Archive

Posts Tagged ‘Ramaswamy’

Sir CP Ramasamy is anti-Gandhian: Eye for an Eye makes sense

July 16, 2012 Leave a comment

‘படியுங்கள்! சுவையுங்கள்!!’ புத்தகத்தில் அப்துற்-றஹீம்

சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஒருமுறை முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணம் செய்தார். அவருடன் இரு ஆங்கிலேயர்களும் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்கள். அய்யர் பஞ்ச கச்சம் கட்டித் தலைக்கு தலைப்பாகை வைத்துக் கொண்டிருந்தது அந்த ஆங்கிலேயர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவர் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபடியே பிரயாணித்தனர். சிறிது நேரம் கழித்து அய்யர் டாய்லெட் போவதற்காகத் தன் தலைப்பாகையை கழட்டி தான் அமர்ந்த ஸீட்டில் வைத்துவிட்டுப் போனார். டாய்லெட் போய்விட்டுத் திரும்பியதும் தலைப்பாகையைக் காணவில்லை! அந்த ஆங்கிலேயர்களைத் தவிர அந்தப் பெட்டியில் வேறு எவருமில்லை. வண்டியும் எங்கும் நிற்கவில்லை.

அந்த ஆங்கிலேயர்களைப் பார்த்து சி.பி.ஆர். கேட்டார், “”எங்கே என் தலப்பாகை” என்று. அவர்கள் எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கையை விரித்துவிட்டார்கள். சி.பி.யும் பேசாமல் இருந்துவிட்டார். சிறிது நேரத்தில் அந்த ஆங்கிலேயர்கள் இருவரும் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு டாய்லெட் சென்றார்கள். வண்டி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஆங்கிலேயர்கள் தங்கள் ஸீட்டில் விட்டுப் போயிருந்த தொப்பிகளை எடுத்து ஜன்னல் வழியே வெளியே வீசிவிட்டு தன் இருக்கையில் “கம்’மென்று உட்கார்ந்துவிட்டார் சி.பி.

ஆங்கிலேயர்கள் திரும்பி வந்து தங்கள் தொப்பியைக் காணாமல் திகைத்து சி.பி.யைப் பார்த்து,””எங்கே எங்கள் தொப்பி?” என்று அதட்டலாக வினவினார்கள். ஆனால் சி.பி.ஆரோ சிறிதும் அஞ்சாமல் அமைதியாக, “”அவை என் தலைப்பாகையைத் தேடிப் போயிருக்கின்றன” என்றார். அந்த ஆங்கிலேயர்களின் முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே!