தீங்களா?


51. என்ன மோந்து பார்க்கறே? ராவா குடிக்கலாமா?ன்னு பிளானிங்கா?
.

நோ நோ ஒரிஜினல் சரக்கா?ன்னு செக்கிங்க்


52. டம்மி பீஸ் இவன், 2 ரவுண்ட் தாண்ட மாட்டான்னு சொன்னாங்க. இப்படி அடிக்கறானே?

என் கண்ட்ரோல்க்கு இண்ட்டர்வல் விட்டிருக்கேன்


53. உஷ்!! சத்தம் போடாம குடிங்க…

டேய், நான் என்ன ஃபர்ஸ்ட் நைட்லயா குடிக்கறேன்? –


54. யார்றா இவன்? கருணைக்கிழங்குக்கு தாடி வெச்சவனாட்டம்?


55. அவனை காமெடி பண்ண சொன்னீங்களா?

ம்ஹூம்

டான்ஸ் ஆடச்சொன்னீங்களா?

ம்ஹூம், சகிக்காது


56. அண்ணனுக்கு ஆப்பு ரெடியா? சாரி, சூப்பு ரெடியா?


57. இந்த கரித்துண்டை அமெரிக்கா எடுத்துட்டு போ.. அங்கே போனதும், தமிழ் நாட்ல எல்லா பொண்ணுங்களுக்கும் மாப்ளை இருக்காங்க , சோ நோ படி கம் டூ இந்தியான்னு எழுதி வைக்கறே.

Lyricist Pattukkottai Kaliyanasundharam sings ‘Aram’ to his Movie Producer

July 16, 2012 Leave a comment

-“நாடகமும் சினிமாவும்’ நூலில், ஏ.எல்.எஸ்.வீரய்யா.

நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான அருணாசலம் பிள்ளையின் மகன் கல்யாணசுந்தரம், சின்ன வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணியில் ஈடுபட்டு புதிய வெளிச்சம் பெற்ற கவிஞராக உயர்ந்தார்.

நாடகக் கம்பெனியில் கல்யாணசுந்தரத்தின் நண்பன் நம்பிமாறன். இவரின் சிபாரிசில் “படித்த பெண்’ என்ற படத்திற்கு முதன் முதலாக பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தார். பாடல் பதிவாகியது. படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் படம் வெளிவரத் தாமதம் ஏற்பட்டது. பேசிய பணம் ரூ.150. “அந்தப் பணத்தையாவது கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தார்.

ஒரு நாள், அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டுக்குப் போனார். வீட்டுக்குள் விட உதவியாளர் மறுத்தார். மூன்றே வரிகளில் ஒரு கவிதை எழுதி, “”உன் முதலாளியிடம் கொடு” என்று சொல்லிவிட்டு, வந்து விட்டார் கல்யாணசுந்தரம்.

“”தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்.
நாயே, நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு?”

என்பதுதான் அந்தக் கவிதை! படித்துப் பார்த்தார். படத்தயாரிப்பாளர் கல்யாணராமய்யர். அவர் பழமையில் பக்தி கொண்ட பக்தர். “கவிஞன் அறம் பாடி விட்டானே’ என்று அரண்டு போய் ரூபாயை கொடுத்தனுப்பிவிட்டார்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெற்று வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி.’ அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியிருந்தார்.