Archive
Paithiyakkaaran on S Ramakrishnan Short Story collection: Tamil Fiction Reviews
Jeyamohan
http://www.jeyamohan.in/?p=6321
ஒரு வாசகன் இலக்கியப்படைப்பில் தான் வாசித்தவற்றைப் பற்றிச் சொல்ல வந்தாலே கேட்கப்படும் மூன்று கேள்விகள் உண்டு .
1. இதையெல்லாம் அந்த எழுத்தாளன் உத்தேசித்திருப்பானா?
2. இதுக்கெல்லாம் அந்த எழுத்திலே இடமிருக்கா
3. இது எனக்கு ஏன் தோணல்லை?
மூன்றுமே இலக்கியத்தை சரிவர உள்வாங்கத் தடையாகும் வினாக்கள்.
மதியம் திங்கள், ஜனவரி 11, 2010
எஸ்.ராமகிருஷ்ணன்: விருட்ச(ங்களின்)த்தின் விதை(கள்)
வாழ்க்கையின் போக்கில் எந்தவொரு சுழலை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதிலிருந்து மீள்வதற்கு கலையின் துணையை நாடுவது மனிதர்களின் இயல்பு. அது நெருங்கிய மனிதர்களின் இறப்பாக இருக்கலாம், பிரிவாக இருக்கலாம், அல்லது காதலை கண்டடைந்த சந்தோஷமாக இருக்கலாம். எப்படியாக இருந்தாலும் அறியப்பட்ட உணர்ச்சியிலிருந்து வெளியேற கலை என்னும் வடிவமே பலவகைகளில் துணையாக இருக்கிறது. இதுகுறித்து பிரியத்துக்குரிய எஸ்.ராமகிருஷ்ணன் என்னிடமும், நண்பர் சுரேஷ் கண்ணனிடமும் புத்தகக் கண்காட்சியில் நீண்ட நேரம் உரையாடினார். இந்த சந்திப்பு குறித்த இடுகையை நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார் என்பதால் இங்கு அதை தவிர்க்கிறேன். ஆனால், முதல் வாக்கியத்திலிருந்துதான் இந்த இடுகை கிளை பரப்பி விரிகிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டியது கடமை.
‘கலை’ என்ற சொல்லுக்கு பின்னால் கவிதை, சிறுகதைகள், புதினங்கள், ஓவியம், இசை, நாடகம்… என பல்வேறு சொற்கள் அடங்கியிருக்கின்றன. இவையெல்லாமே உடலியல் சார்ந்த கலைச் செயற்பாடுகள். நிலையான புள்ளியில் நின்று சாத்தியப்படுவன அல்ல. பல்வேறு திசைகளில், குறிகளற்று பயணிப்பவை. இந்த புரிதலில் இருந்து எஸ்ராவின் சிறுகதைகளை பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
காரணம், தமிழ்ச் சிறுகதை உலகு என்னும் பெருங்கடலில் கலந்த – கலக்கும் – மிகப் பெரிய ஆறு, எஸ்ரா. ஜீவநதிகளை போல், வற்றாமல் சிறுகதைகளை தொடர்ந்து எழுதி வருபவர். இவரளவுக்கு தொடர்ச்சியாக சிறுகதைகளை எழுதி வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். யதார்த்த – அ யதார்த்த – மாந்த்ரீக – வட்டச்சூழல் – என அனைத்து வடிவங்களிலும் புனைவு உலகை பரிசோதனை செய்திருக்கிறார். தொடர்ந்த பங்களிப்பின் வழியே எல்லாவிதமான மன அழுத்த; மனப் போக்கு கொண்டவர்களுக்கும் தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து தருகிறார். அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம். இன்னொரு விதமாகவும் இதையே சொல்லலாம். எஸ்ராவின் சிறுகதைகளுக்குள் எழுதப்படாத நாவல்கள் மறைந்திருக்கின்றன.
எஸ்ராவின் இரண்டு சிறுகதைகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். ‘உறவும் பிரிவும் இன்றி’, ‘தெரிந்தவர்கள்’. இந்த இரு சிறுகதைகளும் 80களில் எழுதப்பட்டவை. சென்னை புக்ஸ் சார்பாக வெளியான ‘வெளியில் ஒருவன்’ தொகுப்பில் இடம் பெற்றவை. இதுதான் எஸ்ராவின் முதல் தொகுப்பு. இன்றைய தேதி வரை நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளை எஸ்ரா எழுதியிருக்க, ஆரம்பக்கால இந்த இரு புனைவுகளை மட்டுமே இந்த இடுகை ஏன் கணக்கில் எடுக்க வேண்டும்?
தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
இது வாசகனின் பார்வையில் எழுதப்பட்ட இடுகை. விமர்சனம் அல்லது திறனாய்வு என்னும் வார்த்தைகளுக்குள் அடங்காது.
இந்த இரு புனைவுகளுமே ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் மூன்றெழுத்து தரும் உணர்ச்சியை அடிநாதமாக கொண்டவை.
‘உறவும் பிரிவும் இன்றி’ சிறுகதையில் தயாளன் – கதிரேசன் என இருவர் வருகிறார்கள். இருவரும் உறவுக்காரர்கள். தயாளனின் தங்கச்சியை கதிரேசனின் தம்பிக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.
தயாளனின் ஊரில் காலியாக ஒரு கடை இருக்கிறது. அதன் உரிமையாளர் மார்டின். தயாளனும் மார்ட்டினும் ஒரே இடத்தில் வேலைப் பார்ப்பவர்கள். எனவே மார்ட்டினிடம் பேசி அந்தக் கடையை தனக்கு எடுத்து தரும்படி தயாளனிடம் வேண்டுகோள் வைக்கிறார் கதிரேசன். அதற்காக முன் பணமாக ரூபாய் ஆயிரத்தை தயாளனிடம் தரவும் செய்கிறார்.
ஆனால், கடையை இன்னொருவரிடம் தர மார்ட்டினுக்கு விருப்பமில்லை. தானே நடத்தப் போவதாக சொல்கிறான். எனவே கதிரேசனிடம் பணம் தருவதற்காக தயாளன் காத்திருக்கிறான். ஆனால், நடுவில் சில எதிர்பாராத தருணங்களால் அந்தப் பணம் செலவாகிவிடுகிறது. கதிரேசன் வந்து கேட்கும்போது தயாளனிடம் பணமில்லை. பிறகு தருவதாக சொல்கிறான். ஆனால், ஒவ்வொரு முறை கதிரேசன் பணம் கேட்கும்போதும் இதே நிலையே தொடர்கிறது. தயாளனிடம் பணம் இல்லாத நேரமாக கதிரேசன் வருகிறார். ஒரு கட்டத்தில், நடுத்தெருவில் இருவருக்கும் கை கலப்பு ஏற்படுகிறது.
கதை என்று பார்த்தால் இவ்வளவுதான். ஆனால், அதை பிரம்மாண்டமான உணர்வாக மாற்றிவிடுகிறார் எஸ்ரா.
சிறுகதையின் ஆரம்பம், கிழிந்த சட்டையுடன் தயாளன் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவதிலிருந்து ஆரம்பிக்கிறது. நாலாவது பத்தி, இப்படி வருகிறது:
”கதிரேசன் மச்சானை அடித்திருக்கக் கூடாது என்றுதான் தோன்றியது. அவர்தான் முதலில் அடித்தார். என்றாலும், அவன் அடித்தது போல் அவர் அடிக்கவில்லை. அப்போது அவனுக்கு ஏக கோபமாயிருந்தது. அவர் சட்டையைப் பிடித்து இழுத்ததும் பின்வாங்கத்தான் செய்தான். அவர்தான் கன்னத்தில் அறைந்தார்.”
7வது பத்தியின் ஆரம்பம் இது: ”கதிரேச மச்சான்தான் எவ்வளவு நல்லவர் என்று தோணியதும் மனதுக்குள் ஏதோ செய்தது.”
தயாளன் – கதிரேசன் ஆகிய இருவர் மீதும் தவறோ குற்றமோ இல்லை. சந்தர்ப்பங்கள் அப்படி அமைந்துவிட்டன என்பதை கதைச்சொல்லி முதலிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார்.
கடை வேண்டும் என முன்பணமாக ரூபாய் ஆயிரத்தை கதிரேசன் தரும் இடம் நுட்பமானது. ”மஞ்சள் பைக்கட்டில் இருந்து ரூபாயை எடுத்தார். பாதிக்கு மேல் பழைய தாள்கள். அஞ்சும் பத்துமாக எண்ணி நூல் போட்டுக் கட்டியிருந்தார்…”
தயாளனின் பார்வையில் செல்லும் இந்தக் கதையில் கதிரேசன் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, அவரது மனைவியும் குழந்தைகளும் தரும் பாதிப்பு அதிகம். இத்தனைக்கும் அவர்கள் புனைவில் அதிகம் வருவதில்லை. சொல்லிக் கொள்ளும்படியான உரையாடல்களும் அவர்களுக்குள் இல்லை. ஆனால், வாசகனா(கியா)ல் அதை எப்படி வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ள முடியும்.
கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்றால் குடும்பம் வறுமை. கதிரேசனின் மனைவி நூல் கட்டி மோதிரத்தை அணிந்திருக்கிறாள். ஏழைகள். பணம் அவசியம். அது கிடைக்காதபோது கதிரேசன் தன் குடும்பத்தை எப்படி எதிர் கொண்டிருப்பார்? அவர் மனைவி வார்த்தைகளால் அவரை எப்படி துளைத்திருப்பாள்? குழந்தைகளின் பசியை எப்படி அவள் போக்கியிருப்பாள்? உறவினரிடம் தன் கணவன் பணம் கொடுத்து ஏமாந்துவிட்டான் என்பதை எப்படி எதிர்கொண்டிருப்பாள்?
தயாளனின் மனைவியும் கதையில் அதிகம் வரவில்லை. ஆனால், அவளது மருத்துவத்துக்காகத்தான் தயாளன் அந்தப் பணத்தையே செலவு செய்திருந்தான். எனில், தயாளனின் மனைவிக்கு இந்த விஷயம் தெரியுமா? கதிரேசனுக்கு பணத்தை திருப்பித் தந்துவிடுங்கள் என ஒருமுறைக் கூட அவள் சொன்னதில்லையா? குடும்பச் செலவை குறைத்து பணத்தை சேமித்து கதிரேசனுக்கு திருப்பித் தர ஏன் முயற்சி செய்யவில்லை?
இப்படி தொடரும் கேள்விகளுக்கு வாசகன் விடை தேடிக் கொண்டே செல்லும்போது எழுதப்படாத ஒரு நாவலை தன்னையும் அறியாமல் எழுத ஆரம்பிக்கிறான். தன் பிரதிகளின் வழியே அளவில் சிறியதான சாவியை எடுத்து எஸ்ரா தருகிறார் என்று குறிப்பிடுவது இதனால்தான். சிறுகதைகளுக்குள் நாவலை மறைத்து வைத்திருக்கும் ரகசியம்.
‘தெரிந்தவர்கள்’ சிறுகதை நண்பர்களுக்கு இடையிலானது.
வெளிநாட்டில் வேலைப் பார்ப்பவன் மணி. சம்பாதிக்கும் பணத்தை கதிருக்கு அனுப்புவான். கதிர் அதை மணியின் வீட்டில் தருவான். கடைசியாக மணி அனுப்பிய ரூபாய் பத்தாயிரத்தை கதிர் அவன் வீட்டில் தரவில்லை. தன் தங்கையின் திருமண செலவுக்கு அதை பயன்படுத்திக் கொண்டான். இப்படி செலவு செய்துவிட்டேன் என்பதையும் மணியிடம் கதிர் சொல்லவில்லை.
இச்சிறுகதை வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் மணியின் பார்வையில் விரிகிறது. பிரதி முழுக்க அவன், அவன் என்றே வரும். இறுதியில்தான் மணி என்னும் பெயருடன் அவன் இருப்பான். அதேபோல் வெளிநாடு என எங்கும் குறிப்பிடப்பட்டிருக்காது. முதல் பத்தி, இப்படி ஆரம்பிக்கிறது:
”காலையில்தான் வந்திருந்தான். ஸ்டேஷனை விட்டு வெளியே வரும்போது குளிர் அதிகமாக இருந்தது காலையில். இந்தக் குளிர்க் காற்று கூட இங்கே அதன் இயல்பில் இருப்பதாகப்பட்டது. அவன் இருந்த இடத்தில் கடுங்குளிர், கடுமையான வெப்பம்.”
இறுதியில் இப்படி வருகிறது.
”நான் அனுப்பின ரூவா என்னாச்சு?”
பதில் சொல்லவில்லை.
”வரலையா?”
”வந்துச்சு.”
”என்ன செஞ்சே?”
”திடீர்னு கல்யாணம் பண்ண வேண்டியிருந்ததால செலவு ஆகிப் போச்சு. அப்பாவுக்கு வர வேண்டிய இடத்தில பணம் வரலே…”
”அதை எனக்கு எழுதியிருக்கலாம்ல. இல்ல வீட்ல பணத்தைக் கொடுத்திட்டு கேட்டு வாங்கி இருக்கலாம்ல…”
இப்படியே தொடரும் உரையாடல், இறுதியில் சண்டையில் முடிகிறது.
”உன் பிச்சைக்காசு ஒண்ணும் வேணா. நான் வரேன்” அவன் இறங்கிக் கீழே போனான். புழுதி கலைந்து பறந்தது. மணி எழுந்து நின்று பார்த்தான். கதிர் வேகமாகப் போய்க் கொண்டிருந்தான்.
நுணுக்கமான விஷயங்கள் இந்தக் கதை நெடுக உண்டு. மணியின் மனைவிக்கும், அம்மாவுக்குமான பிரச்னை. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் தம்பியிடம் தனியாக தன் வீட்டுக்கு வரும்படி அக்கா அழைப்பது, ”தனியா உங்கக்கா என்ன பேசினாங்க?” என மனைவி கேட்பது, ”நீங்க ஊர்ல இல்லாதப்ப உங்கக்கா இங்க எட்டிக் கூட பார்த்ததில்ல. உங்கம்மாவும் அவங்க வீட்லயேதான் இருந்தாங்க…”
கதிர் வீட்டு விவரணைகள் அபாரமானவை. மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கதிர், மணி வந்து எழுப்பியதும் மலங்க மலங்க விழிப்பது, மணி பணம் குறித்து கேட்பதற்குள், ”உனக்கு பிடிச்ச மீன் வாங்கிட்டு வரேன்” என சட்டென கீழே இறங்கிச் செல்வது, சாப்பிட்டு முடித்ததும் திருமணமான தங்கசியுடன் வருவதாக சொல்லி மணியை நாசுக்காக அவன் வீட்டுக்கு அனுப்புவது…
எந்த இடத்திலுமே இந்தக் கதையில் ப்ளாஷ்பேக் உத்தி செயல்படவில்லை. மணி – கதிர் நட்பு எப்போது ஆரம்பித்தது, எப்படி மலர்ந்தது என்பதெல்லாம் பிரதி சொல்லவேயில்லை. ஆனால், வாசிப்பவர்கள் அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
கதிரின் தங்கைக்கு மணியும் அண்ணன்தான். சந்தோஷமாக அப்படித்தான் அழைக்கிறாள். மணியின் வீட்டில் பணப் பிரச்னையில்லை. கதிரின் வீட்டில் தேவை அப்படி செய்ய வைத்தது. சொல்லிவிட்டு பணத்தை எடுத்திருக்கலாமே என்பது மணியின் வாதம். எடுத்தாலும் நீ தவறாக நினைக்கமாட்டாய் என்று நினைத்தேன் என்பது கதிரின் தரப்பு.
சரி, கதிர் கேட்டிருந்தால் மணி என்ன செய்திருப்பான்? மணி மறுத்திருந்தால் கதிர் என்ன செய்திருப்பான்?
இப்படியாக விரித்துக் கொண்டே செல்லலாம்.
இன்னொரு மாதிரியாக வாசிப்போம். ‘தெரிந்தவர்கள்’ சிறுகதையில் மணியும், கதிரும் உறவினர்களாக இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்? ‘உறவும் பிரிவும் இன்றி’ தயாளனும், கதிரேசனும் நண்பர்களாக இருந்திருந்தால் செலவான ஆயிரம் ரூபாய் குறித்த விவரணை எப்படி சென்றிருக்கும்? ‘தெரிந்தவர்கள்’ பிரதியில் ஏன் ப்ளாஷ்பேக் இல்லை? ‘உறவும் பிரிவும் இன்றி’யில் ஏன் ப்ளாஷ் பேக் இருக்கிறது?
இந்த சிறு சிறுகதைகளிலும் ஆண்களே முக்கிய பாத்திரங்களாக இருக்கிறார்கள். இதுவே பெண் பாத்திரங்களாக இருந்தால், இந்தச் சூழலை எப்படி எதிர்கொண்டிருப்பார்கள்? வெளிநாட்டில் வேலைப் பார்க்கும் பெண், தன் சிநேகிதிக்கு பணம் அனுப்பி வீட்டில் தரச் சொல்வதைவிட, தானே வீட்டுக்கு பணம் அனுப்பிவிடுவாள் என எளிமையாக இந்தக் கற்பனையை குறுக்கிவிடாமல் இருக்கும் பிரதிக்குள் ஊடுரிவிப் பார்த்தால் எப்படி இருக்கும்?
இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம்.
அதனாலேயே எஸ்ராவின் சிறுகதைகள் அல்லது புனைவுகள், அனைத்து முனைகளிலும் திறந்த தன்மையுடையதாக இருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. ஒவ்வொரு வாசிப்பின் நிகழ்வும் மற்றொரு வாசிப்புக்கான முன்னுரையாக அமைகிறது. இப்படி இவரது ஒவ்வொரு சிறுகதையை குறித்தும் சொல்லிக் கொண்டே போகலாம். அல்லது நாவலாக வாசித்துக் கொண்டே போகலாம்.
நன்றி: ‘எஸ். ராமகிருஷ்ணன் கதைகள்’ – உயிர்மை வெளியீடு.
Nanjil Nadan in Uyirmmai Magazine: உயிர்மை Notes & Writings from and on நாஞ்சில் நாடன்
சேத்தன் பகத்தும், நாஞ்சில் நாடனும்
மணி
புறநகர் பேருந்தின் – இலக்கியப்பதிவு:
சேத்தன் பகத்தின் எழுத்துக்கள் மெட்ரோதன்மையின் இளமைப்பக்கத்தைக் காட்டுகிற நேரத்தில் நாஞ்சில் நாடனின் ‘மொகித்தே’ கதை ஒரு மும்பை தமிழ் சாமான்யனின் அக, புற உலக வாழ்க்கையின் குறுக்குத்தோற்றத்தைக் காட்டுகிறது.
புறநகர்ப் பேருந்தில் பயணம் செய்யும் பயணியின், அதன் பேருந்து நடத்துனருக்குமான கதை. தளவாய் – மும்பாய் பெஸ்ட் – பயணி. தன் குடியிருப்பில் புதிதாய் வசிக்கவரும் மொகித்தே – பேருந்து நடத்துனர்.புதிதாய்க் குடிபுகுந்த வீட்டின் பூசைக்கு மொகித்தே அழைக்கிறான்.தளவாயும், அவன் மனைவியும் சென்று வருகிறார்கள். உறவு துளிர்க்கிறது.
இங்கிருந்து இட்லி போகிறது. அங்கிருந்து காய்கறி பரிவர்த்தனை.மொகித்தே – அவன் போகும் பேருந்துக்கும் நடத்துனராகிறார். ஆனால் அவனிடம் மட்டும் பயணச்சீட்டு வாங்கப்படுவதேயில்லை. தளவாய்க்குக் குற்றவுணர்ச்சி. கவனமாய் உணர்கிறான். இடையில் ஏறும் பரிசோதகர் பற்றிக் கவலை வேறு. நேராய் போய் மொகித்தேயிடம் கேட்கிறார். அவன் திரும்பிக் கேட்கும் கேள்விதான் – கதையின் நாதம்..
” எனக்கு சொந்தக்காரன் ஒருத்தனை எப்ப வேணும்னாலும் எத்தனை மட்டம் வேணும்னாலும் கூட்டிட்டுப் போலாம். கட்டணம் இல்லாமல். ஒரு பய கேக்கமுடியாது.”
” காய் அண்ணாதும்.. ? எனக்கு சொந்தக்காரன் இல்லையா .. நீ.. “
ஒன்றும் பேசமுடியவில்லை தளவாய்க்கு. நமக்கும்தான்.
கதை மெல்லிய நட்புறவையும், சகோரத்துவத்தையும் பற்றியது. மும்பை வாழ்வுக்கும், எழுத்துக்குமிடையேயான இடைவெளியைக் குறைக்கவல்லவை. புலம்பெயர்ந்தவர்களின் கலாச்சாரக் கலப்பின் நல்ல பக்கத்தைக் காட்டக்கூடியவை. இந்த மாதிரி மெல்லிய கதைகள்தான் உண்மை விளிம்புகள் எனப்படுகின்றன.
ஒரு வரியில் உறவுகள் இறுகி, பல்கி உயர்ந்து வானத்தையும் கிழித்து விடுகிறது. எல்லா நல்ல உறவுகள் எல்லாமே இப்படித்தான்.ஆர்ப்பாட்டமில்லாது அமைதியான நீரோடைபோல் தெளிவாய், ஈரமாய் ஓடிக்கொண்டேயிருக்கும். அது சாதி, மொழி தாண்டி உறவின் உணர்வுகள்.மும்பை போன்ற நகரில் புலம்பெயர்ந்து, நம் அக்கம் பக்கங்களில் அத்தகைய உறவுகளின் வாசம் கண்டோர் அதிபாக்கியசாலிகள். அவர்களின் அன்பு உலகங்கள் எல்லையற்றது.
கண்ணுக்குத் தெரியாத நட்பு நூலிழைகளுக்குள் அது இணைந்து விடுகிறது.‘யாதும் ஊரே.. யாவரும் கேளீர் ‘ என்று மேடை போட்டுப் பிளிறும் போலித் தன்மையற்றது அந்த உறவுகள். குறிப்பாய் இத்தகைய உறவுகளில் ‘சாதி‘வெகுவேகமாய்க் காணாமல் போய்விடுகிறது.
‘மொகித்தெ’ எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
மும்பை வாழ்வின் – அப்பட்டமான, நிர்வாண உண்மைகளைப் பதிவு செய்யும் பாசாங்கற்ற வரிகள் கீழேயுள்ளவை.
‘சமயங்களில் வேலை நேரத்துக்கு இணையாக பிரயாண நேரம் அமைந்துவிடும்.”
”வாடகைக்குக் குடியிருப்போரெனில் பதினோரு மாதத்தில் ஒரு முறை சனிப்பெயர்ச்சி“
“இட்லி சாம்பார் என்பது பாற்கடலைக் கடைந்தபோது திரண்டு வந்ததன் சாறு“
காலை அகட்டிவைக்கிற கண்டக்டர், சில்லறையில்லாததால் மராத்திய வசவு, போகும் வழியில் பேப்பேர் படிப்பு, உலகச் சந்தை அரட்டையடிப்பு, ( 40 %வாழ்க்கையைப் பயணத்தில் மும்பைக்காரர்கள் தொலைக்கிறார்கள் –என்கிறது ஒரு கணக்கு.) பயணச்சீட்டு துளையிடும் கருவியின் டிக்..டிக்..ஒலி.. பெஸ்ட் ( BEST) பேருந்தில் பயணம் செய்யும் வரம் பெற்றால் நீங்கள் கண்டிப்பாய் மொகித்தேவைத் தேடவேண்டும்…
எந்த அரசியலும், தலைவர்களும் தரமுடியாத நம்பிக்கையையும்,மகிழ்ச்சியையும் – நம்மைப்போல் புலம்பெயர்ந்தவர்களுக்குக் கொடுத்து, நம் வாழ்க்கையின் இருப்பை அர்த்தமாக்குவான்.
நாஞ்சில் நாடனின் மும்பை பற்றிய சிறுகதைகள், நாவல்கள் பெரும்பாலும் ஊரை நோக்கி எழும் ஏங்கல் பார்வை மற்றும் பழைய ஞாபகக்கிளறல்கள் மட்டும்தான் என்றாலும் ’மொகித்தே’ புறநகர் பேருந்து தமிழ் இலக்கியத்தில் படைக்கப்பட்ட காலம் தாண்டி நிற்கிற – மெட்ரோ சாமான்யன்.
*
கிராமங்கள் கூட மெட்ரோ புறநகரின் பிரதியாக மாறக்கூடிய வேகவளர்ச்சி.எதிர்கால இலக்கியத்தில் கிராம இலக்கியங்கள் புத்தகத்தில் மட்டுமான ஒரு பழைய நினைவாகத்தானிருக்கும் போல. இடம் சார்ந்த இலக்கியத்தின் எதிர்காலம் மெட்ரோ மற்றும் மெட்ரோ புறநகரில்தான் ஒட்டிக் கொண்டிருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது.
அறிவின் பரிமாணங்கள்: நாஞ்சில் நாடனின் வாய் கசந்தது: அ.ராமசாமி
சொல்லில் சுழன்ற இசை
உயிர்மையில் ‘இசைபட வாழ்தல்’ என்ற தலைப்பில் ஷாஜி எழுதிவரும் பத்தியின் முதல் தொகுதி சமீபத்தில் வெளிவந்தது. இதற்கான ஒரு அறிமுகக் கூட்டம் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி சனிக்கிழமை மாலை சென்னை சிதம்பரம் செட்டியார் பள்ளி வளாகத்தில் அமைந்த சிவகாமி பெத்தாட்சி அரங்கில் நடைபெற்றது. இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ரமேஷ் விநாயகம், பாடகர்கள் P.B. ஸ்ரீனிவாஸ், கார்த்திக், எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியை மெஹ்தி ஹஸன் ரசிகர் குழு, Saint Gobain Glass நிறுவனம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது.
நாஞ்சில் நாடன்
இசை இறை அனுபவம் என்று சொல்கிறார்கள். அதை விவரிக்க முடியாது. வேற்று மொழியில் பாடுகிறார்கள் என்று விமர்சிக்கிறார்கள். வாத்தியங்கள் ஊமை மொழியில் தானே பேசுகிறது. தங்கமே தமிழ் பாட்டு பாடு என எளிதாக சொல்லி விட்டு போகிறார்கள். ஆனால் பாடிக்கொண்டிருந்த தமிழ் பாடல்களை என்ன செய்தோம். நாட்டுப்புற ஆய்வாளர் அ.கா.பெருமாள் சொல்வார், குமரி மாவட்டத்தில் அறுபத்து மூன்று வகையான நிகழ்த்துக்கலைகள் இருந்தது என்று. ஆனால் அதில் இப்போது பதினோரு கலைகள் மாத்திரமே எஞ்சியிருக்கின்றன. அடுத்த தலைமுறையில் அதுவும் கூட இல்லாமல் போய்விடலாம் அந்த கலைகளில் பயன்படுத்திய வாத்தியங்களை இனி மியூஸியத்தில் கூட பார்க்க முடியாது. ஷாஜியின் இசை குறித்த இந்நூல் தமிழுக்கு அபூர்வ வரவு.
பாரதி மணி
என் தில்லி வாழ்க்கையை இப்போது அசைபோடும்போது, சில அனுபவங்களில் நான்தான் ஹீரோ என்பதுபோல் எனக்கே தோன்றினால், அதைப்பற்றி எழுதுவதைத் தவிர்த்துவிடுவேன். கட்டுரைகள் என்னைப்பற்றிய சுயதம்பட்டமாக அமைவதில் எனக்கு உடன்பாடில்லை.
என் ஒரே புத்தகமான ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ வெளி வருவதற்கு முன்பு, அதை அச்சுப்பிழைதிருத்துவதற்காக மனுஷ்ய புத்திரன் எனக்கு அனுப்பி யிருந்தார். அப்போது சென்னை வந்திருந்த நண்பர் நாஞ்சில் நாடன் என் வீட்டில் தங்கியிருந்தார்.
என் எல்லாக் கட்டுரைகளையும் மறுபடியும் ஒரே மூச்சில் படித்துமுடித்த அவரிடம், ‘நாஞ்சில், இதில் எங்காவது ஒரு இடத்திலாவது என்னை முன்னிலைப்படுத்தி எழுதியதாக இருக்கிறதா?’ என்று கேட்டேன். அதற்கு ‘இவை உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள். அவற்றில் எப்படி உங்களைத் தவிர்த்து எழுதமுடியும்? தன் புகழ் பாடவே புத்தகம் எழுதும் சிலர் உண்டு. இதில் எந்த இடத்திலும் அதுமாதிரி இல்லை. உங்கள் பரந்துபட்ட தில்லி அனுபவங்களை நேர்மையுடன் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவே நான் நினைக்கிறேன். அதில் நீங்கள் வந்து போவதைத் தவிர்க்கவே முடியாது. அப்படி, இப்படினு ஒங்களப்பத்தி எழுதறதும் ஒரு சுவாரஸ்யமாத்தான் இருக்கு!’ என்று பதிலளித்தார்.
அவர் கொடுத்த தைரியத்தில்தான் இந்தக் கட்டுரையும் உங்கள் கையில் இருக்கிறது!
ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேசமித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது. (நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து)
கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
ஆந்தைக்குத் தூக்கம் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அது பகல் முழுவதும் தூங்கிக் கொண்டேயிருக்கும். ஒரு நாள் ஒரு ஆந்தை மரத்தில் தூங்கிக் கொண்டிருந்தது. மரங்கொத்தி ஒன்று அந்த மரத்தை கொத்தத் துவங்கியது. தூக்கம் கலைந்து ஆந்தை கோபத்துடன் ஏன் மரத்தைக் கொத்துகிறாய் என்று கேட்டது. மரங்கொத்தி என் பசிக்கு மரத்தைச் சாப்பிடுகிறேன். நீ ஏன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறாய் என்று கேட்டது. பதில் சொல்வதற்குள் ஆந்தை கொட்டாவி விட்டுக் கொண்டே மறுபடியும் தூங்கியது. மறுநாள் அந்த மரத்தில் ஒரு தூக்கனாங்குருவி கூடு கட்டியது. அதன் சப்தம் கேட்டு விழித்த ஆந்தை எதற்காகக் கூடு கட்டுகிறாய் என்று கேட்டது.
குருவியும் குளிர்காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டாமா என்றது. ஆந்தை என்னை குளிர் எதுவும் செய்யாது நான் கூடு கட்டத் தேவையில்லை என்று சொல்லிவிட்டு தூங்கிவிட்டது. குளிர்காலம் வந்தது. நட்சத்திரங்கள் கூட நடுங்கத் துவங்கின. மரங்களில் இருந்த கூடுகளில் பறவைகள் அடைந்து கொண்டு விட்டன. ஆந்தை குளிரில் நடுங்கியது. கூடு கட்டுவது எப்படி என்றே தெரியாமல் போய்விட்டோமே என்று கலங்கியது. குளிர் நாளுக்கு நாள் அதிகமாகி ஆந்தையை வாட்டி எடுத்து எப்படியாவது ஒரு கூடு கட்டிக்கொள்ள வேண்டும் என்று ஆந்தை முடிவு செய்தது. குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வந்தது.
ஆந்தை ஒரேயரு நாள் கூடு கட்டுவதற்கு சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மரத்தில் அடுக்கியது. அதற்குள் சோம்பேறித்தனம் அதிகமாகிவிட திரும்பவும் தூங்கத் துவங்கிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆந்தையால் கூட்டைக் கட்ட முடியவில்லை. இது தென் ஆப்பிரிக்காவின் ஒரு பழங்குடியினத்தவரின் கதை.
இதுபோல நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார் எஸ். ராமகிருஷ்ணன்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினத்தவர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு செய்து இந்த தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர்களுக்காக எழுதப்பட்ட நூலாக சொல்லப்பட்டாலும் அனைவரும் படிக்கும்படி மிகவும் சுவாரசியமாக இருக்கிறது இந்த நூல்.ஆக, குழந்தைகளுடைய மகிழ்ச்சிக்காகத் தன் பங்களிப்பை செய்திருக்கின்ற எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நாமெல்லாம் நன்றி சொல்லலாமே.
Kamal & K Viswanath’s Salangai Oli: சலங்கை ஒலி
கமலின் ‘சலங்கை ஒலி’ – திரை விமர்சனம்


பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.

மாதவியாக ஜெயப்ரதா. ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவுக்கும், ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவுக்கும் எவ்வளவு வித்யாசங்கள்? இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? ‘தேவதை’ கதாபாத்திரம். ஆம். பாலு என்ற ஒரு இளைஞனின் திறமையை எப்படியாவது இந்த உலகிற்கு கொண்டு போகவேண்டும் என்று அவனுக்கு உதவுகிறாள் மாதவி. அந்த பாலுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையை போலவே தென்படுகிறாள். ஜெயப்ரதாவின் நடிப்பிற்கு இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை சாம்பிளாக சொல்கிறேன். ‘நாத வினோதங்கள்’ பாடல் இறுதிகாட்சியில் கமல், ஜெயப்ரதா இருவரும் Audience மத்தியில் மாட்டிக்கொண்டு அல்லல்படும்படியான ஒரு காட்சியை இயக்குனர் எடுத்திருப்பார். ஆனால் அங்கு கமல், ஜெயப்ரதா இருவரை தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்த இருவரும் ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் ‘Mono Acting’ செய்திருப்பார்கள். அதில் கமல்ஹாசனுக்கு சரிசமமாக ஜெயப்ரதாவும் நடித்திருப்பார். அந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த படத்தில் இவர் ஒரு இளம்வயது பெண்ணாகவும், பின்னர் ஷைலஜாவின் அம்மாவாகவும் நடித்திருப்பார். எனக்கு ஜெயப்ரதாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கண்கள் தான். இவர் நடித்த பல காட்சிகளில் அழகாகவும், மிக ஆழமாகவும் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.

சினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.
ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.
கமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.
ஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.
படத்தின் கேமராமேன் நிவாஸ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கம் அருமை. இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிருபித்திருக்கிறார் இசை ஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்கிறது. எனக்கு ராஜாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரின் பின்னணி இசை. மனிதர் கலக்குவார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியது திரு K. விஸ்வநாத் அவர்கள். முக்கியமாக ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவரை பற்றி எழுதாமல் விட்டால் இந்த திரை விமர்சனமே முழுமை பெறாது. அந்த நபர் S.P. பாலசுப்ரமணியம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் (ஆண் குரல்) இவரே பாடியுள்ளார். மனிதருக்கு என்ன ஒரு குரல் வளம்.
இந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை – இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் – S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.
சலங்கை ஒலி – நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.
என்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்குக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.
குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.
படத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள்! அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே ‘பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்’ என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து – வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது – உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு – நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே – கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் – நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும்? இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.
அதைத் தொடர்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் – அருமையான காட்சிகள்.
இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!
பிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே!
சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!
வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்
வந்தே பார்வதீப ரமேஷ்வரம்.
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்!
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்!
உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன திரனனன திரதிரதிரதிரதிரதிரதிரதிர
நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
சுல்தான் said…
இதெல்லாம் படமில்லை இயல்பான நடிப்பு எப்படி இருக்கும் என்ற பாடம்.
ஷைலஜாவின் முன்னே ரகம் ரகமா பிரித்து ஆடுவதென்ன?
அதிலே கடைசியிலே காப்பி டம்ளர் பறப்தென்ன?
‘ரெண்டு தப்பு’ காட்சியென்ன?
அம்மாவின் முன்னால் ஆடியபின் கோபக்கார மாமா லட்டு தருவதென்ன?
அந்த நாட்டியத்தில் மஞ்சு பார்கவியையும் இணையாகக் காட்டி அசத்துவதென்ன?
குடிகார டான்ஸ் மாஸ்டர் பீஸ்?
நடனம் கற்றுக்கொள்ள மொழி தெரியாமல் நடன கேள்வியும் பதிலும்,
சரத்பாபு மாமனாரை காலில் மிதித்து நாட்டியம்,
தாயை தவறாக நினைக்கும் ஷைலஜாவின் கோபம்,
திவசம் பார்த்து கமல் திடுக்கிடுவது,
ராமையா… நான் சிவய்யாய்யா என்பவரின் தீர்த்தம் கிடைக்குமிடம் சொல்லும் இயல்பு,
தக தக தா… தக தா… தக தக தக தா… என அழைத்து வரச் சொல்லுதல்,
அதையெல்லாம் விட கிணற்றில் ஒற்றைக்கால் நடனமும் அந்தப்பாட்டும்,
ஷைலுவின் கிளைமேக்ஸ் நடனத்தில் ஜெயப்பிரதாவிடம் கண்க்கு சரியா என்று கண்ணால் கேட்பதும்.
இன்னும் இன்னும் எவ்வளவு!!!
படமாய்யா அது. நடிப்புக்கு பாடம்.
நான் ஒரு நாற்பது தடவையாவது பார்த்திருப்பேன் இது வரை.
சலங்கை ஒலி – காவிரி மங்கை வந்தாளம்மா
ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!!
எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது!
இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.
மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ “ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு” என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை.
சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் “காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி” என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் “சிதாரா”வில் இடம் பெற்றது.
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
சலங்கை ஒலி படத்தில் வரும் “ஓம் நமச்சிவாய” பாடலை சிவப்பெருமான் கேட்டிருப்பின் தனக்கு பிடித்த ராகம் இனி ஹிந்தோளமே எனக்கூறியிருப்பார். “nothing but wind” என்ற album-இல் “Composer’s breath” என்ற பகுதியில் ஹரிப்ரசாத் சௌராசியாவின் குழலில் ஹிந்தோள ராகத்தை மிக திறமையாக கையாண்டிருக்கிறார் ராஜா . அந்த பகுதி இறுதியில் ராகமாலிகையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது)
Use who you know to help get ahead: ‘The Power of Who’ aims to change how you network
On setting the right priorities in the first place:
“Many of us are working way too hard in jobs we don’t like while pursuing relationships that are actually bad for us and in some cases even living in places we don’t enjoy. If you allow yourself to be fooled into pursuing just position, power, and money, you will miss out on the true treasures of peace, happiness, and a deep-down contentment.”
On changing the trajectory of our lives:
“One of the big lies many of us tell ourselves is that our current position in life disqualifies us from achieving our dreams and goals. Some of the common phrases I’ve heard are “It’s too late for me. I’m too old,” or “I’m too young,” or “I’m too…whatever.” Is that true? No! It’s absolutely not true. You’re never too early or late in life to begin walking on the pathway of your dream. One thing is absolutely certain: the future is on the way. Ready or not, here it comes.”
On investing in your “Who”:
“Do you know your ‘Who?’ I’ve developed a database of over 5,365 people that can say “Hi, Bob.” That really doesn’t mean a lot except that I know a lot of people because of my business. I had what I thought was a great networking strategy, but I discovered I was dead wrong. One day I stopped and studied who had actually given me business or touched my life in some significant way over the last ten years. I was shocked to learn that there were only 87! Eighty-seven out of 5,365! I enjoy meeting people, but I should have been spending more time investing in the 87 who were actually impacting my life in significant ways.”
On getting what we really want:
“Most people never get what they want for three simple reasons. They don’t ask. No one can help if they don’t know what you want. When they do ask, they ask the wrong people. For some reason, people are uncomfortable asking their ‘Who’ for help. As a result, they’ll ask most anyone except their friends, who are the only ones with a motive to help. When they do ask for help, they ask too vaguely. Even if I’m motivated to help a friend, I can’t do it when I don’t know what he or she wants.”
Beaudine’s four tips for networking
1 Do I know you?
References, endorsements and testimonials are your greatest allies when applying for jobs. A recommendation from a friend reveals more about your character and work ethic than someone who barely knows you personally, such as a previous boss.
2 Do I like you?
Can you really build a relationship with someone in a few minutes? If your interviewer has heard about you from a mutual friend, they’ll feel like they know you better right away.
3 Can I trust that you understand my needs?
Do your homework on the interviewer. Know what they need and prepare for answers that show you can fill their needs. A friend’s recommendation can prove you’re trustworthy.
4 Are you the best for me in my particular situation?
Show passion for the job and your work. People want to work with those they can become friends. If your interviewer knows a friend that describes your personality and love of your field, they’ll be more comfortable hiring you.
We’re told that getting a job isn’t about what you know, but who you know. Networking is crucial when job hunting, or so we thought. But one man is challenging that belief, saying the only networking you need to do is with friends you already have.
Bob Beaudine, President and CEO of Eastman & Beaudine, and a top executive recruiter in sports and entertainment, discusses this new approach to networking in his book, “The Power of Who: You Already Know Everyone You Need to Know” (Center Street, $20).
“I wrote the book because I want to help, and to do that we first need to change the way we network,” says Beaudine. “Networking is the greatest thing in the world, just not the way we do it.”
“The Power of Who” is all about finding your “who” and using them to get to the next step.
Everyone has a “who”: List everyone you know, and then narrow the list down to those you consider friends.
Out of 5,265 people he knows, Beaudine only considers 87 part of his “who.”
“Identify your who, decide what you want, and connect,” he says. “Have your friends help you connect. This is already in place for us and doesn’t cost anything.”
Sounds too simple? It is. “Sometimes the most profound ideas are the simplest,” says Beaudine.
“We’ve left all the people who know us, like us, and are rooting for us, and instead network with people who don’t know anything about us.”
When consulting your “who,” know which ones to ask for help, and be clear. Your friends can’t help if you don’t tell them what you want.
And in this tough job market, your “who” might be just what you needed. “How many people do you need to get your dream job?” says Beaudine. “One, and that’s hope.”
1 Do I know you?
References, endorsements and testimonials are your greatest allies when applying for jobs. A recommendation from a friend reveals more about your character and work ethic than someone who barely knows you personally, such as a previous boss.
2 Do I like you?
Can you really build a relationship with someone in a few minutes? If your interviewer has heard about you from a mutual friend, they’ll feel like they know you better right away.
3 Can I trust that you understand my needs?
Do your homework on the interviewer. Know what they need and prepare for answers that show you can fill their needs. A friend’s recommendation can prove you’re trustworthy.
4 Are you the best for me in my particular situation?
Show passion for the job and your work. People want to work with those they can become friends. If your interviewer knows a friend that describes your personality and love of your field, they’ll be more comfortable hiring you.
கவிதை ஒன்றுகூடல்
கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்
- அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது,
- நகர வேண்டிய திசைவெளி,
- தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது
- சாதி,
- இனம்,
- மொழி,
- மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும்
- பண்டம்,
- சந்தை,
- போர்,
- மரணம் என்னும்
- உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது
- எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என
- விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது
- தொடர்ந்து சிந்திப்பது,
- எழுதுவது,
- ஒன்றுகூடுவது,
- இயங்குவது
என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:
இடம்: வால்பாறை
நாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறுநாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு
அரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்
அரங்கம்: கமலாதாஸ் அரங்கம்
கமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி
திறனாய்வுகள்:
1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்
இளங்கோ கிருஷ்ணன்
2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்
அசதா
ம. மதிவண்ணன்
க. மோகனரங்கன்
வெ.பாபு
க. பஞ்சாங்கம்
7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி
மனோன்மணி
8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்
எச்.ஜி.ரசூல்
அரங்கம்: ராஜமார்த்தாண்டன் அரங்கம்
யாழன் ஆதி
செல்மா பிரியதர்ஸன்
கரிகாலன்
4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்
இளஞ்சேரல்
விஷ்ணுபுரம் சரவணன்
6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை
எஸ். தேன்மொழி
கருத்தாளர்கள்:
- சுந்தர்காளி,
- பிரேம்,
- சஃபி,
- ராஜன்குறை,
- வியாகுலன்,
- சுகன்,
- நட. சிவக்குமார்,
- முஜுப்பூர் ரஃமான்,
- சாகிப்கிரான்,
- ரவீந்திரபாரதி,
- மணிமுடி,
- யதார்த்தா ராஜன்
- தா.அகிலன்,
- நிசாந்தினி,
- ஜீவன் பென்னி,
- வெயில்,
- கணேசகுமாரன்,
- அமுதா
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: செல்மா பிரியதர்ஸன் -9443461476
சுகிர்தராணி -9443445775
யாழன் ஆதி -9443104443
வித்யாசாகர் -9842209993
நிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை
நன்றியுரை: வித்யாசாகர்
Book Intro: “அன்னியமதங்களால் ஆபத்து”

அன்னிய மதங்களால் ஆபத்து: இந்து மதம்: புத்தகம்
எல்லாமே நாளேடுகளில் வந்தவை அல்லது புலனாய்வு பத்திரிகைகளில் வந்தவை. கவனத்தை கவராத ஆனால் முக்கியமான செய்திகள்.
உதாரணமாக:
- 1995 சம்பவங்கள் விமர்சனம்
- துப்பு துலங்காத 16 குண்டு வெடிப்புகள்
- தென்காசியை சூழும் மதக்கலவரம்
- 6 பேர் படுகொலைகள் தொழில் அதிபர் கைது
- இமாம் அலியும் அருவர் மரணமும்
- மர்ம மசூதி
- மாணவர்களை திசை திருப்பும் முஸ்லீம் பாசறை
- ஆகஸ்ட் 15 குண்டு வெடிக்க திட்டமிட்டோ ம்
- நிழல் பெண்ணுடன் தமிழக அதிகாரி
- மதசாயம் பூசிக்கொண்ட டி.எஸ்.பி
- குலா…குலா…
- வில்லங்க விவாதம்
- மரத்தில் கட்டிவைத்து அடி
- மீண்டும் வெள்ளிக்கிழமை கொலை
- உயிர் தப்பிய ஐ.பி.எஸ்.அதிகாரி
- தீவிரவாதம் காஷ்மிர் டு குமளி
இது போல 94 பக்கங்களில் பல செய்திகளை தொகுத்து தந்திருக்கிறார் வெ.ஜெயராமன் என்ற இளைஞர்.
இந்த புத்தகத்தை சொந்த கைகாசைப்போட்டு வெளியிட்டிருக்கிறார் தேசிய சிந்தனையாளர் பேரவை மூலமாக.
புத்தகத்தின் பதிப்புரிமையில் அவர் இப்படி சொல்லியிருக்கிறார்: யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பக்கம் பக்கமாகவோ பாரா பாராவாகவோ இந்த நூலை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேசிய சிந்தனையாளர் பேரவை
எண் 47/17 கோதண்டராமசாமி கோயில் தெரு
மேற்கு மாம்பலம் சென்னை 600 033
செல் 9382233669
விலை ரூ 25
காதலென்பது…- ஆர்.வெங்கடேஷ்
இரண்டு பஸ்கள் நிற்கவில்லை. தீப்தி அடுத்த வந்த பஸ்ஸை நிறுத்த இன்னும் அதிகம் முனைப்பு எடுத்துக்கொண்டாள். மணியும் சாலையின் பாதிக்கே போய் நின்றுகொண்டான். சரியாக அவர்களைக் கடக்கும்போதுதான் பஸ்கள் வேகமெடுத்தன. டிரைவர் முகங்களில் ஒருவித வன்மம் போல் ஏதோவொன்று தெரிந்தது.
அடுத்த பஸ்ஸும் நிற்கவில்லை. தீப்தி முகம் கூம்பிப் போய்விட்டது. கல்லூரி வாசலில் இருந்து இன்னும் தெரிந்த முகங்கள் வெளியே வந்தன. இவர்களைப் பார்த்துக்கொண்டே பக்கத்தில் இருந்த ஓட்டலுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். கெஸ்மிஸ்ட்ரி டிபார்ட்மெண்ட். கம்பைண்ட் கிளாஸ்களில் பார்க்க முடியும் கூட்டம்.
மீண்டும் மரநிழலில் வந்து நின்றுகொண்டான் மணி. தார் உருகும் வெயில். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரு சைக்கிள் கூட இல்லை. ஆட்டோ வந்தாலாவது இவளை அழைத்துக்கொண்டு போய்விடலாம். அவ்வப்போது லாரிகள் உறுமிக்கொண்டு போயின. தீப்தி இன்னும் நடுத்தெருவில் தலையில் துப்பட்டாவைப் போட்டுக்கொண்டு நின்றாள்.
சின்ன உருவம். சொப்பு பொம்மை மாதிரி. நிறைய கூந்தல். அதைப் பின்னி மாளாததுபோல், கீழ்முனையில் கட்டாமல் அவிழ்ந்துகிடந்தது. சட்டெனத் திரும்பி, மணியைப் பார்த்துச் சிரித்தாள். பஸ் வருகிறது, வாவா என்று சைகையில் அழைத்தாள். இந்த பஸ்ஸும் நிற்காது என்று மணிக்குத் தோன்றியது. எல்லாம் எல்.எஸ்.எஸ். பஸ்கள். கல்லூரி வாசலில் இவற்றுக்கு நிறுத்தம் இல்லை.
வழக்கப்போல், டிரைவர் தீப்தியை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டு அடித்துக்கொண்டு போனார்.
“என்னய்யா பஸ்காரன் நிறுத்தவே மாட்டேங்கறான்?”
நொடிக்கொரு தடவை கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மணி கையில் கடிகாரம் இல்லை. பத்து இருக்கலாம். முதல் வகுப்பை முடித்துவிட்டு அவசர அவசரமாக வெளியே வந்தாயிற்று.
“ஆஸ்பிட்டல் உனக்குச் சரியா தெரியுமா? போயிட்டு மத்தியானத்துக்குள்ள வந்துட முடியுமா?”
மணிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. காலையில் கல்லூரிக்கு வந்ததில் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறாள். முதல் வகுப்பையும் தியாகம் செய்துவிட்டுக் கிளம்புவதுதான் திட்டம். முதல் வகுப்பு, துறைத் தலைவர் எடுக்கும் வகுப்பு. அவ்வளவு சீக்கிரம் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது.
“வந்துடலாம்மா. எதுக்குக் கவலைப் படறே? பஸ் கிடைச்சா, இங்கேயிருந்து அடுத்த பதினஞ்சு நிமிஷம். திரும்பிவர இன்னொரு அதிகபட்சம் அரைமணி நேரம். போயிட்டு வந்துடலாம்.”
அவளுக்கும் இந்த கணக்கின் எளிமை புரிந்திருக்கவேண்டும். ஆனாலும் சந்தேகம். முடியுமா என்ற அச்சம். நண்பர்களிடம் இருந்து பைக்கை வாங்கிக்கொண்டு போய்வந்துவிடலாம் என்று மணி முதலில் யோசனை சொன்னான். அதை அப்போது ஒப்புக்கொண்டவள், என்ன தோன்றியதோ, அப்புறம் வேண்டாம் என்றுவிட்டாள். வீணா எதுக்கு வம்பு?
மீண்டும் வெயிலில் போய் நின்றுகொண்டாள் தீப்தி. வகுப்பைவிட்டு இந்த நேரத்துக்கு மணி வெளியே வந்ததில்லை. பொதுவாக மூன்று நான்கு வகுப்புகளுக்குப் பின் தான் வெளியே வருவான். மணி பனிரெண்டு பனிரெண்டரை மணி அளவில் ஒன்றன் பின் ஒன்றாக பஸ்கள் வர ஆரம்பிக்கும்.
எதிர்பார்க்கும்போது வராமல் போவதுதான் பஸ்ஸின் மகத்துவம். இந்தப் பூந்தமல்லி ஐரோடு போகும் பல பஸ்களை அவன் தொடர்ந்து பார்த்திருக்கிறான். தீப்தி குறிப்பிடும் மருத்துவமனையை அவன் பல முறை கடந்திருக்கிறான். சொல்லப்போனால், எல்லா பஸ்களுமே அந்த மருத்துவமனையைக் கடந்துதான் போகவேண்டும்.
அதுவுமில்லாமல், மனத்தில் அவசரம். பதற்றமில்லாமல் இருக்குமா?
“எங்க ஆஸ்சிடெண்ட் ஆச்சு?”
மணி தீப்தியைப் பார்த்துக் கேட்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தவள், மணி பக்கம் திரும்பினாள்.
“நெல்லூர்லேருந்து திரும்பிவரும்போது, இவங்க வந்த காரை ஒரு லாரிக்காரன் பின்னாலேயிருந்து மோதியிருக்கான்.”
“எதுக்கு நெல்லூர் போனார்?”
“அவர் சர்வீஸ் எஞ்சினியர்தானே. அங்கே ஏதோ கிளையண்ட் இருக்காங்களாம். இவரும் இன்னொரு எஞ்சினியரும் போயிருக்காங்க. வேலையை முடிச்சுட்டு அடுத்த நாளே திரும்பியிருக்காங்க. வரும்போதுதான் இந்த ஆஸ்சிடெண்ட்.”
ஜன்னல் வெளியே தீப்தி பார்வையை விலக்கிக்கொண்டாள். பஸ் தடதடவென சத்தம் கொடுத்துக்கொண்டு ஓடியது. கடைசி வரிசையில் உட்கார்ந்திருந்தார்கள். முன்னே இருந்த வரிசைகளில் யாருமே இல்லை. டிரைவர் அருகே இரண்டு மூன்று கூடைகள் அடுக்கப்பட்டு, பக்கத்தில் சில் ஆள்கள் உட்கார்ந்திருந்தார்கள். கண்டெக்டரும் முன்னால் உள்ள சீட்டிலேயே அமர்ந்திருந்தார்.
“நாலு நாள் ஆச்சு ஒரு விவரமும் தெரியல. போனும் இல்ல. அவங்க வீட்டுப் பக்கமே போக முடியல. முந்தாநேத்து ராத்திரி அவரோட தம்பிதான் வந்து விஷயம் சொன்னான். காலு கை எல்லாம் ஃப்ராக்சராம். என்னால ஒண்ணுமே பண்ண முடியல. நேத்தே போய் பார்க்கணும்னு பார்த்தேன். முடியல…”
பேசப் பேச குரல் மெல்லிதாகிக்கொண்டே வந்தது. மீண்டும் ஜன்னல் பக்கம் தன் பார்வையை அவள் திருப்பிக்கொண்டாள். வெளியில் இருந்து வெப்பக்காற்று மட்டுமே உள்ளே வந்தது. ஜன்னல் ஓரமெல்லாம் தகித்தது. இவளோடு பழக ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் இருக்குமா? இருக்கலாம். இன்றுவரை அவள் உற்சாகம் குன்றி, குரல் கம்மி அவன் பார்த்ததில்லை.
“நேத்து ஃபுல்லா, அவரோட அம்மாதான் ஹாஸ்பிடல்ல உட்கார்ந்திருந்தாங்க. போயிருந்தாலும் பார்த்திருக்க முடியாது. இன்னிக்குத் தம்பி கூட இருக்கானாம். “
அவள் கைக்கடிகாரத்தைப் பார்த்தாள். பத்து நாற்பதைத் தொட்டுக்கொண்டு இருந்தது. ஒரு மணிக்குள் திரும்பிவிட முடியும் என்றுதான் மணிக்குத் தோன்றியது.
“அவங்கம்மாவுக்கு என்னைக் கண்டாவே பிடிக்கல. ரெண்டு மூணு முறை என்னையும் அவரையும் பார்த்திருக்காங்க. வீட்டுல போய் ஓரே காச்மூச்சுனு கத்தலாம். என்கிட்ட என்ன கொறையக் கண்டாங்களோ, தெரியல..”
அடுத்து வந்த நிறுத்தத்தில் கூடைக்காரர்கள் இறங்கிக்கொண்டார்கள். பஸ் இன்னும் தடதடத்தது. அடுத்த நிறுத்தத்தில் வண்டி நிற்கவில்லை. கண்டெக்டர் டபுள் விசில் கொடுத்தார். இவர்களைப் பார்த்து, அடுத்த ஸ்டாபிங்கில் இறங்குகிறீர்களா என்பதுபோல் சைகைக் காட்ட, ஆமாமென தலையாட்டினான் மணி.
பஸ்ஸை விட்டு இறங்கிப் பின்னால் நடக்க வேண்டும். அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள். தீப்தி எழுந்து படிக்கட்டின் அருகே போய் நின்றுகொண்டாள். மணி குனிந்து அந்த மருத்துவமனை தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டு வந்தான்.
“அண்ணா எதுவும் சொல்லவேண்டாம்னு சொன்னான். நான்தான் மனசு கேக்காம, தீப்திகிட்ட போய் சொன்னேன். தீப்தி அழவே அழுதுட்டா. பயப்பட ஒண்ணுமில்லை. பிராக்சர்தான், இன்னும் ரெண்டு மூணு மாசத்துல சரியாயிடும்னு சொன்னேன்.”
“டாக்டர் என்ன சொன்னார்?”
“மருந்து மாத்திரை எல்லாம் குடுத்திருக்காங்க. இன்னும் பத்து நாள் இங்க இருக்கச் சொல்வாங்கன்னு நினைக்கறேன். அப்புறம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.”
மணி அந்த மருத்துவமனை வரண்டாவைப் பார்தான். எதிரெதிர் அறைகள். ஒவ்வொரு அறை வாசலிலும் இரண்டு மூன்று சேர்கள் போடப்பட்டிருந்தன. சில காலியாக இருந்தன. தூரத்து அறை வாசலில் ஒரு பெண் தூங்கிக்கொண்டு இருந்தாள். சவரில் ஆங்காங்கே வண்ண ஓவியங்கள். உடல் நோய் இருக்கும்போது, யார் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்? தெரியவில்லை.
“இன்னிக்கு ஸ்கூல் லீவா?”
“ஆமா. நேத்து ஃபுல்லா அம்மா இருந்தாங்க. ராத்திரி அப்பா இருந்தாங்க. அம்மா சமைச்சு எடுத்துகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் நான் இருப்பேன். சைக்கிள் டெஸ்ட் வேற வருது. வீட்டுல போய் படிக்கணும்.”
“இங்க படிக்க முடியலையா?”
“ஐயே.. இந்த ஆஸ்பத்திரி நாத்தம் தாங்கவே முடியலை. முதல் நாளெல்லாம் பயம் வேற. இவனை பார்க்கவே முடியாது. ஐசியூல இருந்தான்.”
இவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிரே சுவரில் ஒரு ஃபேன் பொருத்தப்பட்டிருந்தது. இடதும் வலதுமாக அது போய் போய் வரும்போது, வெப்பக்காற்றோடு, பினாயில் வாசனையையும் தெளித்துவிட்டுப் போனது. மேலே ஃபால்ஸ் சீலிங்.
டியூட்டி நர்ஸுகள் உட்காரும் இடம் தெரிந்தது. ஒருவர் மாற்றி ஒருவர் போனில் பேசிக்கொண்டே இருந்தார்கள். அல்லது, கையில் ஒரு காகிதக் கட்டுகளை வைத்துக்கொண்டு ஒவ்வொரு அறையாகப் போய் வந்தார்கள். நடுநடுவே இரண்டு வார்த்தைகள். ஒரு சிரிப்பு. ஒரு அவசரக் கிறுக்கல்.
அடுத்த இரண்டாவது அறையில் இருக்கும் ஒருவருக்கு ஒரு முதியவர் சாப்பாட்டுக் கூடையை எடுத்து வந்திருந்தார். இவர்கள் இருவரையும் பார்த்தவர், ஒரு கணம் நின்றுவிட்டு, அப்புறம் உள்ளே நுழைந்தார். எங்கேயாவது மணியைப் பார்த்தவராக இருக்கலாம்.
“சங்கர், உன்னை அண்ணா கூப்பிடறாரு.”
அடுத்திருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு தீப்தி வெளியே வந்தாள். மணி முகத்தைப் பார்த்துவிட்டு, தன் கைக்கடிகாரத்தையும் பார்த்தாள். கண்கள் கலங்கியிருந்ததைப் போல் தோன்றியது.
“ஃபை மினிட்ஸ் மணி. இதோ சொல்லிட்டு வந்துடறேன். போய் சேர்ந்துடலாம் இல்லியா?”
பேராசிரியர் தனபால் சாரின் ஸ்கூட்டர் கல்லூரி அருகே வந்து நின்றபோது மணி மதியம் 1.10. தீப்தி பின்னால் போய் உட்கார்ந்துகொண்டாள். மணியையும் ஏழுமலையையும் பார்த்து மையமாகப் புன்னகைத்தார்.
“செமஸ்டருக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சா?”
“இனிமேதான் சார்.” எதற்கும் இருக்கட்டும் என்று புன்னகைத்து வைத்தான் மணி. ஏழுமலை வாயே திறக்கவில்லை. சென்ற ஆண்டு வரைக்கும், அவனுக்கு இயற்பியல் வகுப்பெடுத்தவர். அப்புறம் ரிடையரானார்.
தலையை மட்டும் ஆட்டிவிட்டு, அவர் ஸ்கூட்டரை வேகப்படுத்தினார். தீப்தி தலைகவிழ்ந்திருந்தாள்.
“எங்கடா, ரெண்டு பேரும் அவசரமா போயிட்டு வந்தீங்க?”
“தீப்தி லவ்வர் ஆஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருந்தார். அவரைப் போய் பார்த்துட்டு வந்தோம்.”
தற்செயலா இல்லை இயல்போ தெரியவில்லை. ஏழுமலை தன்னைக் கூர்மையாகப் பார்ப்பதுபோல் இருந்தது மணிக்கு. அவன் ஏதேனும் சொல்லிவிடுவானோ என்றும் பயமாக இருந்தது. ஒரு கணம் அவன் பார்வையை மணியால் சந்திக்க முடியவில்லை.
தலையைத் திருப்பிக்கொண்ட ஏழுமலை, “பைத்தியம்டா நீ” என்று மட்டும் சொல்லிவிட்டு, பஸ்ஸைப் பிடிக்க எதிர்பக்கம் நடக்கத் தொடங்கினான்.
Venkatesh R
தொடரும்… – ஆர்.வெங்கடேஷ்
நந்தினி பால்கனிக் கதவைத் திறந்தாள். சட்டெனப் புதுக்காற்று உள்ளே நுழைந்தது. ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்ததை அப்போதுதான் கவனித்தாள். காலையில் மங்கை வீட்டைப் பெறுக்கித் தள்ளிவிட்டுப் போகும்போது எல்லாவற்றையும் அடைத்திருக்க வேண்டும்.
ஜன்னல் கர்ட்டன்களைக் கூட விலக்கி வைக்கவில்லை.
எல்லாம் பழைய பழக்கம். பால்கனியில் நின்றுகொண்டாள் நந்தினி. இரண்டாம் மாடி. பால்கனியில் இன்னும் ஈரம் உலரவில்லை. மதியம்வரை மழை பெய்துகொண்டிருந்தது காதில் விழுந்தது. தெரு முழுவதும் உலராத ஈரம். கார்களின் தலைமேல் பூக்கள் சிதறிக்கிடந்தன. தெருவின் இருபுறமும் வரிசைகட்டிய கார்கள். சிவப்பும் மஞ்சளுமாய் பூக்கள்.
இன்று ஞாயிறாக இருக்கவேண்டும். தெருவில் மனித சப்தமே இல்லையே. தெருவில் காலை அகலப்போட்டு நடக்கலாம். எவரும் பார்க்கமாட்டார்கள்.
அவளுக்கே சிரிப்பாக இருந்தது. பார்த்தால்தான் என்ன? அடையாளம் காண்பவர்கள் குறைந்துவிட்டார்கள். அடையாளம் காண்பவர்களும் அதிகபட்சம் உதிர்ப்பது சின்னப் புன்னகை. இயல்பாக மறுபுன்னகை சிந்திவிட்டு நகர்ந்துவிட முடிகிறது. பெரும்பாலும் கேள்விகள் இல்லை. விசாரிப்புகள் மட்டும் தெரிந்தவர்களிடமிருந்து வரும். “பொண்ணு எங்க படிக்கறா?”, “மெட்ராஸ்லேயே வந்து செட்டிலாகிட்டீங்களா?”. கீழ் ஃப்ளாட் எம்.எம். குடுவா மட்டும் அம்மையும் அச்சனையும் சேர்த்துக் கேட்பார்.
இதெல்லாம் கண்டிப்பாகப் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இல்லை. விசாரிப்புகள். இந்த விசாரிப்புகள் மூலம் மட்டுமே பெறப்பட்ட பல செய்திகள், முன்னர் பத்திரிகைகளை அலங்கரித்தது உண்டு. இப்போது நான் செய்திப் பொருளில்லை. அதனால் விசாரிப்புகளும் இல்லை.
அறைக்குள் வந்து துப்பட்டாவை மேலே எடுத்து அணிந்துகொண்டாள். ஓடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அணைத்தாள். காலை முதல் ஓடுகிறது. ஒன்று மாற்றி ஒன்றாகக் குழந்தைகளின் சேனல்களைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். எவ்வளவு சேனல்கள்! எவ்வளவு கற்பனைகள்! தன் வயதுக் காலத்தில் இப்படிப்பட்ட வசதிகளைக் கண்டது இல்லை.
கதவைப் பூட்டிவிட்டு, சாவியைக் கையடக்கப் பர்ஸுக்குள் வைத்துக்கொண்டாள். உள்ளே அதிகப் பணம் இல்லை. என்ன செலவு இருக்கிறது? ஒன்றும் வாங்கப் போவதில்லை. கடைகளும் இந்த மழையில் திறந்திருக்கப் போவதில்லை. வாங்கிக் குவித்தக் காலங்கள் இப்போது அபத்தமாகத் தோன்றுகின்றன. வந்த சுவடு தெரியாமல் காணாமல் போனவை ஏராளம்.
வாசல் கூர்க்கா எழுந்து நின்றான். பக்கத்தில் அவன் மனைவி தேசலாகத் தெரிந்தாள். சிரித்தாள். கொஞ்சம் தள்ளி குழந்தை ஒன்று விளையாடிக்கொண்டு இருந்தது. சப்பை மூக்கு, வெளிறிய வெண்மை நிறம். ரோஸ் நிறத்தில் அவள் கட்டியிருந்த புடைவை, அவ்வளவு இணக்கமாக இருந்தது.
“சாவியைக் கொடுங்கள், காரை வெளியே எடுத்துத் தருகிறேன்” என்றான் கூர்க்கா. சாவியைக் கொண்டு வரவில்லை. பரவாயில்லை என்பதுபோல் தலையசைத்துவிட்டு கேட் அருகே போய் நின்றுகொண்டாள். சும்மா காலார நடக்க எதுக்கு கார்? சாலை முழுவதும் பூக்கள் கொட்டிக் கிடந்தன. எதிர் ஃப்ளாட்டில் இரண்டு பெண்கள் ஷட்டில் காக் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். தெருவெங்கும் மரங்கள் மூடி வெளிச்சத்தை மையிட்டுக்கொண்டு இருந்தன.
“குழந்தைக்கு ஸ்வெட்டர் போடு. அப்புறம் சளி பிடித்துக்கொள்ளும்” என்றாள் கூர்க்காவிடம். அவன் அரைஉதடு விரித்துச் சிரித்தான். மனைவியிடம் என்னவோ கூறினான். அவள் லேசாக நந்தினியைப் பார்த்தபடி குழந்தையை அள்ளிக்கொள்ள எழுந்துகொண்டாள்.
அகலமான சாலை. இருபுறமும் கார்கள் நிறுத்திவைத்து, சாலையைக் குறுக்கியிருந்தார்கள். அதிசயமாக இந்த இருபது ஆண்டுக் காலத்தில் அதிக மரங்கள் வெட்டப்படவில்லை. அவள் அந்தப் ஃப்ளாட்டை வாங்க வந்தபோது, எதிர்ப்புறம் முழுவதும் காலி மனைகள். வந்து இங்கே வாழ்வோம், இப்படியொரு மாலைப்பொழுதில் நடப்போம் என்று யார் அன்று நினைத்துப் பார்த்தார்கள்? முதலீடு. அவ்வளவுதான்.
பல மாதங்கள், ஆண்டுகள் கூட, ஃப்ளாட் பூட்டிக் கிடந்தது. வாடகைக்கு விடவும் பயம். வாடகையே தரமாட்டான், ஏமாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள். அப்புறம் யார் அவன் பின்னால் அலைவது? அதுவும் ஓர் முன்னணி நடிகை, எவனோ குடித்தனக்காரன் பின்னால் அலைவதா? அந்த வாடகை வந்து என்னவாகிவிடப் போகிறது? பூட்டி வைப்பதே சாலச் சிறந்தது. இன்னொரு நடிகையும் ஃப்ளாட்டை வாடகைக்கு கேட்டாள். அவள் இங்கே காலூன்றத் தொடங்கியிருந்த நேரம். சாதாரண ஆள்களுக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம், சினிமாக்காரர்களுக்கு வேண்டவே வேண்டாம் என்றார் அச்சன். பயம்.
சொல்லப்போனால், பயம்தான் எங்கும் எப்போதும் ஆட்டி வைத்தது. இதெல்லாம் உழைப்பின் சம்பாத்தியம் என்பதைவிட, ஏதோ அனாமத்தாக வந்ததைப் போன்றதொரு எண்ணம். அதனால், எப்போதும் இதையெல்லாம் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் இவை அபகரித்துக்கொள்ளப்படலாம் என்றும் மனத்தில் ஆழப் பதிந்துவிட்டது.
எதிரே கார் ஒன்று அவசரமாகப் போய்க்க்கொண்டு இருந்தது. இவள் ஓரம் ஒதுங்கிக்கொண்டாள். ஞாயிறு மாலையிலும் யாருக்கோ இன்னும் அவசரம் மிச்சமிருக்கிறது. தன்னைப் போல பல சினிமாக்காரர்கள் இந்தத் தெருவிலும் அடுத்திருந்தத் தெருக்களிலும் வீடும் ஃப்ளாட்டும் வாங்கிக் குடியிருந்தார்கள். தங்கள் தலைமேல்தான் சினிமா உலகமே நடக்கிறது என்ற எண்ணமும் அதுதரும் அவசரமும், அழகிய கற்பனை. தெரிந்த முகங்கள் கூட, சட்டென ஓர் அவசரத்தை முகத்தில் தேக்கிக்கொண்டு, விரைவாக விடைபெறுவது, இந்தக் கற்பனையின் தொடர்ச்சிதான்.
இந்த சுயமோகமும் முக்கியத்துவமும் இல்லையெனில், பலருக்கு இங்கே வாழ்க்கைச் சப்பென்று இருக்கும்.
திருமணமாகி அமெரிக்க போய், விசாலமான ஒரு வீட்டில் குடித்தனம் நடத்தத் தொடங்கியபோதுதான், வெறுமை உறைத்தது. சுற்றி யாருமே இல்லை. உங்களை அறிந்த முகம் ஒன்றுகூட இல்லை. தூர தூர வீடுகள். அமெரிக்க முகங்களுக்கு நீ யாரென்றே தெரியாது. விழாக்கள் இல்லை. அழைப்புகள் இல்லை. பரிசளிப்புகள் இல்லை. அதனால் முகப்பூச்சு தேவையே இல்லை. கண்ணாடி ரொம்பக் குரூரமாகத் தெரிந்தது. உச்சிவரை ஏறியிருந்த மயக்கத்தை, யாரோ தண்ணீர் தெளித்து, கலைத்துவிட்டாற்போ இருந்தது. சட்டெனப் புற உலகில் வந்து விழுந்த குழந்தையில் வலி.
கண் திறந்து பார்க்க, விஸ்வம் மட்டுமே இருந்தான், காதலுடன், அரவணைப்புடன். பல ஆண்டுகள் அமெரிக்க வாசம் அவனை சுயசார்பு உள்ளவனாக ஆக்கியிருந்தது. கனவுகளை எங்கே நிஜத்தோடு பிணைக்கவேண்டும் என்று தெரிந்திருந்தது. மீண்டும் இந்தியா ஓடிவிட வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் தடுத்து நிறுத்தியது விஸ்வம்தான். கற்பனைக்கும் எதார்த்தத்துக்குமான இடைவெளியை அவனது காதலால் நிரப்ப முயன்றான். புரியவைக்க முயன்றான். புரிந்தும் ஏற்கமுடியாமல் தவித்த தவிப்பு சொல்லில் வராது.
அதையும் மீறி, மீண்டும் இந்தியா வந்தது, உடனே நடிக்க வாய்ப்பு கோரி அலைந்தது, நேற்றுவரை புகழோடு பார்த்த ஒருத்தி, இன்று வாசல் வந்து நிற்கிறாள் என்றவுடன் வன்மம் கொப்பளிக்க, எடுத்தெறிந்து பேசியது, வேண்டுமென்றே இழுத்தடித்தது, காக்கவைத்து கழுத்தறுத்தது எல்லாம் மற்றொரு மூன்றாண்டுக் கதை. தன்னைக் காலம் பழைய குப்பையில் அள்ளிப் போட்டுவிட்டது என்று புரிய அந்த மூன்றாண்டுகள் தேவைப்பட்டன.
நெஞ்சு முழுக்க வெறுப்பு. எரிச்சல். கையாலாகாத்தனம். நடிக்க வந்தபோது இருந்ததைவிட, இப்போது நடிப்பு பற்றி நன்கு தெரியும். ஒவ்வொரு வசனத்தின் பொருள் உணர்ந்து, பாவத்தோடு இன்று திரையில் உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பு மட்டும் வரவே இல்லை. பத்திரிகைகளின் பத்திகளில் நக்கல் தொனித்தது. நேர்ப்பேச்சுகளில் சமத்காரம் வழிந்தோடியது. உன் காலம் முடிந்தது என்பதை இவையெல்லாம் சொல்லாமல் தெரிவித்தன.
பிணக்குகள் மறந்து, விஸ்வம் சென்னை வந்து மீண்டும் அமெரிக்கா அழைத்துப் போனான். வலிக்கும் ரணத்துக்கும் அன்பென்னும் அருமருந்தால் நீவிவிட்டான். எந்த ஆர்வம் இந்தப் பதற்றங்களுக்கு எல்லாம் அடிப்படையாக இருந்ததோ, அதற்கு மீண்டும் மடைமாற்றிவிட்டான். வீணை.
தோளில் தாங்கி, தந்திக் கம்பிகளைப் பிடித்தபோது, தனக்கான சாதனமாக வீணையை உணரத் தொடங்கினாள். மீண்டும் சந்தித்த தோழி போல் வீணை கொஞ்சத் தொடங்கியது. பதினைந்து பதினாறு வயது குறைந்துபோய் துள்ளல் காலங்கள் திரும்பிவரத் தொடங்கின. ஆதூரத்துடன், ஆவேசங்களை, அலைக்கழிப்புகளை, அபத்தங்களை எல்லாம் கேட்டுக்கொண்டது அவ்வீணை.
இசை மெல்ல அவளை ஒருமுகப்படுத்தியது. கூர்மைப்படுத்தியது. தன் தேடலின், அவசரத்தின், ஓட்டத்தின் லகானை இனம்காட்டியது. இழுத்துப் பிடித்து நிறுத்த வலுகொடுத்தது. முப்பத்தாறாவது வயதில், அந்த உண்மை விளங்கியது: காலகட்ட மாறுதல். இனி தன்னால் எப்படிக் குழந்தையாக ஆக முடியாதோ அதுபோலவே மீண்டும் நடிகையாக ஆக முடியாது. அதன் தன்மையைத் தான் கடந்துவிட்டோம். கடந்துபோன ஒன்றை நினைத்து நினைத்து அசைபோடலாம். பெருமைப்படலாம். ஆனால், மறுகுவதில் என்ன பயன்?
வாழ்க்கை, சிலருக்கு தன் அக்குளில் சினிமாவை வைத்துக் காத்திருக்கலாம். எப்போது வந்தாலும் திறந்துகொள்ளும் கதவாக அது இருக்கலாம். தன்னைப் பொறுத்தவரை அது கடந்து வந்துவிட்ட வாசல். திரும்பவும் யாராவது எல்.கே.ஜி., ஒன்றாம் வகுப்பு படிக்கிறோமா என்ன?
தெருமுனையில் வந்து நின்றுகொண்டாள். இங்கே ஒரு பாக்குமரம் இருந்தது ஞாபகம் வந்தது. பெரிய பெரிய இலைகள், காம்பவுண்ட் சுவரை மீறி வெளியே நீண்டிருக்கும். கையைக் கட்டிக்கொண்டு நின்றாள். எதிரே உயர்ந்த மேம்பாலம் எழுந்து நின்றது. விளக்குகள் போடப்பட்டிருந்தன. ஓரிரு மோட்டார்பைக்குகள் மேம்பாலத்தின் மேலே போய்க்கொண்டு இருந்தன.
பெரிய மேம்பாலம். இரண்டு முனைகளை இணைக்கும் மேம்பாலம். விரைவாகக் கடக்க் உதவும் மேம்பாலம். அரை மணி முக்கால் மணி நேரம் நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தவர்கள், மேம்பாலத்தில் ஐந்தே நிமிடங்களில் கடந்துவிடுகிறார்கள். யாரோ ஒருவர் மனைவி குழந்தைகளோடு மேம்பாலத்தில் போய்கொண்டிருந்தார். தன்னை உற்றுப் பார்ப்பதைப் போல் தோன்றியது. அவருடைய நினைவு மடிப்புகளில் என் இளமை முகம் ஞாபகம் வரலாம். வராமலும் போகலாம்.
வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் பெறுவதற்கும் இல்லை, இழப்பதற்கும் இல்லை. அவருக்கு நினைவு வந்துவிட்டது போலிருக்கிறது. கையை அசைத்தார். அவசரமாகத் தன் மனைவியிடம் சொல்கிறார். அவளும் ஞாபகம் வந்தவள் போல் ஆச்சரியம் பொங்கப் புன்னகைத்தாள். இவளும் புன்னைத்தாள். வண்டி போய்கொண்டிருந்தது.
“ ரசிகர்கள் உங்களை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் மீண்டும் நடிக்க வரலாமே” என்றாள் அந்த ஆங்கில நாளிதழின் சினிமா பெண் நிருபர். பழைய நட்பு. இந்த முறை சென்னை வந்தவுடன், ஒரு பேட்டி எடுத்து வெளியிடுகிறேன் என்று வந்து பார்த்தாள்.
சினிமாவும் வேண்டாம், பேட்டியும் வேண்டாம் என்றுவிட்டாள். நட்பாகச் சந்திக்க வருவதென்றால், எப்போதும் தன் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும் என்று மட்டும் சொல்லி அனுப்பினாள்.
நண்பர்களை எல்லாம் போய் சந்தித்தாள். தன்னை வைத்துப் படம் எடுத்தவர்களையும் டைரக்டர்களையும் போய் சந்தித்தாள். சிலர் சந்திப்பதைத் தவிர்த்தார்கள். ஏனென்று அவள் யோசிக்கவில்லை. கற்பனையில் கோபத்தையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்ளவில்லை. சந்தித்தவர்களும் பெரிதாக ஏதும் சொல்லிவிடவில்லை. அவர்கள் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.
அவளை அறிமுகப்படுத்திய இயக்குநர் முரளி மட்டும் அதிகநேரம் பேசினார். கணவர், குழந்தைகள், ஆர்வங்கள் என்று எல்லாம் விசாரித்தவர், சென்ற முறை தன்னால் உதவ முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார். தான் தொலைக்காட்சித் தொடர்கள் எடுப்பதில் ஈடுபட்டிருப்பதாகவும் நடிக்க வரமுடியுமா என்றும் கேட்டார் முரளி. புன்னகைத்தபடி மறுத்தாள். உன்னைப் போல் நடிகையின் பங்களிப்பு வேஸ்டாகப் போகக்கூடாது என்றார். அவள் மறுபடி புன்னகைத்தாள். சட்டெனத் தோன்றிய கோபத்தை, என்ன நினைத்துக்கொண்டாரோ, மறைத்துக்கொண்டார் முரளி.
தான் நடிக்க வாய்ப்பு கேட்டு வரவில்லை, நண்பர்களை எல்லாம் சந்திக்கவே வந்ததாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ஆங்கிலப் பத்திரிகையின் பெண் நிருபரும் இதையே சொன்னார். தொலைக்காட்சி இன்று பெரிய ஊடகமாக வளர்ந்து நிற்கிறது. உன் நடிப்பு ஆசைக்கு, திறமைக்கு, இங்கே நல்ல வாய்ப்பு என்றார். அப்போதும் புன்னகை சிந்தி மறுத்துவிட்டாள்.
உண்மையில் இது நிர்மலமான பயணம். எதிர்பார்ப்புகள் அற்ற பயணம். கற்பனைகள் அற்ற பயணம். எதார்த்த வாழ்வில் காலூன்றிய பின் மேற்கொண்ட பயணம். தன்னைத் தானே சோதித்துக்கொள்ள மேற்கொண்ட பயணம். எதிர்பார்ப்புகளோடு வந்த முந்தைய பயணங்கள் தந்தது வலியும் வேதனையும்தான். இம்முறை அப்படி இல்லை. மகிழ்ச்சியும் இனிய நினைவுகளுமே மிச்சம்.
வாசல் கேட் அருகே இருந்த அறையில் கூர்க்காவின் மனைவி குழந்தையைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு தூங்கியிருந்தாள். கம்பளிக் கதகதப்பில் அம்மாவின் அரவணைப்பில் தன்னை மறந்து அக்குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. நிம்மதியான உறக்கம்.
ஃப்ளாட் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள். செல்போனில் நான்கைந்து மிஸ்டு கால்கள். எல்லாம் அமெரிக்க எண்கள். கணவர், குழந்தைகள். புதிதாக ஒரு எண்ணும் மூன்று நான்கு முறை அழைத்திருந்தது. கூடவே ஒரு குறுஞ்செய்தியும் காத்திருந்தது. அதைத் திறந்தாள் அவள்:
Call immediately. You are my next heroine – Murali.
Venkatesh R
அழகான பெண் வேண்டும்! – ஆர்.வெங்கடேஷ்
சுந்தருடைய கால்கள் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கும்போதோ, தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும்போதோ, அந்த ஆட்டம் தெரியும். வளைந்த மூங்கில் கழிபோன்ற நீண்ட கால்கள் அவனுக்கு. தாமரை இலையென பாதங்கள் படர்ந்திருக்கும். பலமுறை அவனது அம்மா, அவனிடம் எடுத்துச் சொல்லியும் அவனது கால்கள் நின்றதில்லை. வேட்டியோ கால்சராயோ எதுவானாலும் அவனது கால்கள் தனித்து தென்படும்.
மரியாதையே தெரியவில்லை என்பதுதான் வீட்டில் உள்ளோருக்கு அவன்மீது இருந்த குறை. பெரியவர் உயர்ந்தவர் என்று எவர் வீட்டுக்கு வந்து கூடத்தில் உள்ள நாற்காலிகளில் அமர்ந்தாலும் சுந்தரும் போய் எதிரே உட்கார்ந்துவிடுவான். உட்கார்ந்தவுடன் அவனை அறியாமலே அவனது கால்கள் லேசாக ஆட ஆரம்பிக்கும். பேச்சு சுவாரசியம் கூடும்போது, அந்த ஆட்டம் தாளலயத்தை எட்டிவிடும்.
பேச்சு சுவாரசியம் என்பது அவனைப் பொறுத்தவரை, திருப்பதி மலையின் படியேறுவதுதான். ராஜஸ்தான் பாலியில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் பார்வதி அக்கா, வந்தவுடன் சுந்தரைத் தேடுவாள். கணவரோடு வந்தாலும் குழந்தைகளோடு வந்தாலும் தனியே வந்தாலும் மறக்காமல் திருப்பதி படியேறி போய் பெருமாள் தரிசனம் செய்வது அவளது வழக்கம். துணை சுந்தர்.
அவள் சென்னை வரும்முன்பே, அம்மாவுக்கு கடிதம் போட்டுவிடுவாள். சுந்தரைத் தயாராக இருக்கச் சொல்லி. ”அவனது தயாருக்கு என்ன? எப்போதும் தயார்தான்” என்பாள் பெரியம்மா. அவனுக்கு வேலை இல்லை, படிப்பு இல்லை என்பது பெரியம்மாவின் குறைகளில் தலையானது. ஆனால், வெளியே காட்டிக்கொள்ள மாட்டாள்.
சுந்தர் உடனே மாம்பலத்தில் இருக்கும் தேவஸ்தான அலுவலகம் போய் திருப்பதியில் உள்ள கூட்டம் பற்றி விசாரித்து வந்துவிடுவான். இத்தனைக்கும்,
அதற்கு ஒரு வாரம் பத்து நாள்களுக்கு முன்புதான், திருப்பதி போய்விட்டு வந்திருப்பான் சுந்தர். ஏதேனும் ஒரு உறவினர் கூப்பிட்டிருப்பார். அல்லது, நண்பர்களாகச் சேர்ந்து போயிருப்பார்கள். அக்கா வரும் செய்தி வந்தவுடன், அடுத்த பயணத்துக்குத் தயாராகிவிடுவான்.
விடிகாலை வந்து சேரும் ரயிலுக்கு அதற்கு முன்பே கிளம்பி, சென்ட்ரல் ரயில் நிலையம் போய் நிற்பான். ஆட்டோவோ டாக்ஸியோ, அக்கா கொண்டு வரும் பெட்டிகளின் அளவுகளுக்கேற்ப வண்டியை அமர்த்திக்கொண்டு, வீட்டுக்கு அழைத்து வருவான். வந்ததில் இருந்து ஆரம்பிக்கும் புராணம்.
கடந்த முறை பார்வதியோடு படியேறினபோது என்னானது என்று தொடங்கும் பேச்சு. அது ஆறு மாதங்களோ ஒரு வருடமோ முந்தையக் கதையாகக் கூட இருக்கும். ஆனால், அன்றுதான் அக்காவோடு படியேறினதாகத் தொடங்கும். பெரும்பாலும் படியேற முடியாமல் ஒவ்வொரு இடத்திலும் அக்கவும் அத்திம்பேரும் உட்கார்ந்தது, காளி கோபுரத்தில் சூடான பஜ்ஜி சாப்பிட்டது, முழங்கால் முட்டியில் ஏற முடியாமல் திண்டாடியது என்று போய், கடைசியாக பெருமாளைச் சேவித்தது வரை வந்து சேரும்.
கேட்பவருக்கு கொஞ்சம் எரிச்சல் வரவே செய்யும். ஆனால், காண்பித்துக்கொள்ள மாட்டார்கள். பல காரணங்கள். ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக திருப்பதி படியேறி வந்து வழிபடுகிறேன் என்று வேண்டிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் வீட்டில் வளரும் குழந்தைகளின் நலன் கருதியே இந்த வழிபாடு, வேண்டுதல் செய்யப்பட்டிருக்கும். அதுவும் உடல்நலன் இதில் மிகவும் முக்கியம். பல சமயங்கள், அவர்கள் திருப்பதிக்கு வேண்டிக்கொண்டு ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துண்டு துணியில் முடித்து வைத்துவிடுவார்கள்.
இன்னொரு அக்கா டாட்டா நகரில் இருந்து சென்னை வருவாள். அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பது குறை. திருப்பதி படியேற அவளுக்கு பல ஆண்டுகளாக அந்த ஒரு காரணமே போதுமானதாக இருந்தது. வீட்டுக்கு வரும் சம்பந்தி வீட்டார், தூரதேச நண்பர்கள் எல்லாம் மறக்காமல் போகுமிடம் திருப்பதி.
அவர்கள் வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் திருப்பதிக்கு மட்டும் படியேறி வருவதாகவே வேண்டிக்கொண்டு இருப்பார்கள். முடியிறக்குகிறேன் என்று வேண்டிக்கொள்பவர்களைவிட, இவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.
கீழ் திருப்பதி வரை எந்த பஸ்ஸில், எந்த ரயிலில் எப்படிப் போனால், சரியாக இருக்கும்; அப்புறம் மேல் திருப்பதி படியேற எவ்வளவு நேரம் பிடிக்கும்; அல்லது திருப்பதிக் கோவில் முறையில் இருக்கும் தரிசன நேரங்கள் என்னென்ன; அதற்கு எப்படிச் சரியாக திட்டமிட்டால் போய்ச் சேரலாம், முக்கியமாக கீழ்த் திருப்பதி மற்றும் மேல் திருப்பதியில் என்னென்ன உணவகங்களில் நல்ல உணவு கிடைக்கும் போன்ற அத்தனை விவரங்களும் சுந்தரிடம் துல்லியமாக உண்டு.
என்ன ஒரு பிரச்னை என்றால், இதையெல்லாம் அவனிடம் உட்கார்ந்து கேட்டால், ஒன்றும் புரியாது. கோவையாக அவனுக்குச் சொல்லத் தெரியாது. இங்கே ஒன்று சொல்லுவான், திடீரென்று வேறொன்று சொல்வான். இரண்டுக்கும் உள்ள தொடர்பை சேர்க்கவே முடியாது. ”பேசக் கூடச் சரியாத் தெரியல, சரியான அச்சுபிச்சு” என்று பெரியம்மா குறைபட்டுக்கொள்வாள். அதனாலேயே அவனை உடன் அழைத்துப் போய்விடுவது ரொம்பவும் சுலபமான வழியாக வீட்டில் கருதப்பட்டது.
பெரியவர்கள் படியேறும்போது, சுந்தரைப் போல் உதவியானவர்கள் எப்போதும் தேவை. உடலை மட்டும் தூக்கிக்கொண்டு மற்றவர்கள் ஏறினால் போதும். தேவைப்படும் பிற பொருள்கள் எல்லாவற்றையும் சுந்தர் தோளில் சுமந்துகொள்வான். ஒரு கட்டத்தில், கையைப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாக ஏறவும் உதவுவான். அவசரம் கிடையாது. பரபரப்பு கிடையாது.
ஒவ்வொருவரும் படியேற எவ்வளவு நேரமாகும் என்று வருபவர்களின் உடல்வாகைப் பார்த்தே சுந்தர் சொல்லிவிடுவான். அவனோடு போட்டி போட்டுக்கொண்டு ஏறவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பார்வதி நினைத்துக்கொள்வாள். எந்தப் போட்டியாக இருந்தாலும் முதல் ஆயிரம் படிகளுக்குள்ளேயே முடிந்துபோய்விடும். அதற்குமேல் எந்த உடலும் அசதியும் நோவும் கண்டுவிடும்.
பார்வதி அக்காவின் அப்பா, சுந்தருக்குச் சித்தப்பா. அவருக்குத் தம் வக்கீல் தொழிலில் பிரச்னை ஏற்பட்ட போது, ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்றும் திருப்பதி செல்லத் தொடங்கினார். அவருடைய ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோதிடர், திருமலைக்குப் படியேறி வந்து வணங்குகிறேன் என்று வேண்டிக்கொள்ளுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்றாராம். கிட்டத்தட்ட 21 அமாவாசைகள் அவர் படியேறினார். அவரோடு சுந்தரும் துணைக்கு போக ஆரம்பித்தான்.
கீழ்த் திருப்பதியில் இருந்து மேலே ஏற குறைந்தபட்சம் நான்கரை மணி நேரம் ஆகும். சித்தப்பா மெதுவாக ஏறுவார். அவருக்கு அப்போதே வயது ஐம்பதுக்கும் மேல். அவருக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக்கொண்டே மலையேறுவார். சுந்தர் அவரோடே இருப்பான். முதலில் ஐந்நூறு படிக்கட்டுகள் வரை உற்சாகம் மிதக்கும், விறுவிறுவென ஏற முடியும். அதன்பிறகுதான் உடலின் உபாதைகள் தெரியத் தொடங்கும்.
அதன்பிறகு நூறு படிக்கட்டுகளுக்கு ஒருமுறை நின்று, உட்கார்ந்து, தண்ணீர் குடித்து, நான்கு வார்த்தை பேசி, சட்டைகளைத் தளர்த்தி விட்டு, காற்றை நெஞ்சுக்குள் வாங்கி, பசுமையைப் பருகி மீண்டும் நடக்கத் தொடங்கும்போது, ஒருவித ஆசுவாசம் வரும். அடுத்த நூறு படிக்கட்டுகளுக்குள் மீண்டும் முட்டுகள் நோகத் தொடங்கும். சித்தப்பா நின்றுவிடுவார்.
சுந்தர் சிரித்துக்கொண்டு நிற்பான். அவன் தோளிதான் தண்ணீர் பாட்டில், ஒரு மாற்று உடை, துடைக்கும் டவல் எல்லாம் கொண்ட பை இருக்கும். அவர்களை கடந்து எண்ணற்ற ஆந்திர கிராம பக்தர்கள் படியேறிக்கொண்டே இருப்பார்கள். அதுவும் ஆந்திரப் பெண்கள், ஒவ்வொரு படிக்கட்டாக பொட்டு வைத்துக்கொண்டும், தொட்டுக் கும்பிட்டுக்கொண்டு, குனிந்த தலை நிமிராமல் கிடுகிடுவென படியேறுவார்கள்.
காளி கோபுரம் தாண்டியபின், ஓரளவுக்கு தரைமட்டமான சாலைப் பயணம் தொடரும். ஒரு கட்டத்துக்குப் பின் சாலையோரம் நடக்கவேண்டும். நடக்க நடக்க மாளவே மாளாதோ என்னும்படியான நீண்ட பயணம் அது.
சித்தப்பாவுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் நூறு படிக்கட்டுகள்வரை கூட நடக்க முடியவில்லை. நூறு ஐம்பதும் ஆயிற்று. பின்னர் அரை மணி நேரம் ஒரு மலையோரத்தில் அமர்ந்து காற்று வாங்கத் தொடங்கினார். உண்மையில் கடவுள் தன்னைச் சோதிப்பதற்காகவே இத்தனை கடுமையான பயணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்று அவருக்குத் தோன்றியது.
வாழ்வில் இத்தனை நாள் செய்த தவறுகள் எல்லாம் ஒன்றாகத் திரண்டு படிக்கட்டுகளாயினவோ என்னவோ? கடக்க நடக்க மாளவே இல்லையே? அதைக் கடக்கும் உறுதியும் திண்மையும் தளர்ந்துபோய்விட்டதே? காற்று இன்னும் பலமாக வீசிக்கொண்டிருந்தது.
என்ன விரும்புகிறார் கடவுள்? என் உறுதி, என் முயற்சி, என் கர்வம், என்னுடைய நான் எல்லாவற்றையும் இந்தப் படிக்கட்டுகளில் சமர்ப்பித்துவிட்டு மேலே வரச் சொல்கிறாரோ? சட்டென தான் நிறைய யோசிக்க, இந்த நீண்ட நடை உதவுவதை அவரால் உணர முடிந்தது. இப்படி ஒரே சீராக நான்கு மணி நேரம் யோசிக்கவே முடிந்ததில்லையே.
சுந்தர் காலை ஆட்டிக்கொண்டு படிக்கட்டு ஓரத்தில் உட்கார்ந்திருந்தான். மேலே படியேறுவோரை அவன் பார்வை தொடர்ந்துகொண்டிருந்தது. நான்கைந்து பையன்கள் எதிர்புறம் கீழே ஓடி வந்துகொண்டிருந்தார்கள். சுந்தர் முகத்தில் தெரிந்த அபரிமிதமான அமைதி அவரை வியப்பில் ஆழ்த்தியது. வலி, வேதனை என்று இதுநாள்வரை ஒருமுறை கூட அவன் பாயை விரித்துப் படுத்ததில்லை என்பது ஏனோ அப்போது ஞாபகம் வந்ததுபோல் தோன்றியது.
”கால் வலிக்கலியாடா சுந்தர்?”
”இல்ல சித்தப்பா. நடந்து நடந்து பழக்கமாயிடுச்சு. ”
”நீ மட்டும் வந்தா எவ்வளவு சீக்கிரம் மலையேறுவே?”
”ரெண்டரை மணி நேரம் போதும் சித்தப்பா.”
இவனை இத்தனை ஆண்டுகளாக ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது அவருக்கு மனத்தில் உறைத்தது. எத்தனை ஆண்டுகளாக மலையேறுவான்? அவருக்கு நினைவு தெரிந்து பத்து, பனிரெண்டு ஆண்டுகளாக இருக்கலாம். இவனும் தன்னுடைய சின்ன மகளும் ஒரே வயது.
ஆறாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. கடலூர் பக்கம் ஏதோ ஒரு ஊரில் அவன் அப்பாவுக்கு அரசு வேலை இருந்தது. அவர் காலமானபின்பு, இவனை அழைத்துக்கொண்டு இவனது அம்மா சென்னை வந்து சேர்ந்தது, அவர்களது பெரிய வீட்டின் ஒரு சிறு அறையில் பின்னால், இவர்களைக் குடிவைத்தது எல்லாம் ஒரு கனவுபோல் அவருக்கு ஞாபகம் வந்தது.
இன்றுவரை, இவனது அம்மா தனக்கென்றோ, இவனுக்கென்றோ எதுவுமே வந்து கேட்டதில்லை. வக்கீல்கள் நிறைந்த குடும்பத்தில், இப்படி ஒரு ஜீவன் இருப்பதே யார் கவனத்திலும் படவில்லை. ஆனால், அலுவலகத்தில் அவன் நிற்பதையும் ஏதோ உதவுவதையும் அவர் கவனித்திருக்கிறார். எல்லாம் வெளுத்துப் போன சித்திரம் போலிருந்தது.
அவ்வப்போது, அவன் ஒரு அச்சுபிச்சு, பேசத் தெரியவில்லை, காரிய சாமர்த்தியமில்லை என்றெல்லாம் பேச்சு அடிபடுவதை காதில் வாங்கியிருக்கிறார். ஆனால், அது மூளையின் ஏதோ ஒரு அடுக்கில் போய் உட்கார்ந்திருப்பது இப்போது நினைக்கும்போது வெளியே வரத் தொடங்கியது. யாரும் அவனைப் பள்ளிக்கூடம் போவென்றோ, படியென்றோ வற்புறுத்தியதில்லை. பலருக்கும் சுந்தர் செளகரியமாக இருந்திருக்கிறான். எதுவேண்டுமானாலும் ஓடிப்போய் செய்துதரக்கூடிய செளகரியம் கிடைத்தால் யார்தான் வேண்டாம் என்பார்கள்.
”மாசத்துக்கு எத்தனை தடவைடா திருப்பதி வருவே?”
”ரெண்டு மூணு தடவை வந்துடுவேன் சித்தப்பா..”
”பெருமாள்கிட்ட என்ன வேண்டிப்ப?”
”எங்கம்மா மாதிரி அழகான ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும். அதுக்கு நல்லதா ஒரு வேலை கிடைக்கணும்.”
வீட்டினர் நடுவே இவன் இப்படிப் பேசியிருந்தால், அவன் அம்மாவே கோபப்பட்டு இருக்கக்கூடும். இப்படி வளர்ந்து நிற்கும் ஒருவன் பேசும் பேச்சாக இது எடுத்துக்கொள்ளப்பட்டிருக்காது. அசட்டுத்தனம் என்றிருப்பார்கள். சித்தப்பா அப்போதும் எதுவும் பேசவில்லை.
அடுத்த அமாவாசைக்குத் திருப்பதி பயணம் அவர் மேற்கொள்ளும்முன் வேறொரு விஷயம் நடந்தது. ஒரு நாள் மாலை அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது, கூரியர் எடுப்பவன் ஒருவன் கதவுக்கு வெளியே நிற்பதைப் பார்த்தார். அவன் போனபின்பு, அலுவலக குமாஸ்தாவைக் கூப்பிட்டார்.
”தினமும் எத்தனை கூரியர் அனுப்புவீங்க கணேசன்?”
”கட்சிக்காரங்களுக்கு லெட்டர் போட்டுடுவோம் சார். கூரியர்ல அனுப்பறது ஒரு நாலைஞ்சு கவர்ங்க இருங்க சார். ”
”நாளைலேருர்ந்து மெட்ராஸ்குள்ள அனுப்பற கூரியரையெல்லாம் சுந்தர்கிட்ட கொடுத்துடுங்க. அவன் போய் டெலிவரி பண்ணட்டும். ”
அப்போது ஆரம்பித்தது அவன் பயணம். இப்போதும் நீங்கள் அவனை ஏதேனும் ஒரு சாலையில் பார்க்கலாம். மழையோ வெயிலோ எதுவானாலும், வேட்டியை கொஞ்சம் மேலே கட்டிக்கொண்டு, இரண்டு தோள்களிலும் ஜோல்னா பைகள் நிறைய கடிதங்கள் தொங்க, விறுவிறுவென உங்களை ஒருவர் கடந்து போனால், ஒரு நிமிடம் நின்று பாருங்கள். கால்கள் கொஞ்சம் வளைந்து மூங்கில் கழி போல் இருக்கும். தாமரை இலையென பாதங்கள் படர்ந்து இருக்கும்.
இப்போதும் பேச்சில் கொஞ்சம் அச்சுபிச்சுத்தனம் உண்டு. ஆனால், அவன் ஆசைப்பட்டதில் இரண்டாவது நடந்துவிட்டது. விரைவில் முதலாவதையும் நடத்திவிடவேண்டும் என்று அவன் அம்மா மெனக்கட்டுக் கொண்டிருக்கிறாள். நல்ல அழகானப் பெண் இருந்தால், கொஞ்சம் சொல்லுங்களேன், பிளீஸ்!
Venkatesh R
34 comments:
//தனிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லை. எழுத ஆரம்பித்த காலத்தில் பிரசவமான படைப்பு எப்படி இன்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது என்பதை பார்க்கவும், சின்ன ஊற்று எப்படி வற்றாத ஆறாக விரிந்தது என்பதை ஆராயவும்.
//
//இப்படி யோசிக்க யோசிக்க விதை, விருட்சமாக வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். //
எஸ்.ரா. Yes.Rocks.
எஸ்.ராவைப் பற்றி அறியாமலேயே ‘காட்டின் உருவம்’ என்கிற சிறுகதைத் தொகுதியை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி வாசித்த நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எஸ்.ரா. சிறுகதையின் வடிவத்தில் பல்வேறு சோதனைகளை முயன்று பார்த்துக் கொண்டே வந்திருப்பதை தொடர்ந்து வாசித்தால் அவதானித்துக் கொள்ள முடியும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் பெரும்பான்மையான சிறுகதைகளை ஒரே நேரத்தில் படிப்பது ஒரு சலிப்பான வாசிப்பனுபவத்தைத்தான் தரும் என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். சுவாரசியமாக எழுதும் சுஜாதாவிற்கும் இதே நிலைதான். மற்றவருக்கு இது மாறுபடலாம்.
எழுதப்பட்டதை விட எழுதப்படாத விஷயங்களை உள்நுழைத்து வாசகனின் கற்பனைக்காக விட்டு வைப்பது ஒரு எழுத்தாளனின் முக்கிய அம்சம். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரு சிறுகதைகளும் அந்த நோக்கில் வெற்றி பெற்றிருக்கின்றன என்பது உங்கள் விவரிப்பில் தெரிகிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
இதை ஒவ்வொரு எழுத்தாளரையும் அடிப்படையாக வைத்து ஒரு தொடராகவே எழுதலாம் என்கிற வேண்டுகோளை முன்வைக்கிறேன். அடுத்த பதிவு ஆதவனாக இருக்கலாம் என்கிற நேயர் விருப்பத்தையும். 🙂
//நண்பர் சுரேஷ் கண்ணன் விரிவாக எழுதுவார்//
அதைப் பற்றியும் நீங்களே எழுதிவிடலாம். உங்கள் அளவிற்கு நேர்த்தியாக என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை.
2009 ‘தினகரன் தீபாவளி மலரில்’ வெளியான இவரது ‘புர்ரா…’ சிறுகதை விரிக்கும் உலகு, வேலைக்கு செல்லும் கணவன் – மனைவியின் உலகை, அவர்களது குழந்தையின் அவஸ்தையை வெகு நுட்பமாக ஆராய்வது.
இடுகையில் குறிப்பிட்டுள்ள ‘பணம்’ அல்லது ‘கடன்’ என்னும் கருத்தைக் கொண்டு புதுமைப்பித்தனில் ஆரம்பித்து பலரும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். அவைகள் இதுபோல் நாவலாக – புதினமாக விரிகிறதா என்பதை வாசித்தவர்களின் கவனத்துக்கே விட்டுவிடுகிறேன்.
எத்தனை சிறுகதைகள் அல்லது புனைவுகள் இதுபோல் தன்னுள் நாவலை மறைத்து வைத்திருக்கின்றன என்றுப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் விஜயனும் சரத்பாபுவும் சண்டையிட்டுக் கொள்கிற காட்சி நினைவுக்கு வருகிறது. இந்த அளவிற்கு நுட்பமான காட்சிகள் தமிழ் சினிமாவில் சொற்பமே. உங்கள் பதிவின் சாரத்தைப் போன்று, பார்வையாளன்தான் அவர்களுக்குள் நிகழ்நத மோதலை யூகிக்க வேண்டும்.
படைப்பு பாதி என்றால் நீங்கள் தங்கள் பரந்த கற்பனையின் மூலம் மீதியை நிரப்பி கொள்கிரீர்கள். இது போன்ற வாசகன் கிடைக்க எழுத்தாளர்கள் குடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒன்று என்னை போன்ற சாதாரண வாசகன் தங்கள் அளவு கற்பனை குதிரையை ஓட்ட முடியாது. :))
நிற்க. நானும் எஸ். ரா வை ரசிப்பவனே. பகிர்வுக்கு நன்றி
அன்பின் சுரேஷ், விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி. ஆதவன்? நல்ல யோசனை. செய்யலாம். எஸ்ராவுடன் உரையாடியதை குறித்து நீங்கள் எழுதுவதே சரி. வாசிக்க காத்திருக்கிறேன்.
அன்பின் இராஜ ப்ரியன், வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மோகன் குமார், தன்னடக்கம் காரணமாக உங்களை நீங்கள் சாதாரண வாசகர் என்று சொல்லிக் கொண்டாலும், அப்படியில்லை என்று நன்றாகவே தெரியும். வாசகரில் சாதாரணமானவர் / அசாதாரணமானவர் என யாராவது இருக்கிறார்களா என்ன?
தோழமையுடன்
பைத்தியக்காரன்
பிளீஸ் ஹெல் மீ…
கதை எங்கிருந்து ஆரம்பிக்குது எந்த ஊரு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு,
அவர்களுக்குள் நட்பு எப்படி உருவாச்சு என்பதையும் வாசகரே கற்பனை செஞ்சுக்கனும் ரைட்டு…
முடிவையும் வாசகரே இப்படி அல்லது அப்படின்னு விதவிதமா கற்பனை செஞ்சுக்கனும்… ரைட்டு.
இப்படி வாசகரை கற்பனை செஞ்சுக்க விடுவதுதான் புனைவு என்பது வரை புரியுது…
நடுவில் தம்மாதுண்டு கதை சொல்வதுக்கு பதில் தலைப்பை மட்டும் கொடுத்துவிட்டால் வாசகரே கதையையும் கற்பனை செஞ்சுக்கவிட்டா அது பெரும் புனைவா?
பிளீஸ் ஆன்சர் மை கொஸ்டினு? (15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டும் வெச்சு கேள்வி கேட்டு இருக்கேன்)
//அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.//
அன்பின் குசும்பன், நீங்கள் அனுப்பிய 15 பைசா அக்னாலெஜ்மெண்ட் கார்ட்டு இன்னும் வந்து சேரவில்லை. சேர்ந்ததும் பதில் அனுப்புகிறேன் 🙂
அன்பின் தாமோதர் சந்துரு, வருகைக்கும், நண்பர் அமரபாரதிக்கு பதில் சொன்னததற்கும் நன்றி.
அன்பின் மகேந்திரன்.பெ, பிரியத்துகுரிய குசும்பனுக்கு பதில் சொல்லிவிட்டேன்…
தோழமையுடன்
பைத்தியக்காரன்
அவரே தனது சிறந்த சிறுகதைகளில் ‘தாவரங்களின் உரையாடல்’ மற்றும் ‘புலிக்கட்டம்’ என்ற இரு சிறுகதைகளைக் குறிப்பிட்டு இருந்ததாக ஞாபகம். இரண்டுமே இன்னும் படிக்க வாய்க்கவில்லை.
அனுஜன்யா
முதல் வாசிப்பில், இது எஸ்ராவின் கதாவிலாசத்தின் தொடர்ச்சியோ, என்று தான் எனக்கு தோன்றியது
சிவராமன் நான் எஸ்ராவின் புத்தகங்கள் வாசிப்பேன் .
நல்ல விமர்சனம் எழுதியிருக்கீங்க
இதே போல எஸ் ராவின் ஒரு சிறுகதை உண்டு (தலைப்பு மறந்து விட்டேன், இருக்கன்குடி கோவிலில் மொட்டை அடிக்கும் ஒரு பெண் பற்றிய கதை,
////அந்தச் சாவியைக் கொண்டு கதவை திறக்க வேண்டியது மட்டுமே வாசகனின்/வாசகியின் வேலை. அப்படி அவன்/ள் திறக்கும்பட்சத்தில் விரிவது 7 கடல்கள், 7 மலைகள் தாண்டி மறைந்திருக்கும் வாழ்க்கையின் ரகசியம்.////
என்னமோ போங்க. எனக்கு ஒன்னும் புரியல. எதுக்கு இவ்வளவு சிரமப்படனும். எழுதியிருக்கறத படிச்சுட்டு நேரடியான அர்த்தம் புரிஞ்சா போதாதா?
அவரது எத்தனை எழுத்துக்களைப் படித்தாலும், ’உறவும், பிரிவும் இன்றி’ என் ஞாபக அடுக்குகளில் எப்போதும் மேலே மிதந்து கொண்டே இருக்கிறது. அடேயப்பா!
பகிர்ந்தமைக்கு நன்றி தோழர்!
வாசகபர்வம்
உபபாண்டவம் வாசிக்க கிடைத்தது
இம்முறை தொகுப்பு வாங்கி வர வேண்டும் இந்தியாவிலிருந்து வரும்போது….
வாசகனுக்கான வெளியை உருவாக்கும் சொற்கள் வாய்த்திருக்கிறது அவரின் கதைகளுக்கு
வாசக பார்வை.. உள்ளங்கையில் ஊற்றி ருசி பார்க்கும் கரம்
அன்பின் சங்கர், ஸ்டார்ஜன், அன்புடன் அருணா, குப்பன் யாஹு, வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.
அன்பின் மாதவராஜ், முதலில் வாழ்த்துகள். பதிவர்களின் படைப்புகளை நூலாக நீங்களும் பவாவும் அருமையாக கொண்டு வந்திருக்கிறீர்கள். பக்கத்துக்கு பக்கம் உங்கள் உழைப்பு தெரிகிறது என்பதைவிட, பதிவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு நிரம்பி வழிகிறது என்று சொல்வது மிகப் பொருத்தமாக இருக்கும். தனி இடுகையாக, விரிவாக இதுகுறித்து எழுதப் போகிறேன். எஸ்ரா சிறுகதைகள் குறித்து நீங்கள் பகிர்ந்திருக்கும் விதம், அருமை.
அன்பின் நேசமித்ரன், வருகைக்கும், நெகிழ்ச்சியான பின்னூட்டத்துக்கும் நன்றி.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
http://www.kaveriganesh.blogspot.com
நல்ல பகிர்வுக்கு நன்றி
சிறுமி வாங்கிய கடன் விவரங்களை, குடும்பம் காலி செய்துவிட்டுப்போன அறை சுவற்றில் நாம் படித்திருக்கிறோம்.
எங்கோ வடகிழக்கு மூலை மாநிலத்தில் உள்ள ஏரியின் கண்கள், நம்மை உற்று நோக்குவதை நாம் உணர்ந்திருக்கிறோம்.
நிகழ் களத்தில் நம்மையும் அழுந்திக் காலூன்ற வைப்பதுதுதான் எஸ்ராவின் தனிச்சிறப்பு.
அன்பின் rama, நேர்மையான உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. எஸ்ரா எழுத்துக்கள் ஒரு வாசகனாக எனக்கு சலிப்பை தரவில்லை என்பதை இங்கு பதிவு செய்வது என் கடமை.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
படிச்சி முடிச்சிட்டேன், முதன் வேலையா அவருக்கு சுட்டி குடுத்துட்டேன் – சரி அவரும் படிக்கட்டும் அவரை நான் ஏன் பிங்கனும்.
விமர்சிக்கும் அளவுக்கு தெளிவில்லை
உங்கள் பார்வை இரசிக்கும்படியாக …
எஸ்.ரா. எடுத்து எழுதுகிற சூழ்நிலைச் சிக்கல் அவருடைய ஓரொரு கதையையும் வாசிக்கையில் என்னை வியப்பில் ஆழ்த்தும். உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.
ஆனால் மொழிநடையில் அவருக்கு சற்று கவனக் குறைவு உண்டோ என்று நான் எண்ணுவதுண்டு. (‘எறும்பு ஊர்வது மாதிரி கையெழுத்து’ என்கிற சொல்லாடலை, எடுத்துக் காட்டாக, இரண்டு மூன்று கதைகளில் வாசித்துவிட்டேன்). அல்லது அவருக்கு வந்து முட்டும் கருத்துகளின் பெருக்கத்தை அணைகட்டித் தருகிற அளவுக்கு மொழிவல்லமையை வளர்த்துக் கொள்வதில் அக்கறையற்று இருக்கிறாரோ? ‘Effect’க்காக எழுதப்படுவது நல்ல எழுத்தன்று என்று நானும், ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பது வரை, கொள்கை கொண்டிருந்தேன். எஸ்.ரா. தனது தளத்தில் ‘Story of sign’என்றொரு குறும்படத்தைப் பரிந்து இட்டிருக்கிறார். அதற்கு நன்றி, ஆனால் அவருக்கே அதைப் பரிந்துரைக்கக் கூச்சமாக இருக்காதா? அவர் craftsman-ஓ இல்லையோ ஐயமில்லாமல் ஒரு கலைஞன்.
அது யார் rama? சென்ற பதிவின் பின்னூட்டத்திலும் அவர் கவனம் கவனிக்கப்படும்படியாக இருந்தது.
– ராஜசுந்தரராஜன்
உறவும் பிரிவும் இன்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். உங்கள் பதிவு கண்ட பிறகு, மீண்டும் வாசித்து, பின் ̀தெரிந்தவர்களையும்’ வாசித்தேன். 80களின் பல கதை சொல்லல்கள் நம் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. வண்ண நிலவன், வண்ணதாசனை படித்து நெகிழ்ந்திருக்கிறோம். அந்தவகையில் எனக்கு வண்ண நிலவனின் கதை வாசிப்பனுபவம் போல இந்த இரண்டு கதைகளும் இருந்தன. (வண்ணதாசனின் தளம் வேறு.) ஆனால் நீங்கள் முன்வைக்கும் தன்மைகள் கதைக்கு இருக்கின்றனவா என்று எனக்கு மிகவும் சந்தேகமாக உள்ளது.
இரண்டு கதைகளும் தட்டையான மொழியில், ஒற்றை பரிமாணத்தில்தான் உள்ளன. அதை குறையாக நான் சொல்லவில்லை. ஆனால் நீங்கள் சொல்வது போல இரு சிறுகதைகளும் ஒரு நாவலை உள்ளடக்கியதாக எனக்கு தோன்றவில்லை. சிறுகதைகளை முன்வைத்து நீங்கள் உங்கள் வாசிப்பை விரிப்பது உங்கள் அக உலகம் சம்பந்தப்பட்டது. அதை நீங்கள் எழுதுவது சுவாரசியமாக இருக்கலாம். ஆனால் அது உங்கள் வாசிப்பு மட்டுமே. இது பல கதைகளுக்கு (வண்ண நிலவனின் கதைகளுக்கும்) சாத்தியமாகலாம். ஆனல் எஸ்ரா அப்படி பல நுட்பங்களை உள்ளடக்கி, மௌனத்தை கிளை கதைகளாக மாற்றியதாக, இந்த கதைகளில் எனக்கு தோன்றவில்லை.
̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.
அன்பின் மகாகவி, தங்கள் வருகையும் அவதானிப்பும் அருமை. //உலகின் சிறந்த எழுத்தாளர்கள் தம் படைப்புகளில் வருவதற்கு நிகரான வாழ்க்கைச் சிக்கல்களைக் கண்டு புனைகிறார்.// என்பது உண்மை. மொழிநடை குறித்த உங்கள் விமர்சனத்தை, நிச்சயம் எஸ்ரா கவனத்தில் கொள்வார்.
அன்பின் ரோசா, சட்டென நூலை பிடித்துவிட்டீர்கள். ஆரம்பக்கால எஸ்ரா சிறுகதைகளில் வண்ணநிலவனின் பாதிப்பு உண்டு. பிறகு உலக இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்து அந்த பாதிப்பிலிருந்து விலகினார்.
எஸ்ரா சிறுகதைகள் எழுதப்படாத நாவலை சொல்வதாக எனக்கு தோன்றியது. அந்த வாசக அனுபவத்தையே இடுகையாக்கினேன்.
//̀கடன்’ என்ற கருப்பொருளை புதுமைப்பித்தன் தொடங்கி பலர் கையாண்ட விதம் பற்றிய உங்கள் பார்வையை எழுதினால் சுவாரசியமாக இருக்கும்.// முயற்சிக்கிறேன் ரோசா.
தோழமையுடன்
பைத்தியக்காரன்