Archive
Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan
‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.
‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.
‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.
இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?
ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.
கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…
ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?
ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.
கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?
ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.
கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…
ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.
காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.
கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?
ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.
கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…
ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.
கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.
கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.
கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?
ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.
ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?
கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?
ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.
கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..
ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.
கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.
கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்
*****
மும்பையும் நானும்
மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.
நாஞ்சில்நாடன்
*****
கட்டுரை இலக்கியம்
நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.
நாஞ்சில்நாடன்
*****
பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.
ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
நாஞ்சில்நாடன்
Ranganna troupe’s drama :: N. Swaminathan
ரங்கண்ணா குரூப் ‘இதொ அதோ’ன்னு கீரி பாம்பு சண்டைவிடறவன் மாதிரி ஏதோ
சொல்லிட்டு லீவுல போயிட்டாங்க. இந்தக் கவலையோட நான் தூங்கறச்சே
என் கனவுல வந்து ஒரு நாடகம் போட்டாங்க. அதான் இது….
காட்சி – 1
நியு ஜெர்சியில் பல குடும்பங்கள் வாழும் ஒரு அபார்ட்மென்ட்.
ரங்கண்ணாவின் குடும்பத்தில்:
ரங்கண்ணா: ஹா, ஹ,ஹ், ஹா, ஹா…
மங்களம் : அப்படி பேப்பரிலே சிரிப்பா என்ன போட்டுருக்கான்?
ரங்: இந்த கோர்/புஷ் தேர்தல் சர்தார்ஜி ஜோக்கு மாதிரி ஆயிட்டுது.
முதல்ல ஓட்டு வித்தியாசம் 2000ன்னான், அப்புறம், 900ன்னான்,
அப்புறம் 370ன்னான், இப்ப 228தாங்கறான்…
மங்: இதுக்கும் சர்தார்ஜிக்கும் என்ன சம்பந்தம்?
ரங்: ஒரு சர்தார்ஜி பிள்ளைய பள்ளிக்கூடத்துல ஏழாங்கிளாசில சேத்தான்.
அங்க ஒரு மாசத்துல பையன் மக்குன்னு தெரிஞ்சு ஆறாங்கிளாசுக்கு தள்ளினா.
ஒரு மாசம் கழிச்சு இதுக்கு அவன் லாயக்கில்லனு அஞ்சாம் கிளாசுக்கு
தள்ளிட்டா. அங்க போனா ஒரு மாசத்துல நாலாங்கிளாசுக்கு போன்னு
அனுப்பிட்டா. சர்தார்ஜிக்கு கவலை வந்துடுத்து. சர்தாரிணிட்ட,
உம் புள்ள பெயிலாகி பின்னால பின்னால வர வேகத்த பாத்தா ரொம்ப
கவலயாயிருக்கு. எதுக்கும் நீ உன் பைஜாமாவை இறுக்கி முடிஞ்சிக்கோன்னான்…
மங்: சீ. சீ. உங்களுக்கு ஜோக் சொல்றதுக்கு ஒரு வெவஸ்தயே கெடையாது
நடுக்கூடத்துல சொல்ற ஜோக்கா இது…
சாந்தி/தங்கராஜன் குடும்பம்
சாந்தி: என்னங்க பிரியாணி எப்படி இருக்கு ?
தங்கராஜன்: ரொம்ப நல்லாருக்கு வன்கேழி பிரியாணி.
சாந்தி: என்னங்க, அதுக்குள்ளயும் ரெண்டு காலைத்தின்னாச்சா..
வன்கேழிங்கிறீங்க. எல்லாத்தையும் நீங்களே தின்னுடாதீங்க.
பண்ணினவளுக்கு பானையும் கரண்டியும்தானா?
அண்ணாமலை வீட்டில்
அண்ணாமலை: எப்படி தத்துவராயர் சுமேரு தமிழைவிடப் பழங்கால மொழின்னாரு?
சுமேரு அருணகிரியார் காலத்ததுன்னு தெரியும். முருகந்தானே
அருணகிரிட்ட “சும்மேரு, சொல்லற”ன்னு சொன்னரு. அவருக்கு நெனவா
எழுதிக்கேக்கணும்.
(மணி சுவாமிநாதன் தலைவிரிகோலமாக ஓடி வருகிறார்)
அண் : என்ன மணி, சட்டையெல்லாம் கிழிஞ்சிருத்து? சண்டை போட்டியா?
மணி: இல்லீங்க. தெருவில ஒத்தரு மணி, மணின்னு கத்துனாரு. என்ன வேணும்
நாந்தான் மணின்னேனா. அவ்வளவுதான். எனக்கு மணியாட்ட உரிமை இல்லியாடான்னு
கத்தி என்னை உலுக்கி சட்டைய கிழிச்சிட்டார். மணி ஆட்டரதே வாழ்வின் குறிக்கோளா
அலையுறாரேன்னு வருத்தமா இருக்கு. ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு ஒரு மணிய
வாங்கி குடுத்து ஆட்டிக்கிட்டு கெடய்யான்னு சொல்லிடலாமா? ரங்கண்ணா
குடுப்பாரா?
அண்: ரங்கண்ணாவா. அவருதான் முன்னமே சொல்லிட்டாரே,
வேற வேல இல்லியாடா ஒங்களுக்குனு.
(ஒரு கார் வந்து நிற்கும் ஓசை. அதிலிருந்து இறங்குகிறார் சர்தார்ஜி.
கையில் கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு வீட்டு நம்பரை பார்க்கிறார்.)
மணி: சார், சர்தார்ஜி வரான், அன்னிக்கு சொன்னேனே, ஒரு சர்தார்ஜி ஜோக்…
ஒரு சர்தார்ஜி டிஜிட்டல் வாட்சு வாங்கினான். அதை உத்து பார்த்தான். என்னடா
பன்னண்டு நம்பரில்ல, நாலுதான் இருக்கு. மணி, நிமிஷம் காட்டற முள்ளை வேற
காணும்னு கத்தினான் …
இத அவருகிட்ட சொல்லிடாதீங்க..ப்ளீஸ்..
மங்களம் எட்டி பார்க்கிறாள்:
மங்: நீங்களும் ஒங்க ஜோக்கும். அப்பவெ சொன்னேன் இந்த பாழாப்போற
சர்தார்ஜி ஜோக் வாணாம்னு, கேட்டேளா ? இப்ப சர்தார்ஜி வந்துட்டான், போட்டு
மொத்தப்போறான், கையில பெரம்பு வெச்சிருக்கான்.
சாந்தி பார்க்கிறாள்:
சா: பாருங்க, சர்தார்ஜி வரான். ரங்கண்ணா வீட்ல இல்ல நுழையறான்? ஏன் ?
தங்க: ரங்கண்ணா அவன் கிளப்புள குடிச்ச பீருக்கு காசு வசூலிக்க வரானா?
சா: என்னங்க, ஒரு வெள்ளக்கார பொண்ணும் பின்னால ஆடிக்கிட்டு வருது?
தங்க: டான்ஸ் ஆடற பொண்ணா இருக்கும்.. நீ போயி பாக்கி பிரியாணிய
தின்னுமுடி. பார்வையை மறைக்காத. வெள்ளக்காரி வெள்ளக்காரிதான்..
சா: ஜொள்ளு விடாதீங்க. அவளப்பாத்தா கர்ப்பிணி பொண் மாதிரி இருக்கு.
தங்க: சர்த்தான். சர்தார்ஜி கிளப்புல ஒரு உண்டி இருக்கு. Place your
contributions in the slot னு அது மேல எழுதி வெச்சிருப்பான். ரங்கண்ணா அதை
தப்பா புரிஞ்சிண்டு டான்சர்கிட்ட ஏதோ சில்மிசம் பண்ணி இது மாதிரி ஆயிருக்கும்.
அம்மணி ய டே, கீப்ஸ் த டாக்டர் அவேன்னு தெனாவெட்டா சொல்றச்சயே
நெனச்சேன். நெள, ஹி ஹாஸ் டு ரீப் வாட் ஹி ஸோடு. வா போயி வேடிக்க
பாக்கலாம். அண்ணாமலை சாரயும் மணியயும் அழச்சிட்டு வரேன்.
மணி: அண்ணாமலை சார். சர்தார்ஜி, ஒரு வெள்ளக்காரி, சர்தார்ஜியோட
புள்ள மூணுபேரும் வராங்க.
அண்ணா: இது ஒரு புது சர்தார்ஜி ஜோக்கா? கேட்டதில்லயே.
மணி: இல்ல சார் நெசம்மாவே இங்க வராங்க. பாருங்க.
ரங்கண்ணா வீட்டுக்கு போறாங்க.
அண்ணா: சர்தார்ஜி புள்ளயா?
மணி: ஆமா சார் அவனுக்கும் தாடி இருக்கு. ஒரு சர்தார்ஜி பொண்டாட்டிய
அடிச்சானாம், பொறந்த கொழந்தைக்கு தாடி இல்லைனு.
இது என் கொழந்த இல்லடின்னு. என் குழந்தன்னா தாடி எங்க
போச்சுன்னு கத்தினானாம்.
அண்ணா: நீ அவன்கிட்ட அடிபட்டு சாகப்போறே. இந்த ஜோக்கெலாம்
வாணாம். வா போயிப் பாக்கலாம்.
மணி: சர்தாருக்கு தமிழ் தெரியாது.
அண்ணா: அதான் தப்பு. அவன் கிளப்புல ஓசில பீர் குடிக்கலாம்னு நான்
போயி ரங்கண்ணா பக்கத்துல ஒக்காந்துக்கிட்டு
“விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்றன்றூ”ன்னு
சொன்னேன். அதக்கேட்டுட்டு சர்தார்ஜி ஒரு ஸ்பூன் பீரை என் வாயில் ஊத்திட்டு:
“தினைத்துணையாக் கொடுப்பினும் பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்”னுட்டு
போயிட்டான். யமகாதகன். வா போகலாம்.
அனைவரும் ரங்கண்ணா வீட்டுக்கு விரைகிறார்கள்.
காட்சி 2
ரங்கண்ணா: வா, சர்தார், வா… மங்களம் காபி குடு.
சர்தார்: நமஸ்தே ரங்கா…
தங்கராஜன், சாந்தி, அண்ணாமலை, மணி உள்ளே வருகிறார்கள்
தங்க: ரங்கண்ணா, நான் சும்மாத்தான் வந்தேன்..
அண்ணாமலையும், மணியும் இருக்காங்க, ஒரு கை கொறையுது,
சீட்டு ஆட்டம் போடலாம்னு..
ரங்கா: ஒக்காருங்க. சர்தார்ஜி என்னை பார்க்க வந்திருக்கார்.
சர்தார்: என்ன அன்னாமலே, கையில் என்ன பொஸ்தகம்? ஞான சைத்தான்யம்?
அண்ணா: இந்த மாதிரி வம்பு வரும்னுதான் அவர் தமிழ்லயும் போட்டிருக்கார். அது ஞான
சைதன்யம்.
தங்க: ரங்கண்ணா உங்களுக்கு இப்படி ஆகும்னு நெனக்கில. அப்பவே சொன்னேன்
பாத்து கைய விடுங்க, எந்த புத்துலே எந்த பாம்பு.. LeTex பத்தி சொன்னேன். நீங்க
கண்டுக்கல. எத்தினி மாசம் இப்ப? மாமிக்கு விசயம் தெரியுமா?
ரங்கா: தங்கராஜு நீ என்ன பேசறேன்னே எனக்கு புரியல. மொதல்ல சர்தார்ஜி என்ன
விசயமா வந்தாருன்னு கேட்டுட்டு அப்புறம் ஒங்கிட்ட பேசரேன். என்ன விசயம் சர்தார்?
சர்தார்: எல்லாம் இந்த சைத்தான் கி பச்சாவால வந்துது. இதொ இருக்கானே, எம்புள்ள .
நியுயார்க்குல படிக்க அனுப்பி இருந்தேன். திடீர்னு வந்து நிக்கறான் இந்த வெள்ளைக்கார
பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு. வேண்ட்டம்னு சொன்னா கேக்கல.
ரங்கா: இது ஒம்புள்ளயா ! வளந்துட்டானே. சின்னப்பையன இருக்கறச்சே பாத்தது.
நாளக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட், அங்கிள், அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு கேப்பான்.
சர்தார்ஜி பையன்: அதுக்கு என்ன புஸ்தகம் படிக்கணும்னு இன்னம் எனக்கு தெரியல அங்கிள்.
ரங்கா: ஒனக்கு மத்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு போல. சர்தார், வளைகாப்பு, சீமந்தம்,
பேரனுக்கு காதுகுத்தல் கல்யாணம் பண்ற ஸ்டெஜில வந்து கல்யாணம்னு சொல்றீங்க…
பொண்ணு கர்ப்பமா இல்ல இருக்கு?
சர்தார்: ஆமாம், ரங்கண்ணா, 6 மாசமாம் ? ஆனா அவ வயத்துல இருக்கறது என் பையனோட
கொழந்த இல்ல.
அண்ணா: சர்தார், என்ன இது அசிங்கமாஅநியாயமா இருக்கு. நீங்க தப்பு பண்ணிட்டு ஒங்க பையனுக்கு
கட்டி வெக்கறது மொறையா?
சர்தார்: நான் தப்பு பண்ல. என் பையனும் தப்பு பண்ல.
சாந்தி: எனக்கு தலை வெடிச்சிடும்போல இருக்கு. அந்த பொண்ணு யாரால கர்ப்பமானா?
சர்தார்: ரங்க…
தங்க: (ரங்கண்ணாவை கண்னால் பார்த்துகொண்டே) சாந்தி, நான் நெனச்சது சரிதான்
மங்களம் மாமிய புடிச்சுக்க, மயக்கம் போட்டு விழுந்திரப் போறாங்க.. இந்த சேதியெல்லாம்
அவங்க தாங்க மாட்டாங்க..
ரங்க: என்ன அபாண்டமா இருக்கே?
சர்தார்: ரங்கண்ணா அதைத்தான் சொல்ல வரேன். அவளோட பாய் பிரண்டு பால்.
முழு பேரு Paul Gold King. அவன் பிள்ளைதான் இந்தப்பெண் வயத்துல இருக்கு.
சாந்தி: பால் கோல்ட் கிங் – அப்ப பால் தங்கராஜனா? என்னங்க இது உங்களுக்கு
நல்லாயிருக்கா ? லேட்டஸ்ட் லேட்டக்ஸ்னு ஏதோ சொல்லிட்டு, எனக்கு குழந்தையே
இல்ல. இந்தபொண்ணுக்கிட்ட போயி வெக்கமில்லாம…
சர்தார்: நீங்க அழாதீங்க. அந்தப் பால் இவரு இல்ல. அது வெள்ளைக்கார பால்.
மங்களம்: கல்யாணத்துக்கு முன்னால..சே..சே.. கேக்கவே நாராசமா இருக்கு.
இது தப்பு இல்லையா? அவளொட பாய் பிரண்டுக்கு கட்டி வெக்கரதுதான் மொறை.
சர்தார்: அவன் எங்கயே ஓடிப்போயிட்டானாமே? என் புள்ள இவளுக்கு வாழ்வு கொடுக்கப் போறானாம்.
புத்தி சொல்றதுக்கு ஒன்னைவிட்டா வேறு யாரு இருக்கா? ரங்கண்ணா நீதான் என் புள்ளக்கி
நல்ல புத்தி சொல்லி திருத்தணும். அதுக்குதான் இங்க அழச்சிட்டு வந்தேன்.
ரங்க: நான் என்ன செய்யறது ? தங்கராஜன் என்ன பண்லாம்னு சொல்லுங்க.
தங்க: வேணுன்னா சாந்தி பண்ண பிரியாணிய வெள்ளக்காரிட்ட கொடுக்கலாம். அதைத்தின்னுட்டு
ஒரைப்பு தாங்காம ஓடிடுவா.
சாந்தி: தின்னுமுடிச்சிட்டு கேலியா.. அண்ணாமலை சாரை கேக்கலாம்.
அண்ணா: சரி நான் இதுக்கு பொறுப்பு ஏத்துக்கறேன்.
மணி: சார், ஒங்களுக்கு எத்தனியோ பேரு பொண்ணு தர சம்மதமா இருக்காங்க.ஒரு விரக்தில
இந்த பொண்ணை நீங்க கட்டிக்க வேண்டாம்.
அண்ணா: சே, நான் கட்டிக்கரேன்னு சொல்லல. அந்தப் பையன்கிட்ட தனியா பேசப்போறேன்.
புத்தி சொல்லித் திருத்தப் போறேன்.
ரங்கா: நான் அந்தப் பொண்ணோட கொஞ்சம் பேசட்டுமா?
மங்களம் நீ என்ன பண்ற, உள்ள போயி இந்தப்பொண்ணுக்கு ஏதாவது
ஸ்வீட் பண்ணி எடுத்துண்டு வா. பாவம் புள்ளத்தாச்சி பொண்ணு.
இங்க வாம்மா.
உம்பேரு என்ன ? இப்படி பக்கத்துல வந்து ஒக்காரு. கைய கால
வலிக்கரதோ? லேசா அமுக்கி விடவா? இதென்ன மார்ல ?
சே, அதை கேக்கல. அது கீழ கருப்பா புள்ளி?
மச்சமா? எனக்கு மச்ச சாஸ்திரம் தெரியும்.
சாந்தி: அப்படியா? உங்களுக்கு தெரியுமா ? இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே.
எனக்கும் பாத்து பலன் சொல்லுங்க.
தங்க: (கோபத்துடன்) சாந்தி. நீ மொதல்ல வீட்டுக்கு போ. அப்புறம் வந்து பேசறேன்.
மெதுவா மெதுவா தொடலாமான்னு வருவான். அப்புறம் நீ பத்திக்கிச்சு பத்திக்கிச்சுன்னு
குதிப்பே. நான் சட்டி சுட்டதடா, கை வெந்ததடான்னு பாடிக்கிட்டு போகணும். தேவையா இது?
காட்சி – 3
(அண்ணாமலையும் சர்தார் பையனும் இன்னம் வெளியே வரவில்லை)
ரங்கண்ணா: ஏன் சிரிக்கறே மணி?
மணி: இல்லே, உங்களுக்கு ஒரு பழய ஜோக் நெனைவிருக்கா? அண்ணாமலைசார்
மொதல்ல வெளில வருவாரா, இல்ல அந்தப்பையன் வருவானான்னு யோசிச்சேன்.
சிரிப்பு வந்துது.
சர்தார்: அது என்ன ஜோக்?
தங்க: மணிக்கு ஜோக் சொல்ல நேரம் காலம் இல்ல. அந்த பையன் புடிவாதம்மா
இருக்கான் போல. அண்ணாமலை என்ன செய்ய முடியும் ?
எனக்கு நம்பிக்கை இல்ல.
(அண்ணாமலையும் பையனும் முக மலர்ச்சியுடன் வெளியே வருகிறார்கள்)
அண்ணா: சர்தார்ஜி கவலய விடுங்க. உங்க பையன் அவளை இன்னிக்கே மறந்திடுவான்.
ஆனா, ஒரு நிபந்தனை.
சர்தார்: என்ன செய்யணும் ?
அண்ணா: நீங்க அவனுக்கு உங்க பென்ஸ் காரை கொடுக்கணும்மாம். கொடுப்பீங்களா?
சர்தார்: பூ, இவ்வளவுதானெ. இங்கயே கொடுத்திடறேன். இந்தா சாவி.
பையன்: தாங்ஸ். நான் இந்தப் பொண்ணை அவ வீட்டுல விட்டுடறேன்.
சர்தார்: அச்சா, பேட்டா. ரொம்பா நன்றி அன்னாமலே. ஒன்கு என்ன வேணும் கேளு.
தங்க : பேசாம ஹேப்பி அவர்ல எங்க எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி வெச்சா போறும்
சாந்தியும் மங்களம் மாமியும் வீட்ல இருந்து முறுக்கு சுடட்டும்.
ரங்க : அப்படியே ஒரு ஷக்கலக்க பேபி டான்சுக்கும் ஏற்பாடு பண்ணு சர்தார்.
சர்தார்: ஓ.கே. அப்ப நாங்க கிளம்பரோம். எல்லாருக்கும் நன்றி.
சர்தார்ஜி, மகன், வெள்ளைக்காரப்பெண் மூவரும் போகிறார்கள்.
தங்க: எப்படி அண்ணாமலை இதை சாதிச்சீங்க.
அண்ணா: சிம்பிள். அந்த பையன் கெட்டிக்காரன். அவனுக்கு காரு வேணும். கேட்டா
சர்தார்ஜி தர மாட்டேன்னுட்டான். அதுக்குனு ஒரு பொண்ணை செட்டப் பண்ணி நாடகம்
போட்டு அடாவடி பண்ணீருக்கான். எங்கப்பன் காரை வாங்கி குடுத்துடுங்கன்னான்.
ரங்க: அதிசயம்மா இருக்கே. இருவதாம் நம்பர் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டான்னு
பத்தாம் நம்பர் பஸ்ஸில ரெண்டு தடவை ஏறினவனுக்கு இவ்வளவு சாமர்த்தியமா?
தங்க: நியுயார்க் காலெஜ் அப்ளிகேஷன்ல Fill in Capital போட்டிருக்கான்னு
வாஷிங்டன் போனவன்தானே.
மணி: ஒரு சர்தார்ஜி நடந்து போயிட்டு
இருந்தான். ஏண்டா ஒனக்குதான் காரு இருக்கே,
ஏன் நடக்கிறேன்னா, காரைத்திருடுவாங்கன்னு பயந்து காரைப்பூட்டி சாவிய முழுங்கிட்டேன்
அது வெளிய வர வரைக்கும் நடைதான்னானாம். இவன் எப்படியோ?
சாந்தி : இந்த வேடிக்கய பாருங்க. அப்பாவும் புள்ளயும் அந்த பொண்ணை உள்ள வெச்சு
காரைத்தள்ளிட்டு போறாங்க.
மணி: (உரக்க) சர்தார், பெட்ரோல் இல்லியா கார்ல?
சர்தார்: இருக்கு, இருக்கு. அதை எதுக்கு வேஸ்ட் பண்ணணும்னு காரைத்தள்ளிட்டு போறோம்.
மணி: அதான் சார் இந்தப்பசங்க இவ்வளவு காசு சம்பாரிச்சிட்டாங்க.
அண்ணா: மணி, ஒண்ணு சொல்றேன் தப்பா நெனக்காத. சர்தார்ஜிங்க உழைப்பாளிங்க.
அதனால உசர்ந்தாங்க. இந்திய சனத்தொகையில அவங்க 2%தான். அதுனால உனக்கு திமிர்
வரப்படாது. பொறாமை ப் படக்கூடாது. அவன் தாடி வெச்சிருக்கான், தலைப்பா
கட்டிருக்கான்னு இளக்காரம் பண்ணாத. அது அவனோட உரிமை. கிளப் வெச்சான்,
பேப்பர் நடத்தரான்னு வயிறு எரியாத. நீயும் பண்ணிப் பாரு. நாகரீகமா பேசு. நாராசமா பேசாத.
மல்லாந்து எச்சி துப்புனா ஒம் மூஞ்சி மேலதான் விழும்.
சாந்தி: என்னங்க இது, இன்னிக்கி தேங்ஸ்கிவிங். இப்ப போய் சீரியசா ஏதோ பேசிக்கிட்டு.
…ஒரு பாட்டு பாடவா?
தங்க: பாடு சாந்தி பாடு, இசை என்னும் நாத வெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த எனக்காக…
சாந்தி : போதும் பேசாம இருங்க.
(பாடுகிறாள்)
Turkey Dinner, turkey dinner,
Gather round, gather round,
Who will get the drumstick?
Yummy, yummy drumstick,
All sit down, all sit down.
Cornbread muffins, chestnut stuffing,
Puddin’ pie, one foot high,
All of us were thinner
Until we came to dinner;
Me oh my! Me oh my!
மங்களம்: ஏண்டியம்மா, எனக்கு புரியற மாதிரி தமிழ்ல ஏதாவது பாடப்படாதோ ?
கல்யாண சமயல் சாதம்
நல்ல கெளரவப்பிரசாதம்
அதுவே எனக்கு போதும்
புளியோதரை என்னும் சோறு
பொறுத்தமாய் ஒருசாம்பாரு
பூரி கெழங்கு லட்டு
பொரித்த கத்தரி கூட்டு
அழைத்திடுவோம் அனைவரையும்
ஆசையோடு வயிறார
உண்டிடுவோம்
கிடைத்த வாழ்வுக்கெல்லாம்
படைத்தவனுக்கு நன்றி
சொல்லியே.
(கைத்தாங்கலாக ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன் மேடைக்கு ஏற்றப்படுகிறார்)
ரங்கபாஷ்யம்: நான் இதுல வரலைன்னு உங்களுக்கு கொறை வெக்கப்படாது, வந்து ஒரு
வார்த்தை சொல்லுன்னாள். சொல்றதுக்கு என்ன இருக்கு?
இன்னிக்கு தேங்ஸ் கிவிங் டேன்னு சொன்னா. என் வயசில தெனமும் நான் தூங்கி காலையில கண்
முழிச்சாலே கடவுளுக்கு நன்றி சொல்லிடுவேன். தெனமுமே எனக்கு தேங்ஸ் கிவிங்தான்.
லோகமே ஒரு நாடகம். ஆட்டுவிப்பான் ஆட்டுவித்தால் ஆடாதார் யாரேன்னு சொல்லுவா.
நாமும் குழந்தை, பையன், இளைஞன், சம்சாரி, தோப்பனார், தாத்தான்னு பல வேஷங்கள்
போடறோம். மத்தது எல்லாம் மறந்து போய் அந்த பாத்திரமா மாறிடறோம். இதான் சாச்வதம்னு
பகவானை மறந்திடறோம். அப்படி மறக்காம அவன் திருவடிகளை மனசில வெச்சிங்கோ.
எல்லோர்கிட்டயும் அன்பா நடந்துங்கோ. எம்பெருமான் கிருபை எல்லோருக்கும் உண்டு.
வணக்கம்.
(நிறைவு பெற்றது)
(என் கனவில் வந்து நாடகம் போட்ட ரங்கண்ணா குழுவினருக்கு நன்றி. )
Rangabashyam group on Bharathi Dasan songs :: லாஸ் ஏஞ்சலஸ் சுவாமிநாதன்
ரங்கபாஷ்யம் குழுவில் பாரதிதாசன் பாடல் பற்றி யார் எழுதுவது
என்ற குழப்பத்தில் யாரும் எழுதாதிருந்தபோது, “அய்யா, இது
விழா முடியும் நாள். சட்டு புட்டுனு எழுதிக்குடுங்க” என்று
சிலரைக்கேட்டு வாங்கியதை இங்கு வெளியிடுகிறேன்.
=====================================
ரங்கபாஷ்யம் பஞ்சாபகேசன்:
கனக. சுப்புரத்தினம்ங்கிற பேரை பாரதி *தாசன்*னு மாத்திண்டார்.
தாசன்னா யாரு. பகவானுகிட்ட சரணாகதி அடஞ்சு சேவகம்
பண்றவன். சரணாகதியப் பத்தி நா வெவரிக்க தேவையில்லை.
நிகமாந்த தேசிகன் சொல்லிட்டு போயிட்டார்.
உகக்குமவை உகந்து,
உதவா அனைத்தும் ஒழித்து
மிகத்துணிவு பெற உணர்ந்து
காவலென வரித்து
புகலில்லாத தவமறியேன் என்று
பகவான் காலைப்பிடித்துக்கொள்ளுதல்..
ஒரே ஒரு பாட்டு மட்டும் பாக்கலாம்… ராகமாலிகையில பிச்சு ஒதற வேண்டிய பாட்டு..
சம்சார சோக மயமே யலாது சுக
சஞ்சார மேது இகமே பொலாது இதில்
சந்தேகமேதுன் சுகமே நிலையாகும்
இந்த மேல் பாராவிலேயே he tells it all..
நீயே கதியாக கதியாக
சுகபோக முண்டாக
நினைத்தனன் பரனருள் பாலா
அநந்தநாள் சுரர்மகிழ் வேலா
நீதாதேவ குஞ்சரி வள்ளி சமேதா
நிராதரன் மீதே நின் பாதார விந்தம்
அருளப் போகாதா வாதா நாதா
சீராருநன் மயிலம் நன்மயிலம்
வளமியலும் நலம்பயிலும்
திருவடி நிழலென அமையும்
தருவின மழகொடு குளிரும்
சிங்கார கோகிலம் கீதமோக மிருதங்கம்
சிற்றலை போய்மோதப் பட்சி ஜாலம் சிறைகொட்ட
ரீங்கார வண்டு சுரநீட மயிலாட ரங்கமாம்
சுப்புரட்ந தாசன் தாசன் விஸ்வாசன் கவிபாசன்
சுகமெது வெனிலுன தருளெனவே
சொலும் இதிற் பிறிதொரு பொருள் கனவே
சூரசம்மாரா குமாரா மயூரா சுகுண
தீரா உதாரா புவனாதாரா துயர்
திரவாரா திராய் கெம்பீரா
என்னடா ஒரு வைஷ்ணவன் முருகன் பாட்டை புகழறான்னு
நெனக்காதேள். எனக்கு சிவ-வைஷ்ணவ பேதம் இல்ல.
அரியும் சிவனும் ஒண்ணுதான்.
தவிர மாமாவைப் பாடினா என்ன, மருமகனைப்பாடினா என்ன?
same family தானே..
அவர் பாட்டுல உள்ள சத்தை எடுத்திண்டு, சக்கையை உதறுமாறு
கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்.
எம்பெருமான் அருள் எல்லோருக்கும் உண்டு.
அடியேன்
பாஷ்யம்
============================
ரங்கண்ணா ராமன்:
இதான் பெரியவர மொதல்ல எழுதவிடக்கூடாதுங்கரது..
எவ்வளவு பாட்டு எழுதிருக்கார் பாரதிதாசன்..கிளுகிளுப்பா ஒரு பாட்டைப் போடாம..
கையில் ஒரு பிட்சர் பீர்ரொட சர்தார்ஜி கிளப்பில் இருக்கிறதா கற்பனை பண்ணிங்க,
ரம்பா மாதிரி ஒரு பெண்ணு ஆடறா..
“பட்டாணி வண்ணப் புதுச்சேலை-அடி
கட்டாணி முத்தே உன் கையாலே – எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை-
உடல் பட்டாலும் மணக்கும் அன்பாலே!
…
ஆவணி வந்தது செந்தேனே -ஒரு
தாவணியும் வாங்கி வந்தேனே- எனைப்
போவேன்று சொன்னாய் நொந்தேனே- செத்துப்
போகவும் மனம் துணிந்தேனே !
பூவோடி விழிக்கொண்டையிலே?- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே- நீ
வா வா என்ரன் அண்டையிலே – என்று
கூவா யோகருங் குயிலே !”
ஒரு விசிலடிச்சு ஒன்ஸ் மோர் கேக்க தோணலே ?
=============================
மணி சுவாமிநாதன்
பாரதிதாசன் வாரம்னு வெச்சு ஒனக்கு பிடிச்ச பாரதிதாசன்
பாட்டை போடு என்பது ஒரு வகை உளவியல் சோதனை.
டாக்டர் லோகநாதன் சொல்லுவாரே Hermaneutic Testingங்கோ
என்னவோ..ஒரு மரம் வரைடாங்கறது. அவன் வரையறத வச்சு
அவனுடைய மன பாதிப்புகளை, உள் மன எண்ணங்களை வெளிய
வரவழைக்கிறது.
எனக்கு புடிச்ச பாவேந்தர் வரிகள் :
“இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில் நல்ல
சுதந்திரம் உண்டாகுமோ?
சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில் (இணையத்தில்)
தீதினி நீங்காதடி- சகியே
தீதினி நீங்காதடி !”
=============================
S. அண்ணாமலை
எனக்கு புடிச்ச பாட்டு:
மேசை விளக்கேற்றி நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத்தமிழ் படித்தேன் என்னருமை
அம்மா அருகில் வந்தார்
மீசைத்தமிழ் மன்னர்- தம் பகையை
வென்ற வரலாற்றை
ஓசையுடன் படித்தேன் அன்னை மகிழ்
வுற்றதை என்ன சொல்வேன் ?
செந்தமிழ் நாட்டினிலே – வாழ்கின்ற
சேயிழையார் எவரும்
வந்த விருந்தோம்பும்- வழக்கத்தை
வாய்விட்டு சொல்லுகையில்
அந்தத்தமிழ் அன்னையின் – முகத்தினில்
அன்பு பெருகியதை
எந்த வகை உரைப்பேன் ! – கேட்ட பின்பும்
இன்னும் சொல் என்றுரைத்தார் !
கிட்ட நெருங்கி எனைப்- பிள்ளாய் என்று
கெஞ்சி நறுந்தேனைச்
சொட்டுவது போலே- வாய் திறந்து
சொல்லொரு பாடல் என்றார்
கட்டுக் கரும்பான- இசைத்தமிழ்
காதினிற் கேட்டவுடன்
எட்டுவகைச் செல்வமும் – தாம் பெற்றார்
என்னைச் சுமந்து பெற்றார் !
(இன்னிக்கு நடக்குமாய்யா இது.
Sorry , Mommy, I can’t read Tamil னு சொல்லிட்டு
போயிடாதா பிள்ளை)
======================================
தகர டப்பா
தகரம்ன்னா ஒங்களுக்கு எளக்காரம்.
எவர் சிலவர் பாட்டை நான் எழுதரதுதானே மெறை.
ஏனமெல்லாம் எவர் சில்வர்
இருந்துவிட்டால் அவர் செல்வர்
ஏழைபெண்களும் வேண்டும் என்று சொல்வர்
இல்லை என்றால் தொல்லை பண்ணிக் கொல்வர்…
ஏழைங்க கூட மதிக்கரதில்லன்னு சரியா சொன்னாரு..
சே, ஒரு பாட்டுல கூட தகரத்துக்கு மதிப்பில்லாம போயிருச்சு.
=====================
வெட்டி
கொடுவாளை எடுத்து வெட்டற சமாசாரம் எனக்கு புடிச்சது.
எல்லோரும் அதச்சொல்லி சொல்லி நாற அடிச்சிட்டாங்க. எனக்கு புடுச்ச
வெட்டர பாட்டு இங்க..
தங்கக் கதிர்தான் தன்
தலை சாய்ந்ததே
சிங்கத் தமிழர்- தம்
செல்வம் உயர்ந்ததே
பொங்கும் சுடர்ப்பொன் னரிவாள்
செங்கை பிடிப்போம்
போத்துக்கூட்டி அரிந்த செந்நெல்
போட்டுக் கட்டுவொம்..
வெட்டும் இடமெல்லாம் – நாம்
வேண்டிய பொன் கிட்டும்
எட்டுத்திசை பாடும்- நம்
இன்பத்திருநாட்டை !
===========================
சாந்தி தியாகராஜன்:
பெண் விடுதலயப்பத்தி பாரதிதாசன் சொன்னத
எழுதணும்னு ஆசை. ஆனா அவரு கோவிச்சுப்பாரு.
அதோட இல்ல. அவரு இப்ப கொஞ்சம் சரியில்ல.
இந்தப் பாழாப்பொன்ன சர்தார்ஜி கிளப்புல எவளயோ
பாத்து ஜொல்ளு விடரதா தகவல் வந்திச்சு. அதுனால
இந்த ப்பாட்டை போடறேன்.
“புதுக்கோயில் மதில் மேலே முத்து மாமா – இரண்டு
புறா வந்து பாடுவதேன் முத்து மாமா
…
முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா- அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா
ஒதிய மரத்தின் கீழே முத்துமாமா- கோழி
ஒன்றை ஒன்று பர்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா- நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா….”
அவருக்கு புரிஞ்சா…ம்.ம்.. I may get lucky ….
================================
குப்பன்:
என்னைக் கடைசியா வந்து கேக்கறீங்க. ஒரு பாட்டு சமாசாரத்துல
கூட கடைசியா. சரி ஆகட்டும்.
“வெறிமது உண்போர் நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டெதுக்கடி? சகியே
நிறை முக்காடெதுக்கடி ?”
தெரியாத்தனமா இந்த பாவேந்தர் பாட்டை எழுதினதுக்கு
சர்தார்ஜி கிளப்புல தான் ரகசியமா பீர் குடிச்சிட்டு
நடனம் பாக்கப்போனத எழுதினதா நெனச்சு ரங்கண்ணா
கீச்சி போட்டாரு. “நம்ம எல்லாருமே மொகமூடிதான்.
முக்காட எடுத்தா எல்லாருக்கும் வேல போயிடும், தெரிஞ்சிக்க”ன்னு
பெரியவரும் திட்டினாரு.
சரி, இந்தப்பாட்டை போடுங்க..
“சித்திரச்சோலைகளே, -உமை நன்கு
திருத்த இப்பாரினிலே- முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே
நித்தம் திருத்திய நேர்மையினால் மிகு
நெல்விளை நன்னிலமே, – உனக்
கெத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தன்ர் காண்கிலமே.
தாமரை பூத்த தடாகங்களே, உமை
தந்த அந்தக்காலத்திலே – எங்கள்
தூய்மை சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே
மாமிகு பாதைகளே, உமை இப்பெரு
வையமெல்லாம் வகுத்தார்- அவர்
ஆமை எனப்புலன் ஐந்தும் ஒடுங்கிட
அந்தியெல்லாம் உழைத்தார்
ஆர்த்திடும் யந்திரக்கூட்டங்களே- உங்கள்
ஆதி அந்தம் சொல்லவோ? நீங்கள்
ஊர்த்தொழிலாளர் உழைத்த உழைப்பில்
உதித்தது மெய் அல்லவோ?
…
எலிகள் புசிக்க எலாம் கொடுத்தே சிங்க
ஏறுகள் ஏங்கிடுமோ?- இனிப்
புலிகள் நரிக்கு புசிப்பளித்தே பெரும்
புதரினில் தூங்கிடுமோ?
கிலியை விடுத்து கிளர்ந்தெழுவார் இனிக்
கெஞ்சும் உத்தேசமில்லை – சொந்த
வலிவுடையார் இன்ப வாழ்வுடையார் இந்த
வார்த்தைக்கு மோசமில்லை.”
================================================
சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்
Recent Comments