Archive

Posts Tagged ‘Read’

நாஞ்சில் நாடன் – முதல் பிரவேசம்: இன்னும் வாசிக்கப்படும் அந்த நாவல்

April 24, 2012 2 comments

முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்து போய்விட்டன. அப்போது எனக்கு முப்பது வயது, திருமணம் நடந்திருக்கவில்லை. நான் பிழைப்புக்காக நாஞ்சில் நாடு விட்டது 1972-இல். எனது முதல் பிரவேசம் நிகழ்ந்தது 1977-ல். அன்று பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் தீவிர செயல்பாட்டில் இருந்தேன். மேடையில் பேசவும், எழுதவும் பயின்று கொண்டிருந்த காலம். அங்கிருந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்காக ‘ஏடு’ என்றொரு மாத இதழ் வெளியாகிக் கொண்டிருந்தது. அஃதெனது நாற்றங்கால். சங்கத்தின் மாதாந்திரக் கூட்டங்கள் பற்றிக் குறிப்புகள் எழுதுவது, இதழுக்கு வரும் நெடுங்கட்டுரைகளைச் சுருக்குவது, துண்டு விழும் இடத்துக்கு நாலுவரித் தகவல்கள் எழுதுவது என்பவை என் பயிற்சிக் களம். பேரறிஞர்களின் 32 பக்கக் கட்டுரைகளை ஆறு பக்கத்துக்கு சுருக்கும் அறிவு கிடையாது எனினும் துணிச்சல் இருந்தது.

‘ஏடு’ சென்னையில் நா. பார்த்தசாரதியின் ‘தீபம்’ அச்சகத்தில் அச்சிடப்பட்டது. அப்படித்தான் ‘தீபம்’ எனக்கு அறிமுகம் ஆனது. எனது முதல் சிறுகதை ‘விரதம்’ அதில் வெளியாகி, அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக, இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்வு செய்யப்பட்டது. நடந்தது ஜூலை 1975-ல். மேளதாளம், பட்டுப் பரிவட்டம், யானை மீது அம்பாரி, மாலை, மங்கலப் பொருட்கள் என என் முதல் சிறுகதைப் பிரவேசம் அது. இதை நான் நேர்காணல்களில், கட்டுரைகளில் பதிவு செய்துள்ளேன். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற அமைப்பு, இன்றைய இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மூத்த சகோதரர் ப. லட்சுமணன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் 1977 ஜூலையில் ‘வாய் கசந்தது’, 1979 நவம்பரில் ‘முரண்டு’ எனும் என் கதைகள் மாதத்தின் சிறந்த கதைகளாக அவர்களால் தெரிவு செய்யப்பட்டதுண்டு. ஏனோ என் கதைகளில் ஒன்றுகூட ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒப்பேறவில்லை. அஃதே போல், எனது ஆறு நாவல்களில் எதுவும் சிறந்த நாவலாக அவர்களால் தேர்வு செய்யப்பட்டதில்லை. பரிசு பெற்றவர்களில் பலரை இன்று இலக்கிய உலகம் தேடிக் கொண்டிருப்பதும் பெறாதவன் இதை எழுதிக் கொண்டிருப்பதும் காலத்தின் கழைக் கூத்து.

முதலில் என்னை நாவல் எழுதச் சொன்னவர் இருவர். ‘ஏடு’ பொறுப்பாசிரியராக இருந்த, கந்தர்வக்கோட்டை பிறந்த, காலம் சென்ற மரபுக் கவிஞர் வே. கலைக்கூத்தன். ‘மனிதனை நான் பாடமாட்டேன்’ என்பது அவரது முக்கியமான கவிதைத் தொகுப்பு. கலைக்கூத்தன் பம்பாய் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். கலைஞர் மு. கருணாநிதி பம்பாய் வந்திருந்தபோது, கலைக்கூத்தன், விடுதி அறையில் அவரைக் காண என்னையும் கூட்டிக் கொண்டு போனார். 1970களின் முற்பாதி என நினைவு. அவர் என்னை நாவல் எழுதச் சொன்னார். அவர் என்பது கலைக்கூத்தன். மற்றொருவர் நான் சந்தித்தே இராத, ‘தீபம்’ மூலமாகக் கடிதத் தொடர்பில் இருந்த, ‘கல்யாண்ஜி’ எனும் பெயரில் கவிதை எழுதிய வண்ணதாசன்.

அப்போது தீபம், கணையாழி, செம்மலர் போன்ற இதழ்களில் என் கதைகள் வெளிவர ஆரம்பித்திருந்தன. எதனாலோ ‘தாமரை’யில் நான் எழுதியதே இல்லை. நான் எழுத்தாளனாக உருவெடுக்கும் முன்பே வ. விஜயபாஸ்கரனின் சரஸ்வதி ப. ஜீவானந்தம் எனும் பொதுவுடமைச் சிங்கத்தின் குறுக்கீட்டினால் நின்று போயிருந்தது. பிறகென்ன, நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில் CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.

‘தலைகீழ் விகிதங்கள்’ என்று நாவலுக்குத் தலைப்பும் வைத்தாயிற்று. நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பும் கேரளப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் கணிதத்தில் பயின்றவன். எண்கள் மீதும் கணிதப் பிரயோகங்களின் மீதும் எனக்கு தீராத காதலுண்டு என்று எனது நண்பர்களில் பலர் ஸி. வீரராகவன், எஸ். தியாகராஜன், எஸ். திருமலை, ஸி. விஜயகுமார் என்போர், ஹோமிபாபா அணுசக்தி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள். ந. முத்துசாமியின் ‘நாற்காலிக்காரர்’ எனும் நாடகத்தை பம்பாயில் நாங்கள் அரங்கேற்றியபோது அதில் வசனமே பேசாத மையப் பாத்திரத்தில் ஹரிஹரன் என்றொரு B.A.R.C நண்பர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அதே நாடகத்தை சென்னையில் வேறொரு நாடகக்குழு அரங்கேற்றிய போது ‘நாற்காலிக்காரர்’ பாத்திரத்தில் நீள உட்கார்ந்திருந்தவர் மாட்சிமை மிகு மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன். நண்பர்கள் யாவரும் ஒரு சுற்று நாவலை வாசித்துப் பாராட்டினார்கள்.

பின்பு வெளியீட்டு முயற்சிகள், மூலப்படியைத் தூக்கிச் சுமந்து கொண்டு சென்னைப் பதிப்பகங்களுக்கு நாவல் காவடி. ஒருவர், ‘வைத்துவிட்டுப் போ, பார்க்கலாம்’ என்றார். வேறொருவர், ‘முன்னூறு ரூபாய் வாங்கிக்கோ’ என்றார். பிறிதொருவர் நிற்க வைத்துப் பேசி அனுப்பினார். கலைக்கூத்தன் மூலம் அறிமுகமாகியிருந்த, தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராகப் பணியாற்றிய, சிலம்பொலி செல்லப்பனார் ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராய நகர் என பதிப்பகங்களுக்குக் கூட்டிப் போனார்.

ஒன்றும் பயனில்லை. பின்னாளில் தமிழ் நவீன இலக்கிய வானில் முன்னணி எழுத்தாளராகப் பிரகாசிக்கப் போகிற தாரகை ஒன்றின் வரவை நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் பதிப்பித்த அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை என்பது எத்தனை பெரிய தீப்பேறு? என்றுமே நான் ஒரு DIE HARD SPECIES. அத்தனை சுலபத்தில் தோல்வியைச் சம்மதித்துக் கொடுப்பவன் இல்லை.

பம்பாய் திரும்பிச் சென்றேன். மேற்சொன்ன நண்பர்கள் தலைக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் எட்டாயிரம் திரட்டினோம். BUD என்றொரு வெளியீட்டகம் பிறந்தது. BUD வெளியிட்ட முதலும் கடைசியுமான புத்தகம் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்பதொரு சோக சரித்திரம்.

ஞான. ராஜசேகரன் அட்டைப் படம் வடிவமைத்தார். மூவர்ண அட்டை. அன்று ஆஃப்செட் பிரிண்டிங் அறிமுகமாகி இருக்கவில்லை. BLOCK எடுத்து அச்சிடுவது அல்லது SCREEN PRINTING.

பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தில் சுப்பராயலு என்பவர் செயலாளராக இருந்தார். மணிக்கொடி சீனிவாசன் என்றும் ஸ்டாலின் சீனிவாசன் என்றும் அறியப்பட்டவர் FREE PRESS JOURNAL எனும் பம்பாயில் இருந்து வெளியான ஆங்கிலத் தினசரியில் ஆசிரியராக இருந்தார். சுப்பராயலு அங்கு பணி புரிந்து கொண்டிருந்தார். ஞான. ராஜசேகரனின் அட்டைப்பட ஓவியத்தை வண்ணம் பிரித்து புகைப்படங்கள் எடுத்து PLATE செய்து BLOCK தயார் செய்தோம்.

‘தீபம்’ அலுவலகத்தில் நா. பார்த்தசாரதியின் சகோதரி மகன் ஷி. திருமலை அலுவலக நிர்வாகியாக இருந்தார். அவரும் ஒரு எழுத்தாளர் தான். சிறந்த வாசகரும் எடிட்டரும் கூட. என் எழுத்துகள் தீபத்தில் வெளியான போது என்னை மதித்து நட்புப் பூண்டவர், ஊக்குவித்தவர். மறுபடியும் சென்னை வந்த என்னை அவர் அழைத்துக்கொண்டு பாண்டிபஜார் வந்தார். அங்கு K.K. ராமன் என்பவரின் அச்சகத்துக்கு அழைத்துக் கொண்டு போனார். அவரிடம் இருந்த 10 பாயிண்ட் எழுத்துருக்கள் எம்.வி. வெங்கட்ராமின் ‘வேள்வித் தீ’ எனும் நாவலில் என்கேஜ் ஆகி இருந்தன. ஆகவே 12 பாயிண்ட் எழுத்துருக்கள் கொண்டு அச்சிடலாம் என்றார். எனக்கு யாதொன்றும் அப்போது அர்த்தமாகவில்லை. முன்பணம் கொடுத்தாயிற்று.

நங்கநல்லூரில் என் சகோதரி வீட்டில் தங்கி இருந்தேன். 1977-ஆம் ஆண்டு பழவந்தாங்கல் அல்லது மீனம்பாக்கம் லோக்கல் ரயில் நிலையங்களில் ஆட்டோ ரிக்ஷா கிடையாது. அதிகாலை ஏழரை மணிக்குச் சகோதரி வீட்டில் காலைப் பலகாரம் சாப்பிட்டு, மத்தியானத்துக்கும் கட்டிக்கொண்டு பொடி நடையாகப் புறப்பட்டுப் போவேன். ஒன்பது மணிக்கு அச்சகம் திறக்கும்போதே போய்விடுவேன். காலி புரூப், பக்கம் புரூப் எல்லாம் நானே பார்த்தேன். முன்னிரவில் மாம்பலத்துக்கு நடந்து, ரயில் பிடித்து, மீனம்பாக்கத்தில் இறங்கி, பின்னி இன்ஜினியரிங் கம்பெனி சுற்றுச்சுவர் ஓரமாக நடந்து, சுடுகாடு – இடுகாடு வழியாக, பேய்க்கும் வழிப்பறிக்கும் அஞ்சி, ரங்கா தியேட்டர் வரும்வரை உயிர் குரல்வளையில் நிலை கொண்டிருக்கும்.

தங்கை வீட்டுக் கிணற்று நீர் தரையோடு தரையாகக் கிடக்கும். சென்னையின் வெயிலுக்கும் புழுக்கத்துக்கும் இரவும் குளிக்காமல் கிடக்க ஏலாது. கால் – கால் வாளியாகச் சுரண்டிக் கோரிக் குளித்து சாப்பிட்டுப் படுக்க பதினொன்றாகிவிடும்.

தினசரி ஒன்றரை பாரம் புரூப் தருவார் காசிராமன். ஒரு பாரம் என்பது 16 பக்கங்கள். எனக்கு வேலையில்லாத நேரத்தில், அச்சகம் இருந்த கட்டிடத்தின் முதல்மாடியில் இருந்த கலைஞன் பதிப்பகம் போவேன். தீவிர எழுத்தாளர் பலரின் புத்தகங்களை அன்று கலைஞன் மாசிலாமணி வெளியிட்டு வந்தார். அங்கு போய் உட்கார்ந்து சா. கந்தசாமி, அசோகமித்திரன், ஆ. மாதவன் என வாசிப்பேன். பெரியவர் மாசிலாமணி காந்தியவாதி, தமிழிலக்கியப் போக்குகள் உணர்ந்தவர். அவருடன் உரையாடுவது சுவாரசியமான அனுபவம். எனக்கு அப்போது தமிழிலக்கியச் சூழல் புதியது. எப்போதும் அந்த மிரட்சியுடன் இருந்தேன். இன்றும், கோவையில் அவரது மகள் வீட்டில் ஓய்வுக்கு மாசிலாமணி அவர்கள் வந்து தங்கி இருக்கும்போது எமக்குள் நீண்ட உரையாடல் நடக்கிறது.

‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் அட்டைப்படம் மவுண்ட் ரோட்டில் ஓர் அச்சகத்தில் அடித்தோம். அன்று அது அண்ணாசாலையாக ஆகி இருக்கவில்லை. அன்றைய தமிழகச் சட்டமன்ற சபாநாயகராக இருந்த க. ராஜாராமுக்குச் சொந்தமான அச்சகம் அது, ஆனந்த் தியேட்டர் பக்கம். நாங்கள் செய்து கொண்டு வந்திருந்த பிளாக்குகளில் ஒன்று ‘மெரிக்க’வில்லை என்றனர். மறுபடியும் பிளாக் எடுத்து சரிசெய்ய ஞான. ராஜசேகரன் பம்பாயில் இருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார். ‘தீபம்’ திருமலை உதவி இல்லாமல் அத்தனை எளிதில் எனது முதல் புத்தகம் வெளிவந்திருக்காது.

அச்சடித்த ஒவ்வொரு பாரமும் காணக் காணப் பரவசம். ஆனால் 12 பாயிண்ட் எழுத்தில், புத்தகத்தின் பக்கங்கள் மண் புற்றுபோல் வளர்ந்து கொண்டே போயின. எட்டாயிரம் ரூபாய் திகையுமா என படபடக்க ஆரம்பித்தது மனது. கடன் தரும் செழிப்புடன் அன்று உறவினர்களும் இல்லை. அச்சாக சரியாக 19 நாட்கள் எடுத்தன. 456 பக்கங்கள். 19 X 24 = 456, கணக்கு சரிதானா? எனது விடுமுறையும் தீரும் தருவாயில் இருந்தது. பிறகு பைண்டிங் கட்டிங் எனச் சில நாட்கள்.

முதல் புத்தகம் வந்த தினம் நினைவில் இல்லை. ஆனால் அச்சிட்டு முடித்த அன்று, அச்சுக் கோத்த நான்கு இளம் பெண்கள் என்னிடம் வந்து நாவலை வியந்து பேசினார்கள். பின்பு எத்தனைப் பாராட்டுகள் பெற்றபோதும், அதற்கு இணையான கர்வம் ஏற்பட்டதில்லை. அச்சகத்தில் பணிபுரிந்த யாவருக்கும் BUD செலவில் மாலையில் மசால்தோசை வாங்கிக் கொடுத்தேன். பாண்டிபஜாரின் ரத்னா கபேயா, கீதா கபேயா, இன்று நினைவில் இல்லை.

மூன்று நாட்கள் பொறுத்துப் போனபோது, மை, அட்டை வார்னீஷ் மணக்க எனது முதல் புத்தகம் கையில் இருந்தது. அன்று எனக்கும் தெரியாது. தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவலாக அது கொண்டாடப்படப் போகிறது என்று. நன்றியுடன் கையெழுத்திட்டு அச்சுக்கோர்த்த இளம் பெண்களுக்கும், அச்சக உரிமையாளர் காசிராமனுக்கும், கலைஞன் மாசிலாமணிக்கும், தீபம் திருமலைக்கும் முதல்படிகள் தந்தேன். அன்று சகோதரி வீட்டுக்கு நடக்கும்போது சுடுகாட்டு, இடுகாட்டுப் பேய்கள் என்னை மரியாதையுடன் கண்டு வணக்கம் செய்தன.

பெயர் குறிப்பிடாமல், ஒரு முழுப்பக்கத்தில் ‘அப்பாவுக்கு’ என்று மட்டும் அச்சிட்டு, முந்திய ஆண்டில் தனது 55 வயதில் காலமானவருக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். அவர் என்னை ‘அவையத்து முந்தி இருக்கச்’ செய்தவர். நாவல் வெளியானது 1977 ஆகஸ்ட்டில். ஆயிரம் படிகளைப் பாரி நிலையத்தாரிடம் விற்பனைக்குக் கொடுத்து 180 படிகளைப் பம்பாய்க்குப் பார்சல் அனுப்பி கையில் சில படிகளுடன் பம்பாய்க்கு வண்டி ஏறினேன்.

அந்த ஆண்டில் சென்னை CHRISTIAN LITERATURE SOCIETY நடத்திய நண்பர் வட்டக் கருத்தரங்கில், நாவல் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட தினத்தில், பன்னிரண்டாவது அமர்வில், சிலிஷி பொதுச்செயலாளர் திரு. பாக்கிய முத்து, ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலை அறிமுகம் செய்தார். அறிமுகம் செய்து உரையாற்றியவர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர். ச.வே. சுப்பிரமணியம். அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் ‘சிட்டி’ பெ. கோ. சுந்தரராஜன், பேராசிரியர் சிவபாத சுந்தரம், சி.சு. செல்லப்பா, தி.க.சி., வல்லிக்கண்ணன், அசோகமித்திரன், ஆ. மாதவன், சா. கந்தசாமி. பூமணி. சு. சமுத்திரம், பேராசிரியர் கனக சபாபதி, அக்னிபுத்திரன் (இன்று கனல் மைந்தன்), பேராசிரியர் கா. சிவத்தம்பி என புகழ்பெற்ற பலர்.

வேறென்ன வேண்டும் முதல் பிரவேச நாவலாசிரியனுக்கு? ஆயின 32 ஆண்டுகள். ஓய்வு பெற இன்னும் எட்டு ஆண்டுகள் வேண்டும் என விரும்புகிறேன். காலம் எவர் கட்டுப்பாட்டில்? நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன் பாரிநிலையம் திரு. செல்லப்பன் அவர்களை. ஆயிரம் படிகளையும் விற்று ஒரே தவணையில் பணம் தந்தார். அவர் போல் ஒரு பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் காண்பதரிது. ஐந்து பதிப்புகள் ஓடி விட்டன. ‘சொல்ல மறந்த கதை’ எனத் திரைப்படம் ஆனது. சேரன் முதலில் நடித்த தங்கர்பச்சான் இயக்கிய படம்.

இன்னும் அந்த நாவல் வாசிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.


ஜனவரி 2010.புத்தகம் பேசுகிறது இதழில் இருந்து..

TV Watching Habits in India: Media viewers: Family Time

September 8, 2009 Leave a comment

காதலென்பது…- ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 1 comment

இரண்டு பஸ்கள் நிற்கவில்லை. தீப்தி அடுத்த வந்த பஸ்ஸை நிறுத்த இன்னும் அதிகம் முனைப்பு எடுத்துக்கொண்டாள். மணியும் சாலையின் பாதிக்கே போய் நின்றுகொண்டான். சரியாக அவர்களைக் கடக்கும்போதுதான் பஸ்கள் வேகமெடுத்தன. டிரைவர் முகங்களில் ஒருவித வன்மம் போல் ஏதோவொன்று தெரிந்தது.

அடுத்த பஸ்ஸும் நிற்கவில்லை. தீப்தி முகம் கூம்பிப் போய்விட்டது. கல்லூரி வாசலில் இருந்து இன்னும் தெரிந்த முகங்கள் வெளியே வந்தன. இவர்களைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். கெஸ்மிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். கம்பைண்ட் கிளாஸ்களில் பார்க்க முடியும் கூட்டம்.

மீண்டும் மரநிழலில் வந்து நின்றுகொண்டான் மணி. தார் உருகும் வெயில். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆட்டோ வந்தாலாவது இவளை அழைத்துக்கொண்டு போய்விடலாம். அவ்வப்போது லாரிகள் உறுமிக்கொண்டு போயின. தீப்தி இன்னும் நடுத்தெருவில் தலையில் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு நின்றாள்.

சின்ன உருவம். சொப்பு பொம்மை மாதிரி. நிறைய கூந்தல். அதைப் பின்னி மாளாததுபோல், கீழ்முனையில் கட்டாமல் அவிழ்ந்துகிடந்தது. சட்டெனத் திரும்பி, மணியைப் பார்த்துச் சிரித்தாள். பஸ் வருகிறது, வாவா என்று சைகையில் அழைத்தாள். இந்த பஸ்ஸும் நிற்காது என்று மணிக்குத் தோன்றியது. எல்லாம் எல்.எஸ்.எஸ். பஸ்கள். கல்லூரி வாசலில் இவற்றுக்கு நிறுத்தம் இல்லை.

வழக்கப்போல், டிரைவர் தீப்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அடித்துக்கொண்டு போனார்.

“என்னய்யா பஸ்காரன் நிறுத்தவே மாட்டேங்கறான்?”

நொடிக்கொரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மணி கையில் கடிகாரம் இல்லை. பத்து இருக்கலாம். முதல் வகுப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தாயிற்று.

“ஆஸ்பிட்டல் உனக்குச் சரியா தெரியுமா? போயிட்டு மத்தியானத்துக்குள்ள வந்துட முடியுமா?”

மணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காலையில் கல்லூரிக்கு வந்ததில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறாள். முதல் வகுப்பையும் தியாகம் செய்துவிட்டுக் கிளம்புவதுதான் திட்டம். முதல் வகுப்பு, துறைத் தலைவர் எடுக்கும் வகுப்பு. அவ்வளவு சீக்கிரம் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது.

“வந்துடலாம்மா. எதுக்குக் கவலைப் படறே? பஸ் கிடைச்சா, இங்கேயிருந்து அடுத்த பதினஞ்சு நிமிஷம். திரும்பிவர இன்னொரு அதிகபட்சம் அரைமணி நேரம். போயிட்டு வந்துடலாம்.”

அவளுக்கும் இந்த கணக்கின் எளிமை புரிந்திருக்கவேண்டும். ஆனாலும் சந்தேகம். முடியுமா என்ற அச்சம். நண்பர்களிடம் இருந்து பைக்கை வாங்கிக்கொண்டு போய்வந்துவிடலாம் என்று மணி முதலில் யோசனை சொன்னான். அதை அப்போது ஒப்புக்கொண்டவள், என்ன தோன்றியதோ, அப்புறம் வேண்டாம் என்றுவிட்டாள். வீணா எதுக்கு வம்பு?

மீண்டும் வெயிலில் போய் நின்றுகொண்டாள் தீப்தி. வகுப்பைவிட்டு இந்த நேரத்துக்கு மணி வெளியே வந்ததில்லை. பொதுவாக மூன்று நான்கு வகுப்புகளுக்குப் பின் தான் வெளியே வருவான். மணி பனிரெண்டு பனிரெண்டரை மணி அளவில் ஒன்றன் பின் ஒன்றாக பஸ்கள் வர ஆரம்பிக்கும்.

எதிர்பார்க்கும்போது வராமல் போவதுதான் பஸ்ஸின் மகத்துவம். இந்தப் பூந்தமல்லி ஐரோடு போகும் பல பஸ்களை அவன் தொடர்ந்து பார்த்திருக்கிறான். தீப்தி குறிப்பிடும் மருத்துவமனையை அவன் பல முறை கடந்திருக்கிறான். சொல்லப்போனால், எல்லா பஸ்களுமே அந்த மருத்துவமனையைக் கடந்துதான் போகவேண்டும்.

அதுவுமில்லாமல், மனத்தில் அவசரம். பதற்றமில்லாமல் இருக்குமா?

“எங்க ஆஸ்சிடெண்ட் ஆச்சு?”

மணி தீப்தியைப் பார்த்துக் கேட்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தவள், மணி பக்கம் திரும்பினாள்.

“நெல்லூர்லேருந்து திரும்பிவரும்போது, இவங்க வந்த காரை ஒரு லாரிக்காரன் பின்னாலேயிருந்து மோதியிருக்கான்.”

“எதுக்கு நெல்லூர் போனார்?”

“அவர் சர்வீஸ் எஞ்சினியர்தானே. அங்கே ஏதோ கிளையண்ட் இருக்காங்களாம். இவரும் இன்னொரு எஞ்சினியரும் போயிருக்காங்க. வேலையை முடிச்சுட்டு அடுத்த நாளே திரும்பியிருக்காங்க. வரும்போதுதான் இந்த ஆஸ்சிடெண்ட்.”

ஜன்னல் வெளியே தீப்தி பார்வையை விலக்கிக்கொண்டாள். பஸ் தடதடவென சத்தம் கொடுத்துக்கொண்டு ஓடியது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னே இருந்த வரிசைகளில் யாருமே இல்லை. டிரைவர் அருகே இரண்டு மூன்று கூடைகள் அடுக்கப்பட்டு, பக்கத்தில் சில் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கண்டெக்டரும் முன்னால் உள்ள சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.

“நாலு நாள் ஆச்சு ஒரு விவரமும் தெரியல. போனும் இல்ல. அவங்க வீட்டுப் பக்கமே போக முடியல. முந்தாநேத்து ராத்திரி அவரோட தம்பிதான் வந்து விஷயம் சொன்னான். காலு கை எல்லாம் ஃப்ராக்சராம். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. நேத்தே போய் பார்க்கணும்னு பார்த்தேன். முடியல…”

பேசப் பேச குரல் மெல்லிதாகிக்கொண்டே வந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பிக்கொண்டாள். வெளியில் இருந்து வெப்பக்காற்று மட்டுமே உள்ளே வந்தது. ஜன்னல் ஓரமெல்லாம் தகித்தது. இவளோடு பழக ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் இருக்குமா? இருக்கலாம். இன்றுவரை அவள் உற்சாகம் குன்றி, குரல் கம்மி அவன் பார்த்ததில்லை.

“நேத்து ஃபுல்லா, அவரோட அம்மாதான் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தாங்க. போயிருந்தாலும் பார்த்திருக்க முடியாது. இன்னிக்குத் தம்பி கூட இருக்கானாம். “

அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பத்து நாற்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தது. ஒரு மணிக்குள் திரும்பிவிட முடியும் என்றுதான் மணிக்குத் தோன்றியது.

“அவங்கம்மாவுக்கு என்னைக் கண்டாவே பிடிக்கல. ரெண்டு மூணு முறை என்னையும் அவரையும் பார்த்திருக்காங்க. வீட்டுல போய் ஓரே காச்மூச்சுனு கத்தலாம். என்கிட்ட என்ன கொறையக் கண்டாங்களோ, தெரியல..”

அடுத்து வந்த நிறுத்தத்தில் கூடைக்காரர்கள் இறங்கிக்கொண்டார்கள். பஸ் இன்னும் தடதடத்தது. அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கவில்லை. கண்டெக்டர் டபுள் விசில் கொடுத்தார். இவர்களைப் பார்த்து, அடுத்த ஸ்டாபிங்கில் இறங்குகிறீர்களா என்பதுபோல் சைகைக் காட்ட, ஆமாமென தலையாட்டினான் மணி.

பஸ்ஸை விட்டு இறங்கிப் பின்னால் நடக்க வேண்டும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். தீப்தி எழுந்து படிக்கட்டின் அருகே போய் நின்றுகொண்டாள். மணி குனிந்து அந்த மருத்துவமனை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தான்.

“அண்ணா எதுவும் சொல்லவேண்டாம்னு சொன்னான். நான்தான் மனசு கேக்காம, தீப்திகிட்ட போய் சொன்னேன். தீப்தி அழவே அழுதுட்டா. பயப்பட ஒண்ணுமில்லை. பிராக்சர்தான், இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாயிடும்னு சொன்னேன்.”

“டாக்டர் என்ன சொன்னார்?”

“மருந்து மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க. இன்னும் பத்து நாள் இங்க இருக்கச் சொல்வாங்கன்னு நினைக்கறேன். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”

மணி அந்த மருத்துவமனை வரண்டாவைப் பார்தான். எதிரெதிர் அறைகள். ஒவ்வொரு அறை வாசலிலும் இரண்டு மூன்று சேர்கள் போடப்பட்டிருந்தன. சில காலியாக இருந்தன. தூரத்து அறை வாசலில் ஒரு பெண் தூங்கிக்கொண்டு இருந்தாள். சவரில் ஆங்காங்கே வண்ண ஓவியங்கள். உடல் நோய் இருக்கும்போது, யார் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? தெரியவில்லை.

“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”

“ஆமா. நேத்து ஃபுல்லா அம்மா இருந்தாங்க. ராத்திரி அப்பா இருந்தாங்க. அம்மா சமைச்சு எடுத்துகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் நான் இருப்பேன். சைக்கிள் டெஸ்ட் வேற வருது. வீட்டுல போய் படிக்கணும்.”

“இங்க படிக்க முடியலையா?”

“ஐயே.. இந்த ஆஸ்பத்திரி நாத்தம் தாங்கவே முடியலை. முதல் நாளெல்லாம் பயம் வேற. இவனை பார்க்கவே முடியாது. ஐசியூல இருந்தான்.”

இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே சுவரில் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருந்தது. இடதும் வலதுமாக அது போய் போய் வரும்போது, வெப்பக்காற்றோடு, பினாயில் வாசனையையும் தெளித்துவிட்டுப் போனது. மேலே ஃபால்ஸ் சீலிங்.

டியூட்டி நர்ஸுகள் உட்காரும் இடம் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள். அல்லது, கையில் ஒரு காகிதக் கட்டுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகப் போய் வந்தார்கள். நடுநடுவே இரண்டு வார்த்தைகள். ஒரு சிரிப்பு. ஒரு அவசரக் கிறுக்கல்.

அடுத்த இரண்டாவது அறையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு முதியவர் சாப்பாட்டுக் கூடையை எடுத்து வந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்தவர், ஒரு கணம் நின்றுவிட்டு, அப்புறம் உள்ளே நுழைந்தார். எங்கேயாவது மணியைப் பார்த்தவராக இருக்கலாம்.

“சங்கர், உன்னை அண்ணா கூப்பிடறாரு.”

அடுத்திருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு தீப்தி வெளியே வந்தாள். மணி முகத்தைப் பார்த்துவிட்டு, தன் கைக்கடிகாரத்தையும் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்ததைப் போல் தோன்றியது.

“ஃபை மினிட்ஸ் மணி. இதோ சொல்லிட்டு வந்துடறேன். போய் சேர்ந்துடலாம் இல்லியா?”

பேராசிரியர் தனபால் சாரின் ஸ்கூட்டர் கல்லூரி அருகே வந்து நின்றபோது மணி மதியம் 1.10. தீப்தி பின்னால் போய் உட்கார்ந்துகொண்டாள். மணியையும் ஏழுமலையையும் பார்த்து மையமாகப் புன்னகைத்தார்.

“செமஸ்டருக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சா?”

“இனிமேதான் சார்.” எதற்கும் இருக்கட்டும் என்று புன்னகைத்து வைத்தான் மணி. ஏழுமலை வாயே திறக்கவில்லை. சென்ற ஆண்டு வரைக்கும், அவனுக்கு இயற்பியல் வகுப்பெடுத்தவர். அப்புறம் ரிடையரானார்.

தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அவர் ஸ்கூட்டரை வேகப்படுத்தினார். தீப்தி தலைகவிழ்ந்திருந்தாள்.

“எங்கடா, ரெண்டு பேரும் அவசரமா போயிட்டு வந்தீங்க?”

“தீப்தி லவ்வர் ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தார். அவரைப் போய் பார்த்துட்டு வந்தோம்.”

தற்செயலா இல்லை இயல்போ தெரியவில்லை. ஏழுமலை தன்னைக் கூர்மையாகப் பார்ப்பதுபோல் இருந்தது மணிக்கு. அவன் ஏதேனும் சொல்லிவிடுவானோ என்றும் பயமாக இருந்தது. ஒரு கணம் அவன் பார்வையை மணியால் சந்திக்க முடியவில்லை.

தலையைத் திருப்பிக்கொண்ட ஏழுமலை, “பைத்தியம்டா நீ” என்று மட்டும் சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க எதிர்பக்கம் நடக்கத் தொடங்கினான்.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

தொடரும்… – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 Leave a comment

நந்தினி பால்கனிக் கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெறுக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும்.

ஜன்னல் கர்ட்டன்களைக் கூட விலக்கி வைக்கவில்லை.

எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம்வரை மழை பெய்துகொண்டிருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலைமேல் பூக்கள் சிதறிக்கிடந்தன. தெருவின் இருபுறமும் வரிசைகட்டிய கார்கள். சிவப்பும் மஞ்சளுமாய் பூக்கள்.

இன்று ஞாயிறாக இருக்கவேண்டும். தெருவில் மனித சப்தமே இல்லையே. தெருவில் காலை அகலப்போட்டு நடக்கலாம். எவரும் பார்க்கமாட்டார்கள்.

அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பார்த்தால்தான் என்ன? அடையாளம் காண்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அடையாளம் காண்பவர்களும் அதிகபட்சம் உதிர்ப்பது சின்னப் புன்னகை. இயல்பாக மறுபுன்னகை சிந்திவிட்டு நகர்ந்துவிட முடிகிறது. பெரும்பாலும் கேள்விகள் இல்லை. விசாரிப்புகள் மட்டும் தெரிந்தவர்களிடமிருந்து வரும். “பொண்ணு எங்க படிக்கறா?”, “மெட்ராஸ்லேயே வந்து செட்டிலாகிட்டீங்களா?”. கீழ் ஃப்ளாட் எம்.எம். குடுவா மட்டும் அம்மையும் அச்சனையும் சேர்த்துக் கேட்பார்.

இதெல்லாம் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இல்லை. விசாரிப்புகள். இந்த விசாரிப்புகள் மூலம் மட்டுமே பெறப்பட்ட பல செய்திகள், முன்னர் பத்திரிகைகளை அலங்கரித்தது உண்டு. இப்போது நான் செய்திப் பொருளில்லை. அதனால் விசாரிப்புகளும் இல்லை.

அறைக்குள் வந்து துப்பட்டாவை மேலே எடுத்து அணிந்துகொண்டாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தாள். காலை முதல் ஓடுகிறது. ஒன்று மாற்றி ஒன்றாகக் குழந்தைகளின் சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு சேனல்கள்! எவ்வளவு கற்பனைகள்! தன் வயதுக் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகளைக் கண்டது இல்லை.

கதவைப் பூட்டிவிட்டு, சாவியைக் கையடக்கப் பர்ஸுக்குள் வைத்துக்கொண்டாள். உள்ளே அதிகப் பணம் இல்லை. என்ன செலவு இருக்கிறது? ஒன்றும் வாங்கப் போவதில்லை. கடைகளும் இந்த மழையில் திறந்திருக்கப் போவதில்லை. வாங்கிக் குவித்தக் காலங்கள் இப்போது அபத்தமாகத் தோன்றுகின்றன. வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனவை ஏராளம்.

வாசல் கூர்க்கா எழுந்து நின்றான். பக்கத்தில் அவன் மனைவி தேசலாகத் தெரிந்தாள். சிரித்தாள். கொஞ்சம் தள்ளி குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டு இருந்தது. சப்பை மூக்கு, வெளிறிய வெண்மை நிறம். ரோஸ் நிறத்தில் அவள் கட்டியிருந்த புடைவை, அவ்வளவு இணக்கமாக இருந்தது.

“சாவியைக் கொடுங்கள், காரை வெளியே எடுத்துத் தருகிறேன்” என்றான் கூர்க்கா. சாவியைக் கொண்டு வரவில்லை. பரவாயில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு கேட் அருகே போய் நின்றுகொண்டாள். சும்மா காலார நடக்க எதுக்கு கார்? சாலை முழுவதும் பூக்கள் கொட்டிக் கிடந்தன. எதிர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்கள் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தெருவெங்கும் மரங்கள் மூடி வெளிச்சத்தை மையிட்டுக்கொண்டு இருந்தன.

“குழந்தைக்கு ஸ்வெட்டர் போடு. அப்புறம் சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள் கூர்க்காவிடம். அவன் அரைஉதடு விரித்துச் சிரித்தான். மனைவியிடம் என்னவோ கூறினான். அவள் லேசாக நந்தினியைப் பார்த்தபடி குழந்தையை அள்ளிக்கொள்ள எழுந்துகொண்டாள்.

அகலமான சாலை. இருபுறமும் கார்கள் நிறுத்திவைத்து, சாலையைக் குறுக்கியிருந்தார்கள். அதிசயமாக இந்த இருபது ஆண்டுக் காலத்தில் அதிக மரங்கள் வெட்டப்படவில்லை. அவள் அந்தப் ஃப்ளாட்டை வாங்க வந்தபோது, எதிர்ப்புறம் முழுவதும் காலி மனைகள். வந்து இங்கே வாழ்வோம், இப்படியொரு மாலைப்பொழுதில் நடப்போம் என்று யார் அன்று நினைத்துப் பார்த்தார்கள்? முதலீடு. அவ்வளவுதான்.

பல மாதங்கள், ஆண்டுகள் கூட, ஃப்ளாட் பூட்டிக் கிடந்தது. வாடகைக்கு விடவும் பயம். வாடகையே தரமாட்டான், ஏமாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்புறம் யார் அவன் பின்னால் அலைவது? அதுவும் ஓர் முன்னணி நடிகை, எவனோ குடித்தனக்காரன் பின்னால் அலைவதா? அந்த வாடகை வந்து என்னவாகிவிடப் போகிறது? பூட்டி வைப்பதே சாலச் சிறந்தது. இன்னொரு நடிகையும் ஃப்ளாட்டை வாடகைக்கு கேட்டாள். அவள் இங்கே காலூன்றத் தொடங்கியிருந்த நேரம். சாதாரண ஆள்களுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம், சினிமாக்காரர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றார் அச்சன். பயம்.

சொல்லப்போனால், பயம்தான் எங்கும் எப்போதும் ஆட்டி வைத்தது. இதெல்லாம் உழைப்பின் சம்பாத்தியம் என்பதைவிட, ஏதோ அனாமத்தாக வந்ததைப் போன்றதொரு எண்ணம். அதனால், எப்போதும் இதையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் இவை அபகரித்துக்கொள்ளப்படலாம் என்றும் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.

எதிரே கார் ஒன்று அவசரமாகப் போய்க்க்கொண்டு இருந்தது. இவள் ஓரம் ஒதுங்கிக்கொண்டாள். ஞாயிறு மாலையிலும் யாருக்கோ இன்னும் அவசரம் மிச்சமிருக்கிறது. தன்னைப் போல பல சினிமாக்காரர்கள் இந்தத் தெருவிலும் அடுத்திருந்தத் தெருக்களிலும் வீடும் ஃப்ளாட்டும் வாங்கிக் குடியிருந்தார்கள். தங்கள் தலைமேல்தான் சினிமா உலகமே நடக்கிறது என்ற எண்ணமும் அதுதரும் அவசரமும், அழகிய கற்பனை. தெரிந்த முகங்கள் கூட, சட்டென ஓர் அவசரத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, விரைவாக விடைபெறுவது, இந்தக் கற்பனையின் தொடர்ச்சிதான்.

இந்த சுயமோகமும் முக்கியத்துவமும் இல்லையெனில், பலருக்கு இங்கே வாழ்க்கைச் சப்பென்று இருக்கும்.

திருமணமாகி அமெரிக்க போய், விசாலமான ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தத் தொடங்கியபோதுதான், வெறுமை உறைத்தது. சுற்றி யாருமே இல்லை. உங்களை அறிந்த முகம் ஒன்றுகூட இல்லை. தூர தூர வீடுகள். அமெரிக்க முகங்களுக்கு நீ யாரென்றே தெரியாது. விழாக்கள் இல்லை. அழைப்புகள் இல்லை. பரிசளிப்புகள் இல்லை. அதனால் முகப்பூச்சு தேவையே இல்லை. கண்ணாடி ரொம்பக் குரூரமாகத் தெரிந்தது. உச்சிவரை ஏறியிருந்த மயக்கத்தை, யாரோ தண்ணீர் தெளித்து, கலைத்துவிட்டாற்போ இருந்தது. சட்டெனப் புற உலகில் வந்து விழுந்த குழந்தையில் வலி.

கண் திறந்து பார்க்க, விஸ்வம் மட்டுமே இருந்தான், காதலுடன், அரவணைப்புடன். பல ஆண்டுகள் அமெரிக்க வாசம் அவனை சுயசார்பு உள்ளவனாக ஆக்கியிருந்தது. கனவுகளை எங்கே நிஜத்தோடு பிணைக்கவேண்டும் என்று தெரிந்திருந்தது. மீண்டும் இந்தியா ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தடுத்து நிறுத்தியது விஸ்வம்தான். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளியை அவனது காதலால் நிரப்ப முயன்றான். புரியவைக்க முயன்றான். புரிந்தும் ஏற்கமுடியாமல் தவித்த தவிப்பு சொல்லில் வராது.

அதையும் மீறி, மீண்டும் இந்தியா வந்தது, உடனே நடிக்க வாய்ப்பு கோரி அலைந்தது, நேற்றுவரை புகழோடு பார்த்த ஒருத்தி, இன்று வாசல் வந்து நிற்கிறாள் என்றவுடன் வன்மம் கொப்பளிக்க, எடுத்தெறிந்து பேசியது, வேண்டுமென்றே இழுத்தடித்தது, காக்கவைத்து கழுத்தறுத்தது எல்லாம் மற்றொரு மூன்றாண்டுக் கதை. தன்னைக் காலம் பழைய குப்பையில் அள்ளிப் போட்டுவிட்டது என்று புரிய அந்த மூன்றாண்டுகள் தேவைப்பட்டன.

நெஞ்சு முழுக்க வெறுப்பு. எரிச்சல். கையாலாகாத்தனம். நடிக்க வந்தபோது இருந்ததைவிட, இப்போது நடிப்பு பற்றி நன்கு தெரியும். ஒவ்வொரு வசனத்தின் பொருள் உணர்ந்து, பாவத்தோடு இன்று திரையில் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பு மட்டும் வரவே இல்லை. பத்திரிகைகளின் பத்திகளில் நக்கல் தொனித்தது. நேர்ப்பேச்சுகளில் சமத்காரம் வழிந்தோடியது. உன் காலம் முடிந்தது என்பதை இவையெல்லாம் சொல்லாமல் தெரிவித்தன.

பிணக்குகள் மறந்து, விஸ்வம் சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா அழைத்துப் போனான். வலிக்கும் ரணத்துக்கும் அன்பென்னும் அருமருந்தால் நீவிவிட்டான். எந்த ஆர்வம் இந்தப் பதற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்ததோ, அதற்கு மீண்டும் மடைமாற்றிவிட்டான். வீணை.

தோளில் தாங்கி, தந்திக் கம்பிகளைப் பிடித்தபோது, தனக்கான சாதனமாக வீணையை உணரத் தொடங்கினாள். மீண்டும் சந்தித்த தோழி போல் வீணை கொஞ்சத் தொடங்கியது. பதினைந்து பதினாறு வயது குறைந்துபோய் துள்ளல் காலங்கள் திரும்பிவரத் தொடங்கின. ஆதூரத்துடன், ஆவேசங்களை, அலைக்கழிப்புகளை, அபத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டது அவ்வீணை.

இசை மெல்ல அவளை ஒருமுகப்படுத்தியது. கூர்மைப்படுத்தியது. தன் தேடலின், அவசரத்தின், ஓட்டத்தின் லகானை இனம்காட்டியது. இழுத்துப் பிடித்து நிறுத்த வலுகொடுத்தது. முப்பத்தாறாவது வயதில், அந்த உண்மை விளங்கியது: காலகட்ட மாறுதல். இனி தன்னால் எப்படிக் குழந்தையாக ஆக முடியாதோ அதுபோலவே மீண்டும் நடிகையாக ஆக முடியாது. அதன் தன்மையைத் தான் கடந்துவிட்டோம். கடந்துபோன ஒன்றை நினைத்து நினைத்து அசைபோடலாம். பெருமைப்படலாம். ஆனால், மறுகுவதில் என்ன பயன்?

வாழ்க்கை, சிலருக்கு தன் அக்குளில் சினிமாவை வைத்துக் காத்திருக்கலாம். எப்போது வந்தாலும் திறந்துகொள்ளும் கதவாக அது இருக்கலாம். தன்னைப் பொறுத்தவரை அது கடந்து வந்துவிட்ட வாசல். திரும்பவும் யாராவது எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு படிக்கிறோமா என்ன?

தெருமுனையில் வந்து நின்றுகொண்டாள். இங்கே ஒரு பாக்குமரம் இருந்தது ஞாபகம் வந்தது. பெரிய பெரிய இலைகள், காம்பவுண்ட் சுவரை மீறி வெளியே நீண்டிருக்கும். கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். எதிரே உயர்ந்த மேம்பாலம் எழுந்து நின்றது. விளக்குகள் போடப்பட்டிருந்தன. ஓரிரு மோட்டார்பைக்குகள் மேம்பாலத்தின் மேலே போய்க்கொண்டு இருந்தன.

பெரிய மேம்பாலம். இரண்டு முனைகளை இணைக்கும் மேம்பாலம். விரைவாகக் கடக்க் உதவும் மேம்பாலம். அரை மணி முக்கால் மணி நேரம் நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள், மேம்பாலத்தில் ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் மனைவி குழந்தைகளோடு மேம்பாலத்தில் போய்கொண்டிருந்தார். தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றியது. அவருடைய நினைவு மடிப்புகளில் என் இளமை முகம் ஞாபகம் வரலாம். வராமலும் போகலாம்.

வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெறுவதற்கும் இல்லை, இழப்பதற்கும் இல்லை. அவருக்கு நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது. கையை அசைத்தார். அவசரமாகத் தன் மனைவியிடம் சொல்கிறார். அவளும் ஞாபகம் வந்தவள் போல் ஆச்சரியம் பொங்கப் புன்னகைத்தாள். இவளும் புன்னைத்தாள். வண்டி போய்கொண்டிருந்தது.

“ ரசிகர்கள் உங்களை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் நடிக்க வரலாமே” என்றாள் அந்த ஆங்கில நாளிதழின் சினிமா பெண் நிருபர். பழைய நட்பு. இந்த முறை சென்னை வந்தவுடன், ஒரு பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் என்று வந்து பார்த்தாள்.
சினிமாவும் வேண்டாம், பேட்டியும் வேண்டாம் என்றுவிட்டாள். நட்பாகச் சந்திக்க வருவதென்றால், எப்போதும் தன் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும் என்று மட்டும் சொல்லி அனுப்பினாள்.

நண்பர்களை எல்லாம் போய் சந்தித்தாள். தன்னை வைத்துப் படம் எடுத்தவர்களையும் டைரக்டர்களையும் போய் சந்தித்தாள். சிலர் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். ஏனென்று அவள் யோசிக்கவில்லை. கற்பனையில் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. சந்தித்தவர்களும் பெரிதாக ஏதும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.

அவளை அறிமுகப்படுத்திய இயக்குநர் முரளி மட்டும் அதிகநேரம் பேசினார். கணவர், குழந்தைகள், ஆர்வங்கள் என்று எல்லாம் விசாரித்தவர், சென்ற முறை தன்னால் உதவ முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார். தான் தொலைக்காட்சித் தொடர்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் நடிக்க வரமுடியுமா என்றும் கேட்டார் முரளி. புன்னகைத்தபடி மறுத்தாள். உன்னைப் போல் நடிகையின் பங்களிப்பு வேஸ்டாகப் போகக்கூடாது என்றார். அவள் மறுபடி புன்னகைத்தாள். சட்டெனத் தோன்றிய கோபத்தை, என்ன நினைத்துக்கொண்டாரோ, மறைத்துக்கொண்டார் முரளி.

தான் நடிக்க வாய்ப்பு கேட்டு வரவில்லை, நண்பர்களை எல்லாம் சந்திக்கவே வந்ததாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபரும் இதையே சொன்னார். தொலைக்காட்சி இன்று பெரிய ஊடகமாக வளர்ந்து நிற்கிறது. உன் நடிப்பு ஆசைக்கு, திறமைக்கு, இங்கே நல்ல வாய்ப்பு என்றார். அப்போதும் புன்னகை சிந்தி மறுத்துவிட்டாள்.

உண்மையில் இது நிர்மலமான பயணம். எதிர்பார்ப்புகள் அற்ற பயணம். கற்பனைகள் அற்ற பயணம். எதார்த்த வாழ்வில் காலூன்றிய பின் மேற்கொண்ட பயணம். தன்னைத் தானே சோதித்துக்கொள்ள மேற்கொண்ட பயணம். எதிர்பார்ப்புகளோடு வந்த முந்தைய பயணங்கள் தந்தது வலியும் வேதனையும்தான். இம்முறை அப்படி இல்லை. மகிழ்ச்சியும் இனிய நினைவுகளுமே மிச்சம்.

வாசல் கேட் அருகே இருந்த அறையில் கூர்க்காவின் மனைவி குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கியிருந்தாள். கம்பளிக் கதகதப்பில் அம்மாவின் அரவணைப்பில் தன்னை மறந்து அக்குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. நிம்மதியான உறக்கம்.

ஃப்ளாட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். செல்போனில் நான்கைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அமெரிக்க எண்கள். கணவர், குழந்தைகள். புதிதாக ஒரு எண்ணும் மூன்று நான்கு முறை அழைத்திருந்தது. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் காத்திருந்தது. அதைத் திறந்தாள் அவள்:

Call immediately. You are my next heroine – Murali.

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

அழகான பெண் வேண்டும்! – ஆர்.வெங்கடேஷ்

February 11, 2009 2 comments

சுந்தருடைய கால்கள் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதோ, தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்போதோ, அந்த ஆட்டம் தெரியும். வளைந்த மூங்கில் கழிபோன்ற நீண்ட கால்கள் அவனுக்கு. தாமரை இலையென பாதங்கள் படர்ந்திருக்கும். பலமுறை அவனது அம்மா, அவனிடம் எடுத்துச் சொல்லியும் அவனது கால்கள் நின்றதில்லை. வேட்டியோ கால்சராயோ எதுவானாலும் அவனது கால்கள் தனித்து தென்படும்.

மரியாதையே தெரியவில்லை என்பதுதான் வீட்டில் உள்ளோருக்கு அவன்மீது இருந்த குறை. பெரியவர் உயர்ந்தவர் என்று எவர் வீட்டுக்கு வந்து கூடத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் சுந்தரும் போய் எதிரே உட்கார்ந்துவிடுவான். உட்கார்ந்தவுடன் அவனை அறியாமலே அவனது கால்கள் லேசாக ஆட ஆரம்பிக்கும். பேச்சு சுவாரசியம் கூடும்போது, அந்த ஆட்டம் தாளலயத்தை எட்டிவிடும்.

பேச்சு சுவாரசியம் என்பது அவனைப் பொறுத்தவரை, திருப்பதி மலையின் படியேறுவதுதான். ராஜஸ்தான் பாலியில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் பார்வதி அக்கா, வந்தவுடன் சுந்தரைத் தேடுவாள். கணவரோடு வந்தாலும் குழந்தைகளோடு வந்தாலும் தனியே வந்தாலும் மறக்காமல் திருப்பதி படியேறி போய் பெருமாள் தரிசனம் செய்வது அவளது வழக்கம். துணை சுந்தர்.

அவள் சென்னை வரும்முன்பே, அம்மாவுக்கு கடிதம் போட்டுவிடுவாள். சுந்தரைத் தயாராக இருக்கச் சொல்லி. ”அவனது தயாருக்கு என்ன? எப்போதும் தயார்தான்” என்பாள் பெரியம்மா. அவனுக்கு வேலை இல்லை, படிப்பு இல்லை என்பது பெரியம்மாவின் குறைகளில் தலையானது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள்.

சுந்தர் உடனே மாம்பலத்தில் இருக்கும் தேவஸ்தான அலுவலகம் போய் திருப்பதியில் உள்ள கூட்டம் பற்றி விசாரித்து வந்துவிடுவான். இத்தனைக்கும்,
அதற்கு ஒரு வாரம் பத்து நாள்களுக்கு முன்புதான், திருப்பதி போய்விட்டு வந்திருப்பான் சுந்தர். ஏதேனும் ஒரு உறவினர் கூப்பிட்டிருப்பார். அல்லது, நண்பர்களாகச் சேர்ந்து போயிருப்பார்கள். அக்கா வரும் செய்தி வந்தவுடன், அடுத்த பயணத்துக்குத் தயாராகிவிடுவான்.

விடிகாலை வந்து சேரும் ரயிலுக்கு அதற்கு முன்பே கிளம்பி, சென்ட்ரல் ரயில் நிலையம் போய் நிற்பான். ஆட்டோவோ டாக்ஸியோ, அக்கா கொண்டு வரும் பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப வண்டியை அமர்த்திக்கொண்டு, வீட்டுக்கு அழைத்து வருவான். வந்ததில் இருந்து ஆரம்பிக்கும் புராணம்.

கடந்த முறை பார்வதியோடு படியேறினபோது என்னானது என்று தொடங்கும் பேச்சு. அது ஆறு மாதங்களோ ஒரு வருடமோ முந்தையக் கதையாகக் கூட இருக்கும். ஆனால், அன்றுதான் அக்காவோடு படியேறினதாகத் தொடங்கும். பெரும்பாலும் படியேற முடியாமல் ஒவ்வொரு இடத்திலும் அக்கவும் அத்திம்பேரும் உட்கார்ந்தது, காளி கோபுரத்தில் சூடான பஜ்ஜி சாப்பிட்டது, முழங்கால் முட்டியில் ஏற முடியாமல் திண்டாடியது என்று போய், கடைசியாக பெருமாளைச் சேவித்தது வரை வந்து சேரும்.

கேட்பவருக்கு கொஞ்சம் எரிச்சல் வரவே செய்யும். ஆனால், காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். பல காரணங்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக திருப்பதி படியேறி வந்து வழிபடுகிறேன் என்று வேண்டிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டில் வளரும் குழந்தைகளின் நலன் கருதியே இந்த வழிபாடு, வேண்டுதல் செய்யப்பட்டிருக்கும். அதுவும் உடல்நலன் இதில் மிகவும் முக்கியம். பல சமயங்கள், அவர்கள் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துண்டு துணியில் முடித்து வைத்துவிடுவார்கள்.

இன்னொரு அக்கா டாட்டா நகரில் இருந்து சென்னை வருவாள். அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறை. திருப்பதி படியேற அவளுக்கு பல ஆண்டுகளாக அந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்தது. வீட்டுக்கு வரும் சம்பந்தி வீட்டார், தூரதேச நண்பர்கள் எல்லாம் மறக்காமல் போகுமிடம் திருப்பதி.

அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் திருப்பதிக்கு மட்டும் படியேறி வருவதாகவே வேண்டிக்கொண்டு இருப்பார்கள். முடியிறக்குகிறேன் என்று வேண்டிக்கொள்பவர்களைவிட, இவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

கீழ் திருப்பதி வரை எந்த பஸ்ஸில், எந்த ரயிலில் எப்படிப் போனால், சரியாக இருக்கும்; அப்புறம் மேல் திருப்பதி படியேற எவ்வளவு நேரம் பிடிக்கும்; அல்லது திருப்பதிக் கோவில் முறையில் இருக்கும் தரிசன நேரங்கள் என்னென்ன; அதற்கு எப்படிச் சரியாக திட்டமிட்டால் போய்ச் சேரலாம், முக்கியமாக கீழ்த் திருப்பதி மற்றும் மேல் திருப்பதியில் என்னென்ன உணவகங்களில் நல்ல உணவு கிடைக்கும் போன்ற அத்தனை விவரங்களும் சுந்தரிடம் துல்லியமாக உண்டு.

என்ன ஒரு பிரச்னை என்றால், இதையெல்லாம் அவனிடம் உட்கார்ந்து கேட்டால், ஒன்றும் புரியாது. கோவையாக அவனுக்குச் சொல்லத் தெரியாது. இங்கே ஒன்று சொல்லுவான், திடீரென்று வேறொன்று சொல்வான். இரண்டுக்கும் உள்ள தொடர்பை சேர்க்கவே முடியாது. ”பேசக் கூடச் சரியாத் தெரியல, சரியான அச்சுபிச்சு” என்று பெரியம்மா குறைபட்டுக்கொள்வாள். அதனாலேயே அவனை உடன் அழைத்துப் போய்விடுவது ரொம்பவும் சுலபமான வழியாக வீட்டில் கருதப்பட்டது.

பெரியவர்கள் படியேறும்போது, சுந்தரைப் போல் உதவியானவர்கள் எப்போதும் தேவை. உடலை மட்டும் தூக்கிக்கொண்டு மற்றவர்கள் ஏறினால் போதும். தேவைப்படும் பிற பொருள்கள் எல்லாவற்றையும் சுந்தர் தோளில் சுமந்துகொள்வான். ஒரு கட்டத்தில், கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறவும் உதவுவான். அவசரம் கிடையாது. பரபரப்பு கிடையாது.

ஒவ்வொருவரும் படியேற எவ்வளவு நேரமாகும் என்று வருபவர்களின் உடல்வாகைப் பார்த்தே சுந்தர் சொல்லிவிடுவான். அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பார்வதி நினைத்துக்கொள்வாள். எந்தப் போட்டியாக இருந்தாலும் முதல் ஆயிரம் படிகளுக்குள்ளேயே முடிந்துபோய்விடும். அதற்குமேல் எந்த உடலும் அசதியும் நோவும் கண்டுவிடும்.

பார்வதி அக்காவின் அப்பா, சுந்தருக்குச் சித்தப்பா. அவருக்குத் தம் வக்கீல் தொழிலில் பிரச்னை ஏற்பட்ட போது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்றும் திருப்பதி செல்லத் தொடங்கினார். அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர், திருமலைக்குப் படியேறி வந்து வணங்குகிறேன் என்று வேண்டிக்கொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றாராம். கிட்டத்தட்ட 21 அமாவாசைகள் அவர் படியேறினார். அவரோடு சுந்தரும் துணைக்கு போக ஆரம்பித்தான்.

கீழ்த் திருப்பதியில் இருந்து மேலே ஏற குறைந்தபட்சம் நான்கரை மணி நேரம் ஆகும். சித்தப்பா மெதுவாக ஏறுவார். அவருக்கு அப்போதே வயது ஐம்பதுக்கும் மேல். அவருக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே மலையேறுவார். சுந்தர் அவரோடே இருப்பான். முதலில் ஐந்நூறு படிக்கட்டுகள் வரை உற்சாகம் மிதக்கும், விறுவிறுவென ஏற முடியும். அதன்பிறகுதான் உடலின் உபாதைகள் தெரியத் தொடங்கும்.

அதன்பிறகு நூறு படிக்கட்டுகளுக்கு ஒருமுறை நின்று, உட்கார்ந்து, தண்ணீர் குடித்து, நான்கு வார்த்தை பேசி, சட்டைகளைத் தளர்த்தி விட்டு, காற்றை நெஞ்சுக்குள் வாங்கி, பசுமையைப் பருகி மீண்டும் நடக்கத் தொடங்கும்போது, ஒருவித ஆசுவாசம் வரும். அடுத்த நூறு படிக்கட்டுகளுக்குள் மீண்டும் முட்டுகள் நோகத் தொடங்கும். சித்தப்பா நின்றுவிடுவார்.

சுந்தர் சிரித்துக்கொண்டு நிற்பான். அவன் தோளிதான் தண்ணீர் பாட்டில், ஒரு மாற்று உடை, துடைக்கும் டவல் எல்லாம் கொண்ட பை இருக்கும். அவர்களை கடந்து எண்ணற்ற ஆந்திர கிராம பக்தர்கள் படியேறிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆந்திரப் பெண்கள், ஒவ்வொரு படிக்கட்டாக பொட்டு வைத்துக்கொண்டும், தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கிடுகிடுவென படியேறுவார்கள்.

காளி கோபுரம் தாண்டியபின், ஓரளவுக்கு தரைமட்டமான சாலைப் பயணம் தொடரும். ஒரு கட்டத்துக்குப் பின் சாலையோரம் நடக்கவேண்டும். நடக்க நடக்க மாளவே மாளாதோ என்னும்படியான நீண்ட பயணம் அது.

சித்தப்பாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் நூறு படிக்கட்டுகள்வரை கூட நடக்க முடியவில்லை. நூறு ஐம்பதும் ஆயிற்று. பின்னர் அரை மணி நேரம் ஒரு மலையோரத்தில் அமர்ந்து காற்று வாங்கத் தொடங்கினார். உண்மையில் கடவுள் தன்னைச் சோதிப்பதற்காகவே இத்தனை கடுமையான பயணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவருக்குத் தோன்றியது.

வாழ்வில் இத்தனை நாள் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு படிக்கட்டுகளாயினவோ என்னவோ? கடக்க நடக்க மாளவே இல்லையே? அதைக் கடக்கும் உறுதியும் திண்மையும் தளர்ந்துபோய்விட்டதே? காற்று இன்னும் பலமாக வீசிக்கொண்டிருந்தது.

என்ன விரும்புகிறார் கடவுள்? என் உறுதி, என் முயற்சி, என் கர்வம், என்னுடைய நான் எல்லாவற்றையும் இந்தப் படிக்கட்டுகளில் சமர்ப்பித்துவிட்டு மேலே வரச் சொல்கிறாரோ? சட்டென தான் நிறைய யோசிக்க, இந்த நீண்ட நடை உதவுவதை அவரால் உணர முடிந்தது. இப்படி ஒரே சீராக நான்கு மணி நேரம் யோசிக்கவே முடிந்ததில்லையே.

சுந்தர் காலை ஆட்டிக்கொண்டு படிக்கட்டு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். மேலே படியேறுவோரை அவன் பார்வை தொடர்ந்துகொண்டிருந்தது. நான்கைந்து பையன்கள் எதிர்புறம் கீழே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். சுந்தர் முகத்தில் தெரிந்த அபரிமிதமான அமைதி அவரை வியப்பில் ஆழ்த்தியது. வலி, வேதனை என்று இதுநாள்வரை ஒருமுறை கூட அவன் பாயை விரித்துப் படுத்ததில்லை என்பது ஏனோ அப்போது ஞாபகம் வந்ததுபோல் தோன்றியது.

”கால் வலிக்கலியாடா சுந்தர்?”

”இல்ல சித்தப்பா. நடந்து நடந்து பழக்கமாயிடுச்சு. ”

”நீ மட்டும் வந்தா எவ்வளவு சீக்கிரம் மலையேறுவே?”

”ரெண்டரை மணி நேரம் போதும் சித்தப்பா.”

இவனை இத்தனை ஆண்டுகளாக ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது அவருக்கு மனத்தில் உறைத்தது. எத்தனை ஆண்டுகளாக மலையேறுவான்? அவருக்கு நினைவு தெரிந்து பத்து, பனிரெண்டு ஆண்டுகளாக இருக்கலாம். இவனும் தன்னுடைய சின்ன மகளும் ஒரே வயது.

ஆறாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. கடலூர் பக்கம் ஏதோ ஒரு ஊரில் அவன் அப்பாவுக்கு அரசு வேலை இருந்தது. அவர் காலமானபின்பு, இவனை அழைத்துக்கொண்டு இவனது அம்மா சென்னை வந்து சேர்ந்தது, அவர்களது பெரிய வீட்டின் ஒரு சிறு அறையில் பின்னால், இவர்களைக் குடிவைத்தது எல்லாம் ஒரு கனவுபோல் அவருக்கு ஞாபகம் வந்தது.

இன்றுவரை, இவனது அம்மா தனக்கென்றோ, இவனுக்கென்றோ எதுவுமே வந்து கேட்டதில்லை. வக்கீல்கள் நிறைந்த குடும்பத்தில், இப்படி ஒரு ஜீவன் இருப்பதே யார் கவனத்திலும் படவில்லை. ஆனால், அலுவலகத்தில் அவன் நிற்பதையும் ஏதோ உதவுவதையும் அவர் கவனித்திருக்கிறார். எல்லாம் வெளுத்துப் போன சித்திரம் போலிருந்தது.

அவ்வப்போது, அவன் ஒரு அச்சுபிச்சு, பேசத் தெரியவில்லை, காரிய சாமர்த்தியமில்லை என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை காதில் வாங்கியிருக்கிறார். ஆனால், அது மூளையின் ஏதோ ஒரு அடுக்கில் போய் உட்கார்ந்திருப்பது இப்போது நினைக்கும்போது வெளியே வரத் தொடங்கியது. யாரும் அவனைப் பள்ளிக்கூடம் போவென்றோ, படியென்றோ வற்புறுத்தியதில்லை. பலருக்கும் சுந்தர் செளகரியமாக இருந்திருக்கிறான். எதுவேண்டுமானாலும் ஓடிப்போய் செய்துதரக்கூடிய செளகரியம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.

”மாசத்துக்கு எத்தனை தடவைடா திருப்பதி வருவே?”

”ரெண்டு மூணு தடவை வந்துடுவேன் சித்தப்பா..”

”பெருமாள்கிட்ட என்ன வேண்டிப்ப?”

”எங்கம்மா மாதிரி அழகான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கணும்.”

வீட்டினர் நடுவே இவன் இப்படிப் பேசியிருந்தால், அவன் அம்மாவே கோபப்பட்டு இருக்கக்கூடும். இப்படி வளர்ந்து நிற்கும் ஒருவன் பேசும் பேச்சாக இது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. அசட்டுத்தனம் என்றிருப்பார்கள். சித்தப்பா அப்போதும் எதுவும் பேசவில்லை.

அடுத்த அமாவாசைக்குத் திருப்பதி பயணம் அவர் மேற்கொள்ளும்முன் வேறொரு விஷயம் நடந்தது. ஒரு நாள் மாலை அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, கூரியர் எடுப்பவன் ஒருவன் கதவுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். அவன் போனபின்பு, அலுவலக குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.

”தினமும் எத்தனை கூரியர் அனுப்புவீங்க கணேசன்?”

”கட்சிக்காரங்களுக்கு லெட்டர் போட்டுடுவோம் சார். கூரியர்ல அனுப்பறது ஒரு நாலைஞ்சு கவர்ங்க இருங்க சார். ”

”நாளைலேருர்ந்து மெட்ராஸ்குள்ள அனுப்பற கூரியரையெல்லாம் சுந்தர்கிட்ட கொடுத்துடுங்க. அவன் போய் டெலிவரி பண்ணட்டும். ”

அப்போது ஆரம்பித்தது அவன் பயணம். இப்போதும் நீங்கள் அவனை ஏதேனும் ஒரு சாலையில் பார்க்கலாம். மழையோ வெயிலோ எதுவானாலும், வேட்டியை கொஞ்சம் மேலே கட்டிக்கொண்டு, இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகள் நிறைய கடிதங்கள் தொங்க, விறுவிறுவென உங்களை ஒருவர் கடந்து போனால், ஒரு நிமிடம் நின்று பாருங்கள். கால்கள் கொஞ்சம் வளைந்து மூங்கில் கழி போல் இருக்கும். தாமரை இலையென பாதங்கள் படர்ந்து இருக்கும்.

இப்போதும் பேச்சில் கொஞ்சம் அச்சுபிச்சுத்தனம் உண்டு. ஆனால், அவன் ஆசைப்பட்டதில் இரண்டாவது நடந்துவிட்டது. விரைவில் முதலாவதையும் நடத்திவிடவேண்டும் என்று அவன் அம்மா மெனக்கட்டுக் கொண்டிருக்கிறாள். நல்ல அழகானப் பெண் இருந்தால், கொஞ்சம் சொல்லுங்களேன், பிளீஸ்!

Venkatesh R

Categories: Authors Tags: , , , , ,

Tamil Feeds

January 23, 2009 2 comments
Feed-icon-12x12-orange RSS Feed URL
http://seythialasal.blogspot.com/feeds/pos…
http://tamilnathy.blogspot.com/feeds/posts…
http://vadakkupatturamasamy.blogspot.com/f…
http://bookimpact.blogspot.com/feeds/posts…
http://raajaachandrasekar.blogspot.com/fee…
http://kadarkarai.blogspot.com/feeds/posts…
http://manaosai.blogspot.com/feeds/posts/d…
http://blog.nandhaonline.com/?feed=rss2
http://boochandi.blogspot.com/feeds/posts/…
http://navinavirutcham.blogspot.com/feeds/…
http://blog.ravidreams.net/feed/
http://vettipaiyal.blogspot.com/feeds/post…
http://kvraja.blogspot.com/feeds/posts/def…
http://veerasundar.blogspot.com/feeds/post…
http://mykitchenpitch.wordpress.com/feed
http://balakumaranpesukirar.blogspot.com/f…
http://feeds.feedburner.com/urpudathathu
http://kurunjeythi.blogspot.com/feeds/post…
http://yosinga.blogspot.com/feeds/posts/de…
http://potteakadai.blogspot.com/feeds/post…
http://kalaiy.blogspot.com/feeds/posts/def…
http://thiruvilaiyattam.blogspot.com/feeds…
http://orupodiyan.blogspot.com/feeds/posts…
http://kaiman-alavu.blogspot.com/feeds/pos…
http://ravisrinivasreads.blogspot.com/feed…
http://www.sridharblogs.com/feeds/posts/de…
http://kuralvalai.blogspot.com/feeds/posts…
http://kavidhai-pakkangal.blogspot.com/fee…
http://icarusprakash.wordpress.com/feed
http://dystocia.weblogs.us/feed/
http://www.kirukkal.com/atom.xml
http://imsai.blogspot.com/feeds/posts/default
http://uspresident08.wordpress.com/feed
http://maravalam.blogspot.com/feeds/posts/…
http://photography-in-tamil.blogspot.com/f…
http://feedity.com/rss.aspx/sramakrishnan-…
http://blog.balabharathi.net/feed/atom
http://krishchandru.blogspot.com/feeds/pos…
http://veyililmazai.blogspot.com/feeds/pos…
http://thulasidhalam.blogspot.com/feeds/po…
http://livingsmile.blogspot.com/feeds/post…
http://blogeswari.blogspot.com/feeds/posts…
http://kabeeran.blogspot.com/feeds/posts/d…
http://sirippu.wordpress.com/feed
http://tamilbodypolitics.blogspot.com/feed…
http://idlyvadai.blogspot.com/feeds/posts/…
http://wandererwaves.blogspot.com/feeds/po…
http://aadumaadu.blogspot.com/feeds/posts/…
http://penathal.blogspot.com/feeds/posts/d…
http://kanapraba.blogspot.com/feeds/posts/…
http://sorkal.blogspot.com/feeds/posts/def…
http://jeyamohan.in/?feed=rss2
http://milakaai.blogspot.com/feeds/posts/d…
http://selventhiran.blogspot.com/feeds/pos…
http://kusumbuonly.blogspot.com/feeds/post…
http://pksivakumar.blogspot.com/feeds/post…
http://xavi.wordpress.com/feed
http://delphine-victoria.blogspot.com/feed…
http://balaji_ammu.blogspot.com/feeds/post…
http://chennaicutchery.blogspot.com/feeds/…
http://vilambi.blogspot.com/feeds/posts/de…
http://holyox.blogspot.com/feeds/posts/def…
http://gayatri8782.blogspot.com/feeds/post…
http://madhavipanthal.blogspot.com/feeds/p…
http://thabaal.blogspot.com/feeds/posts/de…
http://kalvetu.blogspot.com/feeds/posts/de…
http://sudhanganin.blogspot.com/feeds/post…
http://elanko.net/?feed=rss2
http://tamizh2000.blogspot.com/feeds/posts…
http://blog.tamilsasi.com/feeds/posts/default
http://intamil.blogspot.com/feeds/posts/de…
http://nirmalaa.blogspot.com/feeds/posts/d…
http://thoughtsintamil.blogspot.com/feeds/…
http://minanjal-idayangal.blogspot.com/fee…
http://poar-parai.blogspot.com/feeds/posts…
http://thenkinnam.blogspot.com/feeds/posts…
http://yaathirigan.blogspot.com/feeds/post…
http://malarvanam.blogspot.com/feeds/posts…
http://madavillagam.blogspot.com/feeds/pos…
http://asifmeeran.blogspot.com/feeds/posts…
http://domesticatedonion.net/tamil/?feed=rss2
http://manuneedhi.blogspot.com/feeds/posts…
http://blog.selvaraj.us/feed
http://cyrilalex.com/?feed=rss2
http://valaipadhivan.blogspot.com/feeds/po…
http://pkp.blogspot.com/feeds/posts/default
http://losangelesram.blogspot.com/feeds/po…
http://dharumi.blogspot.com/feeds/posts/de…
http://lathananthpakkam.blogspot.com/feeds…
http://pookri.com/?feed=atom
http://surveysan.blogspot.com/feeds/posts/…
http://ulaathal.blogspot.com/feeds/posts/d…
http://payanangal.blogspot.com/feeds/posts…
http://www.sridharblogs.com/feeds/posts/de…
http://kadalaiyur.blogspot.com/feeds/posts…
http://angumingum.wordpress.com/feed
http://tamilnithi.blogspot.com/feeds/posts…
http://vicky.in/dhandora/?feed=atom
http://bsubra.wordpress.com/feed
http://kick-off.blogspot.com/feeds/posts/d…
http://elavasam.blogspot.com/feeds/posts/d…
http://manggai.blogspot.com/feeds/posts/de…
http://marchoflaw.blogspot.com/feeds/posts…
http://www.desikan.com/blogcms/xml-rss2.ph…
http://naayakan.blogspot.com/feeds/posts/d…
http://ilavanji.blogspot.com/feeds/posts/d…
http://kanchifilms.blogspot.com/feeds/post…
http://nraviprakash.blogspot.com/feeds/pos…
http://alaithal.blogspot.com/feeds/posts/d…
http://hainallama.blogspot.com/feeds/posts…
http://parisalkaaran.blogspot.com/feeds/po…
http://vizhiyan.wordpress.com/feed
http://www.thaiyal.com/?feed=rss2
http://haikoo.wordpress.com/feed
http://dhalavaisundaram.blogspot.com/feeds…
http://inru.wordpress.com/feed
http://knski.blogspot.com/feeds/posts/default
http://imohandoss.blogspot.com/feeds/posts…
http://feedity.com/rss.aspx/charuonline-co…
http://premalathakombaitamil.wordpress.com…
http://gragavan.blogspot.com/feeds/posts/d…
http://mathy.kandasamy.net/movietalk/feed
http://reallogic.org/thenthuli/?feed=rss2
http://www.makkal-sattam.org/feeds/posts/d…
http://iniyathu.blogspot.com/feeds/posts/d…
http://ennasitharalgal.blogspot.com/feeds/…
http://ushnavayu.blogspot.com/feeds/posts/…
http://sirumuyarchi.blogspot.com/feeds/pos…
http://snapjudge.wordpress.com/feed
http://vassan.kollidam.com/?feed=rss2
http://thaaragai.wordpress.com/feed
http://sanimoolai.blogspot.com/feeds/posts…
http://thendral2007.blogspot.com/feeds/pos…
http://nizhalkal.blogspot.com/feeds/posts/…
http://ennulagam.blogspot.com/feeds/posts/…
http://masivakumar.blogspot.com/feeds/post…
http://balajiulagam.blogspot.com/feeds/pos…
http://umakathir.blogspot.com/feeds/posts/…
http://cvrintamil.blogspot.com/feeds/posts…
http://mynose.blogspot.com/feeds/posts/def…
http://nadaivandi.blogspot.com/feeds/posts…
http://pesalaam.blogspot.com/feeds/posts/d…
http://kuranguththavam.blogspot.com/feeds/…
http://ungaarea.blogspot.com/feeds/posts/d…
http://arasanagari.blogspot.com/feeds/post…
http://beemorgan.blogspot.com/feeds/posts/…
http://ravisrinivas.blogspot.com/feeds/pos…
http://madippakkam.blogspot.com/feeds/post…
http://selvanayaki.blogspot.com/feeds/post…
http://konguvaasal.blogspot.com/feeds/post…
http://radiospathy.blogspot.com/feeds/post…
http://ennezhuthu.blogspot.com/feeds/posts…
http://vavaasangam.blogspot.com/feeds/post…
http://rpsubrabharathimanian.blogspot.com/…
http://saavu.blogspot.com/feeds/posts/default
http://directorram.blogspot.com/feeds/post…
http://idhazhgal.blogspot.com/feeds/posts/…
http://osaichella.blogspot.com/feeds/posts…
http://blog.ravidreams.net/feed/
http://usthamizhan.blogspot.com/feeds/post…
http://poarmurasu.blogspot.com/feeds/posts…
http://cdjm.blogspot.com/feeds/posts/default
http://kappiguys.blogspot.com/feeds/posts/…
http://babumanohar.blogspot.com/feeds/post…
http://keethukottai.blogspot.com/feeds/pos…
http://rekupthi.blogspot.com/feeds/posts/d…
http://vrkathir.blogspot.com/feeds/posts/d…
http://kuumuttai.wordpress.com/feed
http://abedheen.wordpress.com/feed
http://yalisai.blogspot.com/feeds/posts/de…
http://naalkurippu.blogspot.com/feeds/post…
http://innapira.blogspot.com/feeds/posts/d…
http://sugunadiwakar.blogspot.com/feeds/po…
http://mathy.kandasamy.net/musings/feed
http://kuzhali.blogspot.com/feeds/posts/de…
http://puthiyamaadhavi.blogspot.com/feeds/…
http://jamalantamil.blogspot.com/feeds/pos…
http://blogintamil.blogspot.com/feeds/post…
http://veenaapponavan.blogspot.com/feeds/p…
http://thadagam.blogspot.com/feeds/posts/d…
http://mkarthik.blogspot.com/feeds/posts/d…
http://peddai.net/?feed=rss2
http://karupu.blogspot.com/feeds/posts/def…
http://ayyanaarv.blogspot.com/feeds/posts/…
http://truetamilans.blogspot.com/feeds/pos…
http://kaiyedu.blogspot.com/feeds/posts/de…
http://valavu.blogspot.com/feeds/posts/def…
http://vinaiaanathogai.blogspot.com/feeds/…
http://ennam.blogspot.com/feeds/posts/default
http://nernirai.blogspot.com/feeds/posts/d…
http://feeds.feedburner.com/tapub
http://jeevagv.blogspot.com/feeds/posts/de…
http://nunippul.blogspot.com/feeds/posts/d…
http://blog.uyirmmai.com/syndication.axd
http://nagarjunan.blogspot.com/feeds/posts…
http://n-aa.blogspot.com/feeds/posts/default
http://enn-ennangal.blogspot.com/feeds/pos…
http://nila-amuthu.blogspot.com/feeds/post…
http://tamilarangam.blogspot.com/feeds/pos…
http://jayabarathan.wordpress.com/feed/
http://silakurippugal.blogspot.com/feeds/p…
http://kuruvikal.blogspot.com/feeds/posts/…
http://thekkikattan.blogspot.com/feeds/pos…
http://puyppam.blogspot.com/feeds/posts/de…
http://vimarsanam.wordpress.com/feed
http://thiruvadiyan.blogspot.com/feeds/pos…
http://vinavu.wordpress.com/feed/
http://awardakodukkaranga.wordpress.com/feed
http://rprajanayahem.blogspot.com/feeds/po…
http://poetry-tuesday.blogspot.com/feeds/p…
http://nilamukilan.blogspot.com/feeds/post…
http://madsmusings.wordpress.com/feed/
http://www.nagorerumi.com/?feed=rss2
http://india360degree.blogspot.com/feeds/p…
http://suduvadusukam.blogspot.com/feeds/po…
http://www.satiyakadatasi.com/feed/
http://samsari.blogspot.com/feeds/posts/de…
http://ullumpuramum.blogspot.com/feeds/pos…
http://ramasamywritings.blogspot.com/feeds…
http://athirai.blogspot.com/feeds/posts/de…
http://djthamilan.blogspot.com/feeds/posts…
http://www.writerpara.net/?feed=rss2
http://content.uncerta.in/?feed=rss2
http://news.google.com/news?hl=en&output=a…
http://feedity.com/rss.aspx/uyirmmai-com/V…
http://www.ariviyal.info/?feed=rss2
http://news.google.com/news?hl=en&output=a…
http://aatputhan.blogspot.com/feeds/posts/…
http://mumbairamki.blogspot.com/feeds/post…
http://news.google.com/news?hl=en&output=a…
http://www.arunhere.com/aathemovie/feed/
http://arunthapattam.blogspot.com/feeds/po…
http://muthuraman.blogspot.com/feeds/posts…
http://chinmayisripada.blogspot.com/feeds/…
http://tamilsujatha.blogspot.com/feeds/pos…
http://rosemayr.blogspot.com/feeds/posts/d…
http://priyanonline.com/?feed=rss2
http://www.sankathi.com/index.php?mact=New…
http://www.writermugil.com/?feed=rss2
http://balusathya.blogspot.com/feeds/posts…
http://rmuthukumar.com/?feed=rss2
http://umashakthi.blogspot.com/feeds/posts…
http://dilipan-orupuratchi.blogspot.com/fe…
http://www.ibctamil.net/?feed=rss2
http://www.satiyakadatasi.com/feed/
http://iyyappamadhavan.blogspot.com/feeds/…
http://avalankal.blogspot.com/feeds/posts/…
http://enrenrumthamil.blogspot.com/feeds/p…
http://tamilweek.com/news-features/feed/
http://aalamaram.blogspot.com/feeds/posts/…
http://rosemayr.blogspot.com/feeds/posts/d…
http://www.virakesari.lk/Virakesari-Online…
http://thooya.blogspot.com/feeds/posts/def…
http://blog.sajeek.com/?feed=rss2
http://periyaryouth.blogspot.com/feeds/pos…
http://maruthanizal.blogspot.com/feeds/pos…
http://www.knowliz.com/feeds/posts/default
http://blogsearch.google.com/blogsearch_fe…
http://feeds.feedburner.com/NetObjectivesT…
http://blogsearch.google.com/blogsearch_fe…
http://blogsearch.google.com/blogsearch_fe…
http://rgvarma.spaces.live.com/feed.rss
http://venuvanamsuka.blogspot.com/feeds/po…
http://sathirir.blogspot.com/feeds/posts/d…
http://wprocks.com/feed/
http://seralathan.blogspot.com/feeds/posts…
http://tamilmagan.blogspot.com/feeds/posts…
http://feeds.feedburner.com/Mashable
http://feeds.delicious.com/v2/rss/popular?…
http://www.micropersuasion.com/atom.xml
http://www.blogs.com/featured-stories.xml
http://vettivambu.blogspot.com/feeds/posts…
http://karaiyoram.blogspot.com/feeds/posts…
http://feeds.feedburner.com/Insidesocialweb
http://www.eazycheezy.net/feeds/posts/default
http://www.wordyard.com/feed/
http://www.engadget.com/rss.xml
http://shobhaade.blogspot.com/feeds/posts/…
http://blogs.msdn.com/cbowen/rss.xml
http://www.gchandra.com/scripts/?feed=rss2
http://www.readwriteweb.com/rss.xml
http://blogs.msdn.com/jimoneil/rss.xml
http://poobalan.com/blog/feed/atom/
http://suryamumbai.blogspot.com/feeds/post…
http://jeevartistjeeva.blogspot.com/feeds/…
http://kasiblogs.blogspot.com/feeds/posts/…
http://feedproxy.google.com/TechCrunch
http://muralikkannan.blogspot.com/feeds/po…
http://feedproxy.google.com/chrisbrogandotcom
http://bbthots.blogspot.com/feeds/posts/de…
http://www.allticles.com/feed/
http://maiya.neerottam.com/feed/
http://linguamadarasi.blogspot.com/feeds/p…
http://vadakarai.blogspot.com/feeds/posts/…
http://kalapria.blogspot.com/feeds/posts/d…
http://karuththukal.blogspot.com/feeds/pos…
http://nanopolitan.blogspot.com/feeds/post…
http://vaamukomu.blogspot.com/feeds/posts/…
http://chennaibookfair09.blogspot.com/feed…
http://www.saravanakumaran.com/feeds/posts…
http://baalu-manimaran.blogspot.com/feeds/…
http://modumutti.blogspot.com/feeds/posts/…
http://yemkaykumar.blogspot.com/feeds/post…
http://jannal.blogspot.com/feeds/posts/def…
http://mohammedpeer.blogspot.com/feeds/pos…
http://feedity.com/rss.aspx/amruthamagazin…
http://meetchi.wordpress.com/feed/
http://brammarajan.wordpress.com/feed
http://feedity.com/rss.aspx/kalachuvadu-co…
http://thesamnet.co.uk/?feed=rss2
http://feedity.com/rss.aspx/tamilonline-co…
http://feedity.com/rss.aspx/tamil-thesunda…
http://peruveli.blogspot.com/feeds/posts/d…
http://feedity.com/rss.aspx/thinnai-com/VF…
http://deebamsantheppu.blogspot.com/feeds/…
http://feedity.com/rss.aspx/uyirmmai-com/V…
http://yenathulakam.blogspot.com/feeds/pos…
http://www.eramurukan.in/tamil/magazines_r…
http://www.dalitnet.net/feeds/posts/default
http://inioru.com/?feed=rss2
http://feedity.com/rss.aspx/uyirnizhal-com…
http://solvathellamunmai.blogspot.com/feed…
http://enyennagal.blogspot.com/feeds/posts…
http://ommachi.wordpress.com/feed
Categories: Tamil Tags: , , , ,

மேலும் படிக்க

January 14, 2009 Leave a comment

15

11.01.09 தொடர்கள்

எப்படியும் சுதந்திரம் என்று பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த உடனேயே இலங்கை விஷயத்தில் ஒரு காரியம் செய்தார்கள். 1944-ம் வருடம் அது.
பூரண சுதந்திரம் பற்றியெல்லாம் பெரிதாகப் பேசாமல், சும்மா இலங்கைக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தினை ஒழுங்கு செய்து வைப்பதற்காக லார்ட் ஸால்பரி (Lord Soulbury) என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தார்கள்.

இந்தக் குழு என்ன செய்ய வேண்டும்? இலங்கைக்கென ஓர் அரசியல் அமைப்புச் சட்டத்தினை வடிவமைக்க வேண்டும். இலங்கை அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அனைத்துத் தரப்பு மக்கள், அவர்களுடைய மதம், கலாசாரம், இன வேறுபாடுகள் தொடங்கி அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, தேசத்தின் தன்மைக்கேற்றவாறு அந்தச் சட்டம் அமையவேண்டுமென்பது முக்கியம்.

ஆனால், ஸால்பரி கமிஷன் நியமிக்கப்பட்டவுடனேயே சிங்கள அரசியல்வாதிகள் சுறுசுறுப்பாகிவிட்டார்கள். எக்காரணம் கொண்டும் தமிழர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் முக்கியத்துவம் கிடைத்துவிடக் கூடாது. ஒரு மைனாரிட்டி இனமாக அவர்கள் சுட்டிக்காட்டப்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துவிடாதபடிக்குப் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சம உரிமை, அந்தஸ்து என்று பேசத் தொடங்கிவிட்டால் பிரச்னை. பின்னால் சமாளிக்க முடியாது போய்விடும். எனவே ஜாக்கிரதை.

மிகத் தெளிவாக, தீர்மானமாக அவர்கள் இந்த ஒற்றை இலக்கை முன்வைத்துத் தங்கள் பிரசாரங்களை முடுக்கிவிடத் தொடங்கியபோது, தமிழர்களுக்காகப் பேசுவதற்கு அங்கே இருந்த ஒரே இயக்கம் All Cylon Tamil Congress..

1944-ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இயக்கம் இது. கணபதி பிள்ளை கங்கேசர் பொன்னம்பலம் என்னும் ஜி.ஜி. பொன்னம்பலத்தால் தொடங்கப்பட்டது.

இலங்கைத் தமிழர்களின் தொடக்க கால வரலாற்றில் ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு முக்கியமான புள்ளி. 1901-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி யாழ்ப்பாணத்தில் ஒரு போஸ்ட் மாஸ்டரின் மகனாகப் பிறந்தவர் பொன்னம்பலம். கொழும்புசெயிண்ட் ஜோசப் கல்லூரியில் அடிப்படைப் படிப்பை முடித்துவிட்டு ஸ்காலர்ஷிப்பில் லண்டனுக்குச் சென்று அங்கே கிங்ஸ் காலேஜில் இயற்கை அறிவியல் படித்துப் பட்டம் பெற்றார். பிறகு கேம்பிரிட்ஜில் சட்டப்படிப்பு.

இலங்கை திரும்பிய பிறகு தீவிரமாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார். அந்நாளில் அங்கே தேசிய அளவில் புகழ்பெற்ற கிரிமினல் லாயர் அவர்.

வழக்கறிஞர் தொழிலில் இருந்தபடியேதான் அரசியலில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார். 1934-ல் இலங்கை மாகாண கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது தொடங்கி சுதந்திர இலங்கையின் டி.எஸ். சேனநாயகா தலைமையிலான முதல் அவையில் அங்கம் வகித்தது வரை வெகு நீண்ட சரித்திரம் உண்டு அவருக்கு.

1956 வரை இலங்கை நாடாளுமன்றத்தின் மதிப்பு மிகு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர் பொன்னம்பலம். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பின்னர் படிப்படியாகச் சரிந்து போய்விட்டது. அவர் ஆரம்பித்த இலங்கைத் தமிழ் காங்கிரஸில் உறுப்பினராகச் சேர்ந்தவர்தான் பின்னாளில் `தந்தை செல்வா’ என்று அழைக்கப்பட்ட எஸ்.ஜே.வி. செல்வநாயகம்.

செல்வநாயகம் வந்த பிறகுதான் தமிழர்கள் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுக்கக்கூட ஒரு வழி உண்டானது. அதுநாள் வரை பொன்னம்பலம் சொன்னதுதான் எடுபட்டது. விருப்பமிருந்தாலும் இல்லாது போனாலும் அவர் பேசியது மட்டுமே தமிழ்க்குரலாக அங்கீகரிக்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக, அரசியலில் அவருக்குப் போராட்ட குணம் போதுமான அளவு இல்லாது போய்விட்டது.

அரசியல் சாசனம் எழுதப்படத் தொடங்கியபோது, பொன்னம்பலமும் அவருடைய இலங்கைத் தமிழ் காங்கிரஸ் சகாக்களும் மிகத் தெளிவாகத் தமிழர்களுக்குச் சரிபாதி உரிமை கோரினார்கள். சிங்களர்களுக்கு ஐம்பது சதம். ஆதிகுடித் தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை உள்ளடக்கிய தமிழ்ச் சமூகத்துக்கு மீதி ஐம்பது சதப் பிரதிநிதித்துவம்.

ஆனால், சிங்கள அரசியல்வாதிகளுக்குச் சமமாக பிரிட்டிஷ் அரசு இதனை நிராகரித்தபோது, தொடர்ந்து போராடாமல் போய்விட்டதுதான் அவர் செய்த முதல் மற்றும் மிகப்பெரிய தவறு.

சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்தபோதிலும் 1948 குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்காது போனது அடுத்த பெரும் தவறு. லட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் முகவரியற்றுப் போனபோது செய்வதற்கொன்றுமில்லை என்னும்படியாகப் பார்த்துக்கொண்டிருந்ததில்தான் தமிழர்கள் கொதித்துப் போய்விட்டார்கள்.

1949 டிசம்பரில் இலங்கைத் தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து எஸ்.ஜே.வி. செல்வநாயகம் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தொடங்கியதன் அடிப்படை இதுவே.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் குரல் எழுப்பியவர் தந்தை செல்வாதான். 1956 வரை இலங்கை அரசியலில் ஈடுபட்டுவிட்டு, இனி சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகு மலேசியாவுக்குப் போய் பழைய வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடத் தொடங்கிய ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்தான். ஆனாலும் பதவி ஒரு பொருட்டில்லை என்பதையே தன் வாழ்நாள் செய்தியாக வைத்துவிட்டுப் போனவர், செல்வா.

சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், இலங்கையில் பிறந்தவரில்லை. அவர் பிறந்தது மலேசியாவில். தனது நான்கு வயதில் இலங்கைக்கு வந்து சேர்ந்தவர். தெல்லிப்பளை யூனியன் காலேஜிலும் பிறகு செயிண்ட் தாமஸ் கல்லூரியிலும் படித்தார். பொன்னம்பலத்தின் இலங்கைத் தமிழ் காங்கிரஸில் சேர்ந்த நாள் தொடங்கி மிகத் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டவர்.

செல்வநாயகம், பொன்னம்பலத்தைவிட மூன்று வயது மூத்தவர். தொடக்கத்தில் இருவருக்கும் மிக நல்ல, மேலான நட்புறவும் புரிந்துணர்வும் இருந்தது. கட்சியின் துணைத்தலைவராக செல்வாதான் இருந்தார். ஆனால், பொன்னம்பலத்தின் விட்டுக்கொடுக்கும் அரசியல் செல்வநாயகத்துக்குப் பிடிக்கவில்லை.

எதற்காக சிங்களர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்? ஏன் எல்லாவற்றிலும் விட்டுக்கொடுக்க வேண்டும்? எந்த உரிமையும் இல்லாமல் வெறுமனே அவர்களை ஆதரித்துக்கொண்டு குறைந்தபட்சம் எதிர்க்காமலேனும் இருப்பதில் என்ன லாபம்? அரசியல் அமைப்பில் பிரதிநிதித்துவம் இல்லை. ஆட்சியில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை. சமூகத் தளத்திலும் சம உரிமை இல்லை. அப்புறம் எதற்கு அவர்களுக்குக் காவடி தூக்க வேண்டும்?

1947 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று செல்வநாயகம் பொன்னம்பலத்துடன் அவைக்குச் சென்றபோது, பின்னால் இப்படியெல்லாம் நேரும் என்று நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. இலங்கைத் தமிழர்களின் சரித்திரத்தில் இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஒரு துரோகம் புரிந்த கட்சியாக வருணிக்கப்படும் என்று எண்ணிப் பார்க்கவில்லை. தனது தலைவருக்கு எதிராகத் தானே ஒரு கட்சி தொடங்கவேண்டி வரும் என்று எண்ணியிருக்கவில்லை. அந்தக் கட்சி இலங்கை அரசியலில் ஒரு மிக முக்கியமான திருப்புமுனைக்கு வழி வகுக்கும் என்றும் நினைத்திருக்கவில்லை.

அவர் அமைதியானவர். அதிகம் பேசுகிற வழக்கம் இல்லாதவர். அதிகமென்ன, பெரும்பாலும் பேசவே மாட்டார். எழுதுவதும் வெகு சொற்பம். பேச்சல்ல, செயல் என்பதே அவரது கொள்கையாக இருந்தது. வன்முறை என்கிற ஒன்றை எண்ணிக்கூடப் பார்த்திராத தலைமுறையைச் சேர்ந்தவர்.

அதற்கான அவசியத்தை அந்தக் காலம் உருவாக்கியிருக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

மைனாரிட்டிகள் ஒடுக்கப்படும்போது அதற்காகப் போராடவேண்டும் என்பதையே முதன்முதலில் அவர்தான் அங்கு சொல்லிக் கொடுத்தார். இலங்கையின் அரசியல் ஒழுங்காக நடைபெற வேண்டுமானால் கூட்டாட்சி முறைதான் சரிப்படும் என்று மிகத் தொடக்க காலத்திலிருந்தே வற்புறுத்தி வந்தவர் செல்வா.

ஆனால், எந்தக் காலத்திலும் சிங்கள அரசியல்வாதிகள் அவரது கோரிக்கையைப் பொருட்படுத்தியதில்லை. அவர்களுக்கு பொன்னம்பலம் போன்ற அரசியல்வாதிகளே சௌகரியமாக இருந்தார்கள். கேளுங்கள், கொடுக்கமாட்டோம்; சரியென்று ஒப்புக்கொண்டு அடுத்த வேலைக்குப் போய்விடுங்கள். நீ கேட்கவில்லை என்றும் இருக்காது, நான் கொடுத்தேன் என்றும் இருக்காது. எத்தனை வசதி! இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். நட்புணர்வு. புரிந்துணர்வு.

சுதந்திரம் அடைந்தபின்பு எட்டாண்டுகள் வரை ஜி.ஜி. பொன்னம்பலம் ஒரு பார்லிமெண்டேரியனாக இலங்கையில் செயல்பட முடிந்திருக்கிறது எந்தவிதச் சிக்கலும் இல்லாமல். கடைசி வரை சிங்கள அரசியல்வாதிகள் யாரும் அவரை அரசியலில் இருந்து விரட்ட முயற்சி செய்யவில்லை. தமிழரசுக் கட்சியின் தோற்றம்தான் இலங்கைத் தமிழ் காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளியது. இது சரித்திரம்.

1956-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் செல்வாவின் தமிழரசுக் கட்சி மிகப்பெரிய வெற்றி கண்டது. தமிழர்கள் வாழும் பகுதியெங்கும் செல்வா, செல்வா என்று ஒரே பெயர்தான் ஓங்கி ஒலித்தது. ஒரு முற்போக்கு மறுமலர்ச்சி இயக்கமாக அடையாளம் காணப்பட்ட தமிழரசுக் கட்சியை ஒரு தேசிய இயக்கமாகவே வழி நடத்தவேண்டுமென்று செல்வா நினைத்தார்.

தமிழர் உரிமைக்காகப் போராடுவது செயல்திட்டம். ஆனால் ஒரு பிராந்திய இயக்கமாக அது அடையாளம் காணப்பட்டுவிடக் கூடாது. அது ஆபத்தானது மட்டுமல்ல. செல்வாவின் விருப்பமும் அதுவல்ல.

அவர் ஒரு பிறவி தேசியவாதி. காந்தியைப் போல் அறப் போராட்டங்களில் நம்பிக்கை கொண்டவர். போராடிப் பெறுவதுதான் வழியென்றால், அமைதியாகப் போராடுவோம் என்பதுதான் அவரது கொள்கையாக இருந்தது.

1956 தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைத்த சாலமன் பண்டாரநாயகா (Solomon West Ridgeway Dias Bandaranaike) முதல் காரியமாக இலங்கையின் ஒரே மொழி சிங்களம் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தார். தேசிய மொழி, ஆட்சி மொழி, அதிகார மொழி எல்லாம் அதுவே.

எனில் தமிழ்?

கண்டுகொள்ளவில்லை. பார்ப்போமே, என்னதான் செய்வார்கள்?

போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்று செல்வநாயகம் சொன்னார். லங்கா சம சமாஜக் கட்சியினர் (கம்யூனிஸ்டுகள்) நீங்கலாக, இலங்கையின் அனைத்து சிங்கள அரசியல் கட்சிகளும் மக்கள் இயக்கங்களும் ஒருமித்து ஆதரித்துக் கைதட்டிய இந்தச் சட்டத்துக்கு வரக்கூடிய எதிர்ப்பு எப்படி இருந்தாலும், அடங்கிவிடக் கூடியதாகவே இருக்கும் என்று பண்டாரநாயகா நினைத்தார்.

ஏனெனில், சிங்களம் பேசுவோர் பெரும்பான்மையினர். அநேகமாக எழுபது சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள். தவிரவும் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்திருந்த இடங்களும் அவர்களைக் கவலை கொள்ளச் செய்திருந்தன. செல்வா, பொன்னம்பலம் போல் இல்லை. சரிப்பட்டு வராதவர். ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். மொழியில் தொடங்கலாம். விழியைப் பிடுங்க அதுவே வசதி.

சுதந்திர இலங்கையில் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, மிகக் கொடூரமான நடவடிக்கை அதுதான்.

அதிர்ந்து போனார்கள் தமிழர்கள். தமிழ் பேசும் மாகாணங்களில்கூடத் தமிழ் ஆட்சி மொழி கிடையாது. கடைப் பலகைகள் முதல் கவர்ன்மெண்ட் ஆபீஸ் ரெக்கார்டுகள் வரை சகலமும் சிங்களம். தமிழாவது, வெங்காயமாவது? வேண்டுமானால் வீட்டுக்குள் பேசிக்கொள். வெளியே வந்தால் சிங்களம்தான்.

போராடலாம் என்று செல்வா சொன்னார்.

1956 ஜூன் 5-ம் தேதி இந்த சிங்களம் மட்டும் சட்டத்தை விவாதிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியபோது, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொண்டர்களும், கொழும்பு நாடாளுமன்றக் கட்டடத்துக்கு எதிரே கூடி சத்தியாகிரகத்தில் இறங்கினார்கள்.

விபரீதம், கருங்கல் வடிவில் முதன்முதலில் பறந்து வந்து நடுவே விழுந்தது.

16

15.01.09 தொடர்கள்

மொழி என்றில்லை. எதையுமே திணிப்பது என்பது பெரும்பாலும் பலன் தராது. கட்டாயத்தின் பேரில், அச்சத்தின் பேரில் ஒரு விஷயத்தைச் சுமப்பது மனிதகுலத்துக்கு ஆதிமுதலே ஒத்துவராதது. இங்கே, தமிழகத்திலும் பஞ்சாபிலும் அஸ்ஸாம் போன்ற வடகிழக்கு மாகாணங்களிலும் ஐம்பதுகளில் மேற்கொள்ளப்பட்ட ஹிந்தித் திணிப்பு என்ன ஆனது என்பது நினைவிருக்கிறதல்லவா? அடுத்து வந்த ஒரு பெரும் தலைமுறையே கவனமாக ஹிந்தி அறியாத தலைமுறையாக வார்த்தெடுக்கப்பட்டதையும் நினைவுகூரலாம்.

இந்தியாவில் ஹிந்தி படியுங்கள் என்று அன்று சொல்லப்பட்டதற்கும் இலங்கையில் சிங்களம்தான் தேசிய மொழி என்று அறிவிக்கப்பட்டதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள் உண்டு. ஆனாலும் இதனை இங்கே நினைவுபடுத்தக் காரணம், `திணிப்பு’ என்கிற நிலைக்குச் செல்லாதபோதே நாம் அதனை எத்தனை தீவிரமாக எதிர்த்தோம் என்பதைச் சுட்டிக்காட்டி, அதன்மூலம் இலங்கைத் தமிழர்களின் ஆவேசத்தின் நியாயத்தைப் புரியவைப்பதற்குத்தான்.

சிங்களம் மட்டும் என்று அரசு அன்று சட்டம் கொண்டுவந்ததற்கு `தமிழ் இல்லை’ என்பது தவிர, இன்னொரு காரணமும் உண்டு. தமிழர்களையும் படிப்படியாகச் சிங்களம் படிக்கவைப்பது என்பது இதன் உள்ளுறை செயல் திட்டம். வாழ்ந்தாக வேண்டும். வேலை வாய்ப்புகள், கல்வி அனைத்தும் சிங்களம் சார்ந்தே இருக்கும் பட்சத்தில் அம்மொழியைக் கற்பது தவிர வேறென்ன வழி?

முதலில் எதிர்த்தாலும் போக்கிடமில்லாமல் வந்து சேரத்தான் வேண்டும் என்றும் சிங்கள அரசு நினைத்தது. ஏதோ கணக்குப் போட்டு, சிங்களம் அன்றைக்கு அழிந்துகொண்டிருக்கும் மொழி என்றும் ஒரு புலம்பல் பாடல்இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. வாழவைக்க வேறு வழியேது? எனவே சிங்களம் மட்டும்.

அரசுக்கு எதிரான தமிழர்களின் அந்த முதல் எதிர்ப்பு என்பது அற வழியில்தான் ஆரம்பித்தது. சத்தியாகிரகம். செல்வநாயகம் தலைவராக இருக்கும்போது வேறு வழிகள் குறித்துச் சிந்திக்க இயலாது. அதற்கான அவசியமும் அப்போது உருவாகியிருக்கவில்லை என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

எனவே, கொழும்புவில் நாடாளுமன்றத்துக்கு எதிரே அறப்போரைத் தொடங்கினார்கள். பதிலுக்குக் கருங்கற்கள் பறந்துவந்தன.

அடித்தது யார், தூண்டியது யார், நாடாளுமன்ற வளாகக் காவலர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருப்பதில் பொருளில்லை. சரமாரியாக வந்து தாக்கிய கற்கள் பல தமிழர்களின் தலையைப் பதம் பார்த்தன. ரத்தப் பெருக்குடன் விழுந்தவர்கள் மேலும் மேலும் தாக்கப்பட்டார்கள்.

ஒரு பதில் தாக்குதல், தொடர்ந்து ஒரு பெரும் கலவரம் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். துரதிருஷ்டவசமாக அது நடக்காதபடியால் மேலும் சினமடைந்து தங்கள் தாக்குதலின் எல்லைகளை விஸ்தரித்தனர்.

தமிழர் வாழும் பகுதியெங்கும் பரவலாகத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. கோயில்கள் தாக்கப்பட்டன. குடியிருப்புகளில் புகுந்து வலுக்கட்டாயமாக மக்களை இழுத்துப்போட்டு அடித்து நொறுக்கிய சம்பவங்களும் அரங்கேறின. தப்பியோடிய பலரைத் தேடி இழுத்து வந்து அடித்தார்கள்.

முதன் முதலாக, எந்தத் தமிழரை அடித்தாலும் காவல் துறை கைது செய்யாது, வழக்குப் போடமாட்டார்கள், அனுமதியுள்ளவரை அடித்துத் தீர்க்கலாம் என்பது சிங்கள வன்முறையாளர்களுக்குத் தெரிந்த சம்பவம் அது. எனவே, விளையாடிப் பார்க்கும் மனோபாவமும் அவர்களது வெறியில் கலந்திருந்தது. தமிழர்கள் மீதான பலநாள் வன்மத்துக்கு முதல் முறையாக ஒரு வடிகால் கிடைத்த திருப்தி சேர்ந்துகொள்ள, தேசமெங்கும் தமிழர் பகுதிகளில் இந்த அநாகரிகம் தடையற்று அரங்கேறியது.

பண்டாரநாயகாதான் இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார் என்றபோதிலும், அன்றைய சூழலில் பெரும்பாலான இலங்கை அரசியல்வாதிகள் தமக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தால் முதலில் செய்யவேண்டிய வேலை என்று இதைத்தான் மனத்தில் வைத்திருந்தார்கள். சிங்கள மக்களையும் புத்தபிக்குகளையும் திருப்திப்படுத்துவது என்பதைத் தாண்டி, தமிழர்களை ஒதுக்கி ஓரம் கட்டுவது என்கிற அணையாத வன்மத்தின் வெளிப்பாடே இது.

நீ அரசு ஊழியனா? உனக்குக் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். தெரியாதா? கற்றுக்கொள். கற்றுக்கொள்ள மாட்டாயா? உனக்குப் பதவி உயர்வு கிடையாது. சம்பள உயர்வு கிடையாது. ரொம்ப எதிர்க்கிறாயா? வேலையே கிடையாது.

நடந்தது. இப்படித்தான் செய்தார்கள். மட்டுமல்லாமல், பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் சிங்களம் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. கல்வி முழுதும் சிங்கள வழியே என்று சொல்லப்பட்டது. தமிழ்ப் பள்ளிகள் அனைத்திலும் சிங்களம் போதிக்கும்படி சர்க்குலர் அனுப்பினார்கள். மறுத்தால் பள்ளி நடத்த அனுமதி ரத்து. தவிரவும் புதிய தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் எதுவும் திறக்க முடியாதவாறு பார்த்துக்கொள்ள சிறப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

இன்னொரு காரியமும் கவனமாக மேற்கொள்ளப்பட்டது. சட்டம் அமலான உடனேயே பள்ளிப் பாடப்புத்தகங்களில் சில விசேஷப் பாடங்கள் சேர்க்கப்பட்டன. இலங்கையின் வரலாறு. அது சிங்களர்களின் தேசம். பூமி தோன்றிய தினத்திலிருந்து சிங்களக் கொசுக்கள், சிங்களக் கரப்பான்பூச்சிகள், சிங்களப் பசுக்கள் மற்றும் சிங்கள மொழி பேசும் மக்கள்தான் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். தமிழர்கள் இடையில் எப்போதோ வந்து ஒட்டிக்கொண்டவர்கள். எனவே அவர்கள் இரண்டாம் குடிமக்கள். சிங்கள அரசு மிகவும் பெருந்தன்மையுடன் அவர்களும் வாழ்வதற்கு அனுமதித்திருக்கிறது. இதைப் பாராட்ட வேண்டாமா? கொண்டாட வேண்டாமா? மும்முறை வலம் வந்து விழுந்து சேவித்து எழவேண்டாமா?

தமிழ் மாணவர்கள் மத்தியில் தாங்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்தான் என்னும் எண்ணத்தை அழுத்தந்திருத்தமாக ஏற்படுத்துவதற்கென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது. எதிர்ப்பு, வெறுமனே அரசியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமானதாக இருந்தது.

ஏராளமான ஊர்வலங்கள், பேரணிகள், சத்தியாகிரக வழிமுறைகள்.

எல்.எச்.மேதானந்தா என்பவர் அப்போது சிங்கள மொழிப் பாதுகாப்புப் பேரவை என்னும் அமைப்பின் தலைவராக இருந்தார். இந்த அமைப்பினர், சத்தியாகிரகத்தில் ஈடுபடும் தமிழர்களை அடித்து நொறுக்குவது ஒன்றே சிங்களப் பாதுகாப்புக்குச் சிறந்த வழி என்று கருதினார்கள்.

சொல்லிக்கொண்டே போவதில் பொருளில்லை. தமிழர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்றால், சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் கட்சி வேறுபாடு பார்ப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணத் தொடக்கமாக அமைந்தது.

ஆனால் எந்த விதமான தாக்குதலுக்கும் தமிழர்கள் தரப்பில் மனச்சோர்வு ஏற்படவில்லை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். தொடர்ந்த அவர்களது போராட்டங்களின் விளைவால், வேறு வழியில்லாமல் பண்டாரநாயகா சற்றே இறங்கி வந்தார். சரி, பேசலாம்.

1956-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி பண்டாரநாயகாவுக்கும் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பண்டா – செல்வா ஒப்பந்தம் என்று இதனைச் சரித்திரம் சொல்லும்.

சிங்களம் மட்டும் சட்டத்தில் அதிகம் கைவைக்காமல் தமிழுக்கு ஓர் ஓரத்தில் சிறு இடம் கொடுக்க ஒரு முயற்சி. சிறுபான்மையினர் மொழி என்பதாக. தவிரவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் (தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இவை) அரசு அலுவலகங்களில் தமிழும் பயன்படுத்தப்படலாம் என்னும் நிலையை எட்டுவதற்கான முயற்சியாக அந்த ஒப்பந்தம் அமைந்திருந்தது.

அடக்கடவுளே! இதென்ன அக்கிரமம்? என்ன ஆயிற்று பண்டாரநாயகாவுக்கு? கூப்பிடுங்கள் புத்த பிக்குக்களை.

அது அவர் எதிர்பாராதது. தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்காக, பிரியாணி பொட்டலம்கூடக் கேட்காமல் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்த்த புத்தபிக்குகள் எல்லோரும் பண்டாரநாயகாவின் வீட்டு வாசல்முன் உண்ணாவிரதத்தில் அமர்ந்தார்கள்.

வெட்கமாக இல்லை? கேவலம் தமிழர்களுக்கு பயந்துவிட்டாய். அவர்களுடைய சத்தியாகிரகத்துக்கு அடிபணிந்துவிட்டாய். நீயெல்லாம் ஆண்மகனா? வீரமில்லையா? உடம்பில் ஓடுவது என்ன ரத்தம்? சுத்த சிங்கள பிராண்ட் என்றால் இப்படியா செய்திருப்பாய்? உனக்காகவா தேர்தல் வேலைகள் செய்தோம்? இதற்காகவா உன்னை ஆட்சியில் உட்கார வைத்தோம்?

பிக்குகள் மட்டுமல்ல. பண்டாரநாயகாவின் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த நிலைத் தலைவராக அப்போதிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, இந்தச் சந்தர்ப்பத்தைத் தனது அரசியல் கிராஃபில் மேலே ஏறுவதற்கான ஒரு சரியான சந்தர்ப்பமாகக் கருதினார்.

என்ன செய்யலாம்?

ஆ, பாதயாத்திரை! சரித்திரம் தோறும் பல சாகசக்காரர்களுக்கு உதவிய வழிமுறை. காந்தி வழிதான் என்றாலும் காத்திரமான வழி. தேசம் முழுதும் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால், இதனைக் காட்டிலும் சிறந்த வழியில்லை.

உண்ணாவிரதம் உட்காரலாம். பிரச்னையில்லை. ஆனால் ஒழியட்டும் சனியன் என்று ஆரஞ்சு ஜூஸ் கூடக் கொடுக்காமல் சாகடித்துவிடும் அபாயம் இருக்கிறது. தர்ணா செய்யலாம். ஆனால் ஒரே கட்சியில் இருந்து கொண்டு அப்படியெல்லாம் செய்வது ரசாபாசமாகிவிடும். பாதயாத்திரை என்றால் பிரச்னையே இல்லை. நடந்துகொண்டே இருக்கும் கணங்களில் எல்லாம் செய்தியில் விழுந்துகொண்டே இருக்கலாம்.

வேண்டியது அதுதான். மக்கள் கவனிப்பார்கள். மதிக்கத் தொடங்குவார்கள். பண்டாரநாயகாவுக்கு அப்புறம் என்று யோசிக்க ஒரு வேளை வரும்போது, தயங்காமல் தன் பெயரை நினைவுகூர்வார்கள். சரித்திரம் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருப்பெற ஒரு சந்தர்ப்பம்!

ஜெயவர்த்தனா முடிவு செய்தார். பாத யாத்திரை. குறுகிய தூர யாத்திரையல்ல. நீதி கேட்டு நெடும்பயணம். கண்டி முதல் கொழும்பு வரை. போதாது?

அது ஒரு சிறப்பான முடிவு என்று காலம் பிறகு தீர்ப்பு வழங்கியது அவருக்கு. கண்டியில் அவர் பாதயாத்திரை தொடங்கியபோது உடன் வந்த கூட்டம், ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் அதிகரித்துக்கொண்டே போனது.

சிங்கள மொழி உணர்வு என்பதை தேசிய உணர்வாக்கப் பலபேர் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், ஓர் ஆதிக்க உணர்வாக அழுத்தந் திருத்தமாக அதனை மக்கள் மனத்தில் பதியச் செய்வதுதான் ஜெயவர்த்தனாவின் நோக்கமாக இருந்தது.

நாம் ஆளப் பிறந்தோம். நமது மொழிதான் தேசிய மொழி. இரண்டாவது மொழி என்கிற பேச்சுக்கே இடமில்லை. இன்னொருத்தனுக்கு சிறு துளியேனும் இடமளிக்க அவசியமில்லை. இது நம் மண். இது நம் மொழி. ஒண்ட வந்தவர்களை ஒதுக்கித் தள்ளு.

உலகம் முழுதும் சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் சிறுபான்மையினரிடமிருந்துதான் கோஷங்களும் கோரிக்கைகளும் போராட்டங்களும் பெரும்பாலும் புறப்படும். குரல்வளை நசுக்கப்படுவதும் அங்கேதான்.

முதன் முதலாக, பெரும்பான்மை மக்கள் வஞ்சிக்கப்படுவதாக ஒரு மாயையை உருவாக்கிப் படரவிட்டு, அதை ஒரு வன்மப் பெருநெருப்பாகப் பரிமாண வளர்ச்சி கொள்ளச் செய்ததில் சிங்கள அரசியல்வாதிகளுக்கு நிகரென்று யாரையுமே சொல்லமுடியாது.

ஜெயவர்த்தனாவின் அன்றைய நடைப்பயணம் என்ன சாதித்தது?

சுலபம். பண்டாரநாயகா, தாம் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அறவே தலைமுழுகினார்.

மன்னித்துவிடுங்கள். தெரியாமல் செய்துவிட்டேன். எனக்குச் சிங்களர்கள்தான் முக்கியம். அவர்களுடைய உணர்வுகள்தாம் முக்கியம். புத்தபிக்குகளைக் காட்டிலும் முக்கியமானவர்கள் வேறு இல்லை. பதவி எல்லாவற்றைக் காட்டிலும் அதி முக்கியம். ஆகவே, திரு. செல்வநாயகம், உமக்குப் பன்னிரண்டு திருமண் சாற்றுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். தங்கள் உண்மையுள்ள..

17

18.01.09 தொடர்கள்

காந்திக்கு தண்டி யாத்திரை. ஜெயவர்த்தனாவுக்குக் கண்டி யாத்திரை. அடக்கடவுளே. விட்டால் இவரையும் மக்கள் மகாத்மா என்று சொல்லிவிடுவார்களோ? அன்றைய பண்டாரநாயகாவின் அமைச்சரவையில் இருந்த பிற அமைச்சர்களுக்கே இந்தக் கவலை வந்துவிட்டது. ஏதாவது செய்தாக வேண்டும். ஜெயவர்த்தனாவின் யாத்திரையின் விளைவாக மட்டும் பண்டாரநாயகா தனது ஒப்பந்தத்தைக் கிழித்துப் போட்டுவிட்டால் வேறு வினையே வேண்டாம். எல்லா புகழும் ஜெ.வுக்கே. இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டிருக்க பைத்தியமா பிடித்திருக்கிறது அமைச்சர் பெருமக்களுக்கு?

விட்டேனா பார் என்று, அவர்கள் தம் பங்குக்கு இன்னொரு எதிர்ப்பு நடவடிக்கைக்குத் திட்டம் தீட்ட ஆரம்பித்தார்கள்.

ஜெயவர்த்தனா மாதிரி ஊர்வலம்தான் சரி. சுற்றிலும் அழகு சேர்க்க புத்தபிக்குகள். நடுவே நடந்து வரும் அமைச்சர்பிரான்கள். ஆனால் ஏதேனும் ஒரு வித்தியாசம் வேண்டும். ஜெயவர்த்தனா நினைத்துப் பார்த்திராதது. மக்களைப் புருவம் உயர்த்தச் செய்யக்கூடிய விதமாக. பண்டாரநாயகா பதைத்துப் போகும் தரத்தில்.

ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தார்கள். சவப்பெட்டி ஊர்வலம்!

பண்டா – செல்வா ஒப்பந்தப் பிரதி ஒன்றை எடுத்து ஒரு சவப்பெட்டியில் போட்டு மூடுவது. அதை இழுத்துக்கொண்டு பண்டாரநாயகாவின் வீட்டு வாசலுக்கு வந்து ஒப்பாரி வைப்பது. பிறகு சவத்தை எரிப்பது.

சவப்பெட்டி கலாசாரத்துக்குள் புகுந்தால் புதைப்பதுதான், எரிப்பதில்லை என்பதெல்லாம் முக்கியமில்லை. இது காட்சி அரசியல். எனவே, அதன் தீவிரத்தில் எள்ளளவும் சமரசத்துக்கு இடமில்லை.

புறப்பட்டார்கள். சில அமைச்சர்கள். பின்னணியில் நிறைய புத்தபிக்குகள். பின் தொடரும் நிழலின் குரலாக ஏராளமான தொண்டர்கள். ஆர்வம் மேலிட்டு ஊர்வலத்தில் பங்குகொண்ட பொதுமக்கள்.

பண்டாரநாயகாவை இன விரோதியாகச் சித்திரித்துக் கோஷங்கள் எழுந்தன. துண்டுப் பிரசுரங்கள் பறந்தன. அனல் வீசும் மேடைப்பேச்சுகள். ஆதரவாளர்களின் கைதட்டல்கள். தேசம் முழுதும் திரும்பி நின்று வேடிக்கை பார்த்தது.

பண்டாரநாயகாவுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தன் வீட்டு வாசலில் சவப்பெட்டியில் வைத்து எரிக்கப்பட்ட ஒப்பந்தப் பிரதியையே பார்த்துக்கொண்டிருந்தார். தன் அரசியல் எதிர்காலம் இத்துடன் ஒரு முடிவுக்கு வந்துவிடுமோ என்ற கவலை அவரைப் பற்றிக்கொண்டது.

கையெடுத்துக் கும்பிட்டார். ஐயா மன்னியுங்கள். பிக்குகளே மன்னியுங்கள். தொண்டர்களே, தோழர்களே, ரத்தத்தின் ரத்தமான சிங்கள உடன்பிறப்புகளே மன்னியுங்கள். ஏதோ பலவீனமான தருணத்தில் செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இந்தக் கணமே அதைத் தலை முழுகினேன். என்னை நம்புங்கள். இதையேதான் ஜெயவர்த்தனாவுக்கும் சொன்னேன். உங்களுக்கும் சொல்கிறேன். என்னை நம்புங்கள்.

பண்டாரநாயகாவுக்கு எதிரான போராட்டங்கள் அத்துடன் ஒரு முடிவுக்கு வந்தன. ஆனால், அந்தச் சம்பவம் தமிழர்களுக்குப் பல உண்மைகளை மிகத் தெளிவாக விளக்கிவிட்டன.

எக்காலத்திலும் சிங்கள அரசு தமிழர்களுக்குச் சாதகமான எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காது என்பது அவற்றுள் முதலாவது. சிங்கள அரசியல்வாதிகளுள் நியாய தர்மம் பார்க்கக்கூடியவர்களென்று யாருமில்லை என்பது அடுத்தது. மெஜாரிட்டி சிங்கள மக்களிடையே தமிழர்கள்பால் சற்றேனும் அன்போ, சகோதரத்துவமோ இல்லை என்பது மூன்றாவது. இனி தொட்டதற்கெல்லாம் தாங்கள் போராடித்தான் தீரவேண்டியிருக்கும் என்பது நான்காவது.

இந்த ஒப்பந்த மீறல் சம்பவம் ஓர் அப்பட்டமான அரசியல் துரோகம். அன்றைக்கு பண்டாரநாயகா எதிர்ப்புகளுக்குப் பணியாது இருந்திருந்தால், சிங்கள மக்கள் மிகச் சிறிய அளவேனும் யோசித்திருக்கக் கூடும். எதிர்த்து ஒரு சத்தம் போட்டதுமே தொடைநடுங்கிப் போனதன் காரணமாக, தமிழர்களுக்குச் சாதகமாக எந்த ஒரு விஷயத்தையும் எக்காலத்திலும் அனுமதிக்கவே கூடாது என்னும் எண்ணம் மிக ஆழமாக அவர்கள் மனத்தில் வேரூன்றக் காரணமாகிப் போனது.

இத்தனை பிரச்னைகளுக்கும் காரணமான அந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தில் தமிழினத்துக்குத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தூக்கிக் கொடுத்துவிடக்கூடிய மாபெரும் அம்சங்கள் ஏதேனும் இருந்ததா என்றால், அதுதான் இல்லை! சொற்பமான சமாதானங்கள். அற்பமான சமரசங்கள். மிகச் சுருக்கமாக ஒப்பந்தத்தின் சாரத்தை இங்கே பார்த்துவிடுவோம்.

றீசிங்களம்தான் தேசியமொழி. இதில் சமரசமில்லை. சட்டத்தை மாற்றுவதற்கில்லை.

றீ தேசிய சிறுபான்மையோர் மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்படும். ஆனால், இது அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்துத் தளங்களிலும் ஆளும் மொழியாக சிங்களம் இருப்பதைப் பாதிக்காது.

றீவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் ஆளும் மொழியாகத் தமிழ் அங்கீகரிக்கப்படும்.

றீதமிழர்களின் பகுதியான இந்த இரு மாகாணங்களில் வசிக்கும் தமிழர் அல்லாதோருக்கு இதனால் எவ்வித பாதிப்பும் இருக்கலாகாது.

றீ மலைத்தோட்டத் தொழிலாளர்களுக்கு (இந்தியாவிலிருந்து சென்றவர்கள்) குடியுரிமை அளிப்பது பற்றிப் பரிசீலனை.

றீ வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு வரி விதிக்க, கடன் வாங்க அனுமதி.

றீ குடியேற்றத் திட்டங்கள் தொடர்பான முடிவுகளை மாகாண சபை எடுக்கும்.

இவை தவிர இன்னும் ஒன்றிரண்டு அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்தன. என்ன இருந்து என்ன? சவப்பெட்டிதான்.

எனவே, தமிழர்கள் தமது போராட்டத்தைத் தொடங்கினார்கள். போராட்டம் என்றால் பொதுக்கூட்டம் என்று பொருள். சத்தியாகிரகம் என்று அர்த்தம். கோஷங்கள், புலம்பல்கள், கோரிக்கை மனுக்கள், உண்ணாவிரதங்கள், கட்டுரைகள், துண்டுப் பிரசுரங்கள், துயரத் தீர்மானங்கள்.

இவை ஒருபுறமிருக்க, இந்த ஒப்பந்த நாடகச் சம்பவத்துக்குப் பிறகு சிங்கள மக்களிடையே தமிழர் விரோத மனப்பாங்கு மிகத் தீவிரமடையத் தொடங்கியிருந்தது. யூதர்களை ஹிட்லர் பார்த்ததற்கு ஒப்பாக இதனைச் சொல்ல முடியும். இந்தக் காரணமற்ற விரோத மனோபாவம் மிகக் குறுகிய காலத்தில் தனது அடுத்த பரிமாணத்தைத் தொடத் தயாராக இருந்ததை, அந்நாளைய சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் அறிவார்கள்.

தமிழர் தலைவர்களுக்கும் தெரிந்தேதான் இருந்தது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? அமைதி வழியில் போராட்டம் என்று செல்வநாயகம் சொல்லியிருந்தார். அவர் அதில் மிக உறுதியாக இருந்தவர். அன்றைய தேதியில் இலங்கைத் தமிழர்களின் ஒரே பெரிய தலைவர் அவர்தான் என்பதால், ஒரு பிரச்னை என்று வருமானால் எதிர்த்து ஆயுதம் ஏந்தலாமா என்று கேட்கக்கூட யாருக்கும் திராணியில்லை.

ஆனால் ஒன்று நிச்சயம். பிரச்னை வரும். மிகப் பெரிதாகவே வரும். அதன் கோர முகம் எப்படி இருக்கும் என்பதுதான் தெரியாத ஒரே விஷயம். காத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எந்தக் கணத்திலும் மோதல் வெடிக்கலாம், விபரீதம் விளையலாம், கலவரம் சூழலாம் என்பது மாதிரியே நிலவரம் இருந்தது. அப்படியொரு சூழல் வராமல் தடுப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையிலும் பண்டாரநாயகாவின் அரசு இறங்கவில்லை. ஒரு பக்கம் புத்தபிக்குகள் தங்கள் மடாலயங்களை விட்டு வெளியே வந்து மக்கள் மத்தியில் பேசத் தொடங்கியிருந்தார்கள். சிங்களர், தமிழர் வேறுபாடுகள். தங்கள் இனத்தின் மேன்மையும் உன்னதங்களும். தமிழனைப் பார்க்காதே. தமிழனுடன் சேராதே. தமிழனை அண்டவிடாதே. நீ இடத்தைக் கொடுத்தால் அவன் மடத்தைப் பிடுங்குவான்.

இன்னொரு பக்கம் அரசியல் கட்சிகள் தங்கள் சுயலாபத்துக்காக இதையே இன்னொரு விதமாகப் பிரசாரம் செய்துகொண்டிருந்தன. வர்த்தகத் துறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தமிழர்களைச் சுட்டிக்காட்டி, உங்களுக்கு ரோஷமில்லையா, மானமில்லையா, வக்கில்லையா, வழியில்லையா என்று திரும்பத் திரும்பப் பொதுக்கூட்டங்கள் தோறும் சிங்கள மக்களை அவர்கள் தூண்டிக்கொண்டிருந்தார்கள். அரசுத் துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த யாழ்ப்பாணத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் வீதியில் அலைந்துகொண்டிருக்க, தமிழர்கள் எத்தனை சொகுசாக வாழ்கிறார்கள் பாரீர் பாரீர் என்று கோலி சோடா குடித்துவிட்டு முழங்கினார்கள்.

தோதாக சிங்கள மீடியா இத்தகைய சொற்பொழிவுகளையெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து வெளியிட்டு, துவேஷத்துக்கு பெட்ரோல் ஊற்றத் தொடங்கியது. வெகு சாதாரண நாலாம்தர அரசியல்வாதிகளின் பொதுக்கூட்டங்களுக்கெல்லாம் கூட நாளிதழ்களில் முக்கியத்துவம் கிடைத்தன. இதில் கட்சி வேறுபாடுகளே கிடையாது. ஆளும் கட்சிப் பேச்சாளர் சொற்பொழிவானாலும் சரி, எதிர்க்கட்சிப் பேச்சாளர் சொற் பொழிவானாலும் சரி. தமிழர்களைத் தாக்குகிறார்களா? போடு முதலில்.

பலன் வெகு சீக்கிரத்தில் கிடைத்தது.

அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களை உள்ளடக்கிய இலங்கையின் வட மத்திய மாகாணப் பகுதியில் உள்ள பொலன்னறுவை என்கிற நகரத்தில் முதன் முதலாகக் கலவர நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.

சோழர் காலத்தில், தலைநகரமாக விளங்கிய இடம் அது. கி.பி. 13-ம் நூற்றாண்டு வரை பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு பல சிங்கள மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். இலங்கை புதைபொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு வெகு முக்கியமான களம். தோண்டத்தோண்ட, பல சரித்திரப் பொக்கிஷங்கள் அகப்பட்டுக்கொண்டே இருக்கும் பூமி. உலகப்புகழ் பெற்ற உறங்கும் புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது பொலன்னறுவையில்தான்.

புத்தர் உறங்கிக்கொண்டிருந்த ஒரு பொழுதில்தான் அங்கே 1958_ம் ஆண்டு கலவரம் வெடித்தது. இனக்கலவரம்.

இத்தனைக்கும் ஒப்பீட்டளவில் அந்தப் பகுதியில் மக்கள் அடர்த்தி குறைவு. குறிப்பாகத் தமிழர்கள் குறைவு.

அதனாலென்ன? கொளுத்திப் போட ஓரிடம் வேண்டும். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அது இருப்பதில் தவறொன்றும் இல்லையே?

இன்னதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. பொலன்னறுவையில் இனக்கலவரத்தின் முதல் கல் வீச்சுகள் ஆரம்பித்தன. சட்டென்று அது தீ வைப்புகளாகவும் படுகொலைகளாகவும் கற்பழிப்புகளாகவும் பரிமாண வளர்ச்சி கொண்டது. அடடே, நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நம் ஊரில் இந்தத் திருவிழா வேண்டாமா என்று கொழும்புவில் இருந்த சிங்களர்கள் கவலை கொண்டார்கள்.

அதன்பின் நடந்ததெல்லாம் அழிக்கமுடியாத ரத்த சரித்திரம்.

Categories: Authors, Books Tags: , , , , ,

Read – Nov 24, Monday

November 24, 2008 Leave a comment

1. வாசகசாலையும் போதனா சுதந்திரத்தின் எல்லைகளும்

An Authoritative Word on Academic Freedom – Stanley Fish Blog – NYTimes.com: Stanley Fish discusses the merits of “For the Common Good: Principles of American Academic Freedom,” to be published in 2009 — two distinguished scholars of constitutional law, Matthew W. Finkin and Robert C. Post, that argues that academic freedom should be seen in the context of practical sense.

2. இராக்கிற்கு சுதந்திரம் கொணர்ந்த அமெரிக்காவும் இந்தியாவிற்கு விடுதலை தந்த பிரிட்டிஷாரும்

East India Company :: Book Review – ‘The Decline and Fall of the British Empire 1781-1997,’ by Piers Brendon – Review – NYTimes.com

3. பாரிஸ் என்றாலே புகைபிடித்தலுடன் மதுவருந்தல் அல்லவா?

Across France, Cafe Owners Are Suffering – NYTimes.com: “Business at Paris, declined after a smoking ban took effect.”

4. தாய்நாட்டின் குரல் கேட்கிறதா? முதல் தலைமுறையினர் இந்தியாவிற்கு திரும்பினால்?

The World – India Calling – NYTimes.com By ANAND GIRIDHARADAS

5. கத்தாரில் பெரும் பொருட்செலவில் புதிதாகத் திறக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய அருங்காட்சியகம்

Museum of Islamic Art, in Doha, Qatar – NYTimes.com: There is nothing timid about the ambitions of the new Museum of Islamic Art that opens in Qatar next week.

Categories: Tamil Tags: , , , , , , ,