Archive

Posts Tagged ‘songs’

Lyricist Pattukkottai Kaliyanasundharam sings ‘Aram’ to his Movie Producer

July 16, 2012 Leave a comment

-“நாடகமும் சினிமாவும்’ நூலில், ஏ.எல்.எஸ்.வீரய்யா.

நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான அருணாசலம் பிள்ளையின் மகன் கல்யாணசுந்தரம், சின்ன வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கப் பணியில் ஈடுபட்டு புதிய வெளிச்சம் பெற்ற கவிஞராக உயர்ந்தார்.

நாடகக் கம்பெனியில் கல்யாணசுந்தரத்தின் நண்பன் நம்பிமாறன். இவரின் சிபாரிசில் “படித்த பெண்’ என்ற படத்திற்கு முதன் முதலாக பாடல் ஒன்றை எழுதிக் கொடுத்தார். பாடல் பதிவாகியது. படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் படம் வெளிவரத் தாமதம் ஏற்பட்டது. பேசிய பணம் ரூ.150. “அந்தப் பணத்தையாவது கொடுங்கள்’ என்று கேட்டுப் பார்த்தார்.

ஒரு நாள், அந்தக் கம்பெனி முதலாளியைத் தேடி அவரது வீட்டுக்குப் போனார். வீட்டுக்குள் விட உதவியாளர் மறுத்தார். மூன்றே வரிகளில் ஒரு கவிதை எழுதி, “”உன் முதலாளியிடம் கொடு” என்று சொல்லிவிட்டு, வந்து விட்டார் கல்யாணசுந்தரம்.

“”தாயால் வளர்ந்தேன்; தமிழால் அறிவு பெற்றேன்.
நாயே, நேற்றுன்னை நடுத்தெருவில் சந்தித்தேன்;
நீ யார் என்னை நில் என்று சொல்வதற்கு?”

என்பதுதான் அந்தக் கவிதை! படித்துப் பார்த்தார். படத்தயாரிப்பாளர் கல்யாணராமய்யர். அவர் பழமையில் பக்தி கொண்ட பக்தர். “கவிஞன் அறம் பாடி விட்டானே’ என்று அரண்டு போய் ரூபாயை கொடுத்தனுப்பிவிட்டார்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் இடம் பெற்று வெளிவந்த முதல் திரைப்படம் “மகேஸ்வரி.’ அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் எழுதியிருந்தார்.

Kamal & K Viswanath’s Salangai Oli: சலங்கை ஒலி

August 6, 2011 2 comments

கமலின் ‘சலங்கை ஒலி’ – திரை விமர்சனம்

பொதுவாகவே ஒரு படத்திற்கு நான் விமர்சனம் எழுதுவதென்றால் உடனடியாக எழுத ஆரம்பித்துவிடுவேன். இதில் பெரிய பிரச்சனை என்னவென்றால், முன்னுரை சற்று நன்றாக இருக்கவேண்டும். அப்போது தான் பதிவை படிப்பவர்கள் தொடர்ந்து உற்சாகமாக முழு பதிவையும் படித்து முடிப்பார்கள். அதனால் இந்த முன்னுரைக்கு மட்டும் கொஞ்சம் சிரத்தை எடுத்து எழுதிவிடுவேன். ஆனால் என்னவோ தெரியவில்லை, இந்த படத்திற்கு மட்டும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். சரி, இப்படியே யோசித்து கொண்டிருந்தால் எப்போது பதிவு போடுவது? அதனால் தான் ஒரு வழியாக இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுகிறேன். இனி இந்த ‘சலங்கை ஒலியின்’ கதையை கேட்க ஆரம்பிப்போமா?

பரதநாட்டியத்தை உயிராய் மதிக்கும் பாலு, சிறந்த நாட்டியக்காரனாக வரவேண்டும் என்று முயற்சிக்கிறான். விதி வசத்தால் அது நடக்காமல் போக, ஒரு குடிகாரனாக ஆகிறான். அதே சமயம் ஒரு பத்திரிக்கையாளனாகவும் பணிபுரிகிறான். ஒரு முறை ஷைலஜா என்ற பெண் நடனமாடும்போது செய்யும் தவறுகளை தன் பத்திரிகை வாயிலாக சுட்டிக்காட்டுகிறான். அதை படிக்கும் ஷைலஜாவின் அம்மா மாதவி பாலு ‘யார்’ என்பதை தெரிந்துகொண்டு, அந்த பாலுவிடமே தன் மகளை பரதம் கற்க அனுப்புகிறாள். அந்த பாலுவிற்கும், இந்த மாதவிக்கும் என்ன சம்மந்தம்? பாலுவின் கலைசேவைக்கான அங்கீகாரம் கிடைத்ததா? இது போன்ற பல கேள்விகளுக்கு மிக அழகான காட்சிகளோடும், அருமையான இசையோடும் விவரித்திருக்கும் படம் தான் இந்த ‘சலங்கை ஒலி’.


பாலுவாக கமல்ஹாசன். கமலின் அறிமுக காட்சி உண்மையிலேயே யாரும் எதிர்பாராரது. தான் பிரயாணம் செய்த ரிக்க்ஷாவை இவர் தள்ளிக்கொண்டு வரவார். அப்போதே இவரின் கதாபாத்திரத்தின் மீது ஒரு அழுத்தமான கவனம் பதிந்து விடுகிறது. இளமையில் அவ்வளவு துடிப்பாக இருந்த ஒருவன், முதுமையில் ஒரு குடிகாரனாக காட்டப்படும்போது அதற்கான காரணம் சற்று அழுத்தம் தான். அதுமட்டுமல்ல, இந்த படத்தில் கமல் நடிக்கும்போது அவரின் வயது 29. ஆனால் ஒரு குடிகார கிழவனாக அவரின் மேனரிசங்கள் வாழ்க்கையில் உண்மையிலேயே தோற்ற ஒரு வயது முதிர்ந்தவரின் இயல்பை திரையில் அழகாகவும், அழுத்தமாகவும் வெளிப்படுத்தியுள்ளார். தன் பத்திரிக்கை ஆபிசில் ஷைலஜாவிடம் வெவ்வேறு வகையான நடனங்களை ஆடி காண்பித்து ‘இது தான் சரியான அபிநயங்கள்’ என்று செய்து காட்டும் இடம், ஆஹா. அதே போல ‘தகிட ததிமி’ பாடல் காட்சியில் கிணற்றின் மீது நடனம் ஆடும் காட்சியை பார்க்கும்போது நமக்கே ‘கமல் கிணற்றில் விழுந்து விடபோகிறாரோ’ என்ற பயமாக இருக்கும். அது சினிமா ஷூட்டிங்காக இருந்தாலும், கொட்டும் மழையில் கிணற்றின் மேல் லாவகமாக நாட்டியமாடி அவர் ஒரு ‘விழா நாயகன்’ என்று நிருபித்திருப்பார். இந்த படத்தில் கதாநாயகனின் பங்கு சற்று பெரியது தான். ஆனால் அதை கமல் போன்ற சிறந்த நடிகனால் தான் தாங்கி பிடிக்க முடியும். அதை அவர் சரியாக செய்துள்ளார்.


மாதவியாக ஜெயப்ரதா. ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவுக்கும், ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவுக்கும் எவ்வளவு வித்யாசங்கள்? இந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? ‘தேவதை’ கதாபாத்திரம். ஆம். பாலு என்ற ஒரு இளைஞனின் திறமையை எப்படியாவது இந்த உலகிற்கு கொண்டு போகவேண்டும் என்று அவனுக்கு உதவுகிறாள் மாதவி. அந்த பாலுவின் கண்களுக்கு அவள் ஒரு தேவதையை போலவே தென்படுகிறாள். ஜெயப்ரதாவின் நடிப்பிற்கு இந்த படத்தில் வரும் ஒரு காட்சியை சாம்பிளாக சொல்கிறேன். ‘நாத வினோதங்கள்’ பாடல் இறுதிகாட்சியில் கமல், ஜெயப்ரதா இருவரும் Audience மத்தியில் மாட்டிக்கொண்டு அல்லல்படும்படியான ஒரு காட்சியை இயக்குனர் எடுத்திருப்பார். ஆனால் அங்கு கமல், ஜெயப்ரதா இருவரை தவிர ஒருவரும் இருக்க மாட்டார்கள். இந்த இருவரும் ரசிகர்கள் மத்தியில் மாட்டிக்கொண்டு தவிப்பது போல் ‘Mono Acting’ செய்திருப்பார்கள். அதில் கமல்ஹாசனுக்கு சரிசமமாக ஜெயப்ரதாவும் நடித்திருப்பார். அந்த காட்சியை பார்த்தால் உங்களுக்கே புரியும். இந்த படத்தில் இவர் ஒரு இளம்வயது பெண்ணாகவும், பின்னர் ஷைலஜாவின் அம்மாவாகவும் நடித்திருப்பார். எனக்கு ஜெயப்ரதாவிடம் மிகவும் பிடித்தது அவரின் கண்கள் தான். இவர் நடித்த பல காட்சிகளில் அழகாகவும், மிக ஆழமாகவும் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் கதை கமல், ஜெயப்ரதா பற்றியே சுழலுவதால் மற்ற நடிகர், நடிகைகளின் பங்கு கொஞ்சமே என்றாலும் அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். கமலுக்கு நண்பனாக வரும் சரத்பாபு அருமையாக நடித்துள்ளார். அதேபோல ஜெயப்ரதாவின் மகளாக நடித்துள்ள ஷைலஜாவின் கதாபாத்திரமும் அருமை. படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் அருமை. எந்த ஒரு இடத்திலும் கொச்சையான வார்த்தைகள் இல்லாமல் எடுத்தவிதம் சூப்பர்.


படத்தின் சிறப்பான காட்சிகள்:
கமல், தான் கதக் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மொழி தெரியாத நாட்டிய பெண்ணிடம் அபிநயத்தில் சொல்லி புரியவைப்பது.

சினிமா நடன இயக்குனர் நாட்டியத்தை கேவலப்படுத்துவதை கண்டு மனம் பொறுக்காமல் கோபத்தில் நடுரோட்டில் ஆக்ரோஷமாக நடனமாடுவது.

ஒரு பெண்ணின் நடன அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தின் சமையற்கட்டில் நடனமாடி காட்டுவது.

அகில இந்தியா நடன போட்டியின் அழைப்பிதழில் தன் பெயர் இருப்பதை பார்த்து ஜெயப்ரதாவின் கரங்களை பற்றி ஆனந்த கண்ணீர் வடிப்பது.
சாகும் தருவாயில் இருக்கும் தன் அம்மாவிற்காக நாட்டிய விழாவில் ஆடப்போகும் நாட்டியத்தை தன் அம்மாவிடம் அழுதுகொண்டே ஆடிக்காட்டுவது.

கமல் ஜெயப்ரதாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் காட்சி, அதற்கு ஜெயப்ரதா React ஆகும் காட்சிகள்.

ஜெயப்ரதாவிற்கு ஏற்கனவே வேறொருவருடன் திருமணமானதை பற்றி தெரிந்தவுடன் தன் காதலை தியாகம் செய்து, பிரிந்து போன கணவன் மனைவியை சேர்த்து வைப்பது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் தனக்கு கிடைத்த கைதட்டல்களை பார்த்து ஆனந்த கண்ணிர் வடிப்பது, தனக்கு அங்கீகாரம் கிடைத்த சந்தோஷத்திலேயே உயிரை விடுவது.

படத்தின் கேமராமேன் நிவாஸ் தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியின் கலை இயக்கம் அருமை. இந்த படத்தின் இசைக்கு இளையராஜாவை விட்டால் வேறு ஆள் இல்லை என்று நிருபித்திருக்கிறார் இசை ஞானி. ஒவ்வொரு பாடலும், பின்னணி இசையும் சங்கீதம் தெரியாதவர்களையும் கவர்கிறது. எனக்கு ராஜாவிடம் ரொம்ப பிடித்த விஷயம் அவரின் பின்னணி இசை. மனிதர் கலக்குவார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியது திரு K. விஸ்வநாத் அவர்கள். முக்கியமாக ஒருவரை பற்றி சொல்ல மறந்துவிட்டேன். அவரை பற்றி எழுதாமல் விட்டால் இந்த திரை விமர்சனமே முழுமை பெறாது. அந்த நபர் S.P. பாலசுப்ரமணியம். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் (ஆண் குரல்) இவரே பாடியுள்ளார். மனிதருக்கு என்ன ஒரு குரல் வளம்.

இந்த படம் 3 ஜூன் 1983 அன்று தெலுங்கில் ‘சாகர் சங்கமம்’ என்ற பெயரில் வெளிவந்து, பின்பு 31 டிசம்பர் 1983 அன்று ‘சலங்கை ஒலி’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் பல தரப்பிடமிருந்து பாராட்டுதல்களையும் பெற்று தந்தது. இந்த படம், சிறந்த இசை – இளையராஜா, சிறந்த பின்னணி பாடகர் – S.P. பாலசுப்ரமணியம், சிறந்த திரைப்படம் என்று மூன்று தேசிய விருதுகளை இந்த படம் தட்டி சென்றது.


சலங்கை ஒலி – நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்

Image and video hosting by TinyPic

சலங்கை ஒலி படம் இருபது வருடங்களாகியும் இன்னும் விடாத ஒரு மாபெரும் பிரமிப்பு. எத்தனை முறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. பாலகிருஷ்ணன் என்ற அந்த பாத்திரத்தின் யதார்த்த பிரதிபலிப்பை கமலைத் தவிர யாரும் செய்திருக்க முடியாது என்று துண்டு போட்டுத் தாண்டிச் சொல்லக் கூடிய அளவிற்கு ஒரு ஆக்ரோஷமான நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.

என்ன முயன்றாலும் பாடகரையும் நடிகரையும் பிரித்துப் பார்க்கவே முடியாத திண்டாட்டம் பாலு கமலுக்குப் பாடுகையில் அடிக்கடி நிகழும் ஒன்றுதான் என்றாலும் அப்படிப் பார்க்கக்கூடிய ஒரு சதவீத வாய்ப்பையும் இந்தப் படத்தில் இருவரும் சேர்ந்து நமக்குக் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். யார் யாரை விஞ்சியது என்று பந்தயமோ பட்டிமன்றமோ நடத்தும் அளவிற்கு ஒருவருக்கொருவர் சளைக்காத பங்களிப்பு பாலுவிடமிருந்தும் பாலுவாக நடித்த கமல்ஹாஸனிடமிருந்தும்.

குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய துடுக்கு நடிப்பைத் தந்து பாடி நன்றாக நடனமும் ஆடிய ஷைலஜாவை சென்றமாதம் சந்திக்க நேர்ந்தபோது அவரது அபாரமான அமைதியைக் கண்டு திகைத்துப் போனேன். ஆனால் பாடல் என்று வந்துவிட்டால் தங்கை அண்ணனைப் போலவே சளைக்காது பாடுகிறார். இன்னும் அதே உச்ச ஸ்தாயிக் குரலில் பாடுகிறார். அதையெல்லாம் விரிவான பதிவுகளில் பின்பு சொல்கிறேன்.

படத்தில் மாதவியாக வரும் ஜெயப்பிரதா மாதிரி ஒரு உந்துகோல் கிடைக்காமல் பாலகிருஷ்ணன் மாதிரியான எத்தனையோ கலைஞர்கள் சந்தர்ப்பங்கள் கிட்டாது வீணாய் போகிறார்கள்! அம்மாதிரி கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்றும் அவர்களுக்கெல்லாம் தோல்விகண்டு துவளாத பாலு.. பாலகிருஷ்ணனின் விடாமுயற்சியும் மனோதிடமும் கிட்டட்டும் என்றும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

டெல்லியில் நடைபெறும் அகில இந்திய கலை நிகழ்ச்சிக்கான அழைப்பிதழைப் புன்முறுவலுடன் கமலிடம் நீட்டும் ஜெயப்ரதா, அதை ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி பெரிய பெரிய கலைஞர்களின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்து ஆஹாகாரம் செய்து வருபவர் ஒரு பக்கத்தில் தன்னுடைய படத்தையே ‘பாலகிருஷ்ணனின் பரதநாட்டியம்’ என்ற குறிப்போடு பார்த்து படித்து வாயடைத்துப் போய் எதிர்பாராத அந்த மாபெரும் இன்ப அதிர்ச்சியில் திண்டாடித் திகைத்து – வார்த்தைகள் தோற்கும் தருணங்களில் ஒன்றான அந்தத் தருணத்தில் வெட்டியாக வசனங்களைக் கொட்டாது – உணர்வுப் பூர்வமாக கண்ணீர் பெருக ஜெயப்ரதாவின் கையைச் சட்டென்று பற்றி அழுந்த முத்தமிட்டு – நெஞ்சம் தாங்காது வெடிக்கச் செய்துவிடுமோ என்ற சந்தோஷத்தை தலை உயர்த்தி அண்ணாந்து வெடித்துச் சிரித்து வெளியேற்றுவாரே – கமலின் ஒவ்வொரு அணுவும் இயைந்து நடித்திருக்கும் அந்தக் காட்சியில் – நிகரே இல்லாத அபூர்வ நடிகர் அவர் என்பதை நிரூபிக்க என்ன வேண்டும்? இது மாதிரியான அற்புதக் காட்சிகள் படம் முழுதும் ஏராளமாக விரவியிருக்கின்றன. எதை எடுப்பது எதை விடுவது என்று தெரியாமல் திணறுகிறேன்.

அதைத் தொடர்ந்து வரும் இந்தப் பாடல் காட்சியும் பாடல் முடிந்ததும் ரசிகர் கூட்டத்தில் சிக்கித் திணறுவது போல கமலும் ஜெயப்ரதாவும் நடிப்பதும் – அருமையான காட்சிகள்.

இசைஞானிக்கு தேசிய விருதை வாங்கித் தந்த படம்!

பிரமிப்பில் வார்த்தைகள் கிடைக்காது திணறுவோமே. சலங்கை ஒலி படத்தைப் பற்றி நிறைய எழுதவேண்டும் என்பதற்காகவே இத்தனை நாட்களாக பதியாமல் இருந்து இனியும் தாமதிக்க முடியாது என்ற கட்டத்தில் அதைப் பற்றிய பிரமிப்பு விலகாதவரை விரிவாக எழுதுவது சாத்தியம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டு ஆனந்தமாகத் தோற்றுப் போவதில் எனக்குச் சந்தோஷமே!

சலங்கையின் ஒலி என் காதுகளில் இன்னும் பல வருடங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும்!

வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள வாஹர்த்தப் ப்ரதிபத்தயே
ஜகதப்பிதரம் வந்தே பார்வதீ பரமேச்வரம்
வந்தே பார்வதீப ரமேஷ்வரம்.

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே
பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே

பாவங்களே பழகுவதே
கானங்களே கலையசைவே
உடலோடு உயிர்வந்து இணைகின்ற நயமிது

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
ஆஆஆஅ ஆஆஆஅ ஆஆஆஆ

கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
கைலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
நவரச நடனம்
ஜதி தரும் அமுதம்
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
பரதம் என்னும் நடனம்
பிறவி முழுதும் தொடரும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
விடி ஒளி பொழியும் அதில் பகை அழியும்
சிவனின் நடனம் உலகாளும்

திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நடனம்!
திரனதிரனனன தகிட தகிடதிமி
திரனதிரனனன நாட்டியம்!

உலகம் சிவனின் தஞ்சம்
அவன் பாதமே பங்கஜம்
நர்த்தனமே சிவகவசம்
நடராஜ பாத நவரசம்
திரனனன திரனனன திரதிரதிரதிரதிரதிரதிரதிர

நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்
வீடு பேறு பெறுமே

சுல்தான் said…

இதெல்லாம் படமில்லை இயல்பான நடிப்பு எப்படி இருக்கும் என்ற பாடம்.

ஷைலஜாவின் முன்னே ரகம் ரகமா பிரித்து ஆடுவதென்ன?

அதிலே கடைசியிலே காப்பி டம்ளர் பறப்தென்ன?
‘ரெண்டு தப்பு’ காட்சியென்ன?

அம்மாவின் முன்னால் ஆடியபின் கோபக்கார மாமா லட்டு தருவதென்ன?

அந்த நாட்டியத்தில் மஞ்சு பார்கவியையும் இணையாகக் காட்டி அசத்துவதென்ன?

குடிகார டான்ஸ் மாஸ்டர் பீஸ்?

நடனம் கற்றுக்கொள்ள மொழி தெரியாமல் நடன கேள்வியும் பதிலும்,

சரத்பாபு மாமனாரை காலில் மிதித்து நாட்டியம்,

தாயை தவறாக நினைக்கும் ஷைலஜாவின் கோபம்,

திவசம் பார்த்து கமல் திடுக்கிடுவது,

ராமையா… நான் சிவய்யாய்யா என்பவரின் தீர்த்தம் கிடைக்குமிடம் சொல்லும் இயல்பு,

தக தக தா… தக தா… தக தக தக தா… என அழைத்து வரச் சொல்லுதல்,

அதையெல்லாம் விட கிணற்றில் ஒற்றைக்கால் நடனமும் அந்தப்பாட்டும்,

ஷைலுவின் கிளைமேக்ஸ் நடனத்தில் ஜெயப்பிரதாவிடம் கண்க்கு சரியா என்று கண்ணால் கேட்பதும்.

இன்னும் இன்னும் எவ்வளவு!!!

படமாய்யா அது. நடிப்புக்கு பாடம்.

நான் ஒரு நாற்பது தடவையாவது பார்த்திருப்பேன் இது வரை.

Thu Oct 19, 06:12:00 PM


சலங்கை ஒலி – காவிரி மங்கை வந்தாளம்மா

ஆல்பத்தில் இருக்கும். ஆனால் படத்தில் இருக்காது – என்ற வகையில் எத்தனையோ நல்ல பாடல்கள் ஒளி வடிவத்தில் வெளி வராமல் எங்கோ தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில சமயத்தில் நல்ல ஹிட் பாடல்களை இசையமைப்பாளரோ அல்லது நடிகரோ அவர் திருப்திக்காகவும் பாடி (இசைஞானி…கமல்…ஹிஹி) ஆல்பத்தில் சேர்த்திருப்பார்கள் – ஆனால் படத்தில் பாடகர் பாடியது மட்டும் இருக்கும். எவ்வளவோ உதாரணங்கள்!!

எனக்குள் ஒருவனின் மேகம் கொட்டட்டும் பாடலை கமலும் பாடியிருப்பார் – அது கேஸட்டில் இருந்தது. படத்தில் பாலு பாடியது!

இதய கோவில் படத்தில் இதயம் ஒரு கோவில் பாடலை இசைஞானி பாலு என்று பாடியிருப்பார்கள். படத்தில் மாறி மாறி வரும் அது.

மைக்கேல் மதன காம ராஜன் படத்தின் பாடல் தொகுப்பில் மனோ “ஆடிப் பட்டம் தேடிச் செந்நெல் விதை போட்டு” என்ற அற்புதமான பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டிருக்கிறீர்களா? அது படத்தில் வரவில்லை.

சலங்கை ஒலி படத்தின் பாடல் தொகுப்பில் பாலுவும் ஷைலஜாவும் பாடியிருக்கும் இன்னொரு குதூகலப் பாடல் “காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கை வீசி” என்ற பாடல். நாத விநோதங்கள் பாடலின் முடிவில் தொடங்கும் பாடல் அது. அது (தமிழிலும் தெலுங்கிலும்) படத்தில் வரவில்லை. ஆனால் அதே பாடல் பானுப்ரியா நடித்த தெலுங்குப் படம் “சிதாரா”வில் இடம் பெற்றது.

தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன
தனனனனனனன தனனனனனன

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

ஜமக்கு ஜமக்கு ஜிஞ்சின ஜிஞ்சின
ஜமக்கு ஜமக்கு ஜின்ன ஜின்ன ஜின்ன

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

மேனி எங்கும் மினுக்கி அட
மேளதாளம் முழக்கி
கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி
மேலாடை கொஞ்சம் விலக்கி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி

பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
பச்சிளம் பூவில் ஓ
பாவாடை தைச்சு
குண்டுமல்லியில் கொண்டையும் வச்சு
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி
வந்தா அரசாணி வா வாலிப தேசத்து ராணி

காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி
காவிரி மங்கை வந்தாளம்மா என்னுடன் கைவீசி


salangaioli ஹிந்தோளம்சலங்கை ஒலி படத்தில் வரும் “ஓம் நமச்சிவாய” பாடலை சிவப்பெருமான் கேட்டிருப்பின் தனக்கு பிடித்த ராகம் இனி ஹிந்தோளமே எனக்கூறியிருப்பார். “nothing but wind” என்ற album-இல் “Composer’s breath” என்ற பகுதியில் ஹரிப்ரசாத் சௌராசியாவின் குழலில் ஹிந்தோள ராகத்தை மிக திறமையாக கையாண்டிருக்கிறார் ராஜா . அந்த பகுதி இறுதியில் ராகமாலிகையாக மாறிவிடுவது குறிப்பிடத்தக்கது)

Ranganna troupe’s drama :: N. Swaminathan

July 21, 2009 1 comment

ரங்கண்ணா குரூப் ‘இதொ அதோ’ன்னு கீரி பாம்பு சண்டைவிடறவன் மாதிரி ஏதோ
சொல்லிட்டு லீவுல போயிட்டாங்க. இந்தக் கவலையோட நான் தூங்கறச்சே
என் கனவுல வந்து ஒரு நாடகம் போட்டாங்க. அதான் இது….

காட்சி – 1

நியு ஜெர்சியில் பல குடும்பங்கள் வாழும் ஒரு அபார்ட்மென்ட்.

ரங்கண்ணாவின் குடும்பத்தில்:

ரங்கண்ணா: ஹா, ஹ,ஹ், ஹா, ஹா…

மங்களம் : அப்படி பேப்பரிலே சிரிப்பா என்ன போட்டுருக்கான்?

ரங்: இந்த கோர்/புஷ் தேர்தல் சர்தார்ஜி ஜோக்கு மாதிரி ஆயிட்டுது.
முதல்ல ஓட்டு வித்தியாசம் 2000ன்னான், அப்புறம், 900ன்னான்,
அப்புறம் 370ன்னான், இப்ப 228தாங்கறான்…

மங்: இதுக்கும் சர்தார்ஜிக்கும் என்ன சம்பந்தம்?

ரங்: ஒரு சர்தார்ஜி பிள்ளைய பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாசில சேத்தான்.
அங்க ஒரு மாசத்துல பையன் மக்குன்னு தெரிஞ்சு ஆறாங்கிளாசுக்கு தள்ளினா.
ஒரு மாசம் கழிச்சு இதுக்கு அவன் லாயக்கில்லனு அஞ்சாம் கிளாசுக்கு
தள்ளிட்டா. அங்க போனா ஒரு மாசத்துல நாலாங்கிளாசுக்கு போன்னு
அனுப்பிட்டா. சர்தார்ஜிக்கு கவலை வந்துடுத்து. சர்தாரிணிட்ட,
உம் புள்ள பெயிலாகி பின்னால பின்னால வர வேகத்த பாத்தா ரொம்ப
கவலயாயிருக்கு. எதுக்கும் நீ உன் பைஜாமாவை இறுக்கி முடிஞ்சிக்கோன்னான்…

மங்: சீ. சீ. உங்களுக்கு ஜோக் சொல்றதுக்கு ஒரு வெவஸ்தயே கெடையாது
நடுக்கூடத்துல சொல்ற ஜோக்கா இது…

சாந்தி/தங்கராஜன் குடும்பம்

சாந்தி: என்னங்க பிரியாணி எப்படி இருக்கு ?

தங்கராஜன்: ரொம்ப நல்லாருக்கு வன்கேழி பிரியாணி.

சாந்தி: என்னங்க, அதுக்குள்ளயும் ரெண்டு காலைத்தின்னாச்சா..
வன்கேழிங்கிறீங்க. எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க.
பண்ணினவளுக்கு பானையும் கரண்டியும்தானா?

அண்ணாமலை வீட்டில்

அண்ணாமலை: எப்படி தத்துவராயர் சுமேரு தமிழைவிடப் பழங்கால மொழின்னாரு?
சுமேரு அருணகிரியார் காலத்ததுன்னு தெரியும். முருகந்தானே
அருணகிரிட்ட “சும்மேரு, சொல்லற”ன்னு சொன்னரு. அவருக்கு நெனவா
எழுதிக்கேக்கணும்.

(மணி சுவாமிநாதன் தலைவிரிகோலமாக ஓடி வருகிறார்)

அண் : என்ன மணி, சட்டையெல்லாம் கிழிஞ்சிருத்து? சண்டை போட்டியா?

மணி: இல்லீங்க. தெருவில ஒத்தரு மணி, மணின்னு கத்துனாரு. என்ன வேணும்
நாந்தான் மணின்னேனா. அவ்வளவுதான். எனக்கு மணியாட்ட உரிமை இல்லியாடான்னு
கத்தி என்னை உலுக்கி சட்டைய கிழிச்சிட்டார். மணி ஆட்டரதே வாழ்வின் குறிக்கோளா
அலையுறாரேன்னு வருத்தமா இருக்கு. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு மணிய
வாங்கி குடுத்து ஆட்டிக்கிட்டு கெடய்யான்னு சொல்லிடலாமா? ரங்கண்ணா
குடுப்பாரா?

அண்: ரங்கண்ணாவா. அவருதான் முன்னமே சொல்லிட்டாரே,
வேற வேல இல்லியாடா ஒங்களுக்குனு.

(ஒரு கார் வந்து நிற்கும் ஓசை. அதிலிருந்து இறங்குகிறார் சர்தார்ஜி.
கையில் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டு நம்பரை பார்க்கிறார்.)

மணி: சார், சர்தார்ஜி வரான், அன்னிக்கு சொன்னேனே, ஒரு சர்தார்ஜி ஜோக்…
ஒரு சர்தார்ஜி டிஜிட்டல் வாட்சு வாங்கினான். அதை உத்து பார்த்தான். என்னடா
பன்னண்டு நம்பரில்ல, நாலுதான் இருக்கு. மணி, நிமிஷம் காட்டற முள்ளை வேற
காணும்னு கத்தினான் …
இத அவருகிட்ட சொல்லிடாதீங்க..ப்ளீஸ்..

மங்களம் எட்டி பார்க்கிறாள்:

மங்: நீங்களும் ஒங்க ஜோக்கும். அப்பவெ சொன்னேன் இந்த பாழாப்போற
சர்தார்ஜி ஜோக் வாணாம்னு, கேட்டேளா ? இப்ப சர்தார்ஜி வந்துட்டான், போட்டு
மொத்தப்போறான், கையில பெரம்பு வெச்சிருக்கான்.

சாந்தி பார்க்கிறாள்:

சா: பாருங்க, சர்தார்ஜி வரான். ரங்கண்ணா வீட்ல இல்ல நுழையறான்? ஏன் ?

தங்க: ரங்கண்ணா அவன் கிளப்புள குடிச்ச பீருக்கு காசு வசூலிக்க வரானா?

சா: என்னங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணும் பின்னால ஆடிக்கிட்டு வருது?

தங்க: டான்ஸ் ஆடற பொண்ணா இருக்கும்.. நீ போயி பாக்கி பிரியாணிய
தின்னுமுடி. பார்வையை மறைக்காத. வெள்ளக்காரி வெள்ளக்காரிதான்..

சா: ஜொள்ளு விடாதீங்க. அவளப்பாத்தா கர்ப்பிணி பொண் மாதிரி இருக்கு.

தங்க: சர்த்தான். சர்தார்ஜி கிளப்புல ஒரு உண்டி இருக்கு. Place your
contributions in the slot னு அது மேல எழுதி வெச்சிருப்பான். ரங்கண்ணா அதை
தப்பா புரிஞ்சிண்டு டான்சர்கிட்ட ஏதோ சில்மிசம் பண்ணி இது மாதிரி ஆயிருக்கும்.
அம்மணி ய டே, கீப்ஸ் த டாக்டர் அவேன்னு தெனாவெட்டா சொல்றச்சயே
நெனச்சேன். நெள, ஹி ஹாஸ் டு ரீப் வாட் ஹி ஸோடு. வா போயி வேடிக்க
பாக்கலாம். அண்ணாமலை சாரயும் மணியயும் அழச்சிட்டு வரேன்.

மணி: அண்ணாமலை சார். சர்தார்ஜி, ஒரு வெள்ளக்காரி, சர்தார்ஜியோட
புள்ள மூணுபேரும் வராங்க.

அண்ணா: இது ஒரு புது சர்தார்ஜி ஜோக்கா? கேட்டதில்லயே.

மணி: இல்ல சார் நெசம்மாவே இங்க வராங்க. பாருங்க.
ரங்கண்ணா வீட்டுக்கு போறாங்க.

அண்ணா: சர்தார்ஜி புள்ளயா?

மணி: ஆமா சார் அவனுக்கும் தாடி இருக்கு. ஒரு சர்தார்ஜி பொண்டாட்டிய
அடிச்சானாம், பொறந்த கொழந்தைக்கு தாடி இல்லைனு.
இது என் கொழந்த இல்லடின்னு. என் குழந்தன்னா தாடி எங்க
போச்சுன்னு கத்தினானாம்.

அண்ணா: நீ அவன்கிட்ட அடிபட்டு சாகப்போறே. இந்த ஜோக்கெலாம்
வாணாம். வா போயிப் பாக்கலாம்.

மணி: சர்தாருக்கு தமிழ் தெரியாது.

அண்ணா: அதான் தப்பு. அவன் கிளப்புல ஓசில பீர் குடிக்கலாம்னு நான்
போயி ரங்கண்ணா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு
“விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்றூ”ன்னு
சொன்னேன். அதக்கேட்டுட்டு சர்தார்ஜி ஒரு ஸ்பூன் பீரை என் வாயில் ஊத்திட்டு:
“தினைத்துணையாக் கொடுப்பினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்”னுட்டு
போயிட்டான். யமகாதகன். வா போகலாம்.

அனைவரும் ரங்கண்ணா வீட்டுக்கு விரைகிறார்கள்.


காட்சி 2

ரங்கண்ணா: வா, சர்தார், வா… மங்களம் காபி குடு.

சர்தார்: நமஸ்தே ரங்கா…

தங்கராஜன், சாந்தி, அண்ணாமலை, மணி உள்ளே வருகிறார்கள்

தங்க: ரங்கண்ணா, நான் சும்மாத்தான் வந்தேன்..
அண்ணாமலையும், மணியும் இருக்காங்க, ஒரு கை கொறையுது,
சீட்டு ஆட்டம் போடலாம்னு..

ரங்கா: ஒக்காருங்க. சர்தார்ஜி என்னை பார்க்க வந்திருக்கார்.

சர்தார்: என்ன அன்னாமலே, கையில் என்ன பொஸ்தகம்? ஞான சைத்தான்யம்?

அண்ணா: இந்த மாதிரி வம்பு வரும்னுதான் அவர் தமிழ்லயும் போட்டிருக்கார். அது ஞான
சைதன்யம்.

தங்க: ரங்கண்ணா உங்களுக்கு இப்படி ஆகும்னு நெனக்கில. அப்பவே சொன்னேன்
பாத்து கைய விடுங்க, எந்த புத்துலே எந்த பாம்பு.. LeTex பத்தி சொன்னேன். நீங்க
கண்டுக்கல. எத்தினி மாசம் இப்ப? மாமிக்கு விசயம் தெரியுமா?

ரங்கா: தங்கராஜு நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. மொதல்ல சர்தார்ஜி என்ன
விசயமா வந்தாருன்னு கேட்டுட்டு அப்புறம் ஒங்கிட்ட பேசரேன். என்ன விசயம் சர்தார்?

சர்தார்: எல்லாம் இந்த சைத்தான் கி பச்சாவால வந்துது. இதொ இருக்கானே, எம்புள்ள .
நியுயார்க்குல படிக்க அனுப்பி இருந்தேன். திடீர்னு வந்து நிக்கறான் இந்த வெள்ளைக்கார
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு. வேண்ட்டம்னு சொன்னா கேக்கல.

ரங்கா: இது ஒம்புள்ளயா ! வளந்துட்டானே. சின்னப்பையன இருக்கறச்சே பாத்தது.
நாளக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட், அங்கிள், அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு கேப்பான்.

சர்தார்ஜி பையன்: அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு இன்னம் எனக்கு தெரியல அங்கிள்.

ரங்கா: ஒனக்கு மத்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. சர்தார், வளைகாப்பு, சீமந்தம்,
பேரனுக்கு காதுகுத்தல் கல்யாணம் பண்ற ஸ்டெஜில வந்து கல்யாணம்னு சொல்றீங்க…
பொண்ணு கர்ப்பமா இல்ல இருக்கு?

சர்தார்: ஆமாம், ரங்கண்ணா, 6 மாசமாம் ? ஆனா அவ வயத்துல இருக்கறது என் பையனோட
கொழந்த இல்ல.

அண்ணா: சர்தார், என்ன இது அசிங்கமாஅநியாயமா இருக்கு. நீங்க தப்பு பண்ணிட்டு ஒங்க பையனுக்கு
கட்டி வெக்கறது மொறையா?

சர்தார்: நான் தப்பு பண்ல. என் பையனும் தப்பு பண்ல.

சாந்தி: எனக்கு தலை வெடிச்சிடும்போல இருக்கு. அந்த பொண்ணு யாரால கர்ப்பமானா?

சர்தார்: ரங்க…

தங்க: (ரங்கண்ணாவை கண்னால் பார்த்துகொண்டே) சாந்தி, நான் நெனச்சது சரிதான்
மங்களம் மாமிய புடிச்சுக்க, மயக்கம் போட்டு விழுந்திரப் போறாங்க.. இந்த சேதியெல்லாம்
அவங்க தாங்க மாட்டாங்க..

ரங்க: என்ன அபாண்டமா இருக்கே?

சர்தார்: ரங்கண்ணா அதைத்தான் சொல்ல வரேன். அவளோட பாய் பிரண்டு பால்.
முழு பேரு Paul Gold King. அவன் பிள்ளைதான் இந்தப்பெண் வயத்துல இருக்கு.

சாந்தி: பால் கோல்ட் கிங் – அப்ப பால் தங்கராஜனா? என்னங்க இது உங்களுக்கு
நல்லாயிருக்கா ? லேட்டஸ்ட் லேட்டக்ஸ்னு ஏதோ சொல்லிட்டு, எனக்கு குழந்தையே
இல்ல. இந்தபொண்ணுக்கிட்ட போயி வெக்கமில்லாம…

சர்தார்: நீங்க அழாதீங்க. அந்தப் பால் இவரு இல்ல. அது வெள்ளைக்கார பால்.

மங்களம்: கல்யாணத்துக்கு முன்னால..சே..சே.. கேக்கவே நாராசமா இருக்கு.
இது தப்பு இல்லையா? அவளொட பாய் பிரண்டுக்கு கட்டி வெக்கரதுதான் மொறை.

சர்தார்: அவன் எங்கயே ஓடிப்போயிட்டானாமே? என் புள்ள இவளுக்கு வாழ்வு கொடுக்கப் போறானாம்.
புத்தி சொல்றதுக்கு ஒன்னைவிட்டா வேறு யாரு இருக்கா? ரங்கண்ணா நீதான் என் புள்ளக்கி
நல்ல புத்தி சொல்லி திருத்தணும். அதுக்குதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.

ரங்க: நான் என்ன செய்யறது ? தங்கராஜன் என்ன பண்லாம்னு சொல்லுங்க.

தங்க: வேணுன்னா சாந்தி பண்ண பிரியாணிய வெள்ளக்காரிட்ட கொடுக்கலாம். அதைத்தின்னுட்டு
ஒரைப்பு தாங்காம ஓடிடுவா.

சாந்தி: தின்னுமுடிச்சிட்டு கேலியா.. அண்ணாமலை சாரை கேக்கலாம்.

அண்ணா: சரி நான் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன்.

மணி: சார், ஒங்களுக்கு எத்தனியோ பேரு பொண்ணு தர சம்மதமா இருக்காங்க.ஒரு விரக்தில
இந்த பொண்ணை நீங்க கட்டிக்க வேண்டாம்.

அண்ணா: சே, நான் கட்டிக்கரேன்னு சொல்லல. அந்தப் பையன்கிட்ட தனியா பேசப்போறேன்.
புத்தி சொல்லித் திருத்தப் போறேன்.

ரங்கா: நான் அந்தப் பொண்ணோட கொஞ்சம் பேசட்டுமா?
மங்களம் நீ என்ன பண்ற, உள்ள போயி இந்தப்பொண்ணுக்கு ஏதாவது
ஸ்வீட் பண்ணி எடுத்துண்டு வா. பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு.
இங்க வாம்மா.
உம்பேரு என்ன ? இப்படி பக்கத்துல வந்து ஒக்காரு. கைய கால
வலிக்கரதோ? லேசா அமுக்கி விடவா? இதென்ன மார்ல ?
சே, அதை கேக்கல. அது கீழ கருப்பா புள்ளி?
மச்சமா? எனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்.

சாந்தி: அப்படியா? உங்களுக்கு தெரியுமா ? இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே.
எனக்கும் பாத்து பலன் சொல்லுங்க.

தங்க: (கோபத்துடன்) சாந்தி. நீ மொதல்ல வீட்டுக்கு போ. அப்புறம் வந்து பேசறேன்.
மெதுவா மெதுவா தொடலாமான்னு வருவான். அப்புறம் நீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு
குதிப்பே. நான் சட்டி சுட்டதடா, கை வெந்ததடான்னு பாடிக்கிட்டு போகணும். தேவையா இது?


காட்சி – 3

(அண்ணாமலையும் சர்தார் பையனும் இன்னம் வெளியே வரவில்லை)

ரங்கண்ணா: ஏன் சிரிக்கறே மணி?

மணி: இல்லே, உங்களுக்கு ஒரு பழய ஜோக் நெனைவிருக்கா? அண்ணாமலைசார்
மொதல்ல வெளில வருவாரா, இல்ல அந்தப்பையன் வருவானான்னு யோசிச்சேன்.
சிரிப்பு வந்துது.

சர்தார்: அது என்ன ஜோக்?

தங்க: மணிக்கு ஜோக் சொல்ல நேரம் காலம் இல்ல. அந்த பையன் புடிவாதம்மா
இருக்கான் போல. அண்ணாமலை என்ன செய்ய முடியும் ?
எனக்கு நம்பிக்கை இல்ல.

(அண்ணாமலையும் பையனும் முக மலர்ச்சியுடன் வெளியே வருகிறார்கள்)

அண்ணா: சர்தார்ஜி கவலய விடுங்க. உங்க பையன் அவளை இன்னிக்கே மறந்திடுவான்.
ஆனா, ஒரு நிபந்தனை.

சர்தார்: என்ன செய்யணும் ?

அண்ணா: நீங்க அவனுக்கு உங்க பென்ஸ் காரை கொடுக்கணும்மாம். கொடுப்பீங்களா?

சர்தார்: பூ, இவ்வளவுதானெ. இங்கயே கொடுத்திடறேன். இந்தா சாவி.

பையன்: தாங்ஸ். நான் இந்தப் பொண்ணை அவ வீட்டுல விட்டுடறேன்.

சர்தார்: அச்சா, பேட்டா. ரொம்பா நன்றி அன்னாமலே. ஒன்கு என்ன வேணும் கேளு.

தங்க : பேசாம ஹேப்பி அவர்ல எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வெச்சா போறும்
சாந்தியும் மங்களம் மாமியும் வீட்ல இருந்து முறுக்கு சுடட்டும்.

ரங்க : அப்படியே ஒரு ஷக்கலக்க பேபி டான்சுக்கும் ஏற்பாடு பண்ணு சர்தார்.

சர்தார்: ஓ.கே. அப்ப நாங்க கிளம்பரோம். எல்லாருக்கும் நன்றி.

சர்தார்ஜி, மகன், வெள்ளைக்காரப்பெண் மூவரும் போகிறார்கள்.

தங்க: எப்படி அண்ணாமலை இதை சாதிச்சீங்க.

அண்ணா: சிம்பிள். அந்த பையன் கெட்டிக்காரன். அவனுக்கு காரு வேணும். கேட்டா
சர்தார்ஜி தர மாட்டேன்னுட்டான். அதுக்குனு ஒரு பொண்ணை செட்டப் பண்ணி நாடகம்
போட்டு அடாவடி பண்ணீருக்கான். எங்கப்பன் காரை வாங்கி குடுத்துடுங்கன்னான்.

ரங்க: அதிசயம்மா இருக்கே. இருவதாம் நம்பர் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டான்னு
பத்தாம் நம்பர் பஸ்ஸில ரெண்டு தடவை ஏறினவனுக்கு இவ்வளவு சாமர்த்தியமா?

தங்க: நியுயார்க் காலெஜ் அப்ளிகேஷன்ல Fill in Capital போட்டிருக்கான்னு
வாஷிங்டன் போனவன்தானே.

மணி: ஒரு சர்தார்ஜி நடந்து போயிட்டு
இருந்தான். ஏண்டா ஒனக்குதான் காரு இருக்கே,
ஏன் நடக்கிறேன்னா, காரைத்திருடுவாங்கன்னு பயந்து காரைப்பூட்டி சாவிய முழுங்கிட்டேன்
அது வெளிய வர வரைக்கும் நடைதான்னானாம். இவன் எப்படியோ?

சாந்தி : இந்த வேடிக்கய பாருங்க. அப்பாவும் புள்ளயும் அந்த பொண்ணை உள்ள வெச்சு
காரைத்தள்ளிட்டு போறாங்க.

மணி: (உரக்க) சர்தார், பெட்ரோல் இல்லியா கார்ல?

சர்தார்: இருக்கு, இருக்கு. அதை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்னு காரைத்தள்ளிட்டு போறோம்.

மணி: அதான் சார் இந்தப்பசங்க இவ்வளவு காசு சம்பாரிச்சிட்டாங்க.

அண்ணா: மணி, ஒண்ணு சொல்றேன் தப்பா நெனக்காத. சர்தார்ஜிங்க உழைப்பாளிங்க.
அதனால உசர்ந்தாங்க. இந்திய சனத்தொகையில அவங்க 2%தான். அதுனால உனக்கு திமிர்
வரப்படாது. பொறாமை ப் படக்கூடாது. அவன் தாடி வெச்சிருக்கான், தலைப்பா
கட்டிருக்கான்னு இளக்காரம் பண்ணாத. அது அவனோட உரிமை. கிளப் வெச்சான்,
பேப்பர் நடத்தரான்னு வயிறு எரியாத. நீயும் பண்ணிப் பாரு. நாகரீகமா பேசு. நாராசமா பேசாத.
மல்லாந்து எச்சி துப்புனா ஒம் மூஞ்சி மேலதான் விழும்.

சாந்தி: என்னங்க இது, இன்னிக்கி தேங்ஸ்கிவிங். இப்ப போய் சீரியசா ஏதோ பேசிக்கிட்டு.
…ஒரு பாட்டு பாடவா?

தங்க: பாடு சாந்தி பாடு, இசை என்னும் நாத வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எனக்காக…

சாந்தி : போதும் பேசாம இருங்க.
(பாடுகிறாள்)

Turkey Dinner, turkey dinner,
Gather round, gather round,
Who will get the drumstick?
Yummy, yummy drumstick,
All sit down, all sit down.

Cornbread muffins, chestnut stuffing,
Puddin’ pie, one foot high,
All of us were thinner
Until we came to dinner;
Me oh my! Me oh my!

மங்களம்: ஏண்டியம்மா, எனக்கு புரியற மாதிரி தமிழ்ல ஏதாவது பாடப்படாதோ ?

கல்யாண சமயல் சாதம்
நல்ல கெளரவப்பிரசாதம்
அதுவே எனக்கு போதும்

புளியோதரை என்னும் சோறு
பொறுத்தமாய் ஒருசாம்பாரு
பூரி கெழங்கு லட்டு
பொரித்த கத்தரி கூட்டு

அழைத்திடுவோம் அனைவரையும்
ஆசையோடு வயிறார
உண்டிடுவோம்
கிடைத்த வாழ்வுக்கெல்லாம்
படைத்தவனுக்கு நன்றி
சொல்லியே.

(கைத்தாங்கலாக ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் மேடைக்கு ஏற்றப்படுகிறார்)

ரங்கபாஷ்யம்: நான் இதுல வரலைன்னு உங்களுக்கு கொறை வெக்கப்படாது, வந்து ஒரு
வார்த்தை சொல்லுன்னாள். சொல்றதுக்கு என்ன இருக்கு?

இன்னிக்கு தேங்ஸ் கிவிங் டேன்னு சொன்னா. என் வயசில தெனமும் நான் தூங்கி காலையில கண்
முழிச்சாலே கடவுளுக்கு நன்றி சொல்லிடுவேன். தெனமுமே எனக்கு தேங்ஸ் கிவிங்தான்.
லோகமே ஒரு நாடகம். ஆட்டுவிப்பான் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரேன்னு சொல்லுவா.
நாமும் குழந்தை, பையன், இளைஞன், சம்சாரி, தோப்பனார், தாத்தான்னு பல வேஷங்கள்
போடறோம். மத்தது எல்லாம் மறந்து போய் அந்த பாத்திரமா மாறிடறோம். இதான் சாச்வதம்னு
பகவானை மறந்திடறோம். அப்படி மறக்காம அவன் திருவடிகளை மனசில வெச்சிங்கோ.
எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துங்கோ. எம்பெருமான் கிருபை எல்லோருக்கும் உண்டு.

வணக்கம்.

(நிறைவு பெற்றது)

(என் கனவில் வந்து நாடகம் போட்ட ரங்கண்ணா குழுவினருக்கு நன்றி. )

Categories: Authors Tags: , , , , ,

Rangabashyam group on Bharathi Dasan songs :: லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்

July 21, 2009 Leave a comment

ரங்கபாஷ்யம் குழுவில் பாரதிதாசன் பாடல் பற்றி யார் எழுதுவது
என்ற குழப்பத்தில் யாரும் எழுதாதிருந்தபோது, “அய்யா, இது
விழா முடியும் நாள். சட்டு புட்டுனு எழுதிக்குடுங்க” என்று
சிலரைக்கேட்டு வாங்கியதை இங்கு வெளியிடுகிறேன்.
=====================================
ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்:

கனக. சுப்புரத்தினம்ங்கிற பேரை பாரதி *தாசன்*னு மாத்திண்டார்.
தாசன்னா யாரு. பகவானுகிட்ட சரணாகதி அடஞ்சு சேவகம்
பண்றவன். சரணாகதியப் பத்தி நா வெவரிக்க தேவையில்லை.

நிகமாந்த தேசிகன் சொல்லிட்டு போயிட்டார்.
உகக்குமவை உகந்து,
உதவா அனைத்தும் ஒழித்து
மிகத்துணிவு பெற உணர்ந்து
காவலென வரித்து
புகலில்லாத தவமறியேன் என்று
பகவான் காலைப்பிடித்துக்கொள்ளுதல்..

ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கலாம்… ராகமாலிகையில பிச்சு ஒதற வேண்டிய பாட்டு..

சம்சார சோக மயமே யலாது சுக
சஞ்சார மேது இகமே பொலாது இதில்
சந்தேகமேதுன் சுகமே நிலையாகும்

இந்த மேல் பாராவிலேயே he tells it all..

நீயே கதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைத்தனன் பரனருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா

நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின் பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா

சீராருநன் மயிலம் நன்மயிலம்
வளமியலும் நலம்பயிலும்
திருவடி நிழலென அமையும்
தருவின மழகொடு குளிரும்

சிங்கார கோகிலம் கீதமோக மிருதங்கம்
சிற்றலை போய்மோதப் பட்சி ஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாட ரங்கமாம்
சுப்புரட்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்

சுகமெது வெனிலுன தருளெனவே
சொலும் இதிற் பிறிதொரு பொருள் கனவே

சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
திரவாரா திராய் கெம்பீரா

என்னடா ஒரு வைஷ்ணவன் முருகன் பாட்டை புகழறான்னு
நெனக்காதேள். எனக்கு சிவ-வைஷ்ணவ பேதம் இல்ல.
அரியும் சிவனும் ஒண்ணுதான்.
தவிர மாமாவைப் பாடினா என்ன, மருமகனைப்பாடினா என்ன?
same family தானே..

அவர் பாட்டுல உள்ள சத்தை எடுத்திண்டு, சக்கையை உதறுமாறு
கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.

எம்பெருமான் அருள் எல்லோருக்கும் உண்டு.

அடியேன்
பாஷ்யம்
============================
ரங்கண்ணா ராமன்:

இதான் பெரியவர மொதல்ல எழுதவிடக்கூடாதுங்கரது..
எவ்வளவு பாட்டு எழுதிருக்கார் பாரதிதாசன்..கிளுகிளுப்பா ஒரு பாட்டைப் போடாம..

கையில் ஒரு பிட்சர் பீர்ரொட சர்தார்ஜி கிளப்பில் இருக்கிறதா கற்பனை பண்ணிங்க,
ரம்பா மாதிரி ஒரு பெண்ணு ஆடறா..

“பட்டாணி வண்ணப் புதுச்சேலை-அடி
கட்டாணி முத்தே உன் கையாலே – எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை-
உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே!

ஆவணி வந்தது செந்தேனே -ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே- எனைப்
போவேன்று சொன்னாய் நொந்தேனே- செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே !

பூவோடி விழிக்கொண்டையிலே?- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே- நீ
வா வா என்ரன் அண்டையிலே – என்று
கூவா யோகருங் குயிலே !”

ஒரு விசிலடிச்சு ஒன்ஸ் மோர் கேக்க தோணலே ?

=============================

மணி சுவாமிநாதன்

பாரதிதாசன் வாரம்னு வெச்சு ஒனக்கு பிடிச்ச பாரதிதாசன்
பாட்டை போடு என்பது ஒரு வகை உளவியல் சோதனை.
டாக்டர் லோகநாதன் சொல்லுவாரே Hermaneutic Testingங்கோ
என்னவோ..ஒரு மரம் வரைடாங்கறது. அவன் வரையறத வச்சு
அவனுடைய மன பாதிப்புகளை, உள் மன எண்ணங்களை வெளிய
வரவழைக்கிறது.

எனக்கு புடிச்ச பாவேந்தர் வரிகள் :

“இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்திரம் உண்டாகுமோ?

சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில் (இணையத்தில்)
தீதினி நீங்காதடி- சகியே
தீதினி நீங்காதடி !”

=============================
S. அண்ணாமலை

எனக்கு புடிச்ச பாட்டு:

மேசை விளக்கேற்றி நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்

ஆசைத்தமிழ் படித்தேன் என்னருமை
அம்மா அருகில் வந்தார்

மீசைத்தமிழ் மன்னர்- தம் பகையை
வென்ற வரலாற்றை

ஓசையுடன் படித்தேன் அன்னை மகிழ்
வுற்றதை என்ன சொல்வேன் ?

செந்தமிழ் நாட்டினிலே – வாழ்கின்ற
சேயிழையார் எவரும்

வந்த விருந்தோம்பும்- வழக்கத்தை
வாய்விட்டு சொல்லுகையில்

அந்தத்தமிழ் அன்னையின் – முகத்தினில்
அன்பு பெருகியதை

எந்த வகை உரைப்பேன் ! – கேட்ட பின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார் !

கிட்ட நெருங்கி எனைப்- பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்

சொட்டுவது போலே- வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்

கட்டுக் கரும்பான- இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்

எட்டுவகைச் செல்வமும் – தாம் பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார் !

(இன்னிக்கு நடக்குமாய்யா இது.
Sorry , Mommy, I can’t read Tamil னு சொல்லிட்டு
போயிடாதா பிள்ளை)
======================================

தகர டப்பா

தகரம்ன்னா ஒங்களுக்கு எளக்காரம்.
எவர் சிலவர் பாட்டை நான் எழுதரதுதானே மெறை.

ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைபெண்களும் வேண்டும் என்று சொல்வர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்…

ஏழைங்க கூட மதிக்கரதில்லன்னு சரியா சொன்னாரு..

சே, ஒரு பாட்டுல கூட தகரத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சு.

=====================
வெட்டி

கொடுவாளை எடுத்து வெட்டற சமாசாரம் எனக்கு புடிச்சது.
எல்லோரும் அதச்சொல்லி சொல்லி நாற அடிச்சிட்டாங்க. எனக்கு புடுச்ச
வெட்டர பாட்டு இங்க..

தங்கக் கதிர்தான் தன்
தலை சாய்ந்ததே
சிங்கத் தமிழர்- தம்
செல்வம் உயர்ந்ததே

பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள்
செங்கை பிடிப்போம்
போத்துக்கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவொம்..

வெட்டும் இடமெல்லாம் – நாம்
வேண்டிய பொன் கிட்டும்
எட்டுத்திசை பாடும்- நம்
இன்பத்திருநாட்டை !

===========================

சாந்தி தியாகராஜன்:

பெண் விடுதலயப்பத்தி பாரதிதாசன் சொன்னத
எழுதணும்னு ஆசை. ஆனா அவரு கோவிச்சுப்பாரு.
அதோட இல்ல. அவரு இப்ப கொஞ்சம் சரியில்ல.
இந்தப் பாழாப்பொன்ன சர்தார்ஜி கிளப்புல எவளயோ
பாத்து ஜொல்ளு விடரதா தகவல் வந்திச்சு. அதுனால
இந்த ப்பாட்டை போடறேன்.

“புதுக்கோயில் மதில் மேலே முத்து மாமா – இரண்டு
புறா வந்து பாடுவதேன் முத்து மாமா

முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா

ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா- கோழி
ஒன்றை ஒன்று பர்ப்பதென்ன முத்து மாமா?

எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா….”

அவருக்கு புரிஞ்சா…ம்.ம்.. I may get lucky ….

================================

குப்பன்:

என்னைக் கடைசியா வந்து கேக்கறீங்க. ஒரு பாட்டு சமாசாரத்துல
கூட கடைசியா. சரி ஆகட்டும்.

“வெறிமது உண்போர் நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டெதுக்கடி? சகியே
நிறை முக்காடெதுக்கடி ?”

தெரியாத்தனமா இந்த பாவேந்தர் பாட்டை எழுதினதுக்கு
சர்தார்ஜி கிளப்புல தான் ரகசியமா பீர் குடிச்சிட்டு
நடனம் பாக்கப்போனத எழுதினதா நெனச்சு ரங்கண்ணா
கீச்சி போட்டாரு. “நம்ம எல்லாருமே மொகமூடிதான்.
முக்காட எடுத்தா எல்லாருக்கும் வேல போயிடும், தெரிஞ்சிக்க”ன்னு
பெரியவரும் திட்டினாரு.
சரி, இந்தப்பாட்டை போடுங்க..

“சித்திரச்சோலைகளே, -உமை நன்கு
திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே

நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலமே, – உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தன்ர் காண்கிலமே.

தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்த அந்தக்காலத்திலே – எங்கள்
தூய்மை சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே

மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வையமெல்லாம் வகுத்தார்- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்

ஆர்த்திடும் யந்திரக்கூட்டங்களே- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?

எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ?- இனிப்
புலிகள் நரிக்கு புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?

கிலியை விடுத்து கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை – சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.”

================================================

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்