Archive

Posts Tagged ‘Shows’

What does ‘walk the talk’ mean during Indian Freedom Movement with Movie stars?

July 16, 2012 Leave a comment

“நாடகமும் சினிமாவும்’ நூலில் ஏ.எல்.எஸ்.வீரய்யா.

ஈரோட்டில் ஆகஸ்டு மாதத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தது.

“தேசியப் பாடல்களைத் தவிர சுதந்திரம் பெறும்வரை வேறு எந்தப் பாடலையும் பாடமாட்டேன்’ எனச் சபதம் பூண்டு, செயலிலும் அதைக்காட்டி வந்த நடிகை எம்.ஆர்.கமலவேணி. சபதப்படி, விடுதலைப் போராட்டப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். தயாராக நின்ற போலீஸôர், “”பாடாதே, பாடினால் கைது செய்வோம்” என்று கத்தினார்கள்.

“”பாடுவேன், கைது செய்” என்று மேடையிலிருந்து கர்ஜித்த கமலவேணி, கம்பீரமான தொனியில் “”போலீஸ் புலிக் கூட்டம், நம்மீது போட்டு வருது கண்ணோட்டம்” என்று பாடினார்.

கைது செய்தார்கள். கைக்குழந்தையோடு ஆறு மாதம் சிறையிலிருந்தார்.

மதுரையில் நடிகை கே.பி.ஜானகி ஆகஸ்ட் போராட்டத்தில் கைதானார்.

“”கலெக்டர் கடவுள் அல்ல. கான்ஸ்டபிள் எமனுமல்ல, எதற்கும் அஞ்சோம்” என்று பாடியவாறு எம். எஸ். சிதம்பரநாதன் போராட்டத்தில் புகுந்தார்.

Kavinjar Vaali: ‘I tried to cast Sivaji Ganesan and Jeyandira Saraswathi in my Plays’

July 16, 2012 Leave a comment

‘நினைவு நாடாக்கள்’ நூலில் கவிஞர் வாலி

திருவானைக்கோவில். அங்கு ஒரு எலிமெண்டரி ஸ்கூல். ஸ்ரீரங்கம் உயர்நிலைப்பள்ளியின் பராமரிப்பில் உள்ளது. அங்கு “காலேஜ் குமாரி’ என்று ஒரு நாடகம் நான் எழுத,பள்ளி மாணவர்களை வைத்துப் போட்டேன்.

அதன் ஒத்திகையை மாலை நேரங்களில் பார்க்க இரு பையன்கள் வருவார்கள். இருவரும் 20-வது வயதை நெருங்கிக் கொண்டு இருந்தவர்கள். சற்று முன்பின் இருக்கலாம்.

குடுமி வைத்துக்கொண்டு செக்கச் செவேலென்றிருந்த பையனை- நாடகத்தில் பெண் வேஷம் போடக் கேட்டேன். அவன் வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்ததால் வேஷம் கட்ட ஒப்பவில்லை.

இன்னோர் இளைஞன் நாடக ஒத்திகையை வேடிக்கை பார்க்க வந்தவன். பக்கத்தில் உள்ள ப.ந.ப. பஸ் டெப்போவில் பயிற்சி மெக்கானிக்காகப் பணியாற்றிக் கொண்டிருப்பவன். ஏற்கெனவே “பாய்ஸ் கம்பெனியில்’ இருந்து பழக்கப்பட்டவன்.

அவனுக்கு நடிக்கும் ஆற்றலும் ஆர்வமும் இருந்தும் பள்ளி மாணவனாக இல்லாததால் நான் சொன்ன பெண் வேஷத்தைப் போட இயலவில்லை!

நாடகத்தில் பெண் வேடம் போட மறுத்த வேத பாடசாலை மாணவன்தான்- காஞ்சி மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!

நாடகத்தை வேடிக்கை பார்த்த ப.ந.ப. பஸ் டெப்போ பயிற்சி மெக்கானிக்காகப் பணி புரிந்த பையன் – கணேச மூர்த்தி- சிவாஜி கணேசன் என்றால் உங்களுக்கு நன்றாகப் புரியும்!

Carnatic vocalist Pattammal passes away: Anjali & Memoirs

July 16, 2009 Leave a comment

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் காலமானார்

சென்னை, ஜூலை 16:

பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞர் டி.கே.பட்டம்மாள் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னையில் இன்று காலமானார்.

இந்திய அளவில் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகிகளில் முக்கியத்துவம் பெற்று போற்றப்படுபவர்களில் இவரும் ஒருவர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் கர்நாடக இசையின் முப்பெரும் தேவியராக விளங்கியவர்கள் ஆவர். இவர்களில் பட்டம்மாள் தவிர மற்ற இருவரும் ஏற்கெனவே காலமாகிவிட்டனர்.

ஆயிரக்கணக்கான மேடைகளில் இசையை பரப்பிய டி.கே.பட்டம்மாள் மறைவுக்கு, இசைக் கலைஞர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடக இசை மற்றும் திரை இசையில் பிரபல பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.

டி.கே.பட்டம்மாள்: வாழ்க்கைக் குறிப்பு

காஞ்சிபுரத்தில் 1919-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி பிறந்தார் டி.கே.பட்டம்மாள். அவரது தந்தை தாமல் கிருஷ்ணமூர்த்தி. அலுமேலு என்பது டி.கே.பட்டம்மாளின் இயற்பெயராகும். பட்டா என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவர் சிறு வயதிலேயே தனது தாயார் காந்திமதியம்மாளிடம் இசை பயின்றார்.

கர்நாடக இசைக் கலைஞர் அம்பி தீட்சிதர், டி.எல்.வெங்கட்ராம ஐயர், பி.சாம்ப மூர்த்தி மற்றும் வித்யலா நரசிம்ம நாயுடு ஆகியோரிடம் கர்நாடக இசையைக் கற்றார். பாபநாசம் சிவன் மற்றும் கோடேஷ்வர ஐயர் ஆகியோரது இசையில் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார்.

கடந்த 1929-ம் ஆண்டு தனது 10வது வயதில் பட்டம்மாள் முதல்முறையாக சென்னை வானொலியில் பாடினார். பின்னர் 13வது வயதில் முதல்முறையாக ரசிக ரஞ்சன சபாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். கடந்த 1939ம் ஆண்டில் ஈஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடி வந்த பட்டம்மாளை திரைப்படங்களில் பாட பாபநாசம் சிவன் அறிமுகம் செய்து வைத்தார். பல்வேறு திரைப்படங்களில் பாட அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும், பக்தி மற்றும் தேசபக்தி பாடல்களை மட்டுமே அவர் திரைப்படங்களில் பாட முன்வந்தார். பாரதியாரின் பல பாடல்களை அவர் பாடி அவை இன்று ரசிகர்களால் பெரிதும் போற்றப்படுகிறது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணியாற்றிய இவர், இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்திய பட்டம்மாள் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். இவரிடம் இசைக் கற்றவர்களில் இவரது இளைய சகோதரர் டி.கே.ஜெயராமனும் ஒருவர்.

கடந்த 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்ம பூஷண் விருது,  1998ம் ஆண்டில் பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவரது இசைப் பணியை கெளரவிக்கும் விதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.