Archive

Posts Tagged ‘NGO’

Indian Forest Rights Act: Naali – Documentary Short Film on Wildlife Protection & Carbon Trading

June 24, 2012 1 comment

ஆவணப்படமான நாளி பல்வேறு சிரமங்களை தாண்டி வெளியிடும் நாளை நெருங்கியிருக்கிறது.

ஒருவருட ஆய்வுக்கு பின் மேற்குதொடர்ச்சிமலையின் வயநாடு தொடங்கி மானந்தவாடி சுல்தான் பத்தேரி இடைக்கல் அட்டபாடி வழியாகாக நீலகிரி, தெங்குமராடாவை அடைந்து தந்தம் மிளகு, தேயிலை, காப்பி, தேக்கு, தேவாலா தங்கம், ஹொய்சாலர், பிற்கால சோழர்கள் சமணம் சைவம் வைணவம் ஆகியவற்றை உள்ளடக்கி இப் பகுதிகளின் ஒரு முழுமையான வராலாறாக இருக்குமாறு இருக்கும் கருவிகளையும் குறைந்த பணத்தையும் வைத்துக்கொண்டு முயன்றிருக்கிறோம்.

வனச்சட்டம் 2005ஐ முடக்கும் நோக்கோடு பரபரப்பாகியிருக்கும் புலிகள் காப்பகம், காணுயிர்பாதுகாப்பு கழங்களின் நிஜப்பின்ண்னனி கார்பன் ட்ரேடிங் குறித்தும் ஆய்வு நோக்கோடு அலசியிருக்கிறோம்

Related Post: Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act

Koodankulam Nuclear Power Plant detractors got aided by Foreign Interests and evaded Attention by funneling Donations into NGO

January 17, 2012 1 comment

அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு வெளிநாட்டு பணம் வந்தது அம்பலம்:தொண்டு நிறுவனங்களை விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் | Dinamalar:

அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, வெளிநாட்டிலிருந்து 54 கோடி ரூபாய் நன்கொடை வந்ததை, மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு கட்டுப்பாடு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அணு உலை எதிர்ப்பாளர்கள், நான்கு மாதங்களாக எந்த வேலைக்கும், தொழிலுக்கும் செல்லாமல், மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவது குறித்து, மத்திய உள்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணம் வந்தது உண்மையா? இதுகுறித்து, அனைத்திந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் கூறியதாவது:

அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் வந்துள்ளது. இந்த பணத்திற்கு கணக்கு கேட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய உள்துறையினரும், உள்ளூர், “கியூ’ போலீசாரும் விசாரணைக்கு சென்றனர்.

இதை முன்பே தெரிந்துகொண்ட அணு உலை எதிர்ப்புக் குழு, விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகளிடம் பேரம் பேசியது. ஆனால், மத்திய அரசு சமயோசிதமாக, அதிகாரிகள் குழுவை கடைசி நேரத்தில் மாற்றி அனுப்பியது. அந்த குழுவினர், தொண்டு நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கம்ப்யூட்டர், “ஹார்டு டிஸ்க்’கை மாற்ற, அங்கிருந்த சிலர் முயற்சித்தனர். ஆனாலும், தேவையான தகவல்களை, அதிகாரிகள் சேகரித்து விட்டனர். இவ்வாறு சத்தியசீலன் கூறினார்.

வழக்கு பதியணும்: மேலும் அவர் கூறியதாவது:

தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தில் தான், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்.

ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்களின் நலனுக்கு செலவு செய்வதாக, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள்,வெளிநாட்டு நிதியை கணக்கு காட்டுகின்றன.

இது தொடர்பான ஆவணங்களை, மத்திய அரசு கேட்டுள்ளது. ஆவணம் தராவிட்டால், மத்திய வெளிநாட்டு நிதி பங்களிப்பு முறைப்படுத்துதல் (எப்.சி.ஆர்.ஏ.,) சட்டத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்.இவ்வாறு சத்தியசீலன் கூறினார்.

வெளிநாட்டு நிதிக்கு தடை:இதுகுறித்து, மத்திய அமைச்சர் நாராயணசாமி, “தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என, பல முறை விளக்கம் அளித்து விட்டோம். ஆனாலும், அணுமின் நிலையத்தை தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் முதலில் பங்கெடுத்தார். அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில், மத்திய அரசுடன் பேச்சு நடத்தும் தமிழக குழுவிலும் இடம் பெற்றார். ஆனால், இதிலிருந்து திடீரென விலகி விட்டார்.இவரது நேரடி கட்டுப்பாட்டில், தூத்துக்குடி மல்டி பர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.,) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது.

இதன் கீழ்,

  • மக்கள் கரங்கள்,
  • கடலோர மக்கள் கூட்டமைப்பு,
  • கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம்

ஆகிய தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு நிறுவனத்திற்கு, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.