Archive
Lal Bahadur Sastri: Why Kalainjar Karunanidhi did not become a Gandhian?
“ஆயிரம் நீதிக்கதைகள்’ என்ற நூலில் நாடோடி
1936-ம் ஆண்டு அலகாபாத் நகரசபை, நகருக்குப் பக்கத்தில் நிறைய நிலம் வாங்கி அதை வீடு கட்டும் மனைகளாக விற்கத் தீர்மானித்து. அதைக் கவனித்துக் கொள்ளும் கோஷ்டியின் அங்கத்தினர்களில் ஒருவராக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார்.
ஒரு சமயம் லால்பகதூர் சாஸ்திரி வெளியூர் சென்றிருந்தபோது அவரது நண்பர் ஒருவர் நகரசபைத் தலைவரின் அனுமதி பெற்று தம் பெயரில் ஒரு மனையும் லால்பகதூர் சாஸ்திரி பெயரில் ஒரு மனையும் வாங்கி அதற்கான பணத்தையும் கட்டினார்.
ஊரிலிருந்து திரும்பி வந்த லால்பகதூர் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு மிக்க வருத்தம் அடைந்தார். தன் நண்பரை அழைத்து “”நகர அபிவிருத்தி கோஷ்டியின் அங்கத்தினராக இருந்து கொண்டு நாமே வீட்டுமனைகளை வாங்குவது மிகவும் தவறு. ஆகவே அந்த இரண்டு மனைகளையும் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்” என்று கண்டிப்பாய்ச் சொன்னார்.
தமக்கென்று சாஸ்திரிக்கு வீட்டு மனை இல்லாதபோது அவர் வாங்கியதில் தவறே இல்லை என்று இதர நகர அபிவிருத்தி கமிட்டி அங்கத்தினர்கள் எவ்வளவோ சொல்லியும் லால்பகதூர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவேயில்லை!
“”பிறருக்கு மனைகள் விற்கும் நாமே நமக்கென்று மனைகளை ஒதுக்கி வைத்துக்கொள்வது தர்மமாகாது. அதோடு சொத்து சேர்க்கமாட்டேன் என்று மகாத்மா காந்திக்கு நான் வாக்குக் கொடுத்திருக்கிறேன். ஆகவே எனக்கென்று எந்த நாளும் சொத்து சேர்த்துக்கொள்ள மாட்டேன்!” என்று உறுதிபடக் கூறினார் லால் பகதூர் சாஸ்திரி!
உண்மை.
பின்பு அவர் பாரதத்தின் பிரதமராகச் செயயல்பட்டபோதும் எந்த ஒரு சொத்தும் சேர்க்காமல் ஒரு ஏழையாகவேதான் மறைந்தார்.
Recent Comments